Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மனசாட்சி ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | March 28, 2016 | , , ,


உள்ளமதில் நிலைகொண்டு
உண்மைதனை உரக்கச்சொல்லி
மனிதநேயம் மாறிடாது
மனதினுள்ளே ஒரு சாட்சியாய்
மதிசெய்திடுமோர் ஆட்சியாம்

கண்காணா தவறுகளை - இனம்
காண்பது  மனதன்றோ
கல்நெஞ்ச மனம்கூட
கரைந்திடுமே  மனசாட்சியாலே

ஆயிரம் சாட்சி வந்தாலும்
அகத்தில் உறுதியாய் மனசாட்சி
ஆறறிவு மனிதனுக்கு
ஆழ்மனதை ஆளும் கட்சி

பொய்சாட்சி சொல்வோர்க்கும்
பொல்லாங்கு செய்வோர்க்கும்
மனசாட்சி மட்டும் போதும்
மனம் திருந்த நல்ல தருணம்

எண்ணிலடங்கா சம்பவங்கள்
இவ்வுலகில் அனுதினமும்
அத்தனைக்கும் அடித்தளமே
அதன் தீர்வு மன சாட்சியிலே

இறைசாட்சி முதல் சாட்சி
இருக்கணும் அங்கு நிலைநிறுத்தி
மறையோனை தொழுதிடவும்
வேணுமங்கு மனசாட்சி

மனசாட்சி மறந்து போனால்
மனிதனவன் மிருகமாவான்
மறவாத மனமிருந்தால்
மகிழ்வுகளை வாரியணைபான்

மனசாட்சி இல்லாதோர்
மனித இனம் அல்லாதோர்
மனதினிலே இரக்கமுள்ளோர்
புனிதரான மனிதராவர்

அதிரை மெய்சா

3 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

மனசாட்சி உள்ளவனைஉலகம் ஏமாளி யென நினைக்கிறது.

sabeer.abushahruk said...

//மனசாட்சி மறந்து போனால்
மனிதனவன் மிருகமாவான்//

மிகச் சரியாகச் சொன்னாய மெய்சா

Muhammad abubacker ( LMS ) said...

இவ்வரிகளை மறுத்திடாது மனசாட்சி

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு