Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஹலோ...ஹலோ... நலமா.!? 1

அதிரைநிருபர் பதிப்பகம் | February 21, 2016 | ,


நாம் தினம் தினம் அன்றாடம் வாழ்வில் சந்திக்கும் நபர்களை முதல் விசாரிப்பாக எப்படி இருக்கீங்க நலமா.? என கேட்டறிகிறோம். பதிலுக்கு நாம் விசாரிக்கும் நபர் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க என்றோ அல்லது இரண்டு நாளா ஜுரம்ங்க தலைவலி உடம்புக்கு சரியில்லை அதான் வெளியே வரலே என்று உடல் உபாதையை சொல்லி அழுத்துக் கொள்வதும் உண்டு

ஆக நாம் எத்தனை கோடிக்கு அதிபதியாக இருந்தாலும் என்னதான் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தாலும் உடல் நலம் சிறிதளவில் சரியில்லையெனில் மனது மகிழ்வுடன் நிம்மதியுடன் இருப்பதில்லை.அப்படியானால் நாம் இவ்வுலக வாழ்க்கையை இனிமையாய் கழிக்க உடல் நலம் என்பது முக்கிய அங்கம் வகிக்கிறது..அப்படிப்பட்ட உடல் நலத்தை பேணிப்பாதுகாப்பது நமது தலையாய கடமையாக இருக்கிறது.

மனிதனது வாழ்வு இயந்திர வாழ்க்கைக்கு தள்ளப்பட்டிருக்கும் இக்காலகட்டத்தில் உடல்நலத்தில் யாரும் அதிக கவனம் செலுத்துவதில்லை.மீண்டும் காலமாற்றத்தில் நவீனக் கண்டுபிடிப்புக்களுக்கு அடிமையானதுடன் அதனை அத்தியாவசயமாக நாம் ஆக்கிக் கொண்டு மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

சிலர் மன அழுத்தத்தை குறைப்பதற்காக உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கக் கூடிய சில தீய பழக்கங்களுக்கு அடிமையாகி போவதால் உடல் நலம் கெட்டுப்போவதும் சுத்தம் சுகாதாரமின்மையின் காரணத்தால் உடல் நலத்தில் கேடு உண்டாவது ஒரு காரணமாக இருந்தாலும் பொதுவாக பார்ப்போமேயானால் இன்றைய சூழ்நிலையில் நாம் அதிக டென்ஷன் மன உளைச்சல் மன அழுத்தத்தில் தான் நாம் வாழ்க்கையை கடத்திக் கொண்டு இருக்கிறோம். உணவு வகைகளையும் உட்கொள்ளும் நேரத்தையும் கூட மாற்றியமைத்துக் கொண்டுவிட்டோம். அதுமட்டுமல்லாது உணவு உட்கொள்ளும் நேரத்தில் கூட நாம் நிம்மதி யுடன் இருந்து உணவை உட்கொள்வதில்லை.இதன் காரணமாகத்தான் பெருநோய்கள் சர்வசாதாரணமாக நம்மை தொற்றிக் கொள்கின்றன. 

அடுத்து சொல்லப் போனால் உடல் உழைப்பு குறைந்து எல்லாம் இயந்திரமயமாகி மனிதனது உடல் சுறுசுறுப்பை இழந்து சோர்வை சந்திக்க துவங்கிவிட்டன. பண்டைய வாழ்க்கை முறையில் வாழ்ந்த மனிதர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் பலசாலியாக இருந்தார்கள். காரணம் எல்லாம் இயற்கையோடு ஒன்றி சேர்ந்திருந்தது ஆனால் இன்றைய மனிதர்கள் இயற்கையை விடுத்து செயற்க்கையின்பால் மோகம் கொண்டதால் உடலில் மட்டுமல்லாது உள்ளத்திலும் பலமிழந்தவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்க்கெல்லாம் காரணம் நாம் உண்ணும் உணவிலிருந்து உடல் உழைப்பு , வாழ்க்கைமுறை, நவீனத்துடன் இணைந்து செயல்படும் சூழ்நிலை எல்லாவற்றிலும் இயற்க்கைக்கு மாறான போக்கை கடைபிடிக்க ஆரம்பித்து விட்டதால் உடல் நலத்தை நமக்கு நாமே பாதிப்புக்கு உள்ளாக்கிக் கொண்டோம் என்றுதான் சொல்லமுடியும். உடல் சுகம்பெற்று வாழ வழிவகுத்துக் கொள்வது நம் கையில்தான் உள்ளது.உடலுக்குத் தேவையானதை கொடுத்து உடல்மீது அக்கறைகொண்டு கவனம் செலுத்தினால் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம்.

ஆகவே இன்றைய சூழ்நிலையில் எந்த நேரத்தில் எந்தநோய் வந்து தொற்றிக்கொள்ளுமோ என்கிற சிந்தனையில் வாழ்க்கையை கழிக்கவேண்டியதாக உள்ளது.எனவே விதியை மதிகொண்டு வெல்லமுடியும் என்று சொல்வதுபோல உடலுக்கு உகந்த உணவு, உடற்பயிற்சி, நிம்மதியான போதுமான தூக்கம்,எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் அமைதியான பேச்சு,கவலையை சுமையாக்காமல் தன்னம்பிக்கையுடன் கூடிய சிந்தனை இப்படி நாம் அனைத்திலும் உடலுக்குத் தேவையானதை கொடுத்து பேணிக்காத்து மதியை பயன்படுத்தி விதியை வெல்ல முயற்ச்சிப்போம்.ஹலோ...ஹலோ...நலமா..என்று விசாரிப்பவர்களுக்கு இன்முகத்துடன் நலம் என்று சொல்லி மகிழ்வோடு வாழ வழிவகுத்துக் கொள்வோமாக...!!!

அதிரை மெய்சா

1 Responses So Far:

sabeer.abushahruk said...

//உடலுக்கு உகந்த உணவு,
உடற்பயிற்சி,
நிம்மதியான போதுமான தூக்கம்,
எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் அமைதியான பேச்சு,
கவலையை சுமையாக்காமல் தன்னம்பிக்கையுடன் கூடிய சிந்தனை//

இந்த...தூக்கம்தான் 4 மணி நேரத்திற்குமேல் வாய்க்க வழியில்லை.

நல்ல நினைவூட்டல்!

மெய்சா...ஹலோ...நலமா?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு