Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பேரென்ன...பிறகென்ன? 2

அதிரைநிருபர் | July 20, 2016 | , , , , ,

பத்துமாத
பாதுகாப்பு வளை-
கதறிக்கொண்டே கண்திறந்த...
பிறந்த தெரு என் தெருவா?

கால்களில் இறக்கை கட்டி-
கடலென்றும் காடென்றும்-
குளமென்றும் குட்டையென்றும்-
குதித்துத் திறிந்த...
வளர்ந்த தெரு என் தெருவா?

பள்ளிக் கூடப் படிப்பும்-
வகுப் பறைகளின் வசீகரமும்-
வாத்தியார்களின் வாஞ்சையும்-
என...
பயின்ற தெரு என் தெருவா?

அரும்பிய மீசையும்-
தழும்பிய ஆசையும்-
தவம் கிடந்த பார்வைகளும்-
கத்துக்குட்டி கவிதைகளும்-
என...
களித்திருந்த தெரு என் தெருவா?

பார்த்ததெல்லாம் அழகாகவும்-.
படித்ததெல்லாம் தெளிவாகவும்-
நொடி நேர பார்வைக்கும்-
கோடி அர்த்தம் கண்ட-
கல்லூரிக் காலங்கள்...
கழிந்த தெரு என் தெருவா?

வாயிக்கும் வயிற்றிற்கும்-
சார்ந்தவர்களுக்கும் சேர்ந்தவளுக்கும்
என...
பிறந்த மண் துறந்து
பொருள் தேடி...
அலையும் தெரு என் தெருவா?

வைத்த காலம் முதல்
அழைத்த பெயரை-
மாமாவிலும் மச்சானிலும்
'என்னங்க'விலும் 'இந்தாங்க'விலும் வாப்பாவிலும் அப்பாவிலும்
தொலைத்து விட்டு-
மையத்து என்ற
பெயர் மட்டும் தாங்கி
மாய்ந்து...
அடங்கும் தெரு என் தெருவா?

பொறு சகோதரா...
மஹ்சரில் சந்திப்போம்
ஒரே தெருவில்!

- சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

மீள் பதிவு

2 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...

கடந்து வந்த பாதை எவ்வளவு கரடு முரடு என்பதை உணர்த்துகிறது அடுக்கு அடுக்கான வரிகள்.

Muhammad abubacker ( LMS ) said...
This comment has been removed by the author.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு