Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேரமில்லை! நேரமிருக்கிறது! 18

அதிரைநிருபர் | December 13, 2010 | , , ,

நேரமில்லை!

தொழ நேரமில்லை!
ஓத நேரமில்லை!
பசியாற நேரமில்லை!
படிக்க நேரமில்லை!
தூங்க நேரமில்லை!

பர பரவென்ற வேலையால்
பறந்து கொண்டு இருக்கிறேன்!
பணம் உண்டு பையில்
மதிய உணவு இல்லை கடையில்
நேரத்தில் சாப்பிட நேரமில்லை!

படைத்தவனை நினைக்க நேரமில்லை!
பண்பாக இருக்க நேரம் நேரமில்லை!
பழகியவனை பார்க்க நேரமில்லை!
மனைவியிடம் பேச நேரமில்லை!
மக்களிடம் பேச நேரமில்லை!
பள்ளி விட்டு வரும் பிள்ளையை
பாசத்தோடு கொஞ்ச நேரமில்லை!

தாயை கவனிக்க நேரமில்லை!
தந்தையை கவனிக்க நேரமில்லை!
உற்றாரை கவனிக்க நேரமில்லை!
ஏழை வரி கொடுத்து
ஈட்டிய செல்வத்தை
தூய்மையாக்க நேரமில்லை!

நேரமிருக்கிறது!

மனிதா நேரமிருக்கிறது!
உயிர் பிரிய நேரமிருக்கிறது!
மண்ணறைக்கு செல்ல நேரமிருக்கிறது!
மண்ணறை கேள்விக்கும் நேரமிருக்கிறது!
நல்லடியார்களுக்கும் நேரமிருக்கிறது!
தீயவர்களுக்கும் நேரமிருக்கிறது!

மண்ணறை அழைக்கிறது
நான் தனி வீடாவேன்
புழு பூச்சிகளின் பிறப்பிடமாவேன்
நல்லவர்களுக்கு நிம்மதியளிப்பேன்
தீயவர்களுக்கு நோவினை தருவேன்!
நன்மை தீமை பிரித்தறிந்து
மண்ணறையில் கேள்விக்கும்
மண்ணறையின் வேதனைக்கும்
நேரமிருக்கிறது!

மறுமை கேள்வி கேட்கப்படும் நாள்!
மனிதன் மதி மயங்கி நிற்கும் நாள்!
மண்ணாகி இருக்கக் கூடாதா? நான்
மறுமையை சந்திக்காமல் இருந்திருப்பேனே!
மனிதன் அலறும் நாளுக்கு நேரமிருக்கிறது!

தந்தையை கண்டு மகன் ஓடுவான்!
மகனை கண்டு தந்தை ஓடுவான்!
மனைவியை கண்டு கணவன் ஓடுவான்!
கணவனை கண்டு மனைவி ஓடுவாள்!
நண்பனை கண்டு நண்பன் ஓடுவான்!
எங்கே ஓடுவார்கள்! நன்மையை தேடி!
மறுமையில் ஓட நேரமிருக்கிறது!

மறுமையில் விவாதம்
மனைவியிடம் கணவன்
உனக்கு வாரி வழங்கினேன்
உன் நன்மையிலிருந்து
எனக்கு கொஞ்சம் கொடு
மனைவி ஒத்துக்கொள்வாள்
நீங்கள் சிறந்த கணவர்தான்
எனக்கும் நன்மைதான் வேண்டும்
பாசமிகு கணவனை பிரிந்து
வெருண்டு ஓடுவாள்
ஓடுவதை காண நேரமிருக்கிறது!

பெற்ற மக்களிடம் ஓடுவான்
பெற்றெடுத்த மக்களே!
நான் சிறந்த தந்தையல்லவா!
துன்பம் தொடாமல் அனைத்து
வளங்களையும் தந்து ஆளாக்கினேன்!
உன் நன்மையிலிருந்து
எனக்கு கொஞ்சம் கொடு
பிள்ளைகள் ஒத்துக்கொள்வார்கள்!
நீங்கள் சிறந்த தந்தைதான்
எங்களுக்கும் நன்மைதான் வேண்டும்!
தந்தையிடம் இருந்து
வெருண்டு ஓடுவார்கள் பிள்ளைகள்!
காட்சிகளை காண நேரமிருக்கிறது!

உலகைப் படைத்தவனின் கோபம்
உலகம் முழுவதிலும்
அழிவுகள் சிறிது சிறிதாக! பெரிதாக
அழிவுக்கும் நேரமிருக்கிறது!

மனிதனுக்கோ
மறுமை பயம்
மனதில் இல்லை!
சகோதரச் சண்டை,
உடன்பிறந்தார் சண்டை
குலச்சண்டை,
தெருச்சண்டை,
சம்பந்தி சண்டை,
குழந்தைகள் சண்டை,
அடுத்தவன் வீட்டின்
இடத்தை அபகரித்த சண்டை
படிப்பில், அறிவில், ஆற்றலில்,
பணத்தில், அழகில், குலத்தில்
பெருமை, ஆணவம் மேலோங்க
பிறரிடம் ஏளனச்சண்டைகளுக்கு
நேரமிருக்கிறது!

மனிதர்களே பாசமும்
கேள்விக்குறியாகும் நாள்!
உங்கள் செல்வமும்
பலன் தர முடியாத நாள்!
எந்த பரிந்துரையும்
ஏற்றுக் கொள்ளப்படாத நாள்!
இம்மை, மறுமையின் அதிபதி
வல்ல அல்லாஹ்!
நீதி வழங்கும் நாள் -அந்த
மறுமைக்கு நேரமிருக்கிறது!

 
மண்ணறைகளைச்
சந்திக்கும் வரை
அதிகமாகத்(செல்வத்தை)
தேடுவது உங்கள்
கவனத்தைத்
திருப்பி விட்டது.
பின்னர் அந்நாளில்
அருட்கொடை பற்றி
விசாரிக்கப்படுவீர்கள்.
(அல்குர்ஆன்:102:1,2, 8)

-- அலாவுதீன்

18 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Excellent !

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்ஹம்துலில்லாஹ் ! எனக்கு இப்போது நேரம் நிறைய இருக்கிறது உங்களின் இந்த அற்புதமான பதிவில் கருத்திடவும் !

Yasir said...

அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் எழுத்து...கண்டிப்பாக இது வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுதவுடன் கொடுக்கபடும் நோட்டீஸாக இருக்க வேண்டும்..அன்றுதான் சிலருக்கு படிப்பதற்க்கு நேரம் கிடைக்கும்..அன்றோடு மறந்து விடுவார்கள்...நேரம் இல்லை நேரம் இல்லை என்று சொல்வதை...

crown said...

மனிதர்களே பாசமும்
கேள்விக்குறியாகும் நாள்!
உங்கள் செல்வமும்
பலன் தர முடியாத நாள்!
எந்த பரிந்துரையும்
ஏற்றுக் கொள்ளப்படாத நாள்!
இம்மை, மறுமையின் அதிபதி
வல்ல அல்லாஹ்!
நீதி வழங்கும் நாள் -அந்த
மறுமைக்கு நேரமிருக்கிறது!
--------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். அற்புதம்.அற்புதம்,அற்புதம்

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

\\மனிதனுக்கோ
மறுமை பயம்
மனதில் இல்லை!
சகோதரச் சண்டை,
உடன்பிறந்தார் சண்டை
குலச்சண்டை,
தெருச்சண்டை,
சம்பந்தி சண்டை,
குழந்தைகள் சண்டை,
அடுத்தவன் வீட்டின்
இடத்தை அபகரித்த சண்டை
படிப்பில், அறிவில், ஆற்றலில்,
பணத்தில், அழகில், குலத்தில்
பெருமை, ஆணவம் மேலோங்க
பிறரிடம் ஏளனச்சண்டைகளுக்கு
நேரமிருக்கிறது!//

இப்பொழுது இஸ்லாமிற்க்குள் நிலவும் இயக்கங்கள் போடும் பாழகச்சண்டை,
இஸ்லாத்திற்க்கு வரும் மற்ற மதத்தினர் தன்னுல் குழப்பம் தரும் மனச்சண்டை....

மிகவும் தெளிவான பதிவு இன்ஷா அல்லாஹ் உங்களின் பதிவு தொடர வாழ்த்துக்கள்

sabeer.abushahruk said...

அக்கறையுள்ள ஆசானைப் போல நல்லா கண்டிக்கிறே. சொல்பேச்சுக் கேட்கிறவர்கள் உருப்படலாம்.

அருமை. வாழ்த்துகள் அலாவுதீன்.

அலாவுதீன்.S. said...

சகோ. அபுஇபுறாஹிம் : வஅலைக்கும் ஸலாம்(வரஹ்)
///அல்ஹம்துலில்லாஹ் ! எனக்கு இப்போது நேரம் நிறைய இருக்கிறது உங்களின் இந்த அற்புதமான பதிவில் கருத்திடவும் !///

கருத்திட நேரம் கிடைத்து கருத்தை பதிந்ததற்கு நன்றி!

அலாவுதீன்.S. said...

Yasir சொன்னது… கண்டிப்பாக இது வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுதவுடன் கொடுக்கபடும் நோட்டீஸாக இருக்க வேண்டும்..அன்றுதான் சிலருக்கு படிப்பதற்க்கு நேரம் கிடைக்கும்..அன்றோடு மறந்து விடுவார்கள்...நேரம் இல்லை நேரம் இல்லை என்று சொல்வதை... *********************************************************************************

சகோ. யாசிர் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) தங்களின் கருத்தை பதிந்ததற்கு நன்றி!

ஏற்கனவே நோட்டீஸிற்கு காத்திருக்கும் பட்டியலில் இந்த பதிவு மூன்றாம் (நோட்டீஸாக) இடத்தில் இருக்கிறது. இன்ஷாஅல்லாஹ் நோட்டீஸாக வெளியிடுவோம்.

அலாவுதீன்.S. said...

சகோ. தஸ்தகீர், சபீர் : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) தங்களின் கருத்திற்கு நன்றி!

அலாவுதீன்.S. said...

அதிரை தென்றல் (Irfan Cmp) சொன்னது… இப்பொழுது இஸ்லாமிற்க்குள் நிலவும் இயக்கங்கள் போடும் பாழகச்சண்டை, இஸ்லாத்திற்க்கு வரும் மற்ற மதத்தினர் தன்னுல் குழப்பம் தரும் மனச்சண்டை....
**************************************************************************************
சகோ. இர்பான் Cmp : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

தங்களின் கருத்தை பதிந்ததற்கு நன்றி!

அலாவுதீன்.S. said...

sabeer சொன்னது… அக்கறையுள்ள ஆசானைப் போல நல்லா கண்டிக்கிறே. சொல்பேச்சுக் கேட்கிறவர்கள் உருப்படலாம். ///

சபீர் : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) உன்னுடைய கருத்திற்கு நன்றி!

Unknown said...

நிச்சயமாக இது ஓர் அச்சமூட்டும் எச்சரிக்கைதான் ........
அல்லாஹ் பிழை பொறுப்பனாக...ஆமின்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அன்பு சகோதரர் அலாவுதீன்,

அஸ்ஸலாமு அலைக்கும், மிக அற்புதமான ஆக்கம். அச்சமூட்டும் எச்சரிக்கைகள்.

மனம் திறந்து சொல்கிறேன், இந்த ஆக்கம் தனிப்பட்ட முறையில் என் அன்றாட செயல்பாடுகளில் மாற்றத்தை இன்றே ஏற்படுத்தியுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்வதோடு அல்லாமல், உங்களுக்காக துஆ செய்கிறேன்.

நல்ல விழிப்புணர்வுகளை தொடர்ந்து தாருங்கள் காக்கா.

அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக.

அன்புடன் தாஜுதீன்

அதிரைநிருபர் said...

//ஏற்கனவே நோட்டீஸிற்கு காத்திருக்கும் பட்டியலில் இந்த பதிவு மூன்றாம் (நோட்டீஸாக) இடத்தில் இருக்கிறது. இன்ஷாஅல்லாஹ் நோட்டீஸாக வெளியிடுவோம். //

நாம் பெற்றுவரும் இவ்விழிப்புணர்வு நம் உற்றார் உறவினர்களும் பெறவேண்டும் என்பதில் நிச்சயம் உறுதியாக உள்ளோம்.

இன்ஷா அல்லாஹ் விரைவில் இதற்கு செயல் வடிவம் கொடுக்கப்படும். கொஞ்சம் பொறுத்திருங்கள் சகோதரர்களே.

அலாவுதீன்.S. said...

அன்பு சகோதரர் தாஜுதீன்: வஅலைக்கும் ஸலாம்(வரஹ்) தங்களின் கருத்திற்கும் பிரார்த்தனைக்கும் நன்றி!
ஜஸாக்கல்லாஹ் ஹைர்! (வல்ல அல்லாஹ் தங்களுக்கு நல்லருள் புரியட்டும்)

அலாவுதீன்.S. said...

அதிரைநிருபர் குழு சொன்னது… /// நாம் பெற்றுவரும் இவ்விழிப்புணர்வு நம் உற்றார் உறவினர்களும் பெறவேண்டும் என்பதில் நிச்சயம் உறுதியாக உள்ளோம். இன்ஷா அல்லாஹ் விரைவில் இதற்கு செயல் வடிவம் கொடுக்கப்படும். கொஞ்சம் பொறுத்திருங்கள் சகோதரர்களே.///

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) : நோட்டீஸாக வெளிவந்து படிக்கும் மக்களுக்கு நேர்வழி கிடைக்க துஆச் செய்வோம் இன்ஷாஅல்லாஹ்.
பொருத்தமான படத்தை வெளியிட்டதற்கு நன்றி!

Riyaz Ahamed said...

ரொம்ப அருமையான கருத்துக்கள் படிப்பவர் மனதில் பல நல்ல மாற்றங்களை தரும் இன்ஷா அல்லாஹ்

Basha said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மென் மேலும் தொடர அல்லாஹ்விடம் துஆ செய்தவனாக
வாழ்த்துக்கள்.

அலாவுதீன்.S. said...

/// Basha சொன்னது… அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) மென் மேலும் தொடர அல்லாஹ்விடம் துஆ செய்தவனாக வாழ்த்துக்கள்.///

வஅலைக்கும் ஸலாம் (வரஹ்) : சகோ. Basha : தங்களின் கருத்திற்கு நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு