Monday, June 15, 2020

ஆன்லைன் வகுப்பு அலைப்பரைகள் தாங்க முடியல


இந்த பதிவு எந்த ஒரு தனியார் பள்ளியையோ குறை கூறுவதற்காக அல்ல, எதார்த்த நிலையை எடுத்துரைப்பதற்காக மட்டுமே.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் உள்ள தனியார் பள்ளிகளின் ஆன்லைன் வகுப்பு அலைப்பரைகள் தாங்க முடியல..

LKG வகுப்பிற்கும் ஆன்லைன் வகுப்பாம்... என்னா கொடுமை?

சில வீடுகளில் ஒரே ஒரு ANDRIOD மொபைல் போன் மட்டுமே இருக்கும், பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் 2 அல்லது 3 பேர்கள் இருக்கலாம். இச்சூழலில், ஒரே நாளில் 2 அல்லது 3 பேருக்கும் ஆன்லைன் வகுப்புகளாம். இருப்பது ஒரு போன் எப்படி 2 அல்லது 3 மாணக்கர்களும் ஆன்லைன் வகுப்பில் பங்கெடுப்பார்கள்? இதெல்லாம் ஆன்லைன் வகுப்புக்கு அழைப்புவிடுக்கும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு தெரியுமா என்பது தெரியவில்லை..

இது இருக்கட்டும்...

அதிரை போன்ற ஊர்களில் ஏற்கனவே இன்டர்நெட் வேகம் புல்லட் டிரைன் வேகமா?

அதிரையில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படும் என்பது தெரியாதா?

அதிரையில் உள்ள பெரும்பாளான வீடுகளில் பிள்ளைகள் படிப்பதற்கு என்ற சுமூகமான சூழல், ஏற்பாடுகள் உள்ளதா? (குறிப்பாக TABLE, CHAIR).

அநேக மாணாக்கர்களின் தந்தையர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். ஆன்லைன் வகுப்புகளை அந்த 2 அல்லது 3 பிள்ளைகள் கவனிக்கிறார்களா, என்பதை படிப்பறிவில்லாத அதிரை தாய்மார்கள் முறையாக கண்கணிப்பார்கள் என்பது கேள்விக்குறியே.

தற்போதைய ஆசாதாரண சூழலில் எல்லா வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்பு நடத்துவதற்கு, ஏன் தனியார் பள்ளிகள் இவ்வளவு அக்கறை காட்டுகிறார்கள்? என்பது புரியவில்லை.

அனுபவரீதியாக சொல்லுகிறேன்..

கொரோனா தொற்றுநொயின் காரணமாக பள்ளிக்கூடகங்கள் உலகமெங்கும் மூடியிருக்கும் தருணத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தில் பள்ளி வகுப்புகள் ஆன்லைனில் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியானதும், அரசாங்கத்தின் அறிவுரைப்படி, அங்குள்ள தொலைதொடர்பு நிறுவனங்கள் (ETISALAT & DU) இலவசமாக இன்டர்நெட் கொடுத்ததோடு அல்லாமல், பள்ளி மாணவர்களின் வீடுகளில் உள்ள இன்டர்நெட் வேகத்தையும் அதிகரித்து கொடுத்துள்ளார்கள். இப்படி இருந்தும், பிள்ளைகள் ஆன்லைன் வகுப்புகளில் கவனம் செலுத்துகிறார்களா என்ற கண்கானித்த பெற்றோர்களுக்கு ஒவ்வொரு நாளும் அதிக இரத்த அழுத்தம் ஏற்படுகிறது என்பது மறுக்க இயலாத உண்மை.

ஆன்லைன் வகுப்புகள், அரசாங்கம் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களின் உதவி இல்லாமல் முறையாக நிறைவேற்ற குறிப்பாக தமிழ்நாட்டில் சாத்தியமில்லை.

10ம் வகுப்பு & 12ம் வகுப்புகளுக்கு அன்லைன் வகுப்பு என்பதையாவது ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் LKG, UKG, 1,2,3,4,5,6,7,8,9 வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்பு என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள இயலாதவையே..

மொபைல் போன்களை பிள்ளைகளிடம் கொடுக்காதீர்கள, கொடுக்கவே கொடுக்காதீர்கள் என்று ஒவ்வொரு பெற்றோர் சந்திப்புகளிலும் அடிக்கடி மாணாக்கர்களின் பெற்றோர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு, இப்போது ஓவ்வொரு பிள்ளைகளுக்கும் மொபைல் போனை தயவு செய்து கொடுங்கள் என்று அறிவுருத்துவது, எங்கையோ இடிக்கிறதே..

சாத்தியக்கூறுகள், நடைமுறை சிக்கல் இவைகளை வைத்து முடிவு எடுப்பதே நல்ல முடிவாக இருக்கும். ஒரு சில வசதியுள்ளவர்களின் நிலையை வைத்து பொதுவான நிலைபாட்டுக்கு வர வேண்டாம்.

தற்போது இருக்கும் பொருளாதாரச் சூழலில் வீட்டில் இருக்கும் பொருட்களை விற்கக்கூடிய நிலையில் பல குடும்பங்கள் உள்ளன என்பதை கவனத்தில் கொள்ளுமா தனியார் கல்வி நிறுவனங்கள்?

ஆலோசனை: அதிரை FMல் நேரம் குறிப்பிட்டு பள்ளிப்பாடங்கள் நடத்தலாமே..

m.Thajudeen

4 comments:

  1. படிப்பில் படிக்கட்டுகள். இந்த படிக்கட்டுக்கள் ஏற்ற தாழ்வை ஏற்படுத்தும். சமத்துவம் நிலவாது.

    ReplyDelete
  2. //ஆலோசனை: அதிரை FMல் நேரம் குறிப்பிட்டு பள்ளிப்பாடங்கள் நடத்தலாமே..//


    நல்ல ஆலோசனை 

    ReplyDelete

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.