Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மனுநீதி மனித குலத்துக்கு நீதியா- அலசல் தொடர் - 11 35

அதிரைநிருபர் பதிப்பகம் | September 06, 2012 | , , ,

அலசல் தொடர் பதினொன்று

கடந்த சில வாரங்களாக தோலுரித்துக்காட்டப்ப்பட்ட இந்த மனு நீதியின் அலசல் தொடர் அல்ல அவலத்தின் தொடர் முடிவுறும் நிலைக்கு வந்துவிட்டது. பலமுறை கடலில் மூழ்கி முத்தெடுக்கும் மனநிலையில் இருக்கும் எங்களைப்போல எழுதுபவர்களுக்கு - இப்படிப் பட்ட இடர்தரும் தொடர்களை எழுதும்போது சாக்கடையில் இறங்கிய அவல அனுவபம்தான் இருக்கும். அந்த மனநிலைதான் எனக்கும் இருக்கிறது. ஆனாலும் ஒரு தீயை தீ என்று சுட்டிக்காட்டிய – பாம்பை பாம்பு என்று கவனப்படுத்திய மனதிருப்தியும் இருக்கிறது. 

இதுவரை எழுதப்பட்ட பத்து அத்தியாயங்களின் தொகுப்புரையை தரும் முன்பு,   தொடர்பான சில செய்திகளை இன்னும் இங்கு பகிர விரும்புகிறேன். 

கிருத்துவம் , இஸ்லாம், புத்தம் என எல்லா மதங்களும் மதவெறி பிடித்தவை. அதனால் தான் அந்த மதத்தினர் மத மாற்றத்தில் ஈடுபடுகின்றனர் என்று ஆரிய சமாஜத்தை சேர்ந்த இருவர் அண்ணல்.அம்பேத்கரிடம் வாதம் புரிந்தனர்.

சிரித்துக் கொண்டே அம்பேத்கர் சொன்னார், நண்பர்களே, உங்கள் ஹிந்து மதத்திற்கு மதம் மாறி வருபவனை எந்த ஜாதியில் சேர்ப்பது என்ற பிரச்சனையால் தான் உங்களால் மதமாற்றத்தில் ஈடுபட முடிவது இல்லை என்று கூறினாராம். இதுவே உண்மை. 

வரலாற்றுப் பின்னணியில் பார்ப்போமானால் இந்தியா முதலிய இதர நாடுகளில் அந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த மதங்கள் – அத்தகைய மதங்களின் சொந்த குறைபாடுகளால் –அவற்றைப் பின்பற்றிய மக்களுக்கே மனமாற்றம் ஏற்பட்டு – தூக்கி எறிந்துவிட்டு – நல் வழி காட்டும் என்று அவர்கள் நம்பிய பிற மதங்களை தழுவினர். இப்படி வெறுக்கப்பட்ட மதங்களில் தலையாய மதம் இந்து மதம்- தழுவப்பட்ட மதங்களில் தலையாய மதம் இஸ்லாம் மதம். இது வரலாறு. இப்படி மதமாற்றங்கள் ஏற்பட பெரும்பணி ஆற்றியுள்ள காரணங்களில் – கருத்துக்களில் – கொள்கைகளில் மனு நீதி தன் மதத்துக்கு  தானே மண்ணை அள்ளிப்போட்டவை  மிகப்பல. அத்துடன் அந்த மனுநீதி மற்றும் சாஸ்திர, சம்பிரதாயங்கள் இந்து மதத்துக்கு வைத்த கொள்ளியும் அதிகம். விட்டால் போதுமடா சாமி என்று விலகி ஓடியவர்கள் ஏராளம். 
  • 160 மில்லியன் மக்கள் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கிவைக்கபட்டார்கள். 
  • தலித் என்ற முத்திரையும் – அரிஜன் என்ற அடையாளமும் வழங்கப்பட்டவர்கள்   கொடுமைப்படுத்தப்பட்டார்கள். 
  • கல்வி, கருத்து சுதந்திரம் தடை செய்யப்பட்டது
  • ஊரை விட்டு ஊருக்கு வெளியே ஒதுக்கிவைக்கப்பட்டர்கள்
  • கோயிலுக்குள்ளே நுழைவது தடுக்கப்பட்டது
  • செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளின் தலைப்புச் செய்திகளின் தலைப்புகளை ஒரு மேலோட்டமான ஆய்வு செய்தாலே என்ன நடந்தது நாட்டில் என்பது தெரியவரும்.
  • பூப்பறித்த காரணத்தால் ஒரு தலித் சிறுவன் சுட்டுக் கொலைசெய்யப்பட்டான்
  • மூன்று நாட்களாக விசாரணை என்ற பெயரில் தலித் இளைஞர்கள் காவல்துறையால் சித்திரவதை. 
  • பீகாரில் தலித்துகள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலம்
  • கர்நூலில் காவல்துறை லாக்-அப்பில் தலித் மரணம்
  • அரியானாவில் ஏழு தலித்துகள் உயிருடன் கொளுத்தப்பட்டனர்
  • தலித் பெண்கள் கூட்டாக கற்பழிக்கப்பட்டனர்,
  • திண்ணியம் என்ற ஊரில் தலித்துகளின் வாயில் மலம் திணிக்கப்பட்டது 
என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன - இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் கனடாவின் வான்கோவர் நகரத்திலே நடைபெற்ற உலக தலித்துகள் மாநாட்டில் ( INTERNATIONAL CONFERENCE FOR DALITS) படிக்கப்பட்ட ஆய்வறிக்கையின் பிரகாரம் இந்தியாவின் 90 சதவீதம் இருக்கும் தலித்துகளில்  95 சதவீதம் படிப்பறிவு அற்றவர்கள்; அத்துடன்  இந்திய தேசிய குற்றப் பதிவுகள் துறையின் ( INDIA’S NATIONAL CRIME RECORDS BUREAU ) புள்ளி விபரக் கணக்குப்படி கடந்த வருடம் 25,455  குற்றங்கள் தலித்துகளுக்கு எதிராக இழைக்கப்பட்டன. ஒரு மணிக்கு இரண்டு தலித்துகள் கை கால ஓடிக்கப்படுகின்றனர்; ஒரு நாளைக்கு மூன்று  தலித் பெண்கள் வீதம் உயர் சாதியினரால் கற்பழிக்கப்படுகின்றனர்; இரண்டு தலித்துகள் கொல்லப்படுகின்றனர், இரண்டு தலித்துகளின் வீடுகள் நொறுக்கப்படுகின்றன; அல்லது எரிக்கப்படுகின்றன. இந்த புள்ளி விபரங்கள் பாதி கதையைத்தான் சொல்கின்றன. சொல்ல மறந்த கதைகள்  ஏராளம். காரணம் உயர்சாதிக்கு பயந்துகொண்டு குற்றங்களை பதிவு செய்ய விரும்பாத மக்கள், மிரட்டும் காவல்துறை, கிராம பஞ்சாயத்து அமைப்புகள் பாதி கதையை விழுங்கி விடுகின்றன. 

காவல் துறையின் மீது அநியாயமாக அடித்ததாகவும், கொடுமைப்படுத்தியதாகவும், உயர்சாதியினரின் பக்கம் நின்று பாரபட்சம் காட்டியதாகவும், அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய மறுத்ததாகவும்  பதிவு செய்யப்பட மொத்த வழக்குகள் 68,160 ஆகும். இவற்றுள் அறுபது சதவீத வழக்குகள் ஆதாரமில்லை என்று தள்ளப்பட்டன. இருபத்தாறு காவல்துறை உயர் அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. 

இந்த அளவுக்கு   தலித்துகளின்  நிலை மோசமாகப்போக காரணம் என்ன என்பதை தலித்துகள்தான் சிந்திக்க வேண்டும். இந்த நாட்டுக்கே சொந்தமான பூர்வகுடிகள் அவர்களே. எங்கிருந்தோ ஆடுமாடு மேய்த்துவந்த ஆரியர்களுக்கு கொடுத்த இடம் இன்று தலித்துகளின் மடம் பிடுங்கப்பட்டு அடிமை வாழ்வு வாழும் கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. நாமெல்லாம் இந்துக்கள் என்று தலித்துக்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் உயர்சாதியினர் அவர்களை ஏன் பந்தியிலே சேர்ப்பதில்லை என்பதை தலித்துகள் சிந்திக்கவேண்டும். மீனாட்சி புறத்தில் தலித்துகள் கூட்டமாக இஸ்லாத்தை தழுவியபோது ஓடிவந்து பல்லக்கு ஊர்வலம் நடத்தி பாலிஷ் போட்ட  மடாதிபதிகள் அதே மீனாட்சி புறத்தில் தீண்டாமை கொடுமை நடந்தபோது- தனிக்குவளை வைக்கப்பட்டபோது  ஏன்  கண்டிக்கவில்லை என்று  தலித்துகள் சிந்திக்க வேண்டும். தாங்கள் கல்லெடுத்து மண்ணெடுத்து கட்டிய கோயிலுக்குள் தங்களின் கால் படக்கூடாது அப்படிப் பட்டால் பரிகார பூஜை செய்யவேண்டும் என்கிற நிலையை தங்களுக்கு தந்தவர் யார் என்பதை எல்லாம்  அவர்கள்தான்  சிந்திக்க வேண்டும். 
  • பிறக்கும்போதே தங்களை கடவுள் சூத்திரனாக காலில் இருந்து படைத்தார் என்பதாகவும் – உலகம் புகழும் வள்ளுவர் போன்ற அறிஞர்களைக்கூட சாதியில் இழிவுபடுத்தியது என்றும் ,   
  • தங்கள் குலப்பெண்கள் தேவதாசிகளாகவும் பின்னர் தாசிகளாகவும்  ஆக்கப்பட்டனர் என்பதாகவும் 
  • பெயர் சூட்டுவதில் கூட இழிந்தபெயர் சூடப்பட்டன என்பதாகவும் 
  • அரசுப்பதவிகளில் அமர அருகதையற்றவர்களாக சித்தரிக்கப்பட்டார்கள் என்பதாகவும் சொல்லியது மனு நீதி என்றும் அத்துடன் 
  • பெண்ணுரிமைகள் மறுக்கப்பட்டன என்பதையும்,
  • அரசாலும் உரிமைகள் மறுக்கப்பட்டன என்பதையும்,
  • அரசவைகளில், நீதிமன்றங்களில் தலித்துகளுக்கு இடம் தரக் கூடாது என்று தடுக்கப்பட்டதையும் 
  • தலித்களின் இனத்தாருக்கு தனிப்பட்ட கொடுமையான  பாரபட்சமான நீதி வழங்கப்பட்டதையும்  
  • ஒரே குற்றத்துக்கு இனம் பார்த்து நீதிவழங்கப் பட்டதையும் , 
  • மனு நீதியின் நோக்கமே நீ தாழ்ந்தவன் நான் உயர்ந்தவன் என்று பாரபட்சம் கற்பிக்கவும், நான் கட்டளை இடுவதை சொல்வதை நீ கேட்கவேண்டுமென்ற அடிமைத்தனம் கற்பிப்பதுமே ஆகுமெனவும், 
  • அசிங்கத்தை தொட்டால் சோப்பு போட்டால் போதும் ஆனால் ஆட்கள் தொட்டால் குளிக்கவேண்டும் என்று கற்பிக்கிறது என்பதையும், 
  • மனுநீதி மனுஷனைப்பற்றி கவலைப்படவில்லை மாட்டைப்பற்றி கவலைப்படுகிறது என்பதையும்.
கடந்த பல அத்தியாயங்களில் ஆதாரங்களுடன் எடுத்துவைத்தோம். இவ்வளவையும் படித்த பிறகு தலித்துகளின் நிலை என்ன? மதியாதார் வாசல் மிதியாதே என்பதற்கொப்ப தங்களை- தங்கள் இனத்தை மதிக்காத சாஸ்திரங்கள் அடங்கிய சாக்கடையில் இன்னும் மூழ்கி இருந்து அவமானப்படப்போகிறார்களா அல்லது சமத்துவமும்-  சகோரத்துவமும் - மனிதாபிமானமும் தழைத்து வளர்ந்துள்ள மற்றொரு வாழ்வு முறையை தேடி தங்களின் மேல் சந்தனத்தை தடவப்போகிறார்களா?

  • புனை சுருட்டு குப்பை அன்றோ –பழம்
  • புராண வழக்கங்கள் யாவும் ? 
  • இனிமேலும் விட்டுவைக்காதே
  • எடு துடைப்பத்தை இப்போதே
  • தனி உலகை ஆண்டனை முன்னாள் 
  • தன் மானம் இழந்திடாதே இந்நாள .- என்றார் பாரதிதாசன் . அப்படி பழங்குப்பை  களைந்து புதுவாழ்வை நோக்கி தலித்துகள் வரவேண்டிய காலம் இனியாவது வரவேண்டும். 
நேரம் இருந்தால் நெஞ்சை உருக்கும் இந்த இணைப்புகளை பாருங்கள். 








அப்படி கோடையிலே இளைப்பாறிக்கொள்ளும்வகை கிடைத்த குளிர்தருவாக- நிழலாக இஸலாம் அவர்களை அரவணைக்கக் காத்திருக்கிறது. இதை சரித்திரம் மெய்ப்பித்து இருக்கிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இன்று இஸ்லாத்தை நோக்கித்த் திரும்பி வருகிறது என்பது அண்மைக்கால சரித்திரமும் , புள்ளி விபரங்களும் தரும் சான்றுகளாகும். 

அண்மையில் அமெரிக்காவிலிருந்து ஒரு ஆராய்ச்சிக்குழு ஆப்ரிக்க நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. குழு அனுப்பப்பட்டதன் நோக்கம் ஆப்ரிக்க மக்களுக்கிடையே கம்யூனிச கருத்துகள் பரவுகிறதா அல்லது முதலாளித்துவ கருத்துக்கள் பரவுகிறதா என்பதை ஆராய்ந்து அறிக்கை தருவதே. குழுவும் அறிக்கை தந்தது. அதில் சொல்லப்பட்டிருந்தது- ஆப்ரிக்க நாடுகளில் கம்யூனிசமும் பரவவில்லை; முதலாளித்துவமும் பரவவில்லை. மாறாக மிக வேகமாக  இஸ்லாம்தான்  பரவி வருகிறது என்பதே. அது உண்மையே. 



கடந்த ஜூலை நான் ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான அங்கோலாவுக்கு அலுவலக வேலையாக சென்று இருந்தபோது கண்ணால் கண்டது அந்த ஜும்மா தினத்தன்று இருபத்தியோர் ஆண்கள் இஸ்லாத்தை தழுவினார்கள். அங்கு ஜமாஅத்துடைய வேலைகள் – கூட்டமாகவோ – தனிப்பட்ட முறையிலோ சந்திப்பு ஆகிய பணிகள் நிறைவாக வும் நிறையவும்  நடைபெற்று வருகின்றன. வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்ததும் அந்த பள்ளியின் இமாமுடன் நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது அடுத்தட வாரம் இஸ்லாத்தில் இணைய இருக்கும் இன்னும் இருபது பேர்களின் பட்டியலையும் காட்டினார். அந்தப் பட்டியலில் இணைய இருக்கும் சகோதரர்களின் பழைய பெயர்- சூட்டப்பட்டுள்ள புதிய பெயர் எல்லாம் இடம் பெற்று இருந்தன. அங்கு –அன்று இணைந்தவர்களுடன் நான் நடத்திய உரையாடல் – அவர்களின்  கதைகள் இன்னொரு ஆக்கத்தில் தனியாக தர இருக்கிறேன். இன்ஷா அல்லாஹ். அங்கோலா தலை நகரம் லுவான்டாவில் இருக்கும் ஒரே பள்ளி வசதிகள் குறைவாகவும்- பழைய பள்ளியாகவும் இருக்கிறது என்பதால் அரபு நாடுகளின் உதவியுடன் ஒரு நவீன வசதிகள் கொண்ட பள்ளி தலதொனா என்ற இடத்தில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது. 

பிரான்சு நாட்டின் தலை நகரமாம் பாரிஸ் நகரம் கேளிக்கைகளுக்கு உலகப்புகழ்பெற்றது . இன்று அங்கே தாவா பணிகள் சிறப்புற நடைபெற்று பலர் குறிப்பாக பெண்கள் இஸ்லாம் மார்க்கம் தழுவி வருகின்றனர். பள்ளிகளில் இடப்பற்றாக்குறை காரணமாக சாலைகளில் மக்கள் தொழுகை நடத்துவதைக்கண்ட பிரான்சு அரசு புதிய பள்ளிகளை நிர்மாணிக்க உத்தரவிட்டு இருக்கிறது. 

அரபு நாடுகளின் அனைத்துப் பகுதிகளிலும் வேலை செய்யும் பல்வேறு வெளிநாட்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து இஸ்லாத்தை தழுவுவது அன்றாட செய்தியாக இருக்கிறது. அவற்றுள் ஒன்று இதோ பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த இருநூறு பெண்கள் இஸ்லாத்தை தழுவிய செய்தி. 


அமெரிக்காவில் புதிய பள்ளிகள் நிர்மாணிக்கப்படுகின்றன. அங்கிருக்கும் சர்சுகள் பள்ளிவாசல்களாக பரிணாமம் பெற்று வருகின்றன என்ற செய்தியும் நமக்கு கிடைக்கிறது. இதேபோல் உலகம் எங்கும் நடைபெறும் மாற்றங்களை தெரிந்துகொள்ள 



ஆகிய  வலைதளங்களில் சென்று பார்த்தால் பல வரலாறுகள் தெரியவருகின்றன. மேலும் RELIGIOUS TOLERANCE ORGANIZATION .COM என்கிற ஒரு பொதுவான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இப்படி கூறுகிறது. 

Estimates of the total number of Muslims range from 0.7 to 1.8 billion worldwide and 1.1 to 7 million in the U.S.  3 We accept the best estimate as 1.57 billion, concluded by the Pew Forums. About 23% of all people on Earth follow Islam. The religion is currently in a period of rapid growth.

Christianity is currently the largest religion in the world. It is followed by about 33% of all people -- a percentage that has remained stable for decades. If current trends continue, Islam will become the most popular world religion sometime in the mid-21st century. 

இதன் சாராம்சம்  இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மத்தியில் இஸ்லாம்தான் உலகின் பெரிய மதமாக புகழோச்சும்- கோலோச்சும் என்பதுதான். 

இவ்வளவையும் குறிப்பிடக்காரணம் மனுநீதியால் வதைக்கப்பட்ட தலித்துகள் தங்களின் நிலை உணர்ந்து சமத்துவம் தரும் இஸ்லாத்தின் பக்கம் திரளாக வரவேண்டுமேன்பதற்காகவே. ஏதோ நாங்கள் சார்ந்துள்ள மார்க்கத்தை உயர்த்திப் பிடிப்பதற்காக அல்ல. உலகம் திரளும் திசை நோக்கி  அனைவரும் திரள           வேண்டுமென்றே. இந்தியாவைத் தவிர உலகின் வேறு எந்த நாட்டிலும் பிராமணீயம் போன்ற ஈயங்கள் காய்ச்சி ஊற்றப்படுவதில்லை. நாகரிகமும் , பொருளாதாரமும் வளர்ந்த நாடுகளில் உள்ளவர்களே மனம் மாறி இஸ்லாத்தை தழுவ வரும்போது ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டு, ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டுக் கிடக்கும் தலித் சமுதாயம் இஸ்லாத்துடன் கை கோர்ப்பதில் என்ன தடை இருக்க முடியும்? குறைந்த பட்சம் பிராமணர்கள் மற்றும் உயர்ந்த சாதியினரின் எடுப்பார் கைப்பிள்ளையாக , அவர்கள் எறியும் அம்பாக இல்லாமல் இஸ்லாமியர்களுடன் சரிநிகர் சமத்துவ வாழ்வில் கைகோர்த்து வாழ தலித்துகளை அழைக்கிறோம். 

எந்த இஸ்லாமியர், தலித்துகளுடைய உரிமைகளை சுட்டிக்காட்டி சமஉரிமை உணர்வை தலித்துகளுக்கு ஊட்டி வருகிறார்களோ அவர்களை நோக்கி கல் ஏறிய உயர் சாதியினரால் ஏவிவிடப்பட்ட கைகள் தலித்துகள் உடைய கைகள் என்பதை குஜராத் முதலிய கலவரங்களின் வரலாறு எடுத்துக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் இஸ்லாமிய மார்க்கம் இறைவனுடைய மார்க்கம். நன்மையை ஏவி தீமையை விலக்கச் சொல்லி தூண்டிக் கொண்டே இருக்கும் மார்க்கம். அந்த அடிப்படையில் இஸ்லாமியர்களை நோக்கி கல் எறியும் கைகளைக் கொண்ட தலித்துகளையும் – அரிவாள் எடுத்த அவர்களையும் தங்களின் மார்க்கத்தில் சகோதரர்களாக  இணைத்துக் கொள்ளும் முயற்சியில்  - இஸ்லாத்தை எத்தி வைக்கும் முயற்சியில் தொடர்ந்து பணியாற்றுவோம்.  இறைவன் படைத்த மனிதனை மனிதனாகப் பார்க்கும் மாண்பு இஸ்லாத்துக்குத் தவிர வேறு எவர்க்கும் இல்லை.

இந்தியாவில் மற்றும் தமிழகத்தில் இஸ்லாம் பரவிய வரலாறு படித்தோமானால் காரணங்களாக புலப்படுபவை  
  • பல மகான்கள் செய்த தாவாப்பணி , 
  • அன்றைய சமுதாயத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள்  மற்றும் 
  • இஸ்லாமியர்களாக வாழ்ந்தவர்களின் நெறிமுறை தவறாத உதாரண வாழ்வு.
ஆகியவைகள்தான் பெரும் காரணங்களாக இருந்து இருக்கின்றன. இவற்றால் ஈர்க்கப்பட்ட ஏனையோர் கூட்டம் கூட்டமாக – ஊர் ஊராக திரண்டு இஸ்லாத்தில் இணைந்தார்கள். முஸ்லிம்கள்  பெருமளவில் வாழும் அதிரையோ, காயலோ, கீழக்கரையோ, கூத்தா நல்லூரோ , நாகூரோ, பாண்டி, காரைக்காலோ, பரங்கிப்பேட்டையோ, கடைய நல்லூரோ  அரபு தேசத்திலிருந்து வந்தவர்களால் நிரப்பபட்டதல்ல. அன்றைய நாட்களில் திரளாக இஸ்லாத்தில் இணைந்தவர்களின்  வம்சா வழிகளே. இதில் என் தொய்வு ஏற்பட்டது? ஏன் அந்த போக்கு தொடரவில்லை? காரணம் மேலே நான் குறிப்பிட்டுள்ள மூன்று காரணங்களில் இன்றைக்கு   சமுதாயத்தில் நிகழும் ஏற்றத்தாழ்வுகள் என்கிற காரணம் மட்டுமே அப்படியே இருக்கிறது. தாவாப்பணி செய்த மகான்கள் மறைந்துவிட்டனர். பின்பற்றத்தக்க  உதாரண புருஷர்களை வலைபோட்டு தேடவேண்டி இருக்கிறது. அவர்கள் இயக்க சேற்றில் சிக்கி நம்மையும் சீரழித்துக்கொண்டு இருககிறார்கள். 

மாற்று மதத்தினர் நம்முடைய சகோதரத்துவம் சார்ந்த சமூக வாழ்வையும் நமது அன்பு, அறம், நாணயம், நம்பிக்கை, ஈகை மற்றும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் பண்புகளையும்  கண்டு வியந்து நம்மை நோக்கி வந்து நம்மவரில் ஒருவராகி நமது மார்க்கம்  தழுவினார்கள். இன்று இயக்கங்களின் தோற்றத்தால்  நமக்குள்ளேயே பிளவுகள் வந்துவிட்டன. முதலில் இந்த பிளவுகளை களைய வேண்டும். அதன்பின் ஒரு உத்வேகத்துடன் தத்தளித்துக்கொண்டிருக்கும் தலித்துகளின் கிராம குடிசைகளை நோக்கி நாம் இணைந்து சென்று அழைப்புப்பணியில் ஈடுபடவேண்டும். அதற்குமுன் அவர்களை அழைப்பதற்கு தகுதி உடையவர்களாக நம்மை ஒற்றுமைப் படுத்தி, நமக்குள்ளே சகோதரத்துவம் தழைத்துக் கொள்ளச்செய்யவேண்டும். இதுவே இன்றைக்கு இஸ்லாத்தில் இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்பவர்களின் தலையாய கடமையாக இருக்கும்; இருக்க வேண்டும். இது இல்லாவிட்டால் இறைவன் நமக்கு சூட்டிய நன்மையான சமுதாயம் என்கிற பெயருக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். 

இதுபற்றி இன்னும் கொஞ்சம் இன்ஷா அல்லாஹ்.  அடுத்த அத்தியாயத்தோடு  நிறைவுறலாம். 

அடுத்து வர இருப்பது மகாபாரதமா? மகாபாதகமா?

இபுராஹீம் அன்சாரி

35 Responses So Far:

Yasir said...

உணர்ச்சி பிளம்பான முடிவுரைக்கு முந்திய உரை.....சட்டை சூடேற்றிய கம்பியாக மாறி முதுகில் சூடு போட்டு இருக்கின்றது,புரிந்தவர்கள் தாமதம் செய்யாமல் முடிவெடுங்கள்....

இன்று வந்த செய்தியையும் பார்த்துவிடுங்கள்

SP, Shiv Sena thwart consideration of quota bill in Rajya Sabha
Bill providing for quota in promotion for SCs and STs in government jobs.

http://timesofindia.indiatimes.com/india/SP-Shiv-Sena-thwart-consideration-of-quota-bill-in-Rajya-Sabha/articleshow/16280524.cms

அதிரைக்காரன் said...

Hinduism is never referred as religion in any doctrine, it is mixtures of castes and cults. The most dominated caste group attempting to label it as lifestyle, but it is not fitted to 95% of rest of the castes. Expecting to read this articles in book version.

Dear ibrahim kaka, did you read Dr.Chatterji's O HINDU AWAKE?

Ebrahim Ansari said...

//Dear ibrahim kaka, did you read Dr.Chatterji's O HINDU AWAKE?//
Thank you Mr. அதிரைக்காரன்.

படித்ததில்லை. இன்ஷா அல்லாஹ் படிக்கிறேன்.

sabeer.abushahruk said...

காக்கா,

இந்தத் தொடரில் மூடப்பழக்கவழக்கங்கள் பற்றியும் அடிமைப்படுத்திவைக்கும் தந்திரக்காரர்கள் பற்றியும் எத்தனை ஆதாரங்களோடு எடுத்து வைத்திருக்கிறீர்கள்!!!

இவ்வத்தியாயத்தில் குரிப்பிட்டுள்ளதுபோல் இஸ்லாத்தில் இணையும் மக்களின் எண்ணிக்கைக் கூடுவதற்கு தங்களைப் போன்றவர்களின் எதுத்தாற்றலும் ஒரு காரணியே.

இவர்களுக்கு விளங்கி திருந்தினால் சமூகம் மேம்படும்.

வாழ்க நீங்கள், வளர்க உங்கள் எழுத்துப் பணி.

sabeer.abushahruk said...

அங்கேலாம்...அதாவது அங்கோலாவ்லேலாம் காகங்கள் எவ்வளவு அழகாக வரிசையாக அமர்ந்திருக்கின்றன!

ஏன்? அங்கே காக்கா பிடிக்க ஆளில்லையா? அதாவது நிஜ காக்கா பிடிக்க நிஜ ஆட்கள (குறவர்) நிஜ இல்லையா?

நான் முதலி,ல் "யாரோ துவைத்துக் காயப்போட்டிருக்கிறார்களோ" என்று நினைதேன் :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மாஷா அல்லாஹ் !

தொடர் எவ்வித இடர் இல்லாமல் நிறைவுக்கு எட்டியிருக்கிறது !

இனி, அடுத்தக் கட்டம் புத்தகவடிவம் ! அதிரைநிருபரின் மற்றுமொரு மகுடம் இது !

பதிப்பகம் உதயமாவது உறுதியாகிவிட்டது !

இன்ஷா அல்லாஹ் !

அங்கோலோவில் 'கா'கா' பிடிக்க முடியாத இடத்தில் இருக்கிறது ! :)

அதிரை சித்திக் said...

அன்பு சகோ .அன்சாரி காக்காவின் தொடர்
முடிய போகிறதா ..?இல்லை இல்லை
மற்றொரு பெயரில் இன்ஷா அல்லாஹ்
தொடரும் ..?அந்த அறிவிப்பை ..
முடியும் தருவாயில் தாருங்கள் ...!
அபு இப்ராஹீம் பதிப்பகம் துவங்கும்
தகவல் ..நல்ல தகவல் ..பதிப்பக
பெயர் என்ன ,,,?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வாழ்க நீங்கள், வளர்க உங்கள் எழுத்துப் பணி.
வரட்டும் அவர்களும் நம் பக்கம்! இன்சா அல்லாஹ்.

ZAKIR HUSSAIN said...

//அங்கேலாம்...அதாவது அங்கோலாவ்லேலாம் காகங்கள் எவ்வளவு அழகாக வரிசையாக அமர்ந்திருக்கின்றன!//

பாஸ் அது புறா பாஸ் [ அவசரத்தில் நல்லெண்ணை , மிளகுடன் வறுத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று கட்டளை இட வேண்டாம் ]

Aboobakkar, Can. said...

கடலில் விழுந்த தேங்காய் கரைக்கு வராமலா போகும்???????????????????

Unknown said...

சலாம்காக்கா...
இந்த கட்டுரைக்காக நீங்கள் எவ்வுளவு பாடுபட்டு இருப்பீர்கள் !!!!!
உங்கள் சமுதாய விழிப்புணர்வு சேவைக்கு ஒரு சலாம் !!

sabeer.abushahruk said...

//பாஸ் அது புறா பாஸ் [ அவசரத்தில் நல்லெண்ணை , மிளகுடன் வறுத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று கட்டளை இட வேண்டாம் ]//

ஜாயிரு, மாபெரும் வழிகேட்டிலிருந்து என்னய மீட்டெடுத்ததற்காக என உயிலில் உனக்கு ஒரு எவர் சில்வர் டம்ளர் எழுதி வைத்து விடுகிறேன்.

(என் பார்வைக்கு கண்ணாடி செய்து தரும் என் ஆஸ்தான ஆப்டீஷியன் ஆஷிக், வச்சிக்கிறேன்டா உன்னய.)

ஈனா ஆனா காக்கா, அடுத்த முறை "தேவையான பொருட்கள்" என்று ஒரு லிஸ்ட் போடுவார்களே அதே போல, புகைப்படத்தில் உள்ளவை என்று ஒரு லிஸ்ட் போட்டுட்டா தேவலாம். ஏன்னா, படத்தில் உங்க தாடியைத் தவிர எல்லாமே கருப்பா இருந்ததால் காக்கையாக்கும் என்று நெனச்சிட்டேன்.

sabeer.abushahruk said...

//இஸ்லாமியர்களாக வாழ்ந்தவர்களின் நெறிமுறை தவறாத உதாரண வாழ்வு.//

காக்கா, உங்களையும் எங்களையும் பற்றிச் சொல்கிறீர்களா அல்லது அவர்களையும் இவர்களையும் பற்றிச் சொல்கிறீர்களா?

sabeer.abushahruk said...

// அவர்களை அழைப்பதற்கு தகுதி உடையவர்களாக நம்மை ஒற்றுமைப் படுத்தி, நமக்குள்ளே சகோதரத்துவம் தழைத்துக் கொள்ளச்செய்யவேண்டும்//

இன்ஷா அல்லாஹ். அப்புறம் காக்கா, நம்மூர்ல இப்ப பாய்மார்கள்லாம் நலமாக இருக்கிறார்களா?

Ebrahim Ansari said...

// அப்புறம் காக்கா, நம்மூர்ல இப்ப பாய்மார்கள்லாம் நலமாக இருக்கிறார்களா?//

ஆம் BHAI மார்கள் PAI பாயும்மார்களாக இருககிறார்கள். வேதனை.

Ebrahim Ansari said...

அன்பு சகோதரர் அதிரை சித்தீக் அவர்கள் சொன்னது

//அன்பு சகோ .அன்சாரி காக்காவின் தொடர்
முடிய போகிறதா ..?இல்லை இல்லை
மற்றொரு பெயரில் இன்ஷா அல்லாஹ்
தொடரும் ..?அந்த அறிவிப்பை ..
முடியும் தருவாயில் தாருங்கள் ...!//

தந்திருக்கிறோம். பார்க்கவில்லையா?

அடுத்த தொடர் உங்களின் பேராதரவுடன் " மகாபாரதமா? மகாபாதகமா?"

அதற்குமுன் சப்ஜெக்டை மறந்துவிடக்கூடாது என்று ஒரு பொருளாதார நினைவூட்டல் கட்டுரை இன்ஷா அல்லாஹ்.

KALAM SHAICK ABDUL KADER said...

அன்புச் சகோ. இப்றாஹிம் அன்சாரி காக்கா, அஸ்ஸலாமு அலைக்கும்,
விழிப்புணர்வை உண்டாக்கி வழிகாட்டும் இவ்வாக்கத்தை ஊன்றிப் படிக்கும் மாற்று மதச் சகோதரர்கட்கு இஸ்லாத்தின்பால் ஈர்ப்பினை உண்டாக்கும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

crown said...

Ebrahim Ansari சொன்னது…

// அப்புறம் காக்கா, நம்மூர்ல இப்ப பாய்மார்கள்லாம் நலமாக இருக்கிறார்களா?//

ஆம் BHAI மார்கள் PAI பாயும்மார்களாக இருககிறார்கள். வேதனை.
-----------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.அதைவிட மார்பில்பாயும்(பாயும்மார்களாக) ஆட்களாக இருப்பது வேதனை!

Shameed said...

இந்த கட்டுரையை ஆதாரத்துடன் புள்ளி விபரமாக தருவதற்கு எத்தனை சிரமம் இருந்திருக்கும் நினைத்தாலே ஆச்சர்யமாய் உள்ளது
உங்களின் முயற்சிக்கு இறைவன் துணை இருப்பனாக ஆமின்

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். பிரமிக்க தக்க ஆய்வு! ஓய்வு நேரமெல்லாம் இதன் வேலையாகவே இருந்திருப்பீர்கள் என்பது திண்ணம். சமூதாயத்தின் பால் கொண்ட அக்கரை இப்படியெல்லம் எழுதவும், எழுச்சியூட்டவும் செய்திருக்கு. இது ஒரு திறந்த அறிவு தகவல் பெட்டகம். தாழ்தப்பட்ட இனம் என அழைக்கப்படும் சமுதாயம் இதை படித்து தம் வாழ்வின் பாதையை மாற்றி போடுவார்களா? காலம் பதில் சொல்லட்டும்.

KALAM SHAICK ABDUL KADER said...

//ஆம் BHAI மார்கள் PAI பாயும்மார்களாக இருககிறார்கள். வேதனை.
-----------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.அதைவிட மார்பில்பாயும்(பாயும்மார்களாக) ஆட்களாக இருப்பது வேதனை!//

இவ்வரிகள் இவ்வாக்கத்தின் ஆசிரியர் அவர்களின் ஆசிரியர் கவிக்கோ அப்துற்றஹ்மான் அவர்கள் இங்கு அய்மான் கூட்டத்தில் சொன்னார்கள் இப்படியாக:

“பாய் என்று நம்மை அன்புடன் - சகோதரனாகவே- விளித்து நேசமுடன், நெருக்கமாகப் பழகி வந்தவர்கள், நம்மைப் பார்த்துப் “பாய்பவ்ர்களாக”- பாபரி மஸ்ஜிதை இடிப்பவரகளாக மாறியது ஏன்?”

அலாவுதீன்.S. said...

அன்புச் சகோதரர் இபுராஹீம் அன்சாரி அவர்களுக்கு: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

தங்களின் இந்த ஆய்வுக் கட்டுரைக்கு: வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்!.

***********************************************
//// இன்று இயக்கங்களின் தோற்றத்தால் நமக்குள்ளேயே பிளவுகள் வந்துவிட்டன. அதற்குமுன் அவர்களை அழைப்பதற்கு தகுதி உடையவர்களாக நம்மை ஒற்றுமைப் படுத்தி, நமக்குள்ளே சகோதரத்துவம் தழைத்துக் கொள்ளச்செய்யவேண்டும். இதுவே இன்றைக்கு இஸ்லாத்தில் இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்பவர்களின் தலையாய கடமையாக இருக்கும்; ////
***********************************************

இது நம் அனைவரின் எதிர்பார்ப்பாகத்தான் இருக்கும். உண்மையான மறுமை பற்றே இதற்கு வழி வகுக்கும். ''உலகில் பல ஆண்டு காலம் வாழ்ந்து விடுவோம் என்று நினைப்பவர்களை வைத்து ஒற்றுமை கோஷம் போடுவதால் பலன் கிடைக்காது.'' ''உலக அழிவுக்கு முன் ஒரே சமுதாயமாக (இஸ்லாமியர்களாக) அனைவரும் மாறி விடுவார்கள்''. அதை பார்க்க நாம் யாரும் இருக்கப் போவதில்லை.

மறுமை வாழ்வை மனதில் வைத்து, நம் சக்திக்குட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டே இருப்போம். உள்ளங்களை மாற்றக் கூடிய சக்தி அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. நம்மால் ஒன்றும் செய்யமுடியாது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

பாசமிகு இபுறாஹீம் அன்சாரி காக்கா,

தங்களின் இந்த தொடர் பதிவுகள் சாட்டையடி சாட்டையடி தான்.

//நாமெல்லாம் இந்துக்கள் என்று தலித்துக்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் உயர்சாதியினர் அவர்களை ஏன் பந்தியிலே சேர்ப்பதில்லை என்பதை தலித்துகள் சிந்திக்கவேண்டும்.//

இன்னும் மூடிய கண்களோடு தான் இருப்பார்கள் நம்முடைய தொப்புள் கொடி உறவுகளான தலித் சகோதர சகோதரிகள்? சிந்திப்பார்களா?

Ebrahim Ansari said...

அன்பு சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு,

வ அலைக்குமுஸ்ஸலாம். தங்களின் வரவு நல்வரவாகுக. பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி.

Ebrahim Ansari said...

அன்பு கவியன்பன் அவர்களே!

வ அலைக்குமுஸ்ஸலாம். கருத்துக்கு நன்றி.

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி கிரவுன் அவர்களுக்கு,

வ அலைக்குமுஸ்ஸலாம். 47 மணித்துளிகள் 18 மணிச்சொட்டுக்கள் அலைபேசியில் உரையாடி இட்டகட்டளைகளையும் இந்தப் பாராட்டையும் ஏற்றுக்கொண்டேன். இன்ஷா அல்லாஹ் இனியொரு புதிய ஆக்கத்துடன் சந்திக்கலாம்.

Ebrahim Ansari said...

அன்பின் நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

உங்களின் வார்த்தைகள் அனைத்துமே என் போன்றோருக்கு உரமிடும். உண்மையை சொல்லவேண்டுமானால் கொஞ்சம் உழைக்கவே வேண்டும். அதிரையில் அண்மையில் எனது இல்லத்தில் நடந்த இணைய தள பதிவர்களின் கலந்துரையாடலில் அன்பு சகோதரர் ஜெமீல் அவர்கள் கூறியது மிகவும் மகிழ்வாக இருந்தது. " நான் திராவிட இயக்க நூல்களை படித்தது இருக்கிறேன் ஒலிநாடாக்களை மற்றும் ஒலித்த்கடுகளைக் கேட்டு இருக்கிறேன், பெரியார், வீரமணி பேச்சுக்களை கேட்டு இருக்கிறேன். அவைகளில் இல்லாத சில செய்திகள் கூட இந்த ஆக்கத்தில் நான் காண்கிறேன்" என்ற் கருத்துப்பட சொன்னார்கள். அது ஒரு பெரும் பாராட்டு என்று கருதுகிறேன்.

தம்பி, சபீர், ஜாகிர், ஹார்மிஸ், அபூ இபுராஹீம், தாஜுதீன், ஜகபர் சாதிக் மற்றும் மருமகனார் யாசிர், ஷா. ஹமீது ஆகிய அனைவருக்கும் மிக்க நன்றி.

எனது ஆக்கத்துக்கு முதன்முதலாக கருத்துத் தெரிவித்த நண்பர் அதிரைக்காரன் அவர்களுக்கும் நன்றி. அவர்கள் பரிந்துரைத்த நூலைத்தேடிக்கொண்டு இருக்கிறேன். இன்ஷா அல்லாஹ் படிப்பேன் பகிர்வேன்.

KALAM SHAICK ABDUL KADER said...

ஜஸாக்கல்லாஹ் கைரன் மூத்த சகோதரர் ஈனா ஆனா காக்கா. உங்களின் ஆவலை நிறைவு செய்யும் வண்ணம், இன்ஷா அல்லாஹ் நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் OH HINDU AWAKE! எனும் நூலின் pdf நகல் என்னிடம் வேறொரு மின்மடல் கோப்பில் சேமித்து வைத்துள்ளேன்; அதனை ஏற்கனவே அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)அவர்கட்கும்,எழுத்தாளர் சுஜாதா அவர்கட்கும், கவிப்பேரரசு வைரமுத்து அவர்கட்கும், கலைஞர் கருணாநிதி அவர்கட்கும் மின்மடலில் அனுப்பியிருக்கின்றேன். இன்ஷா அல்லாஹ் இன்று உங்களின் மின்மடல் தேடி வரும்!

KALAM SHAICK ABDUL KADER said...

Assalaamu alaikkum, Brother Ebrahim Ansari,

The pdf copy of OH HINDU AWAKE has been sent to your mail right now just 5 minutes ago. Kindly check your mail box. This is my small help for you to write more and more articles like this MANU NEETHI.

Ebrahim Ansari said...

அன்பு சகோதரர் கவியன்பன் அவர்களுக்கு,

தாங்கள் அனுப்பிய OH HINDU AWAKE நூலின் PDF கிடைக்கபெற்றேன். மிக்க நன்றி. ஆயினும் மனு நீதி தொடர் நிறைவுபெற்றுவிட்டதாலும், இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பல விஷயங்களை நானும் ஏற்கனவே தொட்டுவிட்டதாலும் தற்போது இதிலிருந்து குறிப்புகள் எடுக்கவேண்டியதில்லாமல் இருக்கிறது. இருந்தாலும் இந்த நூல் ஒரு ஊற்று. அடுத்த தொடர்களுக்கு பயன்படலாம்.

உங்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் மிகுந்த நன்றிகள்.

அதேபோல் சகோதரரர் அதிரைக்காரன் அவர்களும் அனுப்பி இருந்தார்கள். அவர்களுக்கும் எனது நன்றி.

KALAM SHAICK ABDUL KADER said...

//உங்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் மிகுந்த நன்றிகள்.

அதேபோல் சகோதரரர் அதிரைக்காரன் அவர்களும் அனுப்பி இருந்தார்கள். அவர்களுக்கும் எனது நன்றி. //

ஏதோ எங்களால் முடிந்தது காக்கா. உங்களின் ஆக்கங்கள் நூலுருவில் , இன்ஷா அல்லாஹ் அதிரை நிருபரின் புதியப் பதிப்பகத்தின் ஆதரவுடன் வெளிவரும் நன்னாளை எதிர்நோக்கி உள்ளோம்.

suvanappiriyan said...

மிகச் சிறந்த ஆக்கம். இது மாற்று மதத்தவர்களையும் சென்றடைய வேண்டும்.

Ebrahim Ansari said...

DEAR SUVANAPPIRIYAN,

THANK YOU. WE TRY TO ORGANIZE TO SEE THESE ARTICLES TO REACH THE FOLLOWERS OF OTHER RELIGION SPECIALLY THE DALITS.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு