Showing posts with label நபி. Show all posts
Showing posts with label நபி. Show all posts

குணக்குன்று 2

அதிரைநிருபர் பதிப்பகம் | October 09, 2014 | , , , , , , ,

உதய நிலவின் குளிராக உஷ்ண பூமியியின் ஒரு சமுதாயத்திலிருந்து உத்தம நபியை உலகிற்கு அளித்தான் ஏக இறைவன் அல்லாஹ். நீதி மறையின் விளக்க உரையாக நற்குணத்தின் குன்றாக, இறைமறையோடு அருட்கொடையை இப்புவிக்கு பரிசாக தந்தான் வல்ல அல்லாஹ்.

தம்  தூய வாழ்வினால் மனித வாழ்க்கையின்அளவுகோலை மாற்றி , இருளை விட்டும் மக்களை அகற்றி, தங்களின் ஒழுக்கம், வழிகாட்டுதலில், சொல்லில், செயலில் ஒரே நேர்கோட்டுப்பாதையில் எள்ளளவும் பிசிறில்லாமல், தீமையெனும் களை எடுத்து, நன்மை என்னும் நாற்றங்காலை நட்டு, அதன் விளைச்சலை தன் வாழ்நாளிலேயே அறுவடை செய்து, அதன் பலனை அனைவரையும் அனுபவிக்கச் செய்தார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

நற்குணத்திலும், நற்செயல்களிலும், இப்புவியின் இயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வரும் வரை பின்பற்றப்பட வேண்டிய சமுதாயம் என்று ஒரு மிகப்பெரும் சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கிச் சென்ற , மனிதகுல முன்மாதிரி, இறுதி நபி (ஸல்) அவர்களின் குணம், அவர்களின் நடைமுறை வாழ்க்கை , பழகிய விதம், மற்றும் அவர்களின் உயர் பண்புகள் நாள்தோறும் எவ்வாறு இருந்தது என்பதை சுருக்கமாக எடுத்துரைக்கவே இந்தப்பதிவு.

உயர் பண்பு 

வார்த்தைக்குள் அடங்காத சிறந்த பண்புகளையும் குணங்களையும் கொண்டவர்களாக, அவர்களோடு சமகாலத்தில் பழகியவர்களே, அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதையைப் போல், இதற்கு முன் யாருக்கும், யாரும் கொடுத்ததுவும் இல்லை, கொடுக்கப்பட்டதாக கேள்விப்பட்டதும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு  அருமை நபி (ஸல்) தம் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டார்கள். 

ஒருவரைப்பற்றி விரும்பாத செய்தி கிடைத்தால் அப்போது நபி (ஸல்) அவர்கள் "சிலர் ஏன் இப்படி செய்கிறார்கள்" என்று பொதுவாகப் பேசுவார்கள்.  சம்பத்தப்பட்ட நபரின்  பெயரை குறிப்பிட்டு சங்கடப்படுத்த  மாட்டார்கள்.

மக்களில் உண்மையாளராக, ஒழுக்க சீலராக, திகழ்ந்தார்கள். இந்த உண்மையை நபித்தோழர்கள் மட்டுமல்ல எதிரிகள் கூட தெரிந்து வைத்திருந்தார்கள். 

மலர்ந்த முகம், இளகிய மனம், நளினம் பெற்று இருந்தார்கள். கடுகடுப்பு, முரட்டு குணம், கூச்சல், அருவருப்பாக பேசுதல், அதட்டுதல் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு இருந்தார்கள். 

நபித்துவம் வருவதற்கு முன்பே,  "நம்பிக்கைக்கு உரியவர் " என்று அழைக்கப்பட்ட ஏந்தல் நபி, அறியாமைக் காலத்திலும் அறிவிலிகளுக்குக்கும் நீதமான தீர்வு சொன்ன நீதிமான்.

தனக்கு முன்பு யாரும் எழுந்து நிற்பதை தடை செய்தார்கள், பணிவு உடையவர்களாகவும், பெருமை கொள்வதை விட்டும் விலகியும் இருந்தார்கள். 

தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்பவர்களாக இருந்தார்கள். காலணியை தாங்களே தைத்து கொண்டார்கள், ஆட்டிலிருந்து பால் கறந்து பயன்படுத்தி கொண்டார்கள், ஆடைகளை துவைத்து பயன்படுத்தி கொண்டார்கள், எந்த சந்தர்ப்பத்திலும் அவர்களை தனித்துக்காட்ட விரும்பியதே இல்லை. 

ஒருமுறை ஒரு பயணத்தின் போது ஆடு ஒன்றை அறுத்து சமைக்கும்படி கூறினார்கள். ஒருவர் நான் ஆட்டை அறுக்கின்றேன் என்றார், ஒருவர் நான் உரிக்கின்றேன் என்றார், மற்றொருவர் நான் சமைக்கின்றேன் என்றார்,  அப்படியென்றால் நான் விறகு பொறுக்கிக் கொண்டு வருகின்றேன் என்று அண்ணல் நபி ( ஸல் ) அவர்கள் சொன்னார்கள்.

அதற்கு சஹாபாக்கள் யா ரசூலுல்லாஹ் தங்களுக்கு ஏன் சிரமம் நாங்களே பார்த்துக்கொள்கின்றோம் என்றார்கள். 

அதற்கு கண்மணி நாயகம் (ஸல்) சொன்னார்கள் : " நீங்கள் செய்வீர்கள் என்று எனக்கு தெரியும் , ஆனால் என்னை என் தோழர்களிடமிருந்து  தனித்து காட்ட விரும்பவில்லை. அப்படி தனித்து காட்டுவதை  அல்லாஹ் வெறுக்கின்றான் " என்றார்கள். 

அண்ணல் (நபி ஸல்) தெள்ளதெளிவாக பேசுபவர்களாக  இருந்தார்கள், அனைவராலும் அறியப்பட்ட ஒரு நல்லியல்பு பெற்றவர்களாக இருந்தார்கள். தெளிவாக, சரியாக, சரளமாக பேசக் கூடியவர்களாக இருந்தார்கள். நூதன நுட்பங்களுடன்  சொல்லாக்கம் முழுமை பெற்றவர்களாக இருந்தார்கள். ஒவ்வொரு இனத்தாரிடமும் அவரவவர் மொழி நடையில் பேசும் திறமை பெற்றிருந்தார்கள். நகரவாசிகள், கிராமவாசிகளுக்கு தகுந்தார்ப்போல் அவரவர் தொனியில் பேசக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.

சிரமத்தை தாங்குவது, சக்தி இருந்தும் மன்னிப்பது, சகித்துக்கொள்வது பொறுத்துப் போவது அவர்களின் உயர் பண்புகளில் உள்ளவைகளாகும். சாதாரணமாக இடையூறுகள் அதிகமாக அதிகமாக பொறுமை குறைந்து கொண்டே போகும். ஆனால் இந்த நீதிமானுக்கோ பொறுமை கூடிக் கொண்டே போனது. 

ஒரு விஷயத்தை தேர்ந்தெடுக்க இரண்டு வாய்ப்புகள் என்று வரும்போது அதில் இலகுவானதையே தேர்ந்தெடுப்பார்கள். அது பாவகரமானது என்று தெரிய வரும்போது வெகு தூரம் விலகி விடுவார்கள். தங்களுக்காக தங்கள் சுய நலத்திற்காக யாரையும் பழி வாங்கியதில்லை. ஆனால் அல்லாஹ்வின் கண்ணியம் பாழாக்கப்பட்டால் அதற்குற்குரிய தண்டனையை வழங்கத் தயங்கியதில்லை.

மெதுவாக கோபப்படுவார்கள். விரைவாக மகிழ்ச்சி அடைவார்கள். வறுமைக்கு  அஞ்சாமல் தேவை உடையோர்க்கு உதவி செய்தார்கள். விரைந்து வீசும் காற்றின் வேகத்தைவிட செல்வத்தை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்.

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : அண்ணல் நபி (ஸல்) யாரும் ஒன்றை கேட்டு அவர்கள் இல்லை என்று சொன்னதே இல்லை.  

இப்படி  எந்த குணாதிசயங்களிலும்  ஒரு கடுகளவு குறை சொல்லும் சந்தர்ப்பத்திற்கு  இடமே இல்லாமல் இவ்வுலகை விட்டும் விடை பெற்றுச் சென்று இருக்கின்றார்கள் என்றால் என்னே ஒரு அற்புதமான வாழ்வு வாழ்ந்து சென்று இருக்கின்றார்கள்.

அமைதியின் கம்பீரம்!

நபி (ஸல்) மிகக்குட்டையோ, நெட்டையோ அல்லர், கூட்டத்தில் பார்ப்பதற்கு நடுத்தரமானவர்கள், அடத்தியான சுருட்டை  முடி கொண்டவரும் அல்லர், கோரை முடி கொண்டவரும் அல்லர், சிவந்த வெண்மையானவர்கள், கருவிழி உடையவர்கள். புஜமும் மூட்டு எலும்புகளும் தடிப்பானவர்கள். 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா செல்லும் வழியில் , அவர்களைக் கண்ட குஜைமா கிளையைச் சேர்ந்த உம்மு மஅபத் விவரிக்கும்போது, 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வயிறோ, தலையோ பெருத்தவர் அல்லர், கவர்ச்சிமிகு பேரழகும், கருத்த புருவமும் உடையவர்கள், நீண்ட இமை முடியும், கம்பீரக்குரல் வளமும் உடையவர்கள். அவரது அமைதி கம்பீரத்தைத் தரும், ஒளி இலங்கும் பேச்சுடையவர் என்றும் இன்ன பிற பண்புகளையும் விளக்குகின்றார்கள்.  

ஒரு விஷயத்திற்காக திரும்பிப் பார்த்தால் முழுவதுமாக திரும்பிப் பார்ப்பாகள். நடந்தால் பள்ளத்தை நோக்கி நடப்பது போன்று பிடிப்புடன் நடப்பார்கள். இரண்டு புஜங்களிலும் நபித்துவ முத்திரை இருக்கும். மக்களுக்கு அதிகமாக வழங்கும்  தன்மை   உள்ளவராகவும், துணிவு உள்ளம் கொண்டவராகவும், மக்களில் அதிகம் உண்மை பேசுபவராகவும்,  பொறுப்புகளை நிறைவேற்றுபவராகவும் இருந்தார்கள்

அழகின் அசல் !

அண்ணல் நபி (ஸல்) அவர்களோடு தம் வாழ்நாளின் பெரும்பகுதியை கழித்த, கணிசமான நபிமொழி தொகுப்புகளை அறிவிக்கக்கூடிய அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: 

"அண்ணல் (நபி) அவர்களைப்போன்று அழகானதை நான் பார்த்ததே இல்லை. அவர்கள் வதனத்திலே சூரியன் இலங்கியது. நாங்கள் சிரமப்பட்டு நடக்கும் வேகத்தை அவர்கள் சர்வ சாதரணமாக நடப்பார்கள். அல்லாஹ் பூமியை சுருட்டி நாயகத்தின் கையில் கொடுத்து விட்டானோ என்றும் நாங்கள் நினைக்கும் அளவுக்கு அவர்கள் நடையில்   வேகம் இருக்கும். 

"ஜாபிர் இப்னு சமூரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

"ஒருமுறை நான் ஒரு பௌர்ணமி நிலவில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தேன் நிலவையும் அவர்களையும் மாறி மாறி பார்த்தேன். எனக்கு நிலவைவிட அண்ணல் நபி (ஸல்) அவர்களே அழகாகத் தெரிந்தார்கள்" (திர்மதி, மிஷ்காத் )

இப்படி பௌர்ணமி நிலவு தோற்கும் அளவுக்கு அண்ணல் நபியை இவ்வுலகில் உலவவிட்டான் பேரறிவாளன் அல்லாஹ். 

ருபைய்யி  பின்த் முஅவ்வித் ( ரலி ) கூறுகின்றார்கள் :

ரசூல் (ஸல்) அவர்களைப் பார்த்தால், உதிக்கும் அதிகாலை சூரியனைப்போல் இலங்குவார்கள். (முஷ்னத்தாரமி, மிஷ்காத்) 

அகன்ற புஜமும், சோனை வரை முடிவைத்தும் இருந்தார்கள். வேதக்காரர்களை ஒத்திருக்கவேனும் என்பதற்காக வகிடு எடுக்காமல் நேராக சீவிக்கொண்டிருந்தார்கள். (சஹீஹுல் புகாரி, முஸ்லிம் )

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கையைப் போன்றதொரு மெல்லிய பட்டாடையை நான் தொட்டதில்லை. அவர்களிடமிருந்து வரும் நறுமணத்தைப்போன்று  வேறு எந்த நறுமணத்தையும் நான் நுகர்ந்ததில்லை. 

வேறு அறிவிப்பில் கஸ்த்தூரியிலோ அல்லது  அம்பரிலோ, வேறு எங்குமே நான் இது போன்றதொரு மணத்தை நுகர்ந்ததில்லை -   (சஹீஹ் புஹாரி, முஸ்லிம் )

ஒரு வழியில் ரசூலுல்லாஹ் (ஸல்) சென்று சிறிது நேரம் கழித்து அதே வழியில் வேறொருவர் சென்றால், அந்த வழியில் மணம் பரப்பிக் கொண்டிருக்கும் அந்த சூழ்நிலையை  வைத்து, அவர் அந்த வழியில் சிறிது நேரத்திற்கு  முன்பு அண்ணல் நபி (ஸல்) அந்தப் பாதை வழியாக சென்றிருக்கின்றார்கள் என்று தெரிந்து கொள்ளும் அளவுக்கு அவர்கள் மேனி கஸ்தூரி மணம் கமழும் ஒரு சுகந்தமாகவே  வாழ்ந்திருக்கின்றார்கள்.  

பனிக்கட்டியைவிட குளிர்ச்சியாகவும், நறுமனத்திலிருந்து கையை எடுத்தது போன்று  நறுமணம் பொருந்தியதாகவும், அவர்களின் கைகள் இருந்தன என்றும் இன்ன பிற அறிவிப்புகளிலும் காணமுடிகின்றது

அண்ணல் நபி (ஸல் ) அவர்கள் மூன்று குணங்களை விட்டும் தங்களை பாது காத்துக்கொண்டார்கள் :

1. முகஸ்துதி , 2. அதிகம் பேசுவது, 3.  தேவையற்றவற்றில் ஈடுபடுவது.

மூன்று  காரியங்களிலிருந்து தங்களை தவிர்த்துக் கொண்டார்கள் :

1. பிறரை பழிக்க மாட்டார்கள்.  2.  பிறரை குறைகூற மாட்டார்கள்.  3.  பிறரின் குறையை தேட மாட்டார்கள். 

ரசூல் (ஸல்) அவர்கள் பேச ஆரம்பித்தால் , அதைக்கேட்பவர்கள், தலையில் பறவை அமர்ந்திருப்பது போன்று , ஆடாமல் அசையாமல் கேட்பர்.

நபி (ஸல்) சபையில் கண்ணியத்திற்குரியவர்களாக தோற்றமளிப்பார்கள். தங்கள் மேனியின் மறைக்கப்பட வேண்டியதை மறைத்தும் வேறு எதையும் வெளிக்காட்டமாட்டார்கள். அதிகம் மௌனம் காப்பார்கள். அவர்கள் புன்முருவலாகவே சிரிப்பார்கள். அவர்களின் பேச்சு தெளிவாக இருக்கும்.  பேச்சு தேவைக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்காது. 

நபியவர்களை கண்ணியப்படுத்த வேன்டும் என்பதற்காக, சப்தமிட்டு சிரிக்காமல் எல்லா தோழர்களும் புன்முருவளிலேயே தங்கள் சிரிப்பை வெளிப்படுத்துவர். 

மறைவான நாணம்

சாதாரண மனிதர்களைப்போல் அல்லாமல் திரை மறைவிலுள்ள கன்னிப்பென்களைவிட நாணம் உள்ளவர்களாகவும், மிகுந்த கூச்ச சுபாவம் உள்ளவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்..

எவருடைய முகத்தையும் ஆழமாக உற்று நோக்கியதில்லை. பெரும்பாலும் பார்வை கீழ்நோக்கியே இருக்கும். பார்வை கடைக் கண்ணாலேயே இருக்கும்.வெட்கத்தினாலும் உயர் பண்பினாலும்  யாரையும் வெறுப்பூட்டும்படி பேசியதே இல்லை.  

சஹாபாக்களின் நேசம்

எங்கள் கழுத்துக்கு கத்தி வந்தாலும் பரவாயில்லை  ஆனால் எங்கள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் நகத்தில் ஒரு கீறல் விழுந்தால் கூட எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று சொல்லும் அளவுக்கு , அண்ணல் நபியின் மீது உயிரையே வைத்திருந்தார்கள் சஹாபாப் பெருமக்கள். அவ்வளவு ஆழமாக நேசித்தார்கள். அவர்களின் சிறந்த பண்பும் , குண நலன்களுமே இதற்குக் காரணம். 

இப்படி, இஸ்லாமிய அரசியலுக்கும், ஆன்மீகத்திற்கும் ஒரு சேர தலைவராக இருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களோடு வேற்றுமையோ,  உயர்வு, தாழ்வோ பாராட்டாமல், நெருக்கத்தோடு வாழ்ந்து, உயர் பண்பின் உச்சத்தில் நின்று வழி காட்டிச் சென்றிருக்கின்றார்கள் என்றால் இதைவிட உயர் பண்பை வேறெங்கு கற்றிட முடியும் ?"

"என்னைப் பற்றி எந்த ஒரு செய்தி கிடைத்தாலும் அதை எடுத்து சொல்லிவிடுங்கள்" என்று பகிரங்கமாக பிரகடனப்படுத்திய ஒரே தலைவர் உலகிலேயே அண்ணல் நபி (ஸல்) ஒருவராகத்தான் இருக்கும். 

ஏனெனில் இந்த சொற்றொடர் உண்மையிலேயே ஒரு ஒழுக்க நியதிக்கும், உயர்பண்பின் உச்சத்திற்கும், நற்குணங்கள் என்று என்னென்னவெல்லாம் உலக  வழக்கத்தில் வருகின்றதோ அனைத்தையும் உள்ளடக்கிய, அப்பழுக்கற்ற , தூய்மையான வாழ்வுக்கு சொந்தக்காரர் தான் இந்த வார்த்தையை பிரகடனப் படுத்த முடியும். 

அதனால்தான் , அல்லாஹ்வால் வழி நடத்தப்பட்டதால், அங்கொன்றும் இங்கொன்றுமாக பெருமானார்  வாழ்க்கையில் மனிதன் என்ற முறையில் சில கோபதாபங்கள், மற்றும் சறுக்கல்கள் வரும் சமயமெல்லாம், இடறி விழுந்து விடாமல் அல்லாஹ் நம்மை காப்பாற்றி இருக்கின்றான் என்ற முழு நம்பிக்கையில்,  தூய்மையான அப்பழுக்கற்ற வாழ்வுக்கு அங்கீகாரமாக அல்லாஹ் பெருமானார் (ஸல்) அவர்களை  தேர்ந்தெடுத்ததால் தான் இதை சொல்ல முடிந்து இருக்கின்றது.

சுருங்கச்சொன்னால், நபி (ஸல்) நற்குணத்தால் அலங்கரிக்கப்பட்டு இருந்தார்கள். ரப்புல் ஆலமீன் எஜ்மானனாக இவர்கள் அல்லாஹ்வின் தூதராக அழகிய ஒழுக்க முறைகளை கற்று தேர்ந்திருந்தார்கள். 

நிச்சயமாக நீங்கள் நற்க்குணமுடையவராகவே இருக்கின்றீர்கள் - அல்-குரான் -68:4 என்று அல்லாஹ் குர்ஆனில் புகழ்கிறான். 

தாக்கம் ! 

இந்தப்பண்புகள்தான் நபியவர்களை அனைவராலும் நேசிக்க வைத்தது. முரண்டு பிடித்த சமுதாய உள்ளங்களை பணிய வைத்தது. மக்களை கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் இணைய வைத்தது. 

தலையை கொய்ய வந்தவரை தலைகீழாக மாற்றி, ஈமானில் பிரகாசிக்க வைத்தது. ஒரு அடிமைக்கு அல்லாஹ்வை அழைக்கும் பணிக்கு முதலில் குரல் கொடுக்க வைத்தது. வெற்றியிலும் பணிவு வேணும் என்னும் கொள்கையில் அனைத்து மக்களையும் பணிய வைத்தது. 

செருக்கற்ற,  தூய , பரஸ்பர உதவி மனப்பான்மை, மனித நேயம் மற்றும்  உன்னத பண்புகளைக்கொண்ட சமுதாயத்தை உருவாக்கியது. 

மொத்தத்தில் நாகரிகமற்ற ஒரு சமுதாயத்தை ஒரு உன்னத சமுதாயமாக மாற்றி அதை இவ்வுலகின் முன்னோடி சமுதாயமாக அறிமுகப்படுத்தி   இவ்வுலக வாழ்விற்கு பிரியா விடை கொடுத்தது. 

சல்லல்லாஹு  அலா முஹம்மது 
சல்லல்லாஹு அலைஹிவசல்லம்

சல்லல்லாஹு  அலா முஹம்மது
யாரப்பி சல்லி அலைஹிவசல்லம் 

அபு ஆசிப்
இது ஒரு மீள்பதிவு

குணக்குன்று 15

அதிரைநிருபர் பதிப்பகம் | August 26, 2013 | , , , , , , ,

உதய நிலவின் குளிராக உஷ்ண பூமியியின் ஒரு சமுதாயத்திலிருந்து உத்தம நபியை உலகிற்கு அளித்தான் ஏக இறைவன் அல்லாஹ். நீதி மறையின் விளக்க உரையாக நற்குணத்தின் குன்றாக, இறைமறையோடு அருட்கொடையை இப்புவிக்கு பரிசாக தந்தான் வல்ல அல்லாஹ்.

தம்  தூய வாழ்வினால் மனித வாழ்க்கையின்அளவுகோலை மாற்றி , இருளை விட்டும் மக்களை அகற்றி, தங்களின் ஒழுக்கம், வழிகாட்டுதலில், சொல்லில், செயலில் ஒரே நேர்கோட்டுப்பாதையில் எள்ளளவும் பிசிறில்லாமல், தீமையெனும் களை எடுத்து, நன்மை என்னும் நாற்றங்காலை நட்டு, அதன் விளைச்சலை தன் வாழ்நாளிலேயே அறுவடை செய்து, அதன் பலனை அனைவரையும் அனுபவிக்கச் செய்தார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

நற்குணத்திலும், நற்செயல்களிலும், இப்புவியின் இயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வரும் வரை பின்பற்றப்பட வேண்டிய சமுதாயம் என்று ஒரு மிகப்பெரும் சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கிச் சென்ற , மனிதகுல முன்மாதிரி, இறுதி நபி (ஸல்) அவர்களின் குணம், அவர்களின் நடைமுறை வாழ்க்கை , பழகிய விதம், மற்றும் அவர்களின் உயர் பண்புகள் நாள்தோறும் எவ்வாறு இருந்தது என்பதை சுருக்கமாக எடுத்துரைக்கவே இந்தப்பதிவு.

உயர் பண்பு 

வார்த்தைக்குள் அடங்காத சிறந்த பண்புகளையும் குணங்களையும் கொண்டவர்களாக, அவர்களோடு சமகாலத்தில் பழகியவர்களே, அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதையைப் போல், இதற்கு முன் யாருக்கும், யாரும் கொடுத்ததுவும் இல்லை, கொடுக்கப்பட்டதாக கேள்விப்பட்டதும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு  அருமை நபி (ஸல்) தம் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டார்கள். 

ஒருவரைப்பற்றி விரும்பாத செய்தி கிடைத்தால் அப்போது நபி (ஸல்) அவர்கள் "சிலர் ஏன் இப்படி செய்கிறார்கள்" என்று பொதுவாகப் பேசுவார்கள்.  சம்பத்தப்பட்ட நபரின்  பெயரை குறிப்பிட்டு சங்கடப்படுத்த  மாட்டார்கள்.

மக்களில் உண்மையாளராக, ஒழுக்க சீலராக, திகழ்ந்தார்கள். இந்த உண்மையை நபித்தோழர்கள் மட்டுமல்ல எதிரிகள் கூட தெரிந்து வைத்திருந்தார்கள். 

மலர்ந்த முகம், இளகிய மனம், நளினம் பெற்று இருந்தார்கள். கடுகடுப்பு, முரட்டு குணம், கூச்சல், அருவருப்பாக பேசுதல், அதட்டுதல் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு இருந்தார்கள். 

நபித்துவம் வருவதற்கு முன்பே,  "நம்பிக்கைக்கு உரியவர் " என்று அழைக்கப்பட்ட ஏந்தல் நபி, அறியாமைக் காலத்திலும் அறிவிலிகளுக்குக்கும் நீதமான தீர்வு சொன்ன நீதிமான்.

தனக்கு முன்பு யாரும் எழுந்து நிற்பதை தடை செய்தார்கள், பணிவு உடையவர்களாகவும், பெருமை கொள்வதை விட்டும் விலகியும் இருந்தார்கள். 

தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்பவர்களாக இருந்தார்கள். காலணியை தாங்களே தைத்து கொண்டார்கள், ஆட்டிலிருந்து பால் கறந்து பயன்படுத்தி கொண்டார்கள், ஆடைகளை துவைத்து பயன்படுத்தி கொண்டார்கள், எந்த சந்தர்ப்பத்திலும் அவர்களை தனித்துக்காட்ட விரும்பியதே இல்லை. 

ஒருமுறை ஒரு பயணத்தின் போது ஆடு ஒன்றை அறுத்து சமைக்கும்படி கூறினார்கள். ஒருவர் நான் ஆட்டை அறுக்கின்றேன் என்றார், ஒருவர் நான் உரிக்கின்றேன் என்றார், மற்றொருவர் நான் சமைக்கின்றேன் என்றார்,  அப்படியென்றால் நான் விறகு பொறுக்கிக் கொண்டு வருகின்றேன் என்று அண்ணல் நபி ( ஸல் ) அவர்கள் சொன்னார்கள்.

அதற்கு சஹாபாக்கள் யா ரசூலுல்லாஹ் தங்களுக்கு ஏன் சிரமம் நாங்களே பார்த்துக்கொள்கின்றோம் என்றார்கள். 

அதற்கு கண்மணி நாயகம் (ஸல்) சொன்னார்கள் : " நீங்கள் செய்வீர்கள் என்று எனக்கு தெரியும் , ஆனால் என்னை என் தோழர்களிடமிருந்து  தனித்து காட்ட விரும்பவில்லை. அப்படி தனித்து காட்டுவதை  அல்லாஹ் வெறுக்கின்றான் " என்றார்கள். 

அண்ணல் (நபி ஸல்) தெள்ளதெளிவாக பேசுபவர்களாக  இருந்தார்கள், அனைவராலும் அறியப்பட்ட ஒரு நல்லியல்பு பெற்றவர்களாக இருந்தார்கள். தெளிவாக, சரியாக, சரளமாக பேசக் கூடியவர்களாக இருந்தார்கள். நூதன நுட்பங்களுடன்  சொல்லாக்கம் முழுமை பெற்றவர்களாக இருந்தார்கள். ஒவ்வொரு இனத்தாரிடமும் அவரவவர் மொழி நடையில் பேசும் திறமை பெற்றிருந்தார்கள். நகரவாசிகள், கிராமவாசிகளுக்கு தகுந்தார்ப்போல் அவரவர் தொனியில் பேசக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.

சிரமத்தை தாங்குவது, சக்தி இருந்தும் மன்னிப்பது, சகித்துக்கொள்வது பொறுத்துப் போவது அவர்களின் உயர் பண்புகளில் உள்ளவைகளாகும். சாதாரணமாக இடையூறுகள் அதிகமாக அதிகமாக பொறுமை குறைந்து கொண்டே போகும். ஆனால் இந்த நீதிமானுக்கோ பொறுமை கூடிக் கொண்டே போனது. 

ஒரு விஷயத்தை தேர்ந்தெடுக்க இரண்டு வாய்ப்புகள் என்று வரும்போது அதில் இலகுவானதையே தேர்ந்தெடுப்பார்கள். அது பாவகரமானது என்று தெரிய வரும்போது வெகு தூரம் விலகி விடுவார்கள். தங்களுக்காக தங்கள் சுய நலத்திற்காக யாரையும் பழி வாங்கியதில்லை. ஆனால் அல்லாஹ்வின் கண்ணியம் பாழாக்கப்பட்டால் அதற்குற்குரிய தண்டனையை வழங்கத் தயங்கியதில்லை.

மெதுவாக கோபப்படுவார்கள். விரைவாக மகிழ்ச்சி அடைவார்கள். வறுமைக்கு  அஞ்சாமல் தேவை உடையோர்க்கு உதவி செய்தார்கள். விரைந்து வீசும் காற்றின் வேகத்தைவிட செல்வத்தை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்.

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : அண்ணல் நபி (ஸல்) யாரும் ஒன்றை கேட்டு அவர்கள் இல்லை என்று சொன்னதே இல்லை.  

இப்படி  எந்த குணாதிசயங்களிலும்  ஒரு கடுகளவு குறை சொல்லும் சந்தர்ப்பத்திற்கு  இடமே இல்லாமல் இவ்வுலகை விட்டும் விடை பெற்றுச் சென்று இருக்கின்றார்கள் என்றால் என்னே ஒரு அற்புதமான வாழ்வு வாழ்ந்து சென்று இருக்கின்றார்கள்.

அமைதியின் கம்பீரம்!

நபி (ஸல்) மிகக்குட்டையோ, நெட்டையோ அல்லர், கூட்டத்தில் பார்ப்பதற்கு நடுத்தரமானவர்கள், அடத்தியான சுருட்டை  முடி கொண்டவரும் அல்லர், கோரை முடி கொண்டவரும் அல்லர், சிவந்த வெண்மையானவர்கள், கருவிழி உடையவர்கள். புஜமும் மூட்டு எலும்புகளும் தடிப்பானவர்கள். 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா செல்லும் வழியில் , அவர்களைக் கண்ட குஜைமா கிளையைச் சேர்ந்த உம்மு மஅபத் விவரிக்கும்போது, 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வயிறோ, தலையோ பெருத்தவர் அல்லர், கவர்ச்சிமிகு பேரழகும், கருத்த புருவமும் உடையவர்கள், நீண்ட இமை முடியும், கம்பீரக்குரல் வளமும் உடையவர்கள். அவரது அமைதி கம்பீரத்தைத் தரும், ஒளி இலங்கும் பேச்சுடையவர் என்றும் இன்ன பிற பண்புகளையும் விளக்குகின்றார்கள்.  

ஒரு விஷயத்திற்காக திரும்பிப் பார்த்தால் முழுவதுமாக திரும்பிப் பார்ப்பாகள். நடந்தால் பள்ளத்தை நோக்கி நடப்பது போன்று பிடிப்புடன் நடப்பார்கள். இரண்டு புஜங்களிலும் நபித்துவ முத்திரை இருக்கும். மக்களுக்கு அதிகமாக வழங்கும்  தன்மை   உள்ளவராகவும், துணிவு உள்ளம் கொண்டவராகவும், மக்களில் அதிகம் உண்மை பேசுபவராகவும்,  பொறுப்புகளை நிறைவேற்றுபவராகவும் இருந்தார்கள்

அழகின் அசல் !

அண்ணல் நபி (ஸல்) அவர்களோடு தம் வாழ்நாளின் பெரும்பகுதியை கழித்த, கணிசமான நபிமொழி தொகுப்புகளை அறிவிக்கக்கூடிய அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: 

"அண்ணல் (நபி) அவர்களைப்போன்று அழகானதை நான் பார்த்ததே இல்லை. அவர்கள் வதனத்திலே சூரியன் இலங்கியது. நாங்கள் சிரமப்பட்டு நடக்கும் வேகத்தை அவர்கள் சர்வ சாதரணமாக நடப்பார்கள். அல்லாஹ் பூமியை சுருட்டி நாயகத்தின் கையில் கொடுத்து விட்டானோ என்றும் நாங்கள் நினைக்கும் அளவுக்கு அவர்கள் நடையில்   வேகம் இருக்கும். 

"ஜாபிர் இப்னு சமூரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

"ஒருமுறை நான் ஒரு பௌர்ணமி நிலவில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தேன் நிலவையும் அவர்களையும் மாறி மாறி பார்த்தேன். எனக்கு நிலவைவிட அண்ணல் நபி (ஸல்) அவர்களே அழகாகத் தெரிந்தார்கள்" (திர்மதி, மிஷ்காத் )

இப்படி பௌர்ணமி நிலவு தோற்கும் அளவுக்கு அண்ணல் நபியை இவ்வுலகில் உலவவிட்டான் பேரறிவாளன் அல்லாஹ். 

ருபைய்யி  பின்த் முஅவ்வித் ( ரலி ) கூறுகின்றார்கள் :

ரசூல் (ஸல்) அவர்களைப் பார்த்தால், உதிக்கும் அதிகாலை சூரியனைப்போல் இலங்குவார்கள். (முஷ்னத்தாரமி, மிஷ்காத்) 

அகன்ற புஜமும், சோனை வரை முடிவைத்தும் இருந்தார்கள். வேதக்காரர்களை ஒத்திருக்கவேனும் என்பதற்காக வகிடு எடுக்காமல் நேராக சீவிக்கொண்டிருந்தார்கள். (சஹீஹுல் புகாரி, முஸ்லிம் )

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கையைப் போன்றதொரு மெல்லிய பட்டாடையை நான் தொட்டதில்லை. அவர்களிடமிருந்து வரும் நறுமணத்தைப்போன்று  வேறு எந்த நறுமணத்தையும் நான் நுகர்ந்ததில்லை. 

வேறு அறிவிப்பில் கஸ்த்தூரியிலோ அல்லது  அம்பரிலோ, வேறு எங்குமே நான் இது போன்றதொரு மணத்தை நுகர்ந்ததில்லை -   (சஹீஹ் புஹாரி, முஸ்லிம் )

ஒரு வழியில் ரசூலுல்லாஹ் (ஸல்) சென்று சிறிது நேரம் கழித்து அதே வழியில் வேறொருவர் சென்றால், அந்த வழியில் மணம் பரப்பிக் கொண்டிருக்கும் அந்த சூழ்நிலையை  வைத்து, அவர் அந்த வழியில் சிறிது நேரத்திற்கு  முன்பு அண்ணல் நபி (ஸல்) அந்தப் பாதை வழியாக சென்றிருக்கின்றார்கள் என்று தெரிந்து கொள்ளும் அளவுக்கு அவர்கள் மேனி கஸ்தூரி மணம் கமழும் ஒரு சுகந்தமாகவே  வாழ்ந்திருக்கின்றார்கள்.  

பனிக்கட்டியைவிட குளிர்ச்சியாகவும், நறுமனத்திலிருந்து கையை எடுத்தது போன்று  நறுமணம் பொருந்தியதாகவும், அவர்களின் கைகள் இருந்தன என்றும் இன்ன பிற அறிவிப்புகளிலும் காணமுடிகின்றது

அண்ணல் நபி (ஸல் ) அவர்கள் மூன்று குணங்களை விட்டும் தங்களை பாது காத்துக்கொண்டார்கள் :

1. முகஸ்துதி , 2. அதிகம் பேசுவது, 3.  தேவையற்றவற்றில் ஈடுபடுவது.

மூன்று  காரியங்களிலிருந்து தங்களை தவிர்த்துக் கொண்டார்கள் :

1. பிறரை பழிக்க மாட்டார்கள்.  2.  பிறரை குறைகூற மாட்டார்கள்.  3.  பிறரின் குறையை தேட மாட்டார்கள். 

ரசூல் (ஸல்) அவர்கள் பேச ஆரம்பித்தால் , அதைக்கேட்பவர்கள், தலையில் பறவை அமர்ந்திருப்பது போன்று , ஆடாமல் அசையாமல் கேட்பர்.

நபி (ஸல்) சபையில் கண்ணியத்திற்குரியவர்களாக தோற்றமளிப்பார்கள். தங்கள் மேனியின் மறைக்கப்பட வேண்டியதை மறைத்தும் வேறு எதையும் வெளிக்காட்டமாட்டார்கள். அதிகம் மௌனம் காப்பார்கள். அவர்கள் புன்முருவலாகவே சிரிப்பார்கள். அவர்களின் பேச்சு தெளிவாக இருக்கும்.  பேச்சு தேவைக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்காது. 

நபியவர்களை கண்ணியப்படுத்த வேன்டும் என்பதற்காக, சப்தமிட்டு சிரிக்காமல் எல்லா தோழர்களும் புன்முருவளிலேயே தங்கள் சிரிப்பை வெளிப்படுத்துவர். 

மறைவான நாணம்

சாதாரண மனிதர்களைப்போல் அல்லாமல் திரை மறைவிலுள்ள கன்னிப்பென்களைவிட நாணம் உள்ளவர்களாகவும், மிகுந்த கூச்ச சுபாவம் உள்ளவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்..

எவருடைய முகத்தையும் ஆழமாக உற்று நோக்கியதில்லை. பெரும்பாலும் பார்வை கீழ்நோக்கியே இருக்கும். பார்வை கடைக் கண்ணாலேயே இருக்கும்.வெட்கத்தினாலும் உயர் பண்பினாலும்  யாரையும் வெறுப்பூட்டும்படி பேசியதே இல்லை.  

சஹாபாக்களின் நேசம்

எங்கள் கழுத்துக்கு கத்தி வந்தாலும் பரவாயில்லை  ஆனால் எங்கள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் நகத்தில் ஒரு கீறல் விழுந்தால் கூட எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று சொல்லும் அளவுக்கு , அண்ணல் நபியின் மீது உயிரையே வைத்திருந்தார்கள் சஹாபாப் பெருமக்கள். அவ்வளவு ஆழமாக நேசித்தார்கள். அவர்களின் சிறந்த பண்பும் , குண நலன்களுமே இதற்குக் காரணம். 

இப்படி, இஸ்லாமிய அரசியலுக்கும், ஆன்மீகத்திற்கும் ஒரு சேர தலைவராக இருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களோடு வேற்றுமையோ,  உயர்வு, தாழ்வோ பாராட்டாமல், நெருக்கத்தோடு வாழ்ந்து, உயர் பண்பின் உச்சத்தில் நின்று வழி காட்டிச் சென்றிருக்கின்றார்கள் என்றால் இதைவிட உயர் பண்பை வேறெங்கு கற்றிட முடியும் ?"

"என்னைப் பற்றி எந்த ஒரு செய்தி கிடைத்தாலும் அதை எடுத்து சொல்லிவிடுங்கள்" என்று பகிரங்கமாக பிரகடனப்படுத்திய ஒரே தலைவர் உலகிலேயே அண்ணல் நபி (ஸல்) ஒருவராகத்தான் இருக்கும். 

ஏனெனில் இந்த சொற்றொடர் உண்மையிலேயே ஒரு ஒழுக்க நியதிக்கும், உயர்பண்பின் உச்சத்திற்கும், நற்குணங்கள் என்று என்னென்னவெல்லாம் உலக  வழக்கத்தில் வருகின்றதோ அனைத்தையும் உள்ளடக்கிய, அப்பழுக்கற்ற , தூய்மையான வாழ்வுக்கு சொந்தக்காரர் தான் இந்த வார்த்தையை பிரகடனப் படுத்த முடியும். 

அதனால்தான் , அல்லாஹ்வால் வழி நடத்தப்பட்டதால், அங்கொன்றும் இங்கொன்றுமாக பெருமானார்  வாழ்க்கையில் மனிதன் என்ற முறையில் சில கோபதாபங்கள், மற்றும் சறுக்கல்கள் வரும் சமயமெல்லாம், இடறி விழுந்து விடாமல் அல்லாஹ் நம்மை காப்பாற்றி இருக்கின்றான் என்ற முழு நம்பிக்கையில்,  தூய்மையான அப்பழுக்கற்ற வாழ்வுக்கு அங்கீகாரமாக அல்லாஹ் பெருமானார் (ஸல்) அவர்களை  தேர்ந்தெடுத்ததால் தான் இதை சொல்ல முடிந்து இருக்கின்றது.

சுருங்கச்சொன்னால், நபி (ஸல்) நற்குணத்தால் அலங்கரிக்கப்பட்டு இருந்தார்கள். ரப்புல் ஆலமீன் எஜ்மானனாக இவர்கள் அல்லாஹ்வின் தூதராக அழகிய ஒழுக்க முறைகளை கற்று தேர்ந்திருந்தார்கள். 

நிச்சயமாக நீங்கள் நற்க்குணமுடையவராகவே இருக்கின்றீர்கள் - அல்-குரான் -68:4 என்று அல்லாஹ் குர்ஆனில் புகழ்கிறான். 

தாக்கம் ! 

இந்தப்பண்புகள்தான் நபியவர்களை அனைவராலும் நேசிக்க வைத்தது. முரண்டு பிடித்த சமுதாய உள்ளங்களை பணிய வைத்தது. மக்களை கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் இணைய வைத்தது. 

தலையை கொய்ய வந்தவரை தலைகீழாக மாற்றி, ஈமானில் பிரகாசிக்க வைத்தது. ஒரு அடிமைக்கு அல்லாஹ்வை அழைக்கும் பணிக்கு முதலில் குரல் கொடுக்க வைத்தது. வெற்றியிலும் பணிவு வேணும் என்னும் கொள்கையில் அனைத்து மக்களையும் பணிய வைத்தது. 

செருக்கற்ற,  தூய , பரஸ்பர உதவி மனப்பான்மை, மனித நேயம் மற்றும்  உன்னத பண்புகளைக்கொண்ட சமுதாயத்தை உருவாக்கியது. 

மொத்தத்தில் நாகரிகமற்ற ஒரு சமுதாயத்தை ஒரு உன்னத சமுதாயமாக மாற்றி அதை இவ்வுலகின் முன்னோடி சமுதாயமாக அறிமுகப்படுத்தி   இவ்வுலக வாழ்விற்கு பிரியா விடை கொடுத்தது. 

சல்லல்லாஹு  அலா முஹம்மது 
சல்லல்லாஹு அலைஹிவசல்லம்

சல்லல்லாஹு  அலா முஹம்மது
யாரப்பி சல்லி அலைஹிவசல்லம் 

அபு ஆசிப்

ஒளி வீசுமுன் ! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | August 12, 2013 | , , , , ,

இந்த அகிலதை படைத்து பரிபக்குவப் படுத்தி, உயிரினங்கள் அனைத்திற்கும் உணவளிக்க பொறுப் பேற்றுக் கொண்ட அல்லாஹ்வின் திருப்பெயர் போற்றி இதனை பதிவு செய்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ்!

"அரப்" என்ற சொல்லுக்கு , பொட்டல் பூமி , வறண்ட நிலம், மற்றும் செடி கொடிகளற்ற, பசுமைக்கு அப்பாற்பட்ட பிரதேசம் என்ற அர்த்தத்தில் இன்றளவும் அந்த வார்த்தைக்கு பொருள் தரப்படுகின்றது.  இத்தகைய பாலைவனத்துக்கு வாரிசுதாரர்களாக அன்றிலிருந்து வழிவழியாக வருவதாலேயே இவர்கள் அரேபியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். 

சாட்சியாளராக, எச்சரிக்கை செய்பவராக, நற்செய்தி கூறுபவராக, அறியாமை என்னும் இருள் நீக்கும் கலங்கரை விளக்காக, இறை அச்சம் உடையோருக்கு  ஒரு முன்மாதிரியாக ஆக்கி, நாளை மஹ்ஷரில் பரிந்துரை என்னும் மிக உயர்ந்த தகுதியை , இதற்கு முன் எந்த நபிக்கோ , அல்லது ரசூல் மார்களுக்கோ கொடுக்காத அந்தஸ்த்தை பெற இருக்கும், மனிதகுல முன்மாதிரி அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகில் உதிக்கு முன் அரபுலகின் நிலை என்ன? அவர்கள் வாழ்ந்த விதம் என்ன ? ஒட்டுமொத்தமாக அவர்களின் வாழ்வு எப்படி அமைந்திருந்தது?என்பதை நோக்கியே இந்த ஒளி வீசுமுன் உங்களிடையே வீபேச இருக்கின்றது. 

அரேபியர்களின் அரசியல் பின்னணி:

இதில் முடி சூட்டப்பட்டவர்கள் என்றும், குடும்பக்கோத்திரங்கள்  மூலம் வந்தவர்கள் என்றும் இருவகைப்பட்டவர்கள் ஆட்சி  செய்துள்ளனர்.

இதில் முடி சூட்டப்பட்டவர்கள் தனித்து இயங்கும் அதிகாரம் இல்லாமல் , ஒரு பேரரசுக்கு கட்டுப்பட்டு நடந்து ஆட்சி செய்து வந்துள்ளனர்.

குடும்ப பாரம்பரியத்தின் மூலம் ஆட்சிக்கு வந்தவர்களோ தனித்தன்மையுடனும், தனி உரிமையுடனும் விளங்கினர்.இவர்கள் பெரும்பாலும் முழு சுதந்திரத்துடன்  செயல் பட்டனர்.  அல்லது ஒரு அரசாட்சியின் பிரதிநிதியாக செயல் பட்டனர்.

தூதுத்துவத்துக்கு முன் :

அண்ணல் நபி (ஸல்) இவ்வுலகில் அவதரிக்குமுன்பு , இந்த அரபிகள் வாழ்ந்த விதம் , இறைவன் படைத்த ஆறறிவு என்ற சொல்லுக்கு கொஞ்சமும் பொருத்தமற்ற மிருக வாழ்க்கைக்கு சொந்தக்காரர்களாகவே வாழ்ந்து சென்றிருக்கின்றனர். 

சூரியன் ஒவ்வொரு நாளும் உலகின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு ஒளி வீசுவது போல் அரபுலகுக்கும் ஒளி வீசிக் கொண்டுதான் இருந்தது. ஒளி கிடைத்தது என்னவோ வறண்ட பூமிக்கு தானே ஒழிய , அரபிகளின் உள்ளத்துக்கு அல்ல. அவர்கள் உள்ளம் கடுகளவும்  ஆறறிவு என்னும் ஒளி உள்ளே புகாத வண்ணம் இருண்ட வறண்ட பாலைவன பூமியாகத்தான் இருந்து வந்தது. 

ஒரு வீட்டில் உள்ள மிருகம் மற்றுமொரு வீட்டில் போய் தண்ணீர் குடித்து விட்டால் அதன் விளைவு என்ன தெரியுமா? சந்ததி, சந்ததியினருக்கு பகைமையை ஏற்படுத்தும் அளவுக்கு மிகப்பெரிய விஷயமாக உருவகப்படுத்தி காலம் காலமாக பகைமை உணர்வோடு வாழ்ந்து சென்ற சமுதாயம். ஆண்டான் அடிமை பேதங்கள் பாலைவன பூதங்களாக உருவெடுத்து வேற்றுமை  வெறி உச்சாணிக்கொம்பில் இருந்த காலம்.

மழை பொய்த்துவிடும் நாட்களில் , இறைவனிடம் கையேந்தி பெறுவதை கேலியாக்கி மிருகத்தின் வாலில் தீயை மூட்டி, அது உஷ்ணத்தின் வேதனை தாங்க மாட்டாது கத்தும்போது, அந்த சப்தம் மழையைக் கொண்டு வரும் என்று ஒரு காட்டுமிராண்டி நம்பிக்கையின் வாரிசுதாரர்களாக வாழ்ந்து சென்ற சமுதாயம்.  

இந்த தூய அழைப்புக்கு முன்பு சத்திய சஹாபாக்களின் நிலையும்  மோசமே. ஒவ்வரு நாளும் அல்லாஹ்வுடைய தூதருக்கு ஒரு யுகமாகத்தான் கழிந்தது. தூய வழியின்பால் மீட்டெடுக்க, குழந்தை தாயை நோக்கி ஓடி வருவது போல் இந்த தூய வழின்பால் விரைந்து வர யார் யாருக்கெல்லாம் அல்லாஹ் நேர்வழியை நாடி இருந்தானோ அவர்கள் ஒவ்வொருவரையும்  ஓரிறைக் கொள்கையின் மீது நாட்டம் கொள்ள வைப்பதென்பது ஒரு சவால் நிறைந்ததாகத்தான் அல்லாஹ்வுடைய தூதருக்கு இருந்தது. அதையும் அல்லாஹ்வின் நாட்டப்படி வெற்றியோடு நடத்திக் கட்டினார்கள்.

அல்லாஹ் சொல்கின்றான் :

.... இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் -நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான். (அல்குர் ஆன் : 3:103) என்று அவர்கள் இருந்த படு பயங்கரமான சூழலையும் அதிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்பட்டதையும் அல்லாஹ் விவரிக்கின்றான்.

சிலை வணக்கம்:

புனித காபா அது எந்த நோக்கத்திற்காக நபி இப்ராஹிம் (அலை), அவர்தம் அருமைப் புதல்வர் இஸ்மாயீல் (அலை) இவர்களால்  நிர்மாணம் செய்யப்பட்டது என்ற அடிப்படை நோக்கத்தை அடியோடு மறந்து, அல்லது மறைத்து, நோக்கத்தின்  ஆணிவேரையே பிடுங்கி எரியக்கூடிய அளவுக்கு, சிலை வணக்கம் அங்கே நடத்தப்பட்டது. அல்லாஹ்வுக்கு இணை வைக்கப்பட்டது. 

பல வகையான சிலைகள் விசித்திரமான வடிவங்களிலும், அளவுகளிலும் அங்கே வடிவமைக்கப்பட்டு ஒவ்வொரு சிலைகளும் ஒவ்வொரு தேவையை பூர்த்தி செய்து வைக்கக்கூடியது என்னும் நம்பிக்கையில் சிலை வணக்கத்திற்கு மிகப்பெரும் கௌரவமும், மரியாதைகளும், வழி வழியாக நடத்தட்டப்பட்டு வந்தது.

இங்கே ஒரு விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். அதாவது, இவர்கள் தங்களுடைய இறைவன் அல்லாஹ்தான் என்பதை நம்பி இருந்தார்கள். இருப்பினும் அல்லாஹ் இவர்களை ஏன் இணை வைப்பாளர்கள், இறை மறுப்பாளர்கள் என்று கூறுகின்றான் என்றால், காபாவை அலங்கரித்த சிலைகள் அனைத்துமே, இதற்கு முன் சென்று விட்ட நபிமார்கள், மற்றும் நல்லடியார்களைத்தான் இவர்கள் சிலைகளாக வடித்து இருந்தார்கள். நாம் இறைவனிடம் நேரடியாக கேட்டால் இறைவன் நம் தேவைகளை மறுத்தாலும் மறுத்து விடக்கூடும். ஆதலால் இந்த நல்லடியார்கள் மூலம் நம் தேவைகளை முன் வைத்தால் அனைத்தும் கைகூடும் என்று, இறைவனின் கடல் போன்ற கருணையின் மீது நம்பிக்கை இழந்து, சிலைகளை இடைத்தரகர்களாக ஆக்கி, இறைவனை நெருங்கி நம் தேவைகளை கேட்டுப்பெறலாம் என்று எண்ணியதால்தான்.

மூட நம்பிக்கைகள்

அம்புகள் மூலம் குறி பார்ப்பது :

முதல் வகை: திருமணம், பயணம் மற்றும் நல்ல காரியங்கள் முடிவெடுப்பதற்காக மூன்று  வகையான அம்புகளை பயன்படுத்துவார்கள், ஒரு அம்பில் "ஆம்" என்றும்  இரண்டாவது அம்பில் "வேண்டாம்" என்றும் மூன்றாவது அம்பில் ஒன்றுமில்லாமலும் இருக்கும். ஒரு செயலை செய்ய முற்படும்போது  ஒரு அம்பை உருவுவார்கள் . அதில் ஆம் என்ற அம்பு வந்தால் அச்செயலை செய்வார்கள். வேண்டாம் என்ற அம்பு வந்தால் அச்செயலை தவிர்த்து விடுவார்கள். மூன்றாவதாக  ஒன்றுமில்லாத அம்பு வந்தால் முதல் இரண்டு அம்புகளில் ஏதாவது ஒன்று வரும் வரை  அதை உருவிக்கொண்டே இருப்பார்கள்.

இரண்டாவது வகை :

இது குற்றப் பரிகாரம், மற்றும் நஷ்ட்ட ஈட்டுத்தொகை சம்பந்தமாக தீர்வுகள் சொல்லப்படுவதற்காக

மூன்றாவது வகை :

ஒருவருடைய இனத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டால் , மூன்று அம்புகளில் ஒன்றில், நம் இனத்தை சார்ந்தவர் என்றும், மற்றொன்றில் நம் இனத்தை சார்ந்தவர் அல்லர் என்றும், பிறிதொன்றில் இணைக்கப்பட்டவர் என்றும் எழுதி அவரை ஹுபுல் என்ற சிலைக்கு அழைத்து வந்து 100 ஒட்டகை, 100 திர்கம் என்று குறி சொல்லும் பூசாரியிடம் கொடுத்து குறி கேட்பார்கள்.

பூசாரி அம்பெடுக்கும் போது முதல் அம்பு வந்தால் அவரை தம் இனத்தவர் என்று ஏற்றுக் கொள்வார்கள். இரண்டாவது அம்பு வந்தால் அவரை தம் நட்பு கொண்ட கோத்திரமாக ஏற்றுக் கொள்வார்கள். மூன்றாவது அம்பு வந்தால் அவர் பழைய நிலையிலேயே நீடிப்பார். அவர் எந்த இனத்துக்கும் சொந்தக்காரர் இல்லை என்று முடிவெடுப்பார்கள்.

இப்படி முடிவெடுக்க அம்பின்மீதும், பூசாரியின் மீதும் அதீத நம்பிக்கை கொண்டு தங்கள் காரியங்களை செய்து மன திருப்தி அடைந்தார்கள்.

சூதாட்டம் :

அம்புகள் மூலம் சூதாடும் பழக்கம் இவர்களிடையே இருந்தது. அதாவது, ஒரு ஒட்டகையை கடனாக வாங்கி வருவார்கள். அதை 10 அல்லது 28 பங்காக பிரிப்பார்கள். அவர்களிடம் இரண்டு அம்புகள் இருக்கும். அதில் ஒன்றில் "ராபிஹ்" என்றும் பிறிதொன்றில் "குப்ள்" என்றும் எழுதப்பட்டிருக்கும்.

யாரவது ஒருவருடைய பெயரை சொல்லி அம்பை உருவும்போது, "ராபிஹ்" என்று வந்தால் அவர் காசு கொடுக்காமல் ஒட்டக இறைச்சியில் அவருக்குரிய பங்கை எடுத்துக் கொள்வார். "குப்ள்" என்று வந்தால், அவர் தோற்றவர் ஆவார், அவருக்கு இறைச்சியில் எந்த பங்கும் கிடைக்காது. மேலும் கடன் வாங்கி வந்த அந்த ஒட்டகத்துக் குண்டான  முழு தொகையையும் அவரே செலுத்த வேணும் என்று சூதாட்டம் புரையோடிப் போய் இருந்தது.

பெண்கள் நிலை:

பெண்களை ஒரு போகப்பொருளாக , ஒரு பெண்ணுக்கு பல கணவன்கள் என்ற ரீதியில் இயற்கைக்கு முரணான, விபச்சாரத்தை ஞாயப் படுத்தும் ஒரு மிருகத்தனமான வாழ்க்கைக்கு தங்களை வழக்கப் படுத்திக் கொண்டு இருந்தார்கள். மது , மாது, சூது இவ்வாறு இவர்களின் அன்றாட வாடிக்கை. கேலிப்பொருளாக, கடையில்  வாங்கும் ஒரு  உயிரற்ற பொருளைப்போல் பெண்களைப் பாவித்தார்கள். அவர்களுக்கும், உணர்வு, ஆசை, தேவை, உரிமை  அதிகாரம் உண்டு என்பதை கிஞ்சிற்றும் உணராமல் அவர்களின் அனைத்து உரிமைகளும் நசுக்கப்பட்டு, ஒரு கேலிப்பொருளாக பார்க்கப்பட்டனர்.

பெண்குழந்தை பிறந்தால் , பெற்றோர் தாங்கள் ஏதோ ஒரு அவமானப்பட்ட காரியத்தை செய்து விட்டது போல் சமூகத்தை விட்டு ஒதுங்கி வாழ முற்பட்டார்கள். ஒரு கேவலமான காரியத்தை செய்துவிட்டது  போல் சமூகத்தில் கூனிக்குறுகி வாழ தலைப்பட்டார்கள். ஒரு சிலரோ பெற்ற பெண்குழந்தையை , உயிரோடு புதைக்கவும் தயங்கவில்லை. நாளை மஹ்ஷரில், பெண் குழந்தைகளை பார்த்து நீங்களெல்லாம் என்ன காரணத்திற்காக புதைக்கப்பட்டீர்கள் என்று அல்லாஹ் கேட்கும்போது, யா அல்லாஹ் பெண்ணாக பிறந்ததைத் தவிர வேறெந்த பாவமும் நாங்கள் செய்யவில்லை என்று அந்த குழந்தைகள் சாட்சி சொல்லும். அப்போது அல்லாஹ் தன கோபக்கனல் தெறிக்கும் பார்வையை  பெண்ணை புதைத்தவர்கள் மீது வீசுவானே அதைப்பற்றி கவலைப்படாமல்  பெண் குழந்தையை உயிரோடு புதைத்தனர். மொத்தத்தில் மனித உருவில் மிருகங்களாக, நாம் ஏன் , எதற்காக படைக்கப்பட்டோம் என்ற கேள்விகளுக்கு வாழ்க்கையில் கொஞ்சம் கூட இடம் இல்லாமல் நரகத்தின் எரி விறகுகளாக இவ்வுலகை விட்டுப் பிரிந்தனர்.

அறியாமைக்கால திருமணம்:

இக்காலத்தில் திருமணம் நான்கு வகையைக் கொண்டிருந்தது

1. இக்காலத்தில் நாம் செய்வது போன்று ஒருவருடைய பொறுப்பில் உள்ள ஒரு பெண்ணை மஹர் என்னும் மணக்கொடை கொடுத்து. தன் மனைவியாக ஏற்றுக் கொண்டு அப்பெண்ணுடன் வாழ்க்கை நடத்துவது.

2. கணவன் அனுமதியுடனேயே அவன் மனைவி மாதவிடாய் தூய்மை அடைந்தவுடன் வேறு ஒருவருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டு அவன் மூலம் கர்ப்பமானதும் அவளை தன்னுடன் மீண்டும் சேர்த்துக்கொண்டு அவன் மூலம் பிறக்கும் குழந்தையை தன் குழந்தைபோல் பாவித்து வளர்த்து வருவது. இது ஏனெனில் திடகாத்திரமான குழந்தை வேண்டி இவ்வாறு கணவன் மனைவி இருவரின் சம்மதத்தின் பேரில் செய்து கொள்வது.

3. ஒருத்தி பலருடன் தொடர்புகொண்டு அதன் மூலம் பிறக்கும் குழந்தையை யார் யாருடன் தொடர்பு கொண்டாலோ அவர்கள் அனைவரையும் அழைத்து  அதில் ஒருவரை இவள் தேர்ந்தெடுத்து இது உனக்குச் சொந்தமானது என்று கூறி அவனிடம் ஒப்படைப்பாள் அவனும் மறுக்காமல் அனைவரின் சம்மதத்தோடு ஏற்றுக்கொள்வான் இது ஒரு வகை. 

4. இவள் விலைமாதாக இருப்பாள். தன்னிடம் வரும் யாரையும் தடுக்க மாட்டாள். இவளுக்கு பிறக்கும் குழந்தை யாருடையது என்னும் அடையாளத்துக்கு, முகக்குறி பார்த்து சொல்லும் ஒருவனை அழைத்து அவன் சொல்லும் நபரிடம் இக்குழந்தை ஒப்படைக்கப்படும். அவனும் மறுக்காமல் ஏற்றுக்கொள்வான்.

இப்படி கேடுகெட்ட முறையில் திருமணம் என்ற பெயரில் விபச்சாரத்திற்கு சமூகத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டு இருந்தது. மேலும் சில சமயங்களில் போர்க்காலங்களில் தோல்வி அடைந்தவர்களின் பெண்களை வெற்றி பெற்றவர்கள் அனுபவித்து அதன்மூலம் பிறக்கும் குழந்தைகள் காலத்துக்கும் அடிமைகளாக வாழ வேண்டிய நிர்ப்பந்தம்,கட்டாயம் என்றிருந்தது. 

இப்படி பரவலாக ஒழுக்கத்தின் மேன்மையை ஆழக்குழி தோண்டி புதைக்கப்பட்டு இருந்தது.

பண்பாடு:

இவர்களிடம் சீரிய சிந்தனையோ பகுத்தறிவோ இல்லாததின் காரணமாகத்தான் இவர்களின் காலத்தை "அய்யாமுல் ஜாகிலிய்யா" (அறியாமைக்காலம்) என்று வரலாற்றில் சொல்லப்படுகின்றது. ஏற்க இயலாத செயல்பாடுகளும், இழிவான நடைத்தைகளும் இவர்களோடு ஒட்டிப்பிறந்தவை. பண்பாடு நீதி நேர்மை தரையிலே புரண்டு தவியாய் தவித்தது.

மனித நேயம் என்றால் என்ன என்ற பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட வாழ்க்கையே அவர்களின் சொந்த மாகிப்போனது. நாம் மனிதனாக பிறந்திருக்கின்றோம் ஆறறிவு கொடுக்கப்பட்டு இருக்கின்றோம் என்பதை அடியோடு மறந்து, தான் தோன்றித்தனமாக , இப்படித்தான் வாழவேண்டும் என்ற ஒரு நேரிய வழிகாட்டுதல் இன்றி, எப்படியும் வாழலாம் என்ற வாழ்க்கைக்கு தலைமுறையாக தள்ளப்பட்டு, மிருகங்களின் குணம் எப்படியோ அப்படியே இருந்தது இவர்கள் குணம். அன்றாட வாழ்க்கையில் மானமும் இல்லை ஞானமும் இல்லை. 

இந்த நிலையில்தான், தீன் ஒளி புகாத இந்த அரபுலக இருள் நிறைந்த, மனதினில் அல்லாஹ் ஓரிறைக் கொள்கை என்னும் ஒளிக் கீற்றை பரவச்செய்யும் முகமாக , மனிதகுல மாணிக்கத்தை,  அண்ணல் நபி (ஸல்) அவர்களை இப்புவிக்கு தூதாக, பரிசாக தந்தான்.

அவர்கள் இப்பிரதேசத்தில்  தூதராக வந்த தருணமோ, சிலை வணக்கம் மிகப்பெரும் கௌரவமாக மதிக்கப்பட்ட காலம், இணைவைப்பை இணை வைப்பென்று தெரியாமலேய அல்லாஹ்வுக்கு உகந்ததென்றே நினைத்து போற்றி வந்த காலம், சிலை வணக்கத்திற்கு குறைவு வந்து விட்டாலோ அல்லது அதைப்பற்றி யாரும் குறை சொன்னாலோ அவர்கள் மிகப்பெரும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்ற நிலை உள்ள காலம்.

அல்ஹம்துலில்லாஹ் ,அனைத்து சோதனைகளையும் இறைவனின் உதவியால் தமது 23 ஆண்டுகால தூதுத்துவ வாழ்வில் இக்கொள்கையின் முகமாக இறைவன் நியதியின்படி  அவன் கொடுத்த அனைத்து சோதனைகளையும் , அவனுக்காகவே ஏற்று, உயிருக்கு உத்திரவாதமில்லாத நிலை, ஏச்சு, கேவலப் பேச்சு, கல்லெறி, முள் பாதை, இருள் பாதை, உதிரம் சிந்திய நிலை, என்ற அனைத்து சோதனைகளையும் வெற்றியோடு கடந்து அனைத்து மூட நம்பிக்கைகள், நூதனப்பழக்க வழக்கங்கள், ஆண்டான், அடிமை, பேதங்கள், கொடும் வட்டி  இன பேதம், நிற பேதம், அனைத்திற்கும் பாலைவன மண்ணிலேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது. 

யாருக்கும் யாரும் உயர்ந்தவனும் இல்லை, தாழ்ந்தவனும் இல்லை. எவன் ஈமானில், , உள்ளச்சத்தில் உங்களில் மிகைத்து இருக்கின்றானோ அவனே உங்களில்  சிறந்தவன் என்று பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 

உடமைகள் ஒழுங்கு செய்யப்பட்டு , சொத்துக்களில் உரிமை பெண்களுக்கும் உண்டு என்று அறிவிக்கப்பட்டது. மனித சமூகம் மாசு படாமல் மது விலக்கு அமுல் படுத்தப்பட்டது. மக்கள் யாவரும் ஒன்றே குலம் என்னும் இஸ்லாமிய மார்க்கம் வந்து இஸ்லாம் அதன் தூய வடிவத்தை பறை சாற்றி இது ஒன்றே அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என்றும் முழங்கப்பட்டது.

சூரிய ஒளி என்னவோ இப்பூமி பந்தின் ஒருபாகத்திற்கு ஒளியையும், மறு பாகத்திற்கு இருளையும்தான் இதுவரை தந்து கொண்டு இருக்கின்றது. இறைவன் ஏற்பாட்டின் படி. ஆனால் காருண்ய நபியின் தூதுத்துவமோ இப்புவியின் அனைத்து உலகுக்கும் இருளிலும் சரி பகலிலும் சரி ஒவ்வொரு மனித உள்ளத்திற்கும் தன் ஒளிக்கீற்றை தந்து வழி நடத்திக்கொண்டு இருக்கின்றது.

இன்று வரை இதை ஏற்க  மறுப்பவர் போக மீதமுள்ள உலகின் மக்கள் தொகையின் 1/3-ன் இதய சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்து ஆளுமை செய்து கொண்டுதான் இருக்கின்றது.

அபு ஆசிப்