Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நூல் வெளியீட்டுக் களமும் - நூல் இடைவெளி காலமும் - நன்றி ! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | June 11, 2015 | , , ,


எல்லாப் புகழும் இறைவனுகே ! (அல்ஹம்துலில்லாஹ்)

'நபிமணியும் நகைச்சுவையும்

சென்னை - துபாய் - அமெரிக்கா விமானப் பயணம் இடையே சற்று தாமதமானதால் விதைக்கப்பட்ட விதை, நபிகளாரின் நகைச்சுவையுணர்வு எவ்வாறு இருந்தது என்று எடுத்துரைத்த கணமே முடிவானது 'நபிமணியும் நகைச்சுவையும்'.

அதிரைநிருபர் வலைத்தளத்தில் தொடராக வாசித்த அனைவரையும் தன் வசப்படுத்தி வெற்றி முகம் காட்டி வென்றெடுத்தது ஏராளமான உள்ளங்களை! - புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!

இருபத்தி ஏழு வாரங்கள் தொடர்ந்து வெளியாகி நிறைவு பெற்றதும் முடிவெடுத்தோம் நூல் வடிவமெடுக்க அடுத்த முயற்சியில் ஈடுபடுவதென!

நூல் எவ்வாறு இருக்க வேண்டும் எதனை தன்னகத்தே கொண்டிருக்கிறது என்று எவ்வகையில் எடுத்துச் சொல்வது என்ற ஆலோசனைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டது, நிறைவில் அழகான அட்டைப்படம் வடிவமைத்து அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது.

இணையத்தில் தொடர் வெற்றி நடை போட்டது உண்மையே! அது நூலாக வெற்றி நடை போட அதன் நடையழகையும், வரிகளும் அதன் வடிவும் சரிபார்க்க எங்கள் மூத்தோர் இருவரின் பார்வை அவசியம் என உணர்ந்ததால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது அவர்களின் பார்வையும் கையும் பட்டதும் புத்துணர்வு பெற்றோம்.

நல்லதொரு, மெருகேற்றலுடன் நூலாசிரியர் அவர்கள் மீண்டுமொரு வரைவாக அனுப்பித் தந்த அனைத்து தொடரையும் அச்சுக்கு அனுப்பி வைக்க முடிவானது.

நூலாசிரியரும் நூல் வெளியீட்டுக்கான நாள் என்னவென்றும் அறியத் தந்ததால், நாட்கள் மிகக் குறைவாக இருப்பதை உணர்ந்தோம். அடியெடுத்து வைத்து விட்டோம் அயர்ந்து இருக்கமாட்டோம் என செயல்வடிவம் பெற்றது !

கிடைத்த இருபத்தி மூன்று நாட்களில் (இடைவெளி) டெஸ்க் டாப் பப்ளிஸிங் (Desktop Publishing) என்றிருப்பதை ரிமோட் டெஸ்க்டாப் பப்ளிஸிங் (Remote Desktop Publishing) ஆக மாற்றி அனைத்து பனிகளையும் மின்னஞ்சல், கணினிகளுக்கிடையே ஊடுருவல் என்று தொடர்ந்து ஈடுபட்டு திருத்தங்கள் அனைத்தையும் எவ்வித வருத்தங்களுமின்றி அதன் பொருத்தமான நூல்வடிவம் பெற உழைத்தோம்!

குறித்த நாட்களில், நேரத்தில் அழகிய வடிவத்தில் நூல்கள் அனைத்தும் எமது இருப்பிடம் தேடி வந்தது அல்ஹம்துலில்லாஹ்!

நன்றி மறப்பது நன்றன்று!

குறிப்பாக சகோதரர்கள் அதிரை அறிஞர் (அதிரை) அஹ்மது, கணினியறிஞர் ஜமீல் M ஸாலிஹ், நூல் ஆசிரியர் - இக்பால் M.ஸாலிஹ், 'தோழர்கள்' நூருத்தீன்,  பேராசிரியர் NAS ஷாஹுல் ஹமீது,‘எழுத்தறிஞர் இபுராஹீம் அன்சாரி, அதிரைநிருபர் பதிப்பகத்தின் அனைத்து சகோதரர்கள், கலர்லைன் மற்றும் அச்சகத்தார்கள், ரஹ்மத் & மான் (சென்னை-அதிரை-சென்னை) பேருந்து நிறுவனத்தார்கள், அதிரைநிருபர் பங்களிப்பாளர்கள், இன்னும் எமது பிரியத்திற்குரிய வாசககர்கள் அனைவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றியினை என்றும் உரித்தாக்கி ஒத்துழைத்த அனைவருக்காகாவும் வல்லமை நிறைந்த அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம் இன்ஷா அல்லாஹ் !

இந்நூல் எழுத்துரு பெற்றதிலிருந்து அச்சாகி முழு'நிலவாக' வெளியீட்டு நிகழ்வுவரை அனுபவித்த சுவராஸ்யங்களையும் கலந்தாய்வுகள் பற்றிய விபரங்கள் மற்றுமொரு பதிவாக விரைவில் இன்ஷா அல்லாஹ்.

அதிரைநிருபர் பதிப்பகம்

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு