Showing posts with label நேர்வழி. Show all posts
Showing posts with label நேர்வழி. Show all posts

பணம் படுத்தும்பாடு !?!? 3

அதிரைநிருபர் பதிப்பகம் | October 11, 2015 | , , ,


இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கை எனும் வாகனத்தை வளமாக
ஓட்டிச்செல்ல வேண்டுமாயின் பணம் மிகமிக அவசியமாகத் தேவைப்படுகிறது. அதனால்தான் பணமில்லாதவன் பிணம் என்றும் பணம் பத்தும் செய்யுமென்றும் பணத்தைக் கண்டால் பிணமும் வாய்பிளக்கும் என்றும் பணம் பாதாளம் வரை பாயுமென்றும் இப்படி பணத்தின் அருமைகளைப் பற்றி பலவகையில் நாம் பேசுவதுண்டு.

சொல்லப்போனால் சிலசமயங்களில் பணமே ஒருவனின் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது என்று கூடச் சொல்லலாம். பணம் சாதாரண காகிதத்தில் அச்சிட்டப்பட்டு பார்ப்பதற்கு எளிமையான தோற்றத்தில் இருந்தாலும் இதன் சக்தியும் மதிப்பும் மிகமிக அபாரம் என்றே சொல்லலாம். இந்தப் பணத்தை நேர்வழியில் தேடுவதில் சேகரிப்பதில் பெறுவதில் பெரும் சிரமப்பட வேண்டி யிருக்கிறது. காரணம் இதைக் கணிசமாகதேடி பெரும் செல்வந்தராக வேண்டுமென்றால் கடின உழைப்போ, செய்தொழிலில் முன்னேற்றமோ, அல்லது புத்தியைப் பயன்படுத்தியோ மொத்தத்தில் நேர்வழியில் தேட பல இன்னல்களையும் சிரமங்களையும் சந்திக்க வரவேண்டியுள்ளது.

இத்தனை சிரமத்திற்கு மத்தியில் இப்பணத்தைத் தேட மனமில்லாதோர் நாட்டுச் சட்டத்திற்குப் புறம்பான குறுக்கு வழியைத்தேடி குறுகியகாலத்தில் பெரும் செல்வந்தராகி உல்லாசமாக வாழ முயற்ச்சிக்கிறார்கள்.இத்தகைய எண்ணம் உள்ளோர் திருட்டு,மோசடி,அபகரித்தல்,லஞ்சம், ரௌடீசியம், கடத்தல்,தேசவிரோத செயலென தனக்கு செயல்படுத்த முடிந்த தவறான வழிகளைப் பயன்படுத்தி பணம் சேர்க்க முற்ப்படுகிறார்கள்.இன்னும் சிலர் கிடைக்கும் வாய்ப்பினைப் பயன்படுத்தி பலவித மோசடி உத்திகளையும் கையாண்டு குறுகிய காலத்திலேயே பெரும் பணத்திற்கு சொந்தக்காரர்களாகி விட ஆசைப்படுகிறார்கள்.

ஆனால் இப்படித்தேடும் பணத்தால் நிச்சயமாக நிம்மதி ஒருபோதும் இருக்கப் போவதில்லை. எப்போதும் பயத்தையும் சேர்த்து அணைத்துக் கொண்டே தூங்கும்படித்தான் இருக்கும். அது மட்டுமல்ல சட்ட விரோதமாக சேர்த்த இப்பணத்திற்கு பாதுகாப்பு இல்லாமல் எந்நேரமும் அரசு பறிமுதல் செய்துகொள்ளும் அல்லது எந்நேரமும் குட்டு வெளிப்பட்டுப் போய்விடும் என்கிற எதிர்பார்ப்புடன்தான் வாழ் நாளைக்கழிக்க வேண்டியதாக இருக்கும்.

மனிதனின் நம்பிக்கையின் அடிப்படையில் பார்ப்போமேயானால் இப்படி அடுத்தவர்களுடைய வயிற்றெரிச்சலில் கிடைத்தபணத்தில் யாரும் நீண்டநாள் நிம்மதியுடன் வாழ்ந்ததாக சரித்திரமில்லை.மாறாக பணத்தையும் பொருளையும் இழந்தவர்களுடைய சாபத்திற்கு ஆளாகி வாழ்நாள் முழுதும் அடுத்தவர்களை ஏமாற்றிவிட்டோம் என்கிற மன உளைச்சல் ஒருபக்கமும் அவமானம் ஒருபக்கமும் குற்ற உணர்வு ஒருபக்கமுமாக மாறிமாறி மனதில் தோன்றி நிம்மதி இழக்க வைத்து விடும்.

நேர்வழியில் சம்பாரித்து முறையான கணக்குகளை அரசுக்குக் காண்பித்து வருபவர்களுடைய தைரியமும், சந்தோசமான வாழ்க்கையும் சட்டவிரோதமாக பணத்தைத் தேடியவர்களிடம் ஒருபோதும் இருக்க வாய்ப்பில்லை.வெளிப் பார்வைக்கு தாம் உயர்ந்தவராகக் காட்டிக் கொண்டாலும் உள்மனதில் தாழ்வுமனப்பான்மையுடன் உள்ளம் நிம்மதியிழந்து மனசாட்சி குற்ற உணர்வுடன் குத்திக் கொண்டுதான் இருக்கும்.இதுவே மனிதப்பிறவியின் நிதர்சன உண்மையாகும்.

போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து என்று சொல்வதைப் போல ஆசைகளை அடக்கி நேர்வழியில் ஈட்டிய செல்வத்தைக் கொண்டு நிம்மதியுடன் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ளவேண்டும். மாறாக பேராசைப்படுவதால் பிறகு பெரும் நஷ்டத்தையே சந்திக்கும்படி இருக்குமென்பதை நாம் உணரவேண்டும்.

தவறான வழியில் பணத்தையும் சொத்தையும் சேகரித்து சந்தோசத்தையும் அமைதியையும் இழந்து நிற்ப்பதைவிட நேர்வழியில் சம்பாரித்த போதுமான பணத்தில் நிம்மதியுடன் வாழ்வதே மேலான வாழ்க்கையாகும்.ஆகவே யாரொருவர் பணத்திற்கு முழுக்க முழுக்க அடிமையாகி விடாமல் போதுமான பணத்தை நேர்வழியில் சம்பாரித்து தம் வாழ்க்கையை மகிழ்வுடன் வாழக் கற்றுக் கொள்கிறார்களோ அவர்களை பணம் ஒருபோதும் பாடுபடுத்துவதில்லை என்பது இதிலிருந்து நமக்குப் புலப்படுவதை நன்கு அறிந்து கொள்வோமாக...!!!!

அதிரை மெய்சா

நேர் வழின்னா என்னங்க ? 10

அதிரைநிருபர் பதிப்பகம் | March 06, 2014 | , , ,


Scene-1  “மாப்ளெ, இது என்னோட விசிட்டிங் கார்டு...கவர்மென்ட்லெ உனக்கு ஆக வேண்டிய விசயங்களில் எது குறுக்கு வழியிலெ கெடைக்க கஷ்டமா இருக்குதோ உடனே எனக்கு சொல்லு...உடனே முடிச்சி தர்றேன்...டீலிங்குக்கு தகுந்தாப்லெ நாமெ ரேட் பேசிக்கலாம்.”

Scene-2 “நான் முஸ்லீம்தான், அதுக்காக சாமி படம் கல்லா பக்கத்திலெ வச்சிருக்கிறதிலெ என்ன தப்பு? மத்த ஆளுங்க வரணும்னா நான் இப்படி செஞ்சாத்தான் முடியும்.”

Scene-3   “கல்யாணம் பண்ணும்போது பணம் எதுவும் வாங்கலீங்க...ஆனால் மாமனார் கொடுக்கனும்னு சொல்றது எதுக்கு ? அவர் அவருடை மகளுக்குதானே கொடுக்க சொல்றோம்..”.

Scene-4   “வியாபாரத்திலெ ரொம்ப ஞாயம் அநியாயம் பார்க்க முடியாதுங்க அப்படி பார்க்க ஆரம்பிச்சிட்டா லாபத்தை பார்க்க முடியாதுல...”

Scene-5  “நான் செய்றது மார்க்கப்படி தப்புதான்....இப்ப நான் செய்யாட்டி இன்னொருத்தன் செய்யத்தான் போறான்..அதுக்கு நானே செஞ்சிட்டு நாலு காசு பார்க்கலாமே...”

Scene-6  “நம்மல்லாம் எப்ப மாப்ளே படிக்கிறது..நமக்கு தெரிந்த ஒரே வழி பேப்பர் ச்சேசிங்தான்.’

Scene-7  “என் முதலாளி ஒரு கேப்மாரி , அவனுக்கு சின்சியரா வேலைபார்க்கனும்னா நான் ஒன்னும் தியாகி இல்லை...அதனாலே இருக்கும்போதே என்னென்ன திருட்டுத்தனம் செய்யணுமோ அதெல்லாம் செஞ்சி நாலு காசு தேத்தீக்கிட்டாதான் உண்டு’

Scene-8  “நல்லா இருக்கும்போது மட்டும் போட்ட ஆட்டத்தை பார்க்கனுமே....இப்போ பாயிலெ படுத்தபிறகு...உறவு உரிமையெல்லாம் கண்ணுக்கு தெரியுதா...இன்னும் படட்டும்....அப்போதான் புத்திவரும்...”

மேற்குறிப்பிட்ட வசனங்கள் எதுவும் நான் ஏதோ சீரியலில் பார்த்தது...திரைப்படத்தில் உள்ள வசனம் என நினைக்க வேண்டாம். அனைத்தும் நான் பார்த்த, கேட்ட விசயங்கள்.

இப்படி மனிதர்கள் விஷம் கக்க யார் அல்லது என்ன காரணம் என நினைத்திருக்கிறோமா?.

இதன் காரணங்கள் முக்கியமாக எதுவாக இருக்கும். மார்க்கம் சொல்லித்தந்த விசயங்களில் அதிக கவனமின்மை. இன்னும் சொல்லப்போனால் தீர்ப்பு நாளைப்பற்றி கொஞ்சம் கூட நம்பிக்கையில்லை. இருந்தால் இப்படி உலக ஆதாயத்துக்காக மிருக வாழ்க்கை வாழ சப்பைக்கட்டுகள் இருக்காது.

இதுபோல் நேர்வழியில்லாமல் கேள்விப்பட்ட விசயங்கள் இருந்தால் நீங்களும் எழுதுங்களேன்....[கயவர்களை அறியும் முயற்சிதான் - இதுக்கெல்லாம் கேலக்ஸி டேப் பரிசாக கேட்கக்கூடாது ]


ரசனையும் யோசனையும் !

இப்போது மீடியாவின் பங்கு பல விசயங்களில் "தீர்மானிக்கும் காரணி'யாகி விடுகிறது. 2 நாளைக்கு முன் "தினத்தந்தி' பத்திரிகை பார்த்தேன். பார்த்து பல வருடம் ஆகிவிட்டதால் [பிரின்ட் ஃபார்மேட்] பழைய ஞாபகத்தில் இப்படித்தான் இருக்கும் என நினைத்த என் கற்பனைக்கே ஒரு சவால்....வரி விளம்பரங்கள் அனைத்தும் சாலையோர மருந்துக்கடை மாதிரி ஒரே லாட்ஜ் மருத்துவர் மாதிரி இதை வாங்கி சாப்பிட்டால்........ !

இந்த விளம்பரங்களில் மயங்கியவர்கள் பல பேர் இப்போது மருத்துவ மனைகளில் யாராவது ஒரு நல்ல டாக்டருக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கலாம். நிறைய 'மன்மதன்"ஸ் எல்லாம் கண்டதையும் சாப்பிட்டு விட்டு எமர்ஜன்ஸி வார்டில் வேலைபார்ப்பவர்களை ஒழுங்காக சாப்பிடக் கூட விடமாட்டார்கள். எப்படி செய்திப்பத்திரிகைகள் எல்லாம் இப்படி மருந்துவியாபாரிகள் ஆனது என்பதற்கு முதல் காரணம் வாசகர்களின் ரசனை ரொம்பத்தான் மாறிக்கிடக்கிறது. 

மருத்துவக் கேள்வி பதில்களில் கூட தனது பெர்சனல் விசயங்களை வெளிச்சம் போட்டு காட்டுவதும், அதற்கு ஒரு டாக்டர் பதில் சொல்வதுபோல் இருப்பதும் ஒரு ட்ரண்ட் ஆகி விட்டது. பேசன்ட்டை பார்க்காமல் டயாக்னாசிஸ் செய்வது எப்படி இந்த டாக்டர்களால் முடிகிறது??? [பெயர், ஊர் எல்லாம் நாமே கற்பனையில போடுறதுதான். அப்படி போட்டாதானே சர்குலேசன் எகிறுது!!! - ஒரு உதவியாசிரியர் செப்பியது இப்படி.

சரி நம் வலைத்தலங்களுக்கு வந்து பார்த்தால்.. சில வலைத்தளங்கள் “பஸ்ஸ்டான்ட் கக்கூஸ்”.. மத / இயக்க சம்பந்தமாக எழுதுவதில் உள்ள வலைத்தளங்கள் மற்ற மதங்களை / இயக்கங்களை / பிடிக்காதவர்களை விமர்சிக்க [திட்ட] மட்டும் ஆரம்பித்தது போல் இருக்கிறது. மற்ற மதங்களைத் திட்டி ஒரு மதம்  வளர்க்க முடியாது.

சீரியல் பார்க்கும் பெண்களைத் திட்டிக் கொண்டே சீரியல் பார்க்கும் ஆண்களை என்ன செய்வது??... யாராவது பெண்கள் இதற்கு பதில் சொல்லட்டும்.

சரி, ரசனை மாற யோசனை என்ன?. [அப்பாடா தலைப்புக்கு தகுந்தமாதிரி எழுதவில்லை என என்னை யாரும் குறை சொல்ல முடியாது] யோசனை சொல்வதை வாசகர்களிடம் விட்டு விடுகிறேன் [இதிலேயே தெரியலெ... எனக்கு யோசனை சொல்லத் தெரியலேனு]

குறிப்பு: தலைப்பு கொடுத்தால் எழுதுகிறேன் என்று எழுதி அபு இப்ராஹிம் கொடுத்த தலைப்பில் எழுதியிருக்கிறேன். திட்றதா இருந்தால் என்னை மட்டும் திட்டவும்.

ZAKIR HUSSAIN
இது ஒரு மீள்பதிவு...

நேர் வழின்னா என்னங்க ? 23

அதிரைநிருபர் பதிப்பகம் | January 03, 2012 | , , ,


Scene-1  “மாப்ளெ, இது என்னோட விசிட்டிங் கார்டு...கவர்மென்ட்லெ உனக்கு ஆக வேண்டிய விசயங்களில் எது குறுக்கு வழியிலெ கெடைக்க கஷ்டமா இருக்குதோ உடனே எனக்கு சொல்லு...உடனே முடிச்சி தர்றேன்...டீலிங்குக்கு தகுந்தாப்லெ நாமெ ரேட் பேசிக்கலாம்.”

Scene-2 “நான் முஸ்லீம்தான், அதுக்காக சாமி படம் கல்லா பக்கத்திலெ வச்சிருக்கிறதிலெ என்ன தப்பு? மத்த ஆளுங்க வரணும்னா நான் இப்படி செஞ்சாத்தான் முடியும்.”

Scene-3   “கல்யாணம் பண்ணும்போது பணம் எதுவும் வாங்கலீங்க...ஆனால் மாமனார் கொடுக்கனும்னு சொல்றது எதுக்கு ? அவர் அவருடை மகளுக்குதானே கொடுக்க சொல்றோம்..”.

Scene-4   “வியாபாரத்திலெ ரொம்ப ஞாயம் அநியாயம் பார்க்க முடியாதுங்க அப்படி பார்க்க ஆரம்பிச்சிட்டா லாபத்தை பார்க்க முடியாதுல...”

Scene-5  “நான் செய்றது மார்க்கப்படி தப்புதான்....இப்ப நான் செய்யாட்டி இன்னொருத்தன் செய்யத்தான் போறான்..அதுக்கு நானே செஞ்சிட்டு நாலு காசு பார்க்கலாமே...”

Scene-6  “நம்மல்லாம் எப்ப மாப்ளே படிக்கிறது..நமக்கு தெரிந்த ஒரே வழி பேப்பர் ச்சேசிங்தான்.’

Scene-7  “என் முதலாளி ஒரு கேப்மாரி , அவனுக்கு சின்சியரா வேலைபார்க்கனும்னா நான் ஒன்னும் தியாகி இல்லை...அதனாலே இருக்கும்போதே என்னென்ன திருட்டுத்தனம் செய்யணுமோ அதெல்லாம் செஞ்சி நாலு காசு தேத்தீக்கிட்டாதான் உண்டு’

Scene-8  “நல்லா இருக்கும்போது மட்டும் போட்ட ஆட்டத்தை பார்க்கனுமே....இப்போ பாயிலெ படுத்தபிறகு...உறவு உரிமையெல்லாம் கண்ணுக்கு தெரியுதா...இன்னும் படட்டும்....அப்போதான் புத்திவரும்...”

மேற்குறிப்பிட்ட வசனங்கள் எதுவும் நான் ஏதோ சீரியலில் பார்த்தது...திரைப்படத்தில் உள்ள வசனம் என நினைக்க வேண்டாம். அனைத்தும் நான் பார்த்த, கேட்ட விசயங்கள்.

இப்படி மனிதர்கள் விஷம் கக்க யார் அல்லது என்ன காரணம் என நினைத்திருக்கிறோமா?.

இதன் காரணங்கள் முக்கியமாக எதுவாக இருக்கும். மார்க்கம் சொல்லித்தந்த விசயங்களில் அதிக கவனமின்மை. இன்னும் சொல்லப்போனால் தீர்ப்பு நாளைப்பற்றி கொஞ்சம் கூட நம்பிக்கையில்லை. இருந்தால் இப்படி உலக ஆதாயத்துக்காக மிருக வாழ்க்கை வாழ சப்பைக்கட்டுகள் இருக்காது.

இதுபோல் நேர்வழியில்லாமல் கேள்விப்பட்ட விசயங்கள் இருந்தால் நீங்களும் எழுதுங்களேன்....[கயவர்களை அறியும் முயற்சிதான் - இதுக்கெல்லாம் கேலக்ஸி டேப் பரிசாக கேட்கக்கூடாது ]


ரசனையும் யோசனையும் !

இப்போது மீடியாவின் பங்கு பல விசயங்களில் "தீர்மானிக்கும் காரணி'யாகி விடுகிறது. 2 நாளைக்கு முன் "தினத்தந்தி' பத்திரிகை பார்த்தேன். பார்த்து பல வருடம் ஆகிவிட்டதால் [பிரின்ட் ஃபார்மேட்] பழைய ஞாபகத்தில் இப்படித்தான் இருக்கும் என நினைத்த என் கற்பனைக்கே ஒரு சவால்....வரி விளம்பரங்கள் அனைத்தும் சாலையோர மருந்துக்கடை மாதிரி ஒரே லாட்ஜ்மருத்துவர் மாதிரி இதை வாங்கி சாப்பிட்டால்........ !

இந்த விளம்பரங்களில் மயங்கியவர்கள் பல பேர் இப்போது மருத்துவ மனைகளில் யாராவது ஒரு நல்ல டாக்டருக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கலாம். நிறைய 'மன்மதன்"ஸ் எல்லாம் கண்டதையும் சாப்பிட்டு விட்டு எமர்ஜன்ஸி வார்டில் வேலைபார்ப்பவர்களை ஒழுங்காக சாப்பிடக் கூட விடமாட்டார்கள். எப்படி செய்திப்பத்திரிகைகள் எல்லாம் இப்படி மருந்துவியாபாரிகள் ஆனது என்பதற்கு முதல் காரணம் வாசகர்களின் ரசனை ரொம்பத்தான் மாறிக்கிடக்கிறது. 

மருத்துவக் கேள்வி பதில்களில் கூட தனது பெர்சனல் விசயங்களை வெளிச்சம் போட்டு காட்டுவதும், அதற்கு ஒரு டாக்டர் பதில் சொல்வதுபோல் இருப்பதும் ஒரு ட்ரண்ட் ஆகி விட்டது. பேசன்ட்டை பார்க்காமல் டயாக்னாசிஸ் செய்வது எப்படி இந்த டாக்டர்களால் முடிகிறது??? [பெயர்,ஊர் எல்லாம் நாமே கற்பனையில போடுறதுதான். அப்படி போட்டாதானே சர்குலேசன் எகிறுது!!! - ஒரு உதவியாசிரியர் செப்பியது இப்படி.

சரி நம் வலைத்தலங்களுக்கு வந்து பார்த்தால்..சில வலைத்தளங்கள் “பஸ்ஸ்டான்ட் கக்கூஸ்”.. மத சம்பந்தமாக எழுதுவதில் உள்ள வலைத்தளங்கள் மற்ற மதங்களை விமர்சிக்க [திட்ட] மட்டும் ஆரம்பித்தது போல் இருக்கிறது. மற்ற மதங்களைத்திட்டி ஒரு மதம்  வளர்க்கமுடியாது.

சீரியல் பார்க்கும் பெண்களைத்திட்டிக்கொண்டே சீரியல் பார்க்கும் ஆண்களை என்ன செய்வது??...யாராவது பெண்கள் இதற்கு பதில் சொல்லட்டும்.

சரி, ரசனை மாற யோசனை என்ன?. [அப்பாடா தலைப்புக்கு தகுந்தமாதிரி எழுதவில்லை என என்னை யாரும் குறை சொல்ல முடியாது] யோசனை சொல்வதை வாசகர்களிடம் விட்டுவிடுகிறேன் [இதிலேயே தெரியலெ...எனக்கு யோசனை சொல்லத்தெரியலேனு]

குறிப்பு: தலைப்பு கொடுத்தால் எழுதுகிறேன் என்று எழுதி அபு இப்ராஹிம் கொடுத்த தலைப்பில் எழுதியிருக்கிறேன். திட்றதா இருந்தால் என்னை மட்டும் திட்டவும்.

ZAKIR HUSSAIN