Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சுட்டும் விரலே சுட்டிக் காட்டிடு - வாக்கு அளிக்க வழிமுறைகள் ! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | May 11, 2016 | , ,

வாக்கு அளிப்பது இந்திய இறையான்மையில் ஜனநாயக உரிமை, இந்தத் தேர்தலில் கட்டாயம் உங்கள் வாக்கைப் பதிவுசெய்யுங்கள். அதற்கான இலகுவான வழிமுறைகள்.

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்கலாம். ஆனாலும், உங்கள் ஓட்டை வேறு யாரும் போட்டுவிடாமல் இருக்க, முன்னதாக ஓட்டுப் போடச் செல்வதே சிறந்த வழி.

உங்கள் வீட்டுக்கு அருகிலிருக்கும் வாக்குச் சவடிக்குச் செல்லுங்கள், மற்றவர்கள் அழைத்தார்கள் என்று வேறு வாக்குச் சாவடிக்கு வேடிக்கைப் பார்க்கச் செல்லாதீர்கள்.

வாக்குச்சாவடியில் ஆண், பெண், மாற்றுத் திறனாளிகள், முதியோர்என்று தனித்தனி வரிசைகள் இருக்கும். உங்களுக்கு என்று உள்ள வரிசையில் நின்று பொறுமை காத்திருங்கள். பெண்களுக்கும், முடியாதவர்களுக்கு முன்னுரிமை அளியுங்கள்.

எவ்விதப் பதற்றம் இல்லாமல் நிதமான வாக்கு பதியுங்கள், ஒவ்வொரு வாக்காளராகவே உள்ளே அனுமதிப்பார்கள்.

வாக்குச்சாவடிக்குள் நுழைந்தவுடன் முதல் வாக்குப்பதிவு அலுவலர், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா, அந்தப் பெயருக்கு உரியவர் நீங்கள்தானா என்பதைப் பரிசோதிப்பார். வாக்காளர் அடையாள அட்டையையும் தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாளச் சீட்டையும் அவரிடம் காண்பிக்க வேண்டும். அதன் பிறகு, அவர் உங்கள் பெயரையும் வரிசை எண்ணையும் குறிப்பிடுவார். இதன் மூலம், தேர்தல் (கட்சி வேட்பளர்களின்) முகவர்கள் உங்களின் இருப்பை அறிந்து கொள்வார்கள். அடுத்து, நீங்கள் இரண்டாவது வாக்குப்பதிவு அலுவலரிடம் செல்ல வேண்டும்.

இரண்டாவது வாக்குப்பதிவு அலுவலரிடம் செல்லும்போது, அவர் உங்களின் இடது கையில் உள்ள ஆள்காட்டி விரலில் அழிக்க முடியாத மையைத் தடவுவார். அதன் பிறகு, வாக்காளர் பதிவேட்டில் உள்ள வாக்காளர் பட்டியலில் உங்கள் வரிசை எண்ணைப் பதிவு செய்வார். அதன் பிறகு, அந்தப் பதிவேட்டில் நீங்கள் கையெழுத்திட வேண்டும் அல்லது இடது கைப் பெருவிரல் ரேகையைப் பதிவு செய்ய வேண்டும். அவர் கையெழுத்திடப்பட்ட அடையாளச் சீட்டை உங்களுக்குத் தருவார். அடுத்து, நீங்கள் மூன்றாவது வாக்குப்பதிவு அலுவலரிடம் செல்ல வேண்டும்.

மூன்றாவது வாக்குப்பதிவு அலுவலரிடம் செல்லும்போது, இரண்டாவது வாக்குப்பதிவு அலுவலரால் வழங்கப்பட்ட அடையாளச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, கட்டுப்பாட்டு இயந்திரத்தின் பொத்தானை இயக்குவார். இப்போது நீங்கள் வாக்களிப்பதற்கான அனுமதியைப் பெற்று விட்டீர்கள்.


ஓட்டுப் போடும் இயந்திரம் இருக்கும் மறைவான வைத்திருக்கும் இடத்துக்கு சென்றதும், ஏற்கனவே முடிவு எடுத்திருந்தாலும் அல்லது அதுவரை முடிவுக்குள் வரவில்லை என்றால் ஒரு கணம் ஆழ்ந்து யோசியுங்கள். தகுதி உடைய சரியான நபரை மனதில் தேர்ந்தெடுங்கள். முக்கியமாக, உங்களுக்கும் சமுதாயத்திற்கும் நீங்கள் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். வேட்பாளருக்கு உரிய பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக இருக்கும் நீலப் பொத்தானை அழுத்துங்கள். 'பீப்’ ஒலி கேட்கும். அதேசமயம், நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக சிவப்பு ஒளி ஒளிரும். ஒரு முறை பொத்தானை அழுத்தினால் போதும். இப்போது உங்கள் ஓட்டு பதிவாகிவிட்டது.

நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பது உங்களுக்கு மட்டுமான ரகசியம். வாக்குச்சாவடிக்குள் நின்றுகொண்டு நீங்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்பதைத் தெரிவித்தால், உங்களை வாக்களிக்க அனுமதிக்க மாட்டார்கள். யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதைத் தெரிவித்தால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, உங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதேபோல, வாக்களிப்பதைப் படம் எடுப்பதும் கூடாது அங்கே மொபைல் ஃபோன் எடுத்துச் செல்லாதீர்கள்!

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்து, வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றால், கவலை வேண்டாம். தேர்தல் ஆணையம் வழங்கும் அடையாளச் சீட்டு உங்களிடம் இருந்தால்போதும். தாராளமாக ஓட்டுப் போடலாம். அதுவும் இல்லையென்றால், நீங்கள் ஓட்டுப் போட முடியாது.

சிலருக்கு இப்படியான பிரச்னைகள் வரலாம். அதாவது, பட்டியலில் உங்கள் பெயர் இருக்கும். ஆனால், உங்கள் படம் இருக் காது. வாக்காளர் அடையாள அட்டையும் இல்லை. தேர்தல் ஆணையம் வழங்கும் அடையாளச் சீட்டும் இல்லை என்றால் என்ன செய்வது? பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், பான்கார்டு இவற்றில் எதையாவது ஒன்றைச் சான்றாகக் காட்டி ஓட்டுப் போடலாம். குடும்ப அட்டைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறது. ஆனால், அந்தப் பெயருக்கு உரியவர் நீங்கள் இல்லை என்று வாக்குச் சாவடியில் உள்ள யாராவது சந்தேகம் எழுப்பினால், என்ன செய்வது? பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ்... இப்படிச் சில ஆவணங்கள் மூலம் உங்கள் அடையாளத்தை நீங்கள் நிரூபிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் போலியானவர் என நிரூபிக்கப்பட்டால், உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல் வாக்குப்பதிவு அலுவலர், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா எனப் பரிசோதிப்பார். உங்கள் பெயரில் வேறு யாரேனும் ஓட்டுப் போட்டு இருந்தால், அதை உடனே வாக்குச்சாவடித் தலைமை அலுவலரின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். உங்களுக்கு ஆராய்ச்சிக்குரிய ஓட்டுச் சீட்டு (டென்டர்ட் பேலட் பேப்பர்) அளிக்கப்படும். அதைப் பெற்றுக்கொண்டு, நீங்கள் கையெழுத்திட வேண்டும். நீங்கள் வாக்களித்ததும், அதை ஓர் உறையில் இட்டு தனியே வைத்துக்கொள்வார்கள். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்... நீங்கள் மின்னணு ஓட்டு இயந்திரத்தின் மூலம் வாக்களிக்க முடியாது. ஏதாவது விசேஷக் காரணங்கள் இருந்தால் தவிர, உங்கள் ஓட்டு கணக்கிலும் எடுத்துக்கொள்ளப்படாது!

வாக்கு அளித்து விட்டு அங்கேயே காத்திருக்காதீர்கள், உடணடியாக உங்களின் வீடுகளுக்கு திரும்பிடுங்கள், வாக்கு நடைபெறும் நாளில் வெளியில் கூட்டமாக இருந்திடாதீர்கள்.

பெண்கள் அணிகலங்களை அணிந்து கொண்டு வாக்கு அளிக்கச் செல்லாதீர்கள், உங்களின் விரலில் பெண் அதிகாரி மை வைக்குமிடத்தில் இல்லாவிடின் அவர்கள் சொல்லும் இடத்தில் உங்கள் விரலை மேஜைமேல் வையுங்கள், விரல் நீட்டிக் கொண்டிருகாதீர்கள்.

பெண்களே வீட்டில் இவர்கள் இல்லையே அவர்கள் இல்லையெ என்று அடுத்தவர்கள் வாக்குகளை செலுத்த கட்சிகளின் உறவுகளோ அழைத்தால் உங்கள் வாக்கைத் தவிர வேறு வாக்குகள் அளிக்க முன்வராதீர்கள் மறுத்தி விடுங்கள், இன்றையச் சூழலில் சட்டம் கடுமையாக இருக்கிறது அதோடு மீடியாக்களின் பிரச்சாரம் விபரீதத்தை உண்டாக்கிடும்.

இந்தத் தேர்தலின் கதாநாயகன் / கதாநாயகி 'எது’வாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அன்றைய கதாநாயகன் / கதாநாயகி நீங்களாகத்தான் இருக்க வேண்டும்.

வாழ்த்துகள் மனசுல வைத்திருப்பவர்கள் வென்றிட !

அபுஇபுறாஹிம்

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு