Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சூடு பறக்கும் விவாத ஒப்பந்தம் ! [காணொளி] 17

அதிரைநிருபர் பதிப்பகம் | November 06, 2014 | , , , ,

விவாத ஒப்பந்தம்...!

யார் முதலில் விவாதத்தை எடுத்து வைப்பது ?

நீயா ? நானா ?

என்ன நீயா ? நானா ?

அதாங்க நீயா? நானா ?

என்ன நீயா ? நானா ?

அதேதான் நீயா ? நானா ?

சரி டாஸ் போடனும்... !

என்ன டாஸ் போடனும் ?

ஹா ஹா டாஸ் டாஸ் தெரியாம வந்துட்டாங்க ?

என்ன தெரியாம வந்துட்டாங்க ?

கிரிக்கெட் டாஸ்..

என்ன கிரிக்கெட் டாஸ் ?

கிரிக்கெட்டுன்னா பாமரனுக்கும் தெரியுமே ங்ங்ஙே...?

அதான் என்ன கிரிக்கெட் டாஸ்...!?

இப்போ பாருங்க இந்த காணொளியை...


அதிரை வள்ளல்

17 Responses So Far:

Unknown said...

Assalamu Alaikkum

Dear brothers and sisters,

Let us beware !!!!

Practicing of religion and spirituality is not for fun and there is no place for conflicts and controversies in the name of the religion among the followers of the same religion.

Attacking the dignities of each other of a same religion shows that learned morals and teachings of the religion are in doubt and unclear. There is a tendency of misinterpretation of concepts of the religion and sitting on the wrong path.

Here we observe ego, angry, hatred, revenge, chaos and conflicts, divisions and disaster. Where is the place for peace and harmony if the mind are occupied with full of above mentioned evils?

Even common men of the same religion are confused and mislead by these kind of egotistic religion oriented political dramas. God Almighty is keen observer of all of these trends.

May God Almighty save us from Shaitan

B. Ahamed Ameen from Dubai.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்! டாஸ் மார்க் உலறல் கூட இவ்வளவு உலறலாக இருக்குமா? ஆனால் இந்த காமெடி மாஸ்"""

N.A.Shahul Hameed said...

அஸ்ஸலாமு அலைக்கும்!
போங்கடா நீங்களும் உங்கள் அறிவும்.
மூடர் கூட்டம்.
N.A.Shahul Hameed

ZAKIR HUSSAIN said...

இந்த விவாதத்தை பார்க்கும் வாய்ப்பு [ வீடியோவில் ] கிடைத்தது.

கலீல்ரசூலின் வார்த்தைகளில் மிகுந்த கோபம் தென்பட்டது. சென்னை புதுக்கல்லூரியில் படிக்கும்போது அவரிடம் இந்த அளவு கோபம் இருந்ததில்லை. [ He is my junior by one year in differant department ] அவர் சொல்ல வந்த விசயங்களை வார்த்தைகளில் கடுமை இல்லாமல் சொல்லியிருக்களாம்.

மொத்தத்தில் சகோதரர்களின் விவாதம் சந்தோசத்தை தரவில்லை....கவலையை தந்தது. அடுத்த தலைமுறையை வழிநடத்தும் திறமைமிக்கவர்கள் [ இரண்டு இயக்கமும் ] இவ்வளவு போலாரிட்டியில் இயங்கினால் சமூகம் ??????

தாருத்தவ்ஹீத்...கொடுக்கப்பட்ட நேரத்தை இன்னும் சுருக்கமாக பயன் படுத்தியிருக்களாம்.

Moderator இல்லாததால் விவாதம் இத்தனை நாள் போயிருக்கிறது. ஒரு நல்ல moderator இருந்து இருந்தால் இன்னும் அழகாகவும் சீக்கிரமாகவும் விவாதத்தை முடித்திருக்களாம்.

sabeer.abushahruk said...

காமெடி ட்ராக்கே தூள் கெளப்புதே! மெயின் பிக்ச்சர் எப்டி இருக்கப்போகுதோ?

கிரிக்கெட் டாஸுக்குப் பிறகு யார் பொவ்லிங் பண்ணது யார் பேட்டிங் பண்ணது என்று அறிய ஆவல் பொங்குகிறது.

தியேட்டரில் வெளியிட்டால் கோடிகளை அள்ளலாம்.

கமர்ஷியல் காணொளிகளைவிட கேவலமாக இருக்கிறது இணையத்தில் காணக்கிடைத்துள்ள காணொளிகள்.

அஹ்மத் தீதாத், ஜமால் பதவி , ஜாஹிர் நாயக் போன்றோர் மாற்று மதத்தவருடனான விவாதங்களிலேகூட கண்ணியமாக உரையாடும்போது சகோத்தரத்துவத்தை தலையாய கொள்கைகளில் ஒன்றாக பிரகடனப்படுத்தும் நாம் எவ்வாறு விட்டுக்கொடுக்கிறோம் என்பதற்கு ஆப்பு அடிக்கிறது காணொளிகள்.

நம்மை நாமே கேவலப்படுத்தி அதை உலகெங்கும் பிரகடனப்படுத்தும் விதண்டாவாதங்கள் என்றுதான் ஓயுமோ!

ஸ்ஸபா.....இப்பவே கண்ணக் கட்டுதே.

இப்னு அப்துல் ரஜாக் said...

மொத்தத்தில் சகோதரர்களின் விவாதம் சந்தோசத்தை தரவில்லை....கவலையை தந்தது. அடுத்த தலைமுறையை வழிநடத்தும் திறமைமிக்கவர்கள் [ இரண்டு இயக்கமும் ] இவ்வளவு போலாரிட்டியில் இயங்கினால் சமூகம் ??????

இப்னு அப்துல் ரஜாக் said...

😂 I feel sad
And I request both brothers (tntj and adt) to unite together and spread thawheeth .
United we stand
Divided we fall

Shameed said...

Moderator இருந்து இருந்தால் அந்த Moderator இவர்களுக்கு டாஸ் பற்றி பாடம் நடத்த இன்னும் ஒரு நாள் கூடுதல் ஆகி இருக்கும்

aa said...

சகோதரர் அப்துல் ரஜாக் போன்றோர் ADTக்கும் TNTJக்கும் உள்ள வித்தியாசம் வெறும் இயக்க, நிர்வாக ரீதியிலானது தான் என்று எண்ணினால் அது தவறு. புரிந்து கொள்ளுங்கள் சகோதரரே ததஜவைப் பொறுத்து ADTல் உள்ளோர் அனைவரும் ஷிர்க் வைக்கும் முஷ்ரிக்குகள், காஃபிர்கள்; ஏனெனில் ததஜவால் கி.பி. 2000ம் ஆண்டு வாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட ஷிர்க்கான சூனியம் சம்பந்தமான ஸஹீஹ் ஹதீஸ்களை நம்புகிறார்கள்; 2010ம் ஆண்டு வாக்கில் மன்னடியில் ததஜ உயர்/மேல் நிலைக்குழுவில் கண்டுபிடிக்கப்பட்ட ஷிர்க்கான கந்திருஷ்டியை நம்புகிறார்கள். எனவே அவர்களுக்கிடையே எது தவ்ஹீத், எது ஷிர்க் என்பதிலேயே இன்னும் கருத்து வேறுபாடு உள்ளது.

வெறுமனே ஹத்தம், பாத்திஹா, கூடு, கந்தூரி, மவ்லூது போன்ற வழக்கமான பரலேவிகளின் வழிகேடுகளை எதிர்ப்பது மட்டுமல்ல தவ்ஹீது. அல்லாஹ்வின் வேதத்தையும், அவனுடைய தூதரின் ஸுன்னாவையும் எவ்வித நவீன சிந்தனைகளின் கலப்புமின்றி முன் சென்ற நல்ல தலைமுறையினர் எவ்வாறு விளங்கி செயல்படுத்தினார்களோ அவ்வாறு செயல்படுவது தான் உண்மையான தவ்ஹீத்.

சகோதரர்களே, நன்கு மனதில் பதிய வையுங்கள் “ததஜவின் வழிகேடு சூஃபிகள், பரலேவிகள், கப்றுமுட்டிகளின் வழிகேட்டைக் காட்டிலும் மிக கொடியது”. சூஃபிகள், பரலேவிகளின் நிறுவனர்கள் மரணித்துவிட்டனர்; அவர்களின் வழிகேடுகளும் பல ஆண்டுகளாக மக்களிடம் அறிஞர்களால் (நஜ்தின் இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹாப் தொடங்கி பல நூற்றுக்கணக்கான அறிஞர்களால்) நன்கு எத்தி வைக்கப்பட்டுவிட்டது. ஆனால் ததஜவின் வழிகேடுகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் மக்களிடம் “தவ்ஹீத்” என்ற பெயரிலும், “சீர்திருத்தம்” என்ற பெயரில் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

இவர்களின் ஆய்வுகளும், மறுஆய்வுகளும் ஆண்டுகள்தோறும் வந்து பல நூற்றுக்கணக்கான தமிழ் முஸ்லிம்களை முஷ்ரிக்குகள் என பிரகடனம் செய்கிறது. ஸஹாபாக்கள் உள்ளிட்ட யாருக்கும் தெரியாத ஷிர்க்குகளை இவர்கள் சென்னை மன்னடியில் அமர்ந்து கொண்டு செய்யும் வருடாந்திர ஆய்வுகள் மூலம் கண்டுபிடித்துக் கொண்டுள்ளனர். ‘அதற்கு இது முரண்; இதற்கு அது முரண்’ என்ற பாணியில் பல்வேறு ஹதீஸ்கள் கொத்து கொத்தாக தூக்கிவீசப்படுகிறது. யாரெல்லாம் அவர்களின் ஆய்வுகளை ஏற்கவில்லையோ அவர்களெல்லாம் ததஜவைப் பொறுத்து ”முஷ்ரிக்குகள்; அவர்களுக்கு பின்னால் நின்று தொழக்கூடாது; அவர்களிடம் சம்பந்த உறவு கொள்ளக்கூடாது; அவர்கள் அறுத்த உணவை சப்பிடக்கூடாது; அவர்களுக்காக ஜனாசா தொழுகை வைக்ககூடாது; அவர்களுக்காக பாவ மன்னிப்பு கேட்ககூடாது” என்றெல்லாம் ததஜவினரால் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இவர்களின் ஆய்வுகள் இன்னும் முற்றுப்பெறவில்லை. இன்னும் தொடரத்தான் செய்வார்களாம்.

இவர்களின் இந்த தீய கொள்கைகளிலிருந்தும், உருவாகி வரும் புதிய தீனிலிருந்தும் தமிழ் பேசும் முஸ்லிம்களை குறிப்பாக சத்திய மார்க்கத்தின் தூய கொள்கைகளின் பக்கம் ஈர்க்கப்பட்டு வரும் நமதூர் இளைய தலைமுறையினரை காக்க வேண்டிய பொறுப்பு சத்தியத்தை அறிந்த அனைவருக்கும் உள்ளது.

Abu Easa said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்..

சகோ PJ ஒருகாலத்தில் சத்தியத்தை எடுத்துச் சொன்னார் என்பதற்காக அவரின் இன்றைய நிலைபாட்டை அறியாமல் அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டுவது, இன்றும் அவரை நல்ல தலைவர் என போற்றுவது, அவரோடு ஒற்றுமையை மேற்கொள்ள வேண்டும் என்று கருதுவது எல்லாம் பிரச்சனையின் தீவிரம் அறியாமல் வெறும் உணர்ச்சிகளுக்கு மாத்திரம் இடம் கொடுத்து வெளியிடப்படும் கருத்தாகவே என்னால் எண்ண முடிகிறது.

உதாரனமாக நன்பன் ஒருவன் கோபமாகவே நம் உடம்பில் அடிக்க வந்தாலும் அதை அனுமதிக்கவும் பொறுத்துக்கொள்ளவும் முடியும், அதன் மூலம் அவன் கோபம் தனிந்து நட்பு வளரும் என்பதற்காக. அதே சமயம் நன்பன் விளையாட்டாகவே கண்ணை குத்த வந்தாலும் அதை யாரும் அனுமதிக்க முடியாது. காரனம் அதன் விளைவுகள். இதை புரிந்துகொன்டு TNTJ யின் நடவடிக்கைகளை நோக்கினால் இன் ஷா அல்லாஹ் தெளி பெறலாம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரிக்கெட் டாஸ் பற்றி இவ்வ்வ்வ்வ்வ்வ்ளோ விளக்கம் கொடுக்கிறது...

முன்னறிவிப்பு போல...

பின்னாடி மேட்ச் ஃபிக்சிங் பற்றி வெளியிடனுமே... 'வெளியேறியவர்கள் பற்றி...'

Shafi MI said...

சரியாகச் சொன்ன தஸ்தகீருக்கு ஒரு பாதாம்கீர் பார்சல்ல்ல்… :)

டாஸ்மாக் உலரல்களுக்கு சற்றும் குறைவில்லாத (தம்மை மற்றவரை விட உயர்ந்தவராய் நினைத்துக் கொண்ட) உலறல்கள் அவை!

உலறியவரை விட அவர் பக்கத்திலும் எதிரிலும் இருந்தவர்களின் மீதுதான் கோபம் வருகிறது!

toss க்கான பொருளை தங்களிடமுள்ள தொடுதிரை செல்பேசி inbuilt அகராதியிலிருந்து காட்டி அவருக்கு வாய்ப்பூட்டு போட மறந்து விட்டனரே! (You too ஜமீல்மாமா! iPhone எடுத்துச் செல்லவில்லையா?)

toss - throw (a coin) in to the air in order to make a DECISION between two alternatives, based on which side of the coin faces up when it lands.

இதில் cricket-ஐ காட்ட என்ன அவசியம்!!

[கலீல் தம் கல்லூரி நண்பரென நூ.ஷர்புதீன் சொல்லியிருக்கிறார். ஆனா, 'என்றும் இளமை' ஜாகிரண்ணே (மாஷாஅல்லாஹ்) உங்களுக்கெல்லாம் கலீல் ஜூனியர் என நினைத்ததில்லை!]

யாரப்பா அது (blogspot)அதிரை வள்ளல்! அவங்களுக்கு அவ்ளோ பயமா?!

வழக்கமான பதிவர்களால் முடியவில்லை எனில் இது போன்ற 'பயந்தாங்கொள்ளி' வள்ளல்களின் பதிவு அ.நி-க்கு தேவையா? மற்ற தளங்களில் வந்து கொண்டுதானே இருக்கிறது இவை.

ZAEISA said...

விவாத களம் நடந்த இடம் பவித்ரா கல்யாணமண்டபம் ஏரியா அந்தமாதிரி ஆகையால் உளறல் வருவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை என்று நினைக்கிறேன்.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்தப் பதிவு வெளியீட்டில் எனக்கு மாற்றுக் கருத்துண்டு.
ஒரு மனிதன் தன்னுடைய முட்டாள்தனத்தைத் தானே வெளிப்படுத்துவதற்கும் அதையே பிறர் வெளிப்படுத்துவதற்கும் பல வேறுபாடுகள் உள்ளன.

எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாகத் தன்னை நினைத்துக் கொள்பவர்கள் இவ்வாறு இழிவடைவது புதிதன்று.

விவாதத்தில் தனிநபர் விமரிசனம்/தாக்குதல் என்பதைக் கொள்கையாக வைத்திருக்கும் ததஜவைப் போல் நாமும் ஆகிவிடக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருந்தோம்.

ஒரு சிறிய ஊரில், அதிலுள்ள சிறிய குழுவைப் பற்றி எவ்வளவு முயன்றாலும் இரண்டு நாளுக்குமேல் தனிநபர் தாக்குதலில் காழ்ப்பைக் கொட்ட முடியாது.

தமிழகம் முழுக்க வியாபித்துள்ள வழிகேட்டு இயக்கத்தவரைப் பற்றி விமரிசனம் செய்வதற்கு மாதக் கணக்கில் எம்மிடம் தகவல்கள் இருந்தன; இருக்கின்றன. ஆனால் அவற்றுள் நாங்கள் நுழையவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
"தனது கையாலும் நாவாலும் பிறருக்குத் தொல்லை தராதவனே முஸ்லிம்". அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி), நூல்: புகாரீ 10, 6484

"நம்முடைய தொழுகையைத் தொழுது,
(அதில்) நம்முடைய கிப்லாவை முன்னோக்கி,
நாம் அறுப்பதைப் புசித்து வருகிறவர்தாம் முஸ்லிம்
.
அப்படிப்பட்டவர் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் பொறுப்பில் இருக்கிறார். எனவே அவரின் பொறுப்பு விஷயத்தில் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை முறிக்காதீர்கள்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி), நூல் : புகாரீ391.

ஷாஃபி,
நீ வெளிநாட்டில் இருந்தபோது மண்ணடியில் பெருங்கூட்டத்தின் மத்தியில் ஒருவர் முக்கியமான கேள்வி ஒன்றைக் கேட்கிறார். இன்னும் அது பதில் சொல்ல முடியாமல் இன்றுவரை பொதுவெளியில் கிடக்கிறது : https://www.youtube.com/watch?v=NTtKg66oRfI

உனக்கு விடை தெரிந்தால் சொல்!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//உலறியவரை விட அவர் பக்கத்திலும் எதிரிலும் இருந்தவர்களின் மீதுதான் கோபம் வருகிறது!

toss க்கான பொருளை தங்களிடமுள்ள தொடுதிரை செல்பேசி inbuilt அகராதியிலிருந்து காட்டி அவருக்கு வாய்ப்பூட்டு போட மறந்து விட்டனரே! (You too ஜமீல்மாமா! iPhone எடுத்துச் செல்லவில்லையா?)

toss - throw (a coin) in to the air in order to make a DECISION between two alternatives, based on which side of the coin faces up when it lands.//

அஸ்ஸலாமு அலைக்கும், ஷாபி காக்கா...

ஆன்லைன் டிக்ஸ்னெரியை எடுத்துக்காட்டினாவெல்லாம் அவருக்கு விளங்கி இருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? என்னா காக்கா இன்னும் இவனுகள பற்றி விளங்காம பேசுறீங்க.. ஆன்லைன்பிஜெ.காம் தளத்தில் வந்துள்ளது என்று எடுத்துக்காட்டி இருந்தால் மட்டுமே ஒத்துக்கொண்டிருப்பார்..

"டாஸ்" பற்றி அண்ணன் எடுக்க வேண்டிய பாடத்தை நம்ம ஜமீல் காக்கா பாடம் எடுத்து அந்த சின்னண்ணன் க.ர. வுக்கு புரிய வைத்து விவாத்துக்கு வா தம்பி என்று சொல்லி அனுப்பியது போன்றே நான் இந்த காணொளியை பார்க்கிறேன்.

ஆன்லைன்பிஜெ.காமில் "டாஸ்: போடுவது என்றால் என்ன? அது எதற்காக என்று குறிப்பிட்டு, கேள்வியும் நானே பதிலும் நானே நிகழ்ச்சியில் வந்தாலும் ஆச்சரியமில்லை.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//ஷாஃபி,
நீ வெளிநாட்டில் இருந்தபோது மண்ணடியில் பெருங்கூட்டத்தின் மத்தியில் ஒருவர் முக்கியமான கேள்வி ஒன்றைக் கேட்கிறார். இன்னும் அது பதில் சொல்ல முடியாமல் இன்றுவரை பொதுவெளியில் கிடக்கிறது : https://www.youtube.com/watch?v=NTtKg66oRfI

உனக்கு விடை தெரிந்தால் சொல்!//

அஸ்ஸலாமு அலைக்கும், ஜமீல் காக்கா,

ஷாபி காக்காவும் இதே கேள்வியை தான் கேட்பார்கள் என்று எண்ணுகிறேன்.

சம்பத்தவருக்காக குரல் கொடுக்கும் சிலராவது இதற்கு பதில் அளிப்பார்கள் என்று நானும் எதிர்ப்பார்க்கிறேன்.

Shafi MI said...

வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹ்…

சாதாரணமாக பலருக்கும் தெரிந்த ஒரு வார்த்தை(toss)க்கான பொருளைச் சொல்லி மற்றவருக்கு வாய்ப்பூட்டு போடவில்லையே எனக் கேட்டிருந்தால் கூட 'எனக்கு ஆங்கிலம் தெரியாது' எனத் தன்னடக்கமாக கூறும் வழக்கமுடையவர் என்பதால் கையிலுள்ள செல்பேசி inbuilt ஆங்கில அகராதியிலிருந்தாவது சொல்லி வாயடைக்கவில்லையே எனக் கேட்டதைக் கண்டு கொள்ளாமல்,
தங்கள் நண்பரிடம் கேட்க வேண்டியவற்றை (https://www.youtube.com/watch?v=NTtKg66oRfI) என்னிடம் கேட்டிருப்பது சரியா?

நிற்க,
நான் இங்கு வந்த பிறகு (2012) தங்கள் நண்பரை மஸ்ஜிதில் ஜமாஅத்துத் தொழுகையில் பலமுறை தொழக் கண்டிருக்கிறேன். தொழுகை முடிந்தவுடன் மற்றவர் கவனிக்கும் முன் உடன் எழுந்து சென்று விடும் வழக்கமுடையவராய் இருந்தார்! தற்போது ஜும்ஆ தொழச் செல்லும் போது அவருக்கான securityகளை மஸ்ஜிதுக்கு வெளியில் காண்கிறேன்.

கலிஃபோர்னியாவிலிருந்து வந்திருக்கும் என் நண்பனொருவன் [ஜஃப்ரீன் (த.பெ.அஹமது கபீர்) - 9790613284] தங்கள் நண்பரையும் அவரது கடையையும் பார்க்கும் ஆவலில் கேட்டுக்கொண்டதால் moonmartக்கு கூட்டிச் சென்றேன். உள்ளே நுழைந்ததுமே அவன், அங்கிருந்த பணியாளரிடம், "உங்கள் bossஐப் பார்க்கலாம் என்று வந்தேன் அவரைக் காணவில்லையே" என பலமுறை சொல்லிக் கொண்டே shopping பண்ணிக்கொண்டிருந்த போது உங்கள் நண்பர் வந்துவிட்டார். பின் customer service/assistanceல் இருந்தவரிடம் ஸலாம் சொல்லிவிட்டு "உங்களைப் பார்ப்பதெற்கென்றே வந்திருக்கிறேன் (அமெரிக்காவிலிருந்து!) …" என்று தொடங்கி நலம் விசாரிப்பு முடிந்தவுடன்,

கேள்விப்பட்டிருந்த தகவல்களை வைத்து, "உங்களைப் மஸ்ஜிதில் தொழப் பார்க்க முடியவில்லையே…" என்று கேட்டதற்கு அவர் சிரித்துக் கொண்டே ஏதோ பதில் சொல்லிச் சமாலித்தார்!

தங்களைப் போல அவரது நெருங்கிய நண்பர்களிடத்தில் தாம் மஸ்ஜிதுக்கு தொழச் செல்லாததற்கான உண்மைக் காரணத்தைச் சொல்லக் கூடும்! தயவு செய்து மறக்காமல் கேட்டு எனக்கு(ம்) சொல்லுங்கள்.

தொண்டி/நொண்டிப் பேரொளி பற்றிச் சான்று கிடைத்தால் அது குறித்தும் கேட்கலாம், இன்ஷாஅல்லாஹ்.

தம்பி தாஜ்,
/யாரப்பா அது (blogspot)அதிரை வள்ளல்! அவங்களுக்கு அவ்ளோ பயமா?! வழக்கமான பதிவர்களால் முடியவில்லை எனில் இது போன்ற 'பயந்தாங்கொள்ளி' வள்ளல்களின் பதிவு அ.நி-க்கு தேவையா? மற்ற தளங்களில் வந்து கொண்டுதானே இருக்கிறது இவை./ என்றதையெல்லாம் கண்டுகொள்ளாமல், ஆங்கிலத்தை ப்பீஜே(மட்டும்) சொன்னால்தான் சகோ. கலீல் ஏற்றுக் கொள்வார் என்று சொல்லும் தமது அதீத கற்பனையை நம்ப இயலவில்லை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு