Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எழுத்துப் பிழைகள்! - 02 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்] 1

அதிரைநிருபர் பதிப்பகம் | May 05, 2018 | ,

எழுத்துப் பிழைகள். – 2

அட, எனது எண்ணக் கீற்றுக்கு இவ்வளவு வரவேற்பா!? வாழ்த்தி வரவேற்றவர்களுள்,
என் அன்பிற்குரிய கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்கள் இருக்கின்றனர்! கவிஞர்கள் உள்ளனர்! எழுத்துலகின் ஏந்தல்கள் இடம் பெற்றுள்ளனர்! மார்க்க அறிஞர்கள் மனமார வரவேற்றுள்ளனர்! ஆழிய சிந்தனையாளர்கள் அடங்கியுள்ளனர்! ஊடகத் துறையினரும் உள்ளனர்! நட்பு வட்டாரத்தின் நல்லவர்கள் நாடி நிற்கின்றனர்! உறவினரும் ஊர்க்காரர்களும்...........

இவர்களுள் முதலில் வரவேற்க வந்தவர், ஆஸ்திரேலியாவில் இருக்கும் என் மருமகன் காலித்! காரணம் என்ன தெரியுமா? தமிழ் எழுத்தில் இவருக்கு நிறையப் பிழைகள் ஏற்படும்; அதனால்தான். நல்ல வேளையாகத் தனது ‘கம்மென்ட்டை’ ஆங்கிலத்தில் இட்டுவிட்டார். இல்லாவிட்டால், அந்த நான்கு வரிகளில், குறைந்தது நான்கு பிழைகளாவது செய்திருப்பார்!

அடுத்து, அமீரகத்தில் இருக்கும் மருமகன் ஒருவர். அவருடைய ‘கம்மென்ட்’டில், ‘நல்லதொரு’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இவ்வழக்கு, மிகையாக இலங்கை மக்களிடமே பயன்பாட்டில் உள்ளது. ‘நல்ல’ என்று சுருக்கமாகச் சொன்னால் போதும். நல்லது + ஒரு என்று இரண்டு சொற்களை இணைக்க வேண்டியதில்லை என்பது எனது புரிதல். ஏனெனில், ‘நல்ல’ எனும் பண்புத்தொகையை வினை முற்றாக்கி, அதனுடன் தேவையின்றி ‘ஒரு’ எனும் சொல்லைச் சேர்த்துவிடுகின்றனர். இவ்வகையில் சேர்ந்தவைதாம், கீழ்வரும் சொல்லாடல்கள்:

பெரியதொரு = பெரியது + ஒரு (‘பெரிய’ என்ற சொல்லே போதும்.) அருமையானதொரு (‘அருமையான’ என்பதே போதும்.)

சிறந்ததொரு (‘சிறந்த’ என்ற சொல்லே போதுமே.) அல்லது, ‘பெரிய ஒன்று’, ‘அருமையான ஒன்று’, ‘சிறந்த ஒன்று’ எனலாமே!?


கருத்துரையாளர்களுள் சிலர் ஒற்றுப்பிழை செய்துள்ளனர். இதுபற்றி, விரைவில் விரிவாக எழுதுவோம், இன்ஷா அல்லாஹ். 


இன்னொருவர் ஒருமைச் சொல்லை அடுத்துப் பன்மையைப் பயன்படுத்தியுள்ளார். இதுபற்றியும், விரிவாக எழுதுவோம், இன்ஷா அல்லாஹ்.


மற்றொருவர், ஒற்றெழுத்து மிகுதல், மிகாமையில் கருத்தைச் செலுத்தவில்லை. இதனையும் விரிவாக விளக்குவோம், இன்ஷா அல்லாஹ்.


தமிழிலக்கணத்தில், அடுக்குத் தொடர் என்ற ஒன்றுண்டு. அதைப் பற்றியும் விரிவாக விலாசுவோம். ஏனெனில், கருத்துரைத்தவர்களுள் ஒருவர் இதில் பிழை செய்துள்ளார்; அதனால்தான். 


‘ல’கர, ‘ள’கர, ‘ழ’கர, ‘ன’கர, ‘ண’கர, ‘ர’கர, ‘ற’கர வேறுபாடுகளைப்பற்றியும் விரிவாக எழுதுதற்கு இறைவனின் துணையினை வேண்டி, இப்பதிவை முடிக்கிறேன்.

தொடரும்...

1 Responses So Far:

عبد الرحيم بن جميل said...

//நல்ல வேளையாகத் தனது ‘கம்மென்ட்டை’ ஆங்கிலத்தில் இட்டுவிட்டார். இல்லாவிட்டால், அந்த நான்கு வரிகளில், குறைந்தது நான்கு பிழைகளாவது செய்திருப்பார்!//
நல்ல வேலை என்பதல்லவா சரி.... கமென்ட் என்ற சொல்லுக்கு பதில் பின்னூட்டம் எனும் சொல்லை பயன்படுத்தலாமே

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு