Showing posts with label படிகட்டுகள். Show all posts
Showing posts with label படிகட்டுகள். Show all posts

படிக்கட்டுகள் - 20 3

அதிரைநிருபர் பதிப்பகம் | July 22, 2015 | , , , ,

சேமிப்பின் அவசியம்.

சேமிப்பது நல்லது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனாலும் தெரிந்தும் செயல் படுத்தாமல் போவதற்க்கு ஒரு  டிசிப்ளின் இல்லாத காரணமே தவிர, வசதியில்லை என்பதல்ல.

சேமிப்பின் முதல் விதி:  

வருமானம் - [மைனஸ்] சேமிப்பு > [மீதி] செலவுகள்.

Income – Savings > expenses.

ஆனால் பெரும்பாலானவர்கள் கடைபிடிக்கும் தவறான விதி: வருமானம் [மைனஸ்] - செலவுகள் > [மீதி] = சேமிப்பு.

Income – Expenses > Savings.

பணம் கைக்கு கிடைத்தவுடன் செலவளித்து விட்டு மிச்சம் மீதி இருந்தால் சேமிப்பேன் என்பது நடக்ககூடிய காரியமாக எனக்கு படவில்லை.

தொடர்ந்து சேமிக்காததால் சில சமயங்களில் வாழ்க்கையே வெறுத்துப்போகும். ஏனெனில் வாழ்க்கையின் அடுத்த நிமிடம் அவிழ்க்கப்போகும் மிகப்பெரிய உண்மைகளில் செலவுகளின் அத்யாயங்களுக்கே முதல் இடம். அதற்க்கு பிறகுதான் இயற்கையை ரசிப்பதும், உறவுகளின் கவனிப்பும், உங்களுக்கு பிடித்த அந்த கடற்கரை காற்றும், அடைமழையில் சூடான ஸ்ட்ராங் டீயும்.

Financial Planning ல் சில முக்கியமான விசயங்களுக்கு உங்களிடம் சேமிப்பு இருக்க வேண்டிய அவசியத்தை சொல்கிறார்கள். இது நிச்சயம் உங்களால் முடியக்கூடிய விசயம்தான்இருப்பினும் சென்டிமென்ட், அளவுக்கு அதிகமான ஆசைபோன்ற கற்களில் தடுக்கிவிழுவதும் ,விழாததும் உங்கள் சமத்தை பொறுத்தது.

Emergency Fund :

உங்கள் வருமானத்தில் ஆறுமாத வருமானம் அல்லது உங்களுக்கு ஆகும் செலவில் [ ஒரு மாத செலவு ] ஆறு மடங்கு உங்களிடம் நிச்சயம் பணமாக சேமிப்பில் இருக்க வேண்டும் என்பது முக்கியம். இதன் காரணம் நீங்கள் வேலை பார்க்கும் சூழல் திடீரென நிர்வாக முறைகேடால் உங்கள் வருமானம் பாதிக்கப்படலாம். இல்லாவிட்டால் முதலாளியின் மச்சானுக்கு உங்கள் வேலை எல்லாம் நீங்களே படித்து கொடுத்து விட்டதால் நீங்கள் இன்ஸ்டலேசன் முடிந்த சி.டி மாதிரி ஒரு என்வலப்பில் போட்டு ஒரங்கட்டுவதுபோல் ஓரங்கட்டப்படலாம். அல்லது உங்கள் வீட்டுவிழாவில் கலந்து சிறப்பித்து விட்டு வந்ததால் உங்கள் இருக்கையில் ஒரு யுவதி அமர்ந்து உங்களை ஏதோ கூழ்காய்ச்சி ஊத்துவதற்கு டொனேசன் கேட்க வந்த ஆளை பார்ப்பதுபோல் பார்க்கலாம்.

எது எப்படியோ. உங்கள் வாழ்க்கை ஏறக்குறைய டார்ஜான் மாதிரி. அடுத்த கயிற்றை பிடிக்க தவறினால் கீழே விழுந்து பலத்த அடி படலாம். எனவே இந்த ஆறு மாத சேமிப்பு உங்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி கொள்ள உதவியாக இருக்கும். வருசக்கணக்கில் "சும்மா" உட்கார்ந்து சாப்பிடுபவர்களுக்கு இதுவரை எந்த பொருளாதார நிபுனராலும் எந்த விதியும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது ஒரு தற்காலிகம்தான். இன்னும் 6 மாதம் இருக்கிறது என்று அடுத்த வருமானத்தை தேடாமல் "நானும் ஊருக்கு நல்லது செய்ரேன்" என கிளம்பினால் 5 வது மாத ஆரம்பத்திலேயே நெருக்கமான உறவுகளும் தத்துவமெல்லாம் பேச ஆரம்பிக்கும். அதை நாம் வேறு கேட்டுத்தொலைக்க வேண்டி வரும்.

Emergency Medical Fund

இந்த விசயத்தை எழுத என்னிடம் பலஎபிசோடுக்கு விசயம் இருக்கிறது.

இன்றைய செடன்ட்ரி லைஃப், நம்முடைய அன்றாட வாழ்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி நமது ஆர்கன்கள்பெரும்பாலும் அதன் அதன் முழு வீச்சில் இயங்காமல் போய் முன்பெல்லாம் வரும் வயதானவர்களுக்கான நோய் இப்போது சின்ன வயதில் வந்து விடுகிறது. நோயின் தாக்கம் என்பது வேறு, அதில் உங்கள் சம்பாத்தியத்தில் ஏற்படுத்தும் தாக்கத்திற்கு சரியான தீர்வு மெடிக்கல் இன்சூரன்ஸ். இப்போது இஸ்லாமிக் இன்சூரன்ஸ் [TAKAFUL] வந்து விட்டதால் இதில் கொஞ்சம் அதிகப்படியான ஆட்கள் பயன் அடைய முடியும்.

உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் சேர்த்து தபாரு [பிரிமியம்] கட்டுவதால் இக்கட்டான சூழ்நிலையில்உங்கள் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் காப்பாற்றலாம்.

இது போன்ற மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுக்கமுடியாமல்போகும் சூழ்நிலையில் இருப்பவர்கள் தனது குடும்பத்தில் உழைப்பவர்களை சேர்த்துக் கொண்டு தங்கள் குடும்பத்தினருக்கு என்று ஒரு மெடிக்கல் நிதியை தனியாக நிர்வகித்து வருவது நல்லது. 20 ஆண்கள் உழைக்கும் குடும்பத்தில் உள்ளவர்கள் கூட ஆஸ்பத்திரியின் பெரிய பில்களை கட்ட முடியாமல் போய் ரெஸ்பிரேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் ஒருவரின் இதயம் நிறுத்தப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். காரணம் பணம்.

Retirement Fund:

சமீபத்தில் ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவருக்கு ஆண்பிள்ளைகள். ஒரு மகனுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. 2வது வது மகனும் நல்லபடியாக படிப்பதால் உங்கள் வாழ்க்கை இனிமேல் ஈசியாகிவிடும். பசங்க சம்பாதித்தால் அட்லீஸ்ட் நீங்கள் ஒய்வெடுக்கலாம்" என்று சொன்னேன். அதற்கு அந்த நண்பர் சொன்ன பதில் எல்லோருக்கும் பொருந்தும். அப்படித்தான் எல்லோரும் நினைத்து வாழ்கிறோம்ஆனால் நடைமுறை வாழ்க்கையில் மகன் சம்பாதிக்க ஆரம்பிக்கும்போதுதான் அவனது கல்யாணம்அவனுக்கென்று வாகனம்வீடு இப்படி பெரும் செலவுகளை மனிதன் சந்திக்கிறான். எனவே நாம் சம்பாதிக்க கூடிய செயல் ஒரு 'தொடர்கதை" அதற்கு முடிவு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் ரிட்டயர்மென்டுக்கு என்று ஏதாவது தொடர் வருமானம் வருகிறமாதிரி ஏற்படுத்திக்கொள்ளாதவர்கள் வாழ்க்கை கொஞ்சம் கஷ்டம்தான். பிள்ளைகள் தருவார்கள் என்ற எதிர்பார்ப்புள்ள வாழ்க்கை எப்போதும் ஒரு மர்ம நிமிடங்கலுடன் கடந்து போகும். இதை எத்தனை பேர் தாங்கி கொள்ள முடியும்" .....இதை அவர் சொன்னவுடன் ஏதோ எனக்குள் செய்தது. கொஞ்சம் நான் "ஹேங்'  ஆனது என்னவோ உண்மை. நாம் காலம் கடந்து சில விசயங்களை யோசிப்பதுடன் இப்படி அனுபவபூர்வமாக பேசுபவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறதாக நான் உணர்கிறேன்.

இப்போது விற்கும் சொத்து விலைகளால் ஏதும் வாங்க முடியுமா என்று யோசிப்பவர்கள் பல முதலீடு விசயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. இந்தியா போன்ற இடங்களில் ம்யூச்சுவல் ஃபன்ட் நிறைய இருக்கிறது. இவைகளில் முதலீடு செய்வது நல்லது என்றாலும் Syariyah compliance counters இவைகளை செக் செய்வது உங்கள் கடமை, அதோடு Historical return of Fund எப்படியிருக்கிறது என்பதையும் செக் செய்து கொள்ளவும்.

Child Education Fund

இது  1- 5 & 6-10 படிக்கும் மாணவர்கள் உங்களுக்கு பிள்ளைகளாக இருந்தால் அவசியம் கவனம் செலுத்த வேண்டிய விசயம். பிள்ளைகள் படித்து முடித்து நல்ல மதிப்பெண்களுடன் அவர்கள் தயாரான பிறகு பெற்றோர்களான நாம் தயாராக இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்று நானே அனுபவித்திருக்கிறேன். அதே மாதிரி பல பெற்றோர்கள்  பட்ட டென்சனான சூழ்நிலையையயும் நான் பார்த்திருக்கிறேன். இதற்கு நாம் பல காரணம் சொன்னாலும் உங்கள் மகனோ மகளோ 19 வயதில் கல்லூரிக்கு போகப்போவது 19 வருடத்துக்கு முன்னே தெரியும், ஏன் நாம் தயாராகவில்லை?. இந்த விழிப்புணர்வை எனக்கு தந்தது அதிகம் படித்திராத என் சீனியர்.

இப்போது சேமிக்களாம் அப்புறம் சேமிக்கலாம் என்றால் காலமும் கடல் அலையும் நமக்காக காத்திருக்காது. பிள்ளைகள் எங்கே அவ்வளவு படிக்கப்போகிறது என்ற அவநம்பிக்கையிலும் சேமிக்காமல் இருப்பதும் தவறு. ஏனெனில் உங்களின் அவநம்பிக்கையின் தாக்கம் அவனது படிப்பு வரையில் பாதித்திருக்களாம். கடைசியில் உங்கள் நெகடிவ் எனர்ஜியால் உங்கள் வம்சமே பாதிக்கப்படக்கூடும்.

பிள்ளைகளுக்கு பணம் சேர்ப்பதுடன் கொஞ்சம் நம்பிக்கையையும் சேர்த்து வையுங்கள். உங்கள் பிள்ளையின் எதிர்காலக்கனவுகளை அடிக்கடி ஞாபகப்படுத்துங்கள். அதற்காக உங்கள் பிள்ளையை ஓய்வெடுக்க விடாமல் அவனை ஒரு மாடு மாதிரி நடத்துவதையும் தவிர்த்து விடுங்கள். பிள்ளைகள் பெற்றோர்களின் நச்சரிப்பையும் புத்தக மூட்டையையும் சுமக்கும் பொதிகழுதை ஆகாமல் பார்த்துக்கொள்வதும் உங்கள் கடமைதான்.

எதற்கு சேமித்தாலும் அதற்கென்று ஒரு தனி வங்கிகணக்கு இருத்தல் அவசியம். அதில் பணம் சேர்க்க மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். அதில் செக் புக் அல்லது ஏ டி எம் கார்டு இருந்தால் கை அரிக்கும். எனவே அதை கடாசிவிட்டு  சேமிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. நீங்கள் சேமிப்பில் புலி / நரி என்று விளம்பரப்படுத்தி கொண்டிருந்தால் பக்கத்தில் கழுகுகள் பறக்க ஆரம்பித்து விடும்.

இதற்கும் நான் முன்பு சொன்ன  Visualization Technique  உதவும். உங்கள் சேமிப்பு கணக்கில் எவ்வளவு இருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைத்து பாருங்கள். உங்கள் சேமிப்பும் உயரும்.

சம்பாதிப்பது எல்லோராலும் முடியும். அதை சரியாக காப்பாற்றுவதுதான் சவாலான விசயம். ஊரில் சிலரை பார்த்திருக்கிறேன். என்னிடம் இவ்வளவு பணம் இருக்கிறது, அதை வைத்து என்ன செய்யலாம் என்று வெட்டியாக திரிபவர்களிடம் ஐடியா கேட்பது. அதில் ரிசல்ட் எப்படியிருக்கும் என்று உங்களுக்கே தெரியும்.

சிலருக்கு சொத்து வருமானம் அல்லது பிசினஸ் வருமானம் என்று இருக்கும் [கவனிக்க: இவர்கள் மாதசம்பளம் வாங்குபவர்கள் அல்ல] சில சமயங்களில் தான் நினைத்ததை விட அதிக வருமானம் வர வாய்ப்பு இவர்களுக்கு உண்டு. எப்போது அதிக வருமானம் வருகிறதோ. அந்த மாதத்திற்கு தேவையான பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மற்ற அனைத்து உபரிவருமானத்தையும்  சேமிப்பில் போட பழகிக்கொண்டால் பல சமயங்களில் இவர்களுக்கான பொருளாதாரச்சுமை தவிர்க்கப்படலாம்.  அதை விட்டு நல்ல வருமானம் வரும்போது தனது மனசு சொல்லும் செலவுகளை செய்துவிட அவசரப்படுபவர்களை யாராலும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாது.
ஏற்றம் தொடரும்
ZAKIR HUSSAIN

படிக்கட்டுகள்- 15 13

அதிரைநிருபர் பதிப்பகம் | June 10, 2015 | , , , , ,

இறைவழிபாடு Vs  பணம் சம்பாதித்தல்

மனிதனின் சறுக்கல் அவன் இந்த உலகத்தில் எதை முக்கியம் என்று நினைக்கிறானோ அதில்தான் பெரும்பாலும் அமைந்திருக்கிறது. ஒரு பாக்டீரியா பேரன் பேத்தியோடு குடியிருக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு ஏன் வயிற்றை இப்படி வலிக்கிறது எனும் ஒரு நோயாளியின் கேள்விபோல்தான் , பிரச்சினைகளை சொந்தமாக தேடி தன் வாழ்க்கையில் பிரச்சினைகளை அதிகமாக்கிவிட்டு பிறகு "எனக்கு ஏன் இறைவன் இப்படி சோதிக்கிறான்" என்று புலம்புவது ஒரு ரகம்.

வாழ்க்கையில் முன்னேறுவது என்பது முக்கியம் என நினைக்கும் சூடு சுரணை  உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு காலம் வரும் அதில் பணம் வசப்படும், வாக்குக்கு மரியாதை இருக்கும் அப்போதுதான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தன்னை சுற்றி ஒரு ஒளிவட்டம் வந்து விட்டதாக கற்பனை செய்து கொண்டு தான் சொல்வதெல்லாம் சரி, தான் செய்வதெல்லாம் சரி என்று ஆட்டம் போட்டால் சறுக்கும் காலம் வந்தால் முதலில் ப்ரூட்டஸ்களை சந்திக்க தயாராக வேண்டியதுதான். அதற்கு பிறகு வளர்த்த கிடா, நெஞ்சில் பாய்ந்துவிட்டது என புலம்பி புண்ணியமில்லை. [ கிடா நெஞ்சில பாயும் அளவுக்கு அவ்வளவு குள்ளமாவா இருக்கீங்கனு யாரும் கேட்டமாதிரி தெரியவில்லை]

இன்றைய நவீன சூழல் மனிதனை தடம்புரளச்செய்யும் எல்லா வசதிகளையும் அவன் கையில் வந்து கொடுத்து விட்டு போயிருக்கிறது.

ஆண்களைப்பொருத்தவரை விபரீத உறவுகளாலும், பண ஆசையில் என்ன செய்கிறோம் என்பதை மறந்த சயன நிலைதான் அவர்களை பாதாளத்துக்கு கொண்டு செல்கிறது. இதை நெறிப்படுத்த எந்த சட்டமும் செய்யாததை இறைஅச்சம் வெற்றிகரமாக செய்யும். இத்தனை நாள் இல்லாத பொருளாதார வளர்ச்சி சமயங்களில் தவறையும் சரி என்று பேசச்சொல்லும். தேவையில்லாத ஹராமான உறவுகளைக்கூட ஞாயப்படுத்த சொல்லும். மார்க்கம் சரியாக கற்றிருந்தால் / தொழுகை ஒழுங்குடன் கடைபிடிக்கப்பட்டிருந்தால் அந்த குடும்பம் மானக்கேடுகளை விட்டு தப்பிக்க முடியும்.

வாழ்க்கையில் ஒரளவு வெற்றியடைந்தவர்கள் தான் இதுவரை சம்பாதித்ததை தக்க வைத்துக் கொள்ள மார்க்கத்துக்கு மீறிய இறைவன் வெறுக்கும் இணைவைத்தல், இறைவன் அல்லாதவர்களை வணங்கவும் முற்படுதல் போன்ற விசயங்களில் இறங்கும்போது அதன் தண்டனைத் தீவிரம் தெரிவதில்லை. பிள்ளைகளை வைத்து பெருமை அடிப்பதுபணம் இருப்பதை வைத்து பெருமையடிக்கும் முன் இரண்டையும் இறைவன் நம்மை சோதிக்கத்தான் கொடுத்திருக்கிறான் எனும் அவன் வேத வாக்கை நினைத்தால் அகந்தைகள் அடங்கும். நாம் வாழும் இந்த நூற்றாண்டில் இந்த பரந்த பூமி எத்தனையோ கோடீஸ்வர்களை தனக்குள் புதைத்து சிதைத்திருக்கிறது. பூமி தன் வயதுக்கு எத்தனையோ கோடி மக்கள் மரணித்ததை தனது பொறுமையுடன் பார்த்திருக்கும்.

நாம் வாழும் காலம் , சம்பாதிப்பது எல்லாம் ஒரு மேகம் மாதிரி மாற்றங்களுக்கு உட்பட்டது. நமக்கு அள்ளித்தருபவன் இறைவன் தான் என்பது சரியாக புரிந்தால் மனது நிச்சயம் சாந்தப்படும். இந்த உலகத்தில் எத்தனையோ நீர் வளத்தை தந்தவன் தாகத்துக்காக ஒரு டம்ளர் தண்ணீர் கிடைக்காமல் மரணிக்கும் சூழ்நிலையை எத்தனையோ மனிதர்களுக்கு கொடுத்திருக்கிறான்.
 
அதே சமயம் பணம் சம்பாதிப்பதை ஏதோ பாவச்செயல் மாதிரி பேசும் முல்லாக்கள் சில இளைஞர்கள் மனதில் தனது ரப்பர் ஸ்டாம்பை ஆழமாக குத்திவிடுவதால் சில இளைஞர்கள் தான் செய்வது தவறு என்று தெரியும்போது தனது மகள் கல்யாண வயதுக்கு வந்துவிடுகிறது. இனிமேல் கிடைத்த குறுகிய காலத்துக்குள் தனது தேவைகளை பார்த்துக்கொள்ள அந்த இளைஞர்கள் அழையும்போது அந்த முல்லாக்கள் எந்த உதவியும் அந்த பாதிக்கப்பட்ட மனிதனுக்கு செய்வதில்லை. ஆரம்பத்திலேயே இந்த முல்லாக்கள் தனது கையாளாகாத தனத்தை மறைக்கத்தான் இப்படி போதிக்கிறார்கள் என்பதை உணர்ந்தால் இவ்வளவு பிரச்சினைகள் இருக்காது. எம்பெருமானார் முஹம்மது நபி [ஸல்] அவர்களின் எளிமையான வாழ்க்கையையும் தனது மகளுக்கு சீதனம் கொடுக்கும்போது இருந்த கஷ்டமான சூழ்நிலையை சொல்லும் அவர்கள் ஒருபோதும் நபி [ஸல்] சம்பாதித்து வசதியாக வாழ்வதை ஒருபோதும் தடை சொன்னதில்லை என்று சொல்வதே இல்லை.

 சிலர் எளிமையாக இருப்பதை போதிக்கிறேன் என்று வறுமையாக இருப்பதற்கு போதனை செய்கிறார்கள். சில பெரியவர்கள் செய்யும் தவறு தனது வாழ்க்கையை அப்படியே கார்பன் காப்பி எடுத்ததுபோல்தான் தன் வீட்டு பிள்ளைகளுக்கும் நடக்கும் என்று தன்னாலேயே கற்பனை செய்துகொண்டு சமயங்களில் பிள்ளைகளின் முன்னேற்றத்துகான முடிவுகளுக்கும் தடையாக இருக்கிறார்கள்.

ஆக சுபிட்சத்தை தருவது இறைவன் தான். முயற்சிகள் தோல்வியடையலாம் முயற்சிக்க தயங்களாமா?. நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் இறைவனிடம் மனமார மன்றாடிகேட்டு ஆரம்பியுங்கள்..அதற்கு பிறகு பாருங்கள் உங்களின் வெற்றிப்பாதையை.

நாம் இறைவனிடம் சரணடைய தயங்குகிறோம். இதுவரை இறைவன் நமக்கு தந்த எத்தனையோ வசதிகளுக்கு நாம் நன்றி சொல்லி விட்டோமா? என் வாழ்க்கையில் மிக கஷ்டமான சூழ்நிலையில் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். நான் என் கஸ்டத்தை அவரிடம் சொல்லி புலம்பிக் கொண்டிருக்கும்போது அவர் கேட்டது ' உன் துஆ வில் இறைவனுக்கு நன்றி சொல்வதை அதிகமாக்கு' என்றார்.  “இறைவனின் ரஹ்மத் உனக்கு நிறைய கிடைக்கும், அவன் அள்ளித் தருவதை உன்னால் கணக்கிட முடியாது என்றார். என் வாழ்க்கையில் அவரின் அறிவுரைக்கு பிறகு மிகப்பெரிய மாற்றமும் சுபிட்சமும் ஏற்பட்டது. எல்லாம் அந்த வல்ல இறைவனின் செயல்.

தொழில்/ வேலை செய்து நல்லபடியாக சம்பாதிப்பவர்கள் இறை வழிபாட்டுக்கான நேரத்தை ஒதுக்குவதில் மெத்தனம் காட்டுவது அல்லது "ரொம்ப பிசி" என்று ஒரு வார்த்தையில் இறை வணக்கத்தை செயல்படுத்த சிரமம் காட்டுவது அவ்வளவு நல்லதல்ல. உங்களுக்கு தரப்பட்டிருக்கும் அனைத்து வசதிகளும் சோதிக்கத்தான் என தெரிந்தால் அதன்மீது இந்த அளவு அடிமைத்தனம் இருக்காது.

இஸ்லாத்தில் வழிபடுதலும் , கீழ்படிதலும் என்ற விசயம் இருக்கிறது. இங்கு கீழ்படிதல் என்பது இறைவனின் கட்டளைக்கு. சிலர் வழிபடுகிறார்கள், ஆனால் கீழ் படிய மறுக்கிறார்கள். நமது மன இச்சைக்கு தகுந்த மாதிரி இறைவனின் கட்டளைகளை மாற்றி அமைக்க நாம் யார்?. சரி இது போன்ற சமயங்களில் குர்ஆன், ஹதீஸ், மார்க்க அறிஞர்கள் என்று நமது சந்தேகத்தை தீர்க்க முடியும். ஆனால் கடைசியில் உள்ள மார்க்க அறிஞர்களை முதன்மை படுத்தி குர்ஆனை கடைசியாக்கி விட்டதால் பல குழப்பங்கள். நாம் இறைவனிடம் சரண் அடையும் நிலையை உருவாக்கி கொண்டால் அவனது ஆட்சியில் நாம் சுபிட்சமாக இருப்போம். நமக்கு தேவைப்பட்டதை கொடுக்கவும் , தேவையற்றதை நம்மிடமிருந்து எடுக்கவும் அவன் ஒருவனே அறிந்தவன்.

இன்றைக்கு நமக்கு வருமானம் குறைவாக இருக்கலாம். ஆனால் அந்த குறைந்த வருமானத்திலும் நிம்மதியை தந்திருந்தால் அதுவே பெரிய விசயம். நான் எழுதியிருப்பதை படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு இறைவன் உங்கள் கண்பார்வையை குறைவின்றி கொடுத்திருக்கிறான், ஒருமுறை உங்கள் கண்களை மூடி படிக்க ஆசைப்பட்டாலே அந்த வல்லோனின் கருணை எவ்வளவு விசாலமானது என்பது தெரியும். எத்தனையோ மக்கள் தங்கள் குடும்பத்திற்கு அன்றாடம் சாப்பாட்டுக்கு கூலி வேலை பார்க்கும் சூழ்நிலையிலிருந்தும் கண் பார்வையற்றவர்களாக இருந்து கஷ்டப்படுகிறார்கள். இறைவன் நம்மை அது போன்ற சோதனைக்கு உட்படுத்தாமல் இருப்பதற்கே நாம் எவ்வளவு நாள் நன்றி செலுத்த வேண்டும்.

வாழ்க்கையில் கிடைக்கும் வெற்றிகள் அனைத்திற்கும் நாம் மட்டும் பொறுப்பல்ல. நம்மை நெறிப்படுத்திய ஆசிரியர்கள், நம்மை கண்டித்த பெற்றோர், தவறு செய்தால் தண்டிக்கப்படுவாய் என்று சொன்ன பெரியவர்கள் எல்லோரும் சேர்ந்து மோல்ட் செய்யப்பட்டுதான் நாம் இப்போது வெற்றிபெற தகுதியுடையவானாகிறோம்.

இவையனைத்தையும் நமக்கு சரியாக தந்து நம்மை காப்பாற்றி வரும் அந்த இறைவனை வழிபடுதல் மிக முக்கியம் என்பதற்கு மறுமொழி இருக்க முடியாது.

பல வருடங்களுக்கு முன் என்னிடம் ஒரு இந்தோனேசிய கூலித்தொழிலாளி சொன்னது

நாளைக்கே நமது மரணம் என்று உன் வணக்கத்தை / நல் அமல்களை செய். இன்னும் நூறு வருடம் வாழப்போவதை போல் உன் பொருளாதாரத்தை உயர்த்த  உழை.

ZAKIR HUSSAIN

படிகட்டுகள் - ஏற்றம் 23 30

அதிரைநிருபர் பதிப்பகம் | December 02, 2012 | , , ,


வாழ்க்கையில் பணத்தேவை என்பது பெரும்பாலும் ஏற்கனவே தெரிந்ததுதான், அதை சமயங்களில் நாம் முக்கியத்துவம் கொடுக்காமல் “வேலை”, “பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று தள்ளிப் போடுவதால் பெரிய பணத்தேவைகள் வரும்போது சில சிரமங்களுக்குள் சிக்கிக்கொள்கிறோம். பெரும் பணத்தேவை என்பது பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம், இரண்டு பிள்ளைகளுக்கு பிறகு வீடு போதாமல் வீட்டை பெரிதாக்கி கொள்ள தேவையான ரெனொவேசன் காஸ்ட் , உங்களுடைய ஓய்வு காலத்து பணத்தேவை. இப்படி அடுக்கிகொண்டே போகலாம்.


ஒரு பெற்றோராக நம் பிள்ளைகள் நல்ல படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அதே பிள்ளை எல்லா சப்ஜெக்ட்டிலும் நல்ல மார்க் எடுத்து வந்து நிற்கும்போது நீங்கள் பொருளாதார ரீதியாக ரெடியாக இல்லை என்றால் அதை விட கொடுமை எனக்கு தெரிந்து எதுவும் கிடையாது. இந்த சூழ்நிலையை ஒருமுறை நானே அனுபவித்திருக்கிறேன். பிறகு என்னை மாற்றிக் கொண்டேன். உங்கள் பிள்ளை பள்ளிக்கூடத்தில் படிக்கும் பட்சத்தில் நான் குறிப்பிட்டிருக்கும் இந்த எக்ஸல் ஃபைல் உங்களுக்கு ஒரு உதவியாக இருக்க கூடும். இதில் நான் குறிப்பிட்டிருக்கும் வயது ஒரு உதாரணம்தான் உங்கள் / உங்கள் குடும்ப உறுப்பினர்களின் வயதுடன் இதை பொருத்தி பார்த்து உங்களுக்கு லேசாக பால்பிட்டேசன் இல்லை என்றால் எதற்கும் உப்பு அதிகம் சேர்த்து சாப்பிட பழகிக்கொள்ளுங்கள்.


இதில் சொல்லப்பட்டிருக்கும் வருடங்கள் எதுவும் உலகம் அழியப்போகும், சுனாமி வரும் , பூமியை பெரிய கல் வந்து தாக்கும் என்ற உட்டாலக்கடி வருடங்கள் அல்ல. இதில் குறிப்பிட்டுள்ள குடும்பத்தலைவர் 35 வயது இன்னும் 10 வருடத்துக்குள் அவர் தன்னை மிகப்பெரிய பணத்தேவைகளுக்கு தன்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அவரது மகன் கல்லூரி செல்லும்போது   அவர் தன் வயதில் 45 - 51 வரை ஏறக்குறைய 'சரியான ஏ டி எம் மெசினாக " செயல்பட ரெடியாகி விட வேண்டும். ஒரு சிறுகுறிப்பு., "ஏ டி எம் க்கு உணர்வுகள் இல்லை"...நமக்கு???

51 வயதுக்கும் 55 வயதுக்கும் அவ்வளவு தூரம் இல்லை, இருப்பினும் தன்னுடைய ஓய்வு காலமும் நெருங்குவதை நொறுங்காமல் அவதானிக்க வேண்டும்.

லேசாக பயமாக இருக்கிறதா?..பயந்தவன் சரியாக முடிவெடுத்ததாக சரித்திரம் இல்லை. சவால்கள் எப்படி வேண்டுமானாலும் வரலாம், அதை எதிர் கொள்பவன் தன்னை பெரிதாக நினைத்தால் பிரச்சினைகள் சிறிதாகி விடும்.பிரச்சினையை  பெரிதாக நினைத்தால் நாம் சிறிதாகி விடுவோம். அப்படி என்றால் உங்களைதான் நீங்கள் ரீ-ஃபார்மேட் செய்ய வேண்டும் பிரச்சினைகளை அல்ல.  

மனிதனின் பணத்தேவைகளில்தான் சலனமான மனதில் தவறுகள் செய்ய முற்படுகிறான். எந்த சூழ்நிலையிலும் ஒழுக்கம் தவறாமல் இருப்பதே நமது எதிர்கால மகிழ்ச்சிக்கும் , முன்னேற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.

இந்த சூழ்நிலையில் பணம் போதுமானதாக இல்லை  என்பதற்காக இயற்கையின் விதியையும் , இறைவனின் விதியையும் மீறி செயல்பட்டால் ஒரு வேலை உணவு தந்த திருப்தியை தவிர பெரிதாக ஒன்றும் கிடைத்துவிடாது.

 மீண்டும் தேட ஆரம்பிக்கும் முடிவில்லா பசி- உலக வாழ்க்கை 

என் வாழ்க்கையிலும் ஒரு சோதனை எனக்கு நடந்தது, 21 வருடத்துக்கு முன் 700 சம்பளத்தில் இருக்கும்போது 30,000 [ மலேசிய ரிங்கிட்] கீழே கிடந்த பணத்தை உரியவரிடம் சேர்த்தேன். மிகவும் கஷ்டமான சூழ்நிலை அப்போது. அந்த பணத்தை உரியவரிடம் சேர்த்தற்காக நான் சிலரால் அதிகம் விமர்சிக்கப்பட்டேன், வழக்கமான டயலாக்தான் 'பிழைக்க தெரியாதவன்,- நாமாக எடுக்க கூடாது, கீழே கிடந்ததுதானே" போன்ற வசனங்கள். ஆனால் இன்றுவரை எப்போதும் தூங்கப்போனால் மனதை உறுத்தாமல் இன்றுவரை எனக்கு நிம்மதியான தூக்கம்தான். எனக்கு அறிவுரை வழங்கி விமர்சித்தவர்கள் யாரும் பில்கேட்ஸ் அளவுக்கு உயர்ந்ததாக தெரியவில்லை.  என் வாழ்க்கையில் நடந்ததை ஏன் எழுதுகிறேன் என்றால் யாருக்காவது உதவுமே என்றுதான். சுய தம்பட்டம் அடித்து என் இமேஜை உயர்த்த எனக்கு எப்போதும் அவசியம் இருந்ததில்லை.  

உங்கள் வாழ்க்கையில் திட்டமிடும்போது பற்றாக்குறை இருப்பது சகஜம். அதற்காக அது உங்கள் கன்ட்ரோலில் இல்லை. விதி / சூன்யம் / மனைவி சரியில்லை / பிள்ளைகள் சரியில்லை ராகம் பாட ஆரம்பித்தால்  வாழ்க்கையில் உங்கள் கண் முன்னே வரும் வாய்ப்பைகூட சர்கஸில் கோமாளியை பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருப்பீர்கள். அதற்காக எதுவும் செய்ய மாட்டீர்கள்.

எப்போது பற்றாக்குறை இருக்கிறதோ அன்றிலிருந்து Constructive   ஆக உங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளுங்கள். எப்போது  Destructive மாற்றினீர்களானால் கால ஓட்டத்தில் எல்லாமே எரிச்சலைத்தரும் ரிசல்ட்தான் கிடைக்கும். 

சந்திரனிலும் ,  செவ்வாயிலும் இறங்கியவர்கள் அதில் போய் இறங்கும் வரை அவர்களுக்கு புதியதுதான். இருப்பினும் தன்னால் முடியும் என்று சரியாக திட்டம் தீட்டியே இறங்கினார்கள். இதில் யாரும் 'சும்மா" நின்று கொண்டிருந்தவனை கூட கம்பெனிக்காக அழைத்து கொண்டுபோய் விட்டவர்கள் இல்லை. எனவே திட்டமிடலும் , பாசிட்டிவ் அப்ரோச்சும் இருந்தால் பணத் தேவைகளின் பற்றாக்குறை நம்மை விட்டு  அகலும்.

உங்கள் ஓய்வு காலத்தில் இவ்வளவு தேவை , உங்கள் பிள்ளையின் படிப்புக்கு இவ்வளவு தேவை என்பதை யாரும் சொன்னால் கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள். முடிவை நீங்கள் தாராளமாக எடுக்கலாம். ஆனால் உடனே "கேட்" போட்டு தடுக்காதீர்கள். [Law Of Resistance] இப்படி எதற்கெடுத்தாலும் "கேட்" போட்டு தடுப்பவர்களின் மூளையில் "லேர்னிங்" சர்க்யூட் பழுதாகி கிடக்கும். 

லேர்னிங் சர்க்யூட் பழுதாகி விட்டாலே எதுவும் உள் வாங்கி கொள்ளாது. பிறகு ஒரு 10 வருடம் கழித்தாலும் இன்றைக்கு நடந்த விசயமே அவர்கள் 10 வருடம் சென்றும் சொல்வார்கள் [ உதாரணம்: "ராயப்பேட்டையில் ஆட்டோகாரனுக்கு 5 ருபாய் கொடுத்தால் எக்மோர்லெ விட்டுடுவான்"- "உடுப்பிலே 5  ருபாய்க்கு லன்ச் சாப்டுட்டு" - ஏன் டாக்டர் இந்த மருந்து / ஊசியெல்லாம் 50 ரூபாய்க்குள்ளே வாங்கிடலாமா? ]. 


எனவே திறந்த மனதுடன் கற்றுக் கொள்ள நினைத்தால் நிறைய விசயங்களை கற்றுக்கொள்ளலாம்.

திட்டமிடலில் மிகவும் முக்கியமானது இறைவன் மீதான நம்பிக்கையும் அந்த மாபெரும் ஆட்சியாளனின் வழிகாட்டலுடன் கூடிய கருணையும். 

முன் காலத்தில் மிகப்பெரிய தொழில்களை செய்து நொடித்து போனவர்கள் மீண்டும் அதே நல்ல நிலைக்கு வந்தார்கள். சிலர் அப்படி வர முடியவில்லை. மீண்டும் வெற்றியடைந்தவர்கள் சிலரே என்றாலும் அவர்களிடம்ஒற்றுமையாக காணப்பட்ட ஒரே காரணம். அவர்கள் அனைவரிடமும் இறைவன் மீது நம்பிக்கை இருந்தது. இதை நான்  சொல்லவில்லை.  ZizZiglar   ன்  மேனேஜ்மென்ட் ஆய்வு மையம் சொல்கிறது.

நான் சம்பளத்திற்கு வேலை பார்ப்பவன், எப்படியிருந்தாலும் திட்டம் போட்டெல்லாம் நான் மாற்றங்களை கொண்டு வர முடியாது என நினைக்கிறீர்களா?

முடியும்....  அடுத்த படிக்கட்டில் சந்திப்போம்.

ZAKIR HUSSAIN

படிக்கட்டுகள்... ஏற்றம் - 20 28

ZAKIR HUSSAIN | October 08, 2012 | , , , ,

சேமிப்பின் அவசியம்.

சேமிப்பது நல்லது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனாலும் தெரிந்தும் செயல் படுத்தாமல் போவதற்க்கு ஒரு  டிசிப்ளின் இல்லாத காரணமே தவிர, வசதியில்லை என்பதல்ல.

சேமிப்பின் முதல் விதி:  

வருமானம் - [மைனஸ்] சேமிப்பு > [மீதி] செலவுகள்.

Income – Savings > expenses.

ஆனால் பெரும்பாலானவர்கள் கடைபிடிக்கும் தவறான விதி: வருமானம் [மைனஸ்] - செலவுகள் > [மீதி] = சேமிப்பு.

Income – Expenses > Savings.

பணம் கைக்கு கிடைத்தவுடன் செலவளித்து விட்டு மிச்சம் மீதி இருந்தால் சேமிப்பேன் என்பது நடக்ககூடிய காரியமாக எனக்கு படவில்லை.

தொடர்ந்து சேமிக்காததால் சில சமயங்களில் வாழ்க்கையே வெறுத்துப்போகும். ஏனெனில் வாழ்க்கையின் அடுத்த நிமிடம் அவிழ்க்கப்போகும் மிகப்பெரிய உண்மைகளில் செலவுகளின் அத்யாயங்களுக்கே முதல் இடம். அதற்க்கு பிறகுதான் இயற்கையை ரசிப்பதும், உறவுகளின் கவனிப்பும், உங்களுக்கு பிடித்த அந்த கடற்கரை காற்றும், அடைமழையில் சூடான ஸ்ட்ராங் டீயும்.

Financial Planning ல் சில முக்கியமான விசயங்களுக்கு உங்களிடம் சேமிப்பு இருக்க வேண்டிய அவசியத்தை சொல்கிறார்கள். இது நிச்சயம் உங்களால் முடியக்கூடிய விசயம்தான்இருப்பினும் சென்டிமென்ட், அளவுக்கு அதிகமான ஆசைபோன்ற கற்களில் தடுக்கிவிழுவதும் ,விழாததும் உங்கள் சமத்தை பொறுத்தது.

Emergency Fund :

உங்கள் வருமானத்தில் ஆறுமாத வருமானம் அல்லது உங்களுக்கு ஆகும் செலவில் [ ஒரு மாத செலவு ] ஆறு மடங்கு உங்களிடம் நிச்சயம் பணமாக சேமிப்பில் இருக்க வேண்டும் என்பது முக்கியம். இதன் காரணம் நீங்கள் வேலை பார்க்கும் சூழல் திடீரென நிர்வாக முறைகேடால் உங்கள் வருமானம் பாதிக்கப்படலாம். இல்லாவிட்டால் முதலாளியின் மச்சானுக்கு உங்கள் வேலை எல்லாம் நீங்களே படித்து கொடுத்து விட்டதால் நீங்கள் இன்ஸ்டலேசன் முடிந்த சி.டி மாதிரி ஒரு என்வலப்பில் போட்டு ஒரங்கட்டுவதுபோல் ஓரங்கட்டப்படலாம். அல்லது உங்கள் வீட்டுவிழாவில் கலந்து சிறப்பித்து விட்டு வந்ததால் உங்கள் இருக்கையில் ஒரு யுவதி அமர்ந்து உங்களை ஏதோ கூழ்காய்ச்சி ஊத்துவதற்கு டொனேசன் கேட்க வந்த ஆளை பார்ப்பதுபோல் பார்க்கலாம்.

எது எப்படியோ. உங்கள் வாழ்க்கை ஏறக்குறைய டார்ஜான் மாதிரி. அடுத்த கயிற்றை பிடிக்க தவறினால் கீழே விழுந்து பலத்த அடி படலாம். எனவே இந்த ஆறு மாத சேமிப்பு உங்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி கொள்ள உதவியாக இருக்கும். வருசக்கணக்கில் "சும்மா" உட்கார்ந்து சாப்பிடுபவர்களுக்கு இதுவரை எந்த பொருளாதார நிபுனராலும் எந்த விதியும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது ஒரு தற்காலிகம்தான். இன்னும் 6 மாதம் இருக்கிறது என்று அடுத்த வருமானத்தை தேடாமல் "நானும் ஊருக்கு நல்லது செய்ரேன்" என கிளம்பினால் 5 வது மாத ஆரம்பத்திலேயே நெருக்கமான உறவுகளும் தத்துவமெல்லாம் பேச ஆரம்பிக்கும். அதை நாம் வேறு கேட்டுத்தொலைக்க வேண்டி வரும்.

Emergency Medical Fund


இந்த விசயத்தை எழுத என்னிடம் பலஎபிசோடுக்கு விசயம் இருக்கிறது.

இன்றைய செடன்ட்ரி லைஃப், நம்முடைய அன்றாட வாழ்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி நமது ஆர்கன்கள்பெரும்பாலும் அதன் அதன் முழு வீச்சில் இயங்காமல் போய் முன்பெல்லாம் வரும் வயதானவர்களுக்கான நோய் இப்போது சின்ன வயதில் வந்து விடுகிறது. நோயின் தாக்கம் என்பது வேறு, அதில் உங்கள் சம்பாத்தியத்தில் ஏற்படுத்தும் தாக்கத்திற்கு சரியான தீர்வு மெடிக்கல் இன்சூரன்ஸ். இப்போது இஸ்லாமிக் இன்சூரன்ஸ் [TAKAFUL] வந்து விட்டதால் இதில் கொஞ்சம் அதிகப்படியான ஆட்கள் பயன் அடைய முடியும்.

உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் சேர்த்து தபாரு [பிரிமியம்] கட்டுவதால் இக்கட்டான சூழ்நிலையில்உங்கள் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் காப்பாற்றலாம்.

இது போன்ற மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுக்கமுடியாமல்போகும் சூழ்நிலையில் இருப்பவர்கள் தனது குடும்பத்தில் உழைப்பவர்களை சேர்த்துக் கொண்டு தங்கள் குடும்பத்தினருக்கு என்று ஒரு மெடிக்கல் நிதியை தனியாக நிர்வகித்து வருவது நல்லது. 20 ஆண்கள் உழைக்கும் குடும்பத்தில் உள்ளவர்கள் கூட ஆஸ்பத்திரியின் பெரிய பில்களை கட்ட முடியாமல் போய் ரெஸ்பிரேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் ஒருவரின் இதயம் நிறுத்தப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். காரணம் பணம். 

Retirement Fund:

சமீபத்தில் ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவருக்கு 3 ஆண்பிள்ளைகள். ஒரு மகனுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. 2வது 3 வது மகனும் நல்லபடியாக படிப்பதால் ' உங்கள் வாழ்க்கை இனிமேல் ஈசியாகிவிடும். பசங்க சம்பாதித்தால் அட்லீஸ்ட் நீங்கள் ஒய்வெடுக்கலாம்" என்று சொன்னேன். அதற்கு அந்த நண்பர் சொன்ன பதில் எல்லோருக்கும் பொருந்தும். ' அப்படித்தான் எல்லோரும் நினைத்து வாழ்கிறோம், ஆனால் நடைமுறை வாழ்க்கையில் மகன் சம்பாதிக்க ஆரம்பிக்கும்போதுதான் அவனது கல்யாணம், அவனுக்கென்று வாகனம், வீடு இப்படி பெரும் செலவுகளை மனிதன் சந்திக்கிறான். எனவே நாம் சம்பாதிக்க கூடிய செயல் ஒரு 'தொடர்கதை" அதற்கு முடிவு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் ரிட்டயர்மென்டுக்கு என்று ஏதாவது தொடர் வருமானம் வருகிறமாதிரி ஏற்படுத்திக்கொள்ளாதவர்கள் வாழ்க்கை கொஞ்சம் கஷ்டம்தான். பிள்ளைகள் தருவார்கள் என்ற எதிர்பார்ப்புள்ள வாழ்க்கை எப்போதும் ஒரு மர்ம நிமிடங்கலுடன் கடந்து போகும். இதை எத்தனை பேர் தாங்கி கொள்ள முடியும்" .....இதை அவர் சொன்னவுடன் ஏதோ எனக்குள் செய்தது. கொஞ்சம் நான் "ஹேங்'  ஆனது என்னவோ உண்மை. நாம் காலம் கடந்து சில விசயங்களை யோசிப்பதுடன் , இப்படி அனுபவபூர்வமாக பேசுபவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறதாக நான் உணர்கிறேன்.

இப்போது விற்கும் சொத்து விலைகளால் ஏதும் வாங்க முடியுமா என்று யோசிப்பவர்கள் பல முதலீடு விசயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. இந்தியா போன்ற இடங்களில் ம்யூச்சுவல் ஃபன்ட் நிறைய இருக்கிறது. இவைகளில் முதலீடு செய்வது நல்லது என்றாலும் Syariyah compliance counters இவைகளை செக் செய்வது உங்கள் கடமை, அதோடு Historical return of Fund எப்படியிருக்கிறது என்பதையும் செக் செய்து கொள்ளவும்.

Child Education Fund

இது  1- 5 & 6-10 படிக்கும் மாணவர்கள் உங்களுக்கு பிள்ளைகளாக இருந்தால் அவசியம் கவனம் செலுத்த வேண்டிய விசயம். பிள்ளைகள் படித்து முடித்து நல்ல மதிப்பெண்களுடன் அவர்கள் தயாரான பிறகு பெற்றோர்களான நாம் தயாராக இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்று நானே அனுபவித்திருக்கிறேன். அதே மாதிரி பல பெற்றோர்கள்  பட்ட டென்சனான சூழ்நிலையையயும் நான் பார்த்திருக்கிறேன். இதற்கு நாம் பல காரணம் சொன்னாலும் உங்கள் மகனோ மகளோ 19 வயதில் கல்லூரிக்கு போகப்போவது 19 வருடத்துக்கு முன்னே தெரியும், ஏன் நாம் தயாராகவில்லை?. இந்த விழிப்புணர்வை எனக்கு தந்தது அதிகம் படித்திராத என் சீனியர்.

இப்போது சேமிக்களாம் அப்புறம் சேமிக்கலாம் என்றால் காலமும் கடல் அலையும் நமக்காக காத்திருக்காது. பிள்ளைகள் எங்கே அவ்வளவு படிக்கப்போகிறது என்ற அவநம்பிக்கையிலும் சேமிக்காமல் இருப்பதும் தவறு. ஏனெனில் உங்களின் அவநம்பிக்கையின் தாக்கம் அவனது படிப்பு வரையில் பாதித்திருக்களாம். கடைசியில் உங்கள் நெகடிவ் எனர்ஜியால் உங்கள் வம்சமே பாதிக்கப்படக்கூடும்.

பிள்ளைகளுக்கு பணம் சேர்ப்பதுடன் கொஞ்சம் நம்பிக்கையையும் சேர்த்து வையுங்கள். உங்கள் பிள்ளையின் எதிர்காலக்கனவுகளை அடிக்கடி ஞாபகப்படுத்துங்கள். அதற்காக உங்கள் பிள்ளையை ஓய்வெடுக்க விடாமல் அவனை ஒரு மாடு மாதிரி நடத்துவதையும் தவிர்த்து விடுங்கள். பிள்ளைகள் பெற்றோர்களின் நச்சரிப்பையும் புத்தக மூட்டையையும் சுமக்கும் பொதிகழுதை ஆகாமல் பார்த்துக்கொள்வதும் உங்கள் கடமைதான்.

எதற்கு சேமித்தாலும் அதற்கென்று ஒரு தனி வங்கிகணக்கு இருத்தல் அவசியம். அதில் பணம் சேர்க்க மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். அதில் செக் புக் அல்லது ஏ டி எம் கார்டு இருந்தால் கை அரிக்கும். எனவே அதை கடாசிவிட்டு  சேமிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. நீங்கள் சேமிப்பில் புலி / நரி என்று விளம்பரப்படுத்தி கொண்டிருந்தால் பக்கத்தில் கழுகுகள் பறக்க ஆரம்பித்து விடும்.

இதற்கும் நான் முன்பு சொன்ன  Visualization Technique  உதவும். உங்கள் சேமிப்பு கணக்கில் எவ்வளவு இருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைத்து பாருங்கள். உங்கள் சேமிப்பும் உயரும்.
 
 

சம்பாதிப்பது எல்லோராலும் முடியும். அதை சரியாக காப்பாற்றுவதுதான் சவாலான விசயம். ஊரில் சிலரை பார்த்திருக்கிறேன். என்னிடம் இவ்வளவு பணம் இருக்கிறது, அதை வைத்து என்ன செய்யலாம் என்று வெட்டியாக திரிபவர்களிடம் ஐடியா கேட்பது. அதில் ரிசல்ட் எப்படியிருக்கும் என்று உங்களுக்கே தெரியும்.

சிலருக்கு சொத்து வருமானம் அல்லது பிசினஸ் வருமானம் என்று இருக்கும்  [ கவனிக்க: இவர்கள் மாதசம்பளம் வாங்குபவர்கள் அல்ல] சில சமயங்களில் தான் நினைத்ததை விட அதிக வருமானம் வர வாய்ப்பு இவர்களுக்கு உண்டு. எப்போது அதிக வருமானம் வருகிறதோ. அந்த மாதத்திற்கு தேவையான பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மற்ற அனைத்து உபரிவருமானத்தையும்  சேமிப்பில் போட பழகிக்கொண்டால் பல சமயங்களில் இவர்களுக்கான பொருளாதாரச்சுமை தவிர்க்கப்படலாம்.  அதை விட்டு நல்ல வருமானம் வரும்போது தனது மனசு சொல்லும் செலவுகளை செய்துவிட அவசரப்படுபவர்களை யாராலும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாது.
ஏற்றம் தொடரும்
ZAKIR HUSSAIN

படிக்கட்டுகள்... ஏற்றம் - 16 44

ZAKIR HUSSAIN | July 08, 2012 | , , , , ,

"ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் நிச்சயம் இருப்பாள்"  என்று சொல்லக்கேள்வி. இது ஒரு ஆண் மட்டும் வெற்றி அடைந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. ஒரு குடும்பம் வெற்றியடைய பெண்களின் பங்கு மிக மிக அவசியம். ஒரு குடும்பம் நல்ல பெயர் வாங்கவும் கெட்ட பெயர் வாங்க வைக்கவும் பெண்களால் நிச்சயம் முடியும்.

ஆண்கள் சம்பாதிக்காமல் வீணாக காலத்தை கழித்து அதை பார்த்த பெண்கள் குடும்ப பொறுப்பை சுமந்து கடை வைத்து, துணிமணிகள் விற்று தன் குடும்பத்தை ஒரு நல்ல நிலைக்கு நிறுத்தி இன்று அந்த குடும்பங்களை சார்ந்தவர்கள் சமுதாயத்தில் நல்ல மதிப்புடன் வாழ தன் வாழ்க்கையை தியாகம் செய்த பெண்களையும் நான் பார்த்திருக்கிறேன்.

அதே சமயம் தனக்கு எல்லாம் தெரியும் என்று "அட்டு லாயர்" மாதிரி பேசி குடும்பத்தில் பிரச்சினைகளை உருவாக்கி கடைசியில் எல்லோரும் வெறுப்படைகிற மாதிரி நடந்து கொள்வதும், வீட்டில் கணவன் எல்லா வசதிகள் செய்து கொடுத்தும் அதை முறையாக பயன்படுத்தாமல் கேவலங்களை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்து அந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் தலை குனிய வைத்த பெண்களையும் நான் பார்த்திருக்கிறேன்.

பாராட்டும்படி நடக்கும் பெண்கள் , மன சங்கடத்தை ஏற்படுத்தும் பெண்கள் எல்லா குடும்பத்திலும் இருக்கத்தான் செய்வார்கள். நாம் எதை தேர்ந்தெடுக்கிறோம் என்பதை வைத்தே நமது குடும்பத்தின் பயணம் இருக்கும் என்பது நிச்சயம். 

மற்றவர்கள் பேசுவதை கேட்டுப் பேசாமல் தன் கருத்தும் ,  சொல்லும் முதலிடம் பெற வேண்டும் என்று கத்திப்பேசும் பெண்களிடம்  பேச முயற்சிப்பது கிரிமினல் வேஸ்ட். இது ஆண்களுக்கும் பொருந்தும்.

இந்த நேரத்தில் சொல்ல வேண்டிய விசயம் டெலிவிசனின் ஆதிக்கம்.

அடிமைத்தனத்தில் மிகவும் கொடுமையானது நாம் எதற்கு அடிமையாக இருக்கிறோம் என்பது தெரியாமலே அடிமையாக இருப்பது அல்லது அடிமைத்தனம் பழகிப்போவது. ஒரு வருடத்தில் நீங்கள் டெலிவிசன் முன்னால் உட்கார்ந்து போக்கும் பொழுதை நீங்கள் கணக்கிட்டால்.. உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய காலப்பகுதி அனாவிசயமாக திருப்பி திருப்பி ஒளிபரப்ப பட்ட ஒரே காட்சிகளை  டி வி யில் பார்த்தே கரைந்து போயிருக்கும். இப்படி 'மாத்தி  மாத்தி' ஒளிபரப்பப்படும்   விசயங்கள் உங்களை அடிமைப்படுத்தி விட்டபிறகு நீங்கள் உண்மையான விழிப்புணர்வு பெரும் சூழலில் இந்த சமுதாயம் உங்களை விட்டு கண்ணுக்கு எட்டாத தூரத்தை தாண்டி முன்னேறியிருக்கும்.

நேரமும் உங்களுக்கு கிடைத்திருக்கும் செல்வம்தான் அதை முறையில்லாமல் செலவழித்தால் உங்கள் குடும்பத்தை யார் வந்து வழிநடத்தமுடியும்.

30 வருடத்துக்கு முன் இருந்த பெண்களுக்கும் இப்போது உள்ள பெண்களுக்கும் நடைமுறை என்று பார்த்தால் மிகப்பெரிய சவால் இன்று உள்ள பெண்களுக்குத்தான். பிள்ளைகள் பிறந்தால் அதை படிக்க அனுப்ப பள்ளிக்கூடம் , ஒதுவதற்கு பள்ளி / மதரசா என்று இருந்த காலம் போய், காலையில் பள்ளிக்கூடம் அனுப்புவதிலிருந்து ஹோம் வொர்க், பள்ளியில் ஒதுவதை வீட்டில் ஒத ப்ராக்டிஸ் கொடுப்பதுவரை வீட்டில் உள்ள பெண்களுக்கே முழுப்பொறுப்பு. இதில்  பிள்ளைகளுக்கு என்ன ஊட்டுகிறோம் என்பதில் கவனம் தேவை. வெறும் பாடம் சொல்லிக்கொடுப்பது மட்டுமில்லை வாழ்க்கை. அதன் எதிர்காலத்திட்டமும் சரியாக ஊட்டப்பட வேண்டும். "எனக்கு என்ன தெரியும், நான் என்ன வெளியில் போய் வரும் ஆண்பிள்ளையா.. அதை எல்லாம் தகப்பன் பார்த்துக்கொள்ளட்டும்' என இருந்தால் திசை தெரியாமல் பிள்ளைகளை வளர்க்கும் கொடுமைக்கு ஆளாகி விடுவோம்.

இன்றைய உலகம் போட்டிகள் நிறைந்தது.இன்று உங்கள் பிள்ளை 10 வயதானால் இன்னும் 20 வருடத்தில் [30 வயதில்] எப்படி தயாராக இருக்க வேண்டும் என்பதில் கவனம் தேவை. அந்த பிள்ளையை தயார் படுத்துவது பெண்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருப்பதே உண்மை. 

சின்ன வயதில் பிள்ளைகளுக்கு 'லாட்ஜ் ரூம் பாய்' மாதிரி எல்லாம் செய்து கொடுத்து விட்டு பிள்ளை வளர்ந்த பிறகு "பொறுப்புதான் வரமாட்டேங்குது" என புலம்பி புண்ணியமில்லை.

குடும்பத்துக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் மார்க்க அறிவும் உலக கல்வியும் சரியான விதத்தில் கலந்து தரும் டாக்டர் நீங்கள்தான்.

நம் ஊர் போன்ற இடங்களில் என்னதான் வாய்கிழிய பெண்ணுரிமை, மார்க்கம் எல்லாம் பேசினாலும் பெண்கள் தனது கல்வி , பணத்தேவைகளுக்கு இன்னும் ஆண்களையே சார்ந்து இருக்கிறார்கள். இன்றைக்கு நம் பெண்கள் பல்கலைக்கழகம் வரை படித்து விட்டதால் மட்டும் பணத்தேவைகளுக்கு தன் சொந்த முயற்சியின் வேலை / தொழில் என்று இதுவரை இறங்க முடிவதில்லை.

ஆண்களை பொருத்தவரை தன் மனைவி தனது குடும்பத்தை குழந்தைகளை தான் இல்லாத போதும் சரியாக வழி நடத்த முடியும் என்ற நம்பிக்கை வந்து விட்டாலே அவனால் வேறு எந்த தடங்களையும் எண்ணாமல் நல்லபடியாக சம்பாதிக்க முடியும்.

பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லும் சமுதாயம் ஆண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று பெண்கள் சொன்னால் மட்டும் ஏற்றுக்கொள்வதில்லை.

மெட்டீரியலிஸ்டிக் வாழ்க்கை என்று சொல்லப்படும் "பொருள்களை வாங்கி குவிக்கும்" மனப்பாங்கு என்பது சின்ன பிள்ளைகள் மிட்டாய் கேட்டும் அழும் மனப்பாங்கு மாதிரி.  5 வயது பிள்ளை மிட்டாய்க்கு அழுவது இயற்கை. 25 வயது ஆள் மிட்டாய்க்கு அழுதால் அது மனநோய்.இதை நான் எழுத காரணம் நம் ஊர் பகுதியில் நான் பார்த்த சில பெண்கள் எப்போது பார்த்தாலும் ஏதாவது வாங்கிவர வெளியூர்பயணத்திலேயே இருக்கிறார்கள். [ இவர்களுக்கு அலுத்துபோகாதா என்று யாரும் கேட்ட மாதிரி தெரியவில்லை]

டி வி / மேகசினில் வரும் விளம்பரங்களை பார்த்த பிறகு எடு ஆட்டோவை, எடு காரை உடனே நான் போய் கடையில் இறங்கி அந்த பொருளை வாங்கி வந்து வீட்டில் வைத்தால்தான் மனம் லேசாகும் என அலையும் பெண்கள் வெகு சீக்கிரம் குடும்பத்தை ஒரு வழிக்கு கொண்டு வந்துவிடுவார்கள்.

இன்றைய தேதியில் அத்தியாவிசயமான பொருட்களை வாங்க ஆசைப்படுவதில் தவறில்லை. ஆசைப்படும் எல்லாப்பொருள்களும் அத்தியாவிசயம்தான் என்று வாதிடுவதில்தான் தவறு. பொருள்கள் வாங்க சரியான விதி '"தேவைப்படுவதை வாங்கு, ஆசைப்படுவதை வாங்க யோசி".

சில சமயங்களில் வீட்டில் உள்ள கணவரிடம் சொல்லி வாங்க சொன்ன பொருள்கள் உடனே வீடு வந்து சேராததற்கு அவரை எதிரி மாதிரி பார்க்காதீர்கள். இன்னும் வாழ்க்கையில் ஏற்படும் விவாதங்களுக்கும் கருத்து வேறுபாடுகளும் உங்கள் சந்தோச வாழ்க்கைக்கு வேட்டு வைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  உங்கள் கணவர் அடிப்படையில் நல்லவர்தானே என்ற எண்ணம் உங்களிடம் இருந்தால் பிரச்சினைகள் நீண்டு கொண்டே போகாது.  

மற்றவர்களின் பொருளாதார முன்னேற்றத்தை ஒப்பிட்டு உங்கள் கணவரை குறை சொல்லாதீர்கள். "நீங்களும் முன்னேறமுடியும்" என்ற நம்பிக்கை வார்த்தைகளை அவரின் மனதுக்குள் விதையுங்கள். "உங்களின் முன்னேற்ற பயணத்தில் எப்போதும் உங்களுடன் துணையிருப்பேன்" என்ற உண்மையை உங்கள் கணவரை உணரச்செய்யுங்கள்.

50 வருடத்துக்கு முன் உங்கள் பாட்டி சொன்ன "பால் கறி- இறால் ஆனம்" மட்டும்தான் எனக்கு செய்யத் தெரியும் என்று சமைத்துப்போட்டு வதைக்காதீர்கள்.  டி வி, புத்தகம், இன்டெர்னெட்டில் வரும் சின்ன சின்ன ரெசிப்பிகள் செய்வதன் மூலம் குடும்பத்தில் பெரிய மகிழ்ச்சிகள் காத்திருக்கிறது. [ஏதோ குடு குடுப்பைக்காரன் சொன்ன மாதிரி இல்லே!!].

அலுவல்களை முடித்து வரும் கணவரிடம் வந்து உட்காருமுன் பிரச்சினைகள கொட்டாதீர்கள்.

உங்கள் கணவர், கஷ்டப்படும் மனிதர்களுக்கு உதவி செய்யும்போது நீதமாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டு ஆட்களுக்கு உதவி செய்யும்போது ஹீரோயினாகவும், கணவர் வீட்டு உறவுக்கு உதவி செய்யும்போது பொருளாதார நிபுணர் மாதிரி பேசுவதை தவிர்த்து விடுங்கள்

நோய் பற்றிய விழிப்புணர்வு நம் பெண்களிடம் மிகவும் குறைவு.

அதற்கு காரணம் நோய் - உடற்பயிற்சி இதுவெல்லாம் ஆண்கள் சமாச்சாரம் என்று பெண்கள் நினைப்பதுதான்.  அது தவறு என்பது வேறு விசயம். 

சரியான உடற்பயிற்சிகள் இல்லாமல் ' நான் தான் வீட்டு வேலை பார்க்கிறேனே" என்ற ஒரே பிடிவாதத்தில் இருப்பதால் இப்போதைக்கு நான் எந்த காலத்திலும் பார்த்திறாத அளவு நியூரோ பேசன்ட்களை பார்க்கிறேன். அந்த பெண்களும் நியுராலஜிஸ்ட்களை பார்த்து மருந்து சாப்பிடும்போது அதில் வரும் சைட் எஃபெக்ட் ஆன தூக்க மாத்திரையில்லாமல் தூங்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.  

கலோரி அளவு தெரிந்து செய்யும் உடற்பயிற்சி உங்களை எப்போதும் இளமையாக வைத்திருக்கும் என்பதை பெண்கள் மறந்து விடக்கூடாது.

நீங்கள் சரியாக இருந்தால்தானே குடும்பம் சரியாக இருக்கும்.

ZAKIR HUSSAIN

படிக்கட்டுகள்... ஏற்றம் - 15 28

ZAKIR HUSSAIN | June 23, 2012 | , , , ,

இறைவழிபாடு Vs  பணம் சம்பாதித்தல்

மனிதனின் சறுக்கல் அவன் இந்த உலகத்தில் எதை முக்கியம் என்று நினைக்கிறானோ அதில்தான் பெரும்பாலும் அமைந்திருக்கிறது. ஒரு பாக்டீரியா பேரன் பேத்தியோடு குடியிருக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு ஏன் வயிற்றை இப்படி வலிக்கிறது எனும் ஒரு நோயாளியின் கேள்விபோல்தான் , பிரச்சினைகளை சொந்தமாக தேடி தன் வாழ்க்கையில் பிரச்சினைகளை அதிகமாக்கிவிட்டு பிறகு "எனக்கு ஏன் இறைவன் இப்படி சோதிக்கிறான்" என்று புலம்புவது ஒரு ரகம்.

வாழ்க்கையில் முன்னேறுவது என்பது முக்கியம் என நினைக்கும் சூடு சுரணை  உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு காலம் வரும் அதில் பணம் வசப்படும், வாக்குக்கு மரியாதை இருக்கும் அப்போதுதான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தன்னை சுற்றி ஒரு ஒளிவட்டம் வந்து விட்டதாக கற்பனை செய்து கொண்டு தான் சொல்வதெல்லாம் சரி, தான் செய்வதெல்லாம் சரி என்று ஆட்டம் போட்டால் சறுக்கும் காலம் வந்தால் முதலில் ப்ரூட்டஸ்களை சந்திக்க தயாராக வேண்டியதுதான். அதற்கு பிறகு வளர்த்த கிடா, நெஞ்சில் பாய்ந்துவிட்டது என புலம்பி புண்ணியமில்லை. [ கிடா நெஞ்சில பாயும் அளவுக்கு அவ்வளவு குள்ளமாவா இருக்கீங்கனு யாரும் கேட்டமாதிரி தெரியவில்லை]

இன்றைய நவீன சூழல் மனிதனை தடம்புரளச்செய்யும் எல்லா வசதிகளையும் அவன் கையில் வந்து கொடுத்து விட்டு போயிருக்கிறது.

ஆண்களைப்பொருத்தவரை விபரீத உறவுகளாலும், பண ஆசையில் என்ன செய்கிறோம் என்பதை மறந்த சயன நிலைதான் அவர்களை பாதாளத்துக்கு கொண்டு செல்கிறது. இதை நெறிப்படுத்த எந்த சட்டமும் செய்யாததை இறைஅச்சம் வெற்றிகரமாக செய்யும். இத்தனை நாள் இல்லாத பொருளாதார வளர்ச்சி சமயங்களில் தவறையும் சரி என்று பேசச்சொல்லும். தேவையில்லாத ஹராமான உறவுகளைக்கூட ஞாயப்படுத்த சொல்லும். மார்க்கம் சரியாக கற்றிருந்தால் / தொழுகை ஒழுங்குடன் கடைபிடிக்கப்பட்டிருந்தால் அந்த குடும்பம் மானக்கேடுகளை விட்டு தப்பிக்க முடியும்.

வாழ்க்கையில் ஒரளவு வெற்றியடைந்தவர்கள் தான் இதுவரை சம்பாதித்ததை தக்க வைத்துக் கொள்ள மார்க்கத்துக்கு மீறிய இறைவன் வெறுக்கும் இணைவைத்தல், இறைவன் அல்லாதவர்களை வணங்கவும் முற்படுதல் போன்ற விசயங்களில் இறங்கும்போது அதன் தண்டனைத் தீவிரம் தெரிவதில்லை. பிள்ளைகளை வைத்து பெருமை அடிப்பதுபணம் இருப்பதை வைத்து பெருமையடிக்கும் முன் இரண்டையும் இறைவன் நம்மை சோதிக்கத்தான் கொடுத்திருக்கிறான் எனும் அவன் வேத வாக்கை நினைத்தால் அகந்தைகள் அடங்கும். நாம் வாழும் இந்த நூற்றாண்டில் இந்த பரந்த பூமி எத்தனையோ கோடீஸ்வர்களை தனக்குள் புதைத்து சிதைத்திருக்கிறது. பூமி தன் வயதுக்கு எத்தனையோ கோடி மக்கள் மரணித்ததை தனது பொறுமையுடன் பார்த்திருக்கும்.

நாம் வாழும் காலம் , சம்பாதிப்பது எல்லாம் ஒரு மேகம் மாதிரி மாற்றங்களுக்கு உட்பட்டது. நமக்கு அள்ளித்தருபவன் இறைவன் தான் என்பது சரியாக புரிந்தால் மனது நிச்சயம் சாந்தப்படும். இந்த உலகத்தில் எத்தனையோ நீர் வளத்தை தந்தவன் தாகத்துக்காக ஒரு டம்ளர் தண்ணீர் கிடைக்காமல் மரணிக்கும் சூழ்நிலையை எத்தனையோ மனிதர்களுக்கு கொடுத்திருக்கிறான்.
 
அதே சமயம் பணம் சம்பாதிப்பதை ஏதோ பாவச்செயல் மாதிரி பேசும் முல்லாக்கள் சில இளைஞர்கள் மனதில் தனது ரப்பர் ஸ்டாம்பை ஆழமாக குத்திவிடுவதால் சில இளைஞர்கள் தான் செய்வது தவறு என்று தெரியும்போது தனது மகள் கல்யாண வயதுக்கு வந்துவிடுகிறது. இனிமேல் கிடைத்த குறுகிய காலத்துக்குள் தனது தேவைகளை பார்த்துக்கொள்ள அந்த இளைஞர்கள் அழையும்போது அந்த முல்லாக்கள் எந்த உதவியும் அந்த பாதிக்கப்பட்ட மனிதனுக்கு செய்வதில்லை. ஆரம்பத்திலேயே இந்த முல்லாக்கள் தனது கையாளாகாத தனத்தை மறைக்கத்தான் இப்படி போதிக்கிறார்கள் என்பதை உணர்ந்தால் இவ்வளவு பிரச்சினைகள் இருக்காது. எம்பெருமானார் முஹம்மது நபி [ஸல்] அவர்களின் எளிமையான வாழ்க்கையையும் தனது மகளுக்கு சீதனம் கொடுக்கும்போது இருந்த கஷ்டமான சூழ்நிலையை சொல்லும் அவர்கள் ஒருபோதும் நபி [ஸல்] சம்பாதித்து வசதியாக வாழ்வதை ஒருபோதும் தடை சொன்னதில்லை என்று சொல்வதே இல்லை.

 சிலர் எளிமையாக இருப்பதை போதிக்கிறேன் என்று வறுமையாக இருப்பதற்கு போதனை செய்கிறார்கள். சில பெரியவர்கள் செய்யும் தவறு தனது வாழ்க்கையை அப்படியே கார்பன் காப்பி எடுத்ததுபோல்தான் தன் வீட்டு பிள்ளைகளுக்கும் நடக்கும் என்று தன்னாலேயே கற்பனை செய்துகொண்டு சமயங்களில் பிள்ளைகளின் முன்னேற்றத்துகான முடிவுகளுக்கும் தடையாக இருக்கிறார்கள்.

ஆக சுபிட்சத்தை தருவது இறைவன் தான். முயற்சிகள் தோல்வியடையலாம் முயற்சிக்க தயங்களாமா?. நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் இறைவனிடம் மனமார மன்றாடிகேட்டு ஆரம்பியுங்கள்..அதற்கு பிறகு பாருங்கள் உங்களின் வெற்றிப்பாதையை.

நாம் இறைவனிடம் சரணடைய தயங்குகிறோம். இதுவரை இறைவன் நமக்கு தந்த எத்தனையோ வசதிகளுக்கு நாம் நன்றி சொல்லி விட்டோமா? என் வாழ்க்கையில் மிக கஷ்டமான சூழ்நிலையில் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். நான் என் கஸ்டத்தை அவரிடம் சொல்லி புலம்பிக் கொண்டிருக்கும்போது அவர் கேட்டது ' உன் துஆ வில் இறைவனுக்கு நன்றி சொல்வதை அதிகமாக்கு' என்றார்.  “இறைவனின் ரஹ்மத் உனக்கு நிறைய கிடைக்கும், அவன் அள்ளித் தருவதை உன்னால் கணக்கிட முடியாது என்றார். என் வாழ்க்கையில் அவரின் அறிவுரைக்கு பிறகு மிகப்பெரிய மாற்றமும் சுபிட்சமும் ஏற்பட்டது. எல்லாம் அந்த வல்ல இறைவனின் செயல்.

தொழில்/ வேலை செய்து நல்லபடியாக சம்பாதிப்பவர்கள் இறை வழிபாட்டுக்கான நேரத்தை ஒதுக்குவதில் மெத்தனம் காட்டுவது அல்லது "ரொம்ப பிசி" என்று ஒரு வார்த்தையில் இறை வணக்கத்தை செயல்படுத்த சிரமம் காட்டுவது அவ்வளவு நல்லதல்ல. உங்களுக்கு தரப்பட்டிருக்கும் அனைத்து வசதிகளும் சோதிக்கத்தான் என தெரிந்தால் அதன்மீது இந்த அளவு அடிமைத்தனம் இருக்காது.

இஸ்லாத்தில் வழிபடுதலும் , கீழ்படிதலும் என்ற விசயம் இருக்கிறது. இங்கு கீழ்படிதல் என்பது இறைவனின் கட்டளைக்கு. சிலர் வழிபடுகிறார்கள், ஆனால் கீழ் படிய மறுக்கிறார்கள். நமது மன இச்சைக்கு தகுந்த மாதிரி இறைவனின் கட்டளைகளை மாற்றி அமைக்க நாம் யார்?. சரி இது போன்ற சமயங்களில் குர்ஆன், ஹதீஸ், மார்க்க அறிஞர்கள் என்று நமது சந்தேகத்தை தீர்க்க முடியும். ஆனால் கடைசியில் உள்ள மார்க்க அறிஞர்களை முதன்மை படுத்தி குர்ஆனை கடைசியாக்கி விட்டதால் பல குழப்பங்கள். நாம் இறைவனிடம் சரண் அடையும் நிலையை உருவாக்கி கொண்டால் அவனது ஆட்சியில் நாம் சுபிட்சமாக இருப்போம். நமக்கு தேவைப்பட்டதை கொடுக்கவும் , தேவையற்றதை நம்மிடமிருந்து எடுக்கவும் அவன் ஒருவனே அறிந்தவன்.

இன்றைக்கு நமக்கு வருமானம் குறைவாக இருக்கலாம். ஆனால் அந்த குறைந்த வருமானத்திலும் நிம்மதியை தந்திருந்தால் அதுவே பெரிய விசயம். நான் எழுதியிருப்பதை படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு இறைவன் உங்கள் கண்பார்வையை குறைவின்றி கொடுத்திருக்கிறான், ஒருமுறை உங்கள் கண்களை மூடி படிக்க ஆசைப்பட்டாலே அந்த வல்லோனின் கருணை எவ்வளவு விசாலமானது என்பது தெரியும். எத்தனையோ மக்கள் தங்கள் குடும்பத்திற்கு அன்றாடம் சாப்பாட்டுக்கு கூலி வேலை பார்க்கும் சூழ்நிலையிலிருந்தும் கண் பார்வையற்றவர்களாக இருந்து கஷ்டப்படுகிறார்கள். இறைவன் நம்மை அது போன்ற சோதனைக்கு உட்படுத்தாமல் இருப்பதற்கே நாம் எவ்வளவு நாள் நன்றி செலுத்த வேண்டும்.

வாழ்க்கையில் கிடைக்கும் வெற்றிகள் அனைத்திற்கும் நாம் மட்டும் பொறுப்பல்ல. நம்மை நெறிப்படுத்திய ஆசிரியர்கள், நம்மை கண்டித்த பெற்றோர், தவறு செய்தால் தண்டிக்கப்படுவாய் என்று சொன்ன பெரியவர்கள் எல்லோரும் சேர்ந்து மோல்ட் செய்யப்பட்டுதான் நாம் இப்போது வெற்றிபெற தகுதியுடையவானாகிறோம்.

இவையனைத்தையும் நமக்கு சரியாக தந்து நம்மை காப்பாற்றி வரும் அந்த இறைவனை வழிபடுதல் மிக முக்கியம் என்பதற்கு மறுமொழி இருக்க முடியாது.

பல வருடங்களுக்கு முன் என்னிடம் ஒரு இந்தோனேசிய கூலித்தொழிலாளி சொன்னது

நாளைக்கே நமது மரணம் என்று உன் வணக்கத்தை / நல் அமல்களை செய். இன்னும் நூறு வருடம் வாழப்போவதை போல் உன் பொருளாதாரத்தை உயர்த்த  உழை.

-ZAKIR HUSSAIN

படிக்கட்டுகள்.. ஏற்றம்-13. 40

ZAKIR HUSSAIN | May 14, 2012 | , ,



பொதுவாக ஒருவன் வாழ்க்கையில் வெற்றியடைந்தவன் என்று ஒரு அளவுகோல் இருக்கும்போது அதை அவன் வைத்திருக்கும் 'பணம்' மட்டுமே அளவுகோலாக பயன்படுத்தப்படுகிறது. ஏன் இந்த தவறான அனுகுமுறை என்றால் 'பணம் இருந்தால் எல்லாவற்றையும் வாங்கி விடலாம்' எனும் பொதுவான கருத்துதான்.

ஆனால் அந்த பணம் படைத்தவர்களின் மனதை ஆய்வு செய்யும் திறமை நம்மிடம் இருந்தால் நமது கருத்து சரியா தவறா என தெரிந்துவிடும் அப்படி என்றால் பணம் சம்பாதிப்பது முக்கியமில்லை என்ற இன்னொரு இலவச இணைப்பான முடிவுக்கு வந்து விடக்கூடாது. அது பொறுப்புகளை சுமக்க தயங்குபவர்கள் கண்டுபிடித்த ஃபார்முலா. வாழ்க்கையில் ஒன்றும் சாதிக்காமல் பக்கத்தில் உள்ள தஞ்சாவூர் போய் வந்தால் கூட வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு சாப்பிட ஏதும் வாங்கி வராமல் வீட்டுக்கு வந்து "பணமா முக்கியம்..நான் மட்டும் வசதியானவனாய் இருந்தால் ஏழைகளை படிக்க வைப்பேன், ஊருக்கு உழைப்பேன், அநாதை ஆசிரமம் கட்டுவேன், முதியோர்களை அரவணைப்பேன்' என்று அசோக சக்ரவர்த்திமாதிரி பீத்தும் எந்த நடிகர்களையும் இப்போது கின்டர்கார்டன் படிக்கும் பிள்ளைகள் கூட 'என்னா சீன் போடுரான்யா" என கமென்ட் அடித்துவிடும்.

இப்போது கையில் இருக்கும் 50 ரூபாயில் உன்னால் / உங்களால் என்ன தர்மம் செய்ய முடியும் என்பதை செயலில் காட்ட முடிந்தவர்கள்தான் தொடர்ந்து தர்மம் செய்பவர்களாக இருக்கிறார்கள். தர்மத்துக்கும் மனதுக்கும்தான் சம்பந்தம் இருக்கிறது. ஒரு கோடி கையில் கிடைத்து விட்டால் தர்மம் செய்யும் மனம் வந்துவிடும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

இருப்பினும் மனிதன் ஒரு சில விசயங்களில் மட்டும் வெற்றியடைந்தவனாய் பார்ப்பது "பார்வையில் கோளாறு' . இதை சரி செய்யத்தான் “WHOLE PERSON CONCEPT” என்ற ஒரு விசயம் இருக்கிறது. ஆனால் இதில் ஒரு மனிதன் வெற்றியாளன் தானா இல்லை வெற்றியாளன் மாதிரி முகமூடி அனிந்தவனா என யார் தீர்மானிப்பது.... நீங்கள்தான்.... யாரை?... உங்களை 'மட்டும்'தான்.  மற்றவனை சரி செய்ய அவனுக்கு தெரியும்... முதலில் நாம் நம்மை பார்ப்போம்

WHOLE PERSON CONCEPT


      1.   Health.
உடல் ஆரோக்கியத்தை பேனுவதென்பது வயதான பிறகு உள்ள விசயம் என்ற தவறை இன்னும் இந்த நவீன உலகம் செய்து கொண்டிருக்கிறது.  குதிரைக்கு கண் கட்டிய மாதிரி பணம் மட்டுமே / வேலை மட்டுமே / விசுவாசம் மட்டுமே என ஒடும் வாழ்க்கையில் தடுக்கி விழுந்தபோது தேடும்போது கிடைக்காத செல்வம் 'உடல் நலம்'.

தள்ளிப்போட்டு பார்த்துக்கொள்ள இது ஒன்றும் அரியர்ஸ் அல்ல.  'அரியது"..இறைவன் கொடுத்த வரத்துக்கு சில மரியாதைகள் இருக்கிறது. மரியாதை இல்லாமல் போகும்போது அது மாயமாய்த்தான் போய்விடும்.

உடல் மீது கவனம் செலுத்தாமல் எதிர்காலத்திட்டம் தீட்டுவது அவ்வளவு ஏற்புடையது அல்ல.

உங்கல் உடல் ஆரோக்கியத்துக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறீர்கள்?


நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

         2.   Family
ஒரு மனிதன் வெற்றியடைய ஒடிக்கொண்டிருக்கிறான் என்றால் குடும்ப வாழ்க்கை சரியாக அமைய வேண்டும். குடும்ப வாழ்க்கை சரியாக அமையாமல் ஒரு மனிதன் வெற்றியடைய முயற்ச்சி எடுப்பது என்பது 'தினம் தினம் எதிர்நீச்சல்". இதில் பெண்களின் பங்கு மிக முக்கியம். தோல்விகளில் ஆதரவாகவும், வெற்றியடையும்போது நிதானத்தையும், இறைவனுக்கு நன்றி செலுத்துவதையும் கற்பிக்கும் ஆசானாக இருக்கும் வீட்டுப்பெண்கள் இருக்கும் வரை ஆண்களால் எந்த சவால்களையும் சமாளிக்க முடியும். இப்போதைய கால கட்டத்தில் பொருள்களை தேடி அலையும் இந்த "நவீன பசி"யில் பெண்களிடம் நான் காணும் ஒரு விசயம் கல்யாணம் ஆன பிறகும் தனது தகப்பனின் மகளாக இருக்கும் கதாபாத்திரத்தை விட்டு தனது கணவனின் மனைவியாக வாழும் கதாபாத்திரத்துக்கு தன்னை மாற்றிக்கொள்ள அதிக காலம் எடுத்துக் கொள்கிறார்கள். இது நிச்சயம் மாற வேண்டும். மற்றும் சிலர் கணவனுடன்  ஷாப்பிங் போகும்போது கணவனை ஒரு மொபைல் ஏ.டி.எம் மெசின் மாதிரி நடத்துவதை தவிற்க வேண்டும்.

ஆண்கள் 'சம்பாதிக்கிறேன்" என்ற ஒரே காரணத்துக்காக பெண்களை அடிமைபோல் நடத்திவிட்டு அதற்கு தேவையில்லாமல் ஞானி மாதிரி பேசுவதை தவிர்க்க வேண்டும். கல்யாணம் செய்து பல வருடங்கள் ஆன பிறகு சில ஆண்கள் "வெருமனே" மனைவியை குறை சொல்லிக் கொண்டிருப்பதை பார்க்கும் போது, இத்தனை நாட்கள் அன்பை வளர்க்காமல் எப்படி குறைகாண மட்டும் தெரிந்து கொண்டார்கள் என்பது ஆச்சர்யம். கல்யாணம் செய்த ஆரம்ப காலத்தில் கணவனின் பல முட்டாள் தனங்களையும், பிடிவாதங்களையும், வறுமையையும் தாங்கிக்கொண்ட மனைவியை சில ஆண்கள் வசதி வந்த பிறகு ' அவளுக்கு அவ்வளவு இன்டலக்சுவல் இல்லை" என்று சொல்லும்போது... இப்போ ஒரு ஃபிளாஷ் பேக் போட்டால் தேவலாம் என தோனும்.


உங்கள் குடும்பத்தில் நீங்கள் மதிக்கப்படுமளவுக்கு என்ன செய்து இருக்கிறீர்கள்?


.. நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

          3. Education
அதான் பள்ளிக்கூடம் எல்லாம் போயிட்டுதானே இந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறோம் என சொல்லவேண்டாம். "கல்வி என்பது சர்டிபிகேட்டுக்குள் அடங்கும் சர்ப்பம் அல்ல' என்று எழுதினால் இவன்லாம் கவிதை எழுத ஆரம்பிச்சுட்டான்யா என கமென்ட் எழுதக்கூடும் என்பதால் கல்வி என்பது கருவறை தொடங்கி கல்லரை வரை என்ற அந்த ஓல்டு வார்த்தையை எழுதுகிறேன். நாம் எல்லாம் படித்து முடித்து விட்டோம் என்றால் நாம் 'முடிந்து" விட்டோம் என்று அர்த்தம்.


ஒவ்வொரு நாளும் உங்கள் துறைசார்ந்த விசயங்களை உங்கள் முன்னேற்றம் சார்ந்த விசயங்களை எந்த அளவு படிக்கிறீர்களோ அந்த அளவு முன்னேறலாம். சிலர் வாசிப்பதை தவறாக புரிந்திருக்கிறார்கள். பரபரப்புக்காக எழுதப்படும் 'தொடர் கொலைகள்- பாலியல் குற்றங்கள்" போன்ற விசயங்கள் நீங்கள் ஃபாரன்சிக் , போலீஸ், இன்வஸ்டிகேடிவ் ஜர்னலிசம்' சார்ந்து இருந்தால் பிரயோஜனப்படும்இல்லாவிட்டால் நீங்கள் மேகசினுக்கு கொடுத்த காசு பப்ளிசருக்கு பயன்படும்..அம்புடுதேன்.


நீங்கள் எவ்வளவு நேரம் உங்களை உயர்த்திக்கொள்ளும் கல்வியில் நேரம் செலவளிக்கிறீர்கள்.


நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

         4.   Career.
நீங்கள் தேர்ந்தெடுத்த வேலை , படிப்பு , தொழில் உங்களுக்கு மனதிருப்தியை தருகிறதா இல்லாவிட்டால் எங்கு நாம் தவறு செய்திருக்கிறோம் என்று எப்போதாவது ஒரு அரைமணி நேரம் அதற்காக ஒதுக்கி உட்கார்ந்து யோசித்திருக்கிறீர்களா... எதிலும் செக்கு மாட்டுத்தனமா இருந்து விட்டால் உழவுக்கு பயன்படாமல் போய்விடலாம் எனும் படிக்காத மேதைகள் சொன்னது இப்போதும் என் காதில் விழுகிறது.


நீங்கள் பணம் சம்பாதிக்கும் தொழில் / துறை உங்களை முன்னேற்ற உதவ வேண்டும்.... முன்னேற்றியதா?... முன்னேற்றாவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். 

5.Service [to Society]
உங்களின் தேவைகள் பூர்த்தியாகிவிட்டால் ஒரு வெறுமை நிலை நிச்சயம் உருவாகும். ஒருவன் சரியான மனிதம் கற்றிருந்தால் எல்லைகளை மீறிய அன்பு அவன் மனதுக்குள் குடியிருக்கும். மற்றவர்களின் சோகத்தை கேட்கும்போது அழாத கண் இருந்தும் பயனில்லை. தன்னால் முடிந்தால் செய்தே ஆக வேண்டிய விசயங்கள் நம்மை சுற்றி இருக்கிறது. ரோட்டில் கிடக்கும் கருவேல முட்கிளையை எடுத்துப்போட உடல் தெம்பு இருந்தும் பஞ்சாயத்து போர்டை வையும் சமுதாயத்தால் சமுதாயத்துக்கு பயனில்லை.
 
சேவை செய்பவர்களைப்பற்றி ' அவனைப்பார்... இவனைப்பார்.. எவ்வளவு அள்ளிக் கொடுத்திருக்கிறான். எவ்வளவு சேவை செய்திருக்கிறான் என்று மற்றவனை உதாரணம் காட்ட பிறந்தவர்களா நீங்கள்?. அப்படி உதாரணம் மட்டும் காண்பிப்பவராக இருந்தால் உங்கள் தாய் உங்கள் எதிர்காலத்துக்காக கண்ட கனவுக்கு என்னதான் மதிப்பு?.


இன்று உங்களை சுற்றியுள்ள சமுதாயத்துக்காக என்ன செய்யப்போகிறீர்கள்?


நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

6. Financial
கடனில்லாத வாழ்க்கையும், வரும் வருமானத்தை செலவு செய்யும்போது உங்கள் உள் மனதுக்குள் உறுத்தல் இல்லாத ஒரு மனநிலையும் இருந்து விட்டாலே சரியான ட்ராக்கில் இருக்கிறீர்கள் என்பது என் கருத்து.


மற்றவர்களைப்போல் இல்லையே என்று புலம்பாமல் போன வருடத்துக்கும் இந்த வருடத்துக்கும் உங்களின் வருமானம் எந்த அளவு உயர்ந்திருக்கிறது என்று நீங்களே உங்களுக்கு ஒரு செக்கிங் வைத்துக் கொண்டால் நலம். போட்டி உங்களுடன் தான் இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் மற்றவனின் வாழ்க்கையை நீங்கள் வாழ பார்க்காதீர்கள். அது நிச்சயம் முடியாது.

ஒருக்கால் உங்கள் வருமானம் குறைவாக இருந்தால் அதற்காக என்ன செய்யலாம்?


நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.


7. Spiritual
இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இறைவனின் கருணையில்லாமல் அவனது உதவியில்லாமல் எதுவும் தன்னால் நடந்து விடாது. காலையில் விழித்ததிலிருந்து அந்த ஏக இறைவனிடம் கையேந்திப்பாருங்கள்... அவன் உங்களின் தாயின் அன்பை மிஞ்சியவன். இறைவன் இல்லை என்று சொல்பவர்களையும் தன் அன்பால் வழிநடத்திச் செல்லும் இறைவனை வணங்குவதில் உள்ள சந்தோசம் அவனிடம் பிச்சை கேட்கும் சந்தோசம் எந்த உலக சந்தோசமும் தந்துவிடாது. [ இது பற்றி ஒரு எபிஸோட் எழுத வேண்டும் என்பது என் ஆசை]
 

இன்று உங்களைப்படைத்த கருணைமிகு இறைவனை எத்தனை முறை நினைத்தீர்கள்? அப்படி நினைக்க எது தடையாக உங்களின் அன்றாட வாழ்க்கை "உண்மைநிலை"யை உணராமல் செய்திருக்கிறது. 


நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

மேற்குறிப்பிட்ட விசயங்களான 7ம் வாழ்க்கைக்கு முக்கியம்.இந்த 7 முக்கியமான விசயங்களும் இஸ்லாம் காட்டித்தந்த வழிமுறையில் வாழ்வது மிக மிக எளிதானது. மறுபடியும் சொல்கிறேன் நான் முஸ்லீமாக பிறந்ததனால் இதை எழுதவில்லை. [தயவு செய்து மாற்று மத சகோதரர்கள் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது] . எந்த சூழ்நிலையிலும் தனிமனிதனின் கெளரவம் காக்கப்படும் வாழ்க்கையை இஸ்லாம் சொல்லியிருக்கிறது என்றுதான் சொல்கிறேன். 

இந்த 7 தலைப்புகளும் ஒரு மனிதனுக்கு சரியான முறையில் அமைய / அமைத்துக் கொள்ள வேண்டும். ஏதாவது ஒன்று , இரண்டு மட்டும் கூடுதலாக இருந்து மற்றது குறைவாக இருந்தால் ....மன்னிக்கவும் ...உங்களை உடன் மதிப்பீடு செய்து கொள்வது நல்லது.

முடிவெடுப்பது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதை we will see in next episode.

-ZAKIR HUSSAIN