இயற்கை இன்பம் – 17 1

அதிரைநிருபர் பதிப்பகம் | July 30, 2016 | , , , ,

தேனீ 



பூக்களினுள்  பொதிந்துள்ள  இன்பத்  தண்ணீர்
                  போய்க்குடிக்கும்  தேனீக்கள்  திரும்பி  வந்தே
ஆக்கிவைத்த  அடைக்கூட்டின்  அறையி  னுள்ளே
                  அடுக்கடுக்கு  வயிற்றுக்குள்  மாற்றம்  பெற்ற
பீக்கழிவைத்  தேனாகச்  சேர்த்து  வைத்துப்
                  பெருகிவரும்  நோய்களுக்கு  மருந்தாய்  ஆக்கும்!
ஈக்களினால்  மாந்தற்குக்  கிடைக்கும்  இந்த
                  இணையற்ற  மருந்திறையின்  அருளே  யன்றோ?!

அதிரை அஹ்மத்

1 Responses So Far:

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.