Sunday, November 29, 2020

படிக்கட்டுகள் நூல் – பதிப்புரை

 ‘அதிரை நிருபர்’ வலைத்தளம் www.adirainirubar.in அமைதியின் ஆளுமையாகக் கலை, இலக்கியம், வாழ்வியல், அரசியல், சமுதாய நன்னோக்கு, பொருளாதாரம், சுய சரிதைகள், வரலாற்றுக் குறிப்புகள், விழிப்புணர்வு, ஊர்ச் செய்திகள், நிஜத்தை நிமிரவைக்கும் உண்மைகள் எனப் பல்வேறு பகுதிகளாகத் தொடர்ந்து பதிவுகளை வெளியிடுவதில் தனித்துவத்துடன் நிமிர்ந்து நிற்கிறது.

‘அதிரைநிருபர்’ தளத்தில் வெளியாகும் பதிவுகளை எழுதும் பதிவர்களின் எழுத்தோவியங்களில் உயிரோட்டமும், உணர்வுகளோடு உரசும் உரமும் இருப்பதை அதை வாசிக்கும் வாசகர்கள் நன்கறிவர். சகோதரர் ஜாகிர் ஹுசேன் அவர்களால் ஏராளமான பதிவுகள் எழுதப்பட்டு அதிரைநிருபர் தளத்தில் வெளியாகி இருக்கின்றன. குறிப்பாக வாழ்வியலை வருடும் எழுத்தோவியங்கள், நகைச்சுவை ததும்பும் கருத்துருவாக்கங்கள் கொண்ட பதிவுகள், தான் பிறந்த, வளர்ந்த, வசிக்கும் மண்வாசனையும் அதன் கலாச்சாரமும் சார்ந்த கட்டுரைகள், இன்னும் நிகழ்காலத்தோடு நிமிர்ந்து நடைபோடும் அவரின் எழுத்துக்கள் உறங்கும் உள்ளங்களையெல்லாம் உசுப்பிவிட்டு விழித்தெழச் செய்யும். மேலும் பல்வேறான விழிப்புணர்வு கட்டுரைகள் பலரை வெகுவாகக் கவர்ந்திருப்பது அவருடைய எழுத்திற்கான வெற்றியே!

வாழ்வியலை வருடும் பதிவுகளின் வெற்றியைத் தொடர்ந்து, தான் சார்ந்த சுய அனுபவத்தின் பலனாய் புத்துயிரூட்டும் விதமான தொடரொன்றை ஒவ்வொரு அத்தியாயத்திற்குமெனத் தனியொரு கரு கொண்டு எழுதி அதனை எளிய வடிவில் புரிந்து கொள்ளும் விதமாக ஒவ்வொரு அத்தியாயத்தையும் நகைச்சுவையோடு தனது சமயோசித சூழல் பேசும் மொழியில் வடித்திருக்கிறார்.

ஒவ்வொரு அத்தியாயமும் அதிரைநிருபர் வலைத்தளத்தில் வெளியானதும் வாசகர்களின் கருத்தாய்வுகளும் இந்தத் தொடருக்கு மேலும் வலுசேர்த்தது.
மிகச் சிறந்த சிந்தனையாளர், சமகால சக மனிதர்களோடு அவர்களின் வழக்காடு மொழியிலேயே எழுத்தோடு உரையாடக் கூடியவர், சமுதாய மக்களின் ஒற்றுமையை மற்றும் குடும்ப உறவுகளின் ஒற்றுமையை வலியுறுத்தும் ஏராளமான கட்டுரைகளுக்கும் சொந்தக்காரர் சகோதரர் ஜாகிர் ஹுசேன் அவர்கள்.

அதிரைநிருபர் வலைத்தளத்தின் மூன்றாவது வெளியீடாக, எங்கள் நட்சத்திர எழுத்தாளரின் தொடர் ஒன்று புத்தகமாக வெளிவருவதில் நாங்கள் பெருமகிழ்வடைகிறோம்!

வாழ்த்துகின்றோம்!

நெறியாளர்
editor@adirainirubar.in
www.adirainirubar.in

அலைபேசி எண் : 8220071216 என்ற வாட்சப் எண்ணுக்குத் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம் !

No comments:

Post a Comment

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.