Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பாவமும் பழமும் 0

அதிரைநிருபர் பதிப்பகம் | June 25, 2015 | ,

 நபிமணியும் நகைச்சுவையும் - தொடர் : 22

மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கும் இறை விசுவாசிகளின் பாவங்களை அல்லாஹு ரப்புல் ஆலமீன் மன்னித்து விடுவது மட்டுமல்லாமல், அந்தப் பாவங்களை நன்மையாக மாற்றி, பகரமாகப்  பரிசுகளை இந்த உலகிலும், சுவனத்தை மறு உலகிலும் தரவிருக்கும் அற்புத நிகழ்வை கீழே காணலாம்:

நாங்கள் நாயகம்  (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது,  அவர்களின் சபைக்கு ஒரு நபித் தோழர்  வருத்தத்துடன் வருகின்றார். நபியவர்களால் மட்டுமே தமக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கையுடன் ஸலாம் உரைக்கின்றார்.

ஸஹாபி: "இறைத்தூதர் அவர்களே! நான் அழிந்து போய் விட்டேன்! பாவம் செய்து விட்டேன்!”

நபி (ஸல்): (புன்னகையுடன்")  என்ன நடந்தது? " உமக்கு என்ன நேர்ந்தது தோழரே?"

ஸஹாபி: "நான் புனிதமான இந்த ரமளானின் நோன்பு வைத்த நிலையில், என் மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு விட்டேன். இப்போது நான் என்ன செய்வேன், இறைத் தூதரே?"

நபி (ஸல்): "அப்படியா? தவறு செய்து விட்டீரே! இந்தப் பாவத்திற்காக நீர் பகரம்  (கஃப்ஃபாரா)(1) அளித்தாக வேண்டும். விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?"

ஸஹாபி: "இல்லையே!" யா ரஸூலல்லாஹ்"

நபி (ஸல்): "இரண்டு மாதம் தொடர்ந்து நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா?"

ஸஹாபி: "அதுவும் என்னால் இயலாத விஷயம் அல்லாஹ்வின் தூதரே!"

நபி (ஸல்): "அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு  வசதி வாய்ப்பு இருக்கிறதா?'"

ஸஹாபி: "அறுபது ஏழைகளுக்கா? அந்த அரிதான விஷயம் என்னால் முடியவே முடியாது நாயகமே!"

அனைத்து கேள்விகளுக்கும் அவர் இயலாது எனச் சொன்னதால் ‘இவருக்கு வேறு எப்படித்தான் உதவலாம்?’ என்ற யோசனையில், அல்லாஹ்விடமிருந்து உதவியை எதிர்நோக்கியவாறு இனிமை குணமும் இரக்க மனமும் கொண்ட அண்ணலார் அவர்கள்  மௌனமாகிவிட்டார்கள். அல்லாஹ்வின் அற்புதம் அப்போது நிகழ்ந்தது! பெருமானாரின் சபைக்கு இனிய பேரீத்தம் பழங்கள் நிறைந்த கூடை (“அரக்”) கொண்டுவரப்பட்டது.(2) மகிழ்ச்சியுடன் அல்லாஹ்வைப் புகழ்ந்தவாறு...

நபி (ஸல்): "கேள்வி கேட்டுக் கொண்டிருந்தவர்  எங்கே?"

ஸஹாபி: "இதோ நானே! இங்குதான் இருக்கிறேன்! யா ரஸூலல்லாஹ்"

நபி (ஸல்): "இதை எடுத்துக்கொண்டு போய் ஏழைகளுக்கு தர்மம் செய்வீராக. அதுவே உமது பாவத்துக்குப் பரிகாரம் ஆகும்!"

ஸஹாபி: (அண்ணல் நபியின் பொன் முகத்தை நோக்கி) "என்ன இறைத்தூதர் அவர்களே! என்னைவிட ஏழையாக இருப்போருக்கா என்னை தர்மம் செய்யச் சொல்கிறீர்கள்? கருங்கற்கள் நிறைந்த, இதோ இந்த இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியாகிய இந்த மதீனா நகரில் வாழும் அனைவரிலும் என் குடும்பத்தினரைவிடப் பரம ஏழைகள் யாருமே இல்லையே, யா ரஸூலல்லாஹ்!"

இதைக்கேட்டதும் மனித வாழ்வினில் இனிமை சேர்த்த மாநபி (ஸல்) அவர்கள், பவளச் செவ்வாயின்  கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்துவிட்டார்கள் .

நபி (ஸல்): "சரி. இதை எடுத்துக் கொண்டுபோய், உம்முடைய குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!"(3) 

அல்லாஹ்வின் வாக்கு: ஆனால் (அவர்களுள்) ஈமான் கொண்டு, தவ்பாச் செய்து, (ஸாலிஹான) நற்செயல்கள் செய்கின்றவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும் மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான். (4)

விவரங்கள்:
“கஃப்ஃபாரா” என்பது  அவசரத்தால்/அறியாமையால் செய்யப்படும் பாவங்களுக்கான பரிகாரமாகும்.

(2)  'அரக்' என்பது 15 'ஸாஉ' முகத்தலளவு கொண்ட கூடையாகும்; 1 'ஸாஉ' என்பது 4 'முத்'களாகும்; 1 'முத்' என்பது வயதுவந்தவர்களது இரு கரங்களால் ஒருமுறை அள்ளப்படும் தானியங்களின் அளவாகும்.

ஆதாரங்கள்:
(3) புஹாரி 1936 : அபூஹுரைரா (ரலி) 
(4) அல்குர்ஆன் : 25:70
இன்ஷா அல்லாஹ் தொடரும் 
இக்பால் M. ஸாலிஹ்



0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு