நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

யார் தீவிரவாதி ! - விவாதக்களம் 11

அதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, மே 24, 2013 | , ,



யார் திவிரவாதின்னு உலக மெகா(!!) இணைய அறிவாளியான விக்கிப்பீடியா கட்டற்ற கலைக் களஞ்சியம் அண்ணாத்தை சொல்றாரு "அல் காயிதா உறுப்பினர்கள்‎, தமிழீழ விடுதலைப் புலிகள்‎, நக்சலைட்டுகள்‎ மற்றும் இன்னும் பல"  இவய்ங்க அமைப்பிலுள்ளவங்கள்னு பகுத்தெடுத்து பாடம் நடத்துகிறது.

அந்த கட்டற்ற கலைக்களஞ்சியமான(!!??) விக்கிபீடியாவில் "பயங்கவராதம், தீவிரவாதம், அடிப்படைவாதம்" என்ற பதத்திற்கு இப்புடி சூட்டுறாய்ங்க:-

பயங்கரவாதம் (Terrorism) என்பது ஒரு மரபுசாராப் போர்முறையும், உளவியற் போர்முறையும் ஆகும். 

இச்சொல் அரசியலோடும் உணர்வுகளோடும் தொடர்புபட்டிருப்பதால் இதனைச் சரியாக வரையறுப்பது கடினமானது. 

1988 ஆம் ஆண்டில், ஐக்கிய அமெரிக்கப் படைத்துறை நடத்திய ஓர் ஆய்வின்படி பயங்கரவாதத்துக்கு நூற்றுக்கு மேற்பட்ட வரைவிலக்கணங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. 

பயங்கரவாதத்தில் ஈடுபடும் ஒருவர் "பயங்கரவாதி" எனப்படுவார்.

பயங்கரவாதத்தைப் பல வகையான அரசியல் இயக்கங்கள் தமது நோக்கங்களை அடைவதற்காகப் பயன்படுத்துகின்றன. 

இவற்றுள் இடதுசாரி, வலதுசாரி இயக்கங்கள், மதக் குழுக்கள், புரட்சியாளர்கள், ஆளும் அரசுகள் போன்ற பலவும் அடங்கும். அரசு அல்லாத குழுக்கள் பரவலான ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டிருப்பது போர்ச் சட்டங்களைப் பயன்படுத்துவதில் பல சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.

பயங்கரவாதம், தீவிரவாதம் (Extremism) மற்றும் அடிப்படைவாதம் (Fundamentalism) ஆகியன ஒன்றோடு ஒன்று தொடர்புடையன. அடிப்படைவாதம் தமது கருத்தை பிறர் அடியொற்றி பின்பற்ற வேண்டுமெனும் நோக்கில் வன்முறை சார்ந்தோ அல்லது அதிகாரத்தின் வழியோ மேற்கொள்வது. தீவிரவாதம் எனப்படுவது அச்சமூட்டும் வன்முறை நடவடிக்கை. தீவிரவாதம் மென்பயங்கரவாதத்தின் குழந்தையாகும். மென் பயங்கரவாதம் அதிகரிக்கும் போது அதை எதிர் கொள்ள வேறு வழியின்றி நாடும் செயல்.

மேற்சொன்னவை அனைத்தும் கட்டற்ற கலைக்களஞ்சியம் (!!?) விக்கிபிடீயாவில் வெட்டி ஒட்டிப் போட்டவைகள்...

சரிங்க, நமதூரில் ஒருவரைத் தீவிரவாதச் செய்களில் ஈடுபடுகிறார் என்றும் அதனால் அவர் தீவிரவாதி என்றும் வாய்க்கூசாமல் / எவ்வித மன உறுத்தல்களும் இல்லாமல் வழக்கே போட்டிருப்பது சங்க் பரிவார் அமைப்பல்ல, போலிசாரும் அல்ல மாறாக சங்கங்களின் பரிவாரங்களை ஒன்றினைத்து இரண்டு சங்கங்களின் பரிந்துரையோடு, ஒரு பள்ளி நிர்வாகத்தின் துணையுடன் செய்திருக்கிறது.  அவரைத் தீவிரவாதியென்று முத்திரை குத்தி முடக்கவே இந்த ஆயத்தங்கள்.

இஸ்லாமிய மார்க்க வரம்புக்குள் நன்மையை ஏவி தீமையத் தடுக்கும் பிரச்சாரம் செய்பவர் தீவிரவாதியா ?

நன்மையான விஷயங்களை சொல்பவர் தீமையான விஷயங்களிருந்து விலகியிருக்கச் சொல்பவர் அதனைக் காது கொடுத்து கேட்கும் மக்களை நோக்கிச் செய்யும் பிரச்சாரம் மூளைச் சலவையா ?

தவறிழைப்பவனுக்கு தண்டனை அல்லாஹ் மறுமையில் (இறப்புக்கு பின் எழுப்படும் நாளில்) தருவான் என்று சொல்வது தீவிரவாதக் குற்றமா ? நன்மை செய்பவனுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவான் என்று சுபச் செய்தி சொல்வது தடைசெய்யப்பட்ட செயலா ?

நீதியை நிலைநாட்டுங்கள், அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். படைத்தவனை மட்டுமே வணங்குங்கள் படைப்பினங்களை போற்றாதீர்கள் என்று இறை கட்டளையை நேர்பட எடுத்துச் சொல்வது நேர்மையற்ற செயலா ?

வாருங்கள் விவாதிக்கலாம் !

அதிரைநிருபர் பதிப்பகம்

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 40 10

அதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, மே 24, 2013 | , ,


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

பெருமை கொள்வது கூடாது:

அல்லாஹ் கூறுகிறான்:

பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே. (அல்குர்ஆன்:28:83)

பூமியில் கர்வத்துடன் நடக்காதீர்! நீர் பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டீர்! (அல்குர்ஆன்: 17:37)

மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான். (அல்குர்ஆன்: 31: 18)

காரூன், மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவர்களுக்கு  அநீதி இழைத்தான். அவனுக்குக் கருவூலங்களை வழங்கினோம். அவற்றின் சாவிகளைச் சுமப்பது வலிமை  மிக்க கூட்டத்தினருக்குச் சிரமமாக இருக்கும். “மமதை கொள்ளாதே! மமதை கொள்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்என்று அவனிடம் அவனது சமுதாயத்தினர் கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன்:28:76)

அல்லாஹ் உனக்குத் தந்தவற்றில் மறுமை வாழ்வைத் தேடு! இவ்வுலகில் உன் கடமையை மறந்து விடாதேஅல்லாஹ் உனக்கு நல்லுதவி செய்தது போல் நீயும் நல்லுதவி செய்! பூமியில் குழப்பத்தைத் தேடாதே! குழப்பம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான் (என்றும் கூறினர்). (அல்குர்ஆன்:28:77)

என்னிடம் உள்ள அறிவின் காரணமாகவே இது எனக்குத் தரப்பட்டுள்ளதுஎன்று அவன் கூறினான். “இவனை விட அதிக வலிமையும், ஆள் பலமும் கொண்ட பல தலைமுறையினரை இவனுக்கு முன்பு அல்லாஹ் அழித்திருக்கிறான் என்பதை இவன் அறியவில்லையா? அவர்களின் பாவங்கள் பற்றி இக்குற்றவாளிகள் விசாரிக்கப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன்:28:78)

தனது அலங்காரத்துடன் அவன் தனது சமுதாயத்திடம் சென்றான். “காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா? அவன் பெரும் பாக்கியமுடையவனாக இருக்கிறான் என்று இவ்வுலக வாழ்க்கையை விரும்புவோர் கூறினர். (அல்குர்ஆன்:28:79)

உங்களுக்குக் கேடு தான். நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவருக்கு அல்லாஹ்வின் கூலி தான் சிறந்தது. பொறுமையாளர்கள் தவிர மற்றவர்களுக்கு அது வழங்கப்படாது என்று கல்வி வழங்கப்பட்டோர் கூறினார். (அல்குர்ஆன்:28:80)

அவனை அவனது வீட்டோடு சேர்த்து பூமிக்குள் புதையச் செய்தோம். அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யும் ஒரு கூட்டத்தினரும் இருக்கவில்லை. அவன் உதவி பெறுபவனாகவும் இல்லை. (அல்குர்ஆன்:28:81)

அந்தோ தனது அடியார்களில் தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாரளமாகவும் வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அல்லாஹ்  நம்மீது அருள் புரிந்திருக்கா விட்டால் நம்மையும் பூமியில் புதையச் செய்திருப்பான். “அந்தோ! (ஏக இறைவனை) மறுப்போர் வெற்றி பெறமாட்டார்கள் என்று முதல் நாள் அவனது நிலைமைக்கு ஆசைப்பட்டோர் அன்று காலையில் கூறலானார்கள். (அல்குர்ஆன்:28:82)

'சிறிய அளவேனும் தன் உள்ளத்தில் பெருமை கொண்ட ஒருவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்' என்று நபி(ஸல்) கூறினார்கள். அப்போது ஒருவர், ''ஒரு மனிதர் தன் ஆடை அழகாகவும், தன் செருப்பு அழகாகவும் இருந்திட விரும்புகிறார். இது (பெருமையாகுமா?)'' என்று கேட்டார். ''நிச்சயமாக அல்லாஹ், அழகானவன், அழகை விரும்புகிறான். ''பெருமை கொள்வது, சத்தியத்தை நிராகரிப்பதும், மக்களை கேவலமாக எண்ணுவதுமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 612)

''நரக வாசிகள் பற்றி உங்களுக்கு கூறட்டுமா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டுவிட்டு, கடின இதயமுடையவரும், கஞ்சத்தனம் செய்பவரும், பெருமை கொள்வோர் ஆகிய அனைவருமாவர் என்றும் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹாரிஸா இப்னு வஹ்பு (ரலி)   அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 614)
                                        
'தன் வேட்டியை பெருமையாக, (கீழிறக்கிக்கட்டி) இழுத்துச் செல்பவனை மறுமை நாளில் அல்லாஹ் பார்க்க மாட்டான் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 616)

'மூன்று நபர்களுடன் மறுமை நாளில் அல்லாஹ் பேசமாட்டான். அவர்களை தூய்மைப்படுத்தவும் மாட்டான் அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களுக்கு  கடும் வேதனை உண்டு. 1) விபச்சாரம் செய்யும் வயோதிகன் 2) பொய் கூறும் அரசன் 3) பெருமை கொள்ளும் ஏழை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 617)

'கண்ணியம் என் வேட்டியாகும். பெருமை என் மேலாடையாகும். இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றில் என்னிடம் ஒருவன் தர்க்கம் செய்தால், அவனை நான் தண்டிப்பேன்'' என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 618)

'ஒரு மனிதன் கண்கவர் ஆடையை அணிந்து கொண்டு, தன் தலையை சீவி, பெருமையான நடையுடன் நடந்து சென்றான். அவனை அல்லாஹ் பூமிக்குள் இழுக்கும்படி செய்துவிட்டான். அவன் மறுமை நாள்வரை  பூமிக்குள் அழுந்தி சென்று கொண்டே இருக்கிறான்''  என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 619)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும்..! - தொடர் - 8 18

அதிரைநிருபர் பதிப்பகம் | வியாழன், மே 23, 2013 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..


நம் அருமை நபி முஹம்மது (ஸல்) அவர்கள் தமக்காகவும், இஸ்லாத்திற்காகவும் பல வகையில் உதவிகள் தியாகங்கள் செய்தவர்களின் செயலை எண்ணி அழுதார்கள்  என்ற படிப்பினை தரும் தகவல்களைச் சென்ற பதிவில் பார்த்தோம்.

இந்த வாரம், மிகவும் உருக்கமானது. இந்தப் பதிவைத் தட்டச்சு செய்ய இரண்டு நாட்கள் எடுத்தது, காரணம் இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள உணர்ச்சிபூர்வமான சம்பவங்களின் தாக்கத்தால் என்னால் தட்டச்சு செய்ய முடியவில்லை, இருப்பினும் கண்ணீர் மல்க இதை தட்டச்சு செய்தேன்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீனால் நமக்கு இவ்வுலகிற்கு கொடுக்கப்பட்ட அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்கள், சிறு வயதில் தாயையும் தந்தையையும் இழந்து, அனாதையாகி, உணவுக்காக ஆடு மேய்த்து, தன்னுடைய பெரிய தந்தையின் அன்பான வளர்ப்பில் வளர்ந்து, தன்னுடைய நல்லொழுக்கத்தாலும் நற்குணத்தாலும் கவரப்பட்டு செல்வ சீமாட்டி அன்னை ஹதீஜா(ரலி) அவர்களை மணமுடித்து, 40 வது வயதில் நபித்துவம் பெற்ற பின் தன்னுடைய மற்றும் தன் மனைவியினுடைய அனைத்து சொத்துக்களையும் இஸ்லாத்திற்காக தியாகம் செய்து, மக்காவில் தன்னுடைய ஊர் மக்களால் கொடுமைபடுத்தப்பட்டு பிறகு மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்று, மதீனாவில் எண்ணிலடங்காக் கஷ்டங்களை அனுபவித்து, பிறகு அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் மக்காவை வெற்றி கொண்டு உலக மக்களுக்கு ஜனாதிபதியாக இருந்து, தான் இறக்கும் போது தனக்கோ தன் குடும்பத்திற்கோ எந்த பொருட்களையும் விட்டுச் செல்லாமல் மரணித்தார்கள் என்று நாம் வரலாறுகளில் படித்திருப்போம். ஆனால் நபி(ஸல்) அவர்கள் என்னதான் அல்லாஹ்வுடைய தூதராக இருந்தாலும் ஒரு சாதாரண மனிதன் எப்படி உணவின்றி பசியில் வாடிடுவானோ அது போல் தன்னுடைய வாழ்நாளில் பல சந்தர்ப்பத்தில் இருந்துள்ளார்கள், இதனை அவர்களோடு அனுபவித்த உத்தம நபியின் உண்ணத தோழர்களும் அடங்குவர். இதோ ஒரு சில சம்பவங்கள்..

ஒரு காலகட்டத்தில் மிகப்பெரும் வரட்சியான சூழல், அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அன்றாட உணவுக்கு வழியின்றி பசியோடு வாழ்ந்து வந்தார்கள். அதே பசியோடு இருந்த சஹாபாக்களும் யாரிடமும் யாசகம் கேட்காமல் நபி(ஸல்) அவர்களுடைய சபையிலே வந்தமர்ந்து நல்லுபதேசங்களைக் கேட்டு தங்களின் பசியை மறந்தவர்களக்ச் செல்வார்கள்.

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் மதினாவில் சஹாபாக்களுடன் தொழுதுவிட்டு அமர்ந்திருக்கிறார்கள், அந்த நேரத்தில் சிறுவயதுடைய அனஸ் பின் மாலிக்(ரலி) (7 வயது சிறுவர்) அவர்கள் அந்த இடத்துக்கு வருகிறார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் சிறிய கற்களை எடுத்து ஒரு துணியில் போட்டு கட்டி தன்னுடைய வயிற்றில் கட்டிக்கொண்டு தன்னுடைய மேனியில் ஒரு துணியைப் போட்டு மூடுகிறார்கள். இதனை அனஸ்(ரலி) அவர்கள் காண்கிறார்கள்.

உடனே அனஸ்(ரலி) அவர்கள் பிற சஹாபாக்களிடம் “ ரஸூல்லுல்லாஹ் வயிற்றில் ஏதோ கட்டி வைத்துள்ளார்களே அது என்ன?” என்று கேட்கிறார்கள். அதற்கு அங்கிருந்த சஹாபாக்கள் சொன்னார்கள், நம்முடைய உத்தம நபி(ஸல்) அவர்கள் ரொம்ப நாட்களாக உணவின்றி சாப்பிடாமல் பசியில் இருக்கிறார்கள், தன்னுடைய பசியின் துயரத்தைத் தாங்கிக்கொள்ள துணியில் கல்லை கட்டி தன் வயிற்றில் கட்டி வைத்திருக்கிறார்கள்” என்று கூறினார்கள். இதனை கேட்ட அனஸ்(ரலி) சத்தம் போட்டு அந்த கஷ்டத்திற்கு நாசமுண்டாகட்டும், நாசமுண்டாகட்டும் என்று அழுதவர்களாக தன்னுடைய தாய் உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் வந்து நபி(ஸல்) அவர்கள் பசியினால் தன் வயிற்றில் கல்லைக் கட்டி வைத்திருப்பதைச் சொன்னார்கள். அந்த தீன்குலப்பெண்மனி உம்மு சுலை அவர்கள் உடனே நபி(ஸல்) அவர்களுக்கு உணவு கொடுத்தனுப்புகிறார்கள். நபி(ஸல்) அந்த உணவை உம்மு சுலைம்(ரலி) அவர்கள் வீட்டிற்கே கொண்டு செல்லுமாறு அனஸ்(ரலி) அவர்களிடம் சொல்லிவிட்டு, அல்லாஹ்வின் கட்டளைபடி நபி(ஸல்) மற்றும் சஹபாக்களும் உம்மு சுலைம்(ரலி) அவர்கள் வீட்டிற்கு சென்று உணவருந்தினார்கள். அன்றைய தினம் அல்லாஹ்வால் நபி(ஸல்) அவர்கள் மூலம் ஓர் அற்புதம் நிகழ்த்தி காட்டப்பட்டு அத்தனை சஹபாக்களும் வயிறார உணவருந்தினார்கள் என்பதை புகாரி முஸ்லீம் போன்ற ஹதீஸ் தொகுப்புகளில் நாம் பார்க்கிறோம்.

மற்றுமொரு சம்பவம், இஸ்லாமிய வரலாற்றில் வீரத்திற்கு எடுத்துகாட்டான நபித்தோழர் உமர்(ரலி) அவர்கள் ஒரு  பகல் நேரத்தில் வெளியில் வேகமாக நடந்து வருகிறார்கள். இஸ்லாமிய வரலாற்றில் நபி(ஸல்) அவர்களை முதன் முதலில் உண்மைபடுத்திய (சித்தீக்) உண்மையாளர் என்று ஒட்டுமொத்த முஸ்லீம்களால் அழைக்கப்படும் அபூபக்கர்(ரலி) அவர்களும் அதே பட்டப் பகலில் வெளியே வருகிறார்கள். அந்த வீரத்தோழரும், உண்மை தோழரும் தெருவில் சந்திக்கிறார்கள்.

“என்ன உமரே இந்த பகல் நேரத்தில் எங்கே செல்கிறீர்கள்” என்று அபூபக்கர்(ரலி) கேட்க, அதற்கு உமர்(ரலி) அவர்கள் “எனதருமை தோழர் அபூபக்கரே பசி தாங்க முடியவில்லை, அதுதான் நபி(ஸல்) சபைக்குச் செல்கிறேன்” என்று சொன்னார்கள். அபூபக்கர்(ரலி) அவர்கள் உமர்(ரலி) அவர்களின் கையைப் பிடித்து “அதே நிலைதான் எனக்கும் உமரே, வாருங்கள் நபி(ஸல்) அவர்களின் சபைக்கு நாம் செல்வோம்” என்று கூறி இருவரும் நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கச் சென்றார்கள்.

நபி(ஸல்) அவர்களும் அந்த வெயில் நேரத்தில் வெளியில் வருகிறார்கள், தன்னுடைய அருமைத் தோழர்கள் இருவரும் நடுப்பகலில் தெருவீதியில் வேகமாக வருவதைக் கண்டார்கள். “என்ன தோழர்களே எங்கே இந்த வெயில் நேரத்தில் கிளம்பிவிட்டீர்கள்” என்று கேட்டார்கள்.

அந்த தோழர்களில் ஒருவர் சொன்னார்கள் “யா ரசூலுல்லாஹ் பசி தாங்முடியவில்லை அதான் உங்களைச் சந்திக்க வந்தோம்” என்றார்கள். உடனே நபி(ஸல்) “எனது உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக நானும் அதற்காகத்தான் வெளியில் வந்தேன்” என்று கூறி அந்த உத்தம தோழர்கள் இருவரைக் கட்டி அனைத்து, “வாருங்கள் நம் அருமை தோழர் அபூ அய்யூப் அல் அன்சார்(ரலி) அவர்கள் வீட்டிற்குச் செல்வோம்” என்று அவ்விருவரையும் அழைத்துச் சென்றார்கள்.

உத்தம நபியின் மதீனத்து உண்ணத தோழர் அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களும், உமர்(ரலி) அபூபக்கர்(ரலி) ஆகியோரின் வருகையை அறிந்து உடன் தன் இல்லத்திற்கு வந்தார்கள். உணவு சமைத்து வருவதற்கு முன்பு வந்த விருந்தாளிகள் மூவருக்கும் பேரீத்தம்பழங்களைக் கொடுக்கிறார்கள் கொஞ்சம் பசியார வைக்கிறார்கள்.

பிறகு உணவு சமைத்து தட்டில் வைத்து, அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கும், அருமை தோழர்களுக்கும் பரிமார மிக ஆவலோடு வருகிறார்கள். அப்போது நபி(ஸல்) திடீரென எழுகிறார்கள், சஹபாக்கள் இருவரும் என்ன ரஸூலுல்லாஹ் எழுந்துவிட்டார்களே என்று வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதுவரை தன் தோழர்களுடைய பசி, தன்னுடைய பசியைப் பற்றியே பேசிய நபி(ஸல்) அவர்கள் அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி) அவர்களைப் பார்த்து “ நாங்கள் மூவரும் பேசிக்கொண்டிருக்கிறோம் அபூ அய்யூப் அல் அன்சாரி அவர்களே, இந்தத் தட்டில் உள்ள உணவை என்னுடை அருமை மகள் ஃபாத்திமா அவர்களிடம் சென்று கொடுத்துவிட்டு வாருங்களேன். வீட்டில் என்னுடைய மகள் ஃபாத்திமாவும்(ரலி), மருமகன் அலி(ரலி), பேரக்குழந்தைகள் ஹசன்(ரலி) ஹுசைன்(ரலி) ஆகியோரும் பசியோடு இருக்கிறார்கள், சாப்பிட்டு பல நாட்களாகிவிட்டது.” என்று கேட்டுக்கொண்டார்கள். அதுவரை நபி(ஸல்) அவர்களும் இரு தோழர்கள் மட்டும் தான் பசியாக இருக்கிறார்கள் என்று எண்ணிய அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி) அவர்களுக்கு அப்போது தான் தெரிந்தது நபி(ஸல்) அவர்களின் குடும்பமே பசியில் உள்ளது என்று. சுப்ஹானல்லாஹ்….

அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி) அவர்கள் அந்த உணவை ஃபாத்திமா(ரலி) அவர்கள் வீட்டிற்குச் சென்று கொடுத்துவிட்டு, நபி(ஸல்) அவர்களை உபசரிப்பதற்காக தன் வீட்டிற்கு வந்தார்கள், பிறகு நபி(ஸல்) அவர்களுடனும், மற்ற இரு தோழர்களுடம் உணவருந்தினார்கள். சாப்பிட்டு முடித்தவுடன் நபி(ஸல்) அவர்கள் அழ ஆரம்பித்துவிட்டார்கள், தாடி நனையும் வரை அழுதார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய தோழர்களைப் பார்த்து அழுதவர்களாக சொன்னார்கள் “ இதோ ரொட்டி, இதோ இரைச்சி, இதோ பேரீச்சம்பழம் என்று விதவிதமாக சாப்பிடுகிறோமே, இதற்கெல்லாம் நாளை மறுமையில் அல்லாஹ் கேள்வி கணக்கு கேட்பான் தோழர்களே, அதை நினைத்து அழுகிறேன் என்றார்கள் என்பதை ஹதீஸ் தொகுப்புகளில் காணமுடிகிறது. சுப்ஹானல்லாஹ்.

அகிலத்தின் அருட்கொடை, இந்த உலகில் பிறந்த எவராலும் தோற்கடிக்க முடியாத படையின் தளபதி, ஏழைகளுக்கு வாழ்வளிக்கும் உலக பொருளாதார மாமேதை, தந்தைகளுக்கெல்லாம் முன்மாதிரி, கணவர்களுக்கெல்லாம் முன்மாதிரி, தோழர்களுக்குக்கெல்லாம் முன்மாதிரி, ஆசிரியர்களுக்கெல்லாம் முன்மாதிரி, வியாபரிகளுக்கெல்லாம் முன்மாதிரி, என்று ஒட்டுமொத்த மனித குலத்திற்கே முன்மாதிரி நம் உயிரினும் மேலான அண்ணல் நபி(ஸல்) அவர்களும் அவர்களின் ஆருயிர் தோழர்கள் அபூபக்கர்(ரலி) உமர்(ரலி) அவர்களோடு பல நாட்கள் பசியோடு இருந்த நிலையில், அல்லாஹ் நமக்கு வித விதமான உணவைத் தந்துள்ளானே, அவனின் அருளை நினைத்தும், உண்ட அந்த உணவுகளுக்கு நாளை மறுமை நாளில் அல்லாஹ்விடம்கேள்வி கணக்கு உள்ளதே என்று எண்ணி அழுதுள்ளார்கள் என்றால், நம்முடைய நிலை என்ன என்பதை சிந்திக்க வேண்டாமா…

அன்பான சகோதரர்களே, நபி(ஸல்) அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும், அவர்களோடு வாழ்ந்த உத்தம தோழர்களும் பல நாட்கள் உண்ண உணவின்றி கஷடப்பட்ட நிலையிலும் அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்த அருளை எண்ணி அல்லாஹ்வுக்காக கண்ணீர் சிந்தினார்கள்.

விதவிதமாக இன்று நாம் பல்சுவை உணவு, நாவுக்கு ருசியாக சாப்பிடுகிறோமே, என்றைகாவது நபி(ஸல்) அவர்களும் தோழர்களும் பசியோடு கஷ்டப்பட்டார்களே, என்று எண்ணி  அழுதிருக்கிறோமா?

பொருளாதாரத்தில் அபிவிருத்தியை தந்து, எந்தவித கஷ்டமும் இன்றி நம்முடைய வாழ்நாட்களைக் கழிக்கிறோமே, இந்தப் பொருளாதாரத்திற்கு நாளை அல்லாஹ்விடம் கேள்வி கணக்கு உண்டே என்று என்றைக்காவது மறுமையை நினைத்து அழுதிருக்கிறோமா?

உண்ண உணவின்றி கோடானு கோடி மக்கள் இன்றும் வாழ்கிறார்களே அவர்களின் நிலையை நினைத்து அல்லாஹ் நம்மை நல்ல நிலையில் வைத்துள்ளானே என்று அவனின் அருளை எண்ணி என்றைக்காவது அழுதிருக்கிறோமா?

அழ வேண்டும்
அர்த்தத்தோடு
அழ வேண்டும்.

இந்த வார உறுதி மொழி: 

நமக்கு ஏற்படும் கஷ்டமான சூழ்நிலையில், நபி(ஸல்) அவர்கள் பட்ட கஷ்டங்களை எண்ணிப்பார்ப்போம். என்னதான் நமக்கு செல்வம் வந்தாலும் அல்லது கஷ்டம் வந்தாலும், வறுமை, பசி வந்தாலும் நம்மை படைத்த அல்லாஹ்வைப் புகழ்வோம், அவனுடைய அருளை எண்ணி அவனுக்கு நன்றி சொலுத்துவோம்.

அல்லாஹு அக்பர்.
தொடரும் இன்ஷா அல்லாஹ் !
M. தாஜுதீன்

நேற்று! இன்று! நாளை?- 1 16

அதிரைநிருபர் பதிப்பகம் | புதன், மே 22, 2013 | , , , ,


தமிழக சட்டமன்றத்தின்  இவ்வாண்டுக்கான நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கும்  கூட்டத் தொடர் அண்மையில் நிறைவுற்றது. ஒரு அரசியல் நோக்கர் என்கிற முறையில், இப்போதெல்லாம் நடைபெறும் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற நிகழ்வுகளை உற்று நோக்கிப் பார்க்கும்போது மனதில் பல ஒப்பீட்டு நினைவலைகள் எழுகின்றன. அவைகளை நமக்குள் அன்புடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவைத்தர எண்ணினேன்.

சட்டமன்றம்  கூடப் போகும் நாளைப் பற்றி ஊடகங்கள், பத்திரிகைகள் பரபரப்பு செய்தியாக முக்கியத்துவம் கொடுத்து சட்டமன்றம் கூடி சலசலப்பை ஏற்படுத்தும் முன்பே இவர்கள் ஒரு சலசலப்பை ஏற்படுத்தும் சடங்கை செய்துவிடுவார்கள். மானியக் கோரிக்கைகள் வர இருக்கின்றன – மசோதா தர இருக்கிறார்கள் - பரபரப்பான சூழ்நிலையில் சட்டமன்றம் கூடுகிறது- எதிர்க் கட்சிகள் வரிந்து கட்டுகின்றன- ஆளும் கட்சி ஒரு கை பார்க்க தயாராகிறது- அப்படி இப்படி என்று ஏதோ ரேக்ளா ரேசுக்குத் தயார் ஆவது போல செய்திகளை வெளியிடுவார்கள். 

பரிதாபத்துக்குரிய மக்களும் ஆஹா! சட்டமன்றம் கூடுகிறது – நமக்கு ஆகுமான பல நல்ல திட்டங்கள் வரப்  போகின்றன- என்று வாயில் ஈ போவதுகூடத் தெரியாமல் வாயைப் பிளந்து கொண்டு காத்திருப்பார்கள். சட்டமன்றம் கூடும் நாள் வரும். அன்று எதிர்க் கட்சிகள் சட்டமன்றத்தின் இன்றைய கூட்டத்தைப் புறக்கணிக்கிறோம் என்று ஆரம்பிப்பார்கள். காரணம் சட்டமன்றத்தின் கேண்டீனில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு தரும் தேநீரில் சர்க்கரை அதிகமாகப் போடுகிறார்கள் எதிர்கட்சிக் காரர்களுக்கு உப்பை அள்ளிப் போடுகிறார்கள் என்பது போல சில காரணம் இருக்கும். அதையும் மீறி உள்ளே போனால் சபாநாயகர் எதிர்கட்சிக்காரர்களை கூட்டாக  வெளியேற்றினார் என்றும் குண்டுக் கட்டாகத் தூக்கி வெளியே போடப்பட்டனர் என்றும்  எதிர்க் கட்சியினர் கோஷம் போட்டு வெளிநடப்பு செய்தனர் என்றும் - ஒரு குறிப்பிட்ட கட்சி உறுப்பினர் விவாதம் நடைபெறும்போது கடந்த வருடம் அவர் சாப்பிட்ட மட்டன் கறியில் ஒரு  பிசிறு பற்களுக்கிடையில் சிக்கிக் கொண்டிருந்ததை குச்சியால் குத்தி நோண்டிக் கொண்டிருந்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகி தொடர் முழுதும் நீக்கப் பட்டு இருப்பர் இல்லாவிட்டால் இவர் பல்லைக் கடித்தார் உதட்டைத் துருத்தினார்- என்று ஏதாவது குற்றம் சாட்டப்பட்டு தொடர் முழுதும் வெளியேற்றப்படுவார். 

கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை செலவு செய்து கோடான கோடி மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து தேர்ந்தெடுத்து சட்டமன்றத்துக்கு அனுப்பினால் சக்தியில் கல்லைப் போட்ட சங்கதிதான் நடக்கிறது. ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் வெட்டுப் பகை குத்துப் பகை- ஏட்டிக்குப் போட்டி. ஒன்றிலும் அனுசரணை ஒத்துப்போதல் தென்படுவதே இல்லை. தனிவாழ்வுபற்றிய விமர்சனங்கள், சட்டமன்றத்தின் தரத்தை குறைத்துவிடுகின்றன. மக்கள் நாளை நம்மைப் பார்த்து கேள்வி கேட்பார்களே என்கிற உணர்வு ஒரு துளி கூட இல்லை. சத்தம் கொஞ்சம் சூடு பிடித்தால் குழாயடி கூட வெட்கப்படும். சந்தைக்கடை கூட தற்கொலை செய்துகொள்ளும். எதிர்க் கட்சி உறுப்பினர்களை வெளியேற்றுவதில் ஏகபோக உரிமை சபாநாயகருக்கு. 

யார் இந்த சபாநாயகர்? வானளாவிய அதிகாரம் தனக்கு உண்டு என்று பறைசாற்றும்  சபாநாயகரும் ஒரு தொகுதியிலிருந்து மக்களால் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப் பட்ட எம். எல் ஏ தான். ஆனால் அதே போல் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை சபாநாயகர் விரும்பினால் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் அவருக்கு வழங்கப் பட்டு இருக்கிறது. இந்த அதிகாரத்தை வைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மிரட்டப் படுகின்றனர். மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு சட்டமன்ற உறுப்பினரை பதவி நீக்கம் செய்தால் மக்களுக்கு என்ன மரியாதை? ஜனநாயகத்தின் யோக்கியதைதான் என்ன?

சட்டசபை வளாகத்தில் சபை நடவடிக்கைகளில் சற்றும் நாகரீகமோ சாதுர்யமோ  காணப்படுவது இல்லை. பழிவாங்கும் படலம் மாறி மாறி அரங்கேறுகிறது. மக்கள் பிரச்னைகள் புறந்தள்ளப் படுகின்றன. மக்களுக்கு பாராளுமன்ற சட்ட மன்றங்களின் மீது சபை நடவடிக்கைகளைக் காணும்போது நம்பிக்கைகள் பொய்த்துப் போகின்றன. 

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் 
தொகையறிந்த தூய்மையவர்”  என்று வள்ளுவர்  வரையறுக்கிறார்.

தூய அறிவாளர்கள் சொல்லின் பொருள் அறிந்து அவையின் தன்மை அறிந்து தாம் சொல்லப் போவதையும் நன்றாக  அறிந்தே எதையும் சொல்ல வேண்டும் என்பதே இதன் பொருள். 

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன 
கெடுப்பார் இலானும் கெடும் “  -என்பதும் வள்ளுவன் வாக்கே. 

இடித்துரைத்து சொல்லித்திருத்துபவர் இல்லாத பாதுகாப்பற்ற மன்னன் தன்னைக் கெடுப்பவர் இல்லாவிட்டாலும் தானாக கேட்டுப் போவான் என்பது இதற்குப் பொருள். 

ஆளும் கட்சியின் குறைபாடுகளை எதிர்க் கட்சிகள் எடுத்துரைக்கும் போது அதனை சீர்தூக்கி சரிசெய்து கொள்வது ஆளும் கட்சியின் கடமை. அதைவிடுத்து தான்தோன்றித்தனமாக ஆளும் கட்சி செயல்ப்படுமானால் அக்கட்சி அடுத்த தேர்தலில் மக்களால் தூக்கி எறியப்படும். இவை நாம் கண்டு வரும் வரலாற்றுப் படிப்பினைகள். 

இதைத்தான் அறிஞர் அண்ணாதுரை அவர்கள் 1957-62 சட்டமன்ற நிகழ்ச்சியில்  “ஆளும் கட்சி யானையின்  பலம் கொண்டதாக இருந்தாலும் அதை சரியான பாதையில் செலுத்த அங்குசம் என்ற ஒன்று வேண்டும்” என்று ஆளும் கட்சியை நோக்கி நறுக்கென்று மனதில் படும்படி சொன்னார். மேலும்,    

அதே 1962 ல் அண்ணா அவர்களின் கட்சியினர் 50 உறுப்பினர்கள் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் இடம் பெற்றிருந்தபொழுது, ஆளும் காங்கிரஸ் சார்பில் வைக்கபட்ட குற்றசாட்டுக்கு, மிக சாதுர்யமாக பதிலளித்தைக்  கண்டு ஆளுங்கட்சியான காங்கிரசு கட்சியே வியந்தது. அவர்கள் எதிர்கட்சித் தலைவராக இருந்த நெடுஞ்செழியனை நோக்கி வைத்த குற்றசாட்டு, அண்ணாதுரையின் கட்சிக்கு  நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை என்பதாகும்  ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸ் கேலியுடன் தெரிவித்த குற்றசாட்டை மறுத்து “நீங்கள் எதிர்கட்சி சரியில்லை, என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரைவில் நீங்களே, அந்தக் குறையைப் போக்கி விடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன்.”

என்று நெடுஞ்செழியன் நயம்பட உரைத்தாராம். பின்னர் அது உண்மையில் நடந்தது. 

மற்றொருமுறை அரசின் மானியக் கோரிக்கைமீது அண்ணா பேசும்போது அன்றைய காங்கிரஸ் அமைச்சர்களில் ஒருவர் இத்தனை கோடி ரூபாய்களை மக்கள் நலனுக்காக செலவழிக்கிறோம் என்றார். இதற்கு பதில் அளித்த அண்ணா “ பத்து பேர் கையிலிருந்து மாறிய ஐஸ் கட்டியைப் போலத்தான் அரசின் திட்டங்கள் மக்களைப் போய் சேரும் சமயத்தில் இருக்கின்றன” என்று இடித்துரைத்தார். அன்றாவது பத்து பேர் கை மாறிய ஐஸ் கட்டியாகத் திட்டங்கள் மக்களைப் போய்ச் சேர்ந்தன. இன்றோ காற்றைக் கையில் பிடித்து காட்டாறு வெள்ளத்தில் கோட்டாறு மண்ணெடுத்து கூட கோபுரமும் மாட மாளிகையும் கட்டி கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள். இன்றைக்கு அரசின் திட்டங்கள் கடலில் கரைத்த சந்தனமாக அல்லவா போய்விட்டன? வருங்காலத்தில் சந்தனமும் இல்லாமல் வெறுங்கையை வைத்து கரைப்பதுபோல் கட்சி நாடகம் நடத்துவார்கள் அரசியல்வாதிகள். 

காங்கிரஸ் ஆட்சியில் ஒருமுறை அவை நடவடிக்கைகள் நடைபெறும்போது ஒரு ஆளும் கட்சி  உறுப்பினர் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்த எதிக் கட்சி உறுப்பினர் இப்படித்தூங்கலாமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்குக் கலைஞர்  கூறிய கருத்து  அவையில் சிரிப்பலைகளை எழுப்பியது. கலைஞர் கூறினார் “ தூங்கலாம் ஆனால் குறட்டை விடக்கூடாது. தூங்குவது அவர் உரிமை குறட்டைவிட்டால் மற்றவர்களுக்கு இடையூறு. உரிமைப் பிரச்னை  “ என்றார். 

சட்டமன்றத்தில் அரசியல் நாகரீகம் பற்றிப் பேசும் புண்ணியவான்களுக்கு  கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள் தொடர்புடைய ஒரு நிகழ்வை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். 

சென்னை இராஜதானி சட்ட மன்றத்தில் காங்கிரஸ் ஆளும் கட்சி. இருபத்தி ஐந்து உறுப்பினர்களைக் கொண்டிருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் குழு கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்களை எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுத்து இருந்தது. சிறந்த எதிர்க் கட்சித் தலைவராக அவர்கள் பணியாற்றி வந்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கு அப்போது திரு. அனந்தன் நம்பியார் உட்பட இரண்டே   இரண்டு உறுப்பினர்கள்.   கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஒரு உரிமைப் பிரச்னை கொடுக்கப் பட்டு இருந்தது. அதை இன்னொரு நாள் எடுத்துக் கொள்வோம் என்று சபாநாயகர் கூறினார். 

இதற்குக் காரணம் இன்னொரு கம்யூனிஸ்ட் உறுப்பினர் வேறொரு தொழிலாளர் பிரச்னை காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததால் அவைக்கு வரமுடியவில்லை. எனவே கம்யூனிஸ்ட் கட்சி தந்திருந்த உரிமைப் பிரச்சனைய வழி மொழிய ஆள் இல்லை. ஒரு தீர்மானத்தை ஒருவர் முன் மொழிந்தால் மற்றொரு உறுப்பினர் வழி மொழிய வேண்டும். ஒரு உறுப்பினர் வர முடியாத நிலையில் வழிமொழிய முடியாமல் தீர்மானம் தள்ளுபடியாகக்  கூடிய நிலை ஏற்பட்டது. அப்போது யாருமே எதிர்பார்க்காமல் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள் எழுந்து நான் வழி மொழிகிறேன் என்று கூறி சபையை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்கள். 

அப்போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் “இஸ்லாமியர்களுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் ஒத்துவராதே – ஏணி வைத்தாலும் எட்டாதே – எப்படி நீங்கள் வழிமொழிந்தீர்கள்?” என்று கேட்டார்கள். கண்ணியத்துக் குரிய காயிதே மில்லத் அவர்கள் சொன்னார்கள் “ எந்த ஒரு உறுப்பினரும் தனது கருத்தை இந்த அவையில்   பதிய    உரிமை உடையவர்கள். எதிர்பாராத சூழ்நிலையில் அவர்களின் கருத்து பதிவுசெய்யப் படாவிட்டால் அது ஜனநாயகத்தை ஊனமாக்கிவிடும். எனவேதான் வழிமொழிந்தேன். இங்கே இஸ்லாம் கம்யூனிசம் என்கிற பேச்சுக்கு இடமில்லை “ என்றார்கள். இஸ்லாத்தின் சகிப்புத்தன்மைக்கும் சகோதரத்துக்கும்  சான்று பகர்ந்த சம்பவம் அது. 

இதனால்தான் கண்ணியத்துகுரிய காயிதே மில்லத் அவர்களைப் பற்றி கலைஞர்  ஒருமுறை குறிப்பிட்ட போது “ அரசாள்வோர் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டியவை கனிவு! துணிவு! பணிவு!  நான் கனிவைகற்றுக் கொண்டது காயிதே மில்லத்திடம்! துணிவைக் கற்றுக் கொண்டது பெரியாரிடம்! பணிவைக் கற்றுக் கொண்டது அண்ணாவிடம்!  “ என்றார். 

இதேபோல் மற்றொரு சம்பவம் இங்கு நினைவு கூறத் தக்கது. கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள் எதிர்க் கட்சித் தலைவராக பணியாற்றியபோது கல்வி அமைச்சராக பணியாற்றியவர் கோவை அவினாசிலிங்கம் அவர்களாவார். ஒரு விருந்தில் இருவரும் சந்திக்க நேர்ந்தது. ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டதுடன் பல்வேறு விஷயங்கள் பற்றி இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது காயிதே மில்லத் இடம் கல்வி அமைச்சர் “ இஸ்மாயில் சாஹிப்! உங்கள் மகன் இஞ்சிநீரிங் கல்லூரியில் நன்றாகப் படிக்கிறாரா ?” என்று கேட்டார்.  “ ஆமாம்! ஆமாம்! ஆனால் அவன் இஞ்சினியருக்குப் படிப்பது உங்களுக்கு எப்படித்தெரியும்? என்று  வியப்புடன் கேட்டார் காயிதே மில்லத். 

“எனக்கு எப்படித் தெரியாமல் இருக்கும்? அவருக்கு கல்லூரியில் இடம் கொடுத்ததே நான்தானே? (அவினாசிலிங்கத்தின் சொந்தக் கல்லூரி) விண்ணப்பத்தைப் பார்த்ததும் உங்கள் மகன் என்று தெரிந்தது. எதிர்க் கட்சித்தலைவரான உங்கள் மகனை நிராகரிக்க முடியுமா? உடனடியாக கொடுத்துவிட்டோம் என்று மகிழ்வுடன் கூறினார் திரு.  அவினாசி லிங்கம். பேச்சை அத்துடன் முடித்துக் கொண்ட கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அடுத்த நாள் தனது மகனை அழைத்து  "இன்றிலிருந்து நீ கல்லூரிக்குப் போக வேண்டாம் அந்தப் படிப்பையும் தொடர வேண்டாம்" என்று நிறுத்திவிட்டார். 

பலர் வற்புறுத்திக் கேட்டும் இப்படி மகனின் படிப்பை இடை நிறுத்தியதற்கான  காரணத்தை  உடனே அவர் கூறவில்லை. பல குடும்ப உறுப்பினர்களின் வற்புறுத்தலுக்குப் பிறகு காரணத்தைச் சொன்னார் . அது, “ நான் எதிர்க் கட்சித் தலைவர் என்பதால் என் மகனுக்கு சீட் கொடுத்ததாக கல்வி அமைச்சர் சொல்கிறார். அப்படிப் பட்ட தயவு நமக்கு தேவை இல்லை.” 

இப்படிப்பட்ட பண்பாளர்களை இன்று ஹாங்காங்கில் வலை வாங்கி வந்து வங்காள விரிகுடாக் கடலில் இரட்டை மடி வீசி அரித்து சலித்துப்  பார்த்தாலும் சட்டமன்றங்களில் நாம் காண முடியுமா?

இன்ஷா அல்லாஹ் தொடரலாம். 
முத்துப் பேட்டை P. பகுருதீன் B.Sc;

இங்கே ட்விட்டுங்கள்...! 39

அதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், மே 21, 2013 | , , , , , , ,


ட்விட் (tweet) இதை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று போஸ்டர் அடித்துச் சொல்ல வேண்டியதில்லை இரண்டு வார்த்தைகளில் தட்டிவிட்டாலே உலகைச் சுற்றிவரும் அதிவேக மற்றுமொரு வரம். தற்போது நடந்து வரும் ஐ.பி.எல்.மேட்சில் டிவிட் கவுண்ட் போட்டுக் காட்டும்போது நமதூரில் இருந்தும் இல்லாமல் இருக்கும் மின்சாரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் மீட்டரில் ஓடும் வேகத்திற்கு டிவிட்டுகள் வினாடிக்கு வினாடி எகிரிக் கொண்டிருப்பது போன்ற ஒரு பிரம்மை.

அந்த அளவுக்கு பிரம்மையெல்லாம் இங்கே கொடுக்காவிட்டாலும் இது போல நீங்களும் ட்விட்டுங்களேன்.

ஏர் லங்க்கா விமானத்தில் பணிபுரிய ஏர் ஹோஸ்ட்டஸ்கள் தேவை. சித்தாளாகவோ ரோட்டில் தார் ஊற்றும் வேலையிலோ முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மலேசியாவை விசிட் செய்யும் ட்டூரிஸ்ட்களுக்கும் முதற் தகுதியா ’24 மணி நேரமும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கும்’ சக்தி மேன்டேட்டரி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தேநீர் உலகப் பிரசித்தி பெற்றது, மலிவானது.  இருப்பினும் ஒரு கப் ட்டீ 130 ரூபாய்ங்கோ.

கர்நாடகாவில் பாரதிய ஜனதாவின் படுதோல்விக்குக் காரணம் உட்கட்சி சண்டை என்பது அபாண்டம்; அம்பூட்டும் வெளியே தெரிகிற மாதிரியே ரணகளப் பட்டதை நாடு அறியும்.

ஜெயிப்பதற்கான எந்த முகாந்திரமுமின்றித் தடுமாறிய காங்கிரஸை கர்நாடகாவில் வெற்றியடைய வைத்த பாரதிய ஜனதாவுக்கு நன்றி பாராட்டும் விழாவை காங்கிரஸ் எடுக்கும்.

ராஜஸ்தான் ராயலிடம் சென்னை சூப்பர் கிங் தோற்றதற்குக் காரணம், ‘பந்து பேட்டுக்கு வராததே” என்று டோனி விளக்கம்.

தீவிரவாதிகள் பிரமுகர்களாக்கும் சம்பவம், படிப்பது இரமாயணம் இடிப்பது பாபரி மஸ்ஜித் என்பது போல்தான் இருக்கிறது !

சமீபத்தில் (ஜெ)அம்மா போட்ட லிஸ்டில் மரம் வெட்டிய டாக்டருக்கு நிறைய மருந்துகள் ரெடியாகிக் கொண்டிருப்பதாக சொன்னார் !

எதிர்ப்பது நீயாக இருப்பதால்தான் நீ எதிர்ப்பதையெல்லாம் எதிர்க்கிறோம் என்ற கொள்கை முடிவும் அதிரைக்கு மட்டும் விதிவிலக்கா என்ன ?

அப்பாவியான தன்னை ஐ பி எல் சூதாட்டத்தில் தன் நண்பன்தான் ஈடுபடுத்தினான். அவனிடம் டூ விட்டுவிடுகிறேன். என்னை விட்டுவிடுங்கள் – ஸ்ரி சாந்த்.

இனி நீங்களும் ட்விட்டலாம் !

அபூசாஹ்ரூக் - அபூஇப்ராஹீம்

குருவி...! 37

ZAKIR HUSSAIN | திங்கள், மே 20, 2013 | , , , , ,

இது முழுக்க முழுக்க லைட் ரீடிங் ..அதனால் யாரும் ட்யூப்லைட் போட்டு படிக்கனும்னு சொல்லவில்லை.

விசயம் சொல்லிக் கொள்வது மாதிரி பெரிசா ஒன்னுமில்லை என்றால் தன்னடக்கம் கருதி சின்னதாக சொல்வது மாதிரி விமான பயணம் என்பதில் நிறைய டெக்னிக்கல் விசயம் ஏதாவது இருக்கும் என்று நினைத்து படிப்பவர்களுக்கு நான் துண்டை போட்டு தாண்டி சொல்கிறேன், இதில் அப்படி ஒன்னும் விசயமில்லை. [தெரிஞ்சாதானே எழுதறதற்கு!!!].

எனவே உருப்படியான விசயம்தான் படிப்பேன் என்று 'மாகானதிபதி" முன் சத்யப்பிரமானம் எடுத்தவர்கள் வீட்டில் வெங்காயம் வெட்டிக் கொடுப்பது , துவைத்து வைத்த பிள்ளைகளின் துணியை காயப்போடுவது போன்ற பொறுப்பான வேலைகளில் ஈடுபட்டு அப்படியும் நேரத்த ஒட்ட முடியவில்லை என்றால் இதைப்படிக்களாம்.


1968 என நினைக்கிறேன். முதன் முதலில் என் வாப்பா திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கியதை பார்க்க / அழைக்க போயிருந்தேன். அவ்வளவு சின்ன வயதில் அந்த விமான நிலையத்தில் ஒரு பட்டனை அழுத்தினால் ஐஸ் வாட்டர் வரும் [குவளை மிஸ்ஸிங்] அதை அழுத்தி குடித்ததில் ஜென்ம புண்ணியம் அடைந்ததாக நினைத்தேன்.

அப்போது வந்த விமானத்திற்கு "காத்தாடி' வெளியில் சுற்றியது. இப்போதைய டெக்னாலஜியை பார்க்கும்போது ரைட் பிரதர்ஸிடம் நமது இந்தியன் ஏர்லைன்ஸ் லீசுக்கு எடுத்த மாதிரிதான் தெரிந்தது. எங்கே இவனுக ரைட் பிரதர்ஸிடம் வம்புடியாக வாங்கிட்டு வந்துட்டானுகளா என நினைக்க தோன்றும்.

இந்திய முஸ்லீம்கள்  முன்பு பர்மா / சிலோன் என்று பிழைக்க போன காலத்திற்கு பிறகு பினாங்கு பிழைக்கும் தளமானது . [ஏதோ தமிழ்நாடு செய்தித்துறையின் பிளாக் & ஓயிட் ஃபிலிமில் தியேட்டரில் காண்பிக்கும் செய்தித் தொகுப்பு மாதிரி இல்லே!!].


பயணத்திற்கு  S.S ரஜூலா , M.V.சிதம்பரம் கப்பல்கள் வாழ்க்கையுடன் ஒன்றிப்போனது. [கப்பலில் நான் பயணம் செய்ததில்லை என்பதால் எனக்கு அதைப் பற்றி எழுத தெரியாது என்பதால் நீங்கள் தப்பித்தீர்கள்].

பிறகு துபாய் / சவூதிக்கு மக்கள் படையெடுக்க ஆரம்பித்தவுடன் வந்தது விமான பயணங்களின் பயன்பாடு. இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்று எல்லோரையும் ஏற்றிக் கொண்டு சென்றதில் தான் காமெடி. 

சிலர் கட்டிச் சோறிலிருந்து மாங்கா ஊறுகாய் வரை வாங்கிப்போய் துபாயில் சாப்பிட்டதாக ஆட்களை அழைக்கப் போகும்போது கேள்விப் பட்டதுண்டு.

ஆரம்ப காலத்தில் நீங்கள் விமான டிக்கெட் எடுத்திருந்தால் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து ஒரு மினி வேன் அழைத்துச் செல்லுமாம். இப்போது 5 நிமிடம் அந்த விமான கம்பெனியின் மேனேஜிங் டைரக்டரே தாமதமாக போனாலும் "போடா பசுநெய்" என்று சொல்லிவிட்டு கேப்டன் புறப்பட்டு விடுவார். [ஏதாவது வித்யாசமா எழுதுங்க என்று அ.நி கட்டளை இல்லாவிட்டால் ' போடா வெண்ணே"  என்று சொல்லிவிட்டு கேப்டன்... என எழுதியிருக்களாம்.]

இதில் ப்ளேனில் கொண்டு போகும் பொருட்களும் அதை கையாளும்  ஆட்களும்தான் இன்னும் காமெடி. ஒருமுறை நான் காட்மாண்டுவில் விமானத்தில் ஏறி உட்கார்ந்ததும் அதில் வந்த சில நேப்பாளிகளையும் அவர்கள் வைத்திருந்த கூடை மாதிரி இருந்த பொருட்களை பார்த்ததும் எனக்கு தூக்கமே வரவில்லை. ஏதும் பாம்பு போட்டோ [படம்] எடுத்து ஆட ஆரம்பித்தால் என்ன செய்வதென்று ஒரே புலப்பம். தவிறவும் நாம் ஏதாவது பெண் பாம்பை வஞ்சித்திருக்கிறோமா என்று எனது நினைவுகளை ரிவர்சில் ஒட்டிப்பார்த்தேன். அப்புறம் பாட்டு பாடி நம்மை பழிவாங்குதெல்லாம் இருக்க கூடாதல்லவா?. இருந்தாலும் தனுஸ் எல்லாம் பாட்டுப் பாடுவதற்கு பாம்பு பாட்டு எவ்வளவோ தேவலாம்.

விமான பயணங்களில் விதிக்கப்படும் 20 கிலோ / 30 கிலோ லக்கேஜ் விதி தனது ரத்தத்தில் கொஞ்சம் கூட இந்திய ரத்தம் சம்பந்தம் இல்லாத ஏதோ ஒரு இனத்தை சார்ந்தவன் ஏற்படுத்தியது என நினைக்கிறேன். தமிழ்நாட்டு முஸ்லீம்கள் வெளிநாட்டுக்கு வரும்போது பேரன் / பேத்தியின்   கல்யாணத்துக்கூட உழைக்கும் சோசியல் கான்ட்ராக்டில் கையெழுத்திட்டு வந்து உழைத்து லக்கேஜ்கள் வாங்கி செல்ல வேண்டியிருக்கிறது என்பது எழுதப்படாத விதி. உழைக்கும் ஆட்கள் கதவுக்கு வைக்கும் சக்கை மாதிரி மொபைல்போன் வாங்குவதும் பள்ளிக்கூடம் தாண்டாத பிள்ளைகளுக்கும் , நேராக கையெழுத்துப்போட தெரியாத வீட்டுப்பெண்களுக்கு சம்சங் கேலக்ஸி-3 வாங்குவதும்... என்ன கொடுமை சார் இது??.

லக்கேஜ் கொண்டு போவதற்கென்று இப்போது எவ்வளவோ வசதியான சக்கரம் வைத்த கேபின் பேக் எல்லாம் இருந்தும் சமீபத்தில் மலேசியா வந்த சபீர் ஒரு சூட்கேசுடன் வந்து இறங்கியவுடன் என் மனதில் தோன்றிய வசனம் ' பாஸ்.. இந்த அணு ஆராய்ச்சி குறிப்பெ வச்சு எந்த இடத்திலே நாம் அணு குண்டு வெடிக்கப் போறோம்??' என்ற கேள்விதான்.  நல்ல  வேலை  ஏர்போர்ட்டிலிருந்து வரும் வழியில் எந்த புத்தர் கோயிலும் இல்லை..இருந்தால் ஆராய்ச்சிக்குறிப்பின் ஒரு பகுதி  அங்கு உள்ள மொசைக் கல்லுக்கு கீழ்தான் இருக்க வேண்டும் என்று காரை விட்டு இறங்கிவிட்டால் என்ன செய்வது. ??

சூட்கேஸ் பிதுங்க பிதுங்க லக்கேஜ் கட்டும் என் சொந்தக்காரர்களை பார்த்திருக்கிறேன். அது ஒரு தனித்திறமை.. எக்கோலாக் சூட்கேசில் 15 கிலோவுக்கு மேல் சர்வ சாதாரணமாக கட்டுவார்கள். இன்னும் சில பேர் பிளாஸ்டிக் கயிறை இழுத்துக்கட்டும் திறமை அலாதியானது. கட்டும்போது இடையில் உங்கள் விரல் மாட்டிக்கொண்டால் பிறகு ஏழுகடல் தாண்டி ஒரு தீவில் உள்ள கிளியிடம் போய் சொல்லி உயிர்பிச்சை கேட்டாலும் அந்த பிளாஸ்டிக் கயிற்றிலிருந்து உங்கள் விரலை எடுக்க முடியாது. அவ்வளவு ஸ்ட்ராங்காக கட்டுவார்கள் அந்த காலத்து நம் ஆட்கள்.

இந்தியாவில் தங்கம் கொண்டுவரலாம் என்ற சட்டம் வந்தவுடன் வரும் எல்லோரிடமும் "பாய் பிஸ்கட் கொண்டு வந்திருக்கீங்களா?' என்ற கஸ்டம்ஸ் ஆபிசரின் கேள்விக்கு வயதான ஒருவர் சொன்ன பதில் ' கிரீம் தடவியதா? இல்லை தடவாததா?' என்ற அப்ரானி பதிலிலேயே தெரிய வேண்டும் எப்படியாகப்பட்ட ஆட்கள எல்லாம் வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்று.

நம் மக்கள் மலேசியா சிங்கப்பூருக்கு ஆரம்பத்தில் புறப்பட்டு செல்லும் காலங்களில் வயதை நிர்ணயிக்க கப்பலுக்குள் நுழையுமுன் கன்னத்தை தடவிப்பார்த்து [சவரம் செய்திருந்தால் “பெரியவன்”] அனுப்புவார்களாம். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் 'மிகப்பெரிய' கண்டுபிடிப்பு இது. கால ஓட்டத்தில் என்ன என்ன தடைகள் இருந்தாலும் மனித மூளை தப்பிக்க ஈசியாக ஒரு  தடம் போட்டுவிடும் என்பது சமயங்களில் எந்த அரசுக்கும் தெரிவதில்லை.

இப்போது வந்திருக்கும் பட்ஜட் ஏர்லைன்ஸ் அதிகம் விமான      பயணங்களை ஊக்குவித்தாலும் பயணிக்கும் போது பெரும் அவஸ்தைகளே மிஞ்சுகிறது என்று பட்டிமன்ற தீர்ப்பு மாதிரி சொல்லி விடலாம்.

புதுக்கல்லூரியில் படிக்கும்போது நாங்கள் வாங்கிக் கொடுத்த டிக்கட் OK  களும் தாதர் எக்ஸ்பிரஸ் டிக்கட்களின் மொத்த கூட்டுத்தொகையும் கின்னஸ் புக் கில் இடம் பெரும் அளவுக்கு அதிகமானது. [வெளிநாடு போய் இறங்கி ஒருவர் கூட 'கடுதாசி" போடாதது வேறு கதை]. பாஸ்போர்ட்டையும் டிக்கட்டையும் ரொம்பவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள சொல்லி நம்மிடம் ரயில்வே ஸ்டேசனில் வந்து சொல்வார்கள். கடைசியில் ட்ரைன் நகறும் போது சத்தமாக ‘மாப்லெ மறந்துடாம சொன்ன தேதிக்கு டிக்கட் OK வாங்கிட்டு தாக்கல் சொல்லிடு என்று மறவக்காடு/தம்பிக்கோட்டை ஸ்டேசன் மாஸ்டர் காதில் விழும் அளவுக்கு கத்துவார்கள். ஒருமுறை  நான் கொஞ்சம் "ம்ம் ம்ம் சரி" என்று அவ்வளவு வெயிட் கொடுத்து பேசாததால் என் மச்சான் என்னைப்பார்த்து சொன்னது ' டேய் பாஸ்போர்ட்டை / டிக்கட்டை காணாக்கிடாதே ..அப்படி காணாக்கிட்டா வரும்போது  திருவாரூர் / திருத்துறைப்பூண்டி எங்காவது  எறங்கி ஏதாவது மளிகைக்கடையிலே போய் எனக்கு வேலை கேட்டு வாங்கிட்டு வா.. நான் நல்லா சுருல் போடுவேன்.”

நாம் கோபால் பல்பொடி மாதிரி  இலங்கை , மலேசியா, சிங்கப்பூர் என்று போன காலம் போய் கேள்விப்படாத நாட்டிற்கெல்லாம் போய் வருகிறோம். 

இன்னும் நமது மக்கள் தனது வேலைக்காக எங்கெல்லாம் போய் தனது வருமானத்திற்காக வாழ்க்கையில் பல வருடங்களை தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது.

ஒரு வாரத்துக்குள் மலேசியா சிங்கப்பூர் வந்து   வெளிநாட்டுப் பொருட்களை வாங்கி இந்தியாவில் விற்கும் வியாபாரிகளை "குருவி"என்று சொல்வார்கள். நாம் எவ்வளவுதான் அதிக நாட்கள் தங்கினாலும் நாமும் ஒரு குருவிதான். கொஞ்சம்    “நாள் பட்ட குருவி”.

[அப்பாடா 'இந்தாளு தலைப்பு க்கு சம்பந்தம் இல்லாமெ எழுதறான்னு யாரும் சொல்லிடக்கூடாதல்லவா? ].

இதைப்படித்த பிறகு 'உண்மையிலேயே இதில் ஒன்னுமில்லேதான்" என்று சொல்பவர்கள்தான் உண்மையான விமர்சகர்கள்.

ZAKIR HUSSAIN

ஊடக காமெடிகள் தீவிரவாத போர்வைக்குள் ! 26

அதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, மே 19, 2013 | , , , , ,


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்மையில் இந்திய ஊடகங்கள், எப்படி எல்லாம் செய்திகளை ஊதிப் பெரிதாக்குகிறார்கள். அப்படி பெரிதாக்கப்பட்ட செய்திகள் பின்னர் உப்புக்கு சப்பானியானதும் அதைப் பற்றி அடுத்தடுத்து கண்டு கொள்ளாமல் போவதையும் நாம் கண்டுவரும் அன்றாட ஊடக காமெடியாகிவிட்டது.

இந்திய உளவுத்துறை செய்து வரும் தவறுகளை மூடி மறைத்து அப்பாவிகளுக்கு எதிராக, குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிராக அவர்கள் செய்து வரும் அட்டூழியங்களை அப்படியே சாதகமாக்கி அப்பாவிகளுக்கு எதிராக செய்திகளை அள்ளி வீசுவதை முனைப்புடன் செய்து வருகிறார்கள் தரிகெட்ட இந்திய ஊடகக் காமெடியர்கள்.

இதற்கு முன்னர் நம் அதிரைநிருபரில் மீண்டும் முஸ்லிம்களைக் குறிவைக்கும் காவித்துறைகள்! http://adirainirubar.blogspot.ae/2013/03/blog-post_121.html என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம். இந்தியாவில் இந்த வருடம் நடைபெற்ற மிகப்பெரிய ஜனநாயக படுகொலை அப்ஸல் குருவின் தூக்கு தண்டனை மூலம் அரங்கேறியது. அப்சல் குருவுக்கு முறையான சட்ட உதவி செய்யப்படாமலேயே அவருக்கு அநீதியிழைக்கப்பட்டு தூக்கு தண்டனையை அவசரமாக வழங்கப்பட்டது. 

ஒரு சில முஸ்லீம் தலைவர்கள் மட்டுமே இதனை மக்கள் மத்தியில் எடுத்துரைத்தார்கள். பாராளுமன்ற குண்டு வெடிப்பில் தவறாக கைது செய்யப்பட்ட அப்சல் குருவை, சித்திரவதை செய்து அவர் செய்யாத தவறை ஒப்புக்கொள்ள வைத்து, தொலைக்காட்சிக்கு பிரத்யோக பேட்டி கொடுக்க அனுமதித்து, கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் தூக்கு தண்டனை என்ற பெயரில் ஒரு கொலை செய்தது. 

இந்திய உளவுத் துறையும், ஊடகத்துறையும், காவல்துறையிடம் உள்ள குற்றம் சாட்டப்பட்டவரை தொலைக் காட்சி நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து பேட்டி கொடுக்க எந்த சட்டத்தில் அனுமதியுள்ளது? அப்சல் குருவுக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றி எந்த ஒரு இந்திய ஊடகமும் பெரிய அளவில் செய்திகளை பதிக்கவில்லை மேலும் பார்க்க: http://adirainirubar.blogspot.ae/2013/02/blog-post_16.html -  http://www.inneram.com/opinion/politics/afzal-guru-political-murder-9037.html

அதிரைச் சகோதரர் தமீம் அன்சாரியை சந்தேகத்தின் பேரில் சென்ற வருடம் கைது செய்த தமிழ்நாடு காவல் துறை, அவர் மீது சம்பந்தமே இன்றி இல்லாத பொல்லாத அவதூறு வழக்குகளை போட்டு தேசிய மற்றும் தமிழ்நாட்டு ஊடகங்களில் பெரிய அளவில் பீற்றிக் கொண்டார்கள், ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் அவர் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்ட அப்பட்டமான தவறு என்று தீர்பளித்தது. ஆனால் இந்த செய்தியை எந்த ஒரு தேசிய ஊடகமும் வெளியிடவில்லை. ஒரிரு தமிழ் செய்தி ஊடகங்கள் மட்டுமே இந்த செய்தியை வெளியிட்டார்கள் மற்ற ஊடகங்கள் எதுவுமே இதனைக் கண்டு கொள்ளவே இல்லை. பார்க்க: http://www.inneram.com/news/tamilnadu-news/thamim-ansari-released-10507.html.

கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி காஷ்மீரை சேர்ந்தவர் செய்யது லியாக்கத் ஷா என்பரை டில்லி போலீஸார் உத்தர்பிரதேசத்தில் கைது செய்தார்கள். இவரிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்று தேசிய ஊடகங்கள் வழக்கம் போல் பிதற்றிக் கொண்டார்கள். இந்தியரான அந்த நபர் ஜம்மூ கஷ்மீர் மாநில அரசின் அனுமதியுடன் பாக்கிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு தன்னுடைய குடும்பத்துடன் வாழ வந்துள்ளது தெரியவந்தது. நேற்று டில்லி கோர்ட்டில் அவருக்கும் ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது. செய்யது லியாக்கத் ஷா ஜம்மு கஷ்மீர் அரசின் அனுமதியுடன் இந்தியா வந்துள்ளது நிரூபனமானதுடன், அவர் எந்த ஒரு ஆயுதமும் கொண்டு வந்த்தற்கான ஆதாரமும் இல்லை என்பதும் நிரூபனமானது. இந்த செய்தியையும் தேசிய ஊடகங்கள் 30 வினாடி செய்தியாகவே ஒலி ஒளிப்பரப்பியது. பார்க்க: http://www.ndtv.com/article/india/liyaqat-shah-suspected-hizbul-militant-granted-bail-by-delhi-court-368015?pfrom=home-india

இதுபோல் பெங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக அப்பாவி முஸ்லீம்களை பெங்குளூரு காவி காவல்துறை கிச்சான் புகாரி போன்ற 11 சகோதரர்களை கோவையில் கைது செய்துள்ளது. இந்த செய்தியை தமிழ் மற்றும் தேசிய ஊடகங்கள் பெரும் பரபரப்புடன் தலைப்புச் செய்தியாக வெளியிட்டு தங்களின் வயிற்று பிழைப்பை தேடிக் கொண்டார்கள். கைது செய்யப்பட்ட சகோதரர்கள் 11 பேர் மீது இதுவரை எந்த ஒரு தகுந்த ஆதாரமும் கிடைக்காத நிலையில், நேற்று முன் தினம் கோவையில் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்ற போலீஸார், அவர்களே கொண்டு வந்த வெடிபொருட்களைக் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் வைத்துவிட்டு, அதை அங்கு கைப்பற்றியதாக ஊடகங்களுக்கு செய்தியை வெளியிட்டு தங்களின் காவிக் களாவானித்தனத்தை அரங்கேற்றியுள்ளார்கள். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சகோதரர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் என்று இந்திய இறையான்மையின் ஆனிவேரான நீதிமன்றங்களின் தெள்ளத் தெளிவான தீர்ப்பு வரும் இன்ஷா அல்லாஹ். வழக்கம் போல் தமிழ் மற்றும் தேசிய செய்தி ஊடகங்கள் அந்த செய்திகளை நிச்சயம் வெளியிட மாட்டார்கள். 

ஊடக காமெடித் தீவிரவாதம் முஸ்லீகளுக்கு எதிராக காவல்துறை உதவியுடன் நடைபெற்று வரும் இந்த சூழலில். கிரிக்கெட் விளையாட்டில் சூதாட்டம் நடைபெற்றுள்ளதாக கடந்த இரண்டு மூன்று தினங்களாக கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்திய கிரிக்கெட் வீரார்கள் பற்றிய செய்தியை இந்திய ஊடகங்கள் தங்களின் வயிற்று பிழைப்புக்காக வெறும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இலஞ்சம் என்பது இந்தியாவில் 24 மணிநேரம் நடைபெரும் ஒரு சாதாரன தினசரிக் குற்றம் (செய்தி வெளியிடும் கயவர்களே ஒப்புக் கொண்டது). இதற்கென்று ஒரு அடாவடித்தனமான முக்கியத்துவம் கொடுத்து ஒரு புறம் அந்த விளையாட்டு வீரர்களுக்கு அனுதாபமும் (குறிப்பாக மலையாள ஊடகங்கள்), இன்னொரு புறம் டில்லி காவல்துறையின் செய்திகளை உடனுக்குடன் பகிர்ந்து 24 மணிநேரமும் ஒரு பரபரப்பு சூழலையும் ஏற்படுத்தி வருகிறார்கள் இந்த கேடுகெட்ட இந்திய ஊடகங்கள்.

இறுதியாக இவை அனைத்தையும் நாம் கூர்ந்து அவதானிக்கும் போது, ஊடகத்துறையும் ஊழல்(!!!)துறையை (இந்திய அரசால் உருவாக்கப்பட்ட புதிய துறை) வைத்தே தங்களின் பிழைப்புகளை நடத்தி வருகிறார்கள் என்ற சந்தேகமே வலுக்கிறது.

• காவல்துறை விசாரணை கைதி நேரடியாக தொலைக்காட்சி நிகழ்சியில் பேட்டி கொடுக்க எந்த சட்டத்தில் அனுமதியுள்ளது? பேட்டி எடுத்த தொலைக்காட்சி சேனல் நிச்சயம் (காவி)காவல்துறைக்கு லஞ்சம் கொடுத்தால் மட்டுமே அப்படிச் செய்ய முடியும் என்பது தெளிவாகிறது.

• பொதுவாக முன்னனி தேசிய மற்றும் தமிழ் ஊடகங்களில் வரும் செய்திகளை கவணித்தால் தெரியும், அடிக்கடி ஒரு வார்த்தையை சொல்வார்கள், காவல்துறையிடமிருந்து கிடைத்த அதிக்காரப்பூர்வமான செய்தி. ஆங்கிலத்தில் ‘THROUGH OUR SOURCES IN THE POLICE’ இப்படி ‘sources’ என்று அடிக்கடி சொல்லும் இந்தச் செய்தி ஊடகங்களுக்கு ரகசியமாக செய்தி கொடுக்கும் காவல்துறை அதிகாரிகள் இலவச சேவை செய்யும் முட்டாளாக இருக்க மாட்டார்கள். காவல்துறை வட்டாரத்திலிருந்து செய்தி சேகரிக்கப்படுவதற்கு நிச்சயம் பெரும் தொகைகள் லஞ்சமாக கொடுக்கப்படுவதுடன். காவல்துறை அதிகாரிகளிடம் வரைவுக் கேள்வி பதில் நிகழ்ச்சி (Press-meet drama) ஒன்றை ஏற்பாடு செய்து அந்த அதிகாரியை தொலைக்காட்சியில் பிரபலப்படுத்தி விடுகிறார்கள்.

குண்டு வெடிப்புக்கு மட்டும் தீவிரவாதம் என்று பெயர் வைத்து விடுகிறார்கள், ஆனால் ஊடகங்கள் செய்யும் அநியாயங்களை யாருமே கண்டு கொள்வதில்லை. பெரும்பாலும் ஒரு தவறை கண்டுப்பிடிக்க, அது தொடர்பான செய்தி தன் ஊடகத்துக்கு மட்டுமே கிடைக்க பெரும் தொகைகளை லஞ்சமாக (அன்பளிப்பாக) வாரி இரைக்கும் அவல நிலையை இந்திய ஊடகங்கள் செய்து வருகிறார்கள். இந்த கேவலமான நிலையையும் ஊடக ஊழல் தீவிரவாதமே!

லஞ்சம் கொடுத்து செய்தி சேகரித்து வெளியிடும் செய்திச் சேனல்களுக்கும், அன்பளிப்புகள் கொடுத்து சாதகமான செய்திகள் வெளியிடத் தூண்டும் காவல் (ஊழல்) துறை மட்டுமல்ல, இன்னும் அமைப்புகள் தனிமனித துதிகளுக்காக செதிகள் வெளியிடும் நேர்மையற்ற ஊடகங்களுக்கும் லஞ்சத்தை பற்றி பேச எந்த ஒரு அருகைதையும் இல்லை. 

ஊடக தீவிரவாதத்துக்கு எதிரான குரல் தொடரும்.. இன்ஷா அல்லாஹ்..

அதிரைநிருபர் பதிப்பகம்

Dare To Dream 43

அதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, மே 19, 2013 | , , ,


Things thought through internal
That makes you realize external
Dreams are spiritual animation
A true reflection of inner feelings

Things once dreamed inside
Things get realized outside
A conscious dream of excellence
A blue print for your future life

Visionaries focus on dreams
Visioning makes one great
Child life times of cherished dreams
Turbulences of life make them clogged

The dreams were true seeds
Before the seven wonders
Dare to dream boundless ideas
All realizations are well thought out ideals

Unlock your potentials by dreaming
Unlimited your reach to top dreaming
Dreaming level determines living level
Inspiring leaders inspire through dreams

Life in world is dreaming
Awake from dreams to realize
Dissolving dreams transit you
Divine dreams towards paradise

B.  Ahamed Ameen

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் - தொடர் 16 25

அதிரைநிருபர் பதிப்பகம் | சனி, மே 18, 2013 | ,



தொடர் : பதினாறு

இஸ்லாமிய பொருளாதாரத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள். (உழைப்புக்குக் கூலி ).

பொருளாதாரத்தை வடிவமைக்கும் முக்கிய காரணிகள் என்று பொதுவான பொருளியல் அறிஞர்கள் குறிப்பிடுவன நான்கு காரணிகளாகும்.  அவையாவன  நிலம், உழைப்பு, முதலீடு, தொழில்  முனைவர்கள் ஆகியவைகளாகும். ( LAND, LABOUR, CAPITAL & ENTREPRENEUR).  

இந்த நான்கு காரணிகளின் கலவையால்தான் உற்பத்தி எனும் பொருளியலின் அடிப்படை இயக்கம் செய்யப்படுகிறது.  இந்தக் காரணிகள் உற்பத்திக்கான  தங்களின் பங்களிப்புகளின்  அடிப்படையில் தங்களால் உற்பத்தி செய்யப்பட்டவைகளின் உபரிகளைப் பிரித்துக் கொள்கின்றன.  நிலத்துக்கு வாடகை (RENT) உழைப்பவர்க்குக் கூலி அல்லது சம்பளம்  (WAGES OR SALARY) முதலீட்டுக்கு வட்டி அல்லது இலாபப் பங்கு  (INTEREST or DIVIDENT ) தொழில் முனைவோருக்கு இலாபம்  (PROFIT) என்கிற அளவில் இவைகள் பங்கிடப்படுகின்றன.  ( வட்டி என்றதும்  இப்போதே யாரும் அடிப்பதற்கு கம்பைத் தூக்கி விடாதீர்கள்- இது பற்றி நிறைய எழுத இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்) இப்போது சில அடிப்படையான பொருளாதார இயல்புகளைக் குறிப்பிட வேண்டி இருப்பதால் இவற்றைப் பற்றி மட்டும்  பேசுகிறோம். 

மேற்கண்ட நான்கு காரணிகளில் எதன்  பங்களிப்பு அதிகம்? எதற்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்? எந்தக் காரணிக்கு  மூத்த பங்காளராக இருக்க முடியும் என்பதில்தான் முதலாளித்துவ மற்றும் பொதுவுடமைக் கோட்பாடுகள் போட்டிபோட்டுக் கொண்டு நிற்கின்றன. நிலத்துக்கு முதன்மை இடம் தரப்பட வேண்டுமா? உழைப்புக்கு முதலிடம் தரப்பட வேண்டுமா? இடும் முதலீட்டுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டுமா  அல்லது இவைகளை எல்லாம்      ஒருங்கிணைத்து நிர்வகிக்கிற தொழில் முனைவோனுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டுமா என்பதில் சர்ச்சைகள் நிலவுகின்றன. ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட்டால்தான் உருவாக்கம் என்பது நடைபெற முடியும் என்கிற அமைப்பில் யார் பெரியவன் என்கிற போட்டி நிலவி அதிகார வர்க்கங்கள் தங்களின் பங்கை சிறந்டிக் கொண்டால் எழுவதே உழைப்போர் போராட்டம்.  

வங்கிகள் தரும்        முதலீட்டுக்கு அதிக வட்டியை சுரண்டிக்கொள்கின்றன. பணம் பத்தும் செய்யும் என்கிற காரணத்தாலும் பணம் உள்ளோனே பலவான் என்பதாலும் பணம் படைத்தவர்களால் தாங்கள் விருப்பம்போல் எதையும் ஆட்டிப் படைக்க முடியும். இதனால்தான் முன்னறிவிப்பின்றி மத்திய வங்கிகளின் வட்டி வீதம் திடீரென்று கூட்டப் படுகிறது குறைக்கப் படுகிறது. 

அதேபோல் தொழில் முனைவோர் நிர்வாகத்தில் இருப்பதால் அவர்கள் தடி எடுக்கும்போதெல்லாம் தண்டல்காரர்களாக மாற அவர்களாலும் முடியும். நிர்வாகத்தில் இருப்போர்கள் தங்களுக்கும் தங்களைச் சார்ந்தோருக்கும் தங்களின் அதிகாரத்தைக் கொண்டு   கூடுதலான சம்பள விகிதங்களையும் சலுகைகளையும் அடைந்து கொண்டு இலாபத்தின் அளவைக்  குறைத்துக் காட்டலாம். 

நிலவுடைமை அதிகார வர்க்கங்கள் போடும் ஆட்டமும் அளவற்றது. 

எஞ்சி இருப்பது உழைப்போர் வர்க்கமே. இஸ்லாமியப் பொருளாதாரம் உழைப்போர் பக்கமே அதிகம் சார்ந்து இருக்கிறது என்பதை இங்கு நிலை நாட்டுவோம். 

பிழைப்பவரின் பேருழைப்பை முடிந்த மட்டும்
பிழிகின்ற கொடுமைக்குப் பெயர் சுரண்டல்!
உழைப்பவரின் குருதியினை உறிஞ்சுகின்றோர்
உலகினிலே கொழுக்கின்றி சுரண்டல்காரர்!
தழைக்கின்ற வளமனைத்தும் உழைக்காதார்க்கா?
தாழ்வுறுத்தும் வளமையெல்லாம் உழைப்போருக்கு?
உழைக்கின்ற மக்களெலாம் சிந்திக்கின்ற
உழைப்பேற்காக் காரணத்தால் தொடரும் துன்பம்!

அன்புணர்வு மாந்தர் நேயம் என்னும் சொற்கள்
அவற்றின்நற் பொருளிழந்த அலங்கோலத்தால்
முன்பிருந்த நல்லிணக்கம் அமைதி வாழ்க்கை
முற்றிலமாய் இன்றைக்கு எங்கும் இல்லை!
நின்றெண்ணிப் பார்த்திடவே ஒருவருக்கும்
நேரமில்லை; காலமில்லை; விரைவு, ஓட்டம்!
வென்றுயர வேண்டுமெனும் வேகப் போக்கில்
வீழ்த்துவதோ நல்லுணர்வை சிந்திப்பீரே!  - என்று ஒரு கவிஞர் புலம்புகிறார். 

உழைப்போர் ஒருதலைப் பட்சமாக வஞ்சிக்கப் பட்டு சுரண்டபட்டதால் உலகில் நடந்த புரட்சிகள்     வரலாற்றின் சுவடிகளில்  இரத்தக்கறை படிந்தவைகளாகும். இன்னும் இவற்றின் வடுக்கள் உலகெங்கும் நினைவுச்சின்னங்களாய் நிற்கின்றன.          தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டமும்  புரட்சிகளும்  நடைபெறாத நாடுகளே உலகில் இல்லை. இந்தப் புரட்சிகளுக்கும் சிந்தப் பட்ட இரத்தத் துளிகளுக்கும் காரணம் உழைப்போருக்கு உரிய கண்ணியத்தையும், அவர்களின் பங்கையும் அளிக்கத்தவறிய கோட்பாடுகளும் நடை முறைகளுமே.  

வருடத்திற்கொரு முறை மே 1 அன்று உலகம் முழுவதும் உழைப்பாளிகள் தினம் கடைப்பிடிக்கப் படுகிறது.  அன்றைய தினத்தில் உழைப்பாளிகளின் கோரிக்கைகள், மாத ஊதியம், அவர்களின் அடிப்படைப்பிரச்னைகள், அவர்கள் சந்திக்கும் அவலங்கள், இன்னும் இவை போன்ற உழைப்பாளிகளைப் பற்றிய பல விஷயங்கள் உலகம் முழுவதும் பேசப்படும் அல்லது அலசப்படும். ஆனால் அன்றைய தினத்திற்கு முன்போ அல்லது பின்போ உழைப்பாளிகளை எவரும்  கண்டு கொள்வதேயில்லை.

உலகத்தொழிலாளர்கள் பட்ட துன்பங்களின் வரலாறு இப்படி சில சான்றுகளை நமக்குச் சொல்கிறது. 

18ஆம் நூற்றாண்டின் இறுதியிலோ 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலோ பல வளர்ச்சி அடைந்த நாடுகளில் உழைப்பாளிகள், முதலாளிகளால் மிக மோசமான முறைகளில் நடத்தப்பட்டனர். எந்தளவிற்கெனில் நாளொன்றுக்கு 12முதல் 18 மணி நேரம் கட்டாயம் உழைத்தே ஆக வேண்டும் என்றொரு நிலை அன்றிருந்தது.  இக்கொடுமைக்கெதிராக பல நாடுகளில் ஆங்காங்கே எதிர்ப்புக் குரல்களும் கண்டனக்கனைகளும் தோன்ற ஆரம்பித்தன.

இங்கிலாந்தில் வேலை நேராக குறைப்பை கோரிக்கையாக வைத்து 
 ‘சாசன இயக்கம்’ என்றொரு இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.

ஃபிரான்ஸில் 1830 களில் நெசவுத்தொழிலாளிகள் 15 மணி நேரம் வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர். இதை எதிர்த்து 1834 ஆம் ஆண்டு ‘ ஜனநாயகம்’ அல்லது மரணம் என்றொரு கோஷத்தை முன்வைத்து நெசவுத்தொழிலாளிகள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர் .

அமெரிக்காவில் 1832 ல் பாஸ்டனில்  கப்பலில் பணியாற்றிக்கொண்டிருந்த தச்சுத்தொழிலாளிகள் 10 மணி நேர வேலை என்றொரு கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

1835ல் பிலடெல்பியாவிலும்,பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து உழைப்பாளிகளால் வேலை நிறுத்தம் செய்யப்பட்டது.

1877 ல் பென்சில்வேனியாவில் சுரங்கத்தொழிலாளிகளும், இரயில்வே தொழிலாளிகளும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

1886 ல் பல்வேறு மாநிலங்களில் தொழிலாளர் இயக்கங்களை ஒன்றினைத்து அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கம் 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டதோடு 1886 மே 1 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறை கூவல் விடுத்தது.  இதுவும் மே தினம் என்கிற உழைப்பாளர் நாள் உருவாக முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில்1856 ல் 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து மெல்போர்னில் கட்டிடத்தொழிலாளிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றனர்.

ரஷ்யாவில் 1895 க்கும் 1899க்கும் இடைப்பட்ட காலங்களில் பல நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் குறைவான நேரம் வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து நடைபெற்றன.

சிக்காக்கோவில்1886 மே 3அன்று ஒரு பிரபலமான நிறுவனத்தின் வாசலில் 3000க்கும் மேற்பட்ட உழைப்பாளிகள் கண்டனக்கூட்டம் நடத்திக்கொண்டிருக்கும்போது 4 தொழிலாளிகள் காவல் துறையினரால் சுடப்பட்டு பலியாயினர். இதைக் கண்டிக்கும் வகையில் மே 4 அன்று ஏமார்க்கெட் சதுக்கத்தில் 2500 தொழிலாளிகள் கலந்து கொண்டு மாபெரும் கண்டனக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும்போது திடீரென்று கூட்டத்திற்குள் வெடிகுண்டு ஒன்று வீசப்பட்டதில் காவல்துறையினரில் ஒருவர் பலியாகவே, உடனே காவல்துறை  கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதோடு மட்டுமல்லாமல் தொழிலாளர் தலைவர்களை கைதுசெய்து வழக்கும் தொடுத்து 1886 மே21 அன்று 8 பேருக்கு தூக்குத்தண்டணையும் பெற்றுக்கொடுத்தனர்.

1887 ஆம் ஆண்டு அந்த 7பேரும் தூக்கிலிடப்பட்டனர் இவர்களின் இறுதி ஊர்வலத்தில் 5 இலட்சம் பேர் கலந்துகொண்டனர்.

8 மணி நேர வேலைக்கான போராட்டமும் சிக்காக்கோ தியாகிகளின் தியாகமும் தான் இன்று மே 1 அன்று உழைப்பவர் தினமாக வருடந்தோறும் அனுசரிக்கப்படுகிறது.

பாரீசில் 1889 ஜீலை 14 அன்று பாரீசில் 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் கலந்து கொண்டகூட்டத்தில் 8 மணி நேர வேலை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது எனவும் சிகாகோ சதியை இம்மாநாடு வன்மையாகக் கண்டிப்பதோடு 1890 மே 1 அன்றிலிருந்து அனைத்து நாடுகளிலும் தொழிலாளர் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது. இதுதான் ஆண்டுதோறும்  மே 1 அன்று உலகம் முழுவதிலும் உழைப்பாளர் தினம் என்று கடைப்பிடிக்கப் படுகிறது. 

இப்படி ஒரு நாளை உழைப்போர்க்கு அறிவித்ததால் மட்டும்  உலகம் முழுவதும் தொழிலாளர்கள் படும்  கஷ்டங்கள் முழுக்க முழுக்க  தீர்ந்தபாடில்லை. மிகவும் பரிதாபத்துக்குரிய  விஷயம் என்னவென்றால்  இன்று வரை இன்னும் பல நாடுகளில்   பல நிறுவனங்களிலும் தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும் உழைப்பாளிகள் கொத்தடிமைகளாகவும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் மிகவும் பின்தங்கியவர்களாகவுமே நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் அடிப்படைப்பிரச்னைகள் இன்றுவரை தீர்க்கப்படவில்லை. அவர்கள் செல்லொணாத்துன்பங்களை சந்தித்து வருகின்றனர். சின்னஞ்சிறு அரும்புகள் குழந்தைத் தொழிலாளர்கள்  கொத்தடிமைகளாக கொடுமைகளின்  கூடாரத்தில் வாழ்ந்து வருகின்றனர்.  கல்வி மறுக்கப்பட்டு புத்தக சுமைகளை சுமக்கிற வயதில் கருங்கல் சுமைகளைத் தூக்குகின்ற அவல நிலை பல நாடுகளில் உள்ளன. 

தாய்லாந்து போன்ற நாடுகளில் விபச்சாரம் போன்ற இழிவான செயலைக் கூட ஒரு தொழிலாக அரசே அங்கீகாரம் அளித்து இருக்கிறது. இந்தியாவின் சில மாநிலங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. 

உழைப்பாளிகளுக்காக எப்படிப்பட்ட போராட்டங்கள் வேலை நிறுத்தங்கள் செய்யப்பட்டாலும் நடைமுறையில் உள்ள பொருளாதாரக் கோட்பாடுகளின் மூலம் முதலாளிகளாலும் ஆளும் வர்க்கத்தினராலும் உழைப்பாளிகளுக்கு தீர்வுகள் கிடைக்கப் போவதில்லை. 

இவர்களெல்லாம் போராடுவதற்கு 1400  ஆண்டுகளுக்கு முன்னாலே உழைப்பாளிகள் எதற்காக பாடுபட்டார்களோ அவை அனைத்தையும் இஸ்லாம் வழங்கிவிட்டது. ஆகவே இஸ்லாத்தால் மட்டுமே அவர்களின் அடிப்படைப் பிரச்னைகளை தீர்க்க முடியும் இஸ்லாம் காட்டுகிற கொள்கைகளால் மட்டுமே அவர்களின் வாழ்வாதாரப் பொருளாதாரப் பிரச்னைகளைக்  களைய முடியும்.

உழைப்பாளிகளை கண்ணியப்படுத்தி அவர்களை கௌரவப்படுத்தி அவர்களின் அடிப்படைப் பிரச்னைகளை முளையிலேயே கிள்ளி எறிந்து அவர் களின் உரிமைகளை 1400 ஆண்டுகளுக்கு முன்னாலேயே இஸ்லாம் வழங்கியிருக்கிறதென்றால் அது மிகைப்படுத்தப் பட்டதல்ல. இஸ்லாம் வழங்கும் மனிதாபிமானம் சார்ந்த பொருளாதார அடிப்படை   உரிமைகளும்  நபி(ஸல்)அவர்கள் வாழ்ந்து நடந்து கொண்ட விதமும் நடக்கச் சொல்லி போதித்த முறைகளும்  உலகெங்கும் கடைப் பிடிக்கப் பட்டால் தொழிலாளர் பிரச்சனைகள் தடுக்கப்பட்டு வளர்ச்சிப் பாதையில் உலகம் நடைபோடும் வகையில்  உற்பத்தி மேலோங்கும்.  

இதோ இறைமறையும் நபி மொழிகள் நமக்குத்தரும் சான்றுகள் இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம். 
தொடரும் இன்ஷா அல்லாஹ்…
இபுராஹீம் அன்சாரி


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+