Showing posts with label விவாதக் களம். Show all posts
Showing posts with label விவாதக் களம். Show all posts

மாணவப் பருவம் :: பசுமைப் பருவம் ! - விவாதக் களம் 21

அதிரைநிருபர் பதிப்பகம் | February 11, 2012 | , , , , , ,


சமீபத்தில் உலுக்கிய ஓர் சம்பவம் மாணவ சமுதாயத்திற்கும் ஆசிரியர்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளிதான் காரணம் என்று ஒருசாரார், இல்லை பெற்றோரின் வளர்ப்புதான் என்று மற்றொரு சாரார், அப்படியெல்லாம் இல்லை சுற்றுப்புற சூழல், சமுதாயத்தில் புரையோடியிருக்கும் அத்துமீறிய சினிமாக் கலாச்சாரம், தொலைக்காட்சித் தொடர்கள், அலைபேசிகளின் ஆளுமை, இணையம் என்று வேறொரு சாராரும் மாறி மாறி அலசுவதில்தான் தீவிரம் காட்டுகின்றனர்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக அதற்கான தீர்வாக தீர்க்கமாக சிலரும் யோசிக்கத்தான் செய்கின்றனர் அவ்வகையில், நல்ல அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் நாம் பழக்கப்பட்டவர்களாக இருப்பதனால் இந்தப் பதிவை வாசிக்கும் ஒவ்வொருவரும் கடந்த காலங்களில் மாணவப் பருவத்தை கடந்து வந்தவர்கள் அல்லது இன்றைய மாணவமணிகளாக இருக்கலாம்.

பெற்றோர் ஆசிரியர், ஆசிரியர் மாணவர்கள் உறவுகள், மாணவர்களுக்குள்ளேயே நட்பு பாராட்டுவது, மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கான உறவு முறைகள் அன்று எப்படி இருந்தது, இன்று எப்படி இருக்கனும் என்று விவாதிக்கலாம்.

கவனிக்க! இது எந்த தரப்பையும் குற்றம் கண்டெடுத்து குத்திக் காட்டுவதற்கு அல்ல, நம்மை விட நல்ல கருத்துடைய அறிவுடைய சான்றோர் நம்மைச் சுற்றியிருப்பதனால் அவர்களின் கருத்துக்கள் இளம் பெற்றோர்களுக்கும், மாணவாமணிகளுக்கும் பயனளிக்கும் என்ற நன்னோக்கில்தான் இவ்விவாதம்.

தயைகூர்ந்து நடந்துவிட்ட அசம்பாவிதத்தை மீண்டும் இங்கே நினைவு படுத்தி விமர்சிக்காமல், ஆசிரியர் மற்றும் மாணவ சமுதாயத்தின் உறவுமுறைகள் எப்படி இருக்கிறது, அதனை எவ்வாறு பேணுவது, மார்க்கம் காட்டும் வழியில் நம் நடத்தைகள் எவ்வாறு இருக்கனும் என்று நளினமாக எடுத்து வையுங்கள்.

தனிமனித அல்லது பள்ளி நிர்வாகத்தினை குறைகூறும் களமாக இதனைக் கருதாமல், எம்மக்கள் என்றும் சிறந்த மக்களாக இருந்திட முயல்வோமே இன்ஷா அல்லாஹ்...

-அதிரைநிருபர் குழு

அப்பா எனும் மந்திரச் சொல் - விவாதக் களம் 41

அதிரைநிருபர் பதிப்பகம் | February 09, 2012 | , , , ,


"அப்பா" இது ஒரு மந்திரச் சொல் ! தமிழகத்தில் அப்பா, அத்தா என்று தந்தையைத்தான் அழைப்பார்கள். இது ஒரு பக்கமிருக்கட்டும், கடற்கரையோர முஸ்லீம்களின் கலாச்சாரம் மண்வாசனையோடு இருப்பதோடு மட்டுமல்லாது அந்த பினைப்பு எங்கேயும் கிடைக்காத ஒன்று.

தந்தையை "வாப்பா" என்றும் தாய் / தந்தை இவர்களின் தந்தையை "அப்பா" என்றும் அழைப்பது அதிரை மண்ணின் மைந்தர்களின் வழக்கம் இந்த வசீகரச் சொல்தான் மண்வாசனை தேடும் அதிரைச் சொந்தங்களால் அசைபோடப்படும் "அப்பாக்களின் நினைவுகள்"

சரி நாம இப்போ விஷயத்திற்கு வருவோம்...

நாம் எல்லோரும் பேரன்களாக இருந்தவர்கள், இருப்பவர்கள்... என்று தொடரும் இக்காலச் சூழலில் பெரும்பாலோருக்கும் அவர்களின் பால்யவயது காலங்களின் ரோல்மாடலாக, கதாநாயனாக மனதில் பதிந்து விட்ட அற்புதமான மனிதம் போற்றும் அப்பாக்களை நினைத்துப் பார்க்கும்போது சிலிர்க்கவே செய்யும்.

அவ்வகையில், நம் பால்ய வயது காலத்து அப்பாக்கள், அதோடு இன்றைய பால்ய வயதுகாலச் சிறுவர்களின் அப்பாக்களோடு ஒப்பீடு செய்வதல்ல இதன் நோக்கம்.

அன்றை அப்பா அல்லது இன்றைய அப்பா இரண்டு அணிகளாக விவாதிக்கலாம் வாருங்கள்...

கடன் அன்பை முறிக்கும், கடும் சொல் உள்ளைத்தை குத்தும் ஆதலால் கடும் சொற்களோ, தனிமனித தாக்குதலோ இல்லாமல், நல்லதையே நாடி விவாதிக்கலாம்.

வரம்பை மீறும் பேரன்கள் யாராவது விசமம் செய்தால் தூணில் கட்டி வைத்து மிளகாய் பொடி போடப்படும் அதோடு அவர்களை வைப்ரேஷனில் இருக்க வைத்து ஒரு அறையில் வைத்து பூட்டி வைக்கப்படும் என்று அப்பா சொல்லச் சொன்னார்கள்.

-அதிரைநிருபர் குழு

மிகைப்படுத்தும் செய்திச் சேனல்கள் - விவாதக் களம் 22

அதிரைநிருபர் பதிப்பகம் | November 24, 2011 | , , , , , ,


நேற்று காலை சன்-செய்திச் சேனலில் தொடர்ந்து ஒரு செய்தியை மீண்டும் மீண்டும் வீடியோ கிளிப்புடன் காட்சிப்படுத்தி வாசிக்கப்பட்டது - அதுதான் "அதிரையைச் சேர்ந்த சகோதரரின் கைது" செய்தி அந்தச் செய்தியின் காட்சிக்குள்ளே அதன் செய்தியாளர் ஒருவரின் வக்கிரம் மிகைப்படுத்தப்பட்ட செய்தியை ஏதோ புதிய பரபரப்பை ஏற்படுத்துவதுபோல் பிரம்மையை உருவாக்கிக் கொண்டு மக்களுக்கு பீதியை கிளப்ப எத்தனித்திருப்பதை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும்.

அவதூறுக்கு பேர்போன மீடியாவின் பிம்பமாக மாறிவரும் இன்றைய தொலைக்காட்சி செய்திச் சேனல்கள் இம் மாதிரியான ஒருதலைபட்ச வக்கிரப் போக்கு தொடர்வது நம் சமுதாய நலனுக்கு நல்லதல்ல.

சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட நீதிபதியின் புகைப்படத்தினை 15 வினாடிகள் தவறாக காட்டிவிட்டதாக மன்னிப்பும் கேட்டது ஒரு ஆங்கில செய்திச் சேனல், அதற்கு நீதிமன்றமும் அபராதம் நூறு கோடி விதித்தது...

விந்தை என்னவென்றால் கேட்பதற்கு யாருமில்லை என்றும் சாமானியன் ஒருவரின் கைது நடவடிக்கையை பரபரப்புக்காக எதையும் செய்யலாம் என்ற வன்மம் கொண்ட இந்த கேடுகெட்ட மீடியாக்கள் அனைத்தையும் புறக்கனிக்கப்பட வேண்டும். அவர்கள் செய்திடும் இவ்வகையான தரம் தாழ்ந்த தவறினை உணர்த்தி ஊடக தர்மத்தினை நிலைத்திடச் செய்வோம். மனிதநேயம் போற்றுவோம், இந்திய ஒருமைப்பாட்டை மதிப்போம், வாருங்கள் விவாதிக்கலாம்.

தனிமனித சாடல் இன்றி நேர்மையாகவும் நிதானத்துடனும் விவாதிப்போம், நமது கண்டனத்தை இங்கே பதிந்திடுவோம்.

- அதிரைநிருபர் குழு