Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சிலருக்குத் தெரிந்தது; பலருக்குத் தெரியாதது. 11

அதிரைநிருபர் | September 11, 2010 | , ,

தமிழ்த் தட்டச்சு முறையில் ஒரு பெரும் புரட்சியை (Revolution) அல்லது புத்தாக்கத்தை (Renaissance) ஏற்படுத்தியது,                              என் தம்பி (மர்ஹூம்) உமர் தம்பியின் 'யூனிகோடு' முறை என்று சொல்வதில் மிகையில்லை! தான் உருவாக்கியதை - கண்டுபிடித்ததை, 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' எனும் தமிழிலக்கிய மரபையொட்டி, தமிழுலகம் முழுமைக்கும் தனது அருங்கொடையாக அளித்தார் இச்செம்மல்! இந்த நன்றியுணர்வுதான்,


                       "நற்குலமாம் 'வாவன்னா' குடும்பத் தோன்றல்
       நாற்புலமும் ஒருங்கிணைந்த அதிரைச் செல்வன்

பொற்குணமுன் மாதிரியைக் கடைப்பி டித்துப்
     புகழ்விரும்பாத் தன்மையிலே சேவை செய்தே

அற்புதமாம் தேனீயாய் மலர்த்தே னுண்டான்
           அகிலத்தார் பலன்பெறவே கணினிக் கூட்டில்

உற்பவமாய் இன்றமிழை இயங்கச் செய்த
       உமர்த்தம்பி வல்லவனை மறக்க லாமோ?"


இன்று, இந்த 'யூனிகோடு' முறையைப் பின்பற்றாத தளமே இல்லை என்னுமளவுக்குப் பெரும்பாலான அனைத்துலகத் தமிழ் இணைய தளங்கள் இம்முறையைப் பின்பற்றிப் பயன்பெற்று வருகின்றன. அண்ணன் - தம்பி உறவு முறையில் இருந்தும், ஒரே ஊரில் பிறந்தும், ஒன்றாகவே வாழ்ந்தும், என் ஆக்கங்களை தட்டச்சாளர் உதவியின்றி நானே பதிவு செய்துகொள்ள முடியாமல் இருந்தேன். அப்போதுதான், என் தமிழ்ப் பேராசிரியர், 'இறையருட்கவிமணி' கா. அப்துல் கபூர் அவர்களின் திருமகனார் அன்புத் தம்பி ஜமால் அவர்கள் எனக்கு தம்பி உமர் தம்பியின் பங்களிப்பில் உருவான (தமிழா ஈ கலப்பை, AWC phonetic unicode writer) இந்த யூனிகோடு தமிழ் தட்டச்சு முறைகளை அறிமுகம் செய்து வைத்தார்.

அன்றிலிருந்து இன்றுவரை, ஏறத்தாழ ஆயிரம் பக்கங்கள் வரை, இம்முறையைப் பின்பற்றித் தட்டச்சு செய்து பயன் பெற்றுள்ளேன். இந்தப் பட்டறிவின் பயனாக, நம் நண்பர்கள் இம்முறையில் செய்யும் பிழைகளைச் சுட்டிக் காட்டவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இக்கட்டுரையை வரையத் தொடங்கினேன்.

'குர்ஆன்' என்று தட்டச்ச வேண்டுபவர்கள், kuraan அல்லது quran என்று பதிவார்கள். அப்போது அது 'குரான்' என்று பதியும்; அல்லது 'ஃஉரன்' என்று பதியும். இதனைச் சரியாகப் பதிய வேண்டுமாயின், kur என்பதற்குப் பிறகு ஓர் இடைவெளியை விட்டுப் பின்னர் aan எனப் பதிந்ததன் பின்னர், இரண்டிற்கும் இடையில் இருக்கும் இடைவெளியை back space செய்தால், அது 'குர்ஆன்' என்று அமைந்துவிடும். 'அப்பாடா! இதற்கு இவ்வளவு விளக்கம் தேவையா?' என்கிறீர்களா? சற்றுக் கூடுதலாகவே தோன்றினாலும், பழக்கத்தில் வரவேண்டும்; வந்துவிட்டால், பிறகு இலகுவாகிவிடும் என்பதே எனது எண்ணம்.

'அண்ணன்-தம்பி' என்று இடைவெளி இல்லாமல் பதியும்போது, 'அண்ணந்தம்பி' என்று பதிவாகும். இதனைப் போக்க இரண்டு சொற்களுக்கும் இடையில் ஒரு இடைவெளி விட்டுப் பதிந்து, பின்னர் back space செய்தால் சரியாகிவிடும். இதில் இன்னொரு பிரச்னை! அதாவது, சில சிஸ்டங்களில் அந்த இடைக்கோடு, 'எ' என்றாகிவிடும். அதை மீண்டும் இடைக்கோடாகத் தட்டச்சு செய்தால் சரியாகிவிடும்.

'தங்கம்' என்று எழுத thangam என்று தட்டச்சுவார்கள். அப்படிச் செய்தால், 'தங்அம்' என்று வரும். இதனைச் சரி செய்ய, thangkam என்று தட்டச்சினால், 'தங்கம்' என்று சரியாக அமைந்துவிடும்.

நண்டு, மண்டு, குண்டு என்றெல்லாம் தட்டச்சும்போது, அது தானாகவே சரியாக அமைந்துவிடும். அன்றி, அது 'ன்டு' என்று பதியாது. 'n' என்ற எழுத்துக்குப் பிறகு 'd' வந்தால், அது தானாகவே 'ண்' என்ற முச்சுழி எழுத்தாகிவிடும். இது, யூனிகோடின் இயல்பாய் அமைந்த தன்மையாகும்.

'ர'கர, 'ற'கர வேற்றுமைகளையும், 'ல'கர, 'ள'கர, 'ழ'கர வேறுபாடுகளையும் தெரியச் சற்றே மொழிப்புலமை வேண்டும். la என்று அடித்தால் 'ல'கரமாகும். Shift 'L' அடித்தால் 'ள்' ஆகும். za அடித்தால் 'ழ'வாகிவிடும்.

Shift 'S' அடித்தால் 'ஸ்' ஆகும். 'sh' அடித்தால் 'ஷ்' ஆகும்.

'கஃபன்' என்பதற்கு, kaqpan என்று அடிக்கவேண்டும். fa உச்சரிப்புக்கு இதுதான் முறை.

'ai' அடித்தால், 'ஐ' ஆகும். 'மை' என்பதற்கு, 'mai' என்று அடிக்கவேண்டும். 'y' என்ற எழுத்து, 'ய'கர ஒற்றாகும்.

ஷிஃப்ட் R அடித்தால் 'ற்' என்றும், ஷிஃப்ட் N அடித்தால் 'ண்' என்றும், ஷிஃப்ட் L அடித்தால் 'ள்' என்றும், ஷிஃப்ட் X அடித்தால் 'ஞ்' என்றும், ஷிஃப்ட் S அடித்தால் 'ஸ்' என்றும் விதிவிலக்குகளாகப் பதியும். இவையன்றி, பெரும்பாலான capital எழுத்துகளுக்கு அதனதன் நெடில்கள் அமையும்.

இப்படியாகப் பலவற்றைக் குறிப்பிட்டுக் காட்டிக்கொண்டே போகலாம். 'சித்திரமும் கைப் பழக்கம்' என்பது போல, தொடர்ந்து இதில் கவனம் செலுத்தினால், விரைவாகவும் நிறைவாகவும் இதில் முன்னேற்றம் அடையலாம். இவையெல்லாம் எனது பட்டறிவில் பட்டவையே. அதில் இடம்பெறாத இன்னும் பல நுணுக்கங்களும் இருக்கலாம். அவற்றை இத்துறை விற்பன்னர்கள் விளக்குவார்கள். சிலர் எழுதும் எழுத்தோவியங்களும் பின்னூட்டங்களும் சில பிழைகளுடன் காணப்படுவதால், இக்கட்டுரைக்கு, 'சிலருக்குத் தெரிந்தது; பலருக்குத் தெரியாதது' என்று தலைப்பிட்டேன். நானே இந்த மென்பொருளில் கற்கவேண்டிய விளக்கங்கள் இன்னும் நிறைய இருக்கக் கூடும். அவற்றை வாசகர்கள் தங்களின் பின்னூட்டங்களில் பகிர்ந்துகொள்வார்கள் என்று நம்புகின்றேன்.

-- அதிரை அஹ்மது
 
தமிழ் தட்டச்சு செய்ய உமர்தம்பி அவர்களின்  AWC PHONETIC UNICODE WRITER,
 
தமிழ் தட்டச்சுக்கு tamil phonetic key board எழுத்துக்கள் உதவி

11 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எங்களுக்குத் தெரிந்தும் இதனை இப்படிச் சொல்ல வாகைத் தெரியவில்லை அதோடு எத்தனிக்கவும் இல்லை ஆனால் உங்களால்தான் (மாமா) இதனைச் செய்ய முடியும், புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே...

1994 இறுதியில் எங்கள (உமர்தம்பி)மாமா அவர்கள் என்னிடம் DBASE III சம்ந்தமாகவும் clipper ப்ரோகிராம் பற்றி எனக்கு விளக்கிக் கொண்டிருந்தார்கள் அந்த நேரத்தில் என்னிடம் புதிதாக தமிழ் எழுத்து உருவாக்கியிருக்கேன் ஆனால் இதனை WEFT முறையில் அதற்கான script எழுதித்தான் இண்டர்நெட்டில் பார்க்க வேண்டும் என்றும் அப்படியே அதனை எனக்கும் சொல்லித் தந்தார்கள் அந்த நேரத்தில் கொக்கி எழுத்துக்கள் சேர்ந்து வர மல்லுக்கட்டியது அப்போது அதனைச் சரிசெய்தவுடன் என்னிடம் முயற்சித்து பார்க்கச் சொன்னார்கள் அப்போது geocities.com இலவச வலைத்தளத்தில் ஏற்றி அவர்களும் நானும் மாறி மாறி சோதித்து அவ்வப் போது எனக்குத் தெரிவிப்பார்கள் அவர்களின் பங்களிப்பு எனக்கு மட்டுமல்ல எனது நட்பு வட்டத்திலும் ஆச்சர்யம் கொடுத்தது தமிழில் வெப்சைட் வைத்திருந்தது...

ஆனால் இன்று அவர்களின் அன்றைய உழைப்பு உலகத் தமிழர்களின் கைகளுக்கு மகுடமே...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஷிஃப்ட் R அடித்தால் 'ற்' என்றும், ஷிஃப்ட் N அடித்தால் 'ண்' என்றும், ஷிஃப்ட் L அடித்தால் 'ள்' என்றும், ஷிஃப்ட் X அடித்தால் 'ஞ்' என்றும், ஷிஃப்ட் S அடித்தால் 'ஸ்' என்றும் விதிவிலக்குகளாகப் பதியும். இவையன்றி, பெரும்பாலான capital எழுத்துகளுக்கு அதனதன் நெடில்கள் அமையும்.///

சிறிய கூடுதல் தகவல்

ன் =(n), ந் = (w)

ne என்று அடித்தால் "னெ" வரும் இதற்கு we என்று அடித்தால் "நெ" என்று(ம்)வரும்

Adirai khalid said...

எங்கள் தமிழ் எழுத்துக்களை வாசித்தது விட்டு "சீல்த்தலை சாத்தனார்" ரேஞ்சுக்கு மாறிப்போன அருமை அஹமது மாமா அவர்கள்,

ஒருமாதம் இந்த புனித மாதத்தில் பொறுமை, அமைதி, ஈகை போன்ற நற்செயல்களை அதிகமாக கடைப்பிடித்தினால் சகோ. ஜாகிர் அவர்கள் கூறும் "ஐஸ்கச்சான்" மலேய குளிர்பானமாக மாறிவிட்டார்கள்

மேலும் அவர்கள் விளக்கவுரையில் சில புதிய நடைமுறையில் விளக்கியதால் கொஞ்சம் "கெச்சப்" ஊத்தி கடைசியாக "சோய் சாஸ்" சேத்து மிக ருசியாக தமிழ் தட்டில் (தட்டச்சில்) எங்களுக்கு பரிமாறிய விதம் "சூடா மக்கான்" என்று மலேயர்கள் அன்பாக உபசரித்தது போல் ஓர் உணர்வு.

"நெய்ன தம்பி" உனக்கும் மற்ற அனைவருக்கும் "சலாமத் ஹரிராய" மேலும் உன் வாழ்த்துக் களுக்கும் மிக்க நன்றி.

தாஜ்ஜூதீன் "ப்லாச்சன்" என்றால் காய்ந்த கூனி இறாலில் காய்ந்த மிளகாய், தக்காளி கொஞ்சம் புளி மற்றும் கடுகு எண்ணெய்யில் வெங்காயத்தில் வதக்கி தொட்டுகறி போல் செய்யும் ஒரு பக்க உணவு கறி, அநேக மலேயர்கள் மேலும் இந்தியாவிலிருந்த்து குடியேறிவர்கள் இந்த உணவிற்கு அடிமையாகி உள்ளதை உணர்ந்தேன். என் மலேய உறவினர்களில் சிலர் இந்த உணவு இந்தியாவில் கிடைக்காமல் அவதிபட்டதையும் அறிந்தேன். என் நண்பன் ஒருவனின் மனைவி இதனால் இந்தியா பயணத்தை சுருக்கிவிட்டு ஏரோபிளைன் ஏறியதையும் கூற கேள்விபட்டிறிக்கின்றேன்.

சகோ. ஜகிர்தான் தான் மலேய் உணவின் மகிமையையும் விளக்கவேண்டும்

Unknown said...

தொட்டுவைத்தேன்; தொடருங்கள்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ரொம்ப சிம்பிள் "குறிலுக்கும்" "நெடிலுக்கும்" SHIFT key தான் பக்க பலமே.

அப்போது fontகளை உருவாக்கும் போது மாமாவிடம் (அப்பாவியாக) கேட்டதுண்டு எப்படி 26 எழுத்துகள் இருக்கும் ஆங்கில எழுத்துகளில் எல்லா தமிழ் எழுத்துக்களை கொண்டு வருவீர்கள் என்றும் கேட்டதுண்டு அவர்களிடமிருந்து பளிச்சென்று வந்த பதில் இப்படி(தான்):-

18 மெய்யெழுத்துகளில் மூன்றைத் தவிர மற்ற அனைத்தையும் நேரடியாக அதாவது "க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்" = k ng s nj d N t v z L R n வைத்துக் கொள்ளலாம் என்றும்

12 உயிரெழுத்துகளில் ஒன்றைத் தவிர SHIFT keyஐ அதாவது "அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ" பயண்படுதும்படி செய்திருக்கிறேன் என்றார்கள்.. அன்றும் இலக்கணங்களுக்கு தலக்கணம் இருக்குன்னு நான் ஒதுங்கியிருந்த நேரத்தில் அவர்களின் கணினி சார்ந்த இந்த விளக்கம் விழிப்படையச் செய்தது அப்போதுதான் தலக்கனமில்லா இலக்கணமென்றும் புரிந்தது எனக்கு.

"ன்" n இதனை இப்படியும் "ந்" n- அடிக்கலாமே..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

நல்ல பகிர்வை தந்த அதிரை அஹ்மது அவர்களுக்கு மிக்க நன்றி.

இன்னும் பலருக்கு தெரியாது உமர்தம்பி அவர்களின் தமிழ் சேவையை பற்றி, விரைவில் அவர்கள் பெயரில் இணையத்தளம் வெளிவரும் என்று நாம் எதிர்ப்பார்கிறோம்.

மற்றபடி இங்கிலிஸ்தமிழ் அதிகமக்களை சென்றடைந்துள்ளதால் தமிழை பள்ளியில் அதிகம் கவணம் எடுத்து படிக்காம் ஒதுக்கியவர்கள் கூட கணினியில் தமிழ் மிக சுலபமாக எழுதுகிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

நான் உமர்தம்பி (மாமா) அவர்களுடன் ஊரில் இருந்த நேரத்தில், அவர்களின் உடல் நலனை கருதி அதிகம் நேரம் கணினியில் இருக்க வேண்டாம் என்று கோரியிருந்தேன். அவர்கள் சொன்ன பதில் "இப்போ நான் செய்து வரும் வேலையை செய்யாவிட்டால் உன்னைப் போன்றவர்கள் இனி தமிழை பேச மட்டும் தான் முடியும்".

உண்மையில் அவர்கள் தன்னலம் பாராமல் அன்று செய்த ஒரு தமிழ் சேவை, தமிழ் உதவி இன்று ஆங்கில வழி கல்வியில் படித்து தமிழை எழுத மறந்த என்னைப்போன்ற எத்தனையோ தமிழ் பேசும் மக்களை கணினி மூலம் தமிழை அதிகம் எழுத வைத்ததை எத்துனை வருடங்கள் கடந்தாலும் நம்மால் மறுக்க முடியாது.

இந்த நல்ல மனிதரின் அற்புதமான இந்த கணினி தமிழ் படைப்பைகளை அதிகம் நல்ல விசயங்களுக்காக பயன்படுத்தி எழுதாமல் இருப்பது தான் என்னைப் போன்றவர்களுக்கு மிக வருத்தம்.

Shameed said...

அஹ்மத் காக்காவின் பதிவு அருமையான பதிவு ,
நாம் நமதூர் உமர் தம்பி அவர்களை பற்றி தெரிந்து வைத்து இருப்பதை விட புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளனர்.இலங்கை தமிழரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது நம் ஊரின் பெயரை சொன்னதும் உமர்தம்பி ஊரா என்று கேட்டார் உண்மயில் மனதுக்கு பெருமையாக இருந்தது .

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சரியாக சொன்னீர்கள் சகோதரர் ஷாஹூல், நம்மூர் மக்கள் தெரிந்து வைத்திருப்பதைவிட வெளியூர் மற்றும் வெளிநாட்டுவாழ் தமிழ் மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது.

புதுவை இராஜ தியாகராஜன் அவர்கள் உமர்தம்பி அவர்கள் பற்றி கூறியதை இங்கு அனைவருக்கும் ஞாபப்படுத்த விரும்புகிறேன். "காலம் சென்ற தமிழார்வலர் திரு உமர் அவர்கள் இப்போதிருக்கும் இடத்திற்கும் ஒரு மின்மடல் இருந்தால் அங்கிருந்து கூட அவர் கணித்தமிழுக்காக வேண்டியவற்றை மடலாடலில் அள்ளி வழங்குவார் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை"

http://www.pudhucherry.com/pages/UmarUni.html

crown said...

அஹ்மத் காக்காவின் பதிவு அருமையான பதிவு ,
நாம் நமதூர் உமர் தம்பி அவர்களை பற்றி தெரிந்து வைத்து இருப்பதை விட புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளனர்.இலங்கை தமிழரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது நம் ஊரின் பெயரை சொன்னதும் உமர்தம்பி ஊரா என்று கேட்டார் உண்மயில் மனதுக்கு பெருமையாக இருந்தது .
-----------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.சரியான செய்தி இது.இதற்கு காரணம் தாழ்வு மனபான்மை என்னப்பா நம்ம ஆளா செய்திருப்பார்?என்கிற ஒருவித அவ நம்பிக்கை.ஏதாவது அமெரிக்க காரன் செய்திருப்பான் இல்லான நம்ம நாட்டுல பிராமின் செய்திருப்பான்னு ஒருவித மிதன போக்கு(careless).இதெற்கெல்லாம் காரணம் அடிப்படை அறிவு அற்று இருப்பதே! நம்மவர் மேல் நம்பிக்கை கிடையாதே நம்மவர்களுக்கே! நம்பிக்கை அவசியம் அதே நேரம் அதித நம்பிக்கை கூடாது(over confident).சின்ன வயதிலிருந்தெ நம்மால் எதையும் சாதிக்க முடியும்னு பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு சொல்லி வள்ர்கனும்.எங்களை யெல்லாம் அப்படிதான் என் தகப்பனார் வளர்ததார்கள் அதுவே எல்லா சுழ்னிலையிலும் போராடும் குணத்தை தந்துள்ளது.அதே நேரம் எதுவும் சாதிகளாம் என்பதில் மார்கத்திற்கு உட்பட்டதை சொல்லிச்சொல்லி வளர்கனும்.காரணம் மார்கம் சொல்லாததை சாதிக்க நாம் முயலக்கூடாது அல்லவா?அதிரை காரன் சாதிக்கபிறந்தவனப்பா.முயற்சியில் தொடர்ந்து இருந்தால் எதுவும் சாத்தியமே.அவ்வாறு நடக்காவிட்டால் நம் வாரிசுகள் நம் முயற்சியை பார்த்து ஒருநாள் சாதிக்கும்.எல்லாப் புகழும் அல்லாஹுக்கே!.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு