Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மூளைக்கு வேலை 0

அதிரைநிருபர் பதிப்பகம் | October 12, 2014 | , ,

மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் எளிய கணக்குகள். இதோ...

1. பாக்டீரியா தினமும் இரண்டு மடங்காக பல்கிப் பெருகக் கூடியது.

ஒரு கண்ணாடிப்பெட்டியில் ஒரு பாக்டீரியா வைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் நாள் அந்த ஒரு பாக்டீரியா இரண்டாக வளர்ந்திருக்கிறது. மூன்றாம் நாள் இரண்டு நான்காகவும், நான்காம் நாள் எட்டாகவும் பாக்டீரியா வளர்ந்துகொண்டிருக்கிறது. பத்தாம் நாளில் கண்ணாடி பெட்டி முழுவதிலும் பாக்டீரியா நிரம்பி விடுகிறது. அப்படியானால், கண்ணாடிப்பெட்டி பாதிப் பெட்டியாக நிரம்ப எத்தனை நாட்கள் ஆகியிருக்கும்?

2. ஒரு பெரிய மரத்தின் கிளை 12 அடி அளவு, 12 துண்டுகளாக வெட்டப்படுகிறது. மரத்தின் ஒரு துண்டை வெட்ட ஒரு நிமிடம் எடுத்துக்கொண்டால், 12 துண்டுகளையும் வெட்ட எவ்வளவு நிமிடங்கள் ஆகியிருக்கும்?

3. ஒரு விவசாயி கழுதையை ரூ.50க்கும், வெள்ளாட்டை ரூ.40க்கும், செம்மறி ஆட்டை ரூ.25க்கும், பன்றியை ரூ.10க்கும் வாங்கியிருக்கிறார். சராசரியாகப் பார்க்கும்போது அவர் ஒரு விலங்கை ரூ.30க்கு வாங்கியிருக்கிறார் எனில், மொத்தம் எத்தனை விலங்குகளை வாங்கியிருப்பார்?

4. ஒரு பையில் 25 பைசா நாணயங்கள், 50 பைசா நாணயங்கள் மற்றும் ஒரு ரூபா நாணயங்கள் சமமாக மொத்தம் ரூ.700 இருக்கின்றன. அப்படியானால், ஒவ்வொரு நாணயமும் எவ்வளவு இருக்கும்?

5. ராமு சந்தைக்குச் செல்கிறார். சந்தைக்குச் செல்லும் வழியில் எதிரில் ராமுவின் நண்பர் வருகிறார். நண்பருக்கு நான்கு மனைவிகள். ஒவ்வொருவரின் கையிலும் ஒவ்வொரு நாய். ஒவ்வொரு நாய்க்கும் நான்கு குட்டிகள். அப்படியானால், சந்தைக்குச் சென்றது மொத்தம் எத்தனை பேர்?



நன்றி: புதிய தலைமுறை கல்வி வழிகாட்டி புத்தகம்
பகிர்தல்: அதிரை என்.ஷஃபாத்
இது ஒரு மீள்பதிவு

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு