Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 010 0

அதிரைநிருபர் பதிப்பகம் | October 16, 2015 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்.

'ஒருவன் அழகிய முறையில் உளுச் செய்து, பின்பு ஜும் ஆவிற்கு வந்து (ஜும்ஆ உரையைக்) கேட்டு, அமைதியுடன் இருந்தால், அவருக்கு இந்த ஜும்ஆவிற்கும் அடுத்த ஜும்ஆவிற்கும் இடைப்பட்ட மற்றும் கூடுதலாக மூன்று நாட்கள் (ஆக 10நாட்கள்) வரை உள்ள பாவங்கள் மன்னிக்கப்படும். (உரையின் போது தரையில் கிடக்கும்) கற்களை தொட்டு(விளையாடி)க் கொண்டிருந்தால் அவர் (ஜும்ஆவின் நன்மையை இழந்து விட்டார்'' என்று  நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) அவர்கள்  (முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 128)

'ஒரு முஸ்லிமான அடியான் உளுச் செய்யும் போது தன் முகத்தைக் கழுவினால் அவனின் முகத்திலிருந்து அவன் பார்த்த ஒவ்வொரு தவறுகளும் அவனது கண் வழியே தண்ணீருடன் அல்லது தண்ணீரின் கடைசிச் சொட்டுடன் வெளியேறிவிடும். தன் கைகளை அவன் கழுவினால், அவனது செய்த தவறுகள் அனைத்தும் அவனது கைகள் வழியாக தண்ணீருடன், அல்லது தண்ணீரின் கடைசிச் சொட்டுடன் வெளியேறிவிடும். அவன் கால்களைக் கழுவினால் அவனது கால்கள் நடந்து செய்த தவறுகள் அனைத்தும் (அவனது கால்கள் வழியாக) தண்ணீருடன் அல்லது தண்ணீரின் கடைசிச் சொட்டுடன் வெளியேறி விடும். இறுதியாக (உளுச் செய்ததன் மூலம்) பாவங்களை விட்டும் பரிசுத்தமானவனாக வெளியேறுவான் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) அவர்கள்  (முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 129)

'ஐந்து நேரத் தொழுகைகள் மற்றும் ஒரு ஜும்ஆ முதல் மறு ஜும்ஆ வரை, ஒரு ரமளான் முதல் மறு ரமளான் வரை பெரும் பாவங்கள் தவிர்க்கப்பட்டிருந்தால், அவைகளுக்கிடையே உள்ள சிறு குற்றங்களை அவை அழித்து விடும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) அவர்கள்  (முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 130)

‘'அல்லாஹ்விடம் தவறுகளை அழிக்கவும், பதவிகளை உயர்த்தவும் காரணமாக உள்ள செயலை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று நபி(ஸல்) கேட்டார்கள். 'சரி! இறைத்தூதர் அவர்களே! என்று நபித்தோழர்கள் கூறினர். 'சிரமமான நேரங்களிலும் உளுவை முழுமையாக செய்வது, பள்ளிவாசல்களுக்கு (நடப்பது மூலம்) அதிக காலடிகள் வைப்பது, ஒரு தொழுகை முடிந்து மறு தொழுகைக்காக காத்திருப்பது (ஆகியவையாகும்).இதுதான் இறைவனின் பாதையில் (வழிபாடுகளில்) உள்ளவையாகும்''  என்று  நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) அவர்கள்  (முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 131)

‘'குளிர்ந்த இரு நேரங்களில் (பஜ்ர், அஸரை) ஒருவர் தொழுதால் அவர் சொர்க்கத்தில் நுழைவார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமூஸா அஷ்அரீ(ரலி) அவர்கள்   (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 132)

 ‘'ஒரு அடியான் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால் அவருக்கு, அவர் உடல் ஆரோக்கியத்துடன் ஊரில் இருந்த சமயம் செய்தது போலவே (கூலி) எழுதப்படும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமூஸா அஷ்அரீ(ரலி) அவர்கள்   (புகாரி ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 133)

‘'ஒவ்வொரு நற்செயலும் தர்மம்தான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) அவர்கள்   (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 134)

நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் : 2:153)

யாரேனும் நல்லறம் செய்தால் அது அவருக்கே நல்லது. (அல்குர்ஆன் : 45:15)  
                
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபி(ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

 '' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்:''

அலாவுதீன் S.

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு