இயற்கை இன்பம் – 9 0

அதிரைநிருபர் பதிப்பகம் | May 31, 2016 | , , ,

விலங்கினம்



ஐயறிவு  விலங்கினங்கள்  அனைத்தும்  வல்ல
                          ஆண்டவனின்  படைப்புகளின்  நினைவைக்  கூட்டும்.
மெய்யறிவாம்  பகுத்தறிவின்  மனிதன்  மட்டும்
                          மேனிலையை  மறந்துவிட்டால்  விலங்கை  விட்டுப்
பொய்யுலகில்  தரந்தாழ்ந்து  பொருளைச்  சேர்த்துப்
                          போதுமெனும்  பொன்செய்யும்  மருந்தை  விட்டு
மெய்யுலகாம்  மறுமையதை  இழந்து  நிற்பான்!
                          மிருகங்கள்  உண்மையிதைக்  கூறா  நிற்கும்.

அதிரை அஹ்மத்

0 Responses So Far:

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.