Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஆசிரிய ஆச்சர்யங்கள் 17

அதிரைநிருபர் பதிப்பகம் | September 05, 2012 | , ,



(*)வகுப்பென்னும் வயிற்றுக்குள்
குழந்தைகள் சுமக்கும்
அன்னையர் ..
ஆசிரியர்கள்.

(*) மாதா பிதா
வரிசையில்
மூன்றாவதாய் குரு..
முதலிருவரின்
மொத்தமாய் ஒரு உரு..

(*) அறிவியலின் முன்னேற்றத்தில்
இன்று
ஆன்லைனில் கற்றல்
சாத்தியம், ஆயினும்
ஆசானிடம் கற்றல்
அலாதி.
துவளும் நேரத்தில்
தோளில் மெல்ல
தட்டி கொடுக்குமா
எந்தத் தளமும் ?

(*) சிகரம் தொட்ட
எவருக்கும், வெற்றியின்
அகரம் சொல்லியவர்கள்
ஆசிரியர்கள்.

(*) சமீப காலங்களில்,
பாலியல் தொல்லைதரும்
பயிற்றுவிப்பாளர்கள்,
தற்கொலை செய்துகொள்ளும்
தளிர்கள்!!

எங்கே போனது
தன்னலமற்ற அன்பும்
தன்னை நம்பிய
தெம்பும்?

(*) மொழியொடு கணிதம்..
முறையாய் அறிவியல்..
சரித்திரம்... சமூகம்...
படித்திடும் பிள்ளை..
புத்தகம் தாண்டியது
ஆசிரிய-மாணவ
பந்தத்தின் எல்லை.

(*) 'உடையார்முன் இல்லார்போல்'
என்னும் உவமைக்கு
இலக்கணமாய்
அது இன்று இல்லை
அது தானே தொல்லை.

(*) பால்பிரிவு தாண்டியது
கல்வி,
படிப்பிற்கு முந்தையது
பணிவு.
வகுப்புகளைக் கடந்தது
வழிநடத்தல்.
மதிபெண்களைவிட
மதிக்கத் தக்கது
பண்பு
-என்னும்
நிதர்சனத்தை
கற்பிப்போரும் கற்போரும்
கைவிட்ட
நிலை..
அது தீமை
சமைக்கப்படும் உலை.

(*) வளமான உலகம்
நலமான பள்ளியில்
துவங்கட்டும்..

கண்ணியமும் கனிவும்
கற்பிப்போரிடமும்
பணிவும், படிப்பில் உறுதியும்
கற்போரிடமும்
துலங்கட்டும்.

~அதிரை என்.ஷஃபாத்

எனது மதிப்பிற்குரிய ஆசிரியப் பெருந்தகைகளுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

17 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

/// மாதா பிதா
வரிசையில்
மூன்றாவதாய் குரு..
முதலிருவரின்
மொத்தமாய் ஒரு உரு.. ///

//எங்கே போனது
தன்னலமற்ற அன்பும்
தன்னை நம்பிய
தெம்பும்?//

WOOOWWW !!!

Unknown said...

//(*) சிகரம் தொட்ட
எவருக்கும், வெற்றியின்
அகரம் சொல்லியவர்கள்
ஆசிரியர்கள்.//

உண்மை...!

Unknown said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

//துவளும் நேரத்தில்
தோளில் மெல்ல
தட்டி கொடுக்குமா
எந்தத் தளமும் ?// நறுக்கென்றும் நச்சென்றும் இருக்கிறது. பாராட்டுக்கள்.

Yasir said...

குட்டிக்குட்டி வரிகளாக இருந்தாலும் மனதில் வந்து குந்திக்கொ(ல்)ள்கிறது உங்கள் கவிதை...கவிதை அருமை அதற்க்கான நீங்கள் எடுத்துக்கொண்ட “விதையும்” அருமை

ZAKIR HUSSAIN said...

To Brother அதிரை என்.ஷஃபாத்,

//மாதா பிதா
வரிசையில்
மூன்றாவதாய் குரு..
முதலிருவரின்
மொத்தமாய் ஒரு உரு..//

கிளாசிக் வரிகள். ஏதாவது கவிதையரங்கில் வாசிக்கப்பட்டிருந்தால் கேட்கப்போகும் கைதட்டலை இப்போதே என்னால் உணர முடிகிறது.

Shameed said...

//வளமான உலகம்
நலமான பள்ளியில்
துவங்கட்டும்..
//

இந்த மூன்று வரிகளுக்குள் நல்ல உலகம் அடங்கிவிட்டது

sabeer.abushahruk said...

அழகான கவிதை. அருமையான எண்ணம். தரமான எழுத்து. நியாயமான கவலை.


//கற்பிப்போரும் கற்போரும் (நற்பண்புகளை)
கைவிட்ட
நிலை..
அது தீமை
சமைக்கப்படும் உலை.//

உண்மை.

வாழ்த்துகள் ஷஃபாத்.

தமீம் said...

ஆசிரியர் தினத்தில் நல்ல கவிதை

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

பால் பிடிவு தான்டியது கள்வி
படிப்பிற்கு முந்தயது பணிவு
எழுத்தில் நல்ல கணிவு

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

பால் பிடிவு தான்டியது கள்வி
படிப்பிற்கு முந்தயது பணிவு
எழுத்தில் நல்ல கணிவு

Unknown said...

எங்கே போனது
தன்னலமற்ற அன்பும்
தன்னை நம்பிய
தெம்பும்?
---------------
தம்பி ஷஃபாதின் எல்லாரையும் யோசிக்க வாய்த்த வரிகள் ....!

also please read this to

http://adirainirubar.blogspot.com/2011/05/blog-post_11.html

அதிரை என்.ஷஃபாத் said...

வாசித்த எல்லோருக்கும் என் நன்றி!!

KALAM SHAICK ABDUL KADER said...

ஷபாஷ் ஷஃபாத்

வாசிக்கவும்; ஆசிரியர்களை
நேசிக்கவும் வைத்த கவிதை

Saleem said...
This comment has been removed by the author.
crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். தம்பி சபாத் ஆசிரியர்களுக்கு நடத்திய பாடம் நல்லா இருக்கு! நாம் என்றும் ஓர் கட்சிதான் தம்பி! வாழ்த்துக்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு