Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 75 2

அதிரைநிருபர் பதிப்பகம் | June 27, 2014 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!

ஃதிக்ரின் சிறப்பு:

(நபியே) உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! ( அல்குர்ஆன் : 7:205 )

அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்! ( அல்குர்ஆன் : 62:10 )

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினையுங்கள்! அவனைக் காலையிலும், மாலையிலும் துதியுங்கள்! (அல்குர்ஆன்: 33:41,42 )

''மக்காவாசிகளான ஏழைகள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். ''வசதியானவர்கள் உயர்வான தகுதிகளையும், நிலையான அருட்கொடையையும் பெற்றுக் கொண்டனர். நாங்கள் தொழுவது போலவே அவர்களும் தொழுகிறார்கள். நாங்கள் நோன்பு வைப்பது போலவே அவர்களும் நோன்பு வைக்கிறார்கள். (ஆனால்) அவர்களுக்கு செல்வம் அதிகம் உண்டு. (இதனால்) ஹஜ் செய்கின்றனர். உம்ரா செய்கின்றனர். ஜிஹாத் செய்கின்றனர்.  தர்மம் கொடுக்கின்றனர் (எங்களுக்கு அவ்வாறு முடியவில்லையே?)'' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ''உங்களுக்கு முந்திச் சென்றோரை ஒரு செயல் மூலம் நீங்கள் அடைவீர்கள். உங்களுக்கு பிந்தி விட்டவரை அதன் மூலம் முந்துவீர்கள். மேலும் நீங்கள் செய்வது போல் செய்கின்றவரைத் தவிர வேறு எவரும் உங்களை விடச் சிறந்தவராக ஆக முடியாது. அப்படிப்பட்ட செயலை உங்களுக்கு  கூறட்டுமா?'' என்று கேட்டார்கள். ''இறைத்தூதர் அவர்களே! சரி'' என்றனர். 

''ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் 33 தடவை நீங்கள் தஸ்பீஹ் செய்கிறீர்கள், அல்ஹம்துலில்லாஹ் கூறுகிறீர்கள். அல்லாஹு அக்பர் கூறுகிறீர்களே (அதுதான்)'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.

இதன் அறிவிப்பாளரில் ஒருவரான அபூஸாலிஹ் என்பார், அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், ''அவற்றின் ஃதிக்ரு முறை எப்படி?'' என்று கேட்கப்பட்ட போது, ''சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹுஅக்பர் என்று ஒவ்வொன்றையும் 33 தடவை கூறுவதாகும்'' என்று கூறினார்கள்.   (புகாரி,முஸ்லிம்)

''பிறகு மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம் மக்காவாசிகளான ஏழைகள் வந்தார்கள். ''எங்களின் சகோதரர்களான பணக்காரர்கள் நாங்கள் செய்வது பற்றி கேள்விப்பட்டு, அதுபோலவே செய்கின்றனர்'' என்று கூறினார்கள். ''இது அல்லாஹ்வின் அருட்கொடை தான் விரும்பியோருக்கு அதை அவன் கொடுப்பான்'' என்று நபி(ஸல்) பதில் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1418 )

''ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் 33 தடவை சுப்ஹானல்லாஹ், 33 தடவை அல்ஹம்துலில்லாஹ், 33 தடவை அல்லாஹுஅக்பர் என்று ஒருவர் கூறிவிட்டு, 100வது தடவையாக ''லாயிலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹுலாஷரீகலஹுலஹுல்முல்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலாகுல்லி ஷய்இன் கதீர்'' என்று கூறினால், அவரின் குற்றங்கள் கடல் நுரை அளவுக்கு இருந்தாலும் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1419)

கடமையான தொழுகைக்குப்பின் கூறப்படும் சில சொற்கள் உண்டு. அவற்றை கூறுபவர் நட்டமடைய மாட்டார். அவை 33 தடவை சுப்ஹானல்லாஹ், 33 தடவை அல்ஹம்துலில்லாஹ், 34 தடவை அல்லாஹுஅக்பர்  ஆகியவையாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: கஹ்பு இப்னு உஜ்ரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1420 )

''அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல், ஜுப்னி, வல்புக்லி, வஅஊது பிக மின் அன் உரத்தஇலா அர்ஃதலில் உமுரி, வஅஊஃது பிக மின் ஃபித்னதித்துன்யா, வஅஊதுபிக மின் ஃபித்னதில் கப்ரி'' என்ற இந்த வார்த்தைகளால் நபி(ஸல்) அவர்கள் தொழுகைகளுக்குப் பின் பாதுகாவல் தேடுவார்கள்.

பொருள்:
இறைவா! கோழைத்தனம், கஞ்சத்தனத்தை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். நீண்ட தள்ளாத வயதின் பக்கம் நான் நீடிக்கப்படுவதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். உலக குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். கப்ரின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். (அறிவிப்பவர்: ஸஹ்து இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1421)

''முஆதே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக உன்னை நான் நேசிக்கிறேன். முஆதே! ''அல்லாஹும்ம அஇன்னீ அலா ஃதிக்ரிக, வசுக்ரிக, வஹுஸ்னி இபாததிக்க'' என்று ஒவ்வொரு தொழுகைக்குப் பின் நீ கூறுவதை விட்டு விட வேண்டாம் என உனக்கு உபதேசிக்கிறேன்'' என்று என் கையைப் பிடித்துக் கொண்டு நபி(ஸல்) கூறினார்கள்.

பொருள் : இறைவா! உன்னை நினைவு கூறவும், உனக்கு நன்றி கூறவும், உனக்கு அழகிய முறையில் வணக்கம் புரியவும் எனக்கு உதவி செய்வாயாக!  (அறிவிப்பவர்: முஆத் (ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1422)

''ஒருவர் (இருப்பில்) அத்தஹிய்யாத் ஓதினால் அல்லாஹ்விடம் நான்கை விட்டும் பாதுகாப்பு தேடட்டும். அப்போது ''அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக்க மின் அஃதாபி ஜஹன்னம, வமின் அதாபில் கப்ரி, வமின் ஃபித்னதில் மஹ்யா, வல்மமாதி, வமின் ஷர்ரீ ஃபித்னதில் மஸீஹித் தஜ்ஜாலி'' என்று கூறட்டும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.

பொருள்: இறைவா! நரக வேதனையை விட்டும், கப்ரு வேதனையை விட்டும், வாழ்வு மற்றும் மரணத்தின் குழப்பத்தை விட்டும், மேலும் தஜ்ஜால் குழப்பத்தின் தீமையை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1423 )

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...

அலாவுதீன் S.

2 Responses So Far:

sabeer.abushahruk said...

திக்ரில் கிடைக்கும் மன அமைதியை வேறு எதுவுமே தர முடியாது!

ஜஸாக்கல்லாஹ் க்ஹைர், அலாவுதீன்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

'திக்ர்' என்றாலே... ஜாவியா மட்டும்தான் ஞாபகத்திற்கு வரும் ! அதுவும் கூட்டாக இருந்து கொண்டு செய்வதுதான் என்றே பழகிப் போன சிறுவயது ஞாபகம்...

ஒவ்வொருவரும் எவ்வாறு திக்ர் செய்ய வேண்டும் அதன் அடிப்படைகளையும் அவசியத்தையும் அசலாக பதிக்கும் இந்த பதிவு ஒரு அருமருந்தே !

ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு