Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஒரு மாலைப் பொழுது ! 14

அதிரைநிருபர் பதிப்பகம் | September 30, 2012 | , , , , ,



ஓடி விளையாடு வாப்பா
ஒளிந்து விளையாடாதே வாப்பா !

கூடி விளையாடு வாப்பா
கூவி விளையாடாதே வாப்பா !

ஆரோக்கியம் தேடியாடு வாப்பா
அவசரத்தில் ஓடியாடாதே வாப்பா !

மாலை க்காக காத்திரு வாப்பா
மாலை தவறி மாற்றிடாதே வாப்பா !

காணவந்த கார்மேகம்
கனமழைப் பொழியுமுன்
வீட்டுக்கு
ஓடி வந்திடு வாப்பா

இடியிடிக்கும் பயம்போக
எனை
இருக்கி அனைத்திடு வாப்பா

மின்னல் வெட்டி
மின்வெட்டு வருமுன்
மெழுகுவர்த்தி ஏற்று வாப்பா

மெல்லிய வெளிச்சத்தில்
கொஞ்ச நேரம்
மழையை ரசிப்போம் வாப்பா

இப்படிக்கு,
விளையாட இடம் தேடும்!
குழந்தை… !

பட்டைதீட்டிய வரிகள் : அபுசாரூக்
எட்டிப் பிடித்த வரிகள் : அபுஇறாஹிம்
புகைப்படம் : அபுமஹ்மூத்

மாட்டுக்கறிக்கு ஓட்டுப் போடுங்கள் - குறுந்தொடர் (2) 11

அதிரைநிருபர் பதிப்பகம் | September 30, 2012 | , , , ,

கடந்த அத்தியாயத்தில் மாட்டுக்கறி உணவாக சாப்பிடப்படுவது வேதகாலம்தொட்டு பரவலாக இருந்த பழக்கம்தான் என்பதையும், இந்த உணவுப் பழக்கம் மத ரீதியான சடங்குகளிலும், மரியாதை நிமித்தமாகவும் மேற்கொள்ளப்பட்டன என்பதையும், விவேகானந்தர் போன்ற மகான்கள்  என்று  போற்றப்பட்டோரும் இதனை ஏற்றுக் கொண்டும்  குறிப்பிட்டும் இருககிறார்கள் என்பதையும் ஆதாரங்களுடன் பார்த்தோம். அப்படி இருந்த மாட்டுக்கறி பின்னர் ஏன் இப்படியானது? ஒரு உணவுப் பதார்த்தத்துக்கு  எப்படி மத சாயம் பூசப்பட்டது? என்பதை இப்போது காணலாம். 

முன் அத்தியாயத்தில் பார்த்தபடி வேதகாலத்தில் பசுக்கள் கொல்லப்பட்டாலும் ,        உண்ணப்பட்டாலும் அதில் ஒரு விதிவிலக்கு இருந்திருக்கிறது. அதாவது அந்தப் பசுக்களில் கூட “அக்ஞா” என்று அழைக்கப்பட்ட பசுக்கள் இருந்திருக்கின்றன.  “அக்ஞா” என்ற சொல்லுக்கு கொல்லத் தகாதவை என்று அதர்வண வேதம் குறிப்பிடுகிறது. இந்த கொல்லத் தகாத பசுக்கள் எவை என்றால் அவை ஒரு பிராமணருக்கு, ஒரு பலி நடத்திய பிறகு தட்சணையாக- கூலியாக – உயிருடன் கொடுக்கப்படும் பசுக்களாகும். அதாவது ஒரு பிராமணருக்கு கூலியாக கிடைத்த பசு மட்டுமே புனிதமானது அது கொல்லப்படக்கூடாதது; உண்ணப்படக்கூடாதது. இந்த புனிதப்பசுவின் அரிச்சுவடி இப்படித்தான் ஆரம்பிக்கிறது. 

அத்துடன் புத்த, சமண மதங்கள் தோன்றி வளரும்போது பொதுவாக விலங்குகளை வதை செய்வது, அறுப்பது, உண்பது வெறுக்கப்பட காரணமானது. உயிர்  வதைக்கு பொதுவான கருத்து விதைக்கப்பட்டது. அதில் கூட பசுவுக்கு என்று தனியான அந்தஸ்து பிரச்சாரப்படுத்தப்படவில்லை. பிற உயிர்களைக் கொல்லாதே என்கிற பொதுப்பிரிவில்தான் வந்தன. ஆகவே வன்முறைக்கு எதிரான  முறைகளை உபநிடதக் கொள்கைகள் வலியுறுத்தியதித்தத் தொடர்ந்தும்,  புத்தம், சமணம் ஆகியவற்றின் எழுச்சி,  வைணவத்தின் மையக்கருத்து ஆகியன தாம் விலங்குகளைக் கொல்லாமையை உறுதிப்படுத்தின. 

ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் இந்திய சமூகம் நில பிரபுத்துவம், ஜமீன்தார் முறை போன்றவற்றிற்கு மெல்ல மாறத்தொடங்கிய சூழல் வளர்ந்தபோது பசு புனிதமானது என்கிற தத்துவமும் வளர்த்தெடுக்கப்படத்தொடங்கியது.  நிலப்பிரபுத்துவம், குறு நில மன்னர்கள் என்கிற அமைப்புகள் மலரத்தொடங்கியபோது சில சட்டங்கள், சம்பிரதாயங்கள் அரசமைப்பில் உருவாக்கப்பட்டன. அந்தப் பணிகளில் ஆளுமை செலுத்திய பிராமணர்கள், மாட்டிறைச்சி தின்பதை தடுத்து நிறுத்த சட்டமாக்க அரசர்களுக்கு ஆலோசனை சொன்னார்கள். இதற்கு காரணம் மாடுகள் பெருமளவில் விவசாயத்துக்கு பயன்படவேண்டும் – உணவுக்காக அழிக்கப்படக்கூடாது என்பதே. அதோடு கூடவே அரசவைய்ல் வேலை செய்துவந்த பிராமணர்களுக்கு பெருமளவில் பசுக்களே தானமாக வழங்கப்பட்டன. அவை புனிதப்பசுக்களாக நடத்தப்பட்டன. வேளாண்மைச் சமூகத்திலும்  பசுக்களின் பொருளியல் மதிப்பு அந்நிலையை முதன்மைப்படுத்தின. அத்துடன் பசுக்களின் பாலும் உணவாகப் பயன்பட்டதும், பாலைத்தொடர்ந்த அதன் சார்பு உணவுகளான தயிர், வெண்ணெய், நெய் போன்றவைகளுக்கும் பஞ்சம் வரக்கூடாது என்கிற எண்ணத்திலும் அவைகளைத்தருகிற பசுக்களுக்கு, விலங்குகளுக்கு மத்தியில் ஒரு வி.ஐ. பி அந்தஸ்து தரப்பட்டது. 

தாயைப்போல பால் தருவதால் பசு இப்படி கோ மாதா என் குல  மாதா என்று கொண்டாடப்பட்டது. “ பாதிப்புள்ளே பொழைக்குதப்பா பசும்பாலைத் தாய்ப்பாலா நம்பி” என்று அந்தக்காலத்திலேயே இருந்ததிருக்கும் போலத்தோன்றுகிறது. இந்த அடிப்படையில் சட்டத்தில் ஏற்பட்ட நடைமுறைகளுக்கு  'கலிவர்ஞா' என்று பெயர். இந்த முறைப்படி , முன் நடந்த முறைகள் மாற்றப்பட்டன பசுவைக் கொல்வது தவறு என்று பார்ப்பன கருத்துக்கள் பிரச்சாரமாய் பரவத்தொடங்கின. 

அத்துடன் மக்களிடம் உயர்வு தாழ்வு கற்பித்த வேதங்கள் உயர்ந்தொரையும் , தாழ்ந்தோரையும்  வேறுபடுத்திப்பார்க்க கையில் எடுத்த ஒரு ஆயுதமாகவும் மாட்டிறைச்சி இருந்தது. மாட்டிறைச்சி தின்போர் புலையர் என்றும், சூத்திரன் என்றும், தாழ்த்தப்பட்டோன் என்றும் முத்திரை குத்தப்பட்டனர். சுருக்கமாக ,  பெற்ற  தாய்க்கு சமமாக  பால் தரும் பசுவை    அறுத்து புசிப்பவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று தாழ்த்தப்பட்டோரை தரம் பிரிக்கவும் புனிதப்பசு கருவியாயிற்று.  

இந்தியாவை பல்வேறு காலங்களில் ஆண்ட வெவ்வேறு ஆட்சியாளர்களாலும்  பசு அரசியல் கருவியாக்கப்பட்டது. “இவன் ரெம்ப நல்லவண்டா” என்று மற்றவர்களால்     மதிக்கப் படவேண்டுமேன்று எண்ணிய அரசர்கள் தங்களின் கைகளில் குத்திக்கொண்ட அக்மார்க் முத்திரை இந்த  புனிதபசு கொள்கை. இதற்கு இந்த அரசர்களை தூண்டியவர்கள்      அரசவைகளில் திவான்களாகவும் ,ராஜ ரிஷிகளாகவும் நிழல் நிர்வாகம் செய்த பிராமணர்களே. இந்த சூழ்ச்சிக்கு  மொகலாய மன்னர்களும் தப்பவில்லை.  

சமணர்களையும் பார்ப்பனர்களையும் மதிக்கும் பொருட்டு நல்லெண்ணத்தை பறைசாற்றும்  வகையில்  பசுக்களைக் கொல்வதற்கு மொகலாயப் பேரரசர்களான பாபர், அக்பர், ஜஹாங்கீர், ஒளரங்கசீபு ஆகியோர் தடை விதித்தனர்.  'நாம் இந்துக்கள் இம்மண்ணின் மைந்தர்களாகிய நாம் பசுக்களைக் கொல்வதோ அதன் வழி பார்ப்பனர்களை ஒடுக்குவதோ கூடாது' என்று பசுக்களையும் பார்ப்பனர்களையும் காப்பாற்ற வந்த அவதாரமாகக் கருதப்படும் மாமன்னர் சிவாஜி பறைசாற்றியிருக்கிறார்.

'சிக் குகா' அல்லது 'நாம்தாரி' என்னும் பெயரில் 1870-களில் பஞ்சாப்பில் தொடங்கப்பட்ட 'இந்து பசுப் பாதுகாப்புப் படை' தான் முதலில் பசுக்களை அரசியல் கருவியாக்கியது; அவர்களுடைய இக்கருத்தியல் பின்னர் தயானந்த சரஸ்வதி அவர்களால் 1882-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட 'முதல் கோரக்கினி சபை'யால் வலுப்படுத்தப்பட்டது. இவ்வமைப்புத் தான் குறிப்பிட்ட பிரிவு மக்களின் சின்னமாகப் பசுவை அடையாளப்படுத்தியது. 

மேலும் சுவாமி தயானந்த சரஸ்வதி , ஆரிய சமாஜ் என்கிற ஒரு இயக்கத்தை தோற்றுவித்து பசுவின் புனிதம் பற்றி நாடெங்கும் பரவலாக ஒரு இயக்கம் நடத்தினார். ஆரிய சமாஜம் என்பது வேறு பல நல்ல கருத்துக்களையும்  மக்களிடம் பிரச்சாரம் செய்தது. அவற்றுள் சில சிலை வணக்கம் ஒழிக்கப்படவேண்டும், குழந்தை மணம் தடுக்கப்பட வேண்டும், விதவை மணம் ஊக்குவிக்கப்பட வேண்டும், பிறப்பிலேயே மனுநீதியால் விதிக்கப்பட்ட சாதிப் பாகுபாடுகள் அகற்றப்பட வேண்டும் ஆகியனவாகும். இத்துடன் பசுவை போற்றவேண்டும் என்கிற கருத்தும் சுவாமி தயானந்த சரச்வதியால் போதிக்கப்பட்டது. உயர் சாதியினர் இந்த சுவாமி தயானந்தா சரஸ்வதி போதித்த ஏனைய கருத்துக்களை வசதியாக புறக்கணித்துவிட்டு பசுவைப் போற்றவேண்டும், போஷிக்க வேண்டும் என்கிற கருத்தை  மட்டும் பிடித்து தொங்கினர்.  

மாடுகளின் ,  அதிகஅளவு எடை கொண்ட  மாமிச கறி  அளவினை உத்தேசித்தும், விலை குறைவாக கிடைப்பதை உத்தேசித்தும், அன்றாட உணவுக்கும்,  பக்ரீத் போன்ற பண்டிகை காலங்களில் அவர்களின் மார்க்க நம்பிக்கையான பலி இடுவதற்கும் ஏழைகளுக்கு தானம் செய்வதற்கும்  முஸ்லீம்கள் , மாடுகளை அதிக அளவில் வாங்கத்தொடங்கியபோது சுவாமி தயானந்த சரஸ்வதியின் பிரச்சாரத்தால்  மாட்டுக்கறி உண்ணும  முஸ்லிம்களை  நோக்கி , அதியே காரணமாக்கி  1880-களிலும் 1890-களிலும் கலவரங்களை ஏற்படுத்தினார்கள். 

இவ்வாறு பசுவதை என்பது செய்யக்கூடாதது- பசுபுனிதமானது என்றெல்லாம்  கடும் பிரச்சாரம் நிகழ்ந்தாலும் ,  1888-ம் ஆண்டில் வடமேற்கு மாகாண உயர் நீதிமன்றம், 'பசு புனிதமான பொருள் அல்ல  என்று  தீர்ப்பு அளித்தது. இது  அவர்களுடைய வேகத்தை மட்டுப்படுத்தியது.; ஆனால் கோபத்தை அதிகப்படுத்தியது. நீதிமன்றத்தில் மூக்குடைந்தவர்கள் காவி உடையணிந்து தடி எடுக்க ஆரம்பித்தனர். இந்து – முஸ்லீம்களுக்கிடையில் ஏற்பட்ட பல கலவரங்களுக்கு பசுவே கருப்பொருள் ஆனது.  கோ மாதா கொல்லப்படுகிறாள் என்று உணர்ச்சியை தூண்டிவிட்டார்கள். 

1893-ம் ஆண்டு உத்திரப் பிரதேசத்தின் அஜாம்கர் மாவட்டத்தில் கலவரம் நடந்தது. அக்கலவரத்தால் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். 1912-13-ல் அயோத்தியாவில் கலவரம் மூண்டது. 1917-ல் ஷாகாபாத்தில் பெரிய கலவரம் மூண்டது. பல முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்; அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. 

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னும்  பல துன்பமான நிகழ்வுகள் பசுவின் பொருட்டால் நடைபெற்றன.  பசு வதையைத் தடுக்க வேண்டும் என்று 1966-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள மதவாத அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் சேர்ந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணியைப் பாராளுமன்றம் முன்பு நடத்தின. அப்போது மூண்ட கலவரத்தில் எட்டுப் பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர். காந்தியடிகளின் ஆன்மீக வாரிசாகக் கருதப்படும் ஆச்சாரிய வினோபா பாவே பசுவதையைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 1979-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உண்ணாவிரத  போராட்டம் நடத்தினார். இப்படியாகப் பசு அரசியல் கருவியானது.

பசு வதையைத் தடுக்க வேண்டும் என்று சொன்ன ஆதிக்க சாதி அமைப்புகள் எவையும் 'பசுவைக் கொல்லக்கூடாது என்று வேதங்களிலோ பார்ப்பன எழுத்துகளிலோ எந்தக் குறிப்பும் இல்லை' என்பதையும் 'காலாகாலமாகப் பசு தின்னப்பட்டு வந்திருக்கிறது' என்பதையோ காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.

இதனால் -

உண்ண உணவின்றி அவதிப்படும் ஏழை மனிதனை பற்றி கவலைப்படாமல் மாட்டைப்பற்றி கவலைப்பட்டோர்-

மாட்டுக்கறியை உண்ணக்கூடாது ஆனால் மாட்டு  மூத்திரத்தை குடிக்கலாம், வீட்டிலும், உடைகளிலும், உச்சந்தலைகளிலும்  தெளித்துக்கொள்ளலாம் என்றும் ஒவ்வாத  சாத்திரம் பேசியோர்-

பைபிளில் கூட ஆதம் -  ஏவாளுக்கு எல்லாவற்றையும் படைத்து அனுபவிக்கக் கொடுத்த இறைவன் ஒரு பழத்தைக் காட்டி சுவைக்கக்கூடாது என்று  தடுத்த கதை இருக்கிறது. ஆனால் எந்த நான்கு வேதங்களிலும் , உபநிதங்களிலும் மாட்டை அறுப்பதும்  புசிப்பதும்  தடுக்கப்படவில்லையே என்று சிந்திக்காதோர்-

மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் ஒரு அவதாரம் கூட பசு அவதாரம் எடுத்ததாக குறிப்பிடப்படவில்லையே - பன்றி  அவதாரம்கூட எடுத்தார்- நரகலை தின்னும் பன்றிக்கு வேதங்கள் கொடுத்த மதிப்புக்கூட பசுக்கு கொடுக்கவில்லையே அதை ஏன்           புனிதமாக்கவேண்டுமென்று என்று யோசிக்க அறிவுபூர்வமாக மறுத்தோர்-  

ஆள் திரட்டுவதற்கும், அரசியல் நடத்துவதற்கும் பசு மாட்டை பயன்படுத்த ஆரம்பித்தனர். அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கெதிராக பாவப்பட்ட பசுவை புனிதமாக்கி, பசுவின் பெயரால் நாட்டில் பல வன்முறை கலவரங்களை நடத்தினர்.  

அடுத்த அத்தியாயத்தில் நிறைவுறும்.
இபுராஹீம் அன்சாரி


உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ! 9

அதிரைநிருபர் பதிப்பகம் | September 29, 2012 | , , ,


"சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக எந்த ஓர் அப்பாவி நபரையும் பிடித்து பயங்கரவாதி / தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறையில் அடைக்காதீர்" என்று நேற்று உச்ச நீதிமன்றம் தனது வரலாற்று சிறப்பு மிக்க அதிரடி தீர்ப்பில் குஜராத் போலீஸ்க்கு ஓங்கி நச்சென மண்டையில் குட்டும் விதமாக, இந்த நெத்தியடி கருத்தினை கூறியது.  குஜராத்துக்கு மட்டுமல்ல... இது அனைத்து மாநில அரசு , காவல்துறை மற்றும் ஊடகங்களுக்கும் சேர்த்தே பொருந்தும்..!

'எந்த ஓர் அப்பாவி முஸ்லிமும் "என் பெயர் கான், ஆனால், நான் ஒரு பயங்கரவாதி இல்லை," என்று சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தாத ஓர் உறுதியான சூழலை காவல்துறை உருவாக்க வேண்டும்' என்றும் நீதிபதிகள் H.L. Dattu  மற்றும் C.K. Prasad அடங்கிய உச்சநீதி மன்ற பெஞ்ச் நேற்று தனது அதிரடி தீர்ப்பில் நெத்தியடியாக இப்படி கூறியது.  அடி சக்கை..! அப்படி போடு..!

( No innocent person should be branded a terrorist and put behind bars simply because he belongs to a minority community, the Supreme Court has told the Gujarat Police. Police must ensure that no innocent person has the feeling of sufferance only because “my name is Khan, but I am not a terrorist,” a Bench of Justices H.L. Dattu and C.K. Prasad said on Wednesday. )

வழக்கில் இருந்த பொய்யான ஜோடிப்பு புனைவுக்கதைகளை கண்டு எத்தனை தூரம் நொந்து போயிருந்தால் இப்படியெல்லாம் கூறி இருந்திருப்பார்கள் அந்த நேர்மை மிகுந்த நீதிபதிகள்..!? சிந்திக்கவும் சகோஸ்..! அவர்களின் மனிதநேய வரிகளுக்கு வாழ்த்துகளுடன் நமது நன்றிகள் பல உரித்தாகுக..!

வேண்டுமென்றே பொய்க்குற்றச்சாட்டு சுமத்தி, 1994 இல் தடா சட்டத்தில் பிடித்த 11 முஸ்லிம்களை 'குற்றமற்ற நிரபராதிகள்' என்று கூறி விடுதலை செய்துவிட்டுத்தான், குஜராத் போலிசை அத்தீர்ப்பில் இப்படி ஒரு 'நெத்திஅடி' அடித்து உள்ளது உச்ச நீதி மன்றம்..! வாறே...வா...!

"1994-ஆம் ஆண்டு ஜூன் மாதம் குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்தில் ஹிந்துக்கள் நடத்திய ஜஹன்னாத பூரி யாத்திரையின் போது மதக்கலவரத்தை நடத்த சதித்திட்டம் தீட்டினார்கள் இவர்கள்" என்று கூறி, அப்போதைய காங்கிரஸின் குஜராத் முதல்வர் - சபில்தாஸ் மேத்தா ஆட்சில், 11 அப்பாவி முஸ்லிம்கள் மீது 'தடா' சட்டத்தில் பொய்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

அப்போது, தமிழ்நாட்டில் ஜெ. முதல்வராக இருந்தபோதும் இப்படியான அராஜகம் தமிழக முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டதை அறிவோம். பாபர் மஸ்ஜிதை ஹிந்துத்துவாக்கள்  இடிக்கும்போது வேடிக்கை பார்த்த ஆர் எஸ் எஸ் தொடர்புடைய நரசிம்ம ராவ் ஆண்ட காலத்து காங்கிரசும், பாஜகவுக்கு சற்றும் சளைத்தது இல்லை என்பதையும் அறிவோம்.

பின்னர் வந்த பாஜகவின் நர்ர்ர்ர்ரேந்திர மோடியின் ஆட்சியில், 2002, ஜனவரி 31-ஆம் தேதி அஹ்மதாபாத் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு... (ஏற்கனவே எட்டு ஆண்டுகள் ஜாமீன் இல்லாத தடாவில் சிறையில் இருந்தவர்களுக்கு) ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.

எவ்வித ஆதாரமும் இன்றி தண்டனை பெற்றதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர், அந்த 11 அப்பாவி முஸ்லிம்கள்..! வழக்கில் தண்டிக்கப்பட்ட இவர்கள் சமர்ப்பித்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  இதில், பயங்கரவாத மற்றும் சீர்கேட்டு நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் மற்றும் பிற சட்டங்களின் கீழ் கைது, மற்றும் 1994 ஆம் ஆண்டு அகமதாபாத் ஜெகன்னாத் பூரி யாத்திரை போது வகுப்புவாத வன்முறை உருவாக்க திட்டம், ஆயுதங்கள் வைத்து இருந்தது,  போன்ற அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் 11 முஸ்லிம்களையும் விடுவிக்க உச்ச நீதி மன்ற பெஞ்ச் நேற்று உத்தரவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்.      

மேலும் அத்தீர்ப்பில்.... 

சட்டத்தை அமல்படுத்த நியமிக்கப்பட்ட போலீஸ் சூப்பிரண்டும், ஐ.ஜி உள்ளிட்ட இதர அதிகாரிகளும் அதனை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. 'பிறந்த மதத்தின் பெயரால் கொடுமை இழைக்கப்படுகிறோம்' என்று எந்த ஒரு அப்பாவிக்கும் தோன்றக்கூடாது. இதனை சட்டத்தின் பாதுகாவலர்கள் உறுதிச்செய்ய வேண்டும்.  இதனை கூறுகையில்தான், ‘my name is Khan, but I am not a terrorist’ என்ற ஒரு திரைப்பட வசனத்தை சுட்டிக்காட்டினர், நீதிபதிகள்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம்களுக்கு தண்டனையை இன்னும் அதிகப்படுத்த கோரும்... (அட... சண்டாளர்களா...) குஜராத் மாநில அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது, அத்தீர்பில்..! 

எஃப்.ஐ.ஆர் சமர்ப்பிக்கும் முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் அனுமதியை பெறவேண்டும் என்ற தடாச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள சட்டப் பிரிவை அரசு கடைப்பிடிக்கவில்லை என்று நீதிமன்றம் குற்றம் தெரிவித்தது.

'தடா சட்டத்தை சுமத்தும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகளை பேணாததால் பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த தீர்ப்பு, காவல் துறையின் இதுபோன்ற தவறுகள், இப்படி 'மகாத்மா நாட்டில், தவறாக சட்டம் கையாளப்படுகிறது' என்று பிரச்சாரம் செய்ய நம் எதிரி நாடுகளுக்கும் ஒரு வாய்ப்பை அளிக்கிறது. இதன் மூலம் அவர்களால் இச்சட்டம் சிறுபான்மையோர் மீது துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, சட்டத்தை பிரயோகிக்கும் பொழுது தனி நபரின் சுதந்திரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்யவேண்டும்' என்றும் கூறியது.

தீவிரவாதத்தை தடுப்பதிலும், அதிகமான மக்கள் பலியாகக்கூடாது என்பதில் போலீசாரின் உறுதி பாராட்டத்தக்கதுதான். என்றாலும், இவ்வழக்கில் ஆயுதங்களும், வெடிப்பொருட்களையும் கண்டுபிடிக்க புலனாய்வு ஏஜன்சிகளால் இயலவில்லை. இவ்வாறு உச்சநீதிமன்றம் தனது சிறப்பான தீர்ப்பில் கூறியது.

என்னால்  பொருளுணர்ந்தும் அதேபோல சிறப்பாக தமிழில் மொழி பெயர்க்க முடியாத அத்தீர்ப்பின் ஒரு சிறப்பான பகுதி இது : “We emphasise and deem it necessary to repeat that the gravity of the evil to the community from terrorism can never furnish an adequate reason for invading personal liberty, except in accordance with the procedure established by the Constitution and the law,” the Bench said. (சுவை கெடாமல் ஆங்கிலத்திலேயே படியுங்கள்)

நன்றி : உச்சநீதி மன்றம்

இந்திய தேசத்தின் நீதி-சட்டம் மீதான அன்பை-நம்பிக்கையை அவ்வப்போது  வலுக்க செய்வதாக இந்த தீர்ப்பு, மகிழ்வோடு வரவேற்கத்தக்க வகையில் அமைந்து இருக்கின்றது. 

இருப்பினும், ஒவ்வொரு முறையும் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் பல்லாண்டுகள் சொல்லொனாத்துயறுற்று,  பின்னர் "குற்றம் யாதுமற்ற நிரபாராதிகள்" என்று உச்சநீதிமன்றாத்தால் அப்பாவிகள் விடுவிக்கப்படும் ஓவ்வொரு முறையும்... நமது மனதினில்... ரணமாகி இருக்கும் அதே பழைய கேள்விகள்... எவரும் எந்த நீதியும் கண்டுகொள்ளாத அரதப்பழைய அதே கேள்விகள்...

கடந்த 18 ஆண்டுகளாக, பொய் குற்றச்சாட்டுக்காக தங்கள் வாழ்வை சிறையிலும், நீதிமன்ற வளாகத்திலும், இவற்றுக்கு இடையே பூட்டப்பட்ட வாகனத்திலும் கழித்த இந்த அப்பாவிகள் இழந்த வாழ்க்கையினை எப்படி அவர்களிடம் திரும்பக்கொடுப்பது..? யார் கொடுப்பது..? எவ்வளவு இழப்பீடு..? எங்கே இழப்பீடு..? கோடி கோடி இழப்பீடு தந்தாலும்... அவர்களின் இளமையை மீண்டும் எப்படி மீட்டுத்தருவது..?
:-(
 'Justice delayed is justice denied'

....என்று  ஒரு ஆங்கில பழமொழி உள்ளது, தெரியுமா..?
-----------------------------------------------------------------------------------------------------------
நிறைய  பேரால் ஏனோ முக்கியத்துவம் அளிக்கப்படாத இச்செய்தியை தந்தமைக்கு மிக்க நன்றி  'தி ஹிந்து' :-


முன்னணி தமிழ் செய்தி தளங்களால் வழக்கம்போல இருட்டடிப்பு செய்யப்படும் செய்திகளை, தொடர்ந்து தமிழில் தந்து கொண்டு இருக்கும் 'தூது'க்கும் மிக்க நன்றி.


நன்றி : முஹம்மத் ஆசிக்_citizen of the world
[http://pinnoottavaathi.blogspot.com/2012/09/supreme-court_27.html]

இருதய சிகிச்சைக்காக உதவி நாடி… 3

அதிரைநிருபர் பதிப்பகம் | September 29, 2012 | , , , , ,


இதயம் என்றொரு பதமெடுத்து உணர்வுகளை காட்டவில்லையென்றால் இரக்கமற்றவன் என்று பின்னுக்குத் தள்ளப்படும் மனிதம், அதே இதயத்தை கருவாகக் கொண்டு காவியம் படைக்கிறான், கவிதை புனைகிறான், காதல், கோபம் கொள்கிறான, அது மட்டுமா மன்னிக்கவும் செய்கிறான்.

இங்கே, உதவி நாடி வேண்டுகோள் வைத்திருக்கும் நபரின் தற்போதைய உடல் ஆரோக்கியமும் அவரின் உருக்கமான வேண்டுகோளும் வாசகர்கள் முன்னால் வைக்க வேண்டிக் கொண்டதனால் இங்கே பதிகிறோம்.


படைத்தவனின் திருப் பொருத்தத்தை நாடி இயன்ற உதவிகளை அவருக்கென்று இருக்கும் வங்கி கணக்கிலோ அல்லது நேரடியாகவோ வழங்க வேண்டுகிறார்.

Bank name: India Bank, Account number: 6068577000, account holder name: K. Shahul Hameed (Mobile No. : +91 8220351291), இருப்பிடம்: கடற்கரை தெரு ஜமாத்திற்கு உட்பட்ட ஏறிப்புரக்கரையில் உள்ள குப்பம்.





குறிப்பு : அதிரைநிருபர் வலைத்தளம் நிதி உதவியென்று நேரடியாக எவ்வகை பரிந்துரையோ அல்லது நித்யுதவி வேண்டி வரும் வேண்டுகோளை பதிவதில்லை என்ற நிலைபாட்டில் தெளிவாக இருக்கிறது. இந்த வேண்டுகோளை வைத்த சாகுல் ஹமீத் என்பவரின் குடும்பச் சூழலை நேரில் ஆராய்ந்து பரிந்துரை செய்த சகோதரர்களின் வேண்டுகோளும், அவர்களின் ஆதரவு இவருக்கு இருப்பதை நினைவில் நிறுத்தி இதனை பதிந்திருக்கிறோம்.

அதிரைநிருபர் குழு

பேறு பெற்ற பெண்மணிகள் - தொடர்கிறது... 15 10

அதிரைநிருபர் பதிப்பகம் | September 28, 2012 | , , , ,

பெண்களுள் பேரறிஞர்

‘பேறு பெற்ற பெண்மணிகள்’ என்ற இத்தொடரில், பேறும் புகழும் பெற்ற புனிதவதி ஒருவரைப் பற்றிக் கூறாவிட்டால்,இத்தொடர் முழுமை பெற்றதாகாது!  அவர் யார் தெரியுமா?

மர்யம் ஜமீலா!

பத்து வயதுச் சிறுமியாக நியூயார்க்கில் தன் யூத மதப் பெற்றோருடன் வசித்துவந்த மார்கரெட் மார்கஸ், யூதர்களின் ஞாயிற்றுக் கிழமைப் பள்ளியில் பயின்றுகொண்டிருந்தபோது, தான் பிறந்த யூத மதத்திற்கும் அரபுகளின் இஸ்லாம் மதத்திற்கும் இடையில் இருந்த ஒற்றுமையால் கவரப்பெற்றாள்.

பின்னர், யூத இளையோர் இயக்கமான ‘மிஸ்ராகி ஹட்ஸாய்ர்’ (Mizrachi Hatzair) என்பதில் உறுப்பினராகச் சேர்ந்து தீவிரமாகப் பாடுபட்டார் மார்கரெட்.  அதில் ஈடுபட்டு உழைத்தபோது, அமெரிக்க யூதர்களின் ‘சியோனிஸம்’ (Zionism) எனும் தீவிரவாதப் போக்கு, கொடிய அரபு-வெறுப்பைக் கொண்டிருந்ததை உணர்ந்தார்.  எனினும், அமெரிக்க யூதர்கள் சியோனிஸத்தின் இரும்புப் பிடியில் அகப்பட்டிருந்ததால், சிலபோது அவர்களுக்கு இயைபாகவே செயல்பட வேண்டியதாயிருந்தது.  யூதர்களின் அரபு வெறுப்பு அளவுக்கு மீறிப் போனதால், மார்கரெட் சில மாதங்களிலேயே அதை விட்டு வெளியேறினார்.

மார்கரெட் தனது இருபதாவது வயதில் நியூயார்க் பல்கலைக் கழகத்தில் பயின்றுகொண்டிருந்தபோது, அதன் ஹீப்ரூ மொழித் துறைத் தலைவரான பேராசிரியர் ரப்பி ஆப்ரஹாம் கட்ஷ், யூத மதத்திலிருந்தே இஸ்லாம் மதம் தோன்றியதென்றும், அதனால், இஸ்லாத்தைவிட யூத மதம்தான் உயர்ந்தது என்றும் அழுத்தமாக வாதாடினார்.  ஆனால் மார்கரெட்டோ, அந்த இனவாத வலையில் விழவில்லை.  மாறாக, ‘சியோனிஸம்’ என்பது, யூத மதத்தின் பூர்வீகக் குடிகளால் தோற்றுவிக்கப்பட்ட ஓர் இனவாத இயக்கமே என்பதைக் கண்டுபிடித்தார்!

“பாலஸ்தீன மண்ணின் மைந்தர்களான அரபுகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பற்றி, அமெரிக்காவின் சியோனிஸ யூதர்கள் கிஞ்சிற்றும் அனுதாபப்பட்டதாகத் தெரியவில்லை!  அதனால், நான் யூத மததைச் சேர்ந்தவள் என்று கூறிக்கொள்ள என் இதயம் இடம் கொடுக்கவில்லை” என்று பிற்காலத்தில் தனது உள்ளுணர்வை வெளிப்படுத்தினார் மர்யம் ஜமீலாவாக மாறிய மார்கரெட்.

பெற்றோரின் வற்புறுத்தலாலோ, அக்காலத்தின் போக்கு (Trend) என்பதாலோ, மார்கரெட் தனது கல்லூரிப் படிப்பின்போது யூதப் பேராசிரியர் கட்ஷின் சிறப்பு வகுப்பில் தொடர்ந்து பயின்றுவந்தார்.  அவ்வகுப்பில் நிகழ்ந்த அற்புதப் பிணைப்பு, தன் வாழ்வின் புரட்சி மிக்க மாற்றத்திற்குக் காரணமாயிற்று என்று நினைவுகூர்கின்றார்.  அது என்ன?

அந்த வகுப்பில் சேர்ந்த முதல் நாள், வகுப்பினுள் நுழைந்த மார்கரெட், அங்கே மாணவர்கள் மட்டுமே அமர்ந்திருக்கக் கண்டார்.  அவர்களும், யூத மத அடையாளமான தலைத் தொப்பி (Skul cap) அணிந்திருந்தனர்.  ஆண்கள் மட்டுமே இருந்த அறையில் அஞ்சியஞ்சி நுழைந்து, காலியாக இருந்த ஓரிடத்தில் அமர்ந்தார்.  சற்று நேரம் சென்ற பின், மாணவி ஒருத்தி வந்து அருகில் அமர்ந்தாள்.  அவள் அழகான, ஒல்லியான, உயரமான, வெளுத்த தோற்றத்திலும், பொன்னிறத் தலை முடியுடனும் இருந்து மார்கரெட்டின் மனத்தைக் கவர்ந்தாள்.  தோற்றத்தில், சிரியா அல்லது துருக்கி நாட்டைச் சேர்ந்தவள் போல் இருந்தாள்.

வகுப்பு முடிந்ததும், இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொண்டனர்.  அவள் பெயர் ஜெனித்தா லீபர்மேன் (Zenita Liebermann) என்றும், அவளுடைய பெற்றோர் ரஷ்யப் புரட்சிக்கு முன் (1917) அங்கிருந்து தப்பி வந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் என்றும், தன் தந்தையின் வற்புறுத்தலால் ஹீப்ரூ மொழியைக் கற்று, அந்தச் சிறப்பு வகுப்பில் வந்து சேர்ந்ததாகவும் கூறினாள் அப்பெண்.  பின்னர் ஒரு சில நாட்களே வகுப்பிற்கு வந்த ஜெனித்தா, முன்னறிவிப்பு எதுவுமின்றித் திடீரென்று  வகுப்பிற்கு வராமல் நின்றுவிட்டாள்!

“பல மாதங்கள் கடந்தன.  நான் ஜெனித்தாவை மறந்துவிட்டேன்.  திடீரென்று ஒரு நாள் அவள் என்னைத் தொடர்பு கொண்டாள்!  பல மாதங்கள் தொடர்பற்றுப் போனது பற்றி வருத்தம் தெரிவித்தாள்.  அன்று மாலை, தன்னை நியூயார்க்கின் ‘மெட்ரோபாலிட்டன்’ அருங்காட்சியகத்தில் வந்து சந்திக்குமாறு அன்புடன் அழைத்தாள்.  நானும் அதை ஏற்று, அங்கே சென்றேன்.  அங்கே அரபு மொழியின் அழகிய வண்ணக் கையெழுத்துகளும், புராதனமான குர்ஆன் பிரதிகளும் காட்சிப் பொருள்களாக வைக்கப்பட்டிருந்தன.  எனது ஆர்வத்தையும் அக்கண்காட்சி தூண்டிவிட்டது.  (பிரிந்தோர் கூடினால், பேசவும் வேண்டுமோ?)  நாங்கள் இருவரும் ஆரத் தழுவிக்கொண்டோம்!” என்று தனது தோழியை மறுபடியும் சந்தித்ததை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கின்றார் மர்யம் ஜமீலா.

தோழியைச் சென்று கண்டபோது, முதன்முதலாக அவள் கூறிய செய்தி, அதிர்ச்சியளித்தது மார்கரெட்டுக்கு!  ஜெனித்தா இஸ்லாத்தைத் தழுவிவிட்டாளாம்!  எப்படியென்று கேட்டபோது அவள் கூறினாள்:  “எனது இரண்டு கிட்னிகளும் பழுதாகிப் போய், நான் படுத்த படுக்கையிலானேன்.  எவ்வளவோ மருத்துவங்கள் செய்தும், நோய் குணமாகவில்லை.  அதனால், டாக்டர்களால் கைவிடப்பட்ட நிலைக்காகி,  மறையப் போகும் நாட்களை எண்ணிக்கொண்டு ஒரு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தேன்.  அப்போது யாரோ, முஸ்லிம்களின் வேதமான குர் ஆனின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தந்தார்கள்.  அது அப்துல்லாஹ் யூசுப் அலீ அவர்களின் மொழிபெயர்ப்பும் விளக்கக் குறிப்புகளும் கொண்டது.  அதனைத் திறந்து படிக்கத் தொடங்கினேன்.  படிக்கப் படிக்க, என் இதயம் அதன்பால் ஈர்க்கப்பட்டு, நான் அழத் தொடங்கினேன்.  அந்நிலையில், எனக்குள் ஓர் உணர்வு, நாம் குணமாகிவிடுவோம் என்று!  அடுத்த நிமிடமே என் தோழிகளுள் இருவரைக் கூப்பிட்டு வைத்து, அவர்களின் சாட்சியுடன் ‘ஷஹாதா’ மொழிந்து முஸ்லிமானேன்.”

மறுபடியும் இருவரின் நட்பு தொடர்ந்தது.  அரபு உணவு வகைகளின் மீது ஆவல் கொண்டிருந்த அவ்விருவரும் அவற்றைத் தேடிச் சென்று ஒன்றாக இருந்து உண்பார்களாம்.  அத்தோழியின் மூலமே மார்கரெட்டுக்குக் குர்ஆனின் நெருக்கம் கூடிற்று.  கல்லூரியில் பேராசிரியர் கட்ஷ் யூத வேதமான தல்மூதிலிருந்தும் பழைய ஏற்பாட்டிலிருந்தும் போதித்த யூத மதம், மார்கரெட் குர்ஆனிலும் நபிமொழிகளிலும் படித்ததற்கும் மாறுபட்டதாக இருந்தது.

ஜெனித்தாவின் தோழமை புதுப்பிக்கப்பட்டதாலும், அவள் எடுத்த சரியான முடிவின் தாக்கத்தாலும், மார்கரெட்டுக்கு இஸ்லாத்தின் மீது ஆர்வம் கூடிற்று.  மேலும் பல ஆய்வுகள் மேற்கொண்டும், கருத்துப் பரிமாற்றங்கள் செய்தும், இறையருளால், 1961 ஆம் ஆண்டில் மார்கரெட் இஸ்லாத்தைத் தழுவி, மர்யம் ஜமீலாவானார்!

அவரது மத மாற்றம் இலேசாக ஓரிரு வரிகளில் கூறும் விதத்தில், ஓரிரவு மாற்றமாக (overnight change) நிகழ்ந்துவிடவில்லை.  அதன் பின்னணியில் ஒரு பெரும் போராட்டமும்  ஆழ்ந்த ஆராய்ச்சியும் இருந்தன என்று கூறின், அது மிகையாகாது.

முதலில், சிறு வயது முதல் அவருக்கு இருந்த அரபிப் பாடல் ஆர்வம், அதன் பின்னர் குர்ஆன் வசனங்களை இனிய ஓசையில் ஓதும் காரிகளின் ஓதல்கள் அனைத்தும் சேர்ந்து, குர்ஆனின் மீது மர்யமுக்குப் பற்றையும் பாசத்தையும் ஏற்படுத்திற்று.  குர்ஆனின் ஒலி நாடாக்களை வாங்கி வந்து, வீட்டில் போட்டுக் கேட்பார்.  அதனால், பெற்றோரின் வெறுப்பையும் கோபத்தையும் சம்பாதித்தார்.  மகள் குர்ஆன் ஓதலைக் கேட்கும்போதெல்லாம், பெற்றோர் அவளின் அறைக் கதவை ஆத்திரத்துடன் சாத்திவிடுவார்கள்!

மர்யம் சேர்ந்திருந்த யூத சியோனிசப் பிரிவினர் கொதித்தெழுந்தனர்!  “நமது மதத்தை மிக மோசமான விதத்தில் இவள் காட்டிக் கொடுத்துவிட்டாள்” என்று திட்டித் தீர்த்தனர்!  அவரது பரம்பரைக்கே இழுக்கான செயல் என்றும், மற்ற யூதர்கள் அவர் மீது ஆத்திரப் பட்டுத் தாக்கத் தொடங்குவதற்கு இம்மத மாற்றம் காரணமாகும் என்றும் ஏசினர்!  அது மட்டுமா?  அவரது யூத மதத் தொடர்பினால், முஸ்லிம்கள்கூட அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், “மதம் மாறிப் போன மாபாதகச் செயலைச் செய்ததால் நீ நரகத்துக்கே போவாய்!” என்றும் சாபமிட்டனர்!

1954 ஆம் ஆண்டிலேயே இஸ்லாத்தின் மீது காதல் கொள்ளத் தொடங்கிய திருமதி மர்யம் ஜமீலா, எல்லாவற்றையும்விடப் பெற்றோரின் எதிர்ப்பே வன்மையாக இருந்ததாகக் கூறுகின்றார்!  அப்படியானால், என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதை ஓரளவு நாம் கற்பனை செய்துகொள்ளலாம்!

யூத கிருஸ்தவ மதங்கள் அமெரிக்காவுக்குப் பழக்கப்பட்ட மதங்களாம்!  இஸ்லாமோ, அரபு நாட்டு மதமாம்!  பெற்றோரின் மிரட்டல்கள், துன்புறுத்தல்களால் மர்யம் நோய்வாய்ப்பட்டு, படுத்த படுக்கையிலானார்!  1957 முதல் 59 வரை மருத்துவ                  

மனைகளில் மாறி மாறிச் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார்!  அப்போதெல்லாம், ‘நான் ஒரு வேளை நற்சுகம் பெற்று வெளிவந்தால், கட்டாயம் இஸ்லாத்தைத் தழுவுவேன்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டாராம் மர்யம் ஜமீலா!  

அல்லாஹ்வின் அருட்பேற்றால், நற்சுகம் பெற்று மருத்துவ மனையிலிருந்து வெளிவந்த மர்யம், தனது ஓய்வு நேரங்களை நியூயார்க்கின் அரசு நூலகத்தில் செலவிட்டார்.  அங்கு ‘மிஷ்காத்துல் மஸாபீஹ்’ என்ற நபிமொழித் தொகுப்பு நூலை எடுத்துப் படிக்கத் தொடங்கி, தான் படித்த குர்ஆன் வசனங்களின் சரியான விளக்கத்தை அறிந்து மகிழ்ந்தார்.

மார்கரெட்டாயிருந்து மர்யம் ஜமீலாவான இப்பெண்மணி, இஸ்லாத்தை ஓரிரு சான்றுகளைக் கொண்டு மட்டும் ஏற்றுக்கொண்டதாகக் கூற முடியாது.  இவரோ பெண்களுள் பேரறிஞர்!  இயல்பான ஆங்கில மொழியறிவிற்கு மேல், பிரெஞ்சு, ஸ்பானிஷ், லத்தீன், கிரேக்கம் முதலிய மொழிகளையும், அமெரிக்க-ஐரோப்பிய வரலாறுகள், அரபு-யூத வரலாறுகள், அறிவியலின் பல பிரிவுகள், நுண்கலைகள் அனைத்தையும் கற்று அறிவாளியாகத் திகழ்ந்தவர்! 

இத்தகைய தகுதிகளுக்கும் பின்னர், இவரது விவேகமான இதயத்தில் எழுந்த புதுமையான ஐயங்களையும் நியாயமான உணர்வுகளையும் அமெரிக்காவிலிருந்து கடிதம் மூலம் எழுதி, இருபதாம் நூற்றாண்டின் எழுச்சி மிக்க பேரறிஞராகிய மவ்லானா மவ்தூதி (ரஹ்) அவர்களுக்கு அனுப்பினார்.  அதற்கு அம்மாமேதை சலிப்படையாமல் உரிய மறுமொழிகளை எழுதினார்கள்.  அதன் பின்னர் மார்கரெட், மர்யம் ஜமீலாவாக மாறினார்.

தனது இஸ்லாமிய வாழ்க்கைக்கு, அறுபதுகளில் அமெரிக்காவில் இருந்த சூழ்நிலை சாதகமற்றதாக இருந்ததால், மவ்லானா மவ்தூதி அவர்களின் பரிந்துரையின் பேரில் பாக்கிஸ்தானுக்குக் குடி பெயர்ந்தார் மர்யம் ஜமீலா.  அங்குத் தனியாக முஸ்லிம் பெண் ஒருவர் -மஹ்ரமில்லாமல்- வாழக் கூடாது என்பதால், மவ்லானாவின் பரிந்துரையின்படியே, மனைவியை இழந்த ஜமாஅத் ஊழியர் முஹம்மத் அஷ்ரஃப் அவர்களை மணம் செய்து, தம் இல்லற வாழ்க்கையைத் தொடங்கினார் இந்தப் பெண் பேரறிஞர்.  பாக்கிஸ்தானைத் தம் தாயகமாகக் கொண்டு, இன்னும் அங்கேயே வாழ்ந்து வருகின்றார்!

இவரது பேரறிவுப் பெட்டகத்திலிருந்து வெளிவந்த எழுத்தோவியங்கள் ஏராளம்.  அவற்றுள் சில:

Islam versus the West
Islam and Modernism
Islam and Orientalism
Islam and the Muslim women Today
Islam and Social Habits
Islamic Culture in theory and Practice
Modern Technology and the Dehumanization of Man
Islam and Modern Man

உட்பட இன்னும் ஏராளமான நூல்கள்...!
தொடரும்...
அதிரை அஹ்மது

வேவ்ரைடர் விமானம் ! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | September 28, 2012 | , , , , , ,


ஒலியை விட ஆறு மடங்கு விரைவாக (காற்றில் ஒலியின் வேகம் வினாடிக்கு 343 மீட்டர் ஆகும்) பறக்கக்கூடிய ஒரு விமானத்தை உருவாக்கி  அதற்கு (முந்தைய கண்டுபிடிப்பு சூப்பர் சானிக்) இப்போ ஹைபர்சானிக் விமானம் (சூப்பர் மார்க்கெட், ஹைப்பர் மார்க்கெட் என்பது போல்தான்)   என்று பெயரும் வைத்து பரிசோதனை செய்தபோது அது பசிஃபிக் பெருங்கடலில் விழுந்து விட்டது (ஹைபர்சானி(பி)க் பசியால் விழுந்ததா?). அங்கே விழுந்தது விமானம் மட்டும் அல்ல அதனோடு ஒரு பெரும் தொகை டாலரும்தான்.


அமெரிக்க படையினரின் பயன்பாட்டுக்காக சோதிக்கப்பட்ட அந்த வேவ்ரைடர் விமானத்தால் ஒலியை விட ஆறு மடங்கு வேகத்தை எட்ட முடியவில்லை. அப்படி எட்டியிருந்தால் அரை மணி நேரத்திற்கு பிறகு சாகடிக்கப்பட வேண்டிய அப்பாவிகள் அரை மணி  நேரத்திற்கு முன்பாகவே அமெரிக்கா படைகளால்  சாகடிக்கப்படுவார்கள்.

வேவ்ரைடர் விமானத் திட்டத்தில் இரண்டாவது முறையாக ஏற்பட்ட தோல்வி.  கடந்த ஆண்டும் இதே போன்று ஒரு சோதனை முயற்சியும் தோல்வியடைந்தது. இந்த வேவ்ரைடர் விமானம் புறப்பட்ட 31 விநாடிகளில் அதுவும்  பசிஃபிக் கடலுக்குள் விழுந்து விட்டது (இது பசிஃபிக் கடலா அல்லது பசி(யுடனிரு)க்கும் கடலா?).

பி-52 போர் (இந்த விமானம் gulf-war நடந்தபோது அதிக அளவு பயன்படுத்தப்பட்ட விமானம் நீண்ட தூரம் பறந்து சென்று குண்டு வீசக்கூடிய திறன் படைத்த விமானம். B50, B52 இப்படி 'B'யில் ஆரம்பிக்கும் விமானங்கள் குண்டு வீசக்கூடிய விமானங்கள். F15, F16 என்று 'F'யில் ஆரம்பிக்கும் விமானங்கள்  வானில் சண்டை போட கூடிய விமானங்கள்). விமானத்தில் இறக்கையில் இணைக்கப்பட்ட இந்த வேவ்ரைடர் 50,000 அடி உயரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு வானில் இருந்து ஒரு ராக்கெட் உதவியுடன்  வானில் உந்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டது.


அவ்வாறு உந்தப்படும் வேவ்ரைடர் பின்னர், மணிக்கு 3,600 கிலோ மீட்டர் என்ற  வேகத்தில் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த வேகத்தை எட்ட முடியாமல்  கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்து நொறுங்கியது. அடுத்த தலைமுறை மனிதர்களை கொன்று குவிக்க  இது போன்ற வேகம் கூடிய  ஏவுகணைகளை தயாரிக்க இந்த அளவுக்கு   ஹைபர்சானிக் வேகம் தேவை என்று அமெரிக்க படைகளும் அமெரிக்க அரசும் இணைந்து பலகோடி  டாலர் செலவு செய்து வருகின்றது. அதிவேக உயர்  தொழில் நுட்பத்துக்காக அமெரிக்க இரண்டு பில்லியன் டாலர்களை செலவழித்ததாக் சொல்லப்படுகின்றது. 

இந்தத் திட்டத்தை (அப்பாவி மக்களை கொல்ல) அமெரிக்கா எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பது அதற்கான செலவை பார்த்தாலே விளங்கும்.  இதே  தொழில் நுட்பத்தில் பயணிகள் விமானம் செய்தால் நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு ஒருமணி நேரத்தில் சென்றடையலாம்.  இவற்றினால் தொடர்ந்த தோல்விகளைப் பார்த்தால் இவை இறைவனின் படைப்புகளுக்கு பொருத்தம் இல்லாத அழித்தொழிப்புக்கும் அச்சுறுத்தலுக்கும் எதிரான மக்களின் மனக்குமுறலால் என்றே கணிக்க வேண்டி இருக்கிறது.
மற்ற நாடுகளில் இரசாயண ஆயுதம் இருக்கிறது, தடை செய்யப்பட அணு ஆயுதம் இருக்கிறது என்று வலியச் சண்டைக்கு போகும் அமெரிக்கா இப்படி மனித இனத்தை  அழிக்கும் ஆயுதம் வைத்திருக்க இறைவன் மட்டும் அவ்வளவு சுலபமாக விட்டு விடுவானா?   

இன்னும் பல ஆயிரம் டாலர்களை இந்த முயற்சியில் இழக்க, உலகைப் படைத்தவனும் அவனால் படைக்கப்பட்ட அந்த பசிபிக் கடலும் துணை நிற்குமாக !

முக்கிய குறிப்பு :) இந்த பதிவில் பதியப்பட்டிருக்கும் படங்கள் இணையத்தில் எடுக்கப்பட்டது, இதெற்கென்று தனியாக சேட்டிலைட் விட்டோ, தனி விமானத்திலோ, ஆள் நடமாட்டமில்லாத இடத்திலிருந்தோ, எடுக்கப்பட்டது அல்ல, இதனை காரணம் காட்டி வேவு பிரிவு, பத்திரிகைகாரர்களின் கதவு தட்டி கூப்பிட்டு 'வாங்க வாங்க' வந்து பாருங்க என்று கடை விரிக்க மாட்டார்கள். ஒருவேளை இந்த ஆர்டிகல் தமிழில் இருப்பதால் தமிழ்நாட்டின் வேவு பிரிவுக் காரங்கதான் இதுக்கும் ஒரு கற்பனைக் கதை வைத்திருந்தால் பத்திரிக்கை, தொலைக்காட்சி காரங்களுக்கு தீனியாக இருக்கும்.

Sஹமீது

நபிமணியும் நகைச்சுவையும்...! 24

அதிரைநிருபர் பதிப்பகம் | September 27, 2012 | ,

தொடர் - 3
பட்டப்பெயர்கள்:

நபிகள் நாயகத்தை, தூதராக அனுப்பிய அல்லாஹ், "நற்செய்தி சொல்பவர் (முபஷ்ஷிர்)" என்றும் (அல்-குர்ஆன் 2:223); "மகத்தான நற்குணம் உடையவர்" என்றும் (அல்-குர் ஆன் 68:4); "அகிலத்தாருக்கெல்லாம் அழகிய முன்மாதிரி" (33:21) என்றெல்லாம் அழைக்கின்றான்.

சொந்த ஊர்க்காரர்கள் "அல்-அமீன் (நன்நம்பிக்கையாளர்) என்ற பட்டமளித்தனர்.

அன்னை கதீஜா (ரலி), "யா அபல்காசிம் (காசிமின் தந்தையே)" என்று பிரியமுடன் அழைத்தனர்.

"என் உயிரினும் மேலானவரே!" என்றும் "என் தாய் தந்தையைவிட மேலானவரே" என்றும் சத்திய சஹாபாக்கள் போற்றி மகிழ்ந்தனர்.

மேற்கண்ட பெயர்கள் மட்டுமல்லாது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இன்னும் பல அழகிய பெயர்களாலும்  பல சமயங்களில் அழைக்கப்பட்டுள்ளார்கள்.

அண்ணலாரின் தோழமை சற்றேனும் சடைவு கொண்டதாகவோ அல்லது சுவாரஸ்யமற்ற மந்தமான சூழல் நிலவக்கூடியதாகவோ அவர்களின் தோழர்களுக்கு  ஒருக்காலும் இருந்ததேயில்லை!

அப்துல்லாஹ் இப்னு அல்-ஹாரித் பின் ஜாஸ் (ரலி) என்ற தோழரின் கூற்று: "புன்முறுவல் பூத்த புன்னகை வேந்தராகவே பொன்மனம் கொண்ட பெருமானார் எங்களுக்குத் தோன்றினார்கள், மேலும், பார்க்கும்போதல்லாம் புத்துணர்ச்சியுடன் பெருமானாரைத்தவிர வேறு யாரையும் யான் கண்டதேயில்லை!" (அஹ்மது 17251).

தம்  அருமைத் தோழர்கள் சிலரை நபி (ஸல்) அவர்கள் சில செல்லப்பெயர்களிட்டு அழைத்தார்கள். அந்த செல்லப்பெயர்களால் அழைக்கப்படுவதால் பூரிப்பும் புளகாங்கிதமும் சஹாபாக்களுக்கு ஏற்பட்டதே தவிர,ஒருபோதும் அந்தப் பெயர்கள் தோழர்களுக்கு வருத்தமேற்படுத்தியதேயில்லை!

அபூ துராப்:
ஒருமுறை உத்தமத் திருநபி (ஸல்) அவர்கள் தம் அருமை மகள் பாத்திமாவின் வீட்டுக்குக்கு வருகை தந்து, "உன் கணவர் எங்கே?" என்று வினவினார்கள். "தந்தையே! எனக்கும் அவருக்கும் ஒரு சிறிய விவாதம் நிகழ்ந்தது. எனவே, என் மீது கோபமாக அவர் வெளியேறி விட்டார்" என பதில் கிடைத்தது. ஆளை அனுப்பித் தேடியதில் மஸ்ஜித் நபவீயில் கண்டதாகத் தகவல் கிடைத்தது. போய்ப் பார்த்தால், அலீ(ரலி) அவர்கள் தங்களின் மேனியிலிருந்து மேல் துண்டு கீழே விழுந்து கிடக்க, உடம்பில் மண் படிந்த நிலையில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள்.  அதைப் பார்த்ததும் அண்ணலார் அவர்கள் மனம் நெகிழ்ந்து, அவர் மீது படிந்திருந்த மண்ணைத் தட்டித் துடைத்து விட்டவாறே,  "எழுந்திரும்! ஓ அபூதுராப். (மண்ணின் தந்தையே) எழுந்திரும்!" என்றார்கள். அவர் உறக்கம் கலைந்தது. அழகிய அழைப்பால் வருத்தம் மறைந்தது. அன்றிலிருந்து அந்த செல்லப்பெயர் நிலைத்துப்போனது. அவருக்கும் அது மிகப் பிடித்துப்போனது. (புஹாரி  6280).

ஒருவர் மிக விரும்பும் ஒன்றின் பெயரோடு 'அபூ' சேர்த்துச் செல்லப் பெயராக்கி விளிப்பது அரபியர் வழக்கம். ஆடுகளை அதிகம் நேசிப்பவர் 'அபுல்கனம்'  என்றும் வல்லூறுகளை நேசிப்பவர் 'அபூஸகர்' என்றும் விளிக்கப்படுவது அரபுகளின்  மரபு. ஐக்கிய அமீரகங்களின் தலைநகர், மானின் தந்தை (அபூதபி) என்பவரின் பெயரால் விளங்குகிறது. தற்போது இணையத்தில் உலவும் தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் கூட 'அபூ' எனும் சொல்லோடு, தாம் அதிகம் நேசிக்கும் மகன்/மகளின் பெயரை இணைத்து, புனைந்துகொண்டு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. (உதாரணம் : அபுஇப்ராஹீம், அபுஷாருக், அபுசுஹைமா).

அபூபக்ரு (ரலி):
இவர்களுக்கு பெற்றோர் வைத்த பெயர் அப்துல் கஅபா.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் அருமைத் தோழருக்கு அப்துல்லாஹ் எனப் பெயரிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் இறைச் செய்தியை மக்களுக்கு எடுத்துச் சொல்லிய தொடக்கத்தில்  வேறு எவரும் உண்மைப்படுத்தாத அளவிற்கு நபி (ஸல்) அவர்களை அதிகம் உண்மைப்படுத்தியதால் அல்-சித்தீக் (அதிகம் உண்மைப்படுத்துபவர்) என்ற காரணப் பெயரும் அபூபக்ரு (ரலி) அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அபூபக்ரு என்பதும் அவர்களின் காரணப் பெயராகும்.   அண்ணல் நபி அவர்கள், மூமின்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை மணந்த பின்னர், அபூபக்ர் (கன்னிப்பெண்ணின் தந்தை) என கண்ணியமாக அழைக்கப்பட்டார்கள்; அப்பெயரே நிலைத்துப் போனது. (அல் இஸாபா பாகம் : 2 பக்கம் : 1088). 

அபூஹுரைரா (ரலி):
கைபர் யுத்தம் நிகழ்ந்த சமயத்தில் பனீ-தவ்ஸ் கிளையிலிருந்து வந்து நபிமணி (ஸல்) அவர்களைச்  சந்தித்து இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டதும் அப்துஷ் ஷம்ஸு என்ற இயற்பெயரைப் பெற்றிருந்த அவர் அப்துர்ரஹ்மான் என அழைக்கப்பட்டார். அபாரமான நினைவாற்றல் கொண்டிருந்த அவர், திண்ணைத் தோழர்களில் ஒருவராகத் தன்னையும் இணைத்துக்கொண்டார். அல்லாஹ்வின் தூதரை அதிகம் அண்மியிருந்ததால் அண்ணலின் அங்க அசைவுகளையும் அதோடு அவர்கள் உதிர்த்த பொன்மொழிகளையும் உள்வாங்கிக்கொண்டு, பிற்காலத்தில் இவர் அறிவித்த ஹதீஸ்கள் மட்டும் 1600 க்கும் அதிகம் என்று வரலாற்றுக் குறிப்பேடுகள் கூறுகின்றன.

பூனைகள் மீது அதிகம் விருப்பங்கொண்டிருந்ததால் நபி(ஸல்) அவரைப் "பூனைத் தோழன்" (அபூஹிர்!) எனச்செல்லமாய் அழைத்தார்கள். அப்துஷ்ஷம்ஸு அத்தவ்ஸீ, அப்துர்ரஹ்மான் அத்தவ்ஸீ என்றெல்லாம் குறிப்பிட்டால் நாமெல்லாம் விளங்காமல்  விழிப்போம். "அபூஹுரைரா" என்றாலோ... 'அட, நம்ம அபூஹுரைரா' என்று சட்டெனப் புரிந்துகொள்ளும் அளவுக்கு அண்ணலின் அழைப்பு, உலகப்புகழ் வாய்ந்ததாக அமைந்துபோனது. 

இருசெவிச்சிறுவன்:
அனஸ் இப்னு மாலிக் (ரலி) சிறுபிராயத்திலிருந்தே நபி(ஸல்)அவர்களின் ஊழியத்தில் இருந்தார். ஓர் இனிய நாளில் அவரை "ஓ!  இரண்டு காதுகள் கொண்டவரே!" என அண்ணலார் அன்புடன் அழைத்தார்கள் என நபி மொழிக் குறிப்புகள் கூறுகின்றன. (அபூதாவுத் 4984).

நிற்க, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன் அருள்மறையாம் குர்ஆனிலே பட்டப்பெயர் குறித்துக் கூறுவதைக் காண்போம்.
بسم الله الرحمن الرحيم

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَوْمٌ مِنْ قَوْمٍ عَسَىٰ أَنْ يَكُونُوا خَيْرًا مِنْهُمْ وَلَا نِسَاءٌ مِنْ نِسَاءٍ عَسَىٰ أَنْ يَكُنَّ خَيْرًا مِنْهُنَّ ۖ وَلَا تَلْمِزُوا أَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ ۖ بِئْسَ الِاسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ ۚ وَمَنْ لَمْ يَتُبْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَِ

முஃமின்களே! ஒரு சமூகத்தார்  இன்னொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில், (பரிகசிக்கப்படுவோர்) அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்.  (அவ்வாறே) எந்தப் பெண்களும் மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) ஏனெனில் இவர்கள் அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர்(தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப்பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்;  எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். (அல் ஹுஜுராத் 11 )

சிந்திக்கவும்:
கெட்டப்பெயர் வைத்து அதனைப் பட்டப்பெயர் என அழைக்கும் அசிங்கமும் அவலமும் குறிப்பாக, வாய் கிழிய மார்க்கம் பேசும் நம் சமூகத்தில்தான் அதிகம் என்பதே ஒரு வெட்ககேடான, வேதனை நிறைந்த விஷயமாகும். இந்த கணத்திலிருந்து ஒவ்வொரு முஸ்லிமும் சக மனிதனை அவன் விரும்பாத கெட்டப்பெயர் வைத்து கூவி அழைக்கும் இந்த ஈனச்செயலை  உடனடியாக நிறுத்த வேண்டும். அவன்தான் உண்மையாகவே அல்லாஹ்வை பயந்த அடிமை. நபியை நேசிக்கும் நல்ல முஸ்லிம். அடையாளம் சொன்னால்தான் விளங்குமென்றால் நபி நாதர் சூட்டியது போல் நல்ல பெயர் சூட்டலாம் அல்லது அவன் தந்தையின் மகன் என அழைக்கலாம் (உதாரணம் : அபுல் கலாம் s/o. ஷைக் அப்துல் காதிர்).
 தொடரும் இன்ஷா அல்லாஹ்...
இக்பால் M.ஸாலிஹ்

அப்துல் நாசர் மதானியுடன் இரண்டு மணி நேரம் அ.மார்க்ஸ் கோ.சுகுமாரன் 5

அதிரைநிருபர் பதிப்பகம் | September 26, 2012 | , , , ,


கோவை தொடர் வெடிகுண்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஒன்பதரை ஆண்டு காலம் கோவை சிறையில் பிணையின்றி அடைக்கப்பட்டு இறுதியில் குற்றமற்றவர் என சென்ற ஆகஸ்ட் 1, 2007ல் விடுதலையான கேரள ‘மக்கள் ஜனநாயகக் கட்சி’த் தலைவர் அப்துல் நாசர் மதானி அவர்கள் மீண்டும் ஆக்ஸ்ட் 17, 2012ல் பெங்களூரு தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கர்நாடக அரசால் கைது செய்யப்பட்டது ஒரு சிலருக்கு நினைவு இருக்கக்கூடும். கடும் நோய் வாய்ப்பட்டிருக்கும் அவரைப் பிணையின்றி கர்நாடக அரசும் கடந்த மூன்றாண்டுகளாகச் சிறையில் அடைத்துள்ளது. பெங்களூரு பராப்பன அக்ரகாரத்தில் புதிதாகக் கட்டபட்டுள்ள உயர் பாதுகாப்புச் சிறையில் இருக்கும் அவரை இன்று (17.09.2012) சந்தித்தோம். எங்கள் இருவரைத் தவிர நகரி பாபையா, ஆர்.ரமேஷ், ஷோயப், முகம்மது காக்கின்ஜே (பெங்களூரு), ரெனி அய்லின், ‘தேஜஸ்’ நாளிதழ் ஆசிரியர் முகமது ஷெரீப் (கேரளா) ஆகியோரும் வந்திருந்தனர்.

கர்நாடகச் சிறைகளில் கைதிகளைப் பார்ப்பதற்கான சடங்குகளும், கெடுபிடிகளும் அதிகம். ஏற்கனவே இருமுறை மைசூர் சிறையில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியைச் சந்தித்த அனுபவம் எங்களுக்குஉண்டு. எல்லாச் சடங்குகளும் முடிந்து சிறையின் முதன்மை வாயிலுள் நுழையும் போது ஒரு கணம் நிறுத்தி நம் கை ஒன்றில் ஒரு முத்திரை பதிப்பார்கள். அனேகமாக வேறெந்த மாநிலச் சிறைகளிலும் இப்படி ஒரு பழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த முத்திரையைக் கைதியைப் பார்த்துவிட்டு வரும் வரையில் நாம் அழிக்காமல் வைத்திருக்க வேண்டும். சிறைக்குள் நுழையும் போது போடப்படும் இந்த முத்திரை நமக்கு சோழர் காலத்தில் கட்டாயமாகப் பிடித்து வரப்பட்டு தேவதாசிகள் ஆக்கப்பட்டவர்களுக்கும், நாசி சித்திரவதைக் கூடங்களில் யூதர்களுக்கும் இடப்பட்ட முத்திரைகளை நினைவூட்டுவது தவிர்க்க இயலாது.

மைசூர் சிறையைக் காட்டிலும் பராப்பன அக்ரகாரச் சிறையில் கெடுபிடிகள் அதிகம். சிறைகள் நவீனப்படுத்தப்பட படுத்தப்பட கெடுபிடிகளும், கண்காணிப்புகளும் (surveillances) அதிகமாகின்றன. ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சி, நம்மூர் புழல் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள புதிய சிறைகள் இதற்குச் சில எடுத்துக்காட்டுகள். பராப்பன அக்ரகாரச் சிறையில் கைதிகளைப் பார்ப்பதற்கு முன்பானசடங்குகளை முடிக்க சுமார் மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டும். சிறைக் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணகுமார் நமது பேராசிரியர் பாபையாவின் மாணவராக இருந்ததால், சற்றுக் கூடுதல் சலுகை அளிக்கப்பட்டும் கூட, எங்களுக்கும் சடங்குகளை முடிக்க மூன்று மணி நேரமானது. க்யூவில் நின்று மனுக் கொடுத்து நமது இடது பெருவிரல் ரேகை, முகம் அனைத்தையும் நுண்ணிய கேமரா ஒன்றின் முன் அமர்ந்து பதிவு செய்துகொள்ள வேண்டும், நமது தொலைபேசி எண் உட்பட முக்கிய விவரங்களையும் அத்துடன் பதிந்து ‘ப்ரின்ட் அவுட்’ ஒன்றைத் தருவார்கள். இதற்கான இடத்தில் க்யூவில்காத்திருந்தவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள் என்பதைதைக் கண்டோம். 

2001ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி நமது நாட்டிலுள்ள மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 13.4 சதம். ஆனால்,சிறைச்சாலைகளில் அவர்களின் பங்கு 50 சதத்திற்கும் மேல் என்பது நினைவுக்கு வந்தது. விரல் ரேகை,முகப்பதிவு கொண்ட தாள்களை சிறை வாசலில் கொடுத்து விட்டு மீண்டும் காத்திருந்தால் வெகு நேரம் கழித்துச் சிறை அதிகாரிகளின் ஒப்புதலுக்குப் பின் நமக்கு அழைப்பு வரும். கண்காணிப்பாளர்,பாபையாவின் மாணவர் என்பதால் நாங்கள் சற்று விரைவாக அழைக்கப்பட்டதோடு, கண்காணிப்பாளரின் அறையிலேயே ஒருபுறம் அமர்ந்து சற்று ஆறஅமரப் பேசவும் முடிந்தது.

நாங்கள் உள்ளே நுழைந்து சுமார் அரை மணி நேரத்திற்குப் பின் அப்துல் நாசர் மதானியைச் சக்கர நாற்காலியில் தள்ளி வந்தனர். ஆர்.எஸ்.எஸ்.காரன் ஒருவன் வீசிய குண்டு வீச்சில் வலது காலை இழந்தவர் மதானி. வழக்கு நடந்துக்கொண்டிருந்த போது குண்டு வீசியவன் வந்து அவாரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளான். அவனை மன்னித்ததோடு அவன் மீதான தனது குற்றச்சாட்டைத் திரும்பப் பெற்று வழக்கு தள்ளுபடி ஆவதற்குக் காரணமாக இருந்தவர் மதானி.

தூய வெள்ளுடையில் மலர்ந்த முகத்துடன் அருகில் நெருங்கிய மதானியைக் கண்டவுடன் அனைவரும்எழுந்து நின்றோம். துரும்பாய் இளைத்து இருந்தாலும் அவரது கண்களில் ஒளி குன்றவில்லை.ஒவ்வொருவராக அருகில் சென்று அவரது கைகளைப் பற்றி அறிமுகம் செய்துக் கொண்டோம்.கண்காணிப்பாளருடன் பேசிக் கொண்டிருந்த பாபையா எழுந்தோடி வந்தார். மதானியின் அருகில்வந்தவுடன் அவருடைய கண்கள் கலங்கின. கன்னங்கள் துடித்தன. அப்படியே அவரை மார்புறத் தழுவிக் கொண்டார். பார்த்திருந்த அனைவருக்கும் நெஞ்சு இரும்பாய் கனத்தது. மனித உரிமைப் பணிகளுக்காகக் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் சிறை அனுபவித்தவர் பேராசிரியர் பாபையா.

மார்க்ஸ், சுகுமாரன் என்று நாங்கள் பெயர்களைச் சொன்னவுடன் மதானி உடனடியாக எங்களை நினைவுகூர்ந்தார். கோவைச் சிறையில் இருந்த போது சுகுமாரன் அவரைச் சந்தித்துள்ளார். கோவைச் சிறையில் இருந்த அவரை உடல் நலம் கருதி பிணையில் விடுவிக்க வேண்டுமென நாங்கள் முன்னின்று தமிழ் எழுத்தாளர்களிடம் கையொப்பம் பெற்று வெளியிட்ட அறிக்கையை மதானி இருமுறை நினைவுகூர்ந்தார். அறிக்கையில் கலைஞரின் மகள் கனிமொழியும்கையெழுத்திட்டிருந்ததைக் குறிப்பிட்டுச் சொன்னார். பிரபஞ்சன், சாரு நிவேதிதா, வெளி ரங்கராஜன்,சுகிர்த ராணி உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் அதில் கையெழுத்திட்டிருந்தனர்.

அடுத்த ஒன்றைரை மணி நேரமும் மெல்லிய குரலில் மதானி பேசிக் கொண்டிருந்தார். மதானி மட்டுமே பேசிக் கொண்டிருந்தார். சுற்றிலும் நாற்காலிகளை நெருக்கமாகப் போட்டு நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம். தற்போது போடப்பட்டுள்ள வழக்கு குறித்து மிக விரிவாக சொன்னார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை அவர் தெளிவாக விளக்கினார். பெங்களூரு தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 32 பேர்களில் 31வது குற்றவாளியாக அவர் இணைக்கப்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்ட முக்கியமானவர்களில் ஓரிருவரை முன்னதாகத் தனக்குத் தெரியும் என்பதைத் தவிர இந்தக் குற்றச் செயலில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும், இப்படியான ஒரு செயல் நடக்கப்போகிறது என்பது தனக்குத் தெரியாது என்பதையும் விரிவாக விளக்கிச் சொன்னார்.

விசாரணையில் இருக்கும் வழக்கு என்பதால் எல்லாவற்றையும் இங்கு எழுத முடியவில்லை. எனினும் ஒன்றை மட்டும் இங்கு சொல்லியாக வெண்டும். முக்கிய குற்றவாளியாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள தடியண்டவீடு நசீர் தங்களுடைய சதி குறித்து மதானிக்குத் தெரியுமெனக் கூறியுள்ளதாதாக விசாரணையின் போது மதானியிடம் திரும்பத் திரும்பக் கேட்டுள்ளனர். “நசீரை ஒருமுறை என்னிடம் அழைத்து வாருங்கள். உங்கள் முன் நான் அவரைக் கேட்கிறேன்” என மதானி வற்புறுத்தியுள்ளார். தயங்கிய புலனய்வுத்துறையினர் இறுதியாக வேறொரு சிறையில் இருந்த நசீரை முகமூடியிட்டு அழைத்து வந்து நிறுத்தியுள்ளனர். புனாய்வுத்துறையினர் முன்னிலையில் மதானி கேட்ட போது தான்அப்படிச் சொல்லவில்லை என நசீர் பதிலளித்ததோடு, “உங்களை அரசியலில் இருந்து விலகச் சொல்லிப் பலமுறை எச்சரித்தேனே நான்” என்றும் கூறியுள்ளார்.

குற்றமற்ற என்னை ஏன் இப்படித் திரும்பத் திரும்பக் கொடுமைப் படுத்துகிறீர்கள் என மதானி கேட்டபோது விசாரித்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒரு கணம் அமைதியாய் இருந்தபின் இப்படிச்சொல்லியுள்ளார். “இந்தப் பிறவியில் நீர் ஏதும் குற்றம் செய்யாதிருக்கலாம். போன பிறவியில் செய்திருப்பீர். அந்தப் ‘பூர்வ கர்மா’வின் பலனை இப்போது அனுபவிக்கிறீர்.”

வழக்கு விரைந்து விசாரிக்கப்பட்டால் கோவை வெடிகுண்டு வழக்கில் அவர் எப்படிக் குற்றமற்றவர் என்று விடுதலைச் செயப்பட்டாரோ அதேபோல் இதிலும் விடுதலை செய்யப்படுவது உறுதி. ஆனால்,பராப்பன அக்ரகாரச் சிறை வளாகத்தில் இருந்து செயல்படும் தனிநீதிமன்றம் வழக்கை விரைந்து விசாரிக்கத் தயாராக இல்லை. குற்றம்சட்டப்பட்ட பலரும் வெவ்வேறு சிறைகளில் இருப்பதைக் காரணம் காட்டி விசாரணையை இழுத்தடிக்கிறார்கள்.

அதேநேரத்தில் படிப்படியாக மோசமாகிக் கொண்டிருக்கும் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு,அவரைப் பிணையில் விடுதலைச் செய்ய அரசும், நீதிமன்றமும் தயாராக இல்லை. கடும் இருதய நோய், முற்றிய நீரிழிவு நோய், நீரிழிவினால் ஏற்பட்ட சிறுநீரகப் பாதிப்பு, முதுகுத்தண்டுத் தேய்வு என்பவற்றோடு, எல்லாவற்றுக்கும் மேலாகப் பெங்களூருச் சிறைவாசம் இன்று அவர் கண் பார்வையைப்பறித்துள்ளது. வலது கண் பார்வை முற்றிலும் பறிபோய்விட்டது. இடது கண்ணில் 20 சதப் பார்வைதான் எஞ்சியிருக்கிறது. நீரிழிவுனால் ஏற்பட்ட இந்த பார்வைக் குறைவுக்கு உரிய நேரத்தில் லேசர் சிகிச்சை அளித்திருந்தால இன்று அவர் பார்வை காப்பாற்றப்பட்டிருக்கும். துண்டாடப்பட்டு முழங்காலுக்கு மேல் எஞ்சியிருக்கும் அவரது வலது காலின் மேல்புறம் உணர்ச்சியற்றுப் போயுள்ளது. உள்ளே கடுமையான வலி. கேரளம் சென்று ஆயுர்வேத சிகிச்சை செய்தால் நிச்சயம் பலனிருக்கும் என அவர் நம்புகிறார். ஆனால், கர்நாடக அரசும், நீதிமன்றமும் அனுமதி அளிக்கவில்லை. 

உச்சநீதிமன்றம் வரை சென்று வேண்டிய போது பெங்களூரிலேயே ஆயுர்வேத சிகிச்சை அளிக்க உத்தரவு கிடைத்தது. 70 ஆயிரம் ரூபாய் அளவில் முடிய வேண்டிய சிகிச்சைக்கு அங்குள்ள ஒரு ஆயுர்வேத மருத்துவ மனை எட்டரை லட்ச ரூபாய் ‘பில்’ கொடுத்தது. ஒவ்வொரு மாதமும் மருத்துவப் பரிசோதனைக்கு வர வேண்டுமெனவும், ஆறு மாதங்களுக்குப் பின் மீண்டும் ஒரு முறை முழு சிகிச்சையும் கொடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த வைத்தியசாலை வலியுறுத்தியும் சிறை அதிகாரிகள் ஒருமுறை கூட அவரைப் பரிசோதனைக்கு அனுப்பவில்லை. உள்ளூர் மருத்துவமனை ஒன்றிற்குக் கண் மருத்துவத்திற்காக அனுப்பப்பட்ட போது, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அடுத்த நாள் அவரது வலது கண் பார்வை முற்றிலும் அழிந்து போனது.

இப்படி அவரது உடல் அவயவங்களை ஒவ்வொன்றாகச் சிறை வாழ்க்கை நிரந்தரமாகச் செயலிழக்கச் செய்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து மிக விரிவாக அவர் சொன்னார். மிக மிகச் சுருக்கமாகவே நாங்கள் இங்குக் குறிப்பிட்டுள்ளோம். கடைசியாக அவர் சொன்னது எங்கள் எல்லோரது கண்களையும் கசிய வைத்தது.

“எல்லாவற்றையும் நான் தாங்கிக் கொண்டிருக்கிறேன். இந்த முறை நோன்பு நாட்களில் குனிந்து தொழவும் என்னால் முடியவில்லை. ஆனால், அல்லாஹ்வின் அருளால் மன உறுதியை மட்டும் நான்இழக்கவில்லை. என் மனம் தளர்ந்துவிடவில்லை. உடல் உபாதைகளையும் கூடத் தாங்கிக்கொள்கிறேன். ஆனால் கண் பார்வை இழந்ததைவிடவும் என்னால் தாள முடியாத வேதனையாகஇருப்பது எனக்குள்ள மலச் சிக்கல்தான். சாப்பிட்டு இரண்டு நாளானாலும் மலம் கழிவதில்லை. திடீரென இரவு நேரங்களில் என்னை அறியமலேயே மலம் கழிந்துவிடுகிறது. அந்த நேரத்தில் என்னையும் என் படுக்கையும் என்னால் சுத்தம் செய்துக் கொள்ள முடிவதில்லை. இரவு நேரத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் என்னால் அதைச் செய்ய முடியாது. நகர வேண்டுமானால் எனது வலது செயற்கைக் காலைப் பொருத்திக் கொள்ள வேண்டும். தண்ணீரை எடுப்பது, கழுவுவது எதையும் தனியாகச் செய்ய முடியாது. இரவு முழுக்க அப்படியே கிடக்கவும் முடியவில்லை. இந்தக் கொடுமையைதான் என்னால் தாங்க முடியவில்லை.” 

அந்த அறையில் ஒரு கணம் இறுக்கமான அமைதி நிலவியது. நாங்கள் என்ன ஆறுதல் அவருக்குச் சொல்ல முடியும். நேரமாகிவிட்டது என்பதைத் தெரிவிப்பதற்காகக் கண்காணிப்பாளர் ஒருமுறை அங்கு வந்து எங்களைப் பார்த்துப் புன்முறுவலித்துச் சென்றார். நாங்கள் புறப்படத் தயாரானோம்.

“நான் ஒன்பதரை ஆண்டுக் காலம் கோவைச் சிறையிலிருந்தேன். சிறையில் இருந்தது என்பதைத் தவிர எனக்கு வேறெந்தப் பிரச்சினையும் இல்லை. அதிகாரிகள் என்னிடம் அக்கறையுடன் நடந்துக் கொண்டார்கள். தமிழ்நாட்டு ஊடகங்கள், மனித உரிமை அமைப்புகள், முஸ்லிம் அமைப்புகள் எல்லாம் என்னிடம் அக்கறையாக நடந்து கொண்டார்கள். சிறையில் நான் எதற்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய தேவையும் இருக்கவில்லை. இங்கே எல்லாம் தலைக்கீழ். என்னுடைய ‘செல்’ அருகில் ஒரு பூனைக்குட்டிஇருக்கிறது. அதுவொன்றுதான் இங்கே காசு கேட்பதில்லை. இங்குள்ள ஊடகங்களும் வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் என்னைப்பற்றி மோசமாக எழுதுகின்றன.”

மெல்லிய குரலில் எல்லாவற்றையும் எளிய ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார் மதானி. நாங்கள் எழுந்து நின்றோம். குனிந்து ஒவ்வொருவராக அவரைத் தழுவிக் கொண்டோம். நகர மன்மின்றி நகரத்தொடங்கிய போது அவர் குரல் எங்களை அழைத்தது “நீங்கள் வந்து சென்றது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் நாளை நடத்த உள்ள பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லப் போகிறவை எனது சிகிச்சைக்கும், நான் பிணையில் விடுதலைப் பெறுவதற்கும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒருவேளை அந்தப் பயன் எனக்குக் கிடைக்காமலும் போகலாம். ஆனால் நீங்கள் வந்ததே எனக்குப் பெரும் பயன்தான். அல்லாஹ்வின் அருளால் நான் விடுதலையாகி வெளியே வந்தால்,என்னுடைய எஞ்சிய வாழ்நாளை ஒடுக்கப்பட்ட மக்களுக்காகச் செலவிடுவேன். அவர்களோடு வாழ்ந்து மடிவேன்.”

மதானியின் ‘மக்கள் ஜனநாயகக் கட்சி’, தலித், முஸ்லிம் ஒற்றுமையை முன்னெடுத்துப் பேசுகிற ஒன்று. அவரது நிறுவனங்களின் மூலம் பெரிய அளவில் தலித்கள் பயனடைகின்றனர்.

நாங்கள் படிகளில் இறங்கிக் கீழுள்ள பேரேட்டில் கையெழுத்திட்டோம். எங்களது செல்போன்களைப் பெற்றுக் கொண்டோம். கையிலுள்ள முத்திரை அடையாளத்தைக் கத்தி பொருத்திய துப்பாக்கியுடன் இருந்த காவலரிடம் காட்டிய பின் கதவு திறந்தது..

ஏதோவொரு கொண்டாட்டத்திற்காக ஒளி அலங்காரம் செய்வதற்கென சீரியல் விளக்குகள் சிறை வாசலில் வந்து இறங்கி இருந்தன. எதற்காக இருக்கும் என நாங்கள் சற்று வியப்புடன் நோக்கிய போது மிகப் பெரிய அலங்கரிக்கப்பட்ட ஒரு வண்ண விநாயகர் சிலையை சுமார் 10 கைதி வார்டர்கள் சுமந்துவந்து கொண்டிருந்தனர்,

நன்றி : 'மக்கள்உரிமை'
மின்னஞ்சல் பகிர்வு : முதுவை ஹிதயத்துல்லாஹ்

வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் - 5 18

அதிரைநிருபர் பதிப்பகம் | September 26, 2012 | , ,

அண்ணன் தம்பி உறவு…

தாய்-தந்தை உறவு போல ஒரே கண்ணோட்டத்துடன் அண்ணன் தம்பி உறவை ஒப்பிட முடியாது. ஐந்து வயதிலிருந்து பதினைந்து வயது வரை, உரிமைப் போராட்டம்..! எனக்கு வேண்டும்..! என்ற பிடிவாதம் பிடிக்கும் தம்பி. தன் சொல் கேட்க வேண்டும் என்று அண்ணனும் அவ்வப்போது போடும் சிறு-சிறு சண்டைகள் நிகழ்ந்தாலும், வீட்டிற்கு வெளியே வந்து விட்டால் தம்பியின் பாதுகாவலனாக மாறுவதுதான் வினோதம்.

செல்வசெழிப்புடன் வாழும் குடும்பத்தில் பிறந்த சகோதரர்களுக்குள் இளம் வயதில் அவ்வளவாக பிணக்குகள் வருவதில்லை ஏனெனில், இருவரின் தேவைகளும் தனி தனியே நிறைவேற்றப் படுவதால் என்றுமே சமாதானம்தான். ஆனால், அங்கே பாசப் பினைப்புகளில் குறைகள் ததும்பும். வசதிகள் குறைவான குடும்பத்தில் பிறந்து வளரும் அண்ணன் தம்பிகள் மத்தியில் பாசங்கள் என்றுமே கூடுதலாக இருக்கும். 

இவர்களில் மூத்த அண்ணன் வளர்ந்து ஆளாகி உழைத்து பொருளீட்ட ஆரம்பித்து விட்டால் அண்ணன் தான் ஹீரோ. அண்ணணின் சொல் அரசு உத்தரவு போல் உடனே அமுலாக்கும் தம்பிகள் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் அண்ணன்மார்கள் தம்பிகளின் உரிமைகளின் நாயகன். தனக்கு தேவையானதை பெற துடிக்கும் துடிப்பு தம்பிகளின் ஆர்வத் துடிப்பு அது உரிமைகளின் உயிர் துடிப்பு.

என் அண்ணன் என்று சொல்லி பெருமிதம்படும் தம்பிகளின் சந்தோசத்திற்கு அளவே கிடையாது. தம்பிகளின் அந்த உரிமையை தம்பிகளிடமிருந்து பிரிப்பது என்பது இயலாத காரியம். தம்பிகளின் மனதில் ஆழ பதிந்திருக்கும் அந்த உயிர் மூச்சு போன்ற உரிமையை பிரிக்க அண்ணனுக்கு திருமணம் என்ற பந்தத்தின் மூலம் ஏற்ப்படும் உறவு அண்ணனின் மனைவி அண்ணியால் மட்டுமே முடியும். 

உறவின் வலிமை யாருக்கு அதிகம் யார் உரிமை அதிகம் பங்கு உள்ளவர்  என்று பார்க்கும்போது அண்ணனின் மனைவிக்குத்தான். என்றாலும், உயிரோடு ஒட்டிய உறவான தம்பிகளை பிரிக்க நினைக்கும் அண்ணி கொஞ்சம் கொஞ்சமாக வெண்ணெய்யில் மயிலிறகை போல மிக நளினமாக தன் வயப்படுத்திக்கொள்ளல் வேண்டும். இதன்  கால அளவு குறைந்தது பத்து வருடங்கள் எனலாம். ஆனால், மணந்த மறு நிமிடமே தன வசம் வரவேண்டும் என்பதன் விளைவுதான் குடும்பத்தில் தேவையில்லாத சச்சரவுகள்.

ஒரு தாய் மக்கள், என் அண்ணன் எனக்கு சொந்தம் என்ற உணர்வு பதினைந்து வயது பாலகனிடம் இருக்கும். தம்பியும் பாச உணர்வை அறுத்தெறிய வேண்டும் என்று முனையும் புது உறவான அண்ணனின் மனைவியின் முயற்சி சில சமயங்களில் மிகவும் மோசமாக செயல்பட்டு தம்பியின் உணர்வின் உயிரை பிரிக்க காரணமாக இருப்பார்.  தந்தை காட்டும் பாசத்தின் இரண்டாம் பகுதியாக அண்ணன் காட்டும் பாசம் அமைந்திருக்கும். 

கல்யாணமாகி சில வருடங்களில் திசை திரும்பிய ஏவுகணைபோல் அதி வேகமாக தம்பி மீது கொண்ட பாசம் மறைந்து போகும். இது ஒரு வகையில் அண்ணனுக்கு பாதகமாக கூட அமையும் கல்யாணமாகி மனைவி வகையில் கிடைத்த உறவு பலமாக இருக்கும்பச்சத்தில் தம்பியின் உறவு இல்லை என்று போகும். அண்ணன் மனைவி பாதகியாய் அமைந்து அண்ணனுக்கு துர்சம்பவங்கள் நிகழ நேரிட்டால் தம்பியின் உறவு கைகொடுக்கும் அண்ணன் தம்பி உறவு நீடிப்பது பெற்றோர்களுக்கு கடைசி காலத்தில் மன நிறைவை கொடுக்கும். 

தாய் தந்தையர் தமது தாம்பத்யம் வெற்றி பெற்றதாக எண்ணுவர். தாய் தந்தையரின் தாம்பத்யத்தை புனிதமாக கருதும் ஒவொருவரும் தன் உடன் பிறந்தோரை அன்புடன் பேணுவர். நூற்றாண்டு காலம் கடந்து வெற்றி நடை போடும் நிறுவனகளின் பின்னணி அண்ணன் தம்பி உறவின் வலிமையே பாராம்பர்யமாக பேசப்படும் பல குடும்பங்களின் பின்னணியும் உடன்பிறப்புக்களின் ஒற்றுமையின் பின்னணிதான்.
தொடரும்...
அதிரை சித்தீக்

PLEASE VISIT OUR NEW WEBSITE https://adirainirubar.in/ 

பிறப்பது! இறப்பது! எதற்காக? குறுந்தொடர் - 2 10

அதிரைநிருபர் பதிப்பகம் | September 25, 2012 | , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) - (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தாங்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!).

ஆந்திராவைச் சேர்ந்த சினிமா டைரக்டரின் மகன் இஸ்லாத்திற்கு வந்த அனுபவத்தை ஒரு பயான் நிகழ்ச்சியில் பேசியிருந்தார். சில வருடங்களுக்கு முன் அவர் பேசிய சிடியை கேட்க வாய்ப்பு கிடைத்தது. அவரின் அனுபவத்தை முதல் அத்தியாயத்தில் விளக்கியிருந்தேன். இப்பொழுது இந்த அத்தியாத்தில் தொடர்ந்து அவர் பேச்சைக் கேட்போம் வாருங்கள்.

என் அப்பாவிடம் உங்கள் பெயர் இல்லாமல் வாழ்ந்து காட்டுவேன் என்று சொன்ன வார்த்தை : அல்லாஹூத்தஆலா என் வாழ்க்கையை மாற்ற ஆரம்பித்து விட்டான். என்ன செய்வது , எப்படி வாழ்வது  பிச்சையா எடுக்கறது. என் கனவு பெரிய ஸ்டார். இப்ப என்ன செய்ய?, ஒரு நாளைக்கு 10ஆயிரம் செலவு செய்யும் வழியை கற்று வைத்திருந்தேன். சம்பாரிக்க இல்லை, செலவு பண்றதுக்கு. ''அப்ப வாழ்வது எப்படி'' என்று தெரியவில்லை. வி கே நாட் பேக்.

சின்ன வயதில் விளையாட்டாக கற்றுக் கொண்டது வாட்ச் தொழில். வீட்டில் வாட்ச் நின்று விட்டால் நானே பிரித்துப் பார்த்து கற்றுக்கொண்டேன். மனதில் ஒரு நம்பிக்கை வந்து விட்டது. ''என்னை படைத்த இறைவன் பட்டினியாக போட மாட்டான்'' என்று வாட்ச் ரிப்பேரிங் வேலை தேட ஆரம்பித்தேன். 

அப்பொழுதுதான் ஒரு உண்மையான முஸ்லிமை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் என்னடான்னா தொழுகிறவர், அவரிடம் வேலைக்குச் சேர்ந்து அரைநாள் வேலை செய்து ''8 ரூபாய் சம்பளம் கிடைத்தது''. ''என்னை படைச்ச இறைவன் இதே தொழிலாக்கி விட்டான்'' என்று நினைத்துக் கொண்டேன். ஏன்னா செஞ்ச வேலை எல்லாம் முடிந்து விட்டது. அல்ஹம்துலில்லாஹ்!, அப்பொழுது அல்லாஹ் என்று சொல்ல மாட்டேன் தேவுடா (கிரியேட்டர்) என்று சொல்வேன். கிரியேட்டர் ஒருவர் இருக்கிறார் என்று நம்பினேன்.

தொழ போகும்போது என்னை அனுப்ப மாட்டார். லஞ்ச்க்கு போய்ட்டு வந்தா பிறகு வெளியே போக முடியாது.  நான் செயின் ஸ்மோக்கர், அதற்குக் கூட விட மாட்டார். ''நீங்கள் எல்லாம் போறீங்க'' என்னை ஏன்? விட மாட்டேன்கிறீர்கள். நாங்கள் ''அஸர் தொழப் போறோம், மஃரிபு தொழப் போறோம்''. என்று சொன்னார்கள் என்னடா? போறீங்க!, என்னா  தொழுகை? காட்டுங்கள்! என்றேன். பாய் கடையிலே பள்ளிவாசல்  இருக்கிறது (மதராஸ் ஃபேரிஸில்). அங்கே போய் பார்த்தேன் அங்கே எதுமே இல்லை, ஒரு விக்ரகம் கூட இல்லை. ஆஹா!  கரெக்ட் ஓ நிராகாரயா நமஹா! கரெக்ட்.

அந்த விக்ரக ஆராதானை வழிபாடு இல்லாத சமுதாயம் இதுதான். பிரம்ம ரிஷிகளுக்கு தாடி இருந்தது. முஸ்லிம்களும் தாடி வைக்கிறோம். இந்துயிஸத்தில் எல்லா ரிஷிகளுக்கும் தாடி இருக்கனும். தாடி இல்லைனா அவன் ரிஷி இல்லை, இல்லையா? அப்ப இஸ்லாம் ஈஸ் ய ட்ரூ ரிலிஜன் என்று நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். என்ன ''லாஇலாஹ இல்லல்லாஹ்'' (இல்லை எவனும் அல்லாஹ்வைத் தவிர), 'வாவ்! கரெக்ட்டய்யா கரெக்ட்', ஆண்டவன் ஒருவன் அவனைத் தவிர எவரும் இல்லை என்று இஸ்லாம் சொல்லுது, இந்துயிஸம் கூட சொல்லுது, அப்ப இஸ்லாம்தான் உண்மையான ரிலீஜன்''என்று இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். அப்ப எனக்கு பாட்சா என்று பெயர் வைத்துக் கொண்டேன். அப்ப நான் முழுசா உள்ளே போகவில்லை காரணம் ''இஸ்லாம் என்னவென்று தெளிவாக சொல்கிறவர்கள்''  சமுதாயத்தில் ரொம்ப கம்மி. இது ''பரிதாபமான சுச்சுவேஷன்''. நான் இஸ்லாத்திற்கு வருவதற்கு என்னோட சிந்தனையும்,  அல்லாஹ்வுடைய ரஹ்மத் தான் காரணம். அல்லாஹ் நேர்வழி போகிறவர்களுக்கு, நேர்வழி தருகிறான். தீய வழி போக விரும்புகிறவர்களை அவர்கள் வழியிலேயே விட்டு விடுகிறான். நீங்கள் விரும்பும் வழிகளை தேர்ந்தெடுக்க சுலபமாக்கி வைத்திருக்கிறான். வெற்றியடைய விரும்பும் மனிதனுக்கும் வழிகளை சுலபமாக்கித் தருகிறான்.

ஆனால் நான் இன்னைக்கு இஸ்லாத்திற்கு வருவதற்கு காரணம் இந்து வேதாஸ் மேலும் என் தாயார் வளர்த்த பண்பாடுதான் இஸ்லாத்திற்கு வந்தது. வந்த பிறகு என்னடான்னா நிறைய தியாகங்கள் நான் செய்ய வேண்டி இருந்தது. யாரை கட்டிக்கலாம் என்று இருந்தேனோ ''அந்த பெண் நீ பெரிய நடிகனாகி, டைரக்டராகி விடுவாய் என்று நினைத்தேன் இப்பொழுது வாட்ச் ரிப்பேர் தொழில் செய்கிறேன் என்று சொல்கிறாய் மேலும் இஸ்லாம் என்று மதம் மாற சொல்கிறாய்'' என்று சொன்னது. 

''மதம் மாறுகிறது இல்லைங்க இஸ்லாம்''. திஸ் இஸ் ட்ரூ. ''நோ படி கேன் சேஞ்ச் தி ரிலீஜன்'' எல்லா மனிதர்களும் இஸ்லாத்தில்தான் பிறந்திருக்கிறார்கள். அவர்களின் பெற்றோர்களால் தவறான பாதையில் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். யாரும் மதம் மாறவில்லை, மதம் மாறுகிறார்கள் என்று சொல்வதே தவறு ''ரிவெர்டெடு முஸ்லிம்''. ''வி ஆர் ரிவெர்டெடு அவர் ஸெல்வ்ஸ் (Ourselves)'' நாம், நம்மை திருத்திக் கொண்டோம். ஆண்டவன் அல்லாஹூதஆலா இஸ்லாத்தில்தான் படைத்திருக்கிறான். எங்கள் தாயார் என்னை இந்துவாக்கினீர்கள். நான் திருந்திக்கொண்டேன் அவ்வளவுதான். 'திஸ் இஸ் ட்ரூ'. ''வி ஆர் ஆல் ரிவெர்டெடு முஸ்லிம்ஸ்''. இன்னைக்கு இருக்கிற எல்லா முஸ்லிம்களும் முஸ்லிம் தாய் வயிற்றில் பிறந்ததற்காக முஸ்லிம் என்று சொல்லக்கூடாது. ஏன் என்றால் ''முஹம்மது நபி(ஸல்) அவர்கள் உலகத்தில் ஒரு சமுதாயத்தில் பிறக்கும் குழந்தைகள், நான் என் தாய்மார்கள் மார்க்கத்தில் இறக்கிறேன் என்று நினைப்பது ரொம்ப தவறு, உண்மையான மார்க்கத்தை அறியாமல் தாயின் மார்க்கத்திலேயே இறந்து விட்டால் அவர்கள் யஹூதி, நஸராக்களோடு சேர்ந்து எழுப்பப்படுவார்கள்'' என்று சொன்னார்கள். உடனே 'ஸஹாபாக்கள் யாரஸூலுல்லாஹ் அந்த சமுதாயம் எது என்று கேட்கிறார்கள்' ''நமது சமுதாயம்தான்'' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

எல்லா முஸ்லிமும் நாம் சுன்னா என்று சொல்வதற்குக் காரணம் என்ன? நாம் குர்ஆனை கேட்கனும், அல்லாஹ் என்ன சொல்லியிருக்கிறான் என்று தெரிஞ்சுக்கனும். நபி(ஸல்) அவர்கள் நமக்கு காட்டித் தந்த வழியை பின்பற்றனும். இதுதான் உண்மை. இன்னைக்கு நாம் குர்ஆனை ஓதுகிறோம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை?

ஒன்னா? இரண்டா? ''10 தடவை, 20 தடவை, 30 தடவை ஓதி முடித்து விட்டேன் சார்'' என்று சொல்கிறார்கள். ''குர்ஆனின் விளக்கம் எத்தனை தடவை படித்திருக்கிறாய்'' என்று கேட்டால். 'யாரும் படிக்கச் சொல்லவில்லை அதனால் படிக்கவில்லை' என்று பதில் வருகிறது.

குர்ஆனில் அல்லாஹூதஆலா என்ன சொல்கிறான் என்று பாருங்கள் ஸூரா யூசுப்பில், மிக அழகாகச் சொல்கிறான் சின்ன பிள்ளைக்கு தாயார் புரிய வைப்பது போல் இந்த குர்ஆனின் வசனங்கள் மிகத் தெளிவாக இருக்கிறது. யார் படித்தாலும் புரிந்து கொள்ளலாம். நிச்சயமாக இந்த குர்ஆனை அரபி மொழியில் ஏன் இறக்கினேன் என்றால் மக்கள் புரிந்து கொள்வதற்காக என்று அல்லாஹூதஆலா சொல்கிறான். ஆனால் அரபி மாநகரத்தில் இருக்கும் அரபி நபிக்காக, நபியின் மொழியான அரபி மொழியில் அனுப்பியிருக்கிறான் என்று குர்ஆன் சொல்கிறது. 

இங்குள்ள தமிழ் சமுதாய முஸ்லிம்கள் தமிழ் விளக்கம் படிக்க வேண்டும்.  அப்பொழுதுதான் நாம் எப்படி செயல்பட வேண்டும் என்று தெரியும். இப்ப பாருங்க 'இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட, இஸ்லாத்தில் பிறந்தோம் என்று நினைக்கிற'  நாம்  இஸ்லாத்தை சரியாக புரிந்து கொள்ளாத காரணத்தால் மற்றவர்களுக்கு எப்படி எடுத்து சொல்வது என்று நமக்குத் தெரியாது. இதுதான் இஸ்லாமியர்களின் பரிதாப நிலை. அல்ஹம்துலில்லாஹ்! உங்களைப் பற்றி சொல்லவில்லை. மதராஸில் அதிகமான பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். இங்கெல்லாம் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறீர்கள் சந்தோஷமான விஷயம்.'நிறைய பிரிவுகள்'நிறைய போரட்டங்கள்' முஸ்லிம்களுக்குள்ளேயே!. காரணம் குர்ஆனை சரியாக புரிந்து கொள்ளவில்லை.

தெரியாதவர்கள் குர்ஆனின் விளக்கத்தைப் படியுங்கள். குர்ஆன் தமிழ், தெலுங்கு, உருது, ஆங்கிலம் என்று அனைத்து மொழியிலும் வந்து விட்டது. உலகத்தில்  177 மொழியில் குர்ஆன் விளக்கம் வந்துள்ளது. உலகத்தில் அல்லாஹூதஆலா நமக்காக மிக இலகுவாக்கியிருக்கிறான்.
இன்ஷாஅல்லாஹ் வளரும் ...
அலாவுதீன் S.

ஊடக தீவிரவாதம் ! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | September 24, 2012 | , , , ,


நேற்று(ம்) செய்திச் சேனல்களில் தொடர்ந்து அந்தச் செய்தியை மீண்டும் மீண்டும் வீடியோ கிளிப்புடன் காட்சிப்படுத்தி வாசிக்கப்பட்டது - அதுதான் "அதிரையைச் சேர்ந்த சகோதரரின் கைது" செய்தி. அந்தச் செய்தியின் காட்சிக்குள்ளே, செய்தி சேகரித்து அளிப்பவர் ஒருவரின் வக்கிரமான மிகைப்படுத்தப்பட்ட செய்தியை ஏதோ புதிய பரபரப்பை ஏற்படுத்துவதுபோல் பிரம்மையை உருவாக்கிக் கொண்டு கற்பனை கட்டுக் கதைகளை நேரில் கண்டவர் போல் கைகளை ஆட்டிக் கொண்டு பரபரப்புடன் பீதியை கிளப்ப எத்தனித்திருப்பதை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும்.

அவதூறுக்கு பேர்போன மீடியாவின் பிம்பமாக மாறிவரும் இன்றைய தொலைக்காட்சி செய்திச் சேனல்கள் இம் மாதிரியான ஒருதலைபட்ச வக்கிரப் போக்கு தொடர்வது நம் சமுதாய நலனுக்கு நல்லதல்ல.

ஒருவரின் கைது நடவடிக்கையை பரபரப்புக்காக எதையும் செய்யலாம் என்ற வன்மம் கொண்ட இந்த கேடுகெட்ட தொலைக்காட்சி, இணைய, மற்றும் அச்சு மீடியாக்கள் அனைத்தையும் புறக்கனிக்கப்பட வேண்டும். அவர்கள் செய்திடும் இவ்வகையான தரம் தாழ்ந்த தவறினை உணர்த்தி அதே ஊடகம் வழியாக மனிதநேயம் போற்றுவோம், இந்திய ஒருமைப்பாட்டை மதிப்போம்.

மற்றுமொரு தொடர் நேரலை தொலைக் காட்சியியில் நேற்று அதிரையைச் சார்ந்த சகோதரர் அவர்களின் பேட்டியைக் கேட்டவர்களுக்கு வேதனையே மிஞ்சும், அவரின் உருக்கமான வேண்டுகோள் "நிஜத்தை எழுதுங்கள்" என்பதே !

கேடுகெட்ட ஊடக தீவிரவாதிகள் அத்தோடு நிற்கவில்லை தங்களின் பங்கிற்கு கற்பனைக் கதைகளை அள்ளி விடுவதில் எவ்வகையிலும் சலைத்தவர்களல்ல என்று எல்லா சூழலிலும் செய்துகாட்டி வருகின்றார்கள் இந்த ஊடக பயங்கரவாதிகள்.

மேலும் பார்க்க : 

அதிரைநிருபர் குழு

பயணங்களில் பரவசம் ! குறுந்தொடர் - 2 15

அதிரைநிருபர் பதிப்பகம் | September 23, 2012 | , , , , ,

தொடர்கிறது… 2

உறைந்த கடப்பாசியை கீரி விட்டது போன்ற சுர்ரென்ற உணர்வு, அங்கே கண்ட காட்சி மரத்தில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர். எந்த விதமான உடல் மறைக்கும் ஆடைகளின்றி குப்புற படுத்துக்கிடந்தார். 

மேலும் நம்மை நோக்கி டேய் “வாங்கடா உங்களுக்கெல்லாம் பைத்தியம் பிடித்துள்ளது அதற்கு மருந்து என்னிடம் உள்ளது வாங்கடா” என்று மீண்டும் அழைத்தார்.

அவரின் நிலையை கண்டு மனம் கனத்தது. மேலும் நடந்து போகும்போது ஒரு இளம் பெண்ணின் குரல் ஓங்கி ஒலித்தது “எவிடாடா வந்து”என்று மலையாளத்தில் விளித்ததும்,  இந்த அர்த்த ராத்திரியில் ஒரு இளம் பெண்ணின் மலையாளக் குரல் கேட்டதும் அடிமனம் ஆட்டம் கண்டது. 

‘நெருக்கமான நண்பர்களுக்குள்’ இன்னும் ‘நெருக்கம்’ ஏற்பட்டது பயத்தால் சத்தம் போட்ட மலையாள ஸ்திரியிடம் கண்டது ‘நடையா’ அல்லது ‘ஓட்டமா’ என்று பட்டிமன்றமே வைக்கலாம் அந்த அளவிற்கு இருந்தது அந்த நடை ஓட்டம். தர்காவை  சுற்றி வலம் வந்து கொண்டிருந்த அந்த இளம் பெண் இடையிடையே தர்கா சுவற்றில் ஓங்கி ‘பளீர் பளீர்’ என அடித்துக்கொண்டு சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தார். 

நாங்கள் அருகாமையில் பள்ளிவாசலுக்கு வந்ததும் ஒளு செய்து விட்டு இரண்டு ரக்காத் தொழுதுவிட்டு “யாஅல்லாஹ்! இந்த மக்களுக்கு நல்வழி காட்டுவாயக!” என்று எங்களின் பிரார்த்தனையை அல்லாஹ்விடம் மன்றாடிவிட்டு கனத்த மனதுடன் பள்ளிவாசலிருந்து வெளியேறி அந்த தர்காவை மெல்ல பயத்துடன்  கடந்து, எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.

அதிகாலையே ! குற்றாலம் சென்றடைந்தோம், அங்கு சென்றடைந்ததும் தான் தெரிந்தது தொலைக்காட்சி செய்திகளில் அருவிகளில் நீர் கொட்டுகின்றது என்று பொய்(ச்செய்தியாக) சொன்னது புரிந்தது. அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் வெளியில் காட்ட வெட்கப்பட்டுக்கொண்டு அங்கே ‘குளித்தவர்கள்’ போல் தங்களை பாவ்லா(!!?) செய்து கொண்டு கால்வெட்டிய கால் சட்டையுடன் (!!!) திரிந்தனர். 

இங்கே ஒரு விசயத்தை குறிப்பிட வேண்டும் ‘சுற்றுலா பயணிகள் அரைக்கால் டிராயரையும் “T ஷர்ட்டும்” போட்டதும்’ மனதில் ‘ஜேம்ஸ் பாண்ட்’ என்ற எண்ணம் வந்து பல ‘ஜீரோ’த்தனமான வேலைகளை ஆரம்பித்து விடுகின்றனர். நடுரோட்டில் வாகனங்களுக்கு வழி விடாமல் நாங்கள் ஆடு-மாடுகளுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை அவ்வப்போது நிருபித்த வண்ணம் ரோட்டில் குடி-நடை போட்டனர்.

இதையெல்லாம் விட கொடுமை குடி(மக்களின்) நாற்றம் இவைகள் அனைத்தையும் சகித்துக் கொண்டுதான் குற்றாலம் சென்றடையனும். நாம் வழக்கம் போல் இட்லி கடையை தேடிப்போய் காலை பசியாறிவிட்டு, இனி இங்கே குளிக்க வழியில்லை என்றதும் ‘அப்பர் கோதையர்’ போகலாம் என்று முடிவு செய்து இன்னோவா அப்பர் கோதையர் நோக்கி பயணமானது.  இந்த அப்பர் கோதையார் செல்ல குற்றாலத்திலிருந்து பாபநாசம் வழியாக அம்பாசமுத்திரம் போய்தான் அங்கு செல்ல வேண்டும். 

குற்றாலத்தில் இருந்து அம்பாசமுத்திரம் சுமார் 55 கிலோ மீட்டர் இருக்கும் அங்கிருந்து ‘மணி முத்தாறு அருவி’ சுமார் 10 கிலோ மீட்டர் இருக்கும். அங்கிருந்து அப்பர் கோதையார் கிட்டத்தட்ட 15 கிலோ மீட்டார் தூரம். 'மணி முத்தாறு அருவி' வரைதான் ஃபாரெஸ்ட் அனுமதி கொடுப்பார்கள். நாம் “ஃபாரெஸ்ட் செக்-போஸ்ட்டில் அப்பர் கோதையார்  போக வேண்டும்” என்றதும் அங்கு போக அனுமதி இல்லை என்றனர். நாமோ நம்மூர் கல்லூரி பேராசியரின் பெயரை சொன்னதும். “ஓ! (ஏற்கனவே இவருக்கும் அவருக்கும் நல்ல பழக்கம் உண்டு) அவர்  உங்களுக்கு  தெரிந்தவரா?” என்று கேட்ட அலுவலர் உடனே அவருக்கு போன் செய்து பேசிவிட்டு போனை நம்மிடம் கொடுத்தார்.

நாம்முடைய பேராசிரியரிடம் பேசும்போது “நீ எப்போ சவுதியிலேயிருந்து வந்தே?” என்றார்”,

“மூன்று நாள் ஆச்சு சார்” என்றதும்.. போனை  ஆபிசரிடம் கொடுக்க சொன்னார். 

இருவரும் பேசி முடித்ததும் ‘அப்பர் கோதையார்’ போக உடனே கடிதம் ரெடி செய்து கொடுத்தனர். 

நமது கார் செக்-போஸ்ட்டை தாண்டி மணிமுத்தாறு அருவி அருகே உள்ள செக்-போஸ்ட் வந்ததும் பர்மிசன் கடிதத்தை காட்டி விட்டு அனுமதி கிடைத்ததும், ‘அப்பர் மலை’ ஏற்றத்தில் ஏற தொடங்கிய அரைமணி நேரத்தில் மாஞ்சோலை என்ற எஸ்டேட் வந்தது. இந்த மாஞ்சோலை பிரச்சனையால் திருநெல்வேலியில் பல வருடங்களுக்கு முன்பு பல உயிரிழப்புகள் நிகழ்ந்தது நினைவிருக்கலாம். 




வண்டியை நிறுத்திவிட்டு அங்கு விளைந்த “டீ தூளில்” ருசியாக டீ குடித்ததும் இரவு முழுதும் கார் ஓட்டி கலைத்த உடம்புக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது. புத்துணர்ச்சி  மேலோங்க காரும் செங்குத்தான மலை(!!!) ஏறத்தொடங்கியது. புறப்பட்ட சிறிது நேரத்தில் ஆங்காங்கே கருங்குரங்குகள் தென்பட ஆரம்பித்தது. குரங்கை தெளிவாக புகை படம் எடுக்க முடியவில்லை காரணம் மரத்துக்கு மரம் தாவிக்கொண்டே இருந்தது. குரங்கு மட்டும் என்னவாம் “ஏம்ப எங்களையும் போட்டோ எடுப்பா!!” என்று போஷா கொடுக்கும். 


அப்பர் கோதையாரின் உச்சிக்கு சென்று ‘அப்பர் கோதையாரின்’ இயற்கை காட்சிகளை  நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கு 1942ல் கட்டிய ‘மரப்பாலம்’ இன்றும் வாகனங்கள் போய் வருகின்றது. அதையும் ஃபோட்டோ எடுத்துக் கொண்டு பகல் சாப்பாடு சாப்பிடாமல் (சாப்பாடு கிடைக்கவில்லை அதுதான் உண்மை) ‘டீ வடை’ சாப்பிட்டதோடு கார் கீழிறங்க தொடங்கியது. வழியில் மஞ்சோலை டீ எஸ்டேட்டில் ஆர்கானிக் ‘டீ’த்தூள் (இயற்கையான உரத்தில் விளையும் ‘தேயிலை’) வாங்கிக் கொண்டு  கிழே உள்ள மணி முத்தாறு அருவியில் அலுப்பு தீர குளித்து விட்டு மாலை ஐந்து மணிக்கெல்லாம் குற்றாலம் நோக்கி புறப்பட்டோம்.




புறப்பட்ட சிறிது நேரத்தில் எல்லோருக்கும் பசி (குடலை உருவ ஆரம்பித்து விட்டது ) கார் நேராக செங்கோட்டை ரோட்டில் உள்ள ரஹ்மத் “நாட்டுக்கோழி” கடையை நோக்கி சீறிப்பாய்ந்தது.

பயணம் தொடரும்.. .
Sஹமீது


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு