Tuesday, December 27, 2016

கரன்ஸிக் களேபரங்கள்


கையில் இருந்த
காசை
வெறும்
காகிதம் என்றது
முட்டாள்களின்
முக்கிய அறிவிப்பு

செல்லாத நோட்டுகளைக்
கொடுத்துவிட்டு
இல்லாத நோட்டுகளை
வாங்கிக் கொள்ள
வங்கிச் செல்ல
அங்கோ
வாக்காளப் பெருமக்கள்
போர்க்காலக் கைதிகள்போல்
வரிசையில் நீள்கின்றனர்

பணம் மாற்ற வழி செய்யாமல்
பணம் அற்றப் பரிவர்த்தனைக்கு
பாரதத்தை மாற்றும்
மந்திரப் பிரதமர்
கள்ளநோட்டுக் கனவில்
வில்லனாகிப் போனார்

மேல்ச்சட்டை இல்லாத
மேனி இளைத்தோர்
காசட்டை இல்லாததால்
கஞ்சிக்கு வழியின்றி
காய்ஞ்சித் தவிக்கின்றனர்

பால் வாங்கப் பணமில்லை
பள்ளிப்
பரீட்சைக்குக் கட்டப் பணமில்லை

சில்லறையில்லாத் திண்டாட்டத்தில்
இந்தியா
கல்லறைக்குள் ளானதுபோல்
மூச்சு முட்டுகிறது

கருப்புப் பணம்
காத்து வைத்திருப்போரை
காத்துக் கருப்பும் அண்டாது

வேர்த்துழைத்துச்
சேர்த்தப் பணம்
வெற்றுப் பணம் என்றானதுவே

மோடி
அழைத்துச் செல்லும்
வளர்ச்சிப் பாதை
பாரதத்தைப்
பாதாளத்தை நோக்கி
நகர்த்துகிறது

 சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

No comments:

Post a Comment

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.