Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 061 3

அதிரைநிருபர் பதிப்பகம் | November 18, 2016 | , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

அஸரின் சுன்னத்

''அஸருக்கு முன் நான்கு ரக்அத் தொழும் மனிதருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக என நபி(ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (அபூதாவூது, திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1120)

''நபி(ஸல்) அவர்கள் அஸருக்கு முன் இரண்டு ரக்அத் தொழுவார்கள்.(அறிவிப்பவர்: அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1121)

மஃஹ்ரிபுக்கு முன் - பின் சுன்னத்

''மஃஹரிபுக்கு முன் (சுன்னத்) தொழுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் மூன்று தடவை கூறிவிட்டு ''விரும்பியவருக்கு (அனுமதி)'' என்று கூறினார்கள்(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு முஃஹப்பல் (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1122)

ஜும்ஆவின் சுன்னத்

''உங்களில் ஒருவர் ஜும்ஆவை தொழுதுவிட்டால், அதன்பின் நான்கு ரக்அத்தை தொழட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்)  (ரியாளுஸ்ஸாலிஹீன்:1126)

வீட்டில் நபில் தொழுகைகளை தொழுவது

''மனிதர்களே! உங்கள் வீடுகளில் தொழுங்கள். நிச்சயமாக தொழுகையில் மிகச் சிறந்தது, ஒருவர் கடமையான தொழுகையைத் தவிர, தன் வீட்டில் தொழும் தொழுகைதான் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்கள்  (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1128)

''வீடுகளிலும் உங்கள் தொழுகைகளை வைத்துக் கொள்ளுங்கள். அவற்றை கப்ருகளாக (மண்ணறைகளாக) ஆக்கிவிடாதீர்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1129)

''ஒருவர் தொழுகையைத் தன் பள்ளிவாசலில் நிறைவேற்றி விட்டால், தொழுகையின் ஒரு பகுதியை தன் வீட்டிலும் தொழுது கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ், அவரின் வீட்டில் அவரது தொழுகையின் காரணமாக நல்லதை ஏற்படுத்துகிறான்'' என்று நபி (ஸல்) கூறினார்கள் (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1130)

வித்ருத் தொழுகை

''வித்ருத் தொழுகை, கடமையான தொழுகை போல் கட்டாயமானதல்ல! எனினும் நபி(ஸல்) அவர்கள் அதை முறையாக்கினார்கள். மேலும் ''நிச்சயமாக அல்லாஹ் ஒருவன். அவன் ஒற்றைப்படையை (வித்ரை) விரும்புவான். எனவே குர்ஆனைப் பெற்றவர்களே! நீங்கள் வித்ருத் தொழுங்கள்'' என்று  கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்கள் (அபூதாவூது, திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1132)

''ஒவ்வொரு இரவிலும் நபி(ஸல்) அவர்கள் வித்ருத் தொழுவார்கள். (சில சமயம்) இரவின் ஆரம்பித்திலும், நடு இரவிலும், இரவின் இறுதியிலும் தொழுவார்கள். அவர்களின் வித்ருத் தொழுகை ஸஹர் நேரத்தில் முடியும். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1133)

''உங்கள் இரவுத் தொழுகையில் இறுதியாக வித்ரை ஏற்படுத்துங்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள் (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்)  (ரியாளுஸ்ஸாலிஹீன்:1134)

''நீங்கள் சுப்ஹுநேரம் வரும் முன் வித்ருத் தொழுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)அவர்கள் (முஸ்லிம்)  (ரியாளுஸ்ஸாலிஹீன்:1135)

''இரவின் கடைசியில் எழாமல் இருப்பதை ஒருவர் பயந்தால், அவர் இரவின் ஆரம்பத்திலேயே வித்ருத் தொழட்டும். இரவின் இறுதியில் எழுந்திடுவதை ஆசைப்பட்டவர் இரவின் இறுதியில்  வித்ருத் தொழட்டும். இரவின் இறுதியில் தொழுவது, (மலக்குகளால்) சாட்சி கூறப்படத்தக்கதாகும். மேலும் அதுவே மிகச் சிறந்தது   என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1138)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
(முஹம்மதே) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! (அல்குர்ஆன்:96:1)

அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான். (அல்குர்ஆன்:96:2)

ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன். (அல்குர்ஆன்:96:3)

அவனே எழுது கோலால் கற்றுத் தந்தான்(அல்குர்ஆன்:96:4)

அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான் (அல்குர்ஆன்:96:5)

அவ்வாறில்லை! தன்னைத் தேவையற்றவன் எனக் கருதியதால் மனிதன் வரம்பு மீறுகிறான். (அல்குர்ஆன்:96:6,7)

உமது இறைவனிடமே திரும்பிச் செல்லுதல் உண்டு. (அல்குர்ஆன்:96:8)

தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா? (அல்குர்ஆன்:96:9,10)

அவர் நேர் வழியில் இருப்பதையே, அல்லது இறையச்சத்தை ஏவுவதையே அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா? (அல்குர்ஆன்:96:11,12,13)

அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? (அல்குர்ஆன்:96:14)

அவ்வாறில்லை அவன் விலகிக் கொள்ளவில்லையானால் முன் நெற்றியைப் பிடிப்போம். (அல்குர்ஆன்:96:15)

அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி. (அல்குர்ஆன்:96:16)

அவன் தனது சபையோரை அழைக்கட்டும். (அல்குர்ஆன்:96:17)

நாம் நரகின் காவலர்களை அழைப்போம். (அல்குர்ஆன்:96:18)

எனவே, அவனுக்குக் கட்டுப்படாதீர்! ஸஜ்தாச் செய்வீராக! நெருங்குவீராக! (அல்குர்ஆன்:96:19)
(அல்குர்ஆன் : 96:1-19 அல் அலக்-கருவுற்ற சினைமுட்டை)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . 

காலத்தின் மீது சத்தியமாக! (அல்குர்ஆன்: 103:1)

நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்.
(அல்குர்ஆன்: 103:2)

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர. (அல்குர்ஆன்:103:3 அல் அஸ்ர் காலம்)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள்''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...

அலாவுதீன் S.

3 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா !

அப்படியே மனதில் பேஸ்ட்டாகிக் கொண்டது !

sabeer.abushahruk said...

நன்றி, அலாவுதீன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு