Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இயற்கை இன்பம் – 5 13

அதிரைநிருபர் பதிப்பகம் | May 01, 2016 | , , , ,

சோலை


பெருங்கடலுட்  பேரலையின் உப்புக்  காற்றைப்

                  பிறர்க்குதவும்  விதமாகச்  சுழற்சி  யாக்கி

அருங்காற்றுப்  பிள்ளைகளாய்  ஈன்றெ  டுத்தே

                  ஆவலுடன்   கொஞ்சிமிக  மகிழ்ந்து  நிற்க

விரும்புவிதம்  அணியணியாய்த்  தழுவிக்  கொண்டு

                  வீசுகின்ற  குளிர்காற்றாம்  மங்கை  நல்லாள்

கரும்பினிலும்  தேனுள்ளும்  மறைந்த  இன்பம்

                  கனிவுடனே  தருவதுவே  சோலை  யாகும்.

அதிரை அஹ்மத்

13 Responses So Far:

crown said...


பெருங்கடலுட் பேரலையின் உப்புக் காற்றைப்

பிறர்க்குதவும் விதமாகச் சுழற்சி யாக்கி

அருங்காற்றுப் பிள்ளைகளாய் ஈன்றெ டுத்தே
------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.சாச்சாவின் அமுதமிழ் அழகு தென்றலாக மாறி இங்கே வீசுகிறது!என்னே புலமை ,இனிமை.உப்புக்காற்றை அதன் சுழற்சி கொண்டே மாற்றி அது நாம் நுகரும் நறும் மணம் தரும் நல்காற்றாய் அருள் காற்றாய் ஈன்றுதந்தது.வார்தை செரியும் கற்பனை திறனும்.அல்ஹம்துலில்லாஹ்!

crown said...

அந்த மெல்ல வீசும் காற்றை இன்பம் தரும் மங்கையாக்கி இன்னும் காதல் ரசம் மாற இளமை!அது சோலையில் வீசும் போது கரும்பாகவும் தேனாகவும் சோலையே மாறிவிடுகிறது!கற்பனையும்.மொழிஆற்றலும் ஆட்சி செய்கிறது.முன்பு எழுதிய அருவிகளை பற்றிய கவிதையிலும் இளமை துள்ளியது.சாச்சா விளையாடுங்க உங்க இளமையை மறுபடியும் கவிதையாக ,காவியமாக!

அதிரை.மெய்சா said...

சோலையைப்பற்றி சுருங்கச்சொ.னாலும் மரபுக்கவிதையில் அழகாகச்சொல்லியிருக்கிறீர்கள் காக்கா. அருமை வாழ்த்துக்கள்.

sabeer.abushahruk said...

அழகான சோலை...!

சோலைக்குள்
ஆற்றிற்கு வாய்த்ததொரு சாலை

உப்புக்காற்றை சுழற்றி மாற்றியது
சோலை இலைவிரிப்பா
சேலை புன்சிரிப்பா

அருமை

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா காக்கா

Unknown said...

படித்துச் சுவைத்துப் பாராட்டியோர்க்கு நன்றி.
நான் இணைத்த 'ஒப்புச் சோலை'யை மாற்றி, உண்மைச் சோலைப் படமாக்கிப் பதிவு செய்த 'அதிரை நிருபர்' குழுவுக்கும் நன்றி.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

சின்னச் சின்னதாய் ஹைக்கூ:

பிறந்தது
கடலையில்
புகுந்தது
பூங்காவில்
தென்றல்:

Unknown said...

சின்னச் சின்னதாய் ஹைக்கூ:

பிறந்தது
கடலையில்
புகுந்தது
பூங்காவில்
தென்றல்:

Unknown said...

சின்னச் சின்னதாய் ஹைக்கூ:

காற்றின் நலினம்
கவிதைக் கரு
தென்றல்:

Unknown said...

சின்னச் சின்னதாய் ஹைக்கூ:

காற்றின் நலினம்
கவிதைக் கரு
தென்றல்:

Unknown said...

சின்னச் சின்னதாய் ஹைக்கூ:

பிறந்தது
கடல் அலையில்
புகுந்தது
பூங்காவில்
தென்றல்:

Unknown said...

சின்னச் சின்னதாய் ஹைக்கூ:

பிறந்தது
கடல் அலையில்
புகுந்தது
பூங்காவில்
தென்றல்:

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். இங்கே கருத்திடும் காலம் தொட்டே அமீன் காக்கா ஒரு கருத்தை இருமுறை பதிவிடுகிறார் இன்றோ அதற்கு மேலும் ஏதும் காரணம் உண்டா?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு