Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? – 17 9

அதிரைநிருபர் பதிப்பகம் | March 05, 2016 | ,


இன்றைய உலகில் தொய்வில்லாமல் தொடர்ந்து நடந்து வரும் பணிகளில் , இஸ்லாத்தை நோக்கி மனிதகுலத்தை அழைக்கும் பணியும் ஒன்றாகும். இதனால் உலகெங்கும் இருந்து பலர் தித்திக்கும் திருப்புமுனைகளைக் கண்டு வருகிறார்கள். குறிப்பாக அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இந்த வளர்ச்சி அதிகமாக இருக்கிறது என்று கீழ்க்கண்ட இணைய தள ஆய்வுகள் கூறுன்றன. 

www.religioustolerance.org/growth_isl.chr.htm http://www.Pewresearch.org/ மற்றும் ARIS American Religious Identification Survey ஆகிய ஆய்வுகள்...

The growth rate of Islam, according to the U.S. Center for World Mission, at 2.9% is higher than the growth rate of the world’s population . Thus, the percentage of Muslims in the world is growing on the order of 0.6% per year.

என்றும்

A Pew Forum on Religion & Public Life report in 2015 concluded that the U.S. population of Muslim adults is 2.6 million -- 0.6% of the total population. This places Islam as the third most popular organized religion in the U.S. after Christianity (70.6%) and Judaism (0.9%). என்றும் இந்த உண்மையை உலகுக்கு எடுத்துச் சொல்லி வருகின்றன. 

இந்த வளர்ச்சியின் பின்னணியில் அழைப்புப் பணியில் அயராது தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள அழைப்பாளர்கள் அனைவருக்கும் இறைவன் தனது அருளை வழங்குவானாக! 

அதே நேரம், அழைப்பாளர்கள் எதிர்கொள்ள வேண்டிய பல கேள்விகளுக்கு விடைகளை ஆராய்ந்து வருகிறோம். 

அந்த வகையில் அழைப்பாளர்கள் பரவலாக எதிர்கொள்கிற இஸ்லாத்தின் மீதான இன்னொரு கடுமையான விமர்சனம் இஸ்லாம் குடும்பக்கட்டுப்பாட்டுக்கு எதிரானது; முஸ்லிம்கள் அதிகக் குழந்தைகளைப் பெறுகிறார்கள் என்பதாகும். இந்தக் குற்றச்சாட்டைப் பற்றி விவாதிக்கலாம். 

குடும்பக்கட்டுப்பாடு என்ற கோஷமும் கருத்தும் உலகத்துக்கும்  இந்தியாவுக்கும் புதிதல்ல.

“காதலுக்கு வழிவைத்து 
கருப்பாதை சாத்த 
கதவொன்று கண்டறிவோம் 
அதிலென்ன குற்றம் ? 

என்று கேட்டார் பாரதிதாசன். நாம் இருவர்! நமக்கு இருவர்! என்ற முழக்கங்கள் மூலை முடுக்குகளில் உள்ள சுவர்களிலும் தீப்பெட்டிகளிலும் கூட எழுதப்பட்டன. பின்னர், ஒன்றே பெருக! அதை நன்றே பெருக! என்றும் திருத்தி முழங்கப் பட்டன. ஆடுமாடுகளைப் போல் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை என்ற முறையில் ஆண்களின் ஆண்மைத் தன்மை நீக்கப் பட்டது., பெண்களின் கர்ப்பமுறும் தன்மைகள் காவு கொடுக்கப்பட்டன. அதற்காக அரிசிமுதல் பருப்புவரை இலவசப் பரிசாக வழங்கப் பட்டது. இதற்காக ஆள் பிடித்துக் கொண்டுவரும் முகவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப் பட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறையில் குடும்பக் கட்டுப்பாடு தனி அங்கமாயிற்று. அதிகமான அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப் பட்டது. தெருவெங்கும் பாடல், ஆடல் , நாடகங்கள், திரைப்படங்கள் மூலம் பரப்புரைகளும் செய்யப் பட்டன. பேருந்துகள் முதல் விமானங்கள் வரை அடையாளச் சின்னமாகிய சிவப்பு முக்கோணம் பொறிக்கப்பட்டது. 

முஸ்லிம்கள் ஈமானும் இறையச்சமும் உடையவர்கள். தங்களின் இறைவனும் தங்களின் இரசூல் (ஸல்) அவர்களும் வகுத்த வழியிலேயே வாழவேண்டுமென்று நினைப்பவர்கள். இஸ்லாம், குடும்பத்தைக் கட்டுப் படுத்துகிறேன் என்ற போர்வையில் இறைவனால் படைக்கப் பட்டு தாயின் கர்ப்பகருவறையிலேயே தனது சுஜூதை தொடங்கும் கருவைக் கலைக்க அனுமதி வழங்கவில்லை என்பவை ஒரு புறமிருந்தாலும் குடும்பக் கட்டுப்பாடு பற்றி பொதுவான சில பொருளாதாரக் கருத்துக்களை முதலில் நோக்கலாம். பிறகு ஆன்மீக காரணங்களுக்கு வரலாம். 

முஸ்லிம்கள் மட்டுமல்ல, வேறு எவருமே குடும்பக் கட்டுப் பாடு செய்ய வேண்டிய தேவை இல்லை என்பதே எமது நிலைப்பாடு. குடும்பக்கட்டுப்பாடு செய்யாததால் மக்கள்தொகை பெருகுகிறது . மக்கள் தொகைப் பெருக்கத்தால்தான் உணவுப் பற்றாக் குறை ஏற்படுகிறது. குடும்பக் கட்டுப்பாடு செய்வதன் மூலம் மக்கள் தொகையை குறைத்துவிட்டால் எல்லாக் குறைகளும் தீர்ந்துவிடும் என்பது ஒரு உள்நோக்கம் கொண்ட பரப்புரையாகும்.  

சில பொருளியல் புள்ளி விபரங்களை வைத்து இந்த விவாதத்தை துவங்குவது பொருத்தமாக இருக்கும். 

இன்றைக்கு உலகத்தில் 700 கோடி மக்கள் வாழ்கிறார்கள். என்றாலும் 1500 கோடி மக்களுக்கான உணவு உலகெங்கும் மொத்தமாக உற்பத்தியாகிக் கொண்டு இருக்கிறது. தவறு எங்கே நடை பெறுகிறது என்றால் எல்லா உற்பத்தியும் அதிகாரமும் உலகின் பொருளாதாரத்தை  கட்டிப் போட்டு வைத்திருக்கும் பணக்கார நாடுகளில் குவிந்து கிடக்கிறது. 100 கோடி மக்கள் வாழக் கூடிய பணக்கார நாடுகளில் மட்டும் 1000 கோடி மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. பணக்கார நாடுகள் தனக்குத் தேவையானது போக, மீதி உள்ள கோதுமை, பால், அரிசி போன்றவற்றை உலகில் உணவுப் பற்றாக் குறையை ஏற்படுத்தவும் அரசியல் செல்வாக்கின் மிரட்டல்களை பயன்படுத்தி அடிபணிய வைக்கவும் பதுக்கி வைக்கிறார்கள் அல்லது கடலில் கொண்டு போய் கொட்டி விடுகிறார்கள். எனவே மக்கள் தொகைப் பெருக்கத்தால்தான் உணவுப் பொருள்களில் பற்றாக் குறை ஏற்படுகிறது என்பது தவறான வாதமாகும். 

இரண்டாவதாக , இன்றைக்கு இந்திய மக்கள் தொகை 120 கோடியாகும். சுமார் அறுபது எழுபது வருடங்களுக்கு முன்பு இந்திய மக்கள் தொகை முப்பது  கோடிதான். பாரதியார் அதனால்தான் ‘முப்பது கோடி முகமுடையாள்’ என்று பாடினார். “ தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்” என்று பாடியவரும் அவர்தான். பசிப்பிணி பற்றி மனோன்மணியத்தில் ஒரு பாட்டே இருக்கிறது. இப்போது உள்ள உணவுப் பற்றாகுறையைப் போல அன்றும் என்றும் இருக்கத்தான் செய்தது. அரிசிக்கு ரேஷன் வைத்து அளந்து கொடுப்பதற்கு மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வைத்த காரணத்தாலும் உணவுப் பொருட்கள் கிடைக்காதவர்கள் எலிக்கறி சாப்பிடுங்கள் என்றும் பரப்புரை செய்யப்பட்டதாலும் அரசாங்கங்களே ஆட்டம் காணவில்லையா? 

இந்திய மக்கள்தொகை நூற்று இருபது  கோடி இருக்கும்போது எப்படி பல கோடி மக்களுக்கு உணவு கிடைக்கவில்லையோ அதேபோல முப்பது கோடி மக்கள் இருக்கும்போதும் சில கோடி மக்களுக்கு உணவுப் பற்றாகுறை இருந்துதான் வந்தது . இப்போதுதான் உணவுப் பாதுகாப்பு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறி இருக்கிறது. அப்படியென்றால் இவ்வளவு காலம் நிலவி வந்த பற்றாக்குறைக்குக் காரணம் உண்மையில் மக்கள் பெருக்கமா? நிர்வாகக் குறைபாடா? பங்கிடுதலில் பாகுபாடா? அரசியல் அட்டகாசமா? இரக்கமற்ற நெஞ்சங்களா?

அண்மையில் The Economic Times என்கிற ஆங்கிலப் பத்திரிகை வெளியிட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையின் மொழிபெயர்ப்பை இங்கு தர விரும்புகிறேன். 

உலகில் தினமும் 87 கோடிப் பேர் பசியால் வாடும் நிலையில், சர்வதேச அளவில் வீணாகும் உணவுப் பொருள்களால்  75,000 கோடி டாலர் அளவுக்கு இழப்பு ஏற்படுவதாக , ஐக்கியநாடுகள் சபையில் உணவு மற்றும் வேளாண் அமைப்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியப் பணத்தில் இது 48 லட்சம் கோடியாகும். இது நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி GDP மதிப்பில் 50 சதவீதமாகும் இது சுவிட்சர்லாந்து நாட்டின் GDP க்கு நிகரான தொகையாகும் என்பது கூடுதலாக கவனிக்கப்பட வேண்டியதாகும். 

உலக அளவில் உற்பத்தியாகி உண்ணாமல் வீணாக்கும் உணவுப் பொருள்களின் அளவு 33 சதவீதமாக உள்ளது. உலக மக்கள் தொகையில் மட்டுமல்ல உணவுப் பொருள்களை வீணாக்கும் நாடுகளிலும் உலகிலேயே சீனாதான் முதலிடம் வகிக்கிறது என்பது அதிர்ச்சி அளிக்கக் கூடிய தகவல். 

உலக நாடுகளில் அனைத்து மக்களுக்கும் முழுமையான உணவுப் பாதுகாப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை . சில ஆப்ரிக்க நாடுகளோ வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. இந்த நிலையில் அரிசி, கோதும, சிறு தானியங்கள் மற்றும் காய்கறி பழங்கள் என பல ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ள 130 கோடி டன் உணவுப் பொருள்கள் வீணாகிவருவது விடை காணமுடியாத பல சிக்கலான கேள்விகளை முன் வைத்துள்ளது.  

சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆகிய நாடுகள் பொருளாதார மையங்களாகத் திகழ்கின்றன. இந்த நாடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ள ஆசியா கண்டத்தில் ஒரு தனிமனிதரால் ஆண்டுக்கு சராசரியாக 100 Kg. காய்கறிகளும் 80 Kg. உணவு   தானியங்களும் வீணடிக்கப் படுகின்றன என ஐ நாவின் புகார்ப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. 

பணக்கார நாடுகள் சுகாதாரம் குறித்து தேவைக்கும் அதிகமான எச்சரிக்கை உணர்வுகளைக் கொண்டுள்ளன. இதனால் காய்கறி, பழங்கள் மீது சிறிய கீறல் இருந்தாலும் அவை தூக்கி எறியப்படுகின்றன. உணவுப் பொருள்களின் காலாவதி தேதிகளின் மீது அளவுக்கு அதிகமாகக் காட்டப்படும் ஆர்வமும் கவனமும் காரணமாக டன் டன்னாக விளைபொருள்கள் குப்பையில் கொட்டப் படும் அவலம் காணப்படுகிறது. காலாவதியாகப் போகும் தேதிகளுக்கு முன்பாகவே உணவுப் பொருட்களை பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள நிர்வாகக் கோளாறு, பலநூறு டன் உணவுப் பொருகளை கடலில் கொட்டும் நிலைமையை ஏற்படுத்துகிறது. 

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் உற்பத்தி நிலையிலேயே பெருமளவு உணவுப் பொருள்கள் வீணாகிவிடுகின்றன. சாலை ஓரங்களில் இருக்கும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப் படும் நெல் மூட்டைகள் ஒரு தார்ப் பாய் கூட போட்டு மூடப் படாமல் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் பொறுப்பற்ற செயலைக் கண்கூடாகக் காணலாம். 

அறுவடைக்குப் பின் சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதன வசதி இல்லாமலும், சரக்குப் போக்குவரத்தின் போதும் ஏராளமான வேளாண்மைவிளை பொருள்கள் தரையில் கொட்டி வீணாகின்றன. 

உலக அளவில் சுமார் 140 கோடி ஹெக்டேர் நிலத்தில் சாகுபடியாகும் உணவுப் பொருள்கள் வீணாகின்றன என்று ஐநா கணக்கிட்டுள்ளது. இது மொத்த சாகுபடி பரப்பளவில் 28 சதவீதம் ஆகும். இது ஹராம் இல்லையா? 

உற்பத்தி, அறுவடைக்குப் பின் பராமரித்தல் , சேமிப்புக் கிடங்கு போன்றவற்றின் கட்டமைப்பு மற்றும் நிர்வாகக் குறைபாடுகளால் 54 சதவீத உணவுப் பொருள்களும் பதப் படுத்துதல், விநியோகம், நுகர்வு போன்ற இரண்டாம் கட்ட நடவடிக்கைகளில்  46 சதவீத உணவுப் பொருள்களும் வீணாகின்றன. 

உணவுப் பொருள்களை வீணாக்குவது இரண்டு பாவங்களைச் செய்கிறது. ஒன்று தண்ணீர் போன்ற இயற்கை வளங்களும் வீணாக்கப் படுகின்றன. இரண்டாவதாக, திட்டமிடாத செலவுகளால் பொருளாதார நிலையும் தாழ்வுறுகிறது. 

இவற்றை எல்லாம் மீறி மக்களுக்கு உணவளிப்பது என்கிற கோட்பாடு மழுங்கிப் போய் பட்டினிச்சாவுகளும் விவசாயிகளின் தற்கொலைகளும் அதிகரிக்கின்றன. 

நிலைமைகள் இப்படி இருக்க, மக்கள் தொகை வளர்ச்சியின் மீது பழி போடுவது நியாயமா?

உண்மையில் நடப்பது என்னவென்றால் மக்கள் தொகையின் வளர்ச்சியின் காரணமாகத்தான் , பசுமைப் புரட்சி போன்ற பல்வேறு திட்டங்களால் உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவை எட்டிப் பிடிக்க முடிந்தது என்பதும், சில உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டன என்பதும் பொருளாதார வரலாறு சொல்லும் உண்மைகள் . 

அன்றைக்கு நெல் பயிரிடுதலின் காலம் ஆறு மாதங்கள் . இன்றோ பல பகுதிகளில் மூன்று மாதப் பயிராக விளைந்து வருகிறது. இன்னும் ஒன்றரை மாதப் பயிராகவும் பயிரிடும் நிலைமையை - எந்த இறைவன் இந்தியாவுக்கு அதிக மக்கள் தொகையை அளித்தானோ அதே இறைவன்தான் தேவையை முன்னிட்டு மனிதனின் உணவுப் பொருள் உற்பத்தி செய்யும் அறிவை உசுப்பிவிட்டான் என்பதே உண்மையாக இருக்க முடியும். 

மக்கள் தொகையின் பெருக்கமும் நெருக்கமும் நெருக்கடியும் விவசாயத்தில் மட்டுமல்ல அறிவியலிலும் மனிதனின் கொடியை பட்டொளி வீசிப் பறக்க வைத்தது. புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், விமானச்சேவை முதல் கணினியின் அற்புதங்கள்வரையிலும் அன்றாடம் புதிது புதிதாக மனித மூளையின் அற்புதங்கள், கண்டுபிடிப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஒரு பில்கேட்சின் தாயோ, அபுல் கலாமின் தாயோ, தாமஸ் ஆல்வா எடிசனின் தாயோ, ஐன்ஸ்டீனின் தாயோ , மார்க்கோனியின் தாயோ தங்களின் குடும்பத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக இந்த அறிவியலார்களை, கல்வியாளர்களை கருவிலேயே கலைத்து இருந்தால் இவர்கள் இந்த உலகத்துக்குக் கிடைத்திருப்பார்களா? குடும்பக் கட்டுப் பாட்டை ஆதரித்துப் பேசுபவர்களின் பெற்றோர் இதைச் செய்து இருந்தால் இப்படி ஆதரிப்போர் உலகை தரிசித்து இருக்க முடியுமா? 

குழந்தைகள் பசிக்கும் வயிறோடு மட்டும்தான் பிறக்கின்றனவா? உழைக்கும் இரண்டு கரங்களுடன் பிறக்கவில்லையா? சிந்திக்கும் மூளையுடன் பிறக்கவில்லையா? 

"உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்காத எந்த உயிரினமும் பூமியில் இல்லை”’ ( 11:6) என்கிற திருமறையின் வசனமும்,

“அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான் பின்னர் அவனே உங்களுக்கு உணவு அளிக்கிறான் ” (30:40) 

போன்ற திருமறையின் வசனங்கள் தரும் இறைநம்பிக்கை மற்றும் ஈமானில் ஊறித்திளைத்த முஸ்லிம்கள் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது உண்மைதான். 

அதே நேரத்தில் , 

இஸ்லாம் நியாயமான காரணங்களுக்காக குடும்பக் கட்டுப்பாட்டை அனுமதிக்கிறது ;ஆதரிக்கிறது என்பதை அறிஞர்கள் எடுத்துரைக்கிறார்கள்.  

யாவை? இன்ஷா அல்லாஹ் நாமும் எடுத்துரைப்போம். 

இபுராஹிம் அன்சாரி

9 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

''பெரும்பாலானஅமெரிக்கா,ஐரோப்பிய பெண்கள் இஸ்லாத்தைதழுவ மறுப்பதற்கு காரணம் ஆண்கள் ஒரு மனைவிக்கு மேல் திருமணம் செய்து கொள்ளலாம் என்றஅனுமதியே''என்றுமலேசியாவில் கோலாலம்பூர் தேசியபள்ளியில் அழைப்பு பணியில் ஈடுபட்டஇந்திய தமிழ் முஸ்லிம் ஒருவர் என்னிடம் சொன்னார்.

Ebrahim Ansari said...

ஆனால் உண்மையில் ஒப்பிடுகையில் அதிக அளவில் பெண்கள் அதிலும் மருத்துவம் போன்ற பெரிய படிப்புப் படித்தவர்களே இஸ்லாத்தைத் தழுவுகிறார்கள்.

Ebrahim Ansari said...

Many Westerners view Islam as a religion that restricts and subordinates women in both private and public life. Yet a surprising number of women in Western Europe and America are converting to Islam. What attracts these women to a belief system that is markedly different from both Western Christianity and Western secularism? What benefits do they gain by converting, and what are the costs? How do Western women converts live their new Islamic faith, and how does their conversion affect their families and communities? How do women converts transmit Islamic values to their children? These are some of the questions that Women Embracing Islam seeks to answer.

www.amozan. com www. guardian. com

Ebrahim Ansari said...

ஆனால் உண்மையில் ஒப்பிடுகையில் அதிக அளவில் பெண்கள் அதிலும் மருத்துவம் போன்ற பெரிய படிப்புப் படித்தவர்களே இஸ்லாத்தைத் தழுவுகிறார்கள்.

Ebrahim Ansari said...

Over the past few years, more and more Americas have converted to Islam, particularly women and I was curious to find out why.

It appears that women are converting to Islam at such rapid rates that they outnumber men 4 to 1, reports a study on female converts to Islam titled “Women and Conversion to Islam: The American Women’s experience.”

www. islam.ru

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

குடும்பக்கட்டுப்பாடு செய்வதால் உணவுப்பஞ்சம் தீரும் என்பது ஓர் ஏமாற்று வேலை என்பதைத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் சொல்லியிருக்கிறீர்கள்.

அந்தக் காலத்தில் மருமகன் வீட்டுக்கு வந்தால் கோழி அடித்து குழம்பு வைக்க கோழியைத்தேடி ஊரு விட்டு ஊரு போய் வாங்குவார்கள்.

மக்கள் தொகை கூடிப்போன இன்றோ தடுக்கி விழுந்தால் கோழிக்கடை.

நீங்கள் சொல்வதுதான் சரி.

அருமை

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா காக்கா.

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி சபீர்,

வ அலைக்குமுஸ் சலாம்.

தங்களின் உதாரணம் மிகச் சரியானது.

பாருங்கள்! மக்கள் எதை அதிகம் உண்ணுகிறார்களோ அதன் உற்பத்தியை அல்லாஹ் அதிகமாக்குகிறான்.

கோழி , ஆடு, காடை, மீன் ஆகியவை இதற்கு உதாரணம்.

மக்கள் உண்ணாத வன விலங்குகளான புலி, சிறுத்தை ஆகியவற்றின் எண்ணிக்கை உலகளவில் பிறப்புவிகிதம் குறைந்தே வந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் குறிப்பிடக் கடமைப்பட்டு இருக்கிறோம்.

ஆக, அல்லாஹ் உணவாகப் பயன்படுபவைகளின் உற்பத்தியை அதிகரித்து பரக்கத் செய்கிறான்.

ஜசக்கல்லாஹ் ஹைரன் .

Unknown said...

For the issue on the conversion of women in the west, please read my 2 volumes of 'Peru Petra Penmanikal' (IFT)

Ebrahim Ansari said...

ஆம். மாஷா அல்லாஹ் அந்த இரண்டு பாகங்களையும் மதரசாவில் பாடம் நடத்துகிறோமே.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு