Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நபிமணியும் நகைச்சுவையும்...! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | October 11, 2012 | ,

தொடர்... 5
பாவம் செய்தவர் பழத்துடன் திரும்பினார்.

மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கும் இறை விசுவாசிகளின் பாவங்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மன்னித்து விடுவது மட்டுமல்லாமல், அந்தப் பாவங்களை நன்மையாக மாற்றி, பகரமாக பரிசுகளை இந்த உலகிலும் சுவனத்தை மறு உலகிலும் இன்ஷா அல்லாஹ், தரவிருக்கும் அற்புத நிகழ்வை மகிழ்ச்சியுடன் கீழே காணலாம்:

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது,  அவர்களின் சபைக்கு ஒரு சஹாபி வருத்தத்துடன் வருகிறார்.

நபியவர்களால் மட்டுமே நமக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கையுடன் சலாம் உரைக்கின்றார். 

சஹாபி : "இறைத்தூதர் அவர்களே! நான் அழிந்து விட்டேன்!" (பாவம் செய்து விட்டேன்! )

நபி (ஸல்) : (புன்னகையுடன் "என்ன நடந்தது?")"உமக்கு என்ன நேர்ந்தது?"

சஹாபி : "நான் நோன்பு வைத்துக்கொண்டு, என் மனைவியுடன் இல்லற வாழ்வில் ஈடுபட்டேன். (இப்போது என்ன செய்வது?)"

நபி(ஸல்): "அப்படியா? தவறு செய்து விட்டீரே! நீர் இதற்கு கஃப்ஃபாரா[*] கொடுக்க வேண்டும் . விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?"

சஹாபி : "இல்லை!" யா ரஸூலல்லாஹ்"

நபி (ஸல்) : "இரண்டு மாதம் தொடர்ந்து நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா?"

சஹாபி : "அதுவும் என்னால் ஆகாத விஷயம் அல்லாஹ்வின் தூதரே!"

நபி (ஸல்) : "அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு ஆகுமான வசதி இருக்கிறதா?'"

சஹாபி : "அறுபது ஏழைகளுக்கா? எனக்கு அந்த அரிதான விஷயம் என்னால் முடியவே முடியாது நாயகமே!"

எல்லாகேள்விகளுக்கும் அவர் இயலாது எனச்சொன்னதால் இவருக்கு வேறு எப்படி உதவலாம் என்ற யோசனையில், அல்லாஹ்விடமிருந்து உதவியை எதிர்நோக்கி அண்ணலார் மௌனமாகிவிட்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வின் அற்புதம் அப்போது நிகழ்ந்தது! பெருமானாரின் சபைக்கு இனிய பேரீச்சம் பழங்கள் நிறைந்த கூடை [அரக்**] கொண்டுவரப்பட்டது. மகிழ்ச்சியுடன் அல்லாஹ்வைப் புகழ்ந்தவாறு...

நபி (ஸல்) : "கேள்வி கேட்டவர் எங்கே?"

சஹாபி : "இதோ நானே! (இங்குதான் இருக்கிறேன்!) யா ரஸூலல்லாஹ்"

நபி (ஸல்) : "இதை எடுத்துக்கொண்டுபோய் ஏழைகளுக்கு தர்மம் செய்வீராக. அதுவே உமது பாவத்துக்குப் பரிகாரம்!"

சஹாபி : "இறைத்தூதர் அவர்களே! என்ன? என்னை விட ஏழையாக இருப்போருக்கா என்னை தர்மம் செய்யச் சொல்கிறீர்கள்? கருங்கற்கள் நிறைந்த, இதோ இந்த இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியாகிய இந்த மதீனா நகரில் வாழும் அனைவரிலும் என் குடும்பத்தினரைவிடப் பரம ஏழைகள் யாருமே இல்லையே, யா ரஸூலல்லாஹ்!"

இதைக்கேட்டதும் நபி(ஸல்)தங்களின் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்துவிட்டார்கள் .

நபி (ஸல்) : "இதை எடுத்துக் கொண்டுபோய், உம்முடைய குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!"
ஆதாரம்: புஹாரி : 1936  அறிவிப்பு : [***]அபூ ஹுரைரா(ரலி).

அல்லாஹ்வின் வாக்கு:
ஆனால் (அவர்களுள்) ஈமான் கொண்டு, தவ்பாச் செய்து, ஸாலிஹான (நற்)செயல்கள் செய்கின்றவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும் மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்:25:70).

[*] குறிப்பு 1 : கஃப்ஃபாரா என்பது  அவசரத்தால்/அறியாமையால் செய்யப்படும் பாவங்களுக்கான பரிகாரமாகும்.

[**] குறிப்பு 2 : 'அரக்' என்பது 15 'ஸாஉ' முகத்தலளவு கொண்ட கூடையாகும்; 1 'ஸாஉ' என்பது 4 'முத்'களாகும்; 1 'முத்' என்பது வயதுவந்தவர்களது இரு கரங்களால் ஒருமுறை அள்ளப்படும் தானியங்களின் அளவாகும்.

[***] குறிப்பு 3 : அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் மேற்காணும் நிகழ்வின் தொடர்புடைய சான்றுகள் - புகாரி எண் 5368 எண் 6087 எண் 6164 எண் 6709
தொடரும்...
இக்பால் M.ஸாலிஹ்

12 Responses So Far:

அதிரை சித்திக் said...

ஏழை சஹாபிக்கு ..
இறை தூதர் நபிகளாரின்
பெருந்தன்மையான தீர்ப்பு
நெகிழ்ச்சியான சம்பவம்
தொடருங்கள் சகோ ..!

Shameed said...

குறிப்புக்கள் போட்டு அழகிய விளக்கம் கொடுத்துவிட்டதால் கேள்வி ஒன்றும் கேட்க முடியவில்லை

Yasir said...

நபி-ஸல்லலாகு அலைஹிவஸ்ஸல்லம் அவர்களைப்பற்றி படிப்பதே மகிழ்ச்சிதான் அதுவும் இந்த மாதிதி விசயங்களை படிப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி

Ebrahim Ansari said...

அன்புத் தம்பி இக்பால் அவர்களுக்கு,

மிக நெகிழ்வான நிகழ்ச்சியை நகைச்சுவையின் இழையின் பின்னணியில் எளிமையான நடையில் தந்திருக்கிறீர்கள்.

தங்களுடைய பயணம் பாதுகாப்பாகவும் இனிமையாகவும் நிறைவேற து ஆச்செய்கிறோம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இது போன்று ஹதீஸ்களை உரையாடல் போல் தொகுத்து தந்தால் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

குறிப்புகள் கொடுத்து விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி, ஜஸக்கல்லாஹ்.

sabeer.abushahruk said...

மணிமணியான வாழ்க்கை நெறிகளையும் கோட்பாடுகளையும் சஹாபிகளின் நடப்புகளிலேயே சுட்டிக்காட்டி போதித்திருக்கும் நம் கண்மணி ரசூலல்லாஹு (ஸல்) அவர்களின் வழி புல்லரிக்கிறது.

சுவாரஸ்யமான எழுத்து நடையில் மார்க்க விஷயங்களைச் சொலவது எளிதல்ல.

நீயோ ஜமாய்க்கிறாய், இக்பால்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். நல்ல தொடர் நல்ல தெளிவான எழுத்துக்களுடன். அல்ஹம்துலில்லாஹ்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அருமையான தொடரை தொடர்ந்து தொய்வில்லாமல் வாசிக்க அதிரை மக்களுக்கு மின்சாரமும் ஒத்துழைக்கட்டுமாக !

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா...

பதிவுக்குள் வந்து 28 மணிநேரம் கழித்துதான் முழுமையாக வாசிக்க முடிந்தது...

இன்றைய மின்சாரம் - என்ற தொடர் செய்தியாக வெளியானாலும் ஆச்சர்யப்பட வேண்டியதில்லை !

மின்சாரம் வந்து விட்டாம் தூக்கம் கலையும் கலாச்சாரம் அதிரையில் உருவெடுப்பதாக தகவல் வேறு (விஷயம்)!

sabeer.abushahruk said...

படத்தில் பேரீச்சம்பழக் குவியலுக்கு மேல் தேர்ந்தெடுத்து சுத்திகரிக்கப்பட்டப் பழங்கள் மட்டும் தனியாகக் கூடையிலே...

ஜாஹிலியாக் காலத்து குரைஷியர் கூட்டத்திற்கு மேல் நற்போதனைகளால் நேர்வழிகண்ட சஹாபாக்கள் மட்டும் தனியாக இஸ்லாத்திலே எனக் கொள்ளலாமா?

KALAM SHAICK ABDUL KADER said...

\\சுவாரஸ்யமான எழுத்து நடையில் மார்க்க விஷயங்களைச் சொலவது எளிதல்ல.

நீயோ ஜமாய்க்கிறாய், இக்பால்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.// வழிமொழிகின்றேன்.

//ஜாஹிலியாக் காலத்து குரைஷியர் கூட்டத்திற்கு மேல் நற்போதனைகளால் நேர்வழிகண்ட சஹாபாக்கள் மட்டும் தனியாக இஸ்லாத்திலே எனக் கொள்ளலாமா?//

கவிவேந்தர் சபீர் அவர்கள் உள்ளதை ஊடுருவி பார்ப்பவர் என்பதை அவர்களின் கவிவரிகள் சான்று பகர்கின்றன. இப்பொழுது எழுதியுள்ள இப்பின்னூட்ட வரிகள், அவர்கள் எல்லாவற்றையும் உன்னிப்பாக- ஊடுருவி பார்ப்பவர் என்பது தெள்ளத் தெளிவாக உணர்த்துகின்றன. எனவே, அவர்கள் காணும் காட்சி எல்லாம் கவிதைகளாய்ப் பரிணமிக்கும் என்பதை எதிர்பார்க்கின்றோம்.

Unknown said...

அருமையான தொடர் நபிகளாரின் நீதி போதனை சஹாபியின் பாவத்திற்கு பரிகாரம் ஆச்சு ! பசியின் பிடியிலிருந்து விடுதலையும் ஆச்சு !! எளிமையான நடையில் புரிகின்ற வார்த்தைகளில் தொகுத்துள்ளது அருமையிலும் அருமை குறிப்புகளும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது. கவிஞர்களின் பின்னுட்டம் தொடரின் பணிக்கு துணை சேர்க்கிறது

Iqbal M. Salih said...

பின்னூட்டத்தில் கருத்திட்ட தம்பிகள் தஸ்தகீர், சாவண்ணா, அதிரை சித்தீக், யாசிர், அபுஇப்றாஹீம், தாஜுதீன், இம்ரான் கரீம் ஆகியோருக்கும் அன்பிற்கினிய சகோ.அபுல்கலாம், டாக்டர் இ.அ.அவர்களுக்கும் நண்பன் சபீருக்கும் நன்றிகள்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு