மேகம்
நெடுவானில் விளையாடும் மேகக் கூட்டம்
நேருக்கு நேராக மோதிக் கொண்டால்
கடிதான ஒலியோடு கண்கள் கூசக்
ககனத்தை ஒளியாக்கி அச்சம் ஊட்டும்
அடிவானுக் கருகினிலே துகள்கள் வந்தால்
அருள்மழையால் புவியதனைப் பசுமை யாக்கும்
சுடுநாளின் அனலெல்லாம் தணிந்தே போகும்
சோலைகளும் பசுமையினைப் பெற்றெ டுக்கும்.
அதிரை அஹ்மத்
1 Responses So Far:
கவிதைக்குப் பொருத்தமான motion picture அருமை. மிக்க நன்றி.
இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...
பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.