Showing posts with label LMS. Show all posts
Showing posts with label LMS. Show all posts

சோழ வளநாடு சோறுடைத்து.. [மீள்பதிவுதான் இருந்தாலும் மறுசோறுல...] 1

அதிரைநிருபர் பதிப்பகம் | January 27, 2016 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும்.

"சோறு கண்ட இடமே சொர்க்கம்" என்பது போல் சிலருடைய வாழ்க்கை கழிந்துக் கொண்டிருக்கின்றன. இவர்களின் செயல்களை உரையாடல் முறையில் சிறிய ஆக்கத்தினை பதிவு செய்ய விரும்பியவனாக.



முதல் நபர்: டே மாப்புளே! இன்னைக்கி ரெண்டுஎடத்துல நடுத்தெருவுலையும்,சி.எம்.பி லைன்லயும் கல்யாணம் இருக்குதுடா வெல்லர்மே வந்துரா கல்யாணத்துக்கு போவலாம்.

இரண்டாம் நபர்: நா வரலடா மாப்புளே எனக்கு அழைப்பு இல்லடா.

முதல் நபர்: டே ரெண்டு கல்யாணக்கார மாப்புளயும் நம்ம எல்லோரையும் கூப்புட்டுட்டு போனான்கடா.

இரண்டாம் நபர்: அப்புடியா சரி நா வர்ரேன் என்னைக்குடா வலிமா ?

முதல் நபர்: ஆமாடா இன்னைக்கு வலிமாவுக்கும்,காலை சாப்பாட்டுக்கும் கூப்புட்டாங்கட.

இரண்டாம் நபர்: காலை சாப்பாட்டுக்கு எங்கடா போவலாம்?

முதல் நபர்: எங்க போனாலும் ஒரே சாப்பாடுதாண்டா வலிமாவுக்குதான் அஞ்சிகறி சோத்துக்கு போவனும்டா.

இரண்டாம் நபர்: எந்த தெருவுலடா அஞ்சிகறி சோறு?

முதல் நபர்: சி.எம்.பி லைன்ல பிரியாணியும், நடுத்தெருவுல அஞ்சிகறி சோறுண்டு நினைக்கிறேண்டா. நம்மோ நடுத்தெருவுக்கே போயிடலாம்.

இரண்டாம் நபர்: டே இவனே 12 அரை மணி ஆச்சுடா.தொழுகைக்கு தக்வா பள்ளிக்கு போய்டலாமா?

முதல் நபர்: வனாண்டா மாப்புளே அங்கே கூட்டம் அதிகமா இருக்கும்டா நம்ம முஹல்லாவிலே தொழுதுட்டு பசங்களா வருவாங்க சேர்ந்து பைக்கிலே போய்லாண்டா.

இரண்டாம் நபர்: சரி வா இகாமத்து சொல்லப்போறாங்க தொழுவ போவலாம்.

முதல் நபர்: உவ்வளவு நேரமாச்சுடா தொழுவ முடிய நம்ம பசங்களையும் காணமடா சரி பரவா இல்லை வா வேகமாக நடக்கலாம்.

விருந்து நடக்கும் வீடு நெருங்கியதும்

இரண்டாம் நபர்: அந்தோல ரெண்டுவேறு வராங்க வா ஒரு சஹனுக்கு உட்காந்திடலாம்.

முதல் நபர்: டே சும்மாயிரா கெளடு கெட்டதுலாம் வானாண்டா.நம்ம பசங்க வராங்களாண்டு பார்ரா? 'அ அந்தோ வர்ராங்கடா'.

இரண்டாம் நபர்: டே மச்சா எல்லோரும் எங்கடா போனிய? உங்களையலாம் அங்கே எதிர்பாத்துக்கிட்டு இருந்தோம்டா.

நண்பர்கள்: ஆமாடா மாப்புளே நாங்க எல்லோரும் மெய்ன்ட் ரோட்லே போய் சர்பத்து குடிச்சிட்டு அப்புடியே தக்வா பள்ளியிலே தொழுதுட்டு வர்றோம்.

முதல் நபர்: சரி வாங்கடா உள்ளே போய் காத்தாடிலே உக்காரலாம்.

சஹன் சோறு பரிமாற்றம் நடைபெறும்போது

முதல் நபர்: காக்கா இங்கே தாங்க என்று அவசரமாய்..சோத்தை சாப்பிட்டு முடித்ததும்

இரண்டாம் நபர்: டே மாப்புளே இன்னொரு சஹன் வாங்கலாமா?

நண்பர்கள்: ஆமாடா அந்தோல போற பையன்கிட்ட கேளுடா.

முதல் நபர்: தம்பி தம்பி இன்னொரு சஹன் சாப்பாடு கொண்டுவாமா.

தம்பி: மறு சோரா காக்கா?

முதல் நபர்: இல்லம்மா மறு சஹமா தம்பி.

தம்பி: சாரி காக்கா கூட்டம் நெறையா இருக்குரதுநாளே சாப்பாடு பத்தல
.
நண்பர்கள்: டே மச்சா இவன்கிட்ட கேக்காதே அந்தோ வர்ரா பாரு நம்ம ஆளு அவகிட்ட கேப்போம்டா. அஸ்ஸலாமு அலைக்கும் என்ன தலைவரே கவனிப்பே இல்லை?

தலைவர்: என்ன வேணும் சொல்லுங்க தலைவரே ?

நண்பர்கள்: நல்ல கறியா பார்த்து ஒரு சஹன் கொண்டு வாங்க தலைவரே!

தலைவர்: இந்தாங்க தலைவரே நல்ல சாப்புடுங்க வேற எதுவும் வேலுமா தலைவரே?

நண்பர்கள்: மொதல்ல இத சாபுட்டுகிறோம் தலைவரே.

முதல் நபர்: டே மச்சா சோத்துக்கு கொஞ்சம் உப்பும் கறியும் கொஞ்சம் வேவலடா யாருடா சமைச்சது?

இரண்டாம் நபர்: கண்டிப்பா நெய்னவா இருக்காதுடா.

முதல் நபர்: சரி அதவுடு ராவைக்கி அந்த கல்யாணக்கார மாப்புள சாப்புட கூப்புட்டான்.போவலாம் மறந்துடாம வந்துரு.

விருந்தோம்பல் மானுட இயல்பு அதனை அழகுற நடத்திக் காட்டுவதும் அங்கே நளினமாக நடந்து கொள்வது அன்பை வெளிகாட்டும் நட்பை கூட்டிடும் !

ஊரில் கலரி சாப்பாடு அல்லது கல்யாண அலம்பல் என்று வந்துவிட்டால் இளைய பட்டாளத்தின் செயல்கள் அச்சூழலில் அவர்களுக்கும் நண்பர்களுக்கும் ரசிக்கும்படி என்றிருந்தாலும் மற்றவர்களின் பார்வையில் அங்கே முகம் சுளிக்கவைக்கும் என்பதை மறந்து விடுகின்றனர்..

சிந்திக்கத்தான் வேண்டும் !

லெ.மு.செ.அபுபக்கர்

ஹராம் ஹலால் பேணி ! - காணொளி பாட்டு ! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | October 03, 2012 | , , , , , , ,

ஹலால் – ஆகுமாக்கப் பட்டது, ஹராம் – விலக்கப் பட்டது ! இதனைத் தெரியாத இஸ்லாமிய சகோதரர்கள் அரிதிலும் அரிதே !

மார்க்கப் பிரச்சாரம், புத்தகங்கள், செயல் முறை விளக்கங்கள் என்று ஊடகங்களின் வாயிலாக அனுமதிக்கப் பட்டதையும், அனுமதிக்கப் படாததையும் எடுத்துச் சொல்லப்பட்டு வருவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்தச் சின்னஞ்சிறு பாலகன் தன்னால் இயன்ற முயற்சியாக பாடியிருக்கும் பாடலின் கருத்தோட்டம் கேட்பவர்களை உலுக்கியெடுக்கும் கேள்விகள், சிந்திக்க வைக்க பாய்ச்சும் அம்புகளாக வீரிட்டு எழுகிறது.

கேட்டுத்தான் பாருங்களேன் !

காணொளிப் பாடலை பாடியது : A.முஸ்தகீம் த/பெ. லெ.மு.செ.அபூபக்கர்.


அதிரைநிருபர் குழு

டிசைன்ஸ் - தொழில் முனைவோர் ! தொடர்கிறது... 20

அதிரைநிருபர் பதிப்பகம் | July 27, 2012 | , , ,


அதிரை சகோதரர்களின் தொழில் முனைவோர் என்ற வரிசையில் அதிரைநிருபரில் தொடர் பதிவுகளாக பதிந்து வருகிறோம் அதில் கடந்த பதிவில் அதிரை டிபார்மண்டல் ஸ்டோர்ஸ் பற்றிய தகவல்கள் பதிந்திருந்தோம், இவ்வாறான பதிவுகள் சுயதொழில் முனைவோரை ஊக்கப்படுத்துவதாற்கே அன்றி தனிப்பட்ட விளம்பரமாக அல்ல.

அதிரையில் டிசைன்ஸ் என்ற பல்பொருள் அலங்கார மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்து வரும் நிறுவனம் கடந்த ஒரு வருடமாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது. நண்பர்கள் கூட்டாக இணைந்து ஆரம்பித்த நிறுவனத்தில் பங்குதாரர்களில் ஒருவர் LMS அபூபக்கர், வெளிநாடுகளில் வேலை செய்தவர், கடைசியாக ஜப்பானில் வேலை செய்துவிட்டு தாயகம் திரும்பியதும், பிறகு அதிரையில் டிசைன்ஸ் என்ற ஸ்தாபனத்தை நண்பர்களுடன் இணைந்து நடத்தி வருகிறார்.

அதிரைவாசிகள் இது போன்ற உள்ளூர்காரர்களின் சுயதொழில் முயற்சியினை ஊக்கப்படுத்த வேண்டும். வீடுகளுக்கு தேவையான பொருட்கள் வாங்க பட்டுக்கோட்டை தஞ்சாவூர் சென்னை என்ற அலைச்சலான தேடல்களை சுருக்கிக் கொண்டு அனைத்தும் அதிரையிலேயே கிடைக்கிறது என்பதை அறிய வேண்டும்.



டிசைன்ஸ் ஸ்தாபனத்தின் சிறப்பு அம்சங்கள்:
  • தரமான ஃபேசன் ஜுவல்லரி
  • டிசைனர் சுடிதார் வகைகள்
  • அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புர்கா மற்றும் ஸ்கார்ஃப்
  • இறக்குமதி செய்யப்பட்ட காஸ்மெடிக்ஸ்
  • தரமான லெதர்ஹேண்ட் பேக்குகள்.
  • இறக்குமதி செய்யப்பட்ட பெண்களுகான லெதர் கலனிகள்
  • பிறந்த குழந்தைகளுக்கான அவசியப் பொருட்கள் - JUST BORN BABY GIFT ITEMS.
  • இறக்குமதி செய்யப்பட்ட சாக்லெட் வகைகள், tang powder, oats வகைகள்.
  • அனைத்து விதமான உயர் தரமான பரிசுப்பொருட்கள்.

மற்றும் பல பயனுள்ள வீட்டு பெருட்கள் இங்கு கிடைக்கும், சில்லரையாகவும் மொத்தமாகவும் கிடைக்கும்.


மேலும் விபரங்களுக்கு கீழ் உள்ள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

LMS அபூபக்கர்,
No.50, மெயின் ரோடு 
(இந்தியன் வங்கி அருகில், டாக்டர் ஹனீப் மருத்துவமனை எதிரில்)
அதிராம்பட்டினம் - 614701

அலைபேசி எண்கள்: +91 9944116240 / +91 9566115550
மின்னஞ்சல்: dezignz.adirai@gmail.com

சுய தொழில் செய்து தாய்நாட்டில் சம்பாதிக்க முனையும் இவர்களைப் போன்ற சகோதரர்களை ஊக்கப்படுத்துவதில் முன்னிருப்போம். இன்ஷா அல்லாஹ் !

அதிரைநிருபர் குழு

குடும்ப உறவுகளை உடைத்தெறியும் அரக்கர்கள்.. 20

அதிரைநிருபர் பதிப்பகம் | December 19, 2011 | , , , ,


அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே! 

நம் குடும்ப உறவுகளை உடைத்து நொறுக்க அமெரிக்காவோ, இஸ்ரேலோ தான் படையெடுத்து வந்து அங்கே அணு ஆயுதங்களை வைத்தெல்லாம் நொறுக்கும் அரக்கர்கள் என்று நினைத்து விட வேண்டாம்.

அப்படி என்றால் வேறு யாருதான் என்று குழம்புகிறீர்களா?

ஆணவம், மமதை மற்றும் தான்தோன்றித் தனமான போக்கினால் நம்மிலிருந்தே அணு உலையை விட கொடியதுமான நம் உயிர் உள்ள வரை அழியா நாவு என்னும் ஆயுதத்தைக் கொண்டு படை எடுக்கிறார்கள். 

அப்படியென்றால் அந்த அரக்கர்கள் எங்கெல்லாம் வந்து வேட்டு வைக்கிறார்கள் என்று தெரியுமா ?


1. புது மாப்பிள்ளை பெண் பேசும் நிகழ்வுகளின் போது அங்கே நினைத்த காரியம் கை கூடவில்லை என்ற நிலை வரும்போது.

2. நிர்ணயித்த அல்லது பேரம் பேசிக் கொண்ட வரதட்சணைத் தொகை,  சீர் செட்டுகள் (சீராட்டுகள்) சரியாக வந்து அடையாத போது.

3. 'மின்னல் ஹபீபி'  எனும் பண கொடுக்கல் வாங்கலின் போது.

4. ஒப்படைக்கப்பட்ட அமானிதத்தில் தில்லு முல்லு அல்லது மோசடி செய்யும்போது.

5. பாகப்பிரிவினை நேரத்தில் பங்குதாரர்களின் விஷயத்தில் அநீதியாக, அத்துமீறி அங்கே அநியாமாக நடந்து கொள்ளும் போது.

6. கூட்டுக் குடும்பமாக இருக்கும் அழகான சூழலில் அற்ப விசயத்திற்காகவும் சுயலாபத்திற்காகவும் அல்லது உற்றார் மீது எழுதும் பொறாமையினால் பிரச்சினை உண்டாகும் போது .

7. கணவன் மனைவிக்கிடையே சரியான புரிந்துணர்வுகள் இல்லாத போது.

8. வசதி வாய்ப்பு எனும் தர்பாரில் உள்ளவர்கள் அவைகள் அமையப் பெறாதவர்களை மதிக்காத போது.

9. பெற்றோரை இரக்கமின்றி மிதித்து மனைவியை கிறக்கத்தில் துதிக்கும் போது.

10. இல்லாத ஒன்றை அவதூறாக இட்டுக்கட்டி பழி சுமத்தும் போது.

இப்ப குழப்பங்கள் தீர்ந்து இருக்குமே!

இப்படிப்பட்ட அரக்கர்களிடம் எலும்பற்ற நாவு என்னும் ஆயுதத்தை சுழல விடாமல் அடக்கம் என்னும் கயிற்றால் வரிந்து கட்டுங்கள். 

குடும்ப உறவுகளை பாதுகாத்துக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்.

- லெ.மு.செ.அபுபக்கர்

சுற்றித் திரியும் வாலிபமே ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | September 29, 2011 | , ,

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! நம் அனைவரின் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.

வாலிபமென்பது வயதை முன்னால் வைத்து வழக்காடும் சொல் மட்டுமல்ல ! உங்களின் உள்ளங்களையும் உடல் ஆரோக்கியத்தியத்தையும் மையப்படுத்தி சுழலும் ஒரு சூறாவளி, அது அடிக்கும் திசை எதுவென்று தெரிந்து கொள்ள முடியாத கண நேரத்தில் எல்லாமே முடிந்துவிடும் அங்கே தடம் புரண்டால்.

நம்மில் பெரும்பாலோர் பொருள் ஈட்டுவதற்காக பெரும்பாலும் அயல் நாடுகளுக்கோ அல்லது அயலூர்களுக்கோ சென்று சில வருடங்கள் அல்லது சில மாதங்கள் கழித்து விடுமுறை கிடைக்கும் காலங்கள் ஊருக்கு திரும்பி வருகிறோம். அதற்கான உன்னத நோக்கம் தாய், தந்தை, மனைவி, மக்கள், மற்றும் குடும்பத்தார்களையெல்லாம் கண்டு அவர்களோடு உண்டு பாசமிகு நேசங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் இன்னும் அல்லாஹ் அனுமதித்த செயல்களில் ஈடுபடவுமே. இச்சூநிலையில் நம்மில் பலபேர். தாயகம் வந்தவுடன் நண்பர்களோடு விதவிதமாக சமைத்து உண்டு ஜாலியாக சுற்றவேண்டும். என்ற நோக்கில்தான் தாயகம் வருவதை வாயால் சொல்லாமல் செயலால் நிரூபித்து காட்டுகிறார்கள்.

விடுமுறையில் வந்திருக்கக்கூடிய அந்த நாட்களை எப்படி பயன்படுத்துகிறார்கள்! மனைவி, மக்களோடா? நண்பர்களோடா? நண்பர்களோடு என்றுதான் சொல்லவேண்டும். வீண் பேச்சுக்களிலும், அடுத்தவர்களை பற்றி பேசுவதில் அலாதியான தனி இன்பம் கொண்டவர்களாகவும். பேச்சுலர் உல்லாசப் பயணம் பயணித்து வருவதையும் காணுகிறோம்.

இந்த ஆக்கத்தை படிக்கக்கூடியவர்களே! இவைகள் பொறாமையினால் எழுதப்பட்டவை என்று எண்ணிவிட வேண்டாம். சமுதாயத்தின் மீதுள்ள பொறுப்புணர்வுடன் என் கருத்துக்களை எழுதுகிறேன் என்பதை தயைகூர்ந்து நினைவில் இருத்திக் கொள்ளுங்கள்.

பொன்னான நேரத்தையும் திரும்பி வராத வயதையும் சேர்த்து. அதிக நேரத்தை நண்பர்களோடு கழித்திடும் அன்பர்களே! கொஞ்சம் சிந்தியுங்கள்.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் : "மனிதர்களே! நாம் உங்களை வீணுக்காகவும்  விளையாட்டுக்காகவும் படைக்க வில்லை. மாறாக நீங்கள் என்னை வணங்க வேண்டும். என்பதற்காகவேயன்றி வேறில்லை."

நம் வணக்கத்திற்கு வைத்திருக்கின்ற அளவு கோல், தொழுகையில் அல்லாஹ் அக்பர் என்று தக்பீர் கட்டியதிலிருந்து சலாம் கொடுக்கும் வரைதான் என தவறான கண்ணோட்டத்தில் தொழுது முடித்தவுடன். அவசர அவசரமாக எதையோ சாதிப்பது போல் எழுந்து ஓடுகிறோம். எதற்காக? நண்பர்களோடு ஊராரைப் பற்றி கதைத்து கரைத்து விட்டு வந்ததை மீண்டும் மீட்டெடுப் பதற்காக.

நாம் வாகனத்தை ஓட்டுகிறோம் என்று சொன்னால். மேடு பள்ளம் வளைவுகளை பார்த்து அதற்கு ஏற்றாற்போல்.வாகனத்தை ஓட்டிச் சென்றால்தான் சரியான இலக்கை அடைய முடிகிறது.

மாறாக வாகனத்தை ஓட்டுகிறோம் என்று சொல்லி மேடு பள்ளங்களை பார்க்காமல் நண்பர்களோடு ஜாலியாக கூத்தும் கும்மாளமும் அடித்து வாகனத்தை ஓட்டினோம் என்று சொன்னால் பெரும் விபத்திற்குள்ளாகி சின்னா பின்னமாகி விடுவோம்.

அது போலதான் குடும்பத்தை வழி நடத்திச் செல்வதற்கு நம்மை அல்லாஹ் நல்ல வழிகாட்டியாக ஆக்கி இருக்கின்றான். அதை சரியான முறையில் பயனுல்ல வகையில் இயக்கவில்லை என்றால் பெரும் விபத்துக்குள்ளான நரக படுகுழியில் விழுந்து நாசமாகி விடுவோம். அல்லாஹ் நம் அனைவரையும் காப்பானாக.

இன்று பிள்ளைகள் மீதுள்ள. அளவுக்கு அதிகமான பாசத்தின் காரணமாக.காசு பணத்தையும் கொடுத்தும் அவர்கள் எதை வாங்கி கேட்டு அடம் பிடிக்கிறார்களோ அதை வாங்கி கொடுத்துவிட்டு அழகுபார்ப்பதோடு. பிறகு அழுதும் புலம்புகிறார்கள். 

ஆம்! குறிப்பிட்ட வயதை வந்து அடைந்த மகன் கியர் டூவீலர் வாகனம். வாங்கி கேட்டு அடம் பிடிக்கிறான் என்றவுடன் அவர்களின் மீதுள்ள பாசம் மேலோங்க மனமில்லாமல் வாகனத்தை வாங்கி கொடுக்கிறார்கள் பரிதாபத்திற்குரிய அந்த பெற்றோர்கள்.

அவர்களோ குறிப்பிட்ட நேரங்களில் சக நண்பர்களை சேர்த்துக் கொண்டு ஆகாயத்தில் கழுகு இரைக்காக வட்டம் அடிப்பது போல் முக்கியவீதிகளை  வாகனத்தில் வட்டமிட்டு காதல் வெறி கொண்டு கன்னி பெண்களை குறி வைத்து குடும்ப பெயர்களை கேட்டு நாலு பேர் சிரிக்கும் அளவுக்கு வித்தைகள் காண்பிக்கிறார்கள் விளங்காத வாலிபர்கள் . 

இறைநம்பிக்கை கொண்டவர்களே! மனிதர்களும், கற்களும். எரிபொருளாகக்கூடிய அந்த நரக நெருப்பிலிருந்து உங்களையும் . உங்கள் மனைவி மக்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் மீது,கடும் சீற்றமுடைய வானவர்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். 

நம் வாழ்க்கை ஒரு நீர் குமிழி போன்றது. அதை நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே எந்த நேரத்தில் உடையுமென்று தெரியாதது போலவே. நாம் உலக ஆசையில் மிதந்து கொண்டிருக்கும் போதே நம்மை விட்டு உயிர் பட்டென்று பிடுங்கப்படும்.

ஜன்னத்துல் பிர்தௌஸ் சொர்க்கத்தின் பாதையில் நம் குடும்பங்களோடு சேர்த்து. சீரான வாழ்க்கையெனும் வாகனத்தை கவனமாக ஓட்டிச் செல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் கிருபை செய்தருள்வானாக. ஆமீன் ... !   

- லெ.மு.செ.அபூபக்கர்

இது எங்கள் தாய் நாடு...... 6

அதிரைநிருபர் | September 05, 2011 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும்.


அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே! நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக, ஆமீன் !

இந்திய திருநாட்டில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள்இநதுக்கள். யாவரும் சகோதரத்தோடு பழகி வருகிறோம். இந்த ஒற்றுமையை ஜீரனிக்க முடியாத சில ஜீவராசிகள் முஸ்லிம்களாகிய நம்மை பார்த்து அந்நியர்கள் என்று அறை கூவல் விடும் காவி கறை படிந்த அவர்களின் கூவலுக்கு. சாவு மணி அடிக்கும் விதமாக. 11 வயது மட்டும் நிரம்பப்பெற்ற S.முனவ்வர் என்ற பிஞ்சு உள்ளம் கொண்ட சகோதரரின் .நாட்டின் தேசப்பற்றை தன் இனிய குரலில் .அதனைப் பறைசாற்றும் உணர்வுப் பூர்வமான பாடலை இந்த கானொளி மூலம் கவனமாக கேட்போமா !?


- லெ.மு.செ.அபுபக்கர்

சோழ வளநாடு சோறுடைத்து.. 13

அதிரைநிருபர் பதிப்பகம் | July 13, 2011 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும்.

"சோறு கண்ட இடமே சொர்க்கம்" என்பது போல் சிலருடைய வாழ்க்கை கழிந்துக் கொண்டிருக்கின்றன. இவர்களின் செயல்களை உரையாடல் முறையில் சிறிய ஆக்கத்தினை பதிவு செய்ய விரும்பியவனாக.



முதல் நபர்: டே மாப்புளே! இன்னைக்கி ரெண்டுஎடத்துல நடுத்தெருவுலையும்,சி.எம்.பி லைன்லயும் கல்யாணம் இருக்குதுடா வெல்லர்மே வந்துரா கல்யாணத்துக்கு போவலாம்.

இரண்டாம் நபர்: நா வரலடா மாப்புளே எனக்கு அழைப்பு இல்லடா.
முதல் நபர்: டே ரெண்டு கல்யாணக்கார மாப்புளயும் நம்ம எல்லோரையும் கூப்புட்டுட்டு போனான்கடா.

இரண்டாம் நபர்: அப்புடியா சரி நா வர்ரேன் என்னைக்குடா வலிமா ?
முதல் நபர்: ஆமாடா இன்னைக்கு வலிமாவுக்கும்,காலை சாப்பாட்டுக்கும் கூப்புட்டாங்கட.

இரண்டாம் நபர்: காலை சாப்பாட்டுக்கு எங்கடா போவலாம்?
முதல் நபர்: எங்க போனாலும் ஒரே சாப்பாடுதாண்டா வலிமாவுக்குதான் அஞ்சிகறி சோத்துக்கு போவனும்டா.

இரண்டாம் நபர்: எந்த தெருவுலடா அஞ்சிகறி சோறு?

முதல் நபர்: சி.எம்.பி லைன்ல பிரியாணியும், நடுத்தெருவுல அஞ்சிகறி சோறுண்டு நினைக்கிறேண்டா. நம்மோ நடுத்தெருவுக்கே போயிடலாம்.

இரண்டாம் நபர்: டே இவனே 12 அரை மணி ஆச்சுடா.தொழுகைக்கு தக்வா பள்ளிக்கு போய்டலாமா?

முதல் நபர்: வனாண்டா மாப்புளே அங்கே கூட்டம் அதிகமா இருக்கும்டா நம்ம முஹல்லாவிலே தொழுதுட்டு பசங்களா வருவாங்க சேர்ந்து பைக்கிலே போய்லாண்டா.

இரண்டாம் நபர்: சரி வா இகாமத்து சொல்லப்போறாங்க தொழுவ போவலாம்.

முதல் நபர்: உவ்வளவு நேரமாச்சுடா தொழுவ முடிய நம்ம பசங்களையும் காணமடா சரி பரவா இல்லை வா வேகமாக நடக்கலாம்.

விருந்து நடக்கும் வீடு நெருங்கியதும்

இரண்டாம் நபர்: அந்தோல ரெண்டுவேறு வராங்க வா ஒரு சஹனுக்கு உட்காந்திடலாம்.

முதல் நபர்: டே சும்மாயிரா கெளடு கெட்டதுலாம் வானாண்டா.நம்ம பசங்க வராங்களாண்டு பார்ரா? 'அ அந்தோ வர்ராங்கடா'.

இரண்டாம் நபர்: டே மச்சா எல்லோரும் எங்கடா போனிய? உங்களையலாம் அங்கே எதிர்பாத்துக்கிட்டு இருந்தோம்டா.

நண்பர்கள்: ஆமாடா மாப்புளே நாங்க எல்லோரும் மெய்ன்ட் ரோட்லே போய் சர்பத்து குடிச்சிட்டு அப்புடியே தக்வா பள்ளியிலே தொழுதுட்டு வர்றோம்.

முதல் நபர்: சரி வாங்கடா உள்ளே போய் காத்தாடிலே உக்காரலாம்.

சஹன் சோறு பரிமாற்றம் நடைபெறும்போது

முதல் நபர்: காக்கா இங்கே தாங்க என்று அவசரமாய்..சோத்தை சாப்பிட்டு முடித்ததும்

இரண்டாம் நபர்: டே மாப்புளே இன்னொரு சஹன் வாங்கலாமா?

நண்பர்கள்: ஆமாடா அந்தோல போற பையன்கிட்ட கேளுடா.

முதல் நபர்: தம்பி தம்பி இன்னொரு சஹன் சாப்பாடு கொண்டுவாமா.

தம்பி: மறு சோரா காக்கா?

முதல் நபர்: இல்லம்மா மறு சஹமா தம்பி.

தம்பி: சாரி காக்கா கூட்டம் நெறையா இருக்குரதுநாளே சாப்பாடு பத்தல
.
நண்பர்கள்: டே மச்சா இவன்கிட்ட கேக்காதே அந்தோ வர்ரா பாரு நம்ம ஆளு அவகிட்ட கேப்போம்டா.அஸ்ஸலாமு அலைக்கும் என்ன தலைவரே கவனிப்பே இல்லை?

தலைவர்: என்ன வேணும் சொல்லுங்க தலைவரே ?

நண்பர்கள்: நல்ல கறியா பார்த்து ஒரு சஹன் கொண்டு வாங்க தலைவரே!

தலைவர்: இந்தாங்க தலைவரே நல்ல சாப்புடுங்க வேற எதுவும் வேலுமா தலைவரே?

நண்பர்கள்: மொதல்ல இத சாபுட்டுகிறோம் தலைவரே.

முதல் நபர்: டே மச்சா சோத்துக்கு கொஞ்சம் உப்பும் கறியும் கொஞ்சம் வேவலடா யாருடா சமைச்சது?

இரண்டாம் நபர்: கண்டிப்பா நெய்னவா இருக்காதுடா.

முதல் நபர்: சரி அதவுடு ராவைக்கி அந்த கல்யாணக்கார மாப்புள சாப்புட கூப்புட்டான்.போவலாம் மறந்துடாம வந்துரு.

விருந்தோம்பல் மானுட இயல்பு அதனை அழகுற நடத்திக் காட்டுவதும் அங்கே நளினமாக நடந்து கொள்வது அன்பை வெளிகாட்டும் நட்பை கூட்டிடும் !

ஊரில் கலரி சாப்பாடு அல்லது கல்யாண அலம்பல் என்று வந்துவிட்டால் இளைய பட்டாளத்தின் செயல்கள் அச்சூழலில் அவர்களுக்கும் நண்பர்களுக்கும் ரசிக்கும்படி என்றிருந்தாலும் மற்றவர்களின் பார்வையில் அங்கே முகம் சுளிக்கவைக்கும் என்பதை மறந்து விடுகின்றனர்..

சிந்திக்கத்தான் வேண்டும் !

- லெ.மு.செ.அபுபக்கர்

வீணடிக்கப்படும் பொருளாதாரம் 9

அதிரைநிருபர் பதிப்பகம் | July 04, 2011 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பிற்குரிய சகோதரர்களே!

நாம் கடல் கடந்து, தாய், தந்தை, மனைவி, மக்கள் சொந்த பந்தங்கள் யாவரையும் விட்டுப்பிரிந்து சம்பாதிக்க அயல்நாடுகளுக்குச் சென்று சம்பாதித்து பணம் அனுப்புகிறோம். அந்தப் பணத்தை நம் பெண்கள் என்ன செய்கிறார்கள்? தேவையான அளவுக்குபோக மீதி பணத்தைச்சேமித்து வைக்கிறார்களா? அல்லது பிறர் நம்மைப் பாராட்ட வேண்டும் என்று சின்ன விஷயங்களுக் கெல்லாம் விருந்து கொடுக்கிறார்களா? பணத்தை மட்டுமல்ல நாம் ஆசையோடு வாங்கிக்கொடுக்ககூடிய ஒவ்வொரு பொருளையும் எப்படி பாதுகாக்கிறார்கள்?
பொருளினால் விரயமாகும் பணம்
ஆம். அதிரைப் பட்டினத்தில் எங்கு சென்றாலும் காலை 9.00 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரையிலும் ஈயம், பித்தளைக்கு நடகடலப் பருப்புஎன்ற அறைகூவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களின் சப்தம் கேட்டவுடன் நம் பெண்கள் வீட்டு உள்ளே இருந்து இந்தாங்க, கல்லகாரவரே!என்ற கூப்பாட்டோடு வெளியே வருகிறார்கள். எதற்கு? துருப்பிடித்த இரும்பை அல்லது உடைந்த பிளாஸ்டிக்கை அள்ளிப்போட்டு கடலை வாங்கவா? இல்லையே!

பல ரூபாய் மதிப்புள்ள பிரிட்ஜ், வாஷிங் மிஷின், பீரோ, மற்றும் எலக்ட்ரானிக் பொருள்கள் சிறிய ரிப்பேராகத்தான் இருக்கும். பழுது பார்த்துவிட்டு பல வருடங்கள் உபயோகிக்கக் கூடிய அப்பொருள்களை மனசாட்சி இல்லாமல் அற்ப கொஞ்ச காசுகளுக்கு அள்ளி கொடுத்துவிட்டு புதுசாக வாங்கித்தாருங்கள் என்று கணவனையோ, தகப்பனையோ, சகோதர்னையோ, பிச்சு எடுக்கக்கூடிய அவல நிலை நம் ஊரில் அதிகமாகக்காணப்படுகின்றது. நம்மைப்போன்றும் நமக்கு மேலதிகமாக சம்பாதிக்கக்கூடிய மாற்று மதத்தவரும் செலவு செய்கிறார்கள்; நம்மைப்போன்றா? இல்லை. அவர்கள் பட்ஜெட் போட்டு ஒவ்வொரு மாதமும் செலவு செய்கிறார்கள். நாம் மனைவி மக்களின் பாசங்கள் மேலோங்க அவர்கள் கேட்கக் கூடியவைகளை எல்லாம் வாங்கிக் கொடுத்து பொருளாதாரத்தை வீண் விரயம் செய்து பெருமகிழ்ச்சி அடைகிறோம்
நான் நேரில் பார்த்த ஒரு சம்பவத்தைச் சுட்டிக் காட்டுகிறேன்: 3,500/= ரூபாய் மதிப்புள்ள போர் செட் பைப்பை, எந்தவிதமான டேமேஜ் இல்லாததை, எடை போடுகிறார்கள். நான் அந்த சைக்கிள்காரரிடம் கேட்டேன்: எவ்வளவுக்கு எடுத்தாய்என்று. அவர் சொன்னார், “கிலோ 4 ரூபாய்க்கு எடுத்தேன்”. அந்தப் பைப்புக்கு காசைக் கொடுத்துவிட்டு அவசர அவசரமாக சைக்கிளில் ஏற்றிக்கொண்டு தள்ள முடியாமல் தள்ளிக் கொண்டு ஓடுகிறார்.
அன்பிற்குரிய சகோதரர்களே சிந்தியுங்கள். நீங்கள் வாங்கிக் கொடுக்கக்கூடிய ஒவ்வொரு பொருளையும் கவனியுங்கள்; விசாரியுங்கள். தெரியாதது போலஇருந்து விடாதீர்கள். ஏனென்றால் நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: நாளை மறுமைநாளில் அல்லாஹ்வின் நீதிமன்றத்தில் கேள்வி கணக்குகள் கேட்கப்படும். அவற்றில் ஒன்றுதான் நீ எந்த வழியில் சம்பாதித்தாய்? எந்த வழியில் சம்பாதித்த பொருளைச் செலவு செய்தாய்? சொல். ஒவ்வொரு பைசாவுக்கும் அல்லாஹ் கேள்வி கேட்பானே அப்படிப்பட்ட நாளை பயந்து செலவு செய்யுங்கள். சகோதரர்களே அறியாமல் செய்த பாவத்தை அல்லாஹ் மன்னிப்பதோடு, இனி எஞ்சி இருக்கக்கூடிய காலங்களில் அல்லாஹ் பொருந்திக் கொள்ளக்கூடிய வகையில் பொருள் ஈட்டி செலவு செய்யக் கூடியவர்களாக நம்மை ஆக்குவானாக ஆமீன்!
லெ.மு.செ. முகம்மது அபுபக்கர்