Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பள்ளிக்கூடம் திறந்தாச்சு - பெற்றோர்களுக்கான அறிவுரை 1

அதிரைநிருபர் | June 01, 2015 | , , , , ,

இரண்டு மாத விடுமுறையை மாணவர்கள் நன்றாகவே அனுபவித்தார்கள். அதன் பலனையும் பெற்றோர் நன்கு அனுபவித்துவிட்டனர். தேர்வுகள் நடக்கும்போது விடுமுறை வராதா என்று மாணவர்கள் எண்ணுவதும், விடுமுறை வந்தபின் பள்ளி திறக்கமாட்டர்களா என்று பெற்றோர் ஏங்குவதும் ஒரு வேடிக்கையான வாடிக்கை!


விடுமுறைக் காலத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்டும் 51 நாட்கள் நடந்தது. மாணவர்களின் உள்ளத்தை ஆட்கொண்டு, அவர்களின் செயல்களையும் பள்ளிச் சிந்தனைகளையும் முடக்கி வைத்தது. இதில் பழகிவிட்ட மாணவர்கள் மேலும் விளையாட்டுகளையே தேடி அலைகின்றனர். விளையாடுவதற்காக அவர்கள் வீட்டை விட்டு அவுட்டாகிவிட்டால் பின் அவர்கள் கேட்சு ஆவது மிகவும் சிரமம்.


பள்ளிகள் திறந்தாயிற்று, கல்வி தொடர்பாக நாட்டில் என்ன நடக்கிறது என்பதை பெற்றோர், செய்திகள், செய்தித்தாள்கள் மூலம் அறிந்து கொள்ளவேண்டும்.


பள்ளி திறந்த நாளிலிருந்து என்ன பாடம் நடக்கிறது என்பதை மாணவர்களிடமிருந்து பெற்றோர் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும்.


தம் பிள்ளையை எந்த துறையில் வல்லுனர்களாக வரவேண்டும் என்பதை நாம் அவ்வபோது  அழகிய முறையில் நினைவூட்டிக் கொண்டே வரவேண்டும்.


பொதுத் தேர்வுகளில் அதிக பதிப்பெண்கள் பெற்று மாநில மற்றும் மாவாட்ட அளவில் வெற்றிபெற்ற நமதூர் மாணவ மாணவிகளை உதாரணம் காட்டி, தம் பிள்ளைகளை ஊக்கப்படுத்த வேண்டிய பொறுப்பை பெற்றவர்கள் உணர வேண்டும்.

பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நிறைய பெற்றோர் கவனம் செலுத்த தவறுகிறார்கள். குறிப்பாக காலை உணவு சாப்பிட வைத்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு பெற்றோர் தம் பிள்ளைகளின் படிப்பைவிட அவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.


பிள்ளைகளுக்கு சாலை விதிகளை எடுத்துச் சொல்லி சாலை விபத்துக்கள் பற்றி அவ்வபோது அக்கறையோடு எச்சரிக்கை செய்வது பெற்றோர்களின் கடமை என கருத வேண்டும்.


மாணாக்கரை வீணாக்கும் சாதனங்களில் முக்கியமானது தொலைக்காட்சி. அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும.


விடுமுறை நாட்களில் பயன்படுத்திய ஸ்மார்ட் செல்போனை அவர்களிடமிருந்து பிடுங்கிவிடவேண்டும். பெற்றோர் மாணவர்களை மாலையில் மட்டும் விளையாட அனுமதிக்கவேண்டும்.

பெண் மக்களின் கல்வியைப் பற்றி பெற்றோர் கவலைப்படும் சூழ்நிலை இல்லை. தனக்கு உதவியாக இல்லாமல் எப்போதும் படித்துக்கொண்டே இருக்கிறாளே என்பதுதான் தாயின் கவலை. அதற்கு மாறாக மகனைப் பார்த்து, “நீ வெளி வேலைக்கெல்லாம் போகவேண்டாம்; வீட்டிலிருந்து படி” என்று பெற்றோர் சொல்லும் நிலை! பெற்றோர்கள் மனம்திறந்து தங்களின் பிள்ளைகளிடம் நண்பர்கள் போல் பழகி பேசவேண்டும். அப்போது தான் அவர்கள் தங்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை நம்மிடம் பகிர்ந்துக்கொண்டு மன அழுத்தத்திலிருந்து விடுபட முடியும். ஹிட்லர் ராஜியத்தை உங்கள் பிள்ளைகளிடம் காட்டி அவர்களிடையே மன உலைசலை ஏற்படுத்தி அவர்களின் மனதை சிதைத்துவிட நீங்களும் காரணமாகிவிடாதீர்கள்.

நீங்கள் பெற்ற பிள்ளைகளிடம் மனம்விட்டு பேசுவதில் என்ன தவறு உள்ளது? பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் எவ்வகையான பிரச்சினைகள் சந்திக்கிறார்கள் என்பதை அறிந்து அதற்கான தீர்வுகளை கண்டறிந்து, மன உளச்சல் இல்லாத நிம்மதியான சூழலை படிக்கு நம் பிள்ளைகளுக்கு பெற்றோர்களான நம் எல்லோரின் கடமை. கல்வியிலும், சமூகத்தில் உயர்ந்தவர்களாக உருவாக்க வேண்டுமானால் பெற்றோர்களே மனம் திறந்து பேசுங்களேன் உங்கள் பிள்ளைகளிடம்.

இனி எந்தப் புதிய பாடத் திட்டம் வந்தாலும் அதை நன்கு படித்து வெற்றி பெற எல்லா உதவிகளையும் பெற்றோர் செய்யவேண்டும்.

நிறைவாக மிக முக்கியமாக, தம் பிள்ளைகளின் மார்க்க அறிவு மற்றும் கல்வி அறிவு அதிகரிக்க அல்லாஹ்விடம் பெற்றோர்கள் து ஆ செய்ய வேண்டும்.

வீட்டின் உயர்வில் மட்டுமல்ல, நாட்டின் உயர்விலும் மாணவர்களின் பங்கு அதிகம். அவர்களை நெறிமுறைப் படுத்துவது பெற்றோர் என்ற முறையிலும், குடிமக்கள் என்ற முறையிலும் மக்களுக்குக் கடமை. கடமை உணர்ந்து மக்கள் செயலாற்றுவார்களாக!

- வாவன்னா

மற்றும் தாஜுதீன்

1 Responses So Far:

sabeer.abushahruk said...

//விளையாடுவதற்காக அவர்கள் வீட்டை விட்டு அவுட்டாகிவிட்டால் பின் அவர்கள் கேட்சு ஆவது மிகவும் சிரமம்.//

சாருக்கே உரித்தான துணுக்குத் தோரணம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு