Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label j1. Show all posts
Showing posts with label j1. Show all posts

படிக்கட்டுகள் - 4 9

அதிரைநிருபர் பதிப்பகம் | November 03, 2016 | , , ,


போன வாரத்தில் எழுதிய Time Managementல் சில விசயங்களும் சேர்த்திருக்கலாம் எனும் அளவுக்கு முக்கியமான விசயம்;

அப்பாயின்ட்மென்ட் கொடுத்த நேரத்தில் சரியாக இருக்க வேண்டும். டிராபிக் ஜாம் எதுவும் தடையாக இருந்தால் எவ்வளவு நேரம் தாமதமாகலாம் என சொல்வதுடன் ஒரு  Sorry சொல்லிவிடுங்கள். உங்கள் மீது நிச்சயம் மதிப்பு கூடும்.

ஆனால் எப்போது பார்த்தாலும் தாமதமாக போகும் ஆளாக இருந்தால் ஒரு காமெடிபீசுக்கு உள்ள மதிப்புதான் நமக்கு கிடைக்கும். வருதப்படுவான்பா என நினைத்து எல்லோருக்கும் ஒரே நேரத்தில் அப்பாயின்ட்மென்ட் கொடுத்தால் நிறைய பொய் சொல்ல வேண்டிவரும். எதிர்த்தார்போல் உட்கார்ந்து கேட்பதும் மனிதன் தானே. அவனுக்கு பொய் என்றால் எதுவும் தெரியாதா என்ன?

ஒருவர் உங்களுக்கு அலுவல் மற்றும் முக்கிய விஷயங்களுக்கு SMS செய்தால் அது உங்களுக்கு கிடைத்து விட்டது என்பதற்கு Reply SMS   “OK”  என அனுப்பிப்பாருங்கள். உங்கள் மீது ஒரு மதிப்பு அவருக்கு இருக்கும்.

The Mask

முகமூடிக்கும் மனித மனத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. வெளியில் தான் எப்படி ஆகப்போகிறேன் என்பதை சத்தம்போட்டு சொல்வார்கள். ஆனால் மனதுக்குள் அவர்களிடம் அந்த தீர்க்கம் இருக்காது. இது இவர்கள் செய்யும் தொழில் / படிப்பு இதில் அப்படியே பிரதிபலிக்கும். தீர்மானத்துடன் வேலை செய்பவர்களிடம் ரிசல்ட் எப்போதும் உருப்படியாக இருக்கும்.

அப்படியானால் நாம் போட்டிருக்கும் முகமூடி என்ன என்பதை அறிவது முக்கியம். தன்னை ஒரு பயில்வான் மாதிரியும் , டெர்ரர் பார்ட்டி மாதிரி காண்பித்துக் கொள்பவர்கள் மனதுக்குள் சரியான பயந்தாங்கொள்ளியாக இருப்பார்கள். தாயத்து பார்ட்டிகளும் இதில் அடங்கும். நம்மில் சிலர் கொஞ்சம் அளப்பரை பார்ட்டியாக இருந்து 'நான் போனவுடனேயே தடுமாறிட்டான், கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியலெ. எப்படி சார் இவ்வளவு விசயம் தெரிந்து வச்சிருக்கீங்க'னு கேட்டான் என்று எப்போது பார்த்தாலும் தன்னுடைய பராக்கிரமங்களை அடிக்கடி அளந்து தள்ளுகிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையிலும் எதுவும் ஈசியாக முடியாது.


ஒரு நியூஸ்பேப்பர் வாங்கப்போனாலும் அதில் கூட கடைக்காரன் அவனிடம் பிரச்சினை செய்வான். காரணம் என்ன தெரியுமா?அது அவனுடைய  personal creation அவன் எனர்ஜி பிரச்சினைகளை எதிர்பார்த்தே இருக்கும். அவனுடைய ஈகோவை குளிர்விக்க இது போல் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். தன் எனர்ஜி எதில் இயங்குகிறது எனத்தெரியாமல் சிலர் கஸ்டமர்களிடம் விவாதித்து ஜெயிக்க நினைப்பார்கள். ஒன்று இதில் சுத்தமாக மறந்து விடுகிறோம் நம் கஸ்டமருக்கும் ஈகோ இருக்கிறது. தன்னை தோற்கடித்தவனிடம் எந்த மனிதனும் அன்புடன் திரும்பி வருவதில்லை. அப்படி வந்தால் அவன் மகான் / அல்லது ஞாபக மறதிக்காரன்.

செய்யும் வேலையில் / தொழிலில் பயத்துடன் அணுகும் ஒவ்வொரு விசயமும் உங்களுக்கு இன்னும் தேவையில்லாத பயத்தைத்தரும் [OR சொந்த ஆப்பை நீங்கள் கூர்சீவுகிறீர்கள் என அர்த்தம்.]. நீங்கள் செய்யும் வேலையில் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் எனும் எண்ணம் அடிக்கடி வந்து போகலாம். ஆனால் உங்கள் வேலையில் எத்தனை பேர் பயன் அடையப்போகிறார்கள் என நீங்கள் ஒருமுறை சிந்தித்தால் அந்த வேலை ஒரு கலை போல் உங்களிடமிருந்து வெளிப்படும்.

உதாரணம்: நீங்கள் கம்ப்யூட்டர் விற்பனையில் இருக்கிறீர்கள், அந்த கம்ப்யூட்டரின் டெக்னிக்கல் விசயங்கள் சொல்வதுடன் அது உங்கள் கஸ்டமரின் அன்றாட வாழ்க்கையில் அவரது வேலைகளை எப்படி எளிதாக்கும் என நீங்கள் தெளிவாக்கினால் உங்கள் மீது ஒரு தனி மரியாதை உங்கள் கஸ்டமருக்கு ஏற்படும்.. அதை விட்டு எடுத்த உடன் அதன் விலை எவ்வளவு என சொல்வது முறையில்லாத சேல்ஸ் டெக்னிக். ஒரு கஸ்டமர் தனக்கு என்ன Benefit என மட்டும்தான் பார்ப்பார். திருப்தியிருந்தால் விலை ஒரு தடையில்லை.

ட்ராவல் லைனிலும் அப்படித்தான், நீங்கள் சொல்லும் ட்ராவல் பேக்கேஜ் எப்படி அவர்களின் அன்றாட அவசர உலகத்திலிருந்து ஒரு அமைதியான ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் என சொல்லிப்பாருங்கள் the deal  can be closed much easily.

Third Party Sales referralsம் முக்கியம். மற்றவர்கள் எப்படி பயன் அடைந்தார்கள். அவர்கள் உங்களின் சேவையில் எப்படி திருப்தியடைந்தார்கள் என்று சொல்வது ஒன்றும் தம்பட்டம் அல்ல.  Sometime third party referral helps customer to make decision. 


The Empty Glass; [OR The Empty Bowl] 

இந்த காலிக்கோப்பை தத்துவம் படித்திருப்பீர்கள். ஒரு ஞானியிடம் தனக்கு பல விசயம் தெரிந்து இருக்கிறது என சொல்லி உங்கள் அறிவை கற்றுக்கொள்ள வந்திருக்கிறேன் என சொன்ன சீடனிடம். உன் கோப்பை காலியாக இருந்தால்தான் நான் நீர் நிரப்ப முடியும் என ஞானி சொன்னதாக: இதில் தெளிவு என்னஅறிவுப்பசி இல்லாமல் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இல்லாமல் "எனக்குத்தான் தெரியுமே" என்று இருந்து விட்டால் புதிய முன்னேற்றம் என்பது கனவில் கூட கைவசப்படாது.

தொழிலில் அப்டேட் ஆகாமல் இருந்தால் எப்படி வாழ்கை மட்டும் அப்டேட் ஆக இருக்கும்?.

Law Of Attraction & Law of  Vibration

உங்கள் எண்ணமும் எனர்ஜியும் எதில் நிலைத்திருக்கிறதோ அதில் அதாக நீங்கள் மாற முடியும்.உங்கள் இன்றைய சூழ்நிலையை நிர்ணயிப்பது முன்பு உங்களிடம் இருந்த Law Of attraction தான். உங்களைப்பற்றிய எண்ணம் என்ன என நான் உங்களை எழுதச்சொன்னால் பெரும்பாலும் எல்லோரும் நான் சிம்பிளானவன், இந்த நிறத்தில் உடை உடுத்துவேன் , இப்படித்தான் எல்லோரும் எழுதுகிறார்கள். ஆனால் தன் கனவுகளை சாதித்தவர்களாக அவர்களாலேயே எழுத கை வருவதில்லை. இது உங்களின் Prosperity Consciousnessக்கு மிகவும் முக்கியம். எதையும் நெகடிவ் ஆக சிந்தித்துவிட்டு, முன்னேறுவதை பற்றி பேசினால் 300 தடை சொல்லி, அதற்கு காரணம் "யார் சொல்லு பேச்சு கேட்கிறா! எல்லாம் தலை படிக்கிறானுக" என சொல்லும் பெரும்பாலானவர்கள் grounded in “Energy of Poverty”.  ஒன்றுமே செய்யாமல் இருந்தால் பாதுகாப்பானது  என நினைப்பார்கள். கடைசியில் அவர்களை பாதுகாக்க ஆள் தேவைப்படும் சூழல்தான்.

தன்னை ஒரு பணக்காரன், ஆரோக்கியமானவன் , சாதிப்பவன் இப்படி சொல்வதையோ / எழுதுவதையோ ஏதோ தேசத்துரோகம் மாதிரி நினைக்க பழகிவிட்டோம். கொஞ்சம் சத்தம் போட்டு சிரித்தாலே திட்டு வாங்கும் முன்னோர்கள் வழி.தானாக ஏற்படுத்திக்கொண்ட வெட்டித் தத்துவங்கள். இதில் சில பேர் சொல்வது இன்னும் அதிசயம். ஏனெனில் இவர்களுக்கு முன்னேர ஆசை இல்லாமல் இல்லை. ஆனால் தானாக ஏற்படுத்திக் கொண்ட சிறையிலிருந்து இவர்கள் வெளிவரத்தயாராக இல்லை. All are “Mental Prisons”

நம் ஆட்களின் வெட்டித்தத்துவங்கள் சில.
# பணம் ஒரு பேய்
# பணம் வந்தால் நிம்மதி போயிடும்
# பணக்காரன் என்றாலே "எங்கோயோ லவட்டிட்டு வந்துட்டான்யா"
# பணம் உறவை முறிக்கும்.
# பணம் நிறைந்தால் பிள்ளைங்க எல்லாம் கெட்டுடுவாங்க
# பணம் மனிதர்களை பணத்துக்கு அடிமையாக்கும்


என்னுடைய கேள்வி இதுதான்..
இவ்வளவு நெகட்டிவ் எண்ணங்களை வைத்துக்கொண்டு எப்படிப்பா பணத்தை சம்பாதிக்க போறே??

தொழில் தர்மம் தாண்டி தொடர்ந்து வெற்றி அடையமுடியாது. ஒவ்வொரு தொழிலும் ஒரு ‘DEMAND” உங்கள் மீது வைத்திருக்கும். காலை பேப்பர் வியாபாரம் செய்ய கடை ஆரம்பித்து காலையில் எனக்கு 8 மணிக்கு மேல்தான் எழுந்திருக்க முடியும் என சொன்னால் எப்படி?. வொர்க்சாப்பில் மெக்கானிக் வேலைக்கு வந்து எனக்கு ஸ்பானர், எண்ணெய்கிரீஸ் என்றால் அலர்ஜி என்றால் என்ன சொல்வது.

நீங்கள் அன்றாடம் செய்யும் வேலையை திட்டிக் கொண்டே செய்தால் எதுவும் சிந்தனைக்கு வராது. கடைசியில் மிஞ்சுவது நோய்தான், தேவையில்லாத டென்ஷன். டென்ஷனில் உங்கள் சுவாசம் குறையும். சுவாச அளவு குறைந்தால் உங்கள் ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவில் குறைவு இருக்கும் ஆக்ஸிஜன் உங்கள் ஆர்கனுக்கு போதாமல் போகும்போது நோய் ஆரம்பிக்கும்.


இப்போது நன்றாக மூச்சு இழுத்து விடுங்கள் ஒரு 3 முறை......
தொடரும்...
We will see more detail in Next Episode…
ZAKIR HUSSAIN

படிக்கட்டுகள் 2

அதிரைநிருபர் பதிப்பகம் | September 21, 2016 | , , ,


மனிதனின் செயல்பாடுகளில் மாற்றம் , முன்னேற அல்லது உருப்படாமல் போக எப்படி நிகழ்கிறது என்ற மெக்கானிசம் புரிந்தால் எப்படி ஒரு மனிதனின் வாழ்வில் முன்னேற்றம் சாத்தியம் என்பது புரியும்.

முதலில் நமது எண்ணங்கள் நமது உணர்வுகளின் வழியாக ஒரு உருவாக உள் வாங்கப்படுகிறது. நாம் அன்றாடம் கேட்கும் விசயம், ருசிக்கும் உணவு , நுகரும் வாசனை , பார்க்கும் விசயங்கள் இவை எல்லாம் ஒரு மனிதனை ஃபார்மேட் செய்கிறது.

நடுக்கும் டோக்யோ குளிரில் கெட்டிச்சட்னியுடன் இட்லி கிடைக்குமா என்று அலைவது ஃபார்மேட் மாற முடியாமல் அடம் பிடிக்கும் கம்ப்யூட்டர் மாதிரி. புதிதாக சொல்லும் / அல்லது இன்ஸ்டால் செய்யப்படும் ப்ரோக்ராமை ஏற்றுக் கொள்ளாத சூழல்தான் மனிதனுக்கும். ஆனால் அதற்கான ஒரு பேட்ச் வொர்க் செய்து விட்டால் எப்படி கம்ப்யூட்டர் நம் இஷ்டப்படி அடுத்த சூழலுக்கு கொண்டு செல்ல முடியுமோ அது போல்தான் மனிதனின் ரிசல்ட்டும். உணர்வுகளின் மூலம் பதியப்படும் விசயங்கள் மேலோட்டமாக பதியப்பட்டு  சரியா / தவறா என சரி பார்க்கப்பட்டு ] பிறகு ஆழ்மனதில் பதியப்படுகிறது. ஆழ்மனதில் பதியப்பட்டால் இனிமேல் அது தனது உடம்பின் செயலாக மாற்றம் அடையும் போது சரியான ரிசட்டை தரும்.

ஒரு சின்ன உதாரணம்... முன்பு நாம்  பரீட்சைக்கு எப்படி படித்தோம். பரீட்சை தேதி அறிவித்தவுடன்  நம் எண்ணம் முழுக்க அந்த தேதியை எத்தனை முறை நினைத்திருக்கும். பிறகு என்ன செய்தோம்... நம்மிடம் உள்ள வேடிக்கை விளையாட்டு எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விட்டு பாட புத்தகம்தான் எப்பொதும் பக்கத்தில். நம் உடம்பு நம் எண்ணத்துடன் ஒத்துழைத்தது. எவ்வளவு சோம்பல், உடல் நலக்குறைவையும் மனது ஏற்றுக் கொள்ளாததால் நமது ரிசல்ட்டை நோக்கியே நம் வாழ்க்கை அமைந்தது. 

அப்போது நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுத்தோம்??. நம் வீட்டில் நடந்த முக்கிய தேவைகளை விட நம் முன்னேற்றமே முக்கியமாக இருந்தது. ஏனெனில் நம் சப் கான்சியஸ் மைன்ட் தெளிவாக பதியப்பட்டிருந்தது. எப்போது நமக்கு சந்தேகமும் / பயமும் நம்மை ஆட்கொள்கிறதோ. அப்போதே நாம் ரிசல்ட்டை சொதப்ப போகிறோம் என்பது உறுதி. இது பரீட்சைக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் அதே விதிதான்.

இந்த விசயங்களை சரியாக புரிந்துகொள்ள இந்த படம் உதவும் என நினைக்கிறேன். 


உங்கள் உணர்வுகள் மூலம் பதியப்படும் விசயங்கள் உங்கள் முதல் மனதில் பதிந்து [ வடிகட்டி] பிறகு ஆழ்மனதில் பதியப்படும் விசயம் நடந்து அதற்கு தகுந்தாற்போல் உங்கள் செயல்கள் உடம்பின் உதவி கொண்டு நடந்து. இதுவரை நீங்கள் சாதித்தது அல்லது சாதிக்க தவறவிட்டது என்ற எல்லா விசயங்களும் நடந்து இருக்கிறது. இதில் உங்களின் நம்பிக்கை ரேகைகள்[ Belief Layers]  என்பது அவ்வளவு சீக்கிரம் அழிந்து போகாது [ கனவில் கூட நாம் பாம்பு , பல்லி சாப்பிட மாட்டோம் ] இதே நாம் சீனனாக பிறந்து இருந்தால் இது போன்ற எத்தனையோ " ஊர்வன' சமாச்சாரங்கள் ஸ்வாகா ஆகியிருக்கும். இதுவும் நம்பிக்கை சார்ந்தது தான்.

எனவே நம்பிக்கையை மாற்றி அமைக்கும் போது பல நடவடிக்கைகளில்  மாற்றம் ஏற்படுகிறது.
  1. இதுவரை நீங்கள் உங்கள் ஹெல்த் விசயங்களில் என்ன நம்பிக்கையில் இருக்கிறீர்கள். ?
  2. பணம் [Money]  என்ற சக்தியில் உங்கள் எண்ணம் எவ்வாறு இருக்கிறது?
  3. “உறவுகள்” [ Relationships]  என்ற விசயத்தில் உங்கள் நம்பிக்கை எப்படி இருக்கிறது.?
  4. சமுதாயம் [society/ community]  பற்றி உங்களின் எண்ணம் / நம்பிக்கை எவ்வாறு இருக்கிறது?
  5. வாழ்க்கையில் எவ்வளவொ ரூல்டு / அன்ரூல்டு நோட்டு வாங்கி எழுதிவிட்டோம். இதை ஒவ்வொரு தலைப்பிலும் உங்கள் எண்ணத்தை எழுதிப்பாருங்கள். நீங்கள் எழுதிய படியே உங்கள் ரிசல்ட்டும் இருக்கும்.
பொதுவாக நம் பகுதி பெண்கள் சம்பாதிக்க போகாமல் இல்லத்தரசியாகவே இருக்கிறார்கள். சரி நாம் தான் பணம் சம்பாதிக்கும் வேலையெல்லாம் இல்லையே இது நமக்கு தேவை இல்லை என்று நினைக்கலாம். சம்பாதிக்காவிட்டாலும் மேலே சொன்ன அனைத்து விசயங்களுக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்கிறது. தொடர்பு இல்லாதவர்கள் ..குழந்தைகள் , புத்திசுவாதீனமில்லாதவர்கள் [முன்பு ஞானிகளும் இதில் இருந்தார்கள், இப்போது ஞானிகளப்பற்றி சரியாக ஸ்கேன் செய்யாமல் எதுவும் எழுத முடியவில்லை.]

அவநம்பிக்கையுடன் எதையும் அனுகாதீர்கள்.

இதுவரை பணம் சம்பாதிப்பது என்ற விசயத்தில் என்ன உங்கள் எண்ணமோ அவ்வாறாகவே உங்கள் ரிசல்ட்டும் இருந்திருக்கும். நீங்கள் கடனை அடைக்கவும் , மாதாந்திர செலவுக்காகத்தான் இப்படி பாடுபடுகிறேன் என்று நினைக்கிறீர்களா. உங்கள் ரிசல்ட் = பாடுபடுவீர்கள், மாதாந்திர செலவு ஏதோ  சரிவரும். கடன் அப்பப்ப மேலே கீழே போய்வரும். ஏனெனில் நீங்கள் அட்ராக்ட் செய்வது சுத்தமான அக்மார்க் நெகடிவ் எனர்ஜி. இதையே ஏன் நீங்கள் சுபிட்சமாக சிந்திக்கமுடியாமல் போனது.

சாதித்த ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிகவும் அடிமட்டத்துக்கு தள்ளப்பட்ட சூழலில்தான்  “நான் நிமிர்ந்து நிற்பேன் என்ற உத்வேகமே பிறக்கிறது. எந்த சூழலிலும் அவர்கள் தன்மீது அவநம்பிக்கை கொள்ளவில்லை... நீங்கள் எப்படி?

யாரையும் பார்த்தவுடன் உங்கள் மெடிக்கல் ரிப்போர்ட்டை ஒப்பிக்கும் பழக்கம் உங்களிடம் இருக்கிறதா?.. உங்கள் ஹெல்த் சம்பந்தமாக உங்களின் ஆழ்மனதுக்குள் அப்படி என்ன இவ்வளவு நெகடிவ் விசயங்களை புதைத்து வைத்து இருக்கிறீர்கள்?.

சிலர் மாடிப்படி ஏறும்போது மூச்சு வாங்கினாலே அதற்கும் ஹார்ட்பிரச்சினையுடன் சம்பந்தப்படுத்தி பேசுவார்கள். ஹார்ட் ரேட்டை அதிகரிக்கும் எல்லா விசயங்களுக்கும் அதை சமன்செய்ய நுரையீரலின் அதீத செயல்தேவை என்பது இயற்கை.

சிலர் கொஞ்சம் அதிகம் நடந்தால் வரும் மூட்டுவலிக்கு தனக்கு வயதாகிவிட்டது...ஆர்த்ரைட்டிஸ்..என்று ஏதாவது 'மருத்துவ சிறப்பிதழ்" என்று கண்ட ஆஸ்பத்திரிகள் விளம்பரம் செய்யும் வார இதழ்களை படித்து விட்டு தனக்கு அதில் சொன்ன நோயெல்லம் இருக்கிறது என்று மனதுக்குள் ஒரு படம் ஓட்டிக்கொண்டிருப்பார்கள்.

இதில் ஏன் உங்கள் எண்ணம் அவநம்பிக்கையில் சிக்கி கிடக்கிறது. 80 வயதிலும் என்னால் முடியும் என்று எவ்வளவொ பேர் உலகத்தில் சாதிக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் மீது அவர்களுக்கு அவநம்பிக்கை இல்லை. நீங்கள் எப்படி? . 

இப்போது ஓரளவு புரிந்து இருக்கும்....உங்கள் எண்னத்தையும் நம்பிக்கையும் மாற்றினால் உங்கள் ரிசல்ட் மாறும். முதலில் ரிசல்ட்டை மாற்ற எப்படி உங்கள் எண்ணம் / நம்பிக்கை உங்கள் ஆழ்மனதில் பதிந்தது என்ற விசயம் தெரிந்தால் தேவையில்லாததை தூக்கி எறிவது மிக எளிது.

இதை இன்னும் சரியாக செய்ய இந்த விசயங்களை நீங்கள் படித்து விட்டு போகாமல் உங்கள் எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் எழுதிப்பார்த்தால் நீங்கள் எந்த விசயங்களில் மாற்றி அமைத்துக்கொள்ள முடியும் என்று உங்களுக்கே தோன்றும். நான் இதை எனக்காக 18 வருடங்களுக்கு முன் செய்தேன்.

வாழ்க்கையில் முன்னேர நினைக்கும் நீங்கள் என்ன விசயங்களை நினைக்கிறீர்கள், என்ன விசயங்களை பேசுகிறீர்கள், என்பதை நீங்கள் தான் சோதித்துக் கொள்ள வேண்டும். இதற்கெல்லம் இன்னும் எந்த லேபரட்டரியும் இதுவரை இல்லை.

இந்த எபிசோட் கொஞ்சம் ஹெவி என நினைக்கிறேன். அதனால் நிறைய எழுதவில்லை. சரியாக புரிந்து கொண்டால் மனசு லேசாகும் என்பது மட்டும் உறுதி.

ZAKIR HUSSAIN

படிக்கட்டுகள் - 22 7

அதிரைநிருபர் பதிப்பகம் | May 22, 2016 | , , ,

தலைமைத்துவம் [Leadership]  என்பது ஏதோ கட்சிக்கும், நிறுவனங்களுக்கும் , ஏதோ ஒரு குழுவுக்கும் என்றோடு இல்லாமல் தலைமைத்துவம் என்பது நம் வாழ்வில் நிழல்போல் வரக்கூடிய ஒர் தன்மை.

ஒரு மனிதனின் தலைமைத்துவத்தின் தொடக்கம் அவனது மனைவியின் அங்கீகாரத்தில் ஆரம்பிக்கிறது. கல்யாணமான புதிதில் தான் ஒரு ஹீரோ என சொல்கிறமாதிரி நடப்பதை [அல்லது நடிப்பதை]நம்ப ஆரம்பிக்கும் மனைவியிடம் அங்கீகாரத்திற்கு மனிதன் தன்னை சில கஷ்டங்களுக்கும் உட்படுத்தி தன் சாதனையை நிலை நாட்ட ஆரம்பிக்கிறான். சிலர் முயற்சிகள் அற்றுப்போய் 'காமெடி பீஸ்" மாதிரி  நடக்க ஆரம்பித்தவுடன்  'என்ன நீங்க சொன்ன மாதிரி நடந்துக்க தெரியலையே' என்று என்று சொல்லும்போதே தலைமைத்துவத்தின் ஆணிவேரில் ஹைட்ரோகுலோரிக் ஆசிட் ஊற்றப்படுகிறது என்று அர்த்தம். 

சில சமயங்களில் குடும்பத்தில் நீங்கள் பெரிதாக நம்பியிருக்கும் சிலர் பேசுவதை எதிர் கொள்ளும்போது அந்த வார சீரியல் 'தொடரும்" போடும் போது உறைந்து நிற்கும் கேரக்டர் மாதிரி பல சமயங்கள் உங்களுக்கு கிடைக்கும். இதெற்கெல்லாம் கலங்கி நிற்பது ஒரு நல்ல லீடர்ஷிப் குவாலிட்டி அல்ல.



இது தெரியாமல் அல்லது புரிந்து கொள்ளாமல் 'ஙே" என்று விழிக்க ஆரம்பித்தால்  கால ஒட்டத்தில் "ஒப்புக்கு" அழைக்கப்படும் பெரியவர்கள் லிஸ்ட்டில் மட்டும்தான் நம் பெயர் இருக்கும். குடும்பத்தில் எடுக்கப்படும் பல முடிவுகளை நீங்கள் கேள்விப்படும் நேரத்தில் அந்த முடிவுகள். முடிவுக்கே வந்திருக்கும்.

இது உங்களை பயங்காட்டும் ட்ரைலர் அல்ல. "தூங்காத நிலை" என்று ஒரு நிலை வாழ்க்கையில் இருக்கிறது. மனிதன் படுத்து தூங்கும் செயலுக்கும் இதற்கும் புலிமார்க் சீயக்காய்தூளுக்கும் புலிக்கும் உள்ள சம்பந்தம்தான் அது. இதை சிலர் மதத்தோடு சேர்த்து கோடி கோடியாக பணம் பன்றாங்க. இதைப்பற்றி வேறு சமயத்தில் விவாதிக்கலாம்.

Qualities of Good Leaders. 

வாழ்க்கையில் எப்போதும் உற்சாகம் குறையாமல் இருப்பார்கள். சரி இவர்களுக்கு சோகமே வராதா என நீங்கள் நினைக்களாம் , வரும்..ஆனால் ஒரு சராசரி மனிதனுக்கு எப்போது பார்த்தாலும் எதிலும் சோகமாய் வந்து கொட்டும் சோகம் அவர்களிடம் இருக்காது. சோகமான நிகழ்வுகளிலும் 'இதிலும் நான் ஏதோ கற்றுக்கொள்ள தான் இறைவன் இந்த சோதனையை எனக்கு தந்து இருக்கிறான்' என்று ஏற்றுக்கொள்வார்கள். 
 
      Leadership by ACTION, not by Position:  

எங்கும், எதிலும் இப்போது உள்ள சமுதாயம் தனக்கு செய்தி தெரிவிக்கப்படுகிறதா என்பதில் கவனமாக இருக்கிறது. இதை விட்டு 'பெரியவங்க செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும்" என்ற கி.மு வில் உள்ள விசயங்களை அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. எப்படி சரியாக இருக்கும் என்ற விளக்கமும் இப்போது உள்ள சமுதாயத்துக்கு கிடைக்க வேண்டும். அப்படியானால் தலைமைத்துவம் என்பது "எனக்கு தெரியாததா...எத்தனை வருசங்களை கடந்து வந்திருப்பேன்" என்ற ஸ்டேட்மென்ட் அவ்வளவு எடுபடாமல் இன்றைவரை அதற்காக உங்கள் செயல்பாடு என்பது என்ன என்பதில்தான் இருக்கிறது. அதனால்தான் தொடர்ந்து செயலிழந்து போன தலைவர்கள் குடும்பமாக இருந்தாலும் சரி, நிறுவனமாக இருந்தாலும் சரி இயற்கையாகவே ஓரங்கட்டப்படுகிறார்கள்.

கற்றுக்கொள்ளும் அறிவுத்தாகம் என்பது ஒரு நல்ல தலைவனின் தரம் சார்ந்தது. உங்கள் நிறுவனத்தில் நீங்கள் தலைவரா...சாதாரண ஊழியரிடம் கூட ஒரு நல்ல விசயத்தை கற்றுக்கொள்ள தயங்கவேண்டாம். அப்படியே கற்றுக்கொண்டாலும்  உங்கள் இமேஜ் உயரும், அதைவிட டாப் மேனேஜ்மென்ட்டுக்கும் ,கடை நிலை ஊழியருக்கும் உள்ள உறவு இன்னும் பலப்படும். இதனால் எதிர்காலத்தில் வரும் விரிசல்கள் சரி செய்ய இந்த உறவுப்பாலம் உதவியாக இருக்கும். இதற்குத்தான் ஒரு மிகப்பெரிய மந்திரச்சொல் என்று ஒன்று உண்டு அது. I need your help?.... எவ்வளவு பெரிய கோபக்காரனையும் உங்களுக்கு சாதகமாக்க இந்த ஆரம்ப வார்த்தைகள் உதவியாக இருக்கும். குடும்பங்களிலும் அப்படித்தான், வெகுநாட்களாக ஒத்துவராத அண்ணன் , தம்பி பிரிவில் கூட  மனசங்கடங்கள் வரும் சூழ்நிலையில்' எனக்கு ஏன் நீ உதவி செய்யக்கூடாது ? ' என்று கேட்டு விட்டால் இன்னும் உறவு கெடாமல் காப்பாற்றப்படலாம்.  

ஒரு சிறந்த தலைமத்துவத்தில் இருக்கும் ஒரு மனிதன் எப்போதும் நிஜத்தோடு ஒன்றியிருப்பான் [Being relevant] எப்போது பார்த்தாலும் பழையபுராணம், டெலிஃபோன் எக்ஸேஞ்சில் ஒயரை கழட்டி மாட்டி கனெக்சன் கொடுத்த டெலிபோன் காலத்தில் சாதித்தையெல்லாம் இப்போது உள்ள கேலக்ஸி நோட் சமுதாயத்துடன் கதைத்துகொண்டு [ அதையும் அவர்கள் காது கொடுத்துதான் கேட்கிறார்கள் என்று நம்பி] தன்னை ஒரு தலைவராகவே கற்பனையில் வளம் வருவது அரசியல் கட்சிகள் ஊழலை ஒழிக்கப்போகிறேன் என்று சொல்வதுமாதிரி 'ஒட்டாத உண்மை".

ஒரு சிறந்த தலைவருக்கான தரங்களில் ஒன்று எப்போதும் பொறுப்பு எடுத்துக்கொள்வது. 'நான் உண்டு என்வேலை உண்டுனு இருப்பேன் பேர்வழிகள்' இந்த லிஸ்டில் வராது. காரணம் இப்படி தன்வேலையை மட்டும் பார்த்து, தன் குடும்பம் என்று  மட்டும் வாழ்ந்தவர்களால் மற்றவர்களின் கஷ்டங்களை ஆழமாக புரிந்து கொள்ள முடியாது.

ஒரு நிறுவனத்தில் ஒரு சேல்ஸ்மேனின் கஷ்டம் எது என்று தெரிந்தால்தான் அந்த தலைவர் விற்பனையை எப்படி அதிகரிக்க முடியும் என யோசிக்க முடியும். இல்லாவிட்டால் பண்டிகை நேரங்களில் பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டில் பொருள்களை அனுப்ப அட்டு ஐடியா கொடுக்க நேரிடலாம்.

ஒரு தலைவனாக இருக்க முதலில் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று காது கொடுத்து கேட்கும் தன்மை முதலில் இருக்க வேண்டும். அதனால்தான் இரண்டு காது , ஒரு நாக்கு கொடுத்திருக்கிறான் இறைவன் என்ற சொல்லே இருக்கிறது. சிலர் ஒரு நாக்கை வைத்து , அதற்குள் பிளேடு, அரிவாள் எல்லாம் எக்ஸ்ட்ரா பிட்டிங்க் செய்து பல குடும்பத்தில் குழப்பத்தையும், பல ஆட்களின் சோற்றில் மண் அள்ளிப்போடும் வேலையை செவ்வனே செய்து வருகிறார்கள். பின் காலத்தில் கஷ்டம் என்று வந்தவுடன்.."எனக்கு ஏன் இப்படி?" என்று யோசிக்கும் இவர்கள். 'நான் எப்படி?" என்று யோசிப்பதே இல்லை.  சரியாக காது கொடுத்து கேட்காமல் தான் வைத்ததுதான் சட்டம், அறிந்தது அறியாதது அனைத்தும் அறிவோம் என்று நடந்தால் சீக்கிரம் படமாக தொங்கிவிடுவோம்.

உங்களிடம் சரியான தலைமைத்துவம் இருக்கிறதா என்பதின் முதல் படிகளில் ஒன்று . "கெளரவம்" இது அகந்தை அல்ல. 'இந்த மாதிரி கேவலமான வேலையெல்லாம் இந்த ஆள் செய்ய மாட்டான்" என்று சமூகம் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு உங்கள் நடத்தை இருந்தால் அதற்கு கிடைப்பதுதான் கெளரவம்.

தலைமத்துவத்தில் உங்களுக்கென்று தனிவழி வைத்துக்கொள்ளலாம். ஆனால் அது தேவைப்பட்ட ரிசல்ட்டை கொடுக்கவில்லை என்றால் அந்த தனிவழியை காரணம் காட்டியே நிறைய 'துப்பு" வாங்களாம். பெரிசா கிழிக்கிறதா சொன்னே" யிலிருந்து நீங்கள் கஷ்டப்பட்டு படித்த டிகிரியை முதற்கொண்டு உங்களின் ஃபைலை திறக்காமல் எடுத்து வந்து துப்புவார்கள். இதன் அளவு ரிசல்ட்டை பொறுத்து...நீங்கள் சொன்ன தனிவழி குறைவாக ரிசல்ட் தந்தால் திட்டோடு அட்வைசும், எதிர்மறையான ரிசல்ட்டுக்கு எக்கச்சக்கமான துப்பும் கிடைப்பது கியாரன்டி.

தலைமத்துவ குணங்களில் முக்கியமானவை: தனிப்பட்ட விறுப்பு வெறுப்பு இல்லாமல் எந்த மனிதரையும் எந்த பிரச்சினையும் அனுகுகுவது. எப்போது தனிப்பட்ட விறுப்பு / வெறுப்பு இருக்கிறதோ அதற்கு தகுந்தாற்போல் தீர்ப்பும் இருக்கும். பிரச்சினைகளின் தீவிரத்தை கண்டுபிடித்து அதற்கு தகுந்தாற்போல் சிந்திப்பதுதான் நல்லது.

இன்னும் மிகச்சிறந்த தலைமைத்துவங்களில் ஒன்று, தனக்கு பின்னும் இன்னொருவர் இருக்கிறார் என்று சொல்லுமளவுக்கு மற்றவருக்கு பயிற்சிதருவது.

மேற்ச்சொன்ன அனைத்தையும் ஏதோ பிஸினஸ் சம்பந்தப்பட்டது என மட்டும் நினைக்காமல் ஓவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பயன்படுத்த முடியும்.   தெரிந்து கொள்வதை விட நாம் எப்படி என்று  Self Analysis  செய்து கொள்வது நல்லது. தொழிலிலும் / குடும்பத்திலும்.

ZAKIR HUSSAIN

எதில் கஞ்சத்தனம்..! 1

அதிரைநிருபர் | February 08, 2016 | , , ,

நம்மில் சிலர் எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க என்பதின் மின்னலே இதை எழுதத் தோன்றியது.

கந்தையானாலும் கசக்கி கட்டு - இந்த பழமொழியின் அர்த்தம் - கிழிஞ்சி போய் கடாச வேண்டிய துணியானாலும் , படித்துறையில் 501 பார் சோப் போட்டு துணி துவைப்பவனிடம் ஓசி வாங்கி துவைச்சு போட்டுக்கோ!! [ யாருக்கும் அந்த துணியை கொடுத்திடாதே...! அவன் அதை போட்டுக் கொண்டு 'கேன்ஸ்" திரைப்பட விழாவில் ஆஸ்காருக்கு அடித்தளம் போட்டுடுவான்] இனிமேல் பழமொழி எழுதும்போது ' பிஞ்சி போன துணியை டைலரிடம் கொடுத்து தைத்து / அயன் செய்து போடுங்கப்பா என்று எழுதர மாதிரியாவது எழுதச் சொல்லனும். அதற்கு முன்னாடி துணியை தொவச்சிடுங்கப்பா என்று எதுகை / மோனையில் யாராவது கவிஞரிடம் சொல்லி எழுதச் சொல்ல வேண்டும்.

ஆக ஆரம்பத்திலேயே சுபிட்சமான எந்த பழமொழியையும் படித்து கொடுக்காததால் இப்போதும் சிலர் எங்கள் வீட்டில் நாய்க்கு கூட கண் தெரியவில்லை, பூனைக்கு ஹார்ட்டில் ஓட்டை என்று புலம்பும் சமுதாயத்தையே உருவாக்கியிருக்கிறது.

இதில் வெளிநாட்டில் வேலைக்கு சேர்ந்து வாழும் வாழ்க்கை இருக்கிறதே, சிலரை பார்க்கும் போது அவர்களுக்கு ' மெமரி சிப்" இருக்கும் இடம் தெரிந்தால் கழட்டி மாட்டனும் போல் தோனும்.

நம் ஊர் பகுதியை சார்ந்தவர் இறந்து போன செய்தி கேட்டு போய் பார்க்க போயிருந்தேன் [இது 10 வருடத்துக்கு முன் நடந்தது]. அவர் படுத்து கிடந்த இடம் அட்டைபெட்டியை மடக்கி பாய்போல் உபயோகப் படுத்தியிருந்தார், கவலைப்பட்டேன். பிறகு கேள்விப்பட்டேன் ஊரில் பெரிய வீடு எல்லாம் இருக்கிறதாம். மற்றவர்கள் வாழ ஏன் இப்படி கஞ்சத்தனம் ?

ஒரு மனுசன் எத்தனை வருசம்தான் மத்தவங்களுக்காக வாழ்வது???..

சுகாதார விசயத்துக்கு முதலில் வருவோம். சிலருக்கு ஊரில் நல்ல வீடு இருக்கும், வீட்டில் உள்ளவர்கள் ஒரு சீரியல் விடாமல் பார்த்து முனைவர் பட்டம் வாங்கி பட்டிமன்றத்தில் திறமையாக பேசும் அளவுக்கு பெண்கள் எல்லாம் வீட்டில் இருப்பார்கள்.

ஆனால் இவன் பல்லைப் பார்த்தால் ரொம்ப நாள் மராமத்து பார்க்காத முதலாம் குலோத்துங்க சோழனின் பாழடைந்த குதிரைலாயம் மாதிரி இடிந்து, மஞ்சள் பூத்து போயிருக்கும். காரணம் பல்தேய்க்கும் பிரஸ் வாங்கினால் இவர்களின் சொத்து தேய்ந்து விடும் என்ற சயன நிலையில் இருப்பது தான்.

டூத் பிரஸ் வாங்குவதிலும் தன் பல்லுக்கு எது தேவை என்பதில் கவனம் செலுத்துவதில்லை. எது சீப் என்பதில் தான் கவனம். யாராவது புதிதாக வாங்கி கொடுத்தால் தனக்கு தேவை 'Hard’ என்று தெரிந்தும் “soft” பிரஸ்ஸை வைத்து பல வருடம் குப்பை கொட்ட நினைப்பது.

இந்த பட்ஜெட் ஏர்லைன் வந்ததில் நிறைய பேர் மிச்சப்படுத்துகிறேன் என்று கூட வருபவர்களை அடிமைகள் போல் நடக்க விடுகிறார்கள்.

சமீபத்தில் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஊர் ராமநாதபுரம் மாவட்டம், அவர் எடுத்த டிக்கட்டுக்கு [ஏர் ஆசியா] அது சென்னைக்குத்தான் போகும். ஏன் நீங்கள் திருச்சிக்கு எடுக்க கூடாது என்று தெரியாமல் கேட்டு விட்டேன்.

அதற்கு அந்த ஆள் கொடுத்த விளக்கம் இருக்கிறதே, கருட புராணத்தில் உள்ள அந்த கூபம், அக்னி குண்டம் போன்ற தண்டனைகள் ரொம்ப ரொம்ப "லைட்' என்பேன். இதில் என்ன ஹைலைட் தெரியுமா?. அவருக்கும் அவர் மனைவிக்கும் 35 வயதுக்குள் இருக்கும். இருவரும் நிறைய லக்கேஜ்களை தூக்கிக் கொண்டு சென்னையில் இறங்கி, ஆட்டோ எடுத்து , சிங்கபெருமாள் கோயில் அருகில் பஸ் ஏறி லொங்கு லொங்குனு ராமநாதபுரம் போய் சேர குறைந்தது 10 மணி நேரம் ஆகலாம் [அதுவும் இரவு நேரம்]. இதில் அவர் மிச்சப்படுத்துவது எவ்வளவு தெரியுமா வெறும் 1700 ரூபாய்தான். பெண்களை கூட அழைத்து செல்லும் கணவான்களே.இது மிச்சமா செலவா உங்களுடைய அலுப்பு, அசெளகரியம் எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறதே. ஏன் உங்களுக்கு அந்த கணக்கு மட்டும் தெரியாமல் போனது.

இதில் அந்த ஆள் எடுத்த டிக்கட்டில் 'ச்'சாப்பாடும் சேர்த்து.. 'ச்'சாப்பாடும் சேர்த்து என்று ..அந்த சாப்பாட்டுக்கு 'ச்" போட்டு ரொம்ப கேவலப் படுத்திவிட்டார்.

கோயிலில் உண்டக்கட்டி , தர்ஹாவில் நார்சா சோறு வாங்கி சாப்பிடுவதை ஏதோ ஒலிம்பிக் சாதனை மாதிரி பீத்துபவர்களை ஸ்கேன் செய்யும் கருவி கண்டு பிடித்தால் நல்லது [ தூர இருக்கலாம்ல ]

இன்னும் சில பேர் சிம்பிளாக இருக்கிறேன் என்று பெயர் வாங்குவதற்காகவே சில "திருவாளியத்தன்" வேலை எல்லாம் செய்வார்கள். எனக்கு தெரிந்து ஒரு ஆள், நல்ல வசதியான மனுசன் , சென்னையிலும், அவரது ஊர் பகுதியிலும் பல கோடி சொத்து வைத்திருப்பவர், ஆனால் அவரது செருப்பு அவரது கால் அச்சு பதிந்து ரோட்டை அவரது கால் தொட சில மைக்ரோ மில்லிமீட்டர் அளவு அடர்த்தி குறைந்திருக்கும். ஆனால் தான் ஒரு மிகப் பெரிய பொருளாதார மேதை மாதிரியும் , தன்னுடைய இன்வெஸ்ட்மென்ட் எல்லாம் வானத்தை பொத்துக்கொண்டு லாபமாய் கொட்டுகிறது என சொல்லிக் காண்பிப்பதில் வல்லவர். சமயங்களில் நான் நினைப்பது உண்டு, தனக்கு இருப்பதோ இரண்டு கால்கள்,இதைச் சரியாக பாதுகாக்க காரணம் சொல்லும் இவர் இவ்வளவு சொத்தையும் பாதுகாப்பாரா??

வாழ்க்கை முழுக்க வாழ வேண்டும் என்ற ஏற்பாட்டில் இருந்து, வாழ ஆரம்பிக்கும்போது வாழ்வின் விழிம்பில் நிற்பது தெரியாமலே போய் விடுகிறது.

எப்போது நமக்காக வாழப்போகிறோம்!

இன்னும் சில குடும்பத்து பெண்கள் திருமண விருந்துகளில் வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு சாப்பாடு எடுத்து போகிறேன் என்று நடந்து கொள்வது மிகவும் வருந்தக்கூடிய விசயம். அவர்கள் வீட்டின் ஆண்கள் சம்பாதித்த கெளரவத்தை ஒரு ப்ளேட் பிரியாணிக்கும், சில இறைச்சி துண்டுகளுக்கும் விற்று விடுவது வருந்தாமல் என்னதான் செய்வது.

கூட்ட நெரிசலில் இப்படி சாப்பாட்டுக்கு பேயாக அலைவதை யாரும் கண்டு கொள்வதில்லை என்னும் இவர்களின் நடத்தை கஞ்சத்தனத்தின் டாப் 10 வரிசையில் முதலிடம் பெறும்.

சிலர் சோப் போடுவது இயற்கையானது அல்ல, அது கெமிக்கல், பக்க விளைவுகள் / தூர விளைவுகளைத் தரும் என்று அடம் பிடிப்பதால் அநியாயத்துக்கு தானும் "நேத்திக்கட கிடாய்" மாதிரி நாறிப்போய் தான் இருக்கும் இடத்தையும் " மொச்ச" நாத்தம் நாற வைத்து சாகடிப்பார்கள். இங்கு சிலர் தான் போட்டிருக்கும் ட்ராக் சூட் / முழு அங்கி ஜிப்பா [இஸ்லாத்தை கடை பிடிக்கிறேன் என்று டிராமா வேறு] சிலர் அலையும் போது பக்கத்தில் நடக்கும்போது எப்படியாகப்பட்ட சாதுவும் கிரிமினல் ஆகி விடுவான்.

இந்த குரூப்தான் பல்விளக்கும் பிரஸ் பன்றி முடியில் செய்ததது என்று கொஞ்ச நாள் லந்து கொடுத்த குரூப். இப்போது அப்படி ஆதாரம் இல்லை என்றவுடன் கப்சிப்.

வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு சிலர் 'டீ குடிங்க" என்று சொல்வதிலேயே அவர்களின் மனதின் விசாலம் தெரியும். எனக்கு தெரிந்த ஒருவர் [சொந்தக்கார பெண்மணி] டீ குடியேன் என்று சொல்வதிலேயே அவருடைய சோம்பேரித்தனம் / “இவன் டீ வேணாம்னு சொல்லனும்” எனும் எண்ணம் எல்லாம் பம்பாய் ஸ்டாக் எக்ஸேஞ்சில் பங்குவிலை ஒடும் டிஜிட்டல் டிஸ்ப்லே மாதிரி நம் கண்முன்னே தெரியும். பிறகென்ன பரவாயில்லை இப்போதுதான் டீ குடித்தேன் என்று சொல்லி விடுவதுதான்.

இந்த ஆக்கத்தின் மூலம் என் வேண்டுகோளை நமதூர்க் காரர்களுக்கு வைக்கிறேன்.

கல்யாணத்துக்கு செய்யும் செலவில் நம் கண்முன்னே கையேந்தி யாசகம் கேட்பவர்களுக்கு முதலில் சாப்பாட்டை கொடுத்து விடுங்கள். அயர்ன் கலையாத சட்டையுடன் , உயர்தர சென்ட் போட்டு வருபவர்கள் கொஞ்சம் பொறுமை கடை பிடிக்கட்டும். 1986-ல் என் கல்யாணம் நடைபெற்ற போது எங்கள் பூர்வீக வீட்டை இடித்து புதிதாக கட்டிக் கொண்டிருந்தோம் , கான்க்ரீட் போட்டு சிமென்ட் பூசாமல் அப்போது இருந்த வீட்டில் காலை 11.30 மணிக்கே சாப்பாட்டுகாக காத்திருந்த யாசகம் கேட்கும் அந்த ஆட்களனைவருக்கும் அந்த வீட்டில் பந்தி பரிமாறப்பட்டு உணவளிக்கப்பட்டது. அதற்கு காரணம் இருந்தது என் வாப்பா சொன்ன வார்த்தைதான் ' வாழ்க்கையின் ஆரம்பமே தர்மத்தில் இருக்கட்டுமே" எனும் சொல்தான்.

கல்யாண விருந்து பட்ஜட்டில் ஏழைகள் 100 - 150 பேருக்கு உணவளிப்பதால் நாம் ஏழையாகிவிட மாட்டோம். அந்த ஏழைகளின் வயிற்றுப்பசி தீர்வதால் அவர்களின் திருப்தி இறைவனிடத்தில் இருந்து உங்களுக்கு பல விதமான நன்மைகளை தரும் [ இன்ஷா அல்லாஹ்]

மெளனம் பேசியதே.... 7

அதிரைநிருபர் பதிப்பகம் | December 23, 2015 | , , , , , ,

இது எல்லோர் மனதிலும் புகுந்திருக்கும் வலி. நிவாரணத் தைலம் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும் குறுக்கில் படுத்திருக்கும் குழந்தையை தாண்டாத மெளனப்போராட்டம்.

பிறந்து பின் பள்ளி செல்லும் வரை பெற்றோருடைய விலங்கு, பின் பள்ளிப் பருவத்தில் கற்பனையில் வாழும் காலங்களில் கனவுகளின் விலங்கு, பின் மாயம் கலையும் முன் வாழ்க்கையின் அடிவாரத்தில் மனைவியின் விலங்கு... காலம் ஒரு ஓட்டப் பந்தய வேகத்தில் தொடங்க பிள்ளைகள் பின் தொடர உறவுகளின் விலங்கு... என்றாவது ஒருநாள் வானம் வெளுக்குமா, அதன் திசை நோக்கி நடந்து எழுத மை வாங்கும் திராணி வாங்கி   விட்டுப்போன வாழ்க்கையை நிரப்புவோமா?

இத்தனை பயணங்களிலும் காரை நிறுத்தி வேப்பமரக் காற்றில் பாய் விரித்து படுக்கும் தனிமையை எங்கு தொலைத்தோம். 

மலை மீது ஏறி நுனிப்பாறையின் விளிம்பில் நின்று அகன்ற பள்ளத்தாக்கை முகத்துக்கு முன் நிறுத்தி எப்போது கத்தித்தீர்த்தோம். 

காற்றின் சீற்றத்தில் ஏரியில் வரும் தொடர் அலைகளை எப்போது கால் நனைக்க கடைசியாக நின்றோம்.

பூமியில் காய்த்த பிரச்சினைகளால் வானத்து மேகங்களும் நம் வாழ்க்கையை விட்டே கண்காணா தூரம் போய் விட்டதா?.

மீண்டும் ஒரு நாள் மறுபடியும் பிறந்து வந்தா கரும்பலகை பார்த்து பள்ளியில் உட்காரப்போகிறோம்.

கொட்டும் அருவியில் குளிக்கும்போது அருவியை மீறி சத்தம் போட்டதுண்டா?

எப்போதாவது ஒரு நாள் கண்ணுக்கு கரை எட்டா தூரம் கடலுக்கு போய் அசையாத படகில் படுத்துக் கொண்டு மாலை நேரத்தில் மங்கும் வெளிச்சத்தில் மின்னல் நடனம் பார்த்து தூரமாய் கொட்டும் மழை பார்த்ததுண்டா?


விளையாத நிலத்துக்காக மழை வேண்டி இறைவனிடம் மண்றாடியது எப்போது?.  

மருந்தை யாசிக்கும் நோயாளிக்கு பணம் தந்து பிணி போக்கி மகிழ்ந்தது எப்போது.?

இரவின் மங்கிய வெளிச்சத்தில் விரும்பி பாடிய பாடல்கள் எப்போது.

வாழ்க்கையின் விசை தொலைபேசியைக்கூட அதன் விருப்பத்துக்கும் அழைப்புக்கும்தான் தொட வைக்கிறது. என் விருப்பம் மெளனிக்க நித்தம் அழைத்து அடிமையாக்கும் தொலைபேசியின் சத்தம் அற்ற நட்ட நடுக்காட்டில் என் கால்கள் மற்றும் கற்பனையில் நடக்க வழக்கம்போல், “வரும்போது பிரட் வாங்கிட்டு வாங்க வில் கற்பனை சுகம் அனைத்தும் சரிந்து விழும் சீட்டுக் கட்டாய்.

எப்போதாவது ஒரு முறை கேட்கும் பழைய பாடலிலும், சின்ன வயதில் பயன்படுத்திய சென்ட்டின் வாசனையில்  தொலைந்து போன இளமையும் , பிள்ளைகளின் கனவை சுமக்க நாம் பொதிகழுதை ஆகிப்போன சூழ்நிலையும் கனவுகளில் மட்டும் வாழசொல்கிறது. விடுமுறையின் விடிகாலை போல் உற்சாகம் தருகிறது. 

உட்கார்ந்திருக்கும் பிச்சைக்காரன் பார்ப்பது தர்மம் போடும் மக்களின் கால்களைத்தான், முடி வெட்டுபவர் பார்ப்பது என்னவோ நடப்பவர்களின் தலையை மட்டும் தான்...எல்லோருக்கும் ஒரு இலக்கு இருக்கிறது. வாழ்க்கையில் பின்னப்பட்ட வலையில் நாம் மட்டும்தான் வாழ மறந்து நமக்காக வாழ்கிறோமா? இலக்கு இல்லாமல்..
 
தேர்வு முடிந்தும் பள்ளிக்குப்போகும் மாணவனாய் மனிதனை மாற்றியது எது?, பின்னப்பட்டது  எதுவும் பிரியாமல் இருக்கிறது, மனிதன் மட்டும் கலைத்து போடப்பட்டானா?.

இனிமேலாவது நம் மனதுக்கு உணவளிப்போம், வயிற்றை நிரப்பியது நாட்களை நகர்த்தவல்ல.நாம் நகராமல் நங்கூரம் போட்டவர்களை அடையாளம் காண்போம்.

மழையில் ஒருமுறையேனும் மொத்தமாக நனைந்து பார்ப்போம்.

சுதந்திர உணர்வுகளை எதில் எல்லாம் தொலைத்தோம்?...
யாரோ ஒருவன் வானத்திலிருந்து குதிப்பதை வேடிக்கை பார்த்து..
யாரோ ஒருவனின் பயணக்கட்டுரை படித்து
யாரோ ஒருவன் ஆழ்கடல் அமிழ்ந்து பார்த்த வர்ண ஜாலங்களில்
யாரோ ஒருவன் சைக்கிளில் உலகம் சுற்றிய செய்தி படித்து...
யாரோ ஒருவனின் பனிமலை ஏற்றத்தை பார்த்து
யாரோ ஒருவனின் பச்சைக்கம்பள வயல் பார்த்து.
யாரோ ஒருவனின் செயல் பார்த்து சொக்கும் நாம் எப்போது நமக்காக வாழப்போகிறோம்.

இன்றைய பொழுதிலாவது சொந்த சிறையின் சுவற்றில் ஒரு சின்ன ஒட்டை போட்டு சுதந்திரம்  சுவாசிப்போம்...


நாளை இதுவே பூமிப்பரப்பை உயரத்திலிருந்து பார்க்கும் சுகந்த  காலங்களுக்கு ஆரம்பமாய்..

உழைத்து களைத்தவர்களின்  வியர்வை துடைக்க துண்டு எடுத்த தரவும் பழைய லெட்ஜர் பார்த்து சேவை செய்யும் இந்த நவீன உலகில் நாம் ஒரு நாள் வாழ்வோம் என்று காத்திருந்தே காலத்தை போக்கிவிடக் கூடாதென்றே இதை எழுதினேன்.

மனசு முழுக்க டன் கணக்கில் கோபத்தையும், வெறுப்பையும் சுமந்து கொண்டு நாம் வாழ முடியாது.

செத்தவனின் கதையை ஒரு வாரத்துக்கு மேல் பேசினாலே 'அலவு வலிக்குதப்பா' என்று ஆதங்கப்படும் உலகம் இது. இது தெரியாமல் உயிரோடு இருக்கும்போது மட்டும் ஏன் நமக்கு ஒரு நூற்றாண்டு பிடிவாதம்.

உங்கள் நடை பாதையெல்லாம் முள்ளை கொட்டியவர்களை மொத்தமாக மன்னித்து விடுங்கள்.  

உங்கள் முதுகுக்கு பின்னால் மண்வாரி வீசி முகத்துக்கு முன்னால் மலர் தூவியவர்களை புன்னகையோடு கைகுலுக்குங்கள். 

குப்பைகளை நெஞ்சில் சுமந்து புனிதம் போதிக்க முடியாது.

தூங்க முடியாத ஏக்கத்துடன் தொலைதூரம் போக முடியாது.

தனிமையும் மெளனமும் உங்களுக்கு மட்டும் உரிய பங்கு போட முடியாது சொத்து.  

இன்றையிலிருந்து உங்களுக்காக வாழுங்கள்.

ZAKIR HUSSAIN

Making Of "படிக்கட்டுகள்" 8

அதிரைநிருபர் பதிப்பகம் | August 26, 2015 | , ,

"படிக்கட்டுகள்" தலைப்பு வைக்கவே எனக்கு 18 பட்டி பஞ்சாயத்தின் விருப்பம் தேவைப்பட்டது. 'முன்னேற்றம், புறப்படு , விழித்தெழு" என்று நிறைய பேர் எழுதி முடித்து விட்டார்கள். இனிமேலும்  இப்படி எழுதினால் போய்ச்சேருமா என்ற சந்தேகம்தான்.

இன்னும் சொல்லப்போனால் நம் ஊர் சார்ந்த மக்கள் இன்றைக்கு அதிக அளவில் வலைப்பூக்கள் நடத்துவதில் அசத்திக்கொண்டிருக்கிறார்கள். நமது வலைப்பூக்களின் தரத்தை இன்னும் சில நல்ல விசயங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒரு முன்னேற்றத்துக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்பது என் ஆசை. அதனால் நான் எழுத எடுத்த சப்ஜெக்ட் Personal Development.

எழுதிய பிறகு இருந்த வரவேற்பு என்னை அந்த தொடருடன் தொடர்பில் இருக்க வைத்தது. அந்த 24 தொடரிலும் நான் எழுதியது வெறும் தலைப்புதான்...இன்னும் ஆழமாக எழுத முடியும். ஆனால்  குழப்பம் வரும். இதை எல்லாம் ஒரு ஒர்க்ஷாப் ஷெசனில்  4 , 5 நாள் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்களே அதிகம்.

எனக்கும் அறிவுரை வழங்குவதில் உடன்பாடில்லை, If I can bring some awareness, that itself  can be worth my effort.

நம்மைச் சார்ந்த ஒருவன் நமக்கு தெரிந்த ஒருவன் இதுபோல் எழுத முடியும் என்று சிலர் நம்பத்தயாராக இல்லை. அது அவர்களின் ஜனநாயக உரிமையாதலால். அதற்கு நான் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

நான் எழுத எனக்கு ஆதரவாக இருந்த விசயங்கள் நான் இதுவரை கற்றுக்கொண்ட சில பயிற்சிகள். அதில் சில ஒரு தீவுக்கு போய் சூரியன் உதிப்பதற்கு முன் செய்யும் சில தற்காப்பு கலையின் ஆரம்பக் கல்விகளும் / பயிற்சியும் அடங்கும். சில பயிற்சிகள் நமது தொழிலுக்கு நிச்சயம் உதவும். அவைகளில் மரம் ஏறத்தெரியாத எனக்கு ஒரு பெரிய அடுக்கு மாடி கட்டிடத்திலிருந்து செங்குத்தாக பூமியை நோக்கி முகம் வைத்து இறங்கும் பயிற்சியும் அடங்கும். [ஷேஃப்டி விசயங்கள் உண்டு].

இப்படியெல்லாம் செய்வதற்கும் வாழ்க்கையில்  முன்னேறுவதற்கும் எதுவும் தொடர்பு இருக்குமா என்று நான் அப்ரானியாக நினைத்தது உண்டு. உடலை சில தடைகளை கடக்க வைப்பதன் மூலம் வாழ்க்கையின் தடைகளை கடக்க பயிற்சிகள் கிடைக்கிறது என்பது பிறகுதான் புரிந்தது. இவை அனைத்தும் தொழிலில் team building  பயிற்சிகள்.

சமயங்களில் கமென்ட்ஸ் எழுதும் சகோதரர்களுக்கு பதில் எழுதும் நான் சாகுல் / இக்பால் / சபீர் ..இந்த மூவருக்கும் பதில் எழுதுவது இல்லை. காரணம் இந்த 3 பேரின் பெயரில் யாரையாவது நான் மைனஸ் செய்தால் என் வாழ்க்கையில் மிகப்பெரிய பகுதியை ஒழித்து எழுதியதாகிவிடும்

சாகுல்.. எல்லோருக்கும் கிடைப்பது அவரவர்கள் நட்புதான். எங்கள் இருவருக்கும் கிடைத்தது மூன்று தலைமுறை நட்பு.  எங்களின் இருவரின் பாட்டியிலிருந்து ஆரம்பித்த நட்பு, எங்கள் தந்தையினர் என்று ஆரம்பித்து இப்போது எங்கள் நட்பு என்று இருக்கிறது. சாகுல் சின்ன வயதிலிருந்தே தெரியும், ஆதலால் அவரின் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு விசயமும் எனக்கு தெரிந்தே நடந்தது.   வயதில் என்னைவிட குறைந்தவராக இருந்தாலும்  புத்திக்கூர்மையில் எனக்கு தெரிந்த மிகப்பெரிய அனுபவசாலிளை மிஞ்சக்கூடியவர்.

இக்பால்... என் நெருங்கிய நண்பர்களில் இவனும் ஒருவன். அவனது வீட்டில் அவனுடைய பெற்றோர்கள் , கூடப்பிறந்தவர்கள் அனைவரும் எனக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட அவனுக்கு கொடுக்க மாட்டார்கள்.  அந்த அளவுக்கு நான் அவன் வீட்டில் முக்கியமானவன். நான் சொல்லும் எந்த விசயத்தையும் விவாதித்து சரி / தவறு என்பதற்கு காரணம் சொல்லி சண்டை போட்டு எப்போதும் என் மீது உள்ள அன்பில் மாறாத குணம் உடையவன். சின்ன வயதில் விவாதிப்பது என்பது சண்டை போடுவதல்ல. கருத்து பரிமாற்றம் என உணர வைத்தவன். மார்க்க விசயங்களில் நமக்கு கிடைத்த ஆன்லைன் ரெஃபரன்ஸ் இவன்.  உண்மையைச்சொல்ல யாராக இருந்தாலும் பயப்படமாட்டான். சிங்கப்பூர் கவர்ன்மென்ட் மாதிரி..தப்புனா தப்புதான்.

சபீர்.... ஸ்கூல் படிப்பு / கல்லூரி என்று தொடர்ந்தாலும் ஏனோ மெடிக்கல் ரிப்போர்ட் கூட ஒன்றாக தெரியும் ஒற்றுமை எங்களிடம். நண்பனாக இருப்பது என்பது வேறு. நண்பனாகவே ஆகிப்போவது என்பது வேறு. நாங்கள் 2 வது ரகம். எதிர்பார்ப்புகள் இல்லாத அன்பு = நட்பு என்பதின் அடையாளங்கள் நாங்கள். எங்கள் சின்னம்மாவின் [சபீரின் தாயார்] செல்லப்பிள்ளை நான். இரண்டு பேரும் ஒன்றாக கால்பந்தாட்டத்தில் அடிபட்டு வர எனக்கு முதலில் மருந்து கொடுத்த தாய். நிறைய பேர் நினைப்பது நாங்கள் இருவரும் சகோதரர்கள்... எனக்கு அதில் உடன்பாடில்லை.. நண்பனாய் இருப்பதில் அதிகம் சுதந்திரம் இருக்கிறது. என் தவறுகளை இவன் கண்டித்தால் மட்டும் கேட்டுக்கொள்வேன் சின்ன வயது தொடக்கம். என் வாழ்க்கையில் முக்கிய தருணங்கள் இவன் முடிவுக்காக காத்திருந்திருக்கிறது, அன்றும் இன்றும் எப்போதும்.

படிக்கட்டுகள் எழுத நிறைய நெறியாளுகை செய்திருக்கிறான். கால ஒட்டம் பல விசயங்களை மாற்றிப் போட்டிருக்கிறது. நாங்கள் இருவரும் அப்படியேதான் இன்னும் மாறாமல்.

படிக்கட்டுகள் எழுத முக்கிய காரணங்களில் ஒன்று , நம்மைச் சார்தவர்கள் யாரும் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் என்ற என் பாசிட்டிவ் அப்ரோச்தான். பெரும்பாலும் எழுதும்போது மற்றவர்களை திறமையற்றவர்களாகவும் , ஒன்றுக்கும் உதவாதவர்களாகவும் அட்வைஸ் அள்ளிக்கொட்டும் எந்திரமாக இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நம் பகுதியை சார்ந்த அனைவரும் மிகவும் கடின உழைப்பாளிகள். சரியான வாய்ப்புகள் , வழிகாட்டிகள் இல்லாததும் அவர்களின் பின் தங்கிய நிலைக்கு காரணம்.  May be எனக்கு கிடைத்த அந்த exposure மற்றவர்களுக்கு கிடைக்காமல் இருந்திருக்கலாம். அதை ஏன் நாம் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று முதல் படிக்கட்டுகள் எழுதிய உடன் சகோதரர்கள் அபு இப்ராஹிம் / தாஜூதீன் இருவரும் தந்த ஆர்வம் தொடராக வெளிவர உதவியாக இருந்தது.   அபு இப்ராஹிமின் அர்ப்பணிப்பு உணர்வு போற்றத்தக்கது. வேலையிடத்தில் உள்ள டென்சன், மற்றும் பல வேலைகளுக்கிடையே தனது அதிரை நிருபருக்கான வேலையை தள்ளிப்போடாமல் செய்தது மிகவும் பாராட்டக்கூடியது.  தம்பி தாஜூதீன் அவர்களின் தன்னடக்கமான பண்பு போற்றத்தக்கது.

இதை எழுதுவதற்கு நான் எந்த புத்தகங்களையும் ரெஃபரன்சாக எடுக்கவில்லை. அப்படி எடுத்திருந்தால் அது நம் வழக்கம் / இனம் / மொழி சார்ந்த விசயங்களுடன் ஒத்துப்போகாது.

வெள்ளைக்காரர்களும், வெளிநாட்டினருக்கு மட்டும்தான் இதுபோன்ற விசயங்களை தொட்டு எழுத முடியும் என்ற விசயத்தில் உண்மைகள் இல்லை.
 
இந்திய தேசம் இதுவரை கணக்கில் அடங்காத ஞானிகளையும் , அறிவாளிகளையும் இதுவரை கொடுத்திருக்கிறது. ஆசியாவில் பிறந்தவர்கள் சொல்லாத பிசினஸ் சைக்காலஜியை மற்றவர்கள் சொல்லியிருப்பார்களா என்பதில் சந்தேகம்தான். மற்றும் வெள்ளைக்காரர்களின் அதிகமான அறிவுரைகள் ஒரு rat race போலத்தான் இருக்கும். ஜெயித்த பிறகு ஜீவன் செத்துப்போயிருக்கும்.

சம்பாத்யம் புருச லட்சனம்,” எவ்வளவுதான் வசதிகள் இருந்தாலும் மாதம் ஒரு வருமானம் இருக்க வேண்டும் உனக்கு" என்று சொன்ன  மர்ஹூம் சமது மாமா அவர்கள்.   [ இப்ராஹிம் அன்சாரி அண்ணனின் தந்தை ] ,  எந்த சுழ்நிலை வந்தாலும் தன்மானத்தை ஒரு சதவீதம் கூட விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து காட்டு என்று எனக்கு அறிவுரை தந்த எங்கள் முகம்மது பாரூக் மாமா [சாகுலின் தந்தை] ,ஆம்பளையா பொறந்தா ஒரு 24 பேருக்கு உணவு கொடுக்கும் அளவுக்கு சம்பாதிக்க வேண்டும், அதே சமயம் அப்படி உணவளிக்கவும் வேண்டும் என்று சொன்ன எங்கள்  மாமா  [மர்ஹூம்] முஹம்மது யூனுஸ் அவர்கள். [சபீரின் தாய்மாமா].   உழைக்க  துணிஞ்சவனுக்கு கஷ்டம் ரொம்ப நாள் இருக்காதுடா என்று சொன்ன என் தாய். "மேயப்போற மாட்டுக்கு கொம்புலெ எதுக்கு புல்லு??" என கேட்ட படிக்காத என் பாட்டி [தந்தையின் தாய்]

இவர்கள் யாரும் எந்த யுனிவர்சிட்டியிலும் படிக்கவில்லை.இது போன்ற காகிதக்கல்வி படிக்காத மனிதர்களிடம் அதிகம் நடைமுறை அறிவை கற்றுக்கொள்ள முடியும் என்பது என் நம்பிக்கை.
 
இதுவரை இந்த தொடர் எழுத எனக்கு கமென்ட்ஸ்களின் வழி உற்சாகம் தந்த அனைவருக்கும் நன்றி.

அவர்களின் பெயரை இங்கு குறிப்பிடுகிறேன். 

இப்ராஹிம் அன்சாரி அண்ணன், ஜமீல் நானா, அதிரை அஹ்மது காக்கா ,  அண்ணன் N.A.S, [சமயங்களில் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்கும் எல்லா ஸ்டேசனும் எடுக்கும் அறிவுஜீவி],   சகோதரர் கிரவுன் [சமயங்களில் டெலிபோனில் அழைத்துபேசுவார்] தம்பி யாசிர் [ஒரு அத்தியாயம் படித்து விட்டு டெலிபோனில் அழைத்து பேசினார்] சகோதரர் கவிஞர் அபுல்கலாம் [மறவாமல் எல்லா அத்யாயங்களிலும் இவரின் கவிதையான கருத்து இருக்கும் ]  

என் பாசமிகு சகோதரர்கள் நூருல் அமீன்.  அப்துல்வாஹித் அண்ணாவியார். அப்துக் ராஜிக், அப்துல் மாலிக் , எம் ஹெச் ஜஹபர் சாதிக், ZAEISA , Ara Ala , Naina [ AlKhobar ] B. Ahamed Ameen, Sister Ameena.A,  Abu Bakar [ amazan ] Abdul Malik , Alaudeen S. uroovaasi ,  Ahamed Irshad, MSM Naina Mohamed [இவரின் எழுத்துக்கு நான் ரசிகன் ],  புதுசுரபி,  LMS AbooBakar , Mohamed Buhari, SS Syed Ibrahim.A [ Dubai], அன்புடன் புகாரி , sekkana M.Nijam,  Hidaayathullah,  Adirai N.Safath,  Noor Mohamed [ My senior in school ] , Ashik Ahamed , N. fathhudeen, ஜாகிர் ஹுசைன் , நட்புடன் ஜமால் .... மற்றும் எனக்கு கல்வி தந்த SKM ஹாஜா முஹைதீன் சார் , வாவன்னா சார் , முஹம்மது அலியார் சார், திரு சீனிவாசன் சார் இன்னும் யாரையாவது எழுதாமல் விட்டிருப்பேன்.. மறதிதான்…. மன்னிக்கவும்.

 படிக்கட்டுகள் இது போன்ற நிறைய பேருடன் என்னை அழைத்துச்சென்று அன்பையும், சகோதரத்துவத்தையும், நட்பையும் எனக்கு பரிசாக தந்திருக்கிறது.

Wish You All the Best,  இறைவன் உதவியால் மீண்டும் சந்திப்போம்.

ZAKIR HUSSAIN


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு