Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அது ஒரு பொற்காலம் – 1977 - part 2 18

அதிரைநிருபர் பதிப்பகம் | August 27, 2012 | , , ,


அதிரை புதுமனைத் தெருவில் அஹ்மது ஹாஜா என்றொரு சகோதரர் இருந்தார் (இப்போது அவர் நம்மிடையே இல்லை - வஃபாத்தாகிவிட்டார்) அடுக்கு மொழியில் சொடுக்கும் சொற்களால் சொக்க வைப்பதில் வல்லவர்.

அவரின் அசத்தல் மொழியாடலும் வார்த்தை விளையாட்டுக்களும் சில சாம்பிளுக்கு இதோ !

பெருநாள் ஒரு நாள் 
மறுநாள் வெறும் நாள் !
-------------------------------------

அஹமது ஹாஜா
அதிரைக்கு ராஜா !
-------------------------------------

மாடு மாடு முரட்டு மாடு
முடுக்குல ஓடு !
-------------------------------------

என் மாமனாருக்கு 
இரண்டு பெண்(மகள்)கள்

ஒன்னு செந்தலையிலே
இன்னொன்னு எந்தலையிலே
-------------------------------------

நோன்பு கஞ்சி வாங்க வந்த பையன் ஒருவன் கொண்டு வந்த டிப்பன் பாக்ஸ் தூக்கு சரியில்லாமல் இருந்தது.

டிப்பனும் சரியில்லை
இதை கொடுத்து விட்ட
கொப்பனும் சரியில்லை..
-------------------------------------

பள்ளிவாசல் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த அவர் திடீரென்று வேலைக்கு செல்லாமல் நின்று விட்டார் அதனை ஏன் என்று கேட்டதும் அவர் சொன்னது.

எட்டரை மணிக்கு - தெனமும்
ஒட்டடை அடிக்கனும்னு சொல்றாங்க...
-------------------------------------

இதேபோல் இன்னும் நம்மவர்களிடமும் பொதிந்து இருக்கும் அஹ்மது ஹாஜா அவர்களின் வார்த்தை வித்தைகள் போன்றே ஏராளம் அதனை பின்னூட்டங்களில் பின்னியெடுக்கலாமே !?

என் நண்பர்கள் சூழ அனுபவித்த சில சுவராஸ்யங்களின் சிதறல்கள்:-

கல்யாணம் முடிந்து 7வது நாள் தோழன் சாப்பாடு நடந்து கொண்டிருந்தது பலவகையான உணவுகள் பரிமாறப்பட்டது அதில் முட்டையை அவித்து அதனை பொரித்து (அமுக்கு முட்டையாக) வைத்திருந்தார்கள். ஒரு சஹனுக்கு மட்டும் முட்டை வரவில்லை, அந்த சஹனில் இருந்த நண்பர் ஒருவர் கோபமாக அங்கே பரிமாறிக் கொண்டிருந்தவரை பார்த்து “ஏன் எங்கள் சஹனுக்கு மட்டும் முட்ட வரவில்லை” என்று கேட்டார் அதற்கு பரிமாறிக் கொண்டிருந்தவர் “முட்ட வர்ரதுக்கு நான் என்ன மாடா” என்றார். கல்யாண வீடே சிரிப்பால் மூழ்கியது
-------------------------------------

அதே கல்யாண சூழலிருந்த வீட்டில் மற்றுமொரு நிகழ்வு.

நாங்கள் இருந்த சஹனில் சிறுவன் ஒருவனும் எங்களோடு இருந்தான் அவனுக்கு சாப்பிட்டு வயறு நிறைந்து விட்டது போலும் வலது பக்கமும் இடது பக்கமும் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தான். எங்கள் சஹனில் இருந்த ஒரு பெரியவர் சிறுவனைப் பார்த்து "என்னடா டேபில் ஃபேனாட்டம் திரும்பி திரும்பி பார்க்கிறே எழுத்த பார்த்து ஓதுடா (சஹனைபார்த்து சாப்பிடசொல்கிறார்)"
-------------------------------------

கீழக்கரைக்கு நண்பன் ஒருவன் கல்யாணத்துக்கு (ஒரு நாள் முன்னதாகவே) போயிருந்தோம் மாப்பிள்ளை சார்பாக. பெண் வீட்டிற்கு அழைத்து சென்றார்கள் அங்கு பேசிக்கொண்டு இருக்கும் பொழுது 8 வயது மதிக்க தக்க ஒரு பெண்பிள்ளையை அழைத்து வந்து எல்லோரிடமும் அறிமுகம் செய்கையில் இவள்தன் பெண்ணின் தங்கை இவளை பார்த்தாள் பெண்னைப் பார்க்க தேவையில்லை என்று சொல்லிக்கொண்டு எங்களருகிலும் வந்துஅதியே சொன்னார் நானும் “அப்போ இவள் பெண்ணின் கேட்லாக் என்று சொல்லுங்கள்” என்று சொன்னதுதான் தாமதம் ஒரே சிரிப்பலைகள்.
-------------------------------------

அதிரை மண்ணின் மைந்தர்களுக்கு வார்த்தை விளையாட்டுக்களில் ஸ்டார்ட்டிங்க் டிரபில் இருந்ததே கிடையாது, அதற்கு சொல்லவா வேண்டும் அவரவர்களின் அனுபவத்தை பகிந்து கொள்ளுங்கள் என்று வேறு. 

ஆக ! உங்கள் அனுபவங்களையும் சுவராஸ்யங்களையும் பட்டியலிடுங்கள் பெருநாள் ஏப்பம் இன்னும் வராமல் திட்டுமுட்டா வருதுன்னு யாரோ சொன்னதாக ஞாபகம்.

மு.செ.மு.சஃபீர் அஹமது

18 Responses So Far:

Aboobakkar, Can. said...

கள்ளன் வருவான் கதவை திறப்பான் வன்ன வன்ன பொருல்களை அள்ளிசெல்லுவான்,அதொ வாரன்டி வாரன்டி செக்கடிபள்ளி சாபு வான்கு சொல்ல பொரனம்ம,அரபி மிருகம் அவனிடம் இருப்பது தெர்கம்.இதுவும் அவர் என்னிடம் சொன்ன ஜொக்ஸ்.

Yasir said...

ரிலாக்ஸான ஆக்கம்

எங்க வாப்பாவிடம் ஒருவர்
“என்ன நானா இந்த செருப்பு நல்லா உழைக்குமா ?
வாப்பா
”ஆமா நல்லா உழைக்கும்,பாஸ்போட் எடுத்து துபாய்க்கு அனுப்பு,நல்லா உழைத்து பணம் அனுப்பி வைக்கும் “

மெளத்தான வீட்டில் எங்க பெரியாப்பா இருந்தபோது ஒரு பெண் அழுதுகொண்டே
“என் கண்ணான வாப்பாவை ஏன் இவ்வுளவு சின்ன கட்டிலில் போட்டு வச்சு இருக்கீங்க “

அதற்க்கு எங்க பெரியாப்பா “ விடுங்க அவர் என்ன திரும்பியா படுக்கபோகிறார் ? “ என்று கூலா கூற சிலர் வாய்விட்டே சிரித்துவிட்டார்கள்

அடுத்து நான் ஷார்ஜாவில் உள்ள தமிழ் ஹோட்டலுக்கு நுழைந்தேன் அங்கே ஒருவர் எல்லாவற்றையும் ஆர்டர் செய்து அடுக்கி வைத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார் நான் கேட்டேன் “ உலகம் நாளைக்கு அழியப்போகிறது என்று எதுவும் உங்களுக்கு அறிவிப்பு வந்ததா,எல்லாவற்றையும் இன்னைக்கு சாப்பிட்டு முடிச்சிருவீங்கபோல” என்று கூறியதும் மனிதன் முகத்தில் ஈயாடவில்லை

அடுத்து என் மச்சான் ஒரு மாதிரியான மொபைல் உறை போட்டிருந்தவரைப்பார்த்து “ என்ன மொபைலுக்கு பாபா சூட் எல்லாம் போட்டு வச்சிருக்கீங்க” பலருக்கு மத்தியில் என்று கேட்டதும் மனிதன் சங்கடத்தில் நெளிந்துவிட்டார்..

இன்னும் எத்தனையோ உண்டு...



M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சிரிக்க வைக்க வந்த சபீர் காக்கா
சிறப்பாய் சீக்கினம் சொல்ல வாங்க சித்தீக் காக்கா!

அன்று உடைந்தது "டைட்டானிக் ஷிப்"
என்றுமே உடையாதது நல்ல "fப்ரன்ட் ஷிப்"

உங்க காலெ மிதித்து விட்டு சாரி சொல்ல
என் காலு என்ன 4 வீலு லாரியா?

அப்துல்மாலிக் said...

// ஒன்னு செந்தலையிலே
இன்னொன்னு எந்தலையிலே//

அலுவலகத்திலே வாய்விட்டு சிரித்துவிட்டேன் பக்கதிலுள்ளவங்க முறைக்கும் அளவுக்கு...........
குசும்பு பேச்சுக்கு பேர்போன நம்மூரைப்பத்தி எழுதிதான் காண்பிக்கனுமா என்னா ஹாக்கா நா ஜொல்றது..

Unknown said...

"அதிரை வரலாற்றில் நான் கண்ட நகைச்சுவைக்குரியவர்கள்" எனும் தலைப்பில் 'அதிரை வரலாறு' வலைத்தளத்தில் கட்டுரையொன்று எழுதினேன். அதில் அஹ்மது ஹாஜாவும் இடம்பெற்றுள்ளார். போய்ப் பாருங்கள்.

Shameed said...

நம்ம ஊரிலையோ இல்லாத மாதிரி வீடு கட்டனும் எப்படிகட்டலாம் என்று ஒருவர் கேட்டுள்ளார்
அதற்க்கு மற்றவர் நம்ம ஊரிலே இல்லாதமதிரின்னா நீ ஒன்னு செய் தகரத்துல வீடு கட்டு என்றாராம்

குறிப்பு - தகரத்தில் வீடு கட்ட சொன்னவர் யாசிர் வாப்பாதான்

sabeer.abushahruk said...

ஹாஹ்ஹாஹா...
சிரிக்கவைப்பது அப்படியொன்றும் சுலபமல்ல மக்கா. ஆனா, இங்கே பொங்குதப்பா.

கீப் இட் அப்!

Naina said...

சபீர் காக்காவின் வார்த்தை ஜாலங்கள் தொடரட்டும்...

M.F.Mohamed Naina
Dubai

Noor Mohamed said...

அஹமது ஹாஜா
அதிரைக்கு ராஜா !
அவனைப் பழித்தவன்
நாகூர் கோசா

என மர்ஹூம் அஹமது ஹாஜா பாடியதை நான் கேட்டுள்ளேன்.

Unknown said...

ரோஜாவிடம் மணமுண்டு
ஹாஜாவிடம் குணமுண்டு

ஓட ஓட கால் வலிக்கும்
ஓத ஓத கல்பு ஜொலிக்கும்

ஏலாறும் பதிமூனு
என் பொஞ்சாதி பேரு மைமூனு

Unknown said...

லேபர் வந்தான் ரோலாக்கு
தொல்லை கொடுத்தான் ஹாஜக்கு

அரபி ஒரு மிருகம்
அவனிடம் இருப்பது திர்ஹம்

உப்புமா எனக்கு
ஒப்புமா

Unknown said...

ஈரஞ்சு பத்து
ஆரஞ்சு சத்து

Unknown said...

அவரிடம் சில விரசமான(மோசமானது அல்ல) என்றாலும் கவிதைகளும் இருந்தன.அதனால் வெளியிட முடியவில்லை

Unknown said...

நோம்பு முடிஞ்சா பெருநா
அரிசி இடிஞ்சா குருநா

அதிரை சித்திக் said...

எனது நண்பன் சபீர் ..
எங்கு சென்றாலு நம்பர் ஒண்..
நண்பர் குழுவில் என்றுமே
எல்லோரின் கவனமும்
அவன் பக்கம் தான் ...
தொடரட்டு பொற்காலம்
சபீரின் எழுத்து மூலம் ..
அடுத்தது அப்துல் காதராகாவை பற்றி
எழுதலாமே ..

அதிரை என்.ஷஃபாத் said...

இந்த கட்டுரையின் கதாநாயகர் அஹ்மது ஹாஜா அவர்கள் பள்ளிவாயில்களில் அழகிய முறையில் பாங்கு சொல்வதிலும் சிறந்தவர்கள் (என்னுடைய நினைவில் அஹ்மது ஹாஜா இவர்தான் என தோன்றும் அந்த முகத்தை வைத்து இதைச் சொல்கிறேன், தவறு இருப்பின் எனது கருத்தைத் திருத்தலாம்)

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

வலை தல அன்பர்கள் அனை வர்களுக்கும் எனது நன்றி கலந்த சலாம் சபீர் அவர்களின் அரிவுரையை ஏர்க்கிரேன் சிஃபாத் சொன்னாஆல் அவர்தான் நன்பன் சித்தீக்கிர்க்கு நன்றி நெய்னா சொன்னதுபோல் ஜாலங்கள் செய்வோம் அடுத்து ஓர் கதை,குரும்பு தகவல் தரலாம் என இருக்கிரேன்

Ebrahim Ansari said...

செத்தவன் மண்ணறையில் இருக்கிறான்
மத்தவன் மணவறையில் இருக்கிறான் - என்பதும்

ஒருவனுக்கு ஒருத்திதான் மனைவி
குறவனுக்கு குறத்திதான் மனைவி - என்பதும்

அஹமது ஹாஜா அவர்கள் சுவர்களில் எழுதியவை.

பட்டுக்கோட்டை ஆரியபவனில் சாப்பிடப்போய் இருந்தோம். இட்லியை இலையில் வைத்துவிட்டுப்போன சர்வர் சாம்பார் எடுத்துவருவதற்குள் அஹமது அலி என்ற நமது நண்பர் " சீக்கிரம் சாம்பார் ஊத்து இட்லி தொண்டையில் இறங்க விசா கேட்குது " என்று ஒரு போடு போட்டார்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு