Showing posts with label பேசும் படம். Show all posts
Showing posts with label பேசும் படம். Show all posts

ஸ்டெடி ரெடி அப்புறம் புடி ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | October 22, 2016 | , , ,

நம்மைச் சுற்றி நிகழ்பவைகளில் உலகில் நிறைய விசயங்கள் மாறினாலும் ஒரு சில விசயங்கள் இன்னும் மாறாமல் அப்படியே இருந்து வருகின்றன அல்லது இயங்குகின்றன ! முன்பெல்லாம் நாங்கள் மல்லிபட்டினம் மனோராவுக்குச் சென்றாலும் அங்கே நின்று அல்லது அந்த கட்டிடக் கலையை போட்டோ எடுப்பவர்கள் மனோராவின் உச்சியை தொடுவது போல் அங்கே நின்று போஸ் கொடுப்பவரின் கையை தூக்கிக் கொண்டு நிற்பதும் அதனைப் படம் எடுப்பவரோ தரையில் உட்கார்ந்தும் உருண்டும் புரண்டும் ஃபோட்டோ  எடுப்பதை காணாமல் வந்ததில்லை.

கடந்த ஆண்டு வேலையாக (பணி நிமித்தம்) மும்பை சென்றபோது கேட்வே ஆஃப் இந்திய சென்று வந்தேன் அங்கே ஒருவர் கையை தூக்கிக் கொண்டு ஓபராய் ஹோட்டலின் உச்சியை தொடுவது போல்  போஸ் கொடுக்க அதை அங்கு இருந்த ஃபோட்டோ கிராபர் ஃபோட்டோ எடுத்ததை பார்த்ததும் நம்மூர் மல்லிபட்டினம் மனோரா மலரும் நினைவுகள் நினைவுக்கு வந்தது. பலரையும் படம் எடுக்கும் இந்த புகைப் படக்காரரை அதாங்க ஃபோட்டோ கிராபரை நான் ஒரு கிளிக் கிளிக்கு கொண்டு வந்தேன்.

புகைப்படம் எடுப்பதும் அதனை ரசனைக் கண் கொண்டு ரசிப்பதும் அவரவர் விருப்பம் அதிலும், சில புகைப் படங்கள் திகைக்க வைக்கும் அழகையும், ஆச்சரியத்தையும், பிரமிப்பையும் ஊட்டும். இன்னும் சிலவகையோ எப்படியெல்லாம் புகைப்படம் எடுக்கக் கூடாது என்று படம் பிடித்து காட்டிவிடும். ஆளுக்கு ஒரு டிஜிட்டல், அல்லது மொபைல் ஃபோன் கிளிக் அங்கே அவரவருக்கு தகுந்த (ரசனைக்கேற்ற) விளக்கமும் விமர்சனமும் பதிக்கப்படுவதை நினைத்து எப்படியெல்லாம் எடுக்க கூடாது என்ற பாடமும் நமக்கு அவ்வப்போது கிடைத்துக் கொண்டே இருக்கிறது.

இப்போ ஏனுங்க அதுக்கு இப்படியொரு பீடிகையுடன் ஒரு சிறு கட்டுரை அதுக்கு ஒரு ஃபோட்டோ என்று கோபப்படமா ஒரு விஷயத்தை கவனிங்க தமிழனாக இருந்தாலும் கன்னடனாக இருந்தாலும் மலையாளியாக இருந்தாலும் பம்பாய் காரனாக இருந்தாலும் நாம எல்லாம் இந்தியன் நம்மிடமோ பல வேற்றுமை இருந்தாலும் ஒரு சில விசயங்களில் ஒற்றுமை இருப்பதைத்தான் அந்தப் படம் (!!!) நமக்கு காட்டுகின்றது.

முக்கிய குறிப்பு : தேசிய நீரோட்டத்தில் இணைந்து விடும் ஐடியாவெல்லாம் இல்லை, ஏதோ தேர்தல் நேரமாக இருப்பதால் எல்லோரும் தேசம், என் தேசம், என்று சொல்லிகிட்டு இருக்காங்க... நாமளும் ஊரைத் தாண்டி இந்தியாவையும் நேசிப்போம்னும் எப்போதான் எழுதுறதாம் !


Sஹமீது

மூன்றாம் கண் சுற்றிய இடங்கள் - பேசும்படம் ! 4

அதிரைநிருபர் பதிப்பகம் | September 22, 2016 | , ,

அதிரைநிருபரின் மூன்றாம் கண் சுற்றிய இடங்களின் காட்சித் தொகுப்புகள்.


திருப்பாற்கடலில் பொன் மேடையிட்டு நான் காத்திருந்தேன் உனக்காக.


நீரை பார்த்தாலே ஆனந்தம் அதுவும்  மழை பெய்தாலே பேரானந்தம்


என்னதான் கம்ப்யூட்டரில் கலர் மிக்ஸ் பண்ணினாலும் இயற்கையின் கலருக்கு ஒரு  தனி அழகுதான்


அருவிகளை கிட்டே இருந்து பார்த்தாலும் அழகுதான் எட்டி இருந்து பார்த்தாலும் அழகுதான்.

ஷாஹமீத்

ஃபோட்டோ ஃபெஸ்டிவல் ! - பேசும் படம் தொடர்கிறது... 27

அதிரைநிருபர் பதிப்பகம் | August 29, 2016 | , , , , ,


நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடரலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது அப்படியே ஊர்பக்கம் நெனப்பை சுற்ற விட்டேன். அட ! நம்ம தலைப்பு ! 'ஃபோட்டோ ஃபெஸ்டிவல்' ன்னு வச்சுடலாமேன்னு முடிவு செய்துட்டேங்க. இங்கே ஆட்டம் பாட்டம் என்று எதுவும் இருக்காது உத்திரவாதம் தருகிறேன். ஆனால் பின்னூட்டம் இருக்கும் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.


எப்போது ஊருக்கு போனாலும் ஒரு பசுமை காட்சியை சுட்டு அதிரை நிருபருக்கு அனுப்பிவிட வேண்டும் என்ற நோக்கில் சுட்டதுதான் இந்த பசுமைக் காட்சியமைப்பு. 


மனிதனின் சாதனைகளில் இதுவும் ஒன்று. பிரமாண்ட மிருகத்தை பிடித்து வந்து பிச்சை எடுக்க பழக்கிக் கொடுத்து மட்டுமல்லாமல் அதற்கு சமய சாயமும் பூசி விட்டார்கள்.
 

MSM 'மின்' ஆதங்கத்தை போக்கவே இந்த சிட்டுக்குருவி போஸ்.


அந்தக்காலத்து டெக்னாலஜி இந்தக்காலம் வரை தாக்கு 'பிடி'க்கின்றது  இன்னும் ஆச்சர்யமே !


இந்த பாம்பன் பாலத்தில் ரயில் செல்வதை பார்த்தால் அண்ணன் NAS அவர்களின் நினைவு வரும் காரணம் இந்த பாலத்தில் ஓடும் இரயிலில் நான்  முதன்  முதலாக அண்ணன் NAS கூட பயணம் செய்தது (ஆனால் இந்த ரயில் அல்ல).


நாங்கள் மீனுக்கு வலை வீசுகின்றோம் எங்களுக்கு சிங்கள கடற்படை வலை வீசுகின்றது (உலகில் இந்திய ராணுவம் நான்காவது இடத்தில் இருக்காமே உண்மையா ?).


மாதத்தில் ஒரு நாள் இது போன்ற இடத்தில் ஒரு பொழுதை தனிமையில் கழிக்க வேண்டும் (மொபைல் போன் இல்லாமல் )


பூனே முன்பெல்லாம் "பசுமை" பள்ளத்தாக்காக இருக்கும். ஆனால், இப்போது வெறும் பள்ளத்தாக்காய் இருக்கிறது.


நான் எந்த கட்சியிலேயும் இல்லீங்க, இது எதார்த்தமா எடுத்த படமுங்கோ !


பலா பழத்தில் "ஈ மொய்ப்பது போல் என்ற பழமொழியை மாற்றி பலா பழத்தில் எறும்பு மொய்ப்பது போல் என்று மாற்றிவிட வேண்டியதுதான் இதுக்கப்புறம். 

Sஹமீது

மலேசியா ...TRULY ASIA 15

ZAKIR HUSSAIN | November 12, 2015 | , , , ,

திரைப்படங்களில், ஊடகங்களில் மலேசியா என்றாலே இரட்டைகோபுரமும், மூக்கு சப்பையான சில சீனப்பெண்மனிகளும், அல்லது கொஞ்சம் பிசியான கோலாலம்பூர் விமான நிலையமும் மட்டுமே காண்பிக்கப்படுகிறது. அதையும் மீறி நிறைய விசயம் இந்த மலேசியாவிலும் இருக்கிறது.


ஒட்டு மொத்த வருடத்தின் அத்தனை வார இறுதியிலும் ... இந்த இடத்துக்கு போகும் வார இறுதியிலும்  எனக்கு பிடித்த இந்த ரிசார்ட். செராத்திங் எனும் இடம். கடற்கரை  காற்றில் அமர்ந்து ரசிக்க... கடற்கரை இந்த இடத்திலிருந்து 30 மீட்டர் தொலைவுதான். இரவின் நிலவு வெளிச்சத்தில் கடற்கரை மணலின் சலவைக்கு போட்ட சுத்தம் மனது நிறைந்து இருக்கும்.


மலேசியா மழையால் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட நாடு.இதை எழுதும்பொது கூட மழை பெய்கிறது. அதனால் அருவிகளுக்கும் பஞ்சம் இல்லை. இது Cameron Highlands ல் இருக்கிறது. [மலைக்கு போகும் வழியில் இருக்கிறது]. நான் இதில் குளிக்காமல் மலைக்கு போனது மிகவும் குறைவு.



சாலையுடன் சேர்ந்த வயல்களும்...சாலை ஒரம் விற்கப்படும் துரியான் பழமும்.... இதையெல்லாம் ரசிக்காமல் சிலர் ஹோட்டல் ரூமில் படுத்து டி.வி யே கதியென்று கிடக்கும்போது பேசாமல் இவர்கள் வீட்டிலேயே இருந்திருக்களாம் எனத்தோன்றும்.


இரவு மார்க்கெட் என்பது மலேசிய வாழ்க்கையில் ஒன்றிப்போனது. ஒவ்வொரு இடங்களிலும் வாரத்துக்கு  ஒருமுறை இந்த மார்க்கெட்.


கொஞ்சமும் பிசியில்லாத ஊரில் அங்குள்ள மக்களுடன் சேர்ந்து டீ குடித்து..கதை பேசி , பள்ளிவாசலுக்கு போய் தொழுகையில் கலந்து பாருங்கள்..உங்கள் வாழ்க்கை எவ்வளவு இனிமையானது என்பது விளங்கும். [ இது தெரியாமல்தான் தினம் ஆண்டவனை குறை சொல்லிக்கொண்டிருக்கிறோம் ..சிலர்/பலர் மட்டும் ]


பினாங்கு..சாலை ஒர டீக்கடை ...நம் முன்னோர்களின் தியாகம் / அழிச்சாட்டியம் சொல்லும் இடம். இதில் "தியாகம்" என்று சொல்லக்காரணம்..வெளிநாட்டுக்கு போய் சம்பாதித்து தனது இளமை எல்லாம் உழைப்புக்கே செலவிட்டவர்கள். "அழிச்சாட்டியம்" என நான் சொல்லக்காரணம்...வெளிநாட்டுக்கு சம்பாதிக்கபோய் குடும்பத்தை சரியாக கவனிக்காதவர்கள்.


நம்புங்கள் ..இது ரயில்வே ஸ்டேசன் தான். பிச்சைக்காரர்களின் ஆதிக்கம் இல்லாத, தண்டவாளங்களில் அசுத்தம் செய்யாத, சாப்பிட்ட மிச்சத்தை நடைபாதையில் எறியாத மக்கள் இருக்கும் ஊரில் இருக்கும் ரயில்வே ஸ்டேசன்.

ZAKIR HUSSAIN

படங்கள் பேசுகிறதா ? 4

அதிரைநிருபர் பதிப்பகம் | October 15, 2015 | , , , ,


மூன்றாம் கண்ணுக்கு முகவுரை மட்டுமல்ல முத்திரையும் தந்த Sஹமீது (காக்கா) அவர்கள் இப்போது பிஸியாக இருக்கிறாங்கன்னு சொல்லிட்டு அப்புறம் ஏன் பச்சைப் பசேல்னு கேட்கத்தோனுமே ? அம்மாவின் ஆதரவாளர்கள் ஏதோ உள்ளே நுழைந்து விட்டார்களோனு கருத்து போடக் கூட எண்ணம் வருமே !?  ஷஃபி அஹ்மது தீட்டிய கேமராச் சித்திரங்கள் சிந்திக்க தூண்டிவிட்டு அடுத்து எங்கே சென்றது என்று கேட்கவும் தோனுமே....!?

எதுக்கு வம்பு என்று உங்க கிட்டேயே கேட்டுடலாமேன்னு தலைப்பிலேயே கேட்டு வைச்சுட்டேன்...!


விரித்து வைத்த பச்சைப் போர்வைக்குள் செல்ல இந்த செம்மண் பாதை மறக்க முடியாத இடம் (நிறைய கேமராக் கலைஞர்களுக்கு).


ஊட்டிக்குச் சென்று இந்த இயற்கை ப்யூட்டியை காட்சிப் படுத்தாமல் வந்தால் கேமராவை கண்டுபிடித்தவன் வருத்தப்படுவான்.


இவர் உலகம் சுற்றும் வாலிபன் அல்ல, ஊட்டியைச் சுற்றும் வயதில் சிறியவன் 


தோட்டக்கலைப் பூங்காவின் ஒரு பகுதி, பூக்களைப் பறிக்காதீர்கள் என்ற போர்டு போட்டவர்கள் அங்கு வரும் பூக்களையும் படங்கள் எடுக்காதீர்கள் என்றும் எழுதிப் போட்டு வைத்திருக்கலாம்...


மலை ஏறச் சென்றோம் மழை ஏறிட்டு வரவேற்கிறது...


வரைந்த படத்தில் தண்ணீர் ஊற்றிக் கலைந்த சாயம் அல்ல... நிஜமான நிழற்படம் மேகங்களின் சுழற்படம்.


மழை விட்டதும், சறுக்கிவிடும் சாலை, கோடுபோட்டு வழிகாட்டுகிறது...


மயக்கும் மலைகள் - அதனை
மறைக்கும் மழை !


சட்டென்று தலைக்கு மேல் போர்வை போர்த்திய கருமேகம்... நண்பகல் பொழுதை இரவாக்கிய அதிசயம் !


மூனாறு சறுக்கும் இடமெல்லம் மனதை மயக்கும் பசுமை அதில் பல்லாங்குழி சைசில் பள்ளங்கள் நெருங்கியதும் பாதாளம் சைஸாக இருந்தது.


எறும்புபோல் தெரியும் இந்த மாடுகளைக் காட்டி ஒருவர் சொன்னார், பக்கத்தில் போகாதீர்கள் அவைகள் காட்டு மாடுகள் என்று ! இங்கிருந்து அதனை காட்டிவிட்டு !


உச்சி வெயில் மணி பண்ணிரெண்டு, இருந்தாலும் குளிர் அப்போதும் கிடு கிடு நடுக்கம் அடித்த காற்றின் வேகம்.


கோடையில் நீர் தேடி ஏங்கும் நிலங்களின் வெதும்பல் எப்படி இருக்கும் என்று பச்சை போர்த்திய மலைகள் சொல்லிக் காட்டுகிறது.


கேமராவுக்கு பின்னால் 'இபு', வுக்கு பின்னால் அபு... கிளிக்கியது யாருன்னு சொன்னால் தான் தெரியுமா ?


அங்கே போகாதீங்க போகாதீங்கன்னு தடுக்கப்பட்டோம் (தலை சுற்றுமாம்)...


இங்கிருந்து போகாதீங்க போகாதீங்கன்னு தடுக்கப்பட்டோம் (மலைகள் சுற்றி இருக்கிறதாம்)

அபூஇப்ராஹீம்

பேறு பெற்ற பெண்மணிகள் - அரஃபா நாள் ஸ்பெஷல் ! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | September 23, 2015 | , , , , ,

மக்களுக்கேற்ற மார்க்கம்

"அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! கபீரா! லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்! வ லில்லாஹில் ஹம்து!"

இப்படி, மக்காவின் 'அரஃபாத்' பெருவெளியில் அனைத்துலகக் காப்பாளன் அல்லாஹ்வைப் பெருமைப் படுத்திப் புகழ்ந்தும் அவனது அருள்வேண்டி அபயக்குரல் எழுப்பியும் ஹஜ்ஜுப் பயணிகள் ஒரே குரலில், ஒரே மொழியில் எழுப்பிய ஓசை, மேலை நாட்டுச் சகோதரி ஒருவரின் இதயத்தை உருகச் செய்தது என்றால், அதன் காரணம் யாது?

"இறைவனின் இறுதித்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தை இது நினைவூட்டுகின்றது, ஹஜ் எனும் புனிதப் பயணத்தின் இறுதியும் உச்ச கட்டமுமாகிய 'அரஃபாத்'தில் அனைவரும் ஒன்று கூடும் இத்தருணத்தை விடப் பொருத்தமான வேறு அனைத்துலகச் சமாதான ஒன்றுகூடல் எங்கேனும் உண்டா ?"

"கருப்பர், வெள்ளையர், மஞ்சள் நிறத்தவர், மாநிறங் கொண்டோர், அரசர்கள், ஏழைகள், பணக்காரர்கள் - அனைவருமே ஒரே உடையில், ஒரே குரலில், ஒரே இறைவனைப் புகழ்ந்து இறைஞ்சும் புனிதக் கூட்டமைப்பன்றோ இது?!?

"மனிதர் அனைவரும் அமைதியை, சமாதானத்தை விரும்புகின்றனர். அது உண்மையில் இங்கல்லவா கிடைக்கின்றது?! இதைவிடப் பொருத்தமான தருணம் வேறு என்ன இருக்கிறது?"

இவைதாம், அப்போது பேறு பெற்ற பெண்மணியின் இதயக் குரல்கள்.




அது 1931ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் அரச பதவி வகிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த செல்வி ஐரீன் ஜேன் வென்டவொர்த் ஃபிட்ஸ்வில்லியம், மதங்களின் ஒப்பீட்டுக் கல்வி (Study of Comparative Religions) பயில்வதற்காக எகிப்துக்குப் பயணமானார்.

அங்கே சென்று படிப்பைத் தொடங்கிய சில நாட்களிலேயே, இஸ்லாம் எனும் உண்மை மார்க்கம் இவரது இதயத்தை ஈர்த்தது. அதே ஆண்டிலேயே முஸ்லிமாக மாறி 'ஆயிஷா' என்ற பெயரைச் சூட்டிக் கொண்டார்!

1935ஆம் ஆண்டு ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றினார் ஆயிஷா, ஹஜ்ஜில் காணப்படும் அனைத்துலக ஒற்றுமை உணர்ச்சியைக் கண்டு வியந்து அடிக்கடி கூறுவார் ஆயிஷா. தன் தங்கை எவலினுக்கு இஸ்லாத்தை பற்றி எடுத்துரைத்து, அவரை இஸ்லாத்தை தழுவச் செய்தார்.

அண்ணல் பெருமானார்(ஸல்) அவர்களின் அழகான அறிவுப் பூர்வமான - துணிவான உண்மை மார்க்கப் பிரச்சாரத்தைப் பற்றி அடிக்கடி வியந்துரைப்பார் ஆயிஷா.

"எனது தாய்நாட்டு மக்களுக்குத் தேவையான அவர்கள் பின்பற்றத் தகுந்த துணிவு, நேர்மை, கழிவிரக்கம், அநீதியிழைத்தோரை அற்புதமாக மன்னிக்கும் தன்மை ஆகிய அனைத்தும் அப்பெருமகனாரிடம் குடிகொண்டிருந்தன. அவர்களிடம் இயல்பாக அமைந்திருந்த துணிவும், வல்ல இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையுமே, அவர்களை வெற்றிக் கொடி நாட்டச் செய்தன எனக் கூறினால், அது மிகையாது.

அந்த இறுதித் திருநபி அவர்கள்தாம் முதன்முதலாக எம் பெண்களின் சமூகத் தகுதியையும் மதிப்பையும் உயர்த்தியவர். இன்று கூடச் சில ஐரோப்பிய நாடுகளில் காணக் கிடைக்காத பெண்ணுரிமையினை 1400 ஆண்டுகளுக்கு முன் பெற்றுத் தந்தவர் இந்த நபியவர்கள்தாம்!

அயர்லாந்தின் அரச குடும்பக் கோட்டையைத் துணிவுடன் திறந்து வந்து, இஸ்லாமிய இன்பச் சோலையில் புகுந்த ஆயிஷா வென்டவொர்த் ஃபிட்ஸ்வில்லியம் பேறு பெற்ற பெண்மணிகளுள் ஒருவர்தானே!
இது ஒரு மீள்பதிவு
அதிரை அஹ்மது
புகைப்படங்கள் : Sஹமீது
ஹஜ் - பேசும் படங்கள்









Sஹமீது

பேசும் படம்.. தொடர்கிறது ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | September 09, 2015 | , , ,

இன்றைய காலகட்டத்தில் ஆளாளுக்கு செல்ஃபி எடுத்து  பேசாத படங்களை எல்லாம்  பேசும் படங்களாக போட்டதும் அதிரைநிருபரின் ஆஸ்தான புகைப்பட கலைகர் அமைதியாய் இருந்து விட்டாரே அவருக்கு சரக்கு தீர்ந்து போய் விட்டதோ என்று  யாரும் எண்ணி விடவேண்டாம் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தியதால் அதிரைநிருபரில் கொஞ்சம் கவனம் செலுத்த முடியாமல் போய் விட்டது இன்ஷா அல்லாஹ்  இனி  இரண்டிலும் கவனமாக கவனம் செலுத்த முயற்சி செய்கின்றேன்.


நாங்களெல்லாம் சின்ன பசங்களா இருந்தப்ப தும்பி பிடிக்க அலையாத இடம் கிடையாது இந்த  காலத்து `தம்பி`களுக்கு அதுகெல்லாம் குடுப்பினை இல்லை 


இது  கிட்டாப் பார்வையா?  அல்லது எட்டப் பார்வையான்னு ? கொஞ்சம் செக் பண்ணி சொல்லுங்க 


கூட்டு குர்பானிக்கு வசமான மாடு 


ஒரு  பூச்சி பல்லு கூட  இல்லை என்ன பேஸ்ட் போட்டு பல் விலக்குதோ ?


ஆங்கிலலேயர்கள்  ஆட்சி காலத்தில் கட்டிய கட்டிடம் சுதந்திர இந்தியாவில் எலும்பு கூடாய் தற்போது நிற்கின்றது (இடம் தனுஷ்கோடி) 


இது என்ன கரசேவகர்களின் கயவாளித்தனமா? இல்லை இல்லை கடல் காற்றின் சீற்றம் (இடம் தனுஷ்கோடி) 


போட்டோ எல்லோரும் எடுத்துவிடலாம் ஆனால் ஆங்கில் பார்த்து போட்டோ எடுப்பது தான் ரொம்ப முக்கியம் 


அறிவியையும் அதன்  நீர் சாரலையும்  ஒருசேர போட்டோ எடுக்கணும் என்ற ஒரு முயற்சியின் விளைவே இந்த போட்டோ 


மூனாரின் முதுகெலும்பே இந்த  ரோடுதாங்க! 

Sஹமீது