Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உதவுங்கள் ! :: உறவுகளின் பிரிவு வலி மிக கொடியது ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | August 21, 2012 | , , , ,


தயவு செய்து பகிருங்கள் / Please SHARE
***************************************

கடந்த 12.08.2012 அன்று கோவை காந்திபுரம் நடைபாதை மேம்பாலத்தில் திரு. முகமது அலி (70) உடல் நலம் சரியில்லாத நிலையில், "ஈர நெஞ்சம்" மற்றும் காவல்துறை இணைந்து அவரை பாதுகாப்பாக, ஸ்ரீ சாய்பாபா முதியோர் காப்பகத்தில் சேர்த்து பராமரித்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம். 

மேலும், திரு. முகமது அலியின் வாக்காளர் அடையாள அட்டை கோவை காந்திபுரம் பகுதியில் இருந்து நமக்கு கிடைக்கப்பட்டுள்ளது. அதில் கொடுக்கப்பட்டுள்ள அவரது முகவரி: 

91, ஜானி பேகம் காலனி வடக்கு, 
உடுமலை பேட்டை (ந), 
உடுமலைபேட்டை (வ), 
கோயமுத்தூர் (மா), 

வாக்காளர் அடையாள அட்டையின் எண் TN/21/111/0093362 . 

உடுமலை பேட்டை நண்பர்கள் எவருக்கேனும், இந்த முகவரி அறிந்திருந்தால், தயவு செய்து திரு. முகமது அலி அவர்களைப் பற்றி கூறி, "ஈர நெஞ்சத்தை" 9843344991 / 7200099400 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள செய்யுங்கள். உறவின் பிரிவின் வலி மிக கொடியது. மேலும், திரு. முகமது அலி உடல் நலம் குன்றி இருக்கிறார்.உறவுகளோடு இணைய உதவுங்கள்.

~நன்றி 
ஈர நெஞ்சம்.

அதிரைநிருபர்  குழு

6 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வல்லமை கொண்ட அல்லாஹ் இந்த முதியவரை அவரது உறவுகளோடு சீக்கிரத்தில் சேத்திட அருள்புரிவானாக !

கொடிது !
இளமையில் வறுமை
முதுமையில் தனிமை

இவ்வாறான தத்தளிப்பிலிருந்து முதுமையுடையோரையும், நம்மையும் அல்லாஹ் பாதுகாப்பானாக !

Yasir said...

வல்லமை கொண்ட அல்லாஹ் இந்த முதியவரை அவரது உறவுகளோடு சீக்கிரத்தில் சேத்திட அருள்புரிவானாக !

கொடிது !
இளமையில் வறுமை
முதுமையில் தனிமை

இவ்வாறான தத்தளிப்பிலிருந்து முதுமையுடையோரையும், நம்மையும் அல்லாஹ் பாதுகாப்பானாக !

chinnakaka said...

தயவு செய்து இவரை அந்த முதியோர் இல்லத்தில் இருந்து மற்றுவதர்ககவது முய்ற்சி செய்யுங்களேன் காரணம் இறுதி நட்களை எதிர்பார்த்திருக்கும் இவருக்கு ஈமானுடன் மரணிக்கும் வய்ப்பை அல்லாஹ் அருள வேண்டும்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இது தொடர்பாக அந்த ஊர் ஜமாத்து மற்றும், ஒரு இயக்கத்தின் கிளை நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உடல் நலன் சரியில்லாமல் கோவை அரசு பொது மருத்துவமனையில் முதியவர் முகம்மது அலி அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். மருத்துவமனைக்கு நாம் தகவல் இயக்கத்தின் கோவை நிர்வாகிகள் சென்று பார்க்க உள்ளார்கள்.

வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள உடுமலைபேட்டை முகவரி பழையது, வேறு ஊருக்கு குடிபெயர்ந்து சென்றுவிட்டார்களாம். எந்த ஊருக்கு அவரின் குடும்பம் சென்றுள்ளார்கள் என்ற தகவல் சேகரிக்கரிக்கிறார்கள்.

சகோதரர் முஹம்மது அலி அவர்களுக்காக நாம் எல்லோரும் துஆ செய்வோம்.

sabeer.abushahruk said...

தனிமைதான்
முதுமையின் முகவரியோ?

முதியவர் மறந்தது
முகவரியையா முகங்களையா?

இவர்
கண்களில் தெரியும்
கரையற்ற கடலில்
கருணைக் கொண்டுவரப் போகும்
தோணிக்காரர் யார்?

இறைவா,
இவரைக் காப்பாற்று
இந்நிலைதான்
எமக்குமென நேர்ந்தால்
பகரமாக
எம்
உயிரைக் கைப்பற்று!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இறைவா,
இவரைக் காப்பாற்று
இந்நிலைதான்
எமக்குமென நேர்ந்தால்
பகரமாக
எம்
உயிரைக் கைப்பற்று!
//

உருக்கமான பிரார்த்தனை !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு