Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

என் இதயத்தில் இறைத்தூதர் - 4 [பெண்ணே, இனிய மார்க்கம் தேடி வாராயோ] 2

அதிரைநிருபர் பதிப்பகம் | March 23, 2014 | , , , ,

பெண்களுக்கெதிரான வன்முறைகள் இந்தியாவிலும், ஏனைய நாடுகளிலும் தலை விரித்தாடி வருவதை நாம் அறிவோம். 'வன் செயலர்களின் தலைநகர் டெல்லி' என அழைக்கப்படும் அளவுக்கு நம் இந்தியாவின் பெயர் உலகளவில் அறியப்பட்டு வருகிறது.

இதனைக் களைய 'இஸ்லாத்தின் தீர்வை' அமல்படுத்துங்கள் என்றால் கேட்பவர் இல்லை, இஸ்லாம் சொல்லும் தீர்வை அமுல் படுத்தினால், இஸ்லாம் வளர்ந்து விடும், பிற மதங்கள் காணாமல் போய்விடும் என்ற பயம்தான் இதற்கெல்லாம் காரணம். "நான் நாசமாகத்தான் போவேன், என்ன பந்தயம் " என்று சொல்லாமல், சொல்கிறார்கள். ஆனால், இவைகளால், நாள்தோறும் பெண்கள்தான் அவல நிலைகளுக்கு ஆட்பட்டு அழிக்கப்படுகிறார்கள். இதைக் கண்டுகொள்வோர் யாருமில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இறுதி உரை உலகப் பிரசித்துப் பெற்றது என்பதை நாம் அறிவோம். அந்த உரை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை. ஒவ்வொரு நட்டினதும் constitution ஆக வைக்கப்பட மிக மிக தகுதியுள்ளவை எனில் அது மிகையில்லை !

பெருமகனார் கூறுகிறார்கள் "மக்களே! பெண்கள் குறித்து, அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்ளது. உங்கள் மீதும் உங்கள் மனைவியருக்கு உரிமை உள்ளது. அவர்கள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப் பட்ட அமானிதம் ஆவர்...!"

“பெண்கள், ஆண்களுக்கு வழங்கப்பட்ட அமானிதம், அதைப் பேனுதலாக பாதுகாப்பது ஆண்களின் கடமை என்றும், பரஸ்பரம் இருவருக்கும் உரிமைகள் உள்ளன” என்றும் அண்ணலார் அவர்கள்  பறை சாற்றுகிறார்கள்.

இதே போன்ற அறிவிப்பை, நடைமுறையை எங்காவது, எந்த மதத்திலாவது காண இயலுமா ? இன்னும் பிற மதங்களில் பெண்களை தாசியாக நடைமுறைப் படுத்தியுள்ளன, அவர்களுக்கு சொத்துரிமையும் கிடையாது என்று சொல்லும் மனுதர்ம சூத்திரங்களை வைத்துக் கொண்டு - பெண்களை சுரண்டிக் கொண்டிருக்கும் சாமியார்கள், பாதிரியார்கள், முனிவர்கள் பதில் சொல்ல முடியுமா?

மதத்தின் விஷக் கருத்துகளை, மனுதர்ம சூத்திரங்களை வைத்து, மனிதரிடையே பாகுபாடு காட்டும் உயர்ந்த- தாழ்ந்த சாதிக் கருத்துகளை வைத்து, பிராமணன் என்றும் சூத்திரன் என்றும் கூறுபோட்டு, இன்னும் அவர்களை அடிமைகளாய் நடத்தும் சாதி இந்துக்கள் திருந்தவில்லையே ! இப்படி இந்தியா முழுக்க பல்லாயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் படும் அல்லல்களை சொல்லில் வடிக்க இயலாது.

"இறைவன் உங்கள் உருவங்களையோ, செல்வங்களையோ பார்ப்பதில்லை, மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களைத்தான் பார்க்கின்றான்" என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அருளியுள்ளார்கள். - அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி), நூல் : முஸ்லிம்.

மனிதனுக்கு பல நிறத்தோல்கள் இருக்கலாம். பல நிலைகள் இருக்கலாம். ஏழையாக, பணக்காரனாக, படித்தவனாக, படிக்காதவனாக இப்படி இருக்கலாம். ஆனால், இவைகளால் அவன் சிறந்தவன், மற்றவன் தாழ்ந்தவன் அல்ல ! சிலர் உசத்தி சிலர் தாழ்த்தி அல்ல. அவரவரின் இறை அச்சமும், செயல்களும்தான் மனிதனை நல்லவனாகவும் உயர் பண்புள்ளவனாகவும் தீர்மானிக்கின்றன.

இப்படி ஒருவன் வாழத் தேவையான, நடைமுறைப்படுத்த இலகுவான, சரியான ஒரு திட்டத்தைதான் நபிகள் நாயகம் அவர்கள் சொல்லியும், செயல் படுத்தியும் காட்டிச் சென்றுள்ளார்கள்.

நமக்கு வழைப்பழமும் கொடுத்து, உரித்தும் தந்து அதனைச் சாப்பிடு என்று கையிலும் தந்தாகி விட்டது, இஸ்லாம் என்ற பெயரில். அதை அப்படியே  மென்று விழுங்க வேண்டியதுதான் மீதிவேலை. சாப்பிட்டால் உனக்கு, எனக்கு,எல்லாருக்கும் நல்லது, உடனடி சக்தியுடன் போஷாக்கு கிடைக்கும்.

இல்லை, இல்லை எனக்கு வாழைப் பழமெல்லம் வேண்டாம், அரளி விதையே போதும் என்று சொன்னால் சாவு, இப்படி தேர்ந்தெடுத்தவர்களைப் பார்த்து அதனால் வந்து விடப் போகின்றது? அப்படிதான் என்ன வேண்டியுள்ளது.

பிறமத புராணங்களும், வேதநூல்களிலும் ஏனைய மத புழுகுகளும் பெண்களை அடிமையாக்குகின்றன, மனிதர்களிடம் பாகுபாட்டை போதிக்கின்றது. கெட்ட வழிமுறைகளை புராணங்கள். இதிகாசங்கள் என்ற பெயரால் போதிக்கின்றனர். இதனால், இந்த உலகத்திலும் இழிவு.  அம் மறுமையிலும் இழிவு என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஒன்றுக்கும் உதவாத, நடைமுறை சாத்தியமற்ற போலிச் சடங்குகள். சம்பிரதாயங்கள். சட்டங்கள் வேண்டுமா ? அல்லது சாத்தியமானதும். நடைமுறைக்கும் ஏற்ற சத்திய இஸ்லாம் வேண்டுமா ? என்பதை மாற்றுமத நண்பர்களே,சகோதரிகளே, சிந்தித்துப் பாருங்கள்.

இஸ்லாத்தின் வேதம் திருக்குர்ஆன் சொல்கிறது, "உன்னையும் என்னையும் முதல் மனிதர் ஆதம் (அலை) மற்றும் அவர் மனைவி ஹவ்வா (அலை) இவர்கள் மூலமாக, இறைவன் படைத்தான்" என்கிறது.

ஆனால், பிறமத வேத புத்தகங்களிலோ, வர்ணங்கள் மூலமாக, தலை வயிறு கால் என்று சொல்லி தலித் மக்களை தள்ளி வைக்கிறது. இதுவா வேதம் ?

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறுகிறார்கள் "மனைவியிடம் நல்லவரே, உங்களில் நல்லவர் (முஹம்மதாகிய) நான் என் மனைவிமார்களுக்கு நல்லவனாக இருக்கிறேன் - ஆதாரம் : திர்மிதி

பெண்கள் மேல் தனிக் கவனம் செலுத்தி அவர்களை பல வகைகளிலும். கண்ணியப்படுத்தி உயர்ந்த நிலையில் அவர்களை வைத்து அழகு பார்க்கும் இஸ்லாத்தைப் பற்றி பிற மத சகோதர / சகோதரிகள் ஏனோ அதைப் படித்து, உணர்ந்து ருசித்து பருக வருவதில்லை. தூரத்தில் நின்று கொண்டு, காவிக் கூட்டங்களின் பொய்ப் பிரச்சாரத்தால் கல்லெறிகிறார்கள். ஆனால், அந்தோ பரிதாபம்! அந்தக் கல்லடியில் முஸ்லீம்கள் காயப் படலாம் கண் மூடலாம். ஆனால், இஸ்லாம் காயப்படாது, கண் துஞ்சாது ! நாளை மறுமையில் இன்று இழந்தவைகளை இன்ஷா அல்லாஹ் சேர்த்தே பெற்றுக் கொள்வோம்.

ஆனால் உங்களின் நிலையோ "(ஏக இறைவனை) மறுப்போர் அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை) தடுப்பதற்காக தமது செல்வங்களை செலவிடுகின்றனர். இனியும் செலவிடுவர். அதுவே, அவர்களுக்கு கைசேதமாக அமையும். பின்னர், தோல்வியடைவார்கள் (ஏக இறைவனை) மறுத்தோர், நரகத்தை நோக்கி ஒன்று திரட்டப்படுவார்கள்" - திருக்குர்ஆன் என்ற திருக் குரானின் போதனையை எண்ணிப் பாருங்கள்.

ஆக! எனதருமை பிற சமுதாய மக்களே சீர்தூக்கிப் பாருங்கள் ! இன்றே விழித்துக் கொள்ளுங்கள்! எப்போதும் விடிந்து கொண்டிருக்காது. "அந்த நாள்" வருவதற்குள் அரளி விதைகளை ஒதுக்கி வைத்து விட்டு வாழைப்பழம் உண்ண வாருங்கள்! புது சக்தி பெற்றுக் கொள்ளுங்கள் உங்களுக்கே புண்ணியமாகப் போகும்.
தொடரும் (இன்ஷா அல்லாஹ்)...!
இப்னு அப்துல் ரஜாக்

2 Responses So Far:

sabeer.abushahruk said...

//ஒருவன் வாழத் தேவையான, நடைமுறைப்படுத்த இலகுவான, சரியான ஒரு திட்டத்தைதான் நபிகள் நாயகம் அவர்கள் சொல்லியும், செயல் படுத்தியும் காட்டிச் சென்றுள்ளார்கள்.//

உண்மை!

இப்னு அப்துல் ரஜாக் said...

//ஒருவன் வாழத் தேவையான, நடைமுறைப்படுத்த இலகுவான, சரியான ஒரு திட்டத்தைதான் நபிகள் நாயகம் அவர்கள் சொல்லியும், செயல் படுத்தியும் காட்டிச் சென்றுள்ளார்கள்.//

//உண்மை!//

காக்கா,உங்களுக்கு தெரியுது.அவாளுக்கு புரியலய.
உங்கள் நச் வரிகளில் சொன்னால்,

மடமை என்று தெரிந்தும்
விழுகிறார்கள்
கடமை என்று
சிரம் பணிகிறார்கள்
இறைவன் ஒருவன் இருக்க
எதையோ வணங்குகிறார்கள்
இறுதியில் -
பொய்யை விதைத்து
மடிகிறார்கள்!
முடிவில்
நன்மை எல்லாம்
இழக்கிறார்கள்.






உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு