Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

"இங்கு எதுவும் முடியும் - என் இந்தியா" 8

அதிரைநிருபர் பதிப்பகம் | December 08, 2013 | , , ,


We live in a nation

(நாம் ஒரு நாட்டில் வசிக்கிறோம்)

Where Pizza reaches home faster than Ambulance police

(அவசர கால ஊர்தி உரிய நேரத்திற்குள் வரும் முன், ஆர்டர் செய்த பிஜ்ஜாவோ உடனே வந்து சேர்கிறது)

Where you get car loan @ 5% and education loan @ 12%

(சொகுசு கார் வாங்க வங்கிகள் வரிந்து கட்டிக் கொண்டு மிகக் குறைந்த சதவிகிதத்தில் (5%) வட்டி கொடுத்து பணக்கார வறியவர்களுக்கு உதவுகின்றன. ஆனால் பாமரன் மேற்படிப்பு படிக்க ஆசைப்பட்டால் அதிக வட்டி (12%) விகிதத்தில் படிப்புக் கடன் கொடுத்துதவி தன் தலையாய பணி செய்து வருகின்றன)

Where rice is Rs 40/- per kg but sim card is free.

(அத்தியாவசிய உணவு அரிசியின் விலையோ கிலோ 40 ரூபாய் மட்டும் தான். ஆனால் ஆடம்பர மொபைல் போனின் சிம்கார்டுகளோ இலவசமாய் வழங்கப்படுகிறது நம் தாய்த்திரு நாட்டில்)

Where a millionaire can buy a cricket team instead of donating the money to any charity

(பண வெள்ளத்தில் மூழ்கிக்கிடக்கும் பண முதலைகளோ கோடிகள் பல கொடுத்து ஒரு கிரிக்கெட் அணியை எளிதில் வாங்கி விட முடியும் எவ்வித அறக்கட்டளைகளுக்கும் தானமேதும் அளிக்காமல்)

Where the footwear, we wear, are sold in AC showrooms, but vegetables, that we eat, are sold on the footpath, 

(குளு,குளு அரையில் அன்பான அரவணைப்பில் விற்கப்படும் காலணிகள் பல விதம். அன்றாடம் உண்டு வாழ தேவையான காய்,கனிகளோ தெரு ஓர பாதசாரிகளின் இடத்தில் விற்கப்படும்)

Where everybody wants to be famous but nobody wants to follow the path to be famous

(எல்லோருக்கும் வாழ்வின் உச்சநிலையை எளிதில் அடைய வேண்டும். பத்திரிக்கைகளாலும், ஊடகங்களாலும் தன் பெயர் ஊடுருவிச்செல்ல வேண்டும் ஆனால் அதற்கு காரணமான வழிகளைப்பின்பற்றாமல்)

Where we make lemon juices with artificial flavors and dish wash liquids with real lemon. 

(எலுமிச்சை பழரசம் கூட செயற்கையில் தயாராகி விடும் எளிதில் அத்தனை பிஸி. ஆனால் பாத்திரம் தோய்க்கும் சோப்பில் கூட நிஜ எலுமிச்சை சேர்க்கப்படும் வாடிக்கையாளர்களைக் கவர)

Where people are standing at tea stalls reading an article about child labor from a newspaper and say, "yaar bachhonse kaam karvane wale ko to phansi par chadha dena chahiye" and then they shout "Oye chhotu 2 chaii laao....." 

(மக்கள் சாலையோர டீக்கடையில் கையில் செய்தித்தாளின் ஒரு கண்ணோட்டத்துடன் "சிறுவர்களை பணியில் அமர்த்துபவர்களை கடுமையாக தண்டித்து அவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்" என்று கோபத்துடன் கூறியவனாய் "டேய் பொடியா சீக்கிரம் ரெண்டு டீக்கொண்டு வா இங்கு" என்று கட்டளை இடுபவர்கள் பல கோடி காண இயலும் என் தாய்த்திரு நாட்டில்).

வல்லரசுகள் என்று கூக்குரலிடும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் எவ்வித்திலும் போட்டி போட முடியுமா எந்நாட்டுடன்?

Incredible !!!!!!!!


எனக்கு வந்த ஒரு ஆங்கில மின்னஞ்சலின் ஆங்கில மொழி பெயர்ப்புடன் இங்கு உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

மு.செ.மு.நெய்னா முஹம்மது
சவுதியிலிரு(ந்)க்கும்போது எழுதியது :) 2010 ஜூன் மாதம் அதிரைநிருபரில் வெளிவந்தது.

எம்.எஸ்.எம்.நெய்னா முஹம்மதை மனது தேட ஆரம்பித்தால் அவரது பதிவுகளை அசைபோடத் தூண்டும் அவரது சிந்தனையும் எழுத்துக்களும் !

8 Responses So Far:

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மலரும் நினைவுகளாய் என்னுடைய பழைய கட்டுரையை இங்கு பதிந்த அதிரை நிருபருக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

இதையும் சேத்துக்கிடுங்க.

நாட்டின் ஒட்டு மொத்த கூட்டு மனசாட்சி சிறுபான்மை சமூகத்தின் மேல் மட்டும் சீரும் சிறப்பாக சுறுசுறுப்புடன் செங்கோல் செலுத்தும்.

காஞ்சி மடத்து அவாள்கள் கத்தி எடுத்து ஒருவரை குத்திக்கொன்றாலும் அது சும்மா தமாசுக்கு என்று சொல்லி நீதியரசர் வீட்டிலேயே சிகப்பு கம்பளம் விரித்து பெரும் விருந்து வைக்கும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஆதார் அடையாள அட்டைக்கு ஆர்வம் காட்டும் அரசு அத்தியாவசிய கல்விக்கு அந்தளவுக்கு ஆர்வம் கட்டவில்லை.

டாஸ்மாக் மதுக்கடைகளை ஆங்காங்கே திறந்த மாநில அரசு அதன் வருவாயில் மது அடிமைகள் மறுவாழ்வு மையம் அமைத்து நாட்டு மக்களுக்கு தலையாய கடமையை செய்ய தவறுவதில்லை.

மாநிலத்தில் உயர்நிலை பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 2500 மட்டுமே. டாஸ்மாக் சாராயக்கடைகளின் எண்ணிக்கையோடு 6500க்கும் மேல்.

உலக பகுத்தறிவாளர்கள் மாநாடு நடத்த நல்ல நாள், நல்ல நேரம் பார்க்கும் நாசூக்கான நல்ல நாடு இது.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சாதாரண மனிதன் வங்கியில் ஒரு கணக்கு துவங்குவது அவ்வளவு எளிதான காரியமில்லை.

அனால் பெரும் பணி முதலைகள், அரசியல் ஊழல்வாதிகள். பல் லட்சங்கள் சுவிஸ் வங்கியில் பதுக்குவது இங்கு எளிது.

Ebrahim Ansari said...

//உலக பகுத்தறிவாளர்கள் மாநாடு நடத்த நல்ல நாள், நல்ல நேரம் பார்க்கும் நாசூக்கான நல்ல நாடு இது.//

மங்கல்யான் விண்கலத்தின் மாதிரியை, அது ஏவப்படுவதற்கு முதல்நாள் திருப்பதியில் வைத்து பூஜை செய்தநாடும் இதுதான்.

ஒரு ஏழை விவசாயி வங்கியில் வாங்கிய கடனை அடைக்க முடியாவிட்டால் அவனது மாட்டை ஜப்தி செய்யும் நாடு , பொதுத் துறை வங்கிகளில் ஏழாயிரம் கோடி கடனை வாங்கி ஏப்பம் விட்ட விஜய் மல்லையாவி ஐ பி எல் பாரு என்று விட்டு வைத்து இருக்கிறது.

نتائج الاعداية بسوريا said...

இந்தியாவில் தெரிந்ததுதானே ,

எதுவுமே ஆடம்பரம் முன்னுக்கு,
அத்தியாவசியம் பின்னுக்கு.

பணம் முன்னுக்கு,
இன்றி பரிதவிப்பவன் பின்னுக்கு

ஊழல் முன்னுக்கு
நியாயம் பின்னுக்கு

ஊதாரித்தனம் முன்னுக்கு
சிக்கனம் பின்னுக்கு

வளமானவன் முன்னுக்கு
வறியவன் பின்னுக்கு

அவசியமற்றது முன்னுக்கு
அடிப்படை தேவை பின்னுக்கு

இந்திய நாடு என் வீடு, இந்தியன் என்பது என் பேறு
மேலே உள்ளது என் ஊரு.
இதுதான் தலைவிதி என பாடு.

அபு ஆசிப்.

sabeer.abushahruk said...

எல்லாம் உல்ட்டாவா இருக்கிறது நமக்கே தெரிகிறதே நம்ம அரசாங்கத்துக்குத் தெரியாதா?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்ல வேளை ஏற்கனவே ஆங்கிலத்தில் வந்ததை தமிழ்ப்படுத்தி விட்டு மீண்டும் ஆங்கிலப்படுத்தாமல் தமிழ் கமென்டில் வந்ததை மன்சூராக்கா, ஹமீதாக்கா சார்பில் வரவேற்கிறேன்.

நம் நாட்டு நிலமை இப்படி தலகீழாயிருக்கு
பாரம்பரியாமாய் ஆள்பவர்களின் நிலையே இப்படியென்றால் பொய்யாலே வஞ்சித்து ஆள துடிப்பவர்கள் வந்தால் என்னாகுமோ!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு