Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் – தொடர் - 37 3

அதிரைநிருபர் பதிப்பகம் | May 28, 2014 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
முந்தைய பதிவில் பொறுமை மற்றும் அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாக கண்மணி நபி(ஸல்) அவர்களும், உன்னத நபித்தோழர்களும் சோதனைகளை எதிர்கொண்டு வாழ்ந்த சம்பவங்கள் சிலவற்றை நினைவுறுத்தி, நாமும் பொறுமையோடு அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாக வாழ வேண்டும் என்பதை அறிந்துக் கொண்டோம். இந்த வாரம் இஸ்லாமிய வரலாற்றில் நபி(ஸல்) அவர்களும் ஸஹாப்பாக்களும் எத்தஹைய பணிவோடு வாழ்ந்தார்கள் என்பதை காணலாம்.

இந்த உலகில் பாவங்கள் நடைபெறுவதற்கு காரணமாக இருப்பது முன்று விசயங்கள். 1) பெருமை 2) பேராசை 3) பொறாமை. இம்மூன்றுமே இவ்வுலகம் படைக்கப்பட்ட பின்னர் நம்முடைய வம்சத்தின் தந்தை ஆதம் (அலை) அவர்கள் இவ்வுலகில் வந்தவுடன் ஆரம்பமானது.

அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களுக்கு சுஜூது செய்யச் சொல்லி நெருப்பினால் படைக்கப்பட்ட இப்லீஸுக்கு கட்டளையிட்டான். ஆனால் இப்லீஸ் “நான் நெருப்பால் படைக்கப்பட்டவன், நான் மண்ணால் படைக்கப்பட்ட மனிதனுக்கு சிரம்பணிய மாட்டேன்” என்று சொன்னது முதல் பெருமைத்தனம்.

தந்தை ஆதம்(அலை) அவர்களுக்கும் அன்னை ஹவ்வா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் ஓர் கட்டளையிட்டா “ஒரு மரத்தில் இருக்கும் கனியை உண்ணக்கூடாது என்று”. ஆனால் இப்லீஸின் தூண்டுதலில் மற்றும் சூழ்ச்சியால் அவ்விருவரும் அல்லாஹ் தடை செய்த காரியத்தை செய்யத்தூண்டியது பேராசைத்தனம்

நம் தந்தை ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளில் சிலர் அழகான பெண்களை திருமணம் செய்து கொள்வதற்காக, சைத்தானுடைய தூண்டுதலால் ஒருவரை ஒருவர் கொன்றுக் கொண்டது. பொறாமைத்தனம்.

இன்றும் நாம் பார்க்கலாம் உலகில் நடைபெறும் எந்த ஓர் பாவமாக அல்லது குற்றமாக இருந்தாலும் பெரும்பாலும் இந்த மூன்று கெட்ட குணங்களில் அடங்கிவிடும். ஆனால் இன்று இவைகளுக்கு நேர் எதிரான ஒரே ஒரு தன்மை என்னவென்றால் அது தான் “பணிவு”. இந்த பணிவு பற்றி அருமை நாயகம் முஹம்மது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்வை கொஞ்சம் திறந்துப் பார்த்தால், சுப்ஹானல்லாஹ் எவ்வளவு பணிவு, எவ்வளவு தன்னடக்கம், எவ்வளவு மென்மையான அடக்கமான குணம். எவ்வளவு குழந்தைத்தனமான புன்னகை கொண்ட அழகிய முகம் கொண்ட உயிரினும் மேலான நபி(ஸல்) அவர்களின் தன்மைகளை வார்த்தைகளால் சொன்னால் நிச்சயம் கண்ணீர் அருவி போல் கொட்டும். அல்லாஹு அக்பர்.

நம்முடைய உத்தம நபி(ஸல்) அவர்களுக்கு இவ்வுலகில் கிடைத்தது, வேறு எந்த மனிதனுக்கும் இனி கிடைக்காத பதவி அந்தஸ்த்தை அல்லாஹ் கொடுத்தான். அல்லாஹ்வின் இறுதித் தூதர் என்ற அந்தஸ்து, இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைசிறந்த தலைவர் என்ற அந்தஸ்து, மறுமை நாளில் இவ்வுலகிற்கு வந்த நபிமார்களே ஒன்றும் பேச முடியாத நிலையில் நபி(ஸல்) அவர்கள் மட்டும் அல்லாஹ்விடம் முழு உம்மத்திற்காக சிபாரிசு செய்யப்போகும் இறைத்தூதர் என்ற அந்தஸ்து. இப்படியான உயரிய அந்தஸ்துக்கு சொந்தக்காரரான, நம் அருமை நபி(ஸல்) அவர்களிடம் இருந்த பணிவு தன்மையை நாம் ஒவ்வொரு வினாடியும் நினைவுகூர்ந்து நம்மை நாம் செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். காரணம் நம்மிடம் பெருளாதார ரீதியான வளமோ, பதவி அந்தஸ்து என்று சமூக அங்கீகாரமோ கிடைத்தால் வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பது போல் உணர்ந்து பெருமையின் உச்சநிலைக்கு சென்று பணிவற்றவர்களாக வாழ்கிறோம். இதோ அண்ணல் நபி(ஸல்) அவர்களின் ஒரு சில உருக்கமான வரலாற்று சம்பவங்கள்.

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் இருக்கும் சபைக்கு ஓர் மனிதர் வருகிறார். நபி(ஸல்) அவர்களை பார்த்தவுடன் தன் இரு கைகளையும் கட்டிக்கொண்டு அவரின் தோல் புஜம் நடுங்கிய நிலையில் பயத்துடன் காணப்பட்டார். இதனை கண்ட நபி(ஸல்) அவர்கள் அந்த மனிதனை பார்த்து. “ ஏன் பயப்படுகிறீர், என்னைக் கண்டு நீங்கள் பயப்படக்கூடாது, நான் யார் தெரியுமா?, இந்த மக்கா நகரத்தில் ஆமீனா என்ற பெண்மணிக்கு மகனாக பிறந்து, ஒர் அனாதையாக வாழ்ந்து, காய்ந்த ரொட்டி துண்டுகளை தின்று வளர்ந்தவன் தான் நான். நீ நடுங்க வேண்டாம்.” என்று அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய பணிவை தன்னைக் கண்டு பயந்த ஓர் சாதாரண மனிதரிடம் அன்பாக காட்டினார்கள். (இந்த ஹதீஸ் இப்னு மாஜாவில் பதிவாகி உள்ளது)

நபி(ஸல்) அவர்கள் தனக்கு அளவுக்கு மீறி பேசியவர்களை அவ்வாறு செய்ய வேண்டாம் என்று பிறருக்கு அறிவுறுத்தி தன்னடக்கத்தின் உதாரணமாக இவ்வுலகில் வாழ்ந்துள்ளார்கள்.

ஆனால் இன்று நம்முடைய நிலை என்ன? என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். என்னை அவர் மதிக்கவில்லை, எனக்கு மரியாதை செய்யவில்லை, எனக்கு சலாம் சொல்லவில்லை, எனக்கு அந்தஸ்து தரவில்லை என்ற வரட்டு கவுரவத்தை தலையில் தூக்கிக்கொண்டு மமதையில் இருக்கிறோமா இல்லையா? 

மற்றுமொரு சம்பவத்தில் கிராமப்புரத்து அரபிகளில் ஒருவர், நபி(ஸல்) அவர்களின் சபைக்கு வந்து அவர்களின் கழுத்துச் சட்டையை உயர தூக்கிப் பிடித்து, அரசாங்கத்தின் சொத்திலிருந்து எனக்கு தர வேண்டும் என்று கோபத்துடன் அடம்பிடித்து கேட்டார். உயிரினும் மேலான ரஹ்மத்துல் ஆலமீன் முஹம்மது (ஸல்) அவர்களை கோபத்துடன் கழுத்துச் சட்டையைப் பிடித்த அந்த காட்டரபியை கடும்கோபத்துடன் சுற்றி இருந்த அந்த சத்தியத் தோழர்கள் அனைவரும் முறைத்தார்கள். இந்த பரப்பரப்பை பார்த்து  “நிறுத்துங்கள், அவருக்கு தேவையான சொத்தை அள்ளிக் கொடுங்கள்” என்று கட்டளையிட்டார்கள் பணிவின் சிகரமான சமாதான தூதுவர் நபி(ஸல்) அவர்கள். இப்படிப்பட்ட அற்புத தலைவரை எங்கள் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் நாம் என்றைக்காவது இது போன்று கோபத்தை தூண்டும் நிகழ்வுகள் நடைபெரும் போது பொறுமைகாத்து பணிவோடு நடக்கிறோமா?

செய்த பாவங்களை அல்லாஹ்விடம் சொல்லி, நான் ஒரு அடியான் என்ற சிரம் தாழ்த்திய பணிவோடு அவனிடம் பாவமன்னிப்பு தேடியவர்களாக நாம் இருக்கிறோமா?

அல்லாஹ்வின் இறுதித் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் பணிவுக்கு மற்றுமொரு உறுக்கமான சம்பவம் முஸ்லீம் ஹதீஸ் தொகுப்பில் பதிவாகியுள்ளது. ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் “யாராவது ஒருவர் எனக்கு ஓர் ஆட்டுக்காலையோ அல்லது ஆட்டு சந்து கறியையோ எனக்கு அன்பளிப்பாக தர ஆசைப்பட்டாலும் நான் பணிவோடு ஏற்றுக் கொள்வேன்.’ என்று தன்னை சுற்றி இருந்த சஹாப்பாக்களிடம் கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களுடைய வாழ்வு அந்த நிலையில் தான் இருந்தது ஒரு ஆட்டுக் காலை 15 நாட்கள் அவித்து வைத்து அவித்து வைத்து சாப்பிட்ட பஞ்சம் நிறைந்த காலத்தில், ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், பசி பட்டினியை அனுபவித்த அந்த நேரத்திலும்கூட பணிவோடு நடந்துக் கொண்டார்கள்.

ஆனால் நாம் ஒருவர் நமக்கு கொடுக்கும் அன்பளிப்புகளில் எத்தனையோ தேவையில்லாத குறைகள் கண்டு நம்முடைய வரட்டு கவுரவத்தை காட்டி அன்பளிப்பு கொடுத்தவரை மனம் நோகும்படி செய்திருக்கிறோமா இல்லையா? நமக்கு கிடைக்கும் திருமண விருந்தாகட்டும், வேறு எந்த ஹலாலான விருந்துகளாகட்டும், அதில் உள்ள குறைகளையே பிறரிடம் சொல்லிக்காட்டி பெரிது படுத்தி மமதையில் விருந்தளித்தவர்களை மனநோகடித்திருக்கிறோமா இல்லையா? இதற்காக பாவமன்னிப்பு தேட வேண்டாமா?

நமக்கு முன் மாதிரி நம் உயிரினும் மேலான நபி(ஸல்) அவர்கள், அவர்களின் பணிவுத்தன்மை நம்மிடம் வர வேண்டும். இது வரை நாம் பணிவற்றவராக இருந்தால், அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்போம், யா அல்லாஹ் எங்களை பணிவுள்ள மனிதர்களாக மாற்றுவாயாக என்று அடிக்கடி து ஆ செய்வோமாக.

யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்..
M.தாஜுதீன்

3 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
இந்த மாமனிதர் ஸல் அவர்கள் உம்மத்தில் நம்மை பிறக்க வைத்ததே நாம் பெற்ற பெரும் பாக்கியம்.அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்


sabeer.abushahruk said...
This comment has been removed by the author.
sabeer.abushahruk said...

சுய மதிப்பீடு செய்து திருத்திக் கொள்ளத் தூண்டும் தொடர், வளர வாழ்த்துகள்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு