Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கேளு தம்பி கேளு ! - குல்லா எங்கே !? 13

அதிரைநிருபர் பதிப்பகம் | September 05, 2012 | , , , , ,

ஒரு ஊரில்!

ஒரு குல்லா வியாபாரி இருந்தார் அவர் சொந்தமாக குல்லா தயாரித்து ஊர் முழுவதும் விற்பனை செய்வது அவருடைய குடும்பத் தொழில். பரம்பரை பரம்பரையாய் அதே ஊரில் தான் வியாபாரம் செய்வார். ஒரு நாள் வியாபாரம் செய்துவிட்டு பகல் பொழுதில் தான் கொண்டு வந்த உணவை ஒரு மரத்தடியில் குல்லா கூடையை இறக்கி வைத்துவிட்டு உணவை உண்ணலானார்.  பிறகு சிறிய உறக்கம் கொண்டார். 

எழுந்து பார்த்ததும் கூடையில் இருந்த குல்லாக்களை காணவில்லை அதிர்ச்சியுற்றவராக சுற்றும் முற்றும் பார்த்தார் ஆள் நடமாட்டமே இல்லை. மரத்தின் மேலே குரங்குளின் சப்தம் அதன் தலைகளில் இவர் கூடையில் வைத்திருந்த குல்லாக்கள். கல்லை விட்டு எறிந்து பார்த்தார் அது கொஞ்சம்கூட சட்டை செய்யவில்லை அப்புறம் தன்னுடைய தகப்பனாருக்கு நடந்த சம்பவத்தை ஞாபகப்படுத்திக் கொண்டு தான் அணிந்திருந்த குல்லாவை குரங்கை பார்த்து எறியலானார் குரங்கும் அதுபோல் செய்யவில்லை!!!???

ஏனுங்க !?

இவருக்கு ஒரே ஆச்சரியம் தந்தை சொன்னது போல்தானே செய்தோம் என்னாச்சு இந்த குரங்குகளுக்கு என்று கவலை பட்டவராக குரங்குகளிடமே கேட்கலானார்.

"முன்பு ஒரு காலத்தில் என் தந்தை இதே மரத்தடியில் படுத்து உறங்கும்போது அன்றைய குரங்குகளெல்லாம் குல்லாவை எடுத்து சென்றது அப்பொழுது என் தகப்பனார் தனது குல்லாவை கீழே வீசியபொழுது அந்த குரங்குகளும் வீசி எறிந்ததே நீங்கள் மட்டும் ஏன் அப்படி செய்யவில்லை "என்று கேட்டார்.

அதற்கு குரங்குகள் சொன்னது.. "உங்கள் அப்பா சொன்னது போல் எங்கள் அப்பாவும் சொல்லி இருக்கிறார்கள் அவர் வீசுவார்(குல்லாவை) நீ வீசி ஏமாந்து விடாதே".

நண்பர்களே  தலைப்பில் சொன்னதுபோல் சூழல்கள் மாறிப்போச்சு 40 வருடங்களுக்கு முன்னால் கதையாசிரியரும் எதார்த்தம்  குரங்குகளும் எதார்த்தம் இது தந்திர உலகம் பழைய தந்திரங்கலெல்லாம் இன்றைய சூழலுக்கு ஒத்து வராது " திஸ் ஈஸ் ஜெனரேசன் கேப்" 

மீண்டும் சந்திப்போம்.

இது மொபைல் ஃபோன் விளம்பரம் அல்ல ! கற்பனையும் கல்வி புகட்டுமே! :)

மு.செ.மு.சபீர் அஹமது

குறிப்பு : இந்த சம்பவம் ஊரில் நடக்கும் எந்த சூழலுக்கும் ஒத்துப் போகுதென்றால் நாம என்னங்க செய்ய முடியும்… !?

13 Responses So Far:

Shameed said...

கதை எங்கயோ (கேட்ட) படித்தமாதிரி இருக்கேன்னு பார்த்தா கிளைமாக்ஸ் மாறில்ல வருது

அதிரை சித்திக் said...

சபீர்....!
எடுத்து விடு ராஜா உன் எழுத்து கணைகளை ..
உனது நவீன நீதி கதைகள் தொடரட்டும் ...!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். இந்த கேப்(தொப்பிக்குள்) இப்படி ஜனரேசன் கேப்(தலைமுறைஇடைவெளி)யைப்பற்றி நல்லா ஒரு குல்லா கதைமூலம் சொல்லியுள்ளீர்கள். இனி குல்லாவை போட்டு அரசியல் கல்லா கட்டமுடியாது என்பதை மனித சேஸ்டையை குரங்கே புரிந்து இருக்கும் போது மனிதன் நாம் புரியாமல் இருப்பது ஏன்? நல்ல தொரு விழிப்புனர்வு ஆக்கம். வாழ்த்துக்கள்!.

அதிரை என்.ஷஃபாத் said...

குல்லா கதையை ரொம்ப கூலா சொல்லியிருக்கீங்க.!! அருமை!!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்ல படிப்பினைக் கதை.

குரங்குகளுக்கு இருக்கும் ஒற்றுமைக் குணம் மனித இனத்தில் குறைந்து போவது வேதனை அளிக்கிறது.
அது 40 க்கு முன்னும் அதே ஒற்றுமை. இன்றும் அதே ஒற்றுமை- புத்திசாலித்தனத்தோடு!

ஆனால் நாமோ கொள்கை, ஊர்நலன் அனைத்திலிருந்தும் விலகி நீ எதிர்த்தால் நான் செய்வேன் என எல்லாத்திலும் பிடிவாத அரசியல் செய்கின்றனரே தவிர களங்கம் போக்கி ஒன்றுபடுவது பற்றி அக்கரை கொள்வதாக தெரியவில்லை.

Ebrahim Ansari said...

பழக்கமான கதையாக இருக்கிறதே என்று பார்த்தால் அது வழக்கொழிந்து போய்விட்டது என்று சுட்டி இருப்பது பாராட்டுக்குரியது. சபீர்! நல்ல பெயர் ராசி.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்..

எம். எஸ். எம் .சபீர் காக்கா ; குல்லாவை போட்டு வலியை அடக்கலாம்டு பார்த்தா முடியவில்லை.சுள்ளென்று குத்துகிறது. சாரி எனக்கில்லை.வேற யாருக்கென்று கேக்குறிங்களா? அதாங்க அயல் நாடுகளிலிருந்து அருப்புதமா குல்லா போட்டுக்கிட்டு வந்திருக்கிற குண்டர்களுக்கு.

Yasir said...

இந்த வித்தியாசமான டீலிங் எனக்கு பிடிச்சுருக்கு...தொடருங்கள்

sabeer.abushahruk said...

குல்லா கதை நல்லாருக்கு, ட்விஸ்ட் ச்சோ ஸ்வீட்.

Yasir said...

இன்னொரு குரங்கு கதை இருக்கு..பின்னே பரயாம்

Shameed said...

Yasir சொன்னது…


//இன்னொரு குரங்கு கதை இருக்கு..பின்னே பரயாம் //

அப்போ சிங்க கதை கோன் போலேகா

தமீம் said...

குரங்கு கதையின் முடிவு வித்திய்யாசமானது. சிங்க கதையும் சொல்லுங்கள்

Unknown said...

புதுமை சபீர் காக்கா உங்கள் கதை ....காலமாற்றத்திற்கு ஏற்றது..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு