Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இது தான் இஸ்லாம். தமிழக ஊடகங்கள் திருந்தவே திருந்தாவா? 9

அதிரைநிருபர் பதிப்பகம் | May 02, 2015 | , , , , , ,

மீட்பு மற்றும் உயிர்காக்கும் பணியில் பாகிஸ்தான் ராணுவம்....!!  

இந்துக்களைப்  பெரும்பான்மையாகக் கொண்ட நாடான நேபாளில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், முதலுதவியாக, பாகிஸ்தான் ராணுவம் நேபாள் விரைந்து, அங்கு நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பாக மீட்டெடுத்து, அவர்களுக் காகவே தனி முகாம் அமைத்து, மருத்துவ உதவி, உணவுகளை வழங்கி, மனிதநேயத்தைப் பறைசாற்றினர்.

பாகிஸ்தானைப் பற்றிய ஒரு முகத்தை மட்டுமே பிரதிபலித்த ஊடகங்கள், பாகிஸ்தானின் உண்மை முகமான மனிதநேயத்தை எந்த ஊடகமும் வெளிப்படுத்த வில்லை.  மாறாக இழிவு படுத்தவே விரும்பினர். 

அதேபோல் அரபு நாடுகளுள் ஒன்றான கத்தார் 10 மில்லியன் டாலர் மற்றும் மருந்துப் பொருட்கள், உணவுகளை வழங்கி அவர்களும் மனிதநேயத்தை உலகுக்குப் பறை சாற்றினர். 

அதேபோல் சிங்கப்பூர் முஸ்லிம் நாடாக இல்லாமல் இருந்தாலும், சிங்கப்பூரிலுள்ள 68 பள்ளிவாசல்களிலும் நிவாரண நிதி வசூல் செய்து கொடுத்தனர்.  ஏழை நாடான நேபாள் இந்து நாடாக இருந்தாலும், உலகிலுள்ள அனைத்து முஸ்லிம் நாடுகளும் நேபாளின் துயரத்தில் பங்கெடுத்து, மனிதநேயத்தைப் பறைசாற்றி வருகின்றன.


இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடான நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், பாகிஸ்தான் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் நாடுகள் நேபாளுக்கு பில்லியன் கணக்கான தொகைகளையும் கொடுத்து, மீட்புப் பணியிலும் சிறப்பாக ஈடுபட்டு, அங்கே முகாம் அமைத்து, உணவு, மருத்துவ உதவிகள் வழங்கி, சிறப்பாகச் சேவையாற்றி வருகின்றனர்.

அதைப்பற்றி ஒரு வரிகூட எழுத வக்கற்ற தமிழக ஊடகங்கள், பாகிஸ்தானிலிருந்து சென்ற உணவுப் பொருளில் மாட்டிறைச்சி இருந்ததாகவும், அதனால் நேபாள் இந்துக்கள் மாட்டிறைச்சியை உண்பதற்கு முகம் சுழித்துத் திருப்பி அனுப்பியதாகவும் தினத்தந்தி, தினமலர், தினகரன் உள்ளிட்ட பெரும்பாலான தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு, முஸ்லிம்கள் மீதான வெறுப்பை உருவாக்குவதற்கு முயன்றுள்ளன. 


தமிழக ஊடகங்கள் சோற்றைத் தின்கிறார்களா? இல்லை, இந்துத்துவா காவிகளின் மலத்தைத் தின்கிறார்களா என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு, தமிழக ஊடகங்கள் இன்று இஸ்லாமிய வெறுப்பை உமிழ்ந்துள்ளன. முஸ்லிம்களின் மனிதநேயத்தை இந்துத்துவா பாடம் படிக்க வேண்டும். உண்மையில், இந்து வேறு; இந்துத்துவா வேறு.  மதவெறியை மாய்த்து, மனிதநேயத்தை வளர்ப்போம்! இந்தியாவிலுள்ள இந்துக்களில் 90 சதவீத மக்கள் எப்படி மாட்டிறைச்சியைச் சாப்பிடுவார்களோ, அதே போன்று நேபாளிலுள்ள 95 சதவீத இந்துக்கள் மாட்டிறைச்சியை விரும்பி உண்பவர்கள். அது மட்டுமில்லாமல், ஒவ்வோர் ஆண்டும் 5 ஆயிரம் மாடுகளை வெட்டித் திருவிழா நடத்துபவர்கள். 

பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் நாடுகளிலிருந்தும் வந்த உணவுப் பொருளை நேபாள் மக்கள் இன்முகத்துடன் பெற்று உணவு உண்டது மட்டுமின்றி, நெஞ்சுணர்வோடு, நன்றியும் கூறியுள்ளனர்.  

இது மட்டுமா?  நமது நாட்டிலுள்ள ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பும் தன் பங்குக்குப் பெரிய அளவிலான துயர் துடைப்புப் பணிகளையும் உதவிகளையும் செய்துள்ளது.  அதற்கான சான்று இதோ:

“நமது இந்தியாவின் பக்கத்து நாடான நேபாளத்தில், வரலாறு காணாத பேரழிவு பூகம்பத்தால் ஏற்பட்டுள்ளது. பொது மக்களின் தயர் துடைப்பில் அரும் பணியாற்றி வரும் ஜமாஅத்தெ இஸ்லாமி ஹிந்த் தனது பங்காகப் போர்வைகள், உணவுப் பொருட்கள், தண்ணீர், டென்ட் அமைத்துக் கொடுத்தல் போன்ற அத்தியாவசியப் பணிகளை ஏற்கெனவே செய்து வருகிறது. இழப்பு மிக அதிகம் என்பதால், மீட்புப் பணிகள் மந்த கதியில் நடந்து வருகின்றன. அரசும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் மழையையும் பொருட்படுத்தாமல், பெரும் சேவை செய்து வருகின்றன. ஜமாஅத்தெ இஸ்லாமி ஹிந்த் பொது மக்களிடமிருந்து நன்கொடைகளை எதிர்பார்க்கிறது. 

“வசதி படைத்தவர்கள், சிரமத்தில் ஆழ்ந்துள்ள நமது அண்டை நாட்டுச் சகோதரர்களின் துயர் துடைக்க, தங்களால் இயன்ற உதவிகளை, கீழே வரும் விலாசத்திற்கு அனுப்பி வைக்கவும். இறைவனுக்கு பயந்து முறையாக அதனை நாங்கள் விநியோகம் செய்வோம் என்று உறுதி கூறுகிறோம்.”

Regards,
Nusrat Ali
Secretary General
Jamaat-e-Islami Hind 
Cheque or Draft should be in favour of:
MARKAZ RELIEF FUND
JAMAAT-E-ISLAMI HIND
A/c No. 1447308475
Central Bank of India
Sukhdev Vihar, New Delhi-110025
Branch Code-02953
IFS Code- CBIN0282953

Cheque or Draft should be sent to the following address:
Secretary General
JAMAAT-E-ISLAMI HIND
D-321, Dawat Nagar, Abul Fazl Enclave,
Jamia Nagar, Okhla, New Delhi-110025
Cont. No. 09818996951 / 08826732590
உண்மை நிலை இவ்வாறு இருக்க, நடக்காத ஒரு நிகழ்வை நடந்ததாகப் பொய்ச் செய்தி வெளியிட்டு, முஸ்லிம்கள் மீதான வெறுப்பை உமிழ்ந்த தமிழக ஊடகங்கள் திருந்த வேண்டும். 
“மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.”  அல்குர்ஆன் 60 : 8

நன்றி:  முகநூல் முஸ்லிம் மீடியா & ‘சுவனப்பிரியன்’ வலைத்தளம்.
(Edited)

பரிந்துரை : அதிரை அஹ்மது

9 Responses So Far:

Unknown said...

முஸ்லிம்களின் உண்மை மனித நேயத்தை மேலும் பல வகைகளில் வெளிப்படுத்தி இந்துக்காவிகளின் உண்மை நிலையை ஊருக்கு
பகிரங்கப்படுத்தி வெளிச்சம் போட்டு காட்டுவோம்.
ஊடகங்கள் இனிமேலாவது திருந்தட்டும்.

இறைவனை உண்மையுடன் பயந்து ஈருலக வெற்றிக்கு உழைப்போம்

sabeer.abushahruk said...

மதச்சகிப்புத்தன்மை அற்ற பிஜேபீ அரசை அமெரிக்காவும் கண்டித்துள்ளது கவனிக்கத்தக்கது.

ZAKIR HUSSAIN said...


மலேசியா ஒரு முஸ்லீம் நாடு. இருந்தாலும் நேப்பாளப்பேரிடருக்காக மிகப்பெரிய அளவில் பண உதவியும் மருத்துவ உதவியும் செய்தது.

http://www.thestar.com.my/News/Nation/2015/05/02/Mercy-Malaysia-to-carry-out-relief-work-for-a-year/

பூகம்பத்திற்கு பிறகு சென்ற மலேசிய மருத்துவர்கள் அங்கு ஒருவருடம் வரை மருத்துவ உதவிகள் செய்ய தயார் நிலையில் இருப்பதையும் தெரிவித்தனர். பொதுவாகவே பேரிடரில் பாதிக்கப்பட்டவர்கள் மனரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள். அவர்களை பழைய நிலைக்கு மாற்ற பல மாதங்கள் தேவைப்படும்.

பண ரீதியாக மலேசியாவும் பல மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக கொடுத்திருக்கிறது.

இதில் ஒன்றை கவனிக்க வேண்டும். சில மாதங்களுக்கு முன் மலேசியாவிலும் பெரும் வெள்ளம் ஏற்பட்டு பல மக்கள் தங்களது வீடுகளையும் , பொருட்களையும் இழந்தனர். நேப்பாளம் ஒரு உதவியையும் செய்யவில்லை. அதற்காக மலேசியா சின்ன புத்தி தனமாக நடந்துகொள்ளவில்லை.

இதெல்லாம் முஸ்லீம்கள் எது செய்தாலும் தவறு கண்டுபிடிக்கும் ஹிந்து தீவிரவாதிகளுக்கு தெரிவதில்லை. அல்லது தெரிந்தாலும் தெரியாதது மாதிரி ட்ராமா போடுவானுங்க. [ ஊடகம் வைத்திருக்கும் / அமைதியாக வெளியில் நடமாடும் ஹிந்து தீவிரவாதிகளும் சேர்த்துதான் ]

ZAKIR HUSSAIN said...

"பாகிஸ்தான் சாப்பாட்டில் மாட்டிறைச்சி" / "ராகுல் காந்தி மாட்டிறைச்சி சாப்பிட்டு விட்டு நேப்பாளக்கோயிலுக்கு போனார் அதனால்தான் பூகம்பம் " போன்ற செய்திகள் இட்லி/தோசை மட்டும் சாப்பிட்டு விட்டு தமிழ்நாட்டுக்குள் மட்டும் சுத்திவரும் சைவ ஹிந்துக்களுக்கு வேண்டுமானால் ஆத்திரம் உண்டாக்கலாம்.

நான் நேப்பாளம் போய்வந்திருக்கிறேன். பூகம்பம் நடந்த பக்தபூர் புராதன நகரம் எல்லாம் பார்த்திருக்கிறேன். காட்மாண்டுவில் எல்லா இடமும் சுற்றிப்பார்த்திருக்கிறேன்.

நம் ஊரில் டீக்கடைகள் இருக்கும் அளவுக்கு அங்கு எருமை மாட்டிறைச்சிக்கடைகள் இருக்கிறது.

எருமை மாட்டிறைச்சியை நேப்பாள மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் பசு மாடு இல்லை. இதில் புனிதம் மாட்டின் கலரில்தான் இருக்கிறது [ சிந்திக்க தெரியாதவர்களின் சட்டத்தில் ] .


Google Image இல் Nepal and Buffalo meat என்று டைப் செய்து பாருங்கள்...உங்களுக்கே உண்மை தெரியும்.

இது தெரியாமல் காவி நிறத்தில் தலைப்பாகை கட்டி , தான் ஏதோ புனிதமிக்கவன் என்று வேசம் போடும் சாமியார் கம்னாட்டிகளின் அடிப்படை அற்ற செய்திக்கு அறியாத மக்கள் ரொம்பவும்தான் கொதித்து போகிறார்கள்.

sheikdawoodmohamedfarook said...

மாற்று மத காரர்கள் நடத்தும் ஊடகங்களை குறை சொல்லி பயனில்லை. அதுஅவர்கள் கொள்கை. அவர்கள் அப்படிதான் நடப்பார்கள். அவர்களைகுறைசொல்லிகொண்டேஇருக்கும்நாம் நமக்கென ஒரு ஜனரஞ்சகமான செய்தி பத்திரிக்கையே தொடங்க இன்னும் யாரும் ஒருசிறு முயற்சி கூட எடுக்கவில்லை என்றநிலையில் நாம் இருக்கிறோம். இந்நிலையில்பிறர் மீது குறை காண்பது நமது பலவீனத்தின் எடுத்துக்காட்டே!.அடுத்தவீட்டுக்காரன் நம்வீட்டு வாசலையும் அடுப்பங்கரை யையும் சுத்தம் செய்யவேண்டும் யென எதிர்பார்க்கும் மனப்பாங்கைநீக்கிநம்கையேஊண்டியேநாம்குட்டிக்கரணம்போட முயற்சிப்போம்.

sheikdawoodmohamedfarook said...

1962ம்ஆண்டுஇந்தியாமீதுசீனாபடைஎடுத்தபோதுமலாயாபிரதமராய்இருந்த துங்குஅப்துல்ரஹ்மான்அவர்கள்இந்தியாவுக்குபொருள்உதவிசெய்யும்படிபொது மக்களிடம் வேண்டு கோள் விடுத்தார் .பல இலட்சம் ரூபாய்கள் மக்கள்கொடுத்துஉதவினார்.ஆனால்மலேயாதனக்குஅருகில்இருந்தசாபா சரவா சிங்கப்பூர் ஆகிய நாடுகளைஒன்றுசேர்த்துமலேசியாஆனபோதுஅதை இந்தோனேசியாஅதிபராய்இருந்தசுகர்னோஎதிர்த்தார்.வல்லமைமிக்க இந்தோனேசியாவின்எதிர்ப்பைஎதிர்கொள்ளும்வலிமையற்ற மலேசியா தவித்தபோதுஇந்தியஒரு ஆறுதல் வார்த்தை கூட சொல்ல வில்லை.இந்தியர்நெஞ்சுக்கு'நன்றி'என்றவார்த்தைநஞ்சு!

sheikdawoodmohamedfarook said...

மேலும்நம்ஊர்பெரியஜூம்மாப்பள்ளிகட்டவசூலுக்குவந்தபோதுஒரு கணிசமானதொகைவசூல்செய்துகொடுத்தேன்.அதுபோல்தரகதெரு பள்ளிவாசல்கட்டவும்வசூல்செய்துகொடுத்தேன்.ஆனால்இரண்டு பள்ளிதிறப்புவிழாவுக்கும்வசூல்கொடுத்தவர்களுக்குகுறைந்தபட்சம்ஒரு அழைப்பிதழ்கூடவரவில்லை.! ''ஜூம்மாப்பள்ளிகட்டவசூல்கொடுத்தவர்களுக்கு ஒரு திறப்புவிழா அழப்பிதழ் கூடகொடுக்கவில்லையே?'' என்றுநான்கேட்டபோது''நாங்கள்தான்இன்டர்நெட்டில்போட்டோமே! பாக்கலையா?''என்றுபதில்வந்தது.''இன்டர்நெட்டாவசூல்கொடுத்தது?''என்றுகேட்டேன்.பதில்இல்லை.இந்தியர்நெஞ்சுக்கு'நன்றி'என்றவார்த்தைநஞ்சு!

ZAKIR HUSSAIN said...

//வசூல்கொடுத்தவர்களுக்குகுறைந்தபட்சம்ஒரு அழைப்பிதழ்கூடவரவில்லை.!//

இறைவனுக்கு செய்த தொண்டிற்கு நிச்சயம் நற்கூலி இருக்கும். மனிதர்களின் மறதி அதை அழித்து விடாது

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு