Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

காவந்து பண்ணும் கலை ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | March 28, 2015 | , , ,


(*)உழவுக்கு மாடு
ஒத்துழைக்க மறுத்தால்
எந்திரம் கொண்டு
எம் நிலம் உழுவோம்.

(*)வான் வழங்காது
வஞ்சகம் செய்திட்டால்
கேணி நீரிறைத்து
காணி நனைப்போம்.

(*)பொல்லாத பூச்சிகளின்
தொல்லை ஒழிப்பதற்கு
கொல்லி மருந்தடித்து
கொஞ்சம் காத்திட்டோம்.

(*)வளறும் பயிர்மேய
வரும் கால்நடைகள்,
தீண்ட விடாது
தடுக்குமெம் கைத்தடி.

(*)அறுத்து கதிரடித்து
விலைநெல் முக்காலும்
விளைநெல் காலுமென
வீட்டினுல் பிரித்துவைத்தோம்.

(*)கையகப் படுத்திய
கதிர்தந்த நெல்மணிகள்
பத்தாயம் ஒன்றில்
பத்திரமாய் எங்களிடம்.

(*)சர்க்கார் கண்படாது
சாமர்த்தியமாய் எம்நிலத்தை
எப்படி மடித்து
எதற்குள் மறைப்பதென்னும்

சூட்சுமம் தெரிந்தால்
சொல்லுங்கள் எம்மக்காள் !
ஆட்சியில் இருப்போர்-நிலத்தை
அபகரிக்கும் முன்னம்!

அதிரை என்.ஷஃபாத்

3 Responses So Far:

sabeer.abushahruk said...

தற்கால அரசியல் விபரீதங்களைப் பாதிக்கப்பட்டவர்கள் நிலையிலிருந்து அனுகும் தம்பி ஷஃபாத்தின் கவிதைகளில் கூர்மையான பொருள் நிலவும்; இந்தக் கவிதையில் இன்னும் கூராகவே இருக்கிறது.

நிலம் கையகப் படுத்துவோர் ஆளும் நாட்டைவிட்டு விலகி வாழும் ஷஃபாத்துக்கு மொழி கையகப்படுத்துதல் இலகுவாகவே வருகிறது.

மாஷா அல்லாஹ்!

நல்ல கவிதை; நயமான விதை!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

என்ன நினைக்கிறோமோ அதனையே கவிதையாக்குகிறாய் - தம்பி
எங்கள் ஆசையும், நீதான் முதல்வராக வேண்டும் (கவிதையின் முதல்வரே)...

தரிசு எல்லாம் அவர்களாக எடுத்துக் கொண்ட பரிசு
விளை நிலைங்கள் பறிப்போ திட்டம் போட்ட சட்டம் !

அதிரை என்.ஷஃபாத் said...

வாசித்த கண்களுக்கும், வார்த்தைகள் தந்த அன்பு இதயங்களுக்கும் நன்றி ! ஜஜாகுமுல்லாஹ் கைரன் !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு