Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய்... 1

அதிரைநிருபர் பதிப்பகம் | February 23, 2016 | ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர்க்காத்துஹு

இறைத்தூதரின் உத்தரவு...!

இறைத்தூதரின் கூற்று என்பது இறைக்கூற்றல்லவா?

தாம் உயினும் மேலாக நேசிக்கும் இறைத்தூதர் இட்ட கட்டளை தான்...

இறைத்தூதருக்காக எதையும் செய்யத் துணியும் இளைஞர்..

அவரது கட்டளைக்காகக் காத்திருப்பவர்களுள் ஒருவர்..

எள் என்றால் எண்ணெயாக உருகி ஓடக்காத்திருப்பவர்...

மூஸா அலை அவர்களுக்கு ஹாரூனைப் போல் நீர் எனக்கு என்றவரின் சொற்கள்..

யாருடைய உத்தரவுக்காகக் காத்திருக்கிறாரோ.. அவருடைய உத்தரவைப் பெறுகிறார்..

“அலீயே.. இறைத்தூதர் என்பதை அழித்து அப்துல்லாஹ்வின் மகன் என்று எழுதுங்கள்” - இறைத்தூதரே கூறுகிறார்..

அவரது கட்டளையை நிறைவேற்றுவது ஈமானின் பாதி.

அவ்வாறு நிறைவேற்றவில்லையெனில் இறைவனின் கோபத்தையே சம்பாதிக்க நேரும்.

உள்ளம் முழுவதும் ஈமான் வியாபித்திருந்தாலும் இப்பொழுது எழுத்தில் நுழைப்பதால் ஈமானுக்குப் பங்கமில்லை தான்.

ஆனாலும் “முடியவே முடியாது” என்று கடுமையாக மறுக்கிறார். இறைத்தூதருக்கு மாறு. ஆனால் இறைவனின் கோபத்தைச் சம்பாதிக்கவில்லை. வேறு யாருடைய கோபத்தையும் சம்பாதிக்கவில்லை. மாறாக, அவர்களது மறுப்பு அனைவரது கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. மறுப்பின் மூலம் அவர்கள் நிரூபித்தது, தம் ஈமானை.

வேறு வழியின்றி இறைத்தூதர் தாமே அப்பணியைச் செய்கிறார்கள். சுப்ஹானல்லாஹ்.

சொர்க்கம் என்ற வாக்கைப் பெற்ற அலி ரழி அவர்களின் அந்த நிமிட மறுப்பிலும் முடிவிலும் பல பாடங்கள் நமக்கு இருக்கின்றன. நம் வாழ்வில் பல சமயங்களில் இந்த ஒரு சொல்லைக் கூறுவதால் நம் ஈமானுக்குப் பங்கம் வந்துவிடுமா.. இல்லை என நாமே முடிவு செய்து விடுகிறோம். அலி ரழி அவர்கள் இறைத்தூதர் எனும் சொல்லை அழித்துவிட்டால், அவரை அல்லாஹ் தண்டித்துவிட மாட்டான் என அவர்கள் நினைக்கவில்லை. அல்லாஹ் உள்ளத்தைப் பார்க்கிறான் என அவர்களும் தெரிந்தே வைத்திருந்தார்கள்.  அவர்கள் அழித்து எழுதியே இருந்தாலும் அல்லாஹ் அவர்கள் நோக்கத்தை அவர்களை விட அதிகம் அறிந்தவன். இருந்தும், அவர்கள் அச்செயலைச் செய்ய முன்வரவில்லை. 

ஏன்? நபி ஸல் அவர்கள் மீது அவர்கள் வைத்திருந்த அன்பு... அனைத்தையும் மிஞ்சிவிட்டதே காரணம். இவர் என் ரசூல் என்ற அல்லாஹ்வின் கூற்றில் வைத்திருந்த அசைக்கவே முடியாத நம்பிக்கை. அல்லாஹு அக்பர். ஆனால் நாம்?

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே... முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதர் என உள்ளச்சத்தோடு கூறியவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம்.

நாமும் தான் கூறுகிறோம். வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனே என்று. ஆனால், 

நேற்று கோபத்திற்குத் தலைசாய்த்துத் தீய வார்த்தைகளைக் கூறிவிட்டோமே? மொழிந்துவிட்ட கலிமா என்னாயிற்று? அச்சமயத்தில் இறைவனுக்கா அடிபணிந்தோம்?

நேற்று முன் தினம், தூக்கத்திற்கு ஆட்பட்டு தொழுகையைத் தவற விட்டோமே? மொழிந்துவிட்ட கலிமா என்னாயிற்று? அச்சமயத்தில் இறைவனுக்கா அடிபணிந்தோம்?

மன உளைச்சலுக்குக் கட்டுப்பட்டு சிகரெட்டைப் பற்றவைத்தோமே? மொழிந்து விட்ட கலிமா என்னாயிற்று? இறைவனுக்குக் கட்டுப்பட்டா சிகரெட் பற்றவைத்தீர்கள்?

சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாய் இருப்பது எப்படி ஈமானாகும்? நாம் கூறும் இந்த சொல், நம் ஈமானுக்குப் பங்கம் ஏற்படுத்தாது என முடிவு செய்ய நாம் யார்? அந்த அறிவு நமக்கு எப்படி வந்தது?

அல்லாஹ் நமக்கு வழங்கிய அறிவைக் கொண்டு செய்யும் முன்பும் சொல்லும் முன்பும், யாருக்காக, எதற்காக அடிபணிகிறோம் என்பதை சிந்திப்போம்.

பானு என்றென்றும்...

1 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜஸாக்கல்லாஹ் ஹைரன்... பகிர்வுக்கு !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு