Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ரமளான்! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | July 07, 2014 | , ,


திசைகளைத் தொலைத்த
தீன் குலத்தோர்க்கு
களங்கரை விளக்கம் - ரமளான்
ஷைத்தானை விரட்ட
முஸ்லிமுக்கு வேண்டிய
கலன்களை விளக்கும்!

குர்ஆனும் மாநபி(ஸல்)யும்
போதித்தவைக் கொண்டு
புலன்களை அடக்கும் - ரமளான்
படைத்தவன் மகிழ
பலமுறை துதித்தால்
பலன்களைக் கொடுக்கும்

மண்டையில் வெயில் காய்ந்து
தொண்டை வறண்டாலும்
பருகுவதைத் தடுக்கும் - ரமளான்
குடிநீரின் மாண்புதனை
துளிநீரில் நிரப்பிவைத்து
அருந்த பின் கொடுக்கும்

ருசியான உணவே
பசிநேரம் வாய்த்தும்
புசிக்காமல் பழக்கும் - ரமளான்
குடலையும் சுறுக்கி
உடலையும் உருக்கி
வறுமையை உணர்த்தும்

கட்டாய வணக்கங்களை
தட்டாமல் நேரத்தில்
நிறைவேற்றப் பணிக்கும் - ரமளான்
உபரியான தொழுகைகளை
உவப்போடு அர்ப்பணிக்க
உள்ளமெல்லாம் இனிக்கும்

இருக்கின்ற செல்வம்
இல்லாதோர்க்கும் செல்ல
கணக்கு வரையறுக்கும் - ரமளான்
அழுக்குப் பணப்பொதியை
சதவிகிதக் கணக்கிட்டு
அசுத்தக் கறை அகற்றும்

நல்லவற்றைப் பெருக்க
தீமையதைத் தடுக்க
பிரகாச இரவு தரும் - ரமளான்
ஒன்றுக்குப் பலவாக
உளமெல்லாம் பூரிக்க
நன்மைகளை அள்ளித்தரும்

அருள் சுமந்த இரவில்
பொருள் நிறைந்த குர் ஆன்
இறங்கிய நல் மாதம் - ரமளான்
இருள் நீக்கி நெஞ்சில்
ஒளி இலங்கச் செய்ய
வழங்கியதோ இறை வேதம்

பொய்யின்றி புறமின்றி
பிறர் மனம் புண்படாமல்
பேச வலியுறுத்தும் - ரமளான்
நன்மையை ஏவி
தீமையைத் தடுக்க
வழிவகை வகுக்கும்

பசிப்பிணி தாகம்
பாவச்செயல் யாவும்
விலக்கியே விரட்டும் - ரமளான்
பொறுமைக்குப் பரிசாக
பழுதற்று கொண்டாட
பெருநாளைக் கொடுக்கும்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

5 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

எந்தவரிகளைதொடுவதுஎந்தவரிகளைவிடுவதுஎன்றDilemmaவைஉண்டு பண்ணும்அற்புதவரிகள்.//திசைகளைதொலைத்ததீன்குலத்தோர்க்கு கலங்கரைவிளக்கம்....//என்றஅற்ப்புதவரிகள்சொற்பதம்கொண்ட பாராட்டுக்கும் அப்பாற்பட்டது.

Yasir said...

அருமை அருமை காக்கா....மன அழுக்கு நீக்கும் இந்த ரமளானை முழுவதுமாக பயன்படுத்தி ஈமான பலப்படுத்த அல்லாஹ் நம் எல்லாருக்கும் உதவுவானாக...அமீன்

Ebrahim Ansari said...

//அழுக்குப் பணப்பொதியை
சதவிகிதக் கணக்கிட்டு
அசுத்தக் கறை அகற்றும்//

அனைத்துமே பிடித்த வரிகள் ! அவற்றுள் இவை ஈர்த்த வரிகள்.!

தம்பி கவிஞர் சபீர் அவர்களின் முதல் பத்து ரமழானுக்கான பரிசுக் கவிதை. அடுத்த பரிசை அன்புடன் எதிர் பார்க்கிறேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ரமளான் கவிதை,
அழகான விதை !

//திசைகளைத் தொலைத்த
தீன் குலத்தோர்க்கு
களங்கரை விளக்கம் - ரமளான்
//

தனிமனிதனுக்கு மட்டுமல்ல ஊடகங்களுக்கும் தான்...

//பொய்யின்றி புறமின்றி
பிறர் மனம் புண்படாமல்
பேச வலியுறுத்தும் - ரமளான்
//

கவிதைக்கு கருவென்று ஒரே வார்த்தைதான் பேசிக் கொண்டோம், சரசரவென்று கொட்டிருக்கிறது வரிகள் !

சென்ற வருடம் போன்று பிரார்த்தனைக் கவிதையொன்றும் வேண்டுமே !!!

கிடைக்குமா?

இன்ஷா அல்லாஹ் !

Riyaz Ahamed said...

சலாம். மூனு வரிகளில் ரமலானின் பன்புகளை சொல்லி மூவரிகளில் அதற்கு விளக்கம் தருவது அருமையான ஸ்டைல் தான், கருத்துகள் ஆழமானவை

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு