Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சோழ வளநாடு சோறுடைத்து.. [மீள்பதிவுதான் இருந்தாலும் மறுசோறுல...] 1

அதிரைநிருபர் பதிப்பகம் | January 27, 2016 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும்.

"சோறு கண்ட இடமே சொர்க்கம்" என்பது போல் சிலருடைய வாழ்க்கை கழிந்துக் கொண்டிருக்கின்றன. இவர்களின் செயல்களை உரையாடல் முறையில் சிறிய ஆக்கத்தினை பதிவு செய்ய விரும்பியவனாக.



முதல் நபர்: டே மாப்புளே! இன்னைக்கி ரெண்டுஎடத்துல நடுத்தெருவுலையும்,சி.எம்.பி லைன்லயும் கல்யாணம் இருக்குதுடா வெல்லர்மே வந்துரா கல்யாணத்துக்கு போவலாம்.

இரண்டாம் நபர்: நா வரலடா மாப்புளே எனக்கு அழைப்பு இல்லடா.

முதல் நபர்: டே ரெண்டு கல்யாணக்கார மாப்புளயும் நம்ம எல்லோரையும் கூப்புட்டுட்டு போனான்கடா.

இரண்டாம் நபர்: அப்புடியா சரி நா வர்ரேன் என்னைக்குடா வலிமா ?

முதல் நபர்: ஆமாடா இன்னைக்கு வலிமாவுக்கும்,காலை சாப்பாட்டுக்கும் கூப்புட்டாங்கட.

இரண்டாம் நபர்: காலை சாப்பாட்டுக்கு எங்கடா போவலாம்?

முதல் நபர்: எங்க போனாலும் ஒரே சாப்பாடுதாண்டா வலிமாவுக்குதான் அஞ்சிகறி சோத்துக்கு போவனும்டா.

இரண்டாம் நபர்: எந்த தெருவுலடா அஞ்சிகறி சோறு?

முதல் நபர்: சி.எம்.பி லைன்ல பிரியாணியும், நடுத்தெருவுல அஞ்சிகறி சோறுண்டு நினைக்கிறேண்டா. நம்மோ நடுத்தெருவுக்கே போயிடலாம்.

இரண்டாம் நபர்: டே இவனே 12 அரை மணி ஆச்சுடா.தொழுகைக்கு தக்வா பள்ளிக்கு போய்டலாமா?

முதல் நபர்: வனாண்டா மாப்புளே அங்கே கூட்டம் அதிகமா இருக்கும்டா நம்ம முஹல்லாவிலே தொழுதுட்டு பசங்களா வருவாங்க சேர்ந்து பைக்கிலே போய்லாண்டா.

இரண்டாம் நபர்: சரி வா இகாமத்து சொல்லப்போறாங்க தொழுவ போவலாம்.

முதல் நபர்: உவ்வளவு நேரமாச்சுடா தொழுவ முடிய நம்ம பசங்களையும் காணமடா சரி பரவா இல்லை வா வேகமாக நடக்கலாம்.

விருந்து நடக்கும் வீடு நெருங்கியதும்

இரண்டாம் நபர்: அந்தோல ரெண்டுவேறு வராங்க வா ஒரு சஹனுக்கு உட்காந்திடலாம்.

முதல் நபர்: டே சும்மாயிரா கெளடு கெட்டதுலாம் வானாண்டா.நம்ம பசங்க வராங்களாண்டு பார்ரா? 'அ அந்தோ வர்ராங்கடா'.

இரண்டாம் நபர்: டே மச்சா எல்லோரும் எங்கடா போனிய? உங்களையலாம் அங்கே எதிர்பாத்துக்கிட்டு இருந்தோம்டா.

நண்பர்கள்: ஆமாடா மாப்புளே நாங்க எல்லோரும் மெய்ன்ட் ரோட்லே போய் சர்பத்து குடிச்சிட்டு அப்புடியே தக்வா பள்ளியிலே தொழுதுட்டு வர்றோம்.

முதல் நபர்: சரி வாங்கடா உள்ளே போய் காத்தாடிலே உக்காரலாம்.

சஹன் சோறு பரிமாற்றம் நடைபெறும்போது

முதல் நபர்: காக்கா இங்கே தாங்க என்று அவசரமாய்..சோத்தை சாப்பிட்டு முடித்ததும்

இரண்டாம் நபர்: டே மாப்புளே இன்னொரு சஹன் வாங்கலாமா?

நண்பர்கள்: ஆமாடா அந்தோல போற பையன்கிட்ட கேளுடா.

முதல் நபர்: தம்பி தம்பி இன்னொரு சஹன் சாப்பாடு கொண்டுவாமா.

தம்பி: மறு சோரா காக்கா?

முதல் நபர்: இல்லம்மா மறு சஹமா தம்பி.

தம்பி: சாரி காக்கா கூட்டம் நெறையா இருக்குரதுநாளே சாப்பாடு பத்தல
.
நண்பர்கள்: டே மச்சா இவன்கிட்ட கேக்காதே அந்தோ வர்ரா பாரு நம்ம ஆளு அவகிட்ட கேப்போம்டா. அஸ்ஸலாமு அலைக்கும் என்ன தலைவரே கவனிப்பே இல்லை?

தலைவர்: என்ன வேணும் சொல்லுங்க தலைவரே ?

நண்பர்கள்: நல்ல கறியா பார்த்து ஒரு சஹன் கொண்டு வாங்க தலைவரே!

தலைவர்: இந்தாங்க தலைவரே நல்ல சாப்புடுங்க வேற எதுவும் வேலுமா தலைவரே?

நண்பர்கள்: மொதல்ல இத சாபுட்டுகிறோம் தலைவரே.

முதல் நபர்: டே மச்சா சோத்துக்கு கொஞ்சம் உப்பும் கறியும் கொஞ்சம் வேவலடா யாருடா சமைச்சது?

இரண்டாம் நபர்: கண்டிப்பா நெய்னவா இருக்காதுடா.

முதல் நபர்: சரி அதவுடு ராவைக்கி அந்த கல்யாணக்கார மாப்புள சாப்புட கூப்புட்டான்.போவலாம் மறந்துடாம வந்துரு.

விருந்தோம்பல் மானுட இயல்பு அதனை அழகுற நடத்திக் காட்டுவதும் அங்கே நளினமாக நடந்து கொள்வது அன்பை வெளிகாட்டும் நட்பை கூட்டிடும் !

ஊரில் கலரி சாப்பாடு அல்லது கல்யாண அலம்பல் என்று வந்துவிட்டால் இளைய பட்டாளத்தின் செயல்கள் அச்சூழலில் அவர்களுக்கும் நண்பர்களுக்கும் ரசிக்கும்படி என்றிருந்தாலும் மற்றவர்களின் பார்வையில் அங்கே முகம் சுளிக்கவைக்கும் என்பதை மறந்து விடுகின்றனர்..

சிந்திக்கத்தான் வேண்டும் !

லெ.மு.செ.அபுபக்கர்

1 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அதிரை நிருபர் நிருவகிகளுக்கு மன மார்ந்த வாழ்த்துக்கள் மரு சகனாக மீள் பதிவு வன்தமைக்கு.

ஆனால் மகனின் மருத்துவத்திற்க்காக மெட்றாஸ் வந்து ஒரு மாதமாகியும் மருத்துவ மனையிலிருந்து இன்னும் மீல முடியாமல் இருக்கேன்.என் மகனுக்காக துஆச் செய்யுஙகள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு