Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவனா யிராதே...! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | October 22, 2015 | , , ,

அழுது கேட்பவன்
அகம் மகிழப் பெறுகிறான்
எழுதி சடைத்தவன்
தொட்டே சாதிக்கிறான்

தொழுது கேட்பவன்
திருப்தி யுறுகிறான்
கொள்வோ மெனும்
உள்ளமும் அடைகிறான்

எழுந்து விழிக்கையில்
ஒளிரும் கதிரவன் போல
தொழுது வணங்கி – முகச்
செழுமை யடைகிறான்

பழம் புளிய மரத்தின்
காயும் நிழலும் போல்
குழம்புக்கும் பயனாகி
குளிர்ச்சியும் தருகிறான்

எழுது கோலினால்
அன்று சாதித்தான்
எழுதாமலே யின்று
தட்டி தொட்டு படைக்கிறான்

அழுகைப் பார்வைக்கு
உருகும் நெஞ்சம் போல
நல்ல குணமுமாய்
நாளும் சிறக்கிறான்

அழுது கண்ணீர் வடித்து
மெழுகாய் ஒளிர்வது போல
அழுதே அக்காலமாய்
மின்சாரம் தருகிறான்

எல்லை தாண்டி
இவ்வுலகில் பிறப்பினும்
ஆறும் அஞ்சு போல்
நாவில் சுவைக்கிறான்

மெல்ல மெல்ல நல்
வசனம் இணைக்கிறான்
பெருதற் கரிய பல்
அறிவை வளர்க்கிறான்

தானடைந்த செல்வம்
தானமாய் பகிர்கிறான்
தான் பெற்ற நலன்
தம்பிக்கும் தருகிறான்

சுட்டு புண்படுமுன்
வாங்கி இருத்திடுவான் 'பர்னால்'
ருசிக்கும் நாவிற்கு
சுவைக்கும் உணவிடுவான் ஆனால்

ஏழ்மை இழிவெனெ
பழிக்கும் உலகிலே
இல்லார் தூற்றும்
அவனா யிராதே!

M.H.ஜஹபர் சாதிக்

3 Responses So Far:

Unknown said...

Assalamu Alaikkum
Dear brother M.H.ஜஹபர் சாதிக்,

A poem surprisingly arrived with inspiration !!!
Nice brother. Keep it up.

Jazakkallah khair,
B. Ahamed Ameen from Dubai.

sabeer.abushahruk said...

//ஏழ்மை இழிவெனெ
பழிக்கும் உலகிலே
இல்லார் தூற்றும்
அவனா யிராதே!//

Superb!!!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மீட்டெடுத்து மீண்டும் வெளியிட்டமைக்கு நன்றி,

மேலும் கருத்திட்ட சகோ.(வ அலைக்கு முஸ்ஸலாம்)அமீனுக்கும், கரு தந்து இது உருவாக வித்திட்டு மறு கருத்திட்ட சபீர் காக்காவுக்கும் மிக்க நன்றி!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு