Showing posts with label இபுராஹீம் அன்சாரி. Show all posts
Showing posts with label இபுராஹீம் அன்சாரி. Show all posts

பணத்தை பிணமாக்கிய மோடி. 4

அதிரைநிருபர் பதிப்பகம் | January 14, 2017 | , ,

கடந்த வாரம் புதுச்சேரிக்கு பேருந்தில் பயணித்துக் கொண்டு இருந்த போது, வழக்கம் போல ஜன்னல் ஓரம் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றேன். சீர்காழியைத் தாண்டி ஆனைக்காரன்சத்திரம் என்கிற ஊர் வந்த போது காலை மணி ஏழரை. அந்த ஊரில் நெடுஞ்சாலையோரம் இந்தியன் வங்கி அமைந்து இருக்கிறது. நாங்கள் பயணித்த பேருந்துக்கு பாதை கிடைக்காத விதத்தில் சாலையை ஆக்கிரமித்து, அந்த இளம் காலை நேரத்திலேயே வங்கியின் வாசலில் ஆண்களும் பெண்களுமாக – அனைவருமே தோற்றத்தில் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அடங்கிய குறைந்த பட்சம் இருநூறு முதல் முன்னூறு பேர்கள் வரிசையில் நின்று கொண்டு இருந்தார்கள். பல ஊர்களிலும் அண்மைக்காலமாக அன்றாடம் நாம் காணும் காட்சிதான் இது. நாமும் நேற்றுவரை இவ்வாறு நின்றுவிட்டுத் தான் இன்று பயணிக்கிறோம். 

பேருந்து ஓட்டுனர் தொடர்ந்து ஒலி எழுப்பிக் கொண்டே இருந்தார். சாலையை அடைத்துக் கொண்டிருந்த ஏக்கம் நிறைந்த மக்களின் கூட்டம் சற்று ஒதுங்கி வழிவிட்டது. பயணம் தொடர்ந்தது. பேருந்து கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் மீது பயணிக்கத் தொடங்கியது. அந்த நேரம் பேருந்தில் ஒலித்த இந்த பழைய பாடல் வரிகள் , நமது காதுகளில் நுழைந்து, இதயம் புகுந்து , இன்றைய நாட்டின் நிலையின் உயிரில் கலந்த உறவானது. 


பாடல்வரிகள் இவைதான். குலேபகாவலி என்ற பழைய திரைப்படத்தில் வருவது 

“ சொக்காப் போட்ட நவாபு 
செல்லாது உங்க ஜவாபு 
நிக்காஹ் புருஷன் போலே வந்து 
ஏமாந்தும் என்ன வீராப்பு? “ 

மனம் ஏனோ அந்தப் பாடல்வரிகளை வைத்து, இன்றைய நாட்டின் நிலையை ஒப்பிட, தனது மனக்கதவை மெல்லத் திறந்து அந்த பாடல் வரிகளுக்கு பதவுரை எழுதியது. 

பாடல் வரிகளின் பதவுரை இதுவே. 

சொக்காப் போட்ட நவாபு = பத்து இலட்ச ரூபாய் மதிப்புக்கு கோட்டு சூட்டு போட்ட பிரதமர் மோடி என்கிற நவாப்பே! 

செல்லாது உங்க ஜவாப்பு = நீங்கள் இப்படி மக்களை கஷ்டப்படுத்திவிட்டு அளக்கிற அளப்பெல்லாம் செல்லுபடியாகும் காலம் மலையேறிவிட்டது. 

நிக்காஹ் புருஷன் போல வந்து = கறுப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்று பெரிய பந்தாவோடு வந்து 

ஏமாந்தும் என்ன வீராப்பு? = சொன்னதை செய்ய முடியாமல் தோல்வியையும் ஒப்புக் கொள்ளாமல் வாய்ச்சவடால் பேசிக் கொண்டு பாய் அவுர் பெஹ்னோ என்று அளந்து விடுவதில் எதற்கு இந்த வெட்டி பந்தா? 

என்றே மனது இன்றைய நாட்டின் நிலையை ஒப்பிட்டது. ஏன்? 

நமக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ ஏழரை என்பதை சனியன் என்றும் அந்த சனியனுக்கு அடுத்தவீட்டில் இருக்கும் எட்டை இராசி இல்லாத எண் என்றும் கூறுவார்கள். 

கடந்த நவம்பர் மாதம் எட்டாம் தேதி அதே போல இந்த நாட்டு மக்களின் தலையில் ஒரு இடியாக இறங்கியது. இடியை இறக்கியவர் வளர்ச்சியின் நாயகன் என்று வக்கற்றவர்களால் வாய்கிழிய புகழப்படும் நரேந்திர மோடியாவார் . 

“பொருளாதார அவசர நிலை “ என்று பொருளாதார மேதைகளால் வர்ணிக்கப்படும் செல்லாத நோட்டுக்கள் பற்றிய அறிவிப்பை அதாவது நவம்பர் 8 நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பித்துக்குளி பிரதமரால் அறிவிக்கப்பட்டது. ஜாக்கிசானுடைய ஒரே அடியில் எதிராளி வீழ்வது போல் 14 அல்லது 15 லட்சம் கோடி ரூபாய் , அதாவது பண புழக்கத்தில் இருந்த செலவாணியில் 86 சதவீதம் பயனற்றது ஆகிப் போனது. மக்கள்       பதைபதைத்தனர். பிரதமரின் இந்தச் செயல் மற்றும் அறிவிப்பு இயங்கிக் கொண்டு இருக்கும் மனித உடலில் இருந்து 85 சதவீத இரத்தத்தை உறிஞ்சி எடுத்துவிட்டு ஓடு பார்க்கலாம் என்று சொன்ன உணர்வைத்தான் காட்டியது. 

ஆசைகாட்டி மோசம் செய்வதில் ஆஸ்கார் அவார்டு வாங்கத் தகுதி பெற்ற பிரதமர் தனது வரலாற்றுச்சிறப்பு மிக்க இந்த பொருளாதார முடிவுக்கு நான்கு நோக்கங்களைக் குறிப்பிட்டார். அந்த நோக்கங்களை நோக்கிய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தாக்குதல்     ( Surgical Strike ) என்றும் தம்பட்டமும் அடித்துக் கொண்டார். 

கருப்புப்பணம் ஒழிப்பு 
கள்ளப்பணம் அகற்றல் 
தீவிரவாதம் ஒழித்தல்
ஊழலை ஒழித்தல் 

ஆகிய நான்கும்தான் மோடி அவர்கள் அறிவித்த தொலைகாட்சி அறிவிப்பில் ஆதியில் சொல்லப்பட்ட காரணங்கள். அத்துடன் வங்கிகள் இரண்டு நாட்கள் இயங்காது என்றும் பிறகு சனி , ஞாயிறு உட்பட வேலை செய்து மக்களின் தேவைகளுக்கு பணியாற்றும். மக்கள் தங்களிடம் இருக்கும் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்ட நோட்டுகளை தங்களின் கணக்கிலும் போடலாம்; மாற்றியும் கொள்ளலாம். இரண்டு மூன்று தினங்களில் நாடெங்கும் ஏடிஎம்கள் இயங்கத் தொடங்கும். புதிதாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வரும் என்றெல்லாம் புருடா விட்டார். மக்களும் நம்பினார்கள். பலர் இந்த நடவடிக்கையை வரவேற்றார்கள். அரசியல் கட்சித் தலைவர்களும் நல்ல தொடக்கம் என்று தொடக்கத்தில் வரவேற்றார்கள். கழுத்தறுருக்கும் கத்தியை பிரதமர் மறைத்து வைத்திருந்தது அப்போது தெரியவில்லை. 

அந்தக் காலங்களில் கோயில் திருவிழாக்கள் போன்றவற்றில் நாடகங்கள் போடுவார்கள். நாடகத்தின் தொடக்கத்தில் ஒரு கோமாளி வந்து இப்படிப் பாட்டுப் பாடியே நாடகத்தைத் தொடங்கிவைப்பார். “ நாட்டுக்கு சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தேனய்யா! ஆட்டமாடி, பாட்டுப்பாடி ஆனந்தம் அள்ளித்தர வந்தேனய்யா” என்றுதான் கோமாளிப் பாட்டுடன் நாடகம் தொடங்கும். செல்லாத நோட்டு அறிவிப்பு என்கிற இந்த நாடகமும் இப்படித்தான் நாட்டுக்கு சேவை செய்ய என்று பிரதமரால் பாட்டுப் பாடி தொடங்கி வைக்கப்பட்டது. 

ஆனால் மக்களின் துயரங்களுக்கு தூபம் போட்ட திட்டம் இது என்பதை உணர ஆரம்பித்த நேரத்தில் நாடு முழுதும் அனைத்துக் கட்சிகளும் தங்களது எதிர்ப்பை காட்டத் தொடங்கின. பாராளுமன்றத்தின் இரு அவைகளும் எல்லா நாட்களும் முடங்கின. நாட்டு மக்கள் பிச்சைக்காரர்கள் போல் நடத்தப்பட்டார்கள். வங்கிகளின் வாசல்களில் விடியற்காலையிலேயே கூட்டம் வரிசையில் நிற்கத் தொடங்கியது. கூட்ட நெரிசலில் மற்றும் மன உளைச்சலில் சிக்கி ஏறக்குறைய நூற்றுக்கும் மேலானோர் தங்களது உயிரை வங்கிகளின் உள்ளேயும் வெளியேயும் விட்டனர். 

நாட்டின் நாடித்துடிப்பை அறிய இயலாத பிரதமர் நடிப்பில் நவரச நாயகனாகி, செல்லாத நோட்டு அறிவிப்பு வெளியான அடுத்த நாள் கோவா மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நடிப்பின் உச்சத்துக்கே போனார். அவரது கண்களில் கண்ணீர் கசிந்தது என்றால் நாம் உணர்ந்துகொள்ளலாம். அவரது குரல் தழுதழுத்தது என்றால் நாம் அறிந்து கொள்ளலாம். குரல் தழுதழுக்க கண்ணீர் வழிந்தோட, நாட்டுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். தான் எடுத்து இருக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க பொருளாதார நடவடிக்கையின் பலன்கள் மக்களுக்கு நடைமுறையில் சென்றடைய ஐம்பது நாட்கள் அவகாசம் தேவை என்று முழங்கினார். 

அதையும் விட ஒரு படி மேலே சென்று ஐம்பது நாட்களுக்குள் இப்போது ஏற்பட்டுள்ள பிரச்னைகள் யாவும் தீராவிட்டால் என்னை உயிரோடு தீ வைத்துக் கொளுத்துங்கள் என்றார். அதையும்விட ஒரு படி மேலே சென்று நானே தூக்குப் போட்டுக் கொண்டு செத்துவிடுவேன் என்றார். இந்தக் கட்டுரை எழுதப்படுவதற்காக கடந்த ஐம்பது நாட்களாக நாமும் காத்து இருந்தோம். ரோஷக்கார பிரதமர், யாருடைய கட்டாயமும் இல்லாமல் தானே முன்வந்து தான் சொன்ன தனக்குத்தானே தண்டனை தரும் காட்சிளையாவது அரங்கேற்ற தப்பித் தவறி முயற்சித்து விடுவாரோ என்று நாடே அச்சத்துடன் எதிர்பார்த்தது. தனது பதவியை வகிக்க தாம் தகுதி இழந்துவிட்டோம் என்பதையாவது உணர்ந்து தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய முன்வருவாரா என்ற பேராசை அல்ல குறைந்த பட்சம் மக்கள் மன்றத்தில் மன்னிப்பாவது கோருவாரா என்று அரசியல் நாகரிகம் தெரிந்தவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால்?????

இந்திய நாட்டின் பொருளாதார வரலாற்றை சற்றுப் புரட்டிப் பார்த்தால், DEMONITISATION எனப்படுகிற புழக்கத்தில் இருக்கும் செலவாணி நோட்டுகளை செல்லாதாக ஆக்குவது என்பது பல முறை நடைபெற்று வந்திருக்கும் செய்திகளை நாம் காணலாம். 

ஆங்கிலேயர் ஆட்சியிலேயே , 1946 ஆம் ஆண்டு  1000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டன. ஆனாலும் 1954 ஆம் ஆண்டு 1000, 5000, 10,000 ஆகிய மதிப்புள்ள நோட்டுகள் வெளியிடப்பட்டன. 1978 ஆம் ஆண்டு கலக்கல் நாயகன் என்று அறியப்பட்ட மொரார்ஜிதேசாய் அரசு அந்த நோட்டுக்களை மீண்டும் செல்லாது என்று அறிவித்தது. மொரார்ஜி தேசாய் அரசு இவ்வாறு அறிவித்த நேரத்தில் நாட்டின் மிக மிகப் பெரும்பான்மையான மக்கள் 1000, 5000, 10,000 மதிப்புள்ள நோட்டுக்களை கண்ணால் கூட கண்டது இல்லை. மேல்தட்டு வர்க்கம் மட்டுமே இதனால் பாதிக்கப்பட்டது . அரிசிக்கு அலையும் அன்னம்மாவும் சில்லரைசெல்வுக்கு அலையும் சின்னம்மாவுக்கும் இந்த செய்தியே தெரியாது. 2014 ஆம் ஆண்டில் கூட ஒரு மெளனமான நடவடிக்கையாக 2005 ஆம் ஆண்டு அச்சிடபப்ட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து அரசால் திரும்பப் பெறப்பட்டன. 

இப்போது நடைபெற்றது போல மூன்று மணிநேர அவகாசத்தில் நாட்டின் பொருளாதார குரல்வளை நெரிக்கபட்டது முன்னெப்போதும் நிகழ்ந்ததே இல்லை. திரைமமறைவான பல காரணங்களால் வரலாற்றிலேயே இது மாபெரும் ஊழல் என்று பல தலைவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். 

ஆனால் வெளிப்படையாக , அரசியல்ரீதியாக நாம் கண்டதை மட்டுமே இங்கு குறிப்பிட விரும்புகிறோம். அதற்கு நாம் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் அன்றைய பிரதம பதவி வேட்பாளராக முன்மொழியப்பட்ட இன்றைய பிரதமர் மோடி அவர்கள் செய்த பரப்புரையை நினைவூட்ட விரும்புகிறோம். இன்று கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக ரூபாய் நோட்டுகளை செல்லாத நோட்டுகள் என்று அறிவிக்கும் பிரதமர் , அன்று கருப்புப் பணத்தை மீட்டு எடுப்பது பற்றி கடுமையாகப் பேசினார். என்ன பேசினார் என்பதை நான் அனைவரும் அறிவோம். 

96 சதவீதம் கறுப்புப் பணம் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றை மீட்டெடுத்து நாட்டு மக்கள் ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் தான் மீட்டு வரும் தொகையைப் பகிர்ந்து 15 இலட்சம் பணம் போடுவேன் என்றார். நாடு நகைத்தது என்றாலும் நம்பிய மக்கள் பலர் அவருக்கு வாக்களித்தனர். இன்றோ தனது வாக்குறுதியை வசதியாக மறந்துவிட்ட பிரதமர், மக்களின் மனதை விட்டு தான் சொன்ன ஆசை வார்த்தைகளை அழிக்க புழக்கத்தில் இருக்கும் பணத்தை ஒழித்து கருப்புப் பணத்தை ஒழிக்கப் போகிறேன் என்கிறார். மக்களை எப்போதும் பரபரப்பிலும் படபடப்பிலும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டுமென்ற ஹிட்லரின் பாசிசத்தின் ஒரு முறையாகவே இந்த செயலை நாம் பார்க்க வேண்டி இருக்கிறது. 

புழக்கத்தில் இருக்கும் பணத்துக்கெல்லாம் கருப்புப் பணம் என்று பட்டம் கட்டும் செயலை , பொருளாதாரத்தில் அரிச்சுவடி படித்துக் கொண்டு இருக்கும் தற்குறி கூட சொல்லமாட்டான். அவ்வாறு பதுக்கபட்ட பணம் வெறும் நான்கு சதவீதம்தான் என்றும் மிச்சம் கறுப்புப் பணம் என்று காட்டப்படுவது எல்லாம் வெளிநாடுகளில் முதலீடாகவும், சொத்துக்களாகவும், தங்கமாகவும், வெளிநாட்டுக் கரன்சிகளாகவும் , பங்கு சந்தை மூலதனமாகவும் பதுக்கபட்டுள்ளன என்பதையே பொருளாதார மேதைகள் சுட்டிக் காட்டுகிறார்கள். Black Money is not in stock but in flow என்பது அடிப்படைப் பொருளாதார அறிச்சுவடி. 

கருப்புப் பணம் என்று பிரதமரால் பட்டம் கட்ட பணம் எவரெவர் வீட்டுக் கட்டில் மெத்தைகளிலோ அடுக்கிவைக்கபட்டிருப்பது போலவும் ஒரு தட்டுத்தட்டினால் அல்லது ஒரு ‘சிகப்பு ஹிட்’ வாங்கி அடித்தால் பூச்சிகள் வெளிவருவதுபோல் பணக்கட்டுகள் வெளிவந்துவிடும் என்றும் பிரதமர் நினைத்து இவ்வளவு பெரிய வரலாற்றுப் பிழையை செய்து, ஏழை மற்றும் நடுத்தரவர்க்கத்தினரின் வயிற்றில் அடித்து இருக்கிறார். 

செல்லாத நோட்டு அறிவுப்புக்காக பிரதமர் சொன்ன நான்கு காரணங்களும் பொய்த்துப் போய்விட்டன யென்பதை புள்ளிவிபரங்கள் புட்டுப் புட்டு வைக்கின்றன. 

முதலாவதாக பதினைந்து இலட்சம் கோடி பணத்தில் ஏறத்தாழ ஐந்து இலட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் என்றார். ஆனால் நேற்றுவரை பதினாலு இலட்சம் கோடி ரூபாய்வரை வங்கிகளில் மக்கள் டெபாசிட் செய்து இருக்கிறார்கள். இதில் எங்கிருந்து வருகிறது கறுப்புப் பணம்? வங்கிகளில் டெபாசிட் செய்த தொகை எல்லாமே கறுப்புப் பணம் என்று பிரதமர் மார் தட்டிக் கொள்ள இயலுமா? அப்படியானால் மகளுடைய திருமணம், மருத்துவச் செலவு, மகனின் படிப்பு , வெளிநாட்டு விசா என்றெல்லாம் தேவை ஏற்படும் என்று நினைத்து நான்கு ஐந்து வருடங்களாக சிறுகச் சிறுக சேமித்து வைத்த நடுத்தர வர்க்கத்தினரும் ஏழைகளும் தங்களின் உழைப்பினால் உருவாக்கிய செல்வம் ஒரே இரவில் செல்லாமல் ஆக்கப்படும் நிர்ப்பந்தத்துக்கு பயந்து பொழுது விடிந்த உடன் வங்கியில் அவற்றை செலுத்திவிட பதறிப்போய் வந்தார்களே அந்தப் பணம் எல்லாம் கருப்புப் பணமல்ல வியர்வை வாடையைச் சுமந்த கற்புடைய பணம். 

கள்ள நோட்டுகளின் புழக்கத்தை ஒழிக்க என்று சொன்னதும் இப்படித்தான் புஸ் வானமாகிவிட்டது. எப்படிஎன்றால் புழக்கத்தில் இருக்கும் பணத்தில் நானூறு கோடி கள்ளப்பணம் அல்லது கள்ள நோட்டு என்றார்கள். ஆனால் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில் அவ்வாறு பத்தாயிரம் ரூபாய் கூட கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே வங்கி ஊழியர்களின் சங்கம் அறிவிக்கும் உண்மை. 

மூன்றாவதாக, தீவிரவாதம் மற்றும் நான்காவதாக ஊழலை ஒழிக்க என்று சொன்னதும் ஒரு ஹம்பக் தான். தீவிரவாதிகள் இந்த அறிவிப்புக்குப் பிறகு மூன்று முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தினார்கள். வெற்று முழக்கம் செய்ததைத்தவிர இந்த தேசபக்தர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. 

ஊழலை ஒழித்து விட கங்கணம் கட்டிய பிரதமர் கட்சியின் தலைவர் இயக்குனராக இருக்கும் குஜாராத்தில் உள்ள ஒரு கூட்டுறவு அமைப்பில் இந்த அறிவிப்பு வெளியாக ஒரு வாரம் முன்பு ஐநூறு கோடி ரூபாய்கள் முதலீடு செய்யப்பட்டதற்குப் பெயர் ஊழலா? இல்லை உத்தமபுத்திரன் படப்பாடலா? மேற்குவங்கத்தில் பாஜக மாநிலக்கட்சி இந்த அறிவிப்பு வெளியாக முன்பு எண்ணூறு கோடி ரூபாய்களை முதலீடு செய்ததற்கு பெயர் பெயர் என்ன ஊழலா? இல்லையா?

சேகர் ரெட்டி வீட்டில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட பணத்தில் 33 கோடி புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் ராம்மோகன்ராவ் வீட்டில் 18 இலட்சம் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப் பட்டனவே , டெல்லியில் ரோஹித் என்பவர் வீட்டில் 30 இலட்சம் விமானநிலையத்தில் 54 இலட்சம் இவை எல்லாம் என்ன? ஊற்றுப் பெருக்கா அல்லது ஊழல் பெருக்கா ? இந்த ஊழலில் எல்லாம் யார் ஈடுபட்டார்கள் என்பதன் ரிஷி மூலம், மத்திய அரசுக்குத் தெரியாதா? அப்படித் தெரியாவிட்டால் உளவுத்துறையும், அமலாக்கத்துறைரையும் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? 

இன்னும் சொல்வோம். யார் யாரிடம் கருப்புப்பணம் குவிந்து இருக்கிறது அவை எங்கேயெல்லாம் இருக்கிறது என்பது மத்திய அரசுக்குத் தெரியும். அவர்களின் பட்டியல் நிதித்துறையிடம் இருக்கிறது. அங்கெல்லாம் சோதனைபோட்டு, இருக்கும் பணத்தையும் வெளிநாட்டு முதலீடுகளையும் பறிமுதல் செய்து அள்ளி இருக்க இயலும். அதைவிட்டுவிட்டு அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்வில் அர்த்தமில்லாமல் விளையாடி இருக்கிறார் திருவாளர் மோடி. 

புகழ்பெற்ற பொருளாதார மேதைகள் என்று உலகமே ஒப்புக் கொண்ட தலைசிறந்த பொருளாதார அறிஞரான கவுசிக் பாஸு, ( Kaushik Basu) நோபல் பரிசு பெற்றவரும் பொருளாதார வல்லுனருமான, பால் குருக்மான்( Paul Krugmaan ), நோபல் பரிசு பெற்ற புகழ்வாய்ந்த அமர்தியா சென்( Amartiya Sen) , போர்பஸ் என்கிற உலகப் பொருளாதரத்தை அளந்து அளவிடுகிற அமைப்பின் தலைவர் ஸ்டீவ் போர்ப்ஸ் ( Steve Forbes) போன்றவர்கள் எல்லாம் மோடியின் அரசு எடுத்த இந்த நடவடிக்கையைப் பார்த்து கேலிச்சிரிப்பு சிரிக்கிறார்கள். 

DEMONITISATION எனப்படுகிற புழக்கத்தில் இருக்கும் செலவாணி நோட்டுகளை செல்லாதாக ஆக்குவது என்கிற முடிவை எடுத்த அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் உயர்மதிப்புக் கொண்டவை என்று அவைகளை செல்லாது என்று அறிவித்துவிட்டு அவைகளைவிட அதிக மதிப்புடைய, அளவில் குறைந்த, எடையில் குறைந்த  2000 ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டதே , “முதல் கோணல் முற்றும் கோணல்” என்பதற்கு அதுவே உதாரணமாக ஆகிவிட்டதே. இத்தகைய ஒரு புத்திசாலித்தனமற்ற முடிவை அரசு மேற்கொண்டதன் பின்னணி என்ன? யாருக்கு உதவ ? என்றே பொருளாதாரம் புரிந்தவர்கள் வியந்து கேட்கிறார்கள். அரசின் இந்த மாறுபாடான முடிவில் பொருளாதார சூதாட்டமும் அரசியல் சூதாட்டமும் இருக்கிறது என்றே அறிவாய்ந்தோர் கணிக்கிறார்கள். புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை கடத்தவும் பதுக்கவும் குறைந்த இடவசதியே போதும் என்று அத்தகையோரின் முயற்சிக்கு அரசே பாதை போட்டுக் கொடுத்து இருக்கிறது என்று சந்தேகப்பட்டால் அதில் குற்றம் என்ன காண முடியும்? 

ஒரு முக்கிய முடிவை எடுக்கும்போது அந்த முடிவின் தாக்கத்தால் ஏற்படும் விளைவுகளை எவ்வாறு சந்திப்பது, எவ்வாறு நீக்குவது , எவ்வாறு பரிகாரம் காண்பது என்பதற்கான எவ்வித முன்னேற்பாடுமே செய்யாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பிரதமர் மோடி செய்து இருக்கிற இந்த அஜால் குஜால் வேலை நாட்டுமக்களை நடுத்தெருவில் நிறுத்தி இருக்கிறது. 

பிரதமரின் நடிப்பு, பிஜேபி கட்சியினரின் தொலைக் காட்சி விவாதங்களின் காட்டுக்  கூச்சல் இவைகளை மீறி கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக அடித்தட்டு மக்கள், சிறுவணிகர்கள், பொதுமக்கள், உழைப்பாளிகள் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாதவை. இதயமே இல்லாதவர்களால் எடுக்கப்பட்ட இந்த இடுப்பை ஒடிக்கும் நடவடிக்கையின் விளைவுகள் விபரீதமானது. 

நாடே நிலைகுலைந்து போய் இருக்கிறது. பொருளாதார நடவடிக்கைகள் முடங்கிப் போய் கிடக்கின்றன. கட்டிட வேலைகள் கால்வாசியோடு நிற்கின்றன. தொழிற்சாலைகள் இயங்கவில்லை. விவசாய விளைபொருட்கள் விற்பனை இல்லை. அரசு அலுவலகங்களில் வேலை செய்ய ஆட்கள் இல்லை; அனைவரும் மணிக்கணக்கில் வங்கி வாசலில் நிற்கிறார்கள். நாட்டின் மனித வளம் சோம்பிப் போய் உற்பத்தி இன்றி உறங்கிக் கொண்டு இருக்கிறது; மனிதவேலை நாட்கள் மக்கிப் போய் மந்தமடைந்துவிட்டது. இந்த காரணங்களால் எதிர்கால இந்தியா அனுபவிக்கப் போவது கொடுக்க இருக்கும் விலை மிகப் பெரிதாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது. உற்பத்தி இல்லாமலும் விற்பனை இல்லாமலும் நுகர்வோர் இல்லாமலும் ஏற்பட்டுள்ள தேக்கத்தால் GDB என்கிற நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி 3% வரை குறையும் என்று அளவிடப்பட்டு இருக்கிறது. “வளர்ச்சியின் நாயகன்” என்று வரவழைக்கப்பட்ட நரேந்திரமோடியின் திட்டமிடாத பொருளாதார நடவடிக்கை, நாட்டின் வளர்ச்சிக்கு பாதாள படுகுழி வெட்டி விட்டது. இனி விட்ட இடத்தில் இருந்து தொடர்வது கடினமாக இருக்கும் என்றே முன்னாள் நிதியமைச்சர்கள், பொருளியல் வல்லுனர்கள் ஆகியோர் கணிக்கிறார்கள்.  

நாட்டின் பணசுழற்சிக்கு பொறுப்பு வகிக்க வேண்டிய ரிசர்வ் வங்கி நேரத்துக்கொரு அறிவிப்பை வெளியிட்டு மக்களைக் குழப்புகிறார்கள். காலையில் காபி குடித்துவிட்டு அவர்கள் போடும் உத்தரவுகள் மதிய உணவுக்கு முன்பே மாற்றப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் மாறுபட்ட டிசைன் டிசைனான அறிவிப்புகள் மக்களுக்கு ஆறுதல் தருவதற்கு பதிலாக, குழப்பத்தையே தந்தன. மக்களுக்குத் தருவதாக அறிவிக்கப்பட்ட தொகைகள் நாள் முழுதும் கால்கடுக்க வங்கிவாசலில் நின்ற பிறகு , இராமயணத்தை நினைவூட்டி    “ இன்று போய் நாளை வா! “ என்கிறார்கள். ஆனால் அவசரத்தேவைக்காக, வங்கியின் வாசலில் பத்து சதவீத கழிவில் மக்கள் பணம் பெற்றுக் கொண்ட காட்சிகளையும் காண முடிந்தது. 

நாடே அல்லோகலப் பட்டுக் கொண்டு- அன்றாட செலவுகளுக்கு அலறிக் கொண்டு வங்கி மற்றும் ஏ டி எம் வாசல்களில் உயிரைப் போக்கிக்கொண்டு இருந்த நேரத்தில்,  மோடி மன்னர் பிடில் வாசித்துக் கொண்டு ஜப்பானில் புல்லட் ரயிலில் பயணம் செய்துகொண்டு அழுக்குப் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருந்தார். அவரது அடிவருடிகளோ, நாட்டில் ஊழலை ஒழிப்பதற்காகவும் , கருப்புப்பணத்தை குழி தோண்டி புதைப்பதற்காகவும் கள்ளப்பணத்தை           வேரறுப்பதற்காகவும் மோடிஜி மேற்கொண்டுள்ள போரில் மக்கள் மகிழ்ச்சியுடன் தியாகம் செய்துகொண்டிருப்பதாக கண்களை மூடிக்கொண்டு, கதை அளந்துகொண்டிருந்தார்கள். இன்னொருவர் வேதனை ; இவர்களுக்கு வேடிக்கை; இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை என்று எம்ஜியார் பாணியில்தான் பதில் சொல்லவேண்டி இருக்கிறது. 

“வினாச கால விபரீத புத்தி “ என்று சமஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம் உண்டு. அழியும் காலம் வரும்போது அறிவு கெட்டுப்போகும் என்பது அதன் அர்த்தம். அதே போல் மக்கள் வயிறு எரிந்து வரிசையில் நின்று கொண்டிருக்கும்போது கருப்புப்பணம் வைத்து இருந்தவர்கள்தான் வங்கிகளின் வாசலில் வரிசையில் நிற்கிறார்கள் என்று வாய் கூசாமல் பேசினார் பிரதமர். மக்களின் நாடித்துடிப்பை அறியாத எவரும் ஆட்சியில் நீடிப்பது அர்த்தமில்லாமலே போகும். 

உயர் மதிப்புள்ள செலவாணிகளை செல்லாததாக ஆக்குகிறேன் என்று சொல்லிவிட்டு அதைவிட உயர் மதிப்புள்ள நோட்டை வெளியாக்கியதில் குருட்டுப் பொருளாதார அறிவுதான் மோடி அவர்களின் அறிவுக்கு பதம். அவ்வாறு வெளியாக்கிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கு சில்லறை கிடைக்காமல் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டும் காட்சிப் பொருளாக உண்மையான செல்லாத நோட்டாக மக்களின் கைகளில் இருந்தது மட்டுமே மோடி அவர்களின் நிர்வாக அறிவுக்கு பதம். போதுமான சில்லறை நோட்டுகளை அச்சடித்துத் தயாராக வைத்துக் கொள்ளாததும் , ஏடிஎம் இயந்திரங்களின் வடிவமைப்பை சரிசெய்துகொள்ளாததும் அனுபவமின்மைக்குப் பதம். 

பொருளாதாரமேதை என்று இன்று வரலாறு ஒப்புக் கொள்ளும் திரு. மன்மோகன்சிங் அவர்கள் பிரதமராக இருக்கும்போது 2011 ஆம் ஆண்டு , M.B. ஷா அவர்கள் தலைமையில் கள்ளப் பொருளாதாரம் , இணைப் பொருளாதாரம், கருப்புப்பணம் ஒழிப்பு ஆகிய குறிக்கோள்களின் அடிப்படையில் ஒரு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. அந்த ஆய்வுக்குழு கறுப்புப் பணத்தை ஒழிக்க ஒருங்கிணைந்த வங்கிச் சேவை அமைக்கப்படவேண்டும் என்றும் அதற்காக ஆதார் அட்டை போன்ற அடையாளங்கள் அறிமுகப்படுத்தப்படவேண்டும் என்றும் பரிந்துரைகளை செய்தது. அன்றைய மன்மோகன் அரசும் அவற்றை ஏற்று ஆதார்கார்டுகளை அறிமுகம் செய்யத் துவங்கிய நேரத்தில், அதை எதிர்த்து பாராளுமன்றத்தை முடக்கியவர்கள்தான் பிஜேபியினர். இன்று அதே ஆதார் கார்டு, ஒருங்கிணைந்த வங்கிச்சேவை ஆகியவற்றை தலையில் சுமந்து கூவிக்கூவி விற்கத்தொடங்கி இருக்கிறார்கள். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டது போலவே மோடி அரசின் செல்லாத நோட்டு நடவடிக்கை, ஒரு சட்டபூர்வமான கொள்ளை (Legal Looting ); பரந்த ஊழலுக்கு துணைநின்ற நிர்வாகச்சீர்கேடு ( Administrative collapse causing widespread corruption )

இந்த கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே பலனளிக்கும் திட்டத்தை மோடி   அறிவித்ததன் பின்னணியில் இந்திய நாடே இதுவரை சந்திக்காத மாபெரும் ஊழல் இருக்கிறது அதன்விபரங்கள் வெளிவரும் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் திரு. ராகுல் காந்தி கூறி இருப்பதையும் ஒன்றுமில்லை என்று நாம் ஒதுக்கிவிட இயலாது.  

ஒரு நாட்டின் பிரதமர் மக்கள் மன்றத்தில் ஒரு திட்டத்தை அறிவிக்கிறார். அந்தத் திட்டத்தின் வெற்றி தோல்வி பற்றி மக்கள் தெளிவுற தெரிந்து கொள்வதற்கும் அந்தத் திட்டத்தின் நன்மைகளை மக்களுக்குக் கொண்டு வந்து சேர்ப்பதற்கும் தனக்கு ஐம்பது நாள் அவகாசம் தேவை என்றும் அதற்குள் பாழ்பட்ட நிலைமைகளை சரிசெய்யாவிட்டால் தன்னை தீயில் இட்டுக் கொளுத்தும்படியும் உணர்ச்சிவசப்பட்டு கண்களில் நீர்வடிய மக்களின் முன் மண்டி இட்டுக் கேட்டார். 

மன்னிக்கும் மனப்பான்மைக்கும் சகிப்புத்தன்மைக்கும் பெயர்பெற்ற இந்திய மக்கள் ஐம்பதுனாட்களின் முடிவில், அந்த கடந்த ஐம்பது நாட்களில் மக்கள் பட்ட துயரத்தை மனதில் கொண்டும் தான் அளித்த வாக்குறுதியின் நாணயத்தின் அடிப்படையிலும் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி கடந்த ஆண்டில் பட்ட கஷ்டங்களை நீக்கும் வண்ணம் பிரதமர் மறுவாழ்வு அளிக்கக்கூடிய திட்டங்களை அறிவிப்பார் என்று வாயைப் பிளந்து கொண்டு உட்கார்ந்து இருந்தார்கள். 

ஆனால் காத்திருந்து காத்திருந்து காலங்கள்தான் போனது. காரியம் ஒன்றும் ஆகவில்லை. கடந்த ஐம்பது நாட்களுக்கான கணக்குகளை பிரதமர் நாட்டுமக்களிடம் சொல்லுவார் என்றும் சலுகைகள் அறிவிக்கப்படும் என்றெல்லாம் ஏங்கி இருந்தமக்கள் முன்னே தோன்றிய பிரதமர் கங்கை சென்று குளித்தாலும் நீங்காத பாவத்தை ஏழை நடுத்தரமக்கள் மீது ஏவி விட்ட பிரதமர் அதைப்பற்றி எல்லாம் கண்டு கொள்ளாமல் சட்டையில் உள்ள தூசியைத் தட்டிவிட்டது போல், பட்ஜெட் உரை ஆற்றுவது போல் பழங்கதைகளைப் பேசி பற்றி எரியும் பிரச்னையை திசைதிருப்பி , ஆசை வார்த்தைகளை மீண்டும் அள்ளிவிட்டுவிட்டு நமஸ்தே என்று கூறி நாற்காலியில் அமர்ந்துகொண்டார். செல்லாத நோட்டுகள் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட போது கருப்புப்பணம் என்று 18 முறை தனது மார்பில் அடித்துக் கொண்டு பேசிய பிரதமர், அதற்கான பரிகாரங்கள் தீர்வுகள் ஆகியவற்றை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட உரையில் ஒரு இடத்தில் கூட அவைபற்றிக் குறிப்பிடவில்லை. தன்னை தீயில் இட்டுக் கொளுத்துங்கள் என்ற அளவுக்குப் பேசிய பிரதமர் அதைப்பற்றியும் வாயே திறக்கவில்லை. மக்களின் இறுதி நம்பிக்கைக்கும் தனது இறுக்கமான உதடுகளால் இறுதி மரியாதையை வருடத்தின் இறுதியில் செலுத்திச் சென்றார் பிரதமர். 

பிரதமர் பேசாவிட்டால் என்ன? நாம் பேசுவோம். உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் இருந்து செல்லாததாக ஆக்கியது ஒரு புஸ் வானம் என்று பேசுவோம். நாம் பேசாவிட்டாலும் இதோ இந்த புள்ளிவிபரங்கள் பேசுகின்றன. 

உச்ச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த உறுதிச் சான்றுகளில் 3 முதல் 4 இலட்சம் கோடிவரை கறுப்புப் பணம் அரசுக்கு வரும் என்று கணக்கிட்ட மத்திய அரசுக்கு படுதோல்வியும் பட்டை நாமமும் சாத்தப்பட்டது. எவ்வாறு என்றால் , ரிசர்வ் வங்கியின் பொருளாதார மதிப்பீட்டின் பிரகாரம் 15.44 இலட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருப்பதாகவும் அதிலேதான் 3 முதல் 4 இலட்சம் கோடி வங்கிக்கு வராது என்றும் கணக்கிடப்பட்டது. ஆனால் கடந்த 28 டிசம்பர் வரை வங்கிகளில் மக்கள் செலுத்திய பணம் 14.92 இலட்சம் கோடி ரூபாய் ஆகும். ஆக இனி வரவேண்டியது கிட்டத்தட்ட    0. 50 இலட்சம் கோடி மட்டுமே. இந்தப் பணம் கூட அடுத்த இரண்டு நாட்களில் வங்கிகளுக்கு வந்து இருக்கலாம். ஆகவே , இந்த செல்லாத நோட்டு சிகிச்சை தோல்வியில் முடிந்து இருக்கிறது என்பதை ரிசர்வ் வங்கியின் இந்தப் புள்ளி விபரங்கள் நாம் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துச் சொல்கின்றன. 

மக்களின் பணத்தை மல்லையாக்களுக்கு வாரி வழங்கிவிட்டு அவற்றை வராக்கடன் என்றும் அறிவித்துவிட்டு நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வங்கிகளுக்கு மக்களின் கைகளில் இருக்கும் பணத்தைக் கொண்டு வந்து மீண்டும் அந்தப் பணத்தை கார்பரேட் கம்பெனிகளுக்கு வழங்கும் பொருளாதார சதியில்தான் பிரதமரும் நிதி அமைச்சகமும் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பது கடந்த ஐம்பது நாட்களின் செயல்பாட்டால் நிருபணம் ஆகிவிட்டது. மக்களின் மனமும் ஊனம் ஆகிவிட்டது. நாட்டின் பொருளாதாரம் நொண்டியாகிவிட்டது. 

ஆகவே, “முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டினேன்; இரண்டு குளம் பாழ்; ஒன்றில் தண்ணியே இல்லை” என்று பாடும் நாட்டுப்புறப்பாடலின் இலக்கணத்துக்கு இலக்கியமாக ஒரு மாபெரும் நாட்டின் பிரதமரின் அறிவிப்பு அமைந்துவிட்டது. பெண்கள் கும்மியடித்துப் பாடும் அந்தப் பாடல், இன்று நாடெங்கும் நடுத்தெருவில் நிற்கும் மக்கள் நெஞ்சில் அடித்துக் கொண்டு பாடும் ஒப்பாரிப்பாடலாக மாறிவிட்டது. இந்த ஒப்பாரி எப்போது ஓயும் என்றே தெரியாமல் திரிசங்கு சொர்க்கத்தில் மக்களை வைத்திருப்பதே வளர்ச்சியின் நாயகனின் சாதனை. 

குறிப்பு: 
இந்த பணஒழிப்பு பசப்பு நாடகத்தின் நடுவே பணமில்லா பரிவர்த்தனை என்கிற வில்லியையும் அறிமுகப்படுத்த இந்த அரசு முயல்கிறது. அதுபற்றிய விளக்கமான ஆய்வுக் கட்டுரை இன்ஷா அல்லாஹ் விரைவில். 

அதிரை இபுராஹீம் அன்சாரி M.com.,

வாங்க! வாங்க! இந்த சஹனில் உட்காரலாம். 8

அதிரைநிருபர் பதிப்பகம் | January 06, 2017 | , , , , , ,

“தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு “ என்று நாமக்கல் கவிஞர்  இராமலிங்கம் பிள்ளை பாடினார். 

தமிழர்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு இனத்தோருக்கும் ஒரு சிறப்பான அல்லது தனியான குணம் இருப்பது இயல்பே. கேரளாக்காரர்களுக்கும், வங்காளத்தைச் சேர்ந்தோருக்கும், ஆந்திராக்காரர்களுக்கும் , மார்வாரிகளுக்கும் கூட  தனிப்பட்ட சில பழக்கங்கள் இருக்கின்றன.

இன ரீதியாக மட்டுமல்ல, மொழி ரீதியாக மட்டுமல்ல, சாதி ரீதியாக மட்டுமல்ல, ஊர்கள் ரீதியாகவும் சில பழக்கங்கள் இந்த மண்ணில் வாழும் மைந்தர்களோடு ஊறிப் போய் இருக்கிறது. அந்தப் பழக்கங்கள் அந்த குறிப்பிட்ட ஊரின் மக்களோடு ஒன்றிவிட்ட அடையாளங்கள்.

சில ஊர்களில் சில உணவு வகைகள் ஊர்பெயருடன் சிறப்பாக குறிப்பிடப்படும். உதாரணங்களாக , மணப்பாறை முறுக்கு, சாத்தூர் சேவு, காஞ்சிபுரம் இட்லி, திருநெல்வேலி ஹல்வா, ஸ்ரீ வில்லிப் புத்தூர் பால்கோவா, திருவையாறு அசோகா, கீழக்கரை தொதல், பரங்கிப்பேட்டை தூள் சம்சா , அதிராம்பட்டினம் பீட்ரூட் ஹல்வா  போன்றவைகளும்  விருந்து அயிட்டங்களில் தோப்புத்துறை சொறி ஆணம், அய்யம்பேட்டை வெள்ளை மட்டன் குருமா, அதிராம்பட்டினம் கத்தரிக்காய்பச்சடி, பரங்கிப்பேட்டை கோழி சம்மா, முத்துப் பேட்டை   தாளிச்சா , கூத்தாநல்லூர் கொத்துக்கறி கூட்டு ஆகியவையும் புகழ்பெற்றவை. 

அதே போல வாணியம்பாடி,  ஆம்பூர் பகுதி பிரியாணி, திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி, மதுரை மாலை மட்டன் ஸ்டால் அயிட்டங்கள், விருதுநகர் புறாக்கறி, மதுரை சித்திரக்காரத்தெரு மண்பாண்ட சமையல் அயிட்டங்கள், நாஞ்சில் நாட்டு இடலக்குடி நெய்மீன் கறி ஆகியவையும் சீரும் சிறப்பும் சுவையும் வாய்ந்தவை. 

செட்டி நாட்டு சமையல் என்று தனிச்சுவையுடைய சாப்பிடும் வகையறாக்கள் , பாண்டிய நாட்டு பனியார வகைகள் ஆகியவற்றை நாம் யாருக்கும் அறிமுகப்படுத்த வேண்டிய தேவை இல்லாத அளவுக்கு அவை புகழ்பெற்றவை. 

மாநில ரீதியாகவும் உணவு வகைகள் தனித்தனி சுவை அம்சங்கள் பெற்று இருக்கும். கர்நாடகாவில் சாம்பாரில் வெல்லம் கலப்பார்கள் . ஆந்திராவிலோ காரம் நாக்கை துளை போட்டுவிடும். உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களில்  நெய்யும் எண்ணெயும் வெண்ணையும் , கடித்துக் கொள்ள பச்சை மிளகாயும் வெங்காயமும் இல்லாமல் உணவு இருக்காது. உள்ளே இறங்காது. தயிரில் புகுந்து விளையாடுவது , முழு உருளைக் கிழங்கை அவித்து அதில் மிளகுப் பொடியைத்தூவி சாப்பிடுவது  பஞ்சாப் , ஹரியானா மாநிலங்களில் மாலை நேர                  சாலையோரக்கடைகளில்  நாம் காணும் காட்சிகள். சாட் மசாலா , பானி  பூரி போன்றவையும் வடமாநிலங்களில் அனைவராலும் விரும்பி ரசித்து உண்ணப்படும் சில்லறை உணவுகள். பச்சை முள்ளங்கியைக் கடித்து  சாப்பிடுவது டில்லியில் சர்வ சாதாரணம். 

கடுகு எண்ணெயில் பொறித்த கங்கை ஆற்று மீன் வகைகள் பாட்னாவில் பிரசித்தம். கடுகை வறுத்து தூளாக்கி அதை மீனில் தடவி ஊறவைத்துப் பொறித்துக் கொடுப்பதும் பெரிய பெரிய சைஸ் பீப் சாப்களை திரண்ட மசாலாவில் தோய்த்து சாப்பிடுவதும் முளைவிட்ட கொண்டைக் கடலையில் நறுக்கிய வெங்காயம்,  பச்சை மிளகாய் கலந்து  புளித்தண்ணீர் ஊற்றி ,  உதட்டோரம் ஒழுகினாலும் சப்புக் கொட்டி சாப்பிடுவது, கல்கத்தா நகரக் காட்சிகள். 

இவ்வாறு ஊருக்கு ஊர் மாநிலத்துக்கு மாநிலம் ஒரு சில குறிப்பிட்ட உணவுகள் , பழக்கங்கள், முறைகள், மாற்றவே  முடியாத கலாச்சார அடையாளங்கள் விரவியும் பரவியும் காணப்படுகின்றன.   

நமது ஊரான அதிராம்பட்டினத்துக்கு என்றும் சில  கலாச்சார அடையாளங்கள் காலம் காலமாய் நிலைத்து நிற்கின்றன. 

பெண்ணுக்கு வீடு கொடுப்பது 

ஒரு வீட்டில் பாதி பாதியை இரண்டு குமர்களுக்கு எழுதிவைப்பது 

உடன் பிறந்த அண்ணன் தம்பிகள் சம்பந்திகளாவது 

குண்டாமாத்து என்கிற பெண் மாப்பிள்ளை கொடுத்தல் , எடுத்தல் 

திருமண வீட்டுக்கு வரும் அனைவருமே  பொதுவாக வெள்ளை கைலி வெள்ளை சட்டை அணிவது. அதிலும் குறிப்பாக கைலி மட்டுமாவது மடமடவென்று கஞ்சிப்பாடம் கலையாமல் உடுத்துவது 

வெள்ளிக்கிழமை ஜூம் ஆவுக்குப் போகும்போது  சர்பத் குடிப்பது 

வெள்ளிக் கிழமை என்றாலே  பகல் உணவுக்கு ஆட்டு இறைச்சி அல்லது கோழி இறைச்சி      சமைப்பது  

எவ்வளவு பெரிய விருந்தானாலும் சஹனில் வைத்துப் பரிமாறுவது 

நெய்சோற்றுக்கு புளியாணம் என்கிற ரசம்  

ஆண்கள் லுஹர் தொழுகைக்குப் பிறகு கூட்டமாக  விருந்துக்கு வருவது , பெண்களுக்குரிய விருந்தை அதற்கு முன்னரே நிறைவு செய்துவிடுவது  

வெல்வட் தொப்பி போடுவது 

இரவுப் பயணம் போகும் போது கொத்துப்புரோட்டா  பார்சல் வாங்கிப் போவது 

பெருநாள் மாலை பட்டுக் கோட்டை சென்று இரவு உணவாக இட்லி சாப்பிடுவது 

இத்யாதி..... இத்யாதி. 

இப்போது இந்தப் பதிவில் சிலகாலமாக நாம் காணும் ஒரு மாற்றம் பாரம்பரியமாகவும் நமது ஊருக்கு அடையாளமாகவும் இருக்கும் ஒரு பழக்கம் மெல்ல மெல்ல மறைந்து வருவது பற்றி நமது கருத்துக்களை சொல்ல நினைக்கிறோம். 

அது சகன்களில் விருந்து பரிமாறுவது பற்றியது. 

அண்மைக்காலமாக  சகன்களில் விருந்து பரிமாறுவது மெல்ல மெல்ல மறைந்து வருகிறது . அந்த இடத்தை இலைச் சாப்பாடு பிடித்து வருகிறது. நமது ஊரின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழும் சஹன் சாப்பாட்டை இலைச்சாப்பாடு எடுத்துக் கொள்வதை ஏனோ ஏற்க இயலவில்லை. நம்மில் சிலரும் இந்த மாற்றத்தை வரவேற்பதாகவும் அடையாளங்கள் தெரிகின்றன. 

ஒரு நண்பர்  மூலமாக ஒரு செய்தி நாம் அறிந்துகொண்டோம். அதாவது நமது ஊரில் நடைபெற்ற திருமணத்துக்கு   வெளியூரில் இருந்து பிறமத சகோதரர் ஒருவர் வந்திருந்தார். திருமணத்தில் கலந்துகொள்ள நமது ஊரைச்சேர்ந்த ஆண்களும் பெண்களுமாக பெரும் கூட்டமும் கூடி இருந்தது. திருமணம் முடிந்ததும் விருந்து சஹன் மூலம் பரிமாறப்பட்டது. ஒரு மணி நேரத்தில் எல்லோரும் உணவருந்திவிட்டுப் போய்விட்டார்கள். வெளியூர்காரருக்கு ஆச்சரியமாக இருந்தது. நாங்கள் நடத்தும் திருமணங்களில் முகூர்த்தம் காலை பத்து  மணிக்கு முடிந்ததும் முதல்  பந்தி வைத்தால் , கடைசி பந்தி நிறைவுற பிற்பகல் மூன்று மணிவரை ஆகிறது. இந்த ஊரில் இவ்வளவு கூட்டமும் ஒரு மணி நேரத்துக்குள் உணவருந்திப் போய்விட்டதே என்று ஆச்சரியப்பட்டார்.  

கலாச்சாரம் என்பது ஒரு பக்கம் இருக்க, பெரும் மக்கள் தொகை கொண்ட நமது ஊரில் சஹன் சாப்பாடு என்பது விருந்து கொடுப்போர்கள் நிர்வகிக்க மிகவும் இலகுவானது. பேப்பரைப் போட்டோமா , மரவையை வைத்தோமா மறு சோறு போட்டோமா தட்ஸ் ஆல். ஆட்டம் குளோஸ். ஆனால் இலைச்சாப்பாடு அப்படியா? 

சாப்பாட்டு மேசை போடணும், பேப்பர் ரோலை விரிக்கணும் , இலைகளை ஒவ்வொன்றாய் போடணும் அதிலும் கிழிசல் மற்றும் சைஸ் சிறிய இலைகள் மாற்றிப் போட்டாக வேண்டும், தண்ணீர் பாக்கெட் வைக்கவேண்டும். பிறகு அயிட்டங்களை ஒவ்வொன்றாய் வாளியில் மற்றும் தட்டுகளில் கொண்டு வந்து கரண்டி வைத்துப் பரிமாறவேண்டும். அதற்குள் அடுத்த அணி , முன் சாப்பிடும் அணியின் பின்னால் நிற்கும். நேர விரயம் ஒருபக்கம் உணவு விரயம் மறுபக்கம் என்று நிர்வாகம் மிகவும் கஷ்டம். உணவுப் பொருள்கள் விற்கும் விலையில் சிறுவர்கள் கூட ஒரு இலையில் உட்கார்ந்து அதிகமான அளவு சமைத்த உணவுகளை வீணாக இலைகளில் மிச்சம் வைத்துவிடுகிறார்கள். 

ஆனால் சஹனில் தேவையானதை கலந்து பேசிக் கேட்டு வாங்கி சாப்பிடுகிறோம்; யாராவது கூடுதலாக சாப்பிட்டாலும் குறைவாக சாப்பிட்டாலும் சஹனில்   பெரும்பாலும் விரயமாவதோ வீணாவதோ இருக்காது. இருந்தாலும் அது அரிதானது.  மிச்சபடுவதில் ஆளுக்குக் கொஞ்சமாக சாப்பிட்டு முடித்துவிடும் அழகான முறைகளும் அங்கு அரங்கேறுகிறது.  

சகோதர வாஞ்சை, ஒற்றுமை ஆகியவைகளுக்கு சஹன் சாப்பாடு உதாரணமாக இருக்கிறது. 

சஹன்  சாப்பாடு என்பது உருவானது எவ்வாறு என்று  பார்க்க அரபுமக்களின் பாலைவனப் பயணங்கள் குறிப்பாக வணிகப் பயணங்களை சுட்டுகிறார்கள். நெடுந்தூரம் பயணிக்கும் அரபுகள் தாங்கள் கொண்டுவந்த வேறுபட்ட உணவுவகைகளை ஒரே தட்டில் வைத்து சுற்றி அமர்ந்து கொண்டு சாப்பிடுவார்கள். இவ்வாறு சுற்றி அமர உணவுகளைப் பகிர்ந்துகொள்வது ஒரு காரணமாக இருந்தாலும் பாலைவனத்தில் அடிக்கும் காற்றின் காரணமாக  மண் துகள்கள் உணவில் கலந்துவிடாமல் சுற்றி உட்கார்ந்து தடுப்பதும் ஒரு காரணமாக இருந்து இருக்கிறது. இவ்வாறு சாப்பிடுவதில் இருக்கும் வசதியையும் வீண் விரயம் இல்லாமல் இருப்பதையும் அறிந்தவர்கள் வணிகப் பயணம் முடிந்து வீடுகளுக்கு வந்ததும் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் பழக்கத்தை தொடர்ந்தனர் என்றும் கூறப்படுகிறது. 

பெருமானார் ( ஸல்) அவர்கள் தங்களது தோழர்களுடன் சஹனில் சாப்பிட்ட வரலாற்று நிகழ்வுகள் நாம் காணக் கிடைக்கின்றன. அகழ்ப் போர் சமயத்தில் பற்றாக்குறையான உணவைப் பகிர்ந்து உண்டதில் அதில் பரக்கத் உண்டானதாகவும் பலரின் பசி நீங்கி மிச்சமும் இருந்ததாகவும் அறிகிறோம். 

இன்றும் அரபு நாடுகளில் அரபுகளின் வீட்டு விருந்துகள் சஹனில்தான் பரிமாறப்படுகின்றன. பள்ளிவாசல்களில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளும் அவ்வாறே நடத்தப்பட்டு வருகின்றன. உலகின் அனைத்து பாகங்களிலிருந்தும் வேலைக்கு வந்துள்ள முஸ்லிம்கள் ஒரே சஹனில் சாப்பிடுகிறார்கள்.   

இன்றைய தமிழகத்தில் நாகூர், பரங்கிப் பேட்டை, காயல்பட்டினம், முத்துப் பேட்டை, கூத்தாநல்லூர் போன்ற ஊர்களுடன் அதிராம்பட்டினமும் இந்த சஹன் கலாச்சாரத்தைக் கொண்டு திகழ்கிறது. இந்தப் பழக்கம் 450 முதல் 500 ஆண்டுகளாக இந்த ஊர்களில் கடைப்பிடிக்கப்படுகிறது என்று நாகூரைச் சேர்ந்த ஒரு பெரியவர் கூறினார்.    

மருத்துவக் காரணங்களை சுட்டிக்காட்டி சில நவீனத் தம்பிகள் சஹன் சாப்பாட்டை தவிர்க்கவேண்டுமென்று நினைக்கிறார்கள். நாம் சொல்ல வருவது என்னவென்றால் சில மாற்றங்கள் தேவையாக இருந்தாலும் அந்த மாற்றங்களை நமது கலாச்சாரத்தின் அடிப்படையை  அழித்துவிடாமல் செய்துகொள்ளலாம் . மண்கலயத்தில் கொடுத்த தண்ணீரை பாட்டில்களில் கொடுப்பது போலவும், மண்சட்டியில் வைத்த கத்தரிக்காய் பச்சடியை எவர்சில்வர் கோப்பைகளில் வைத்துப் பரிமாறுவது போலவும் அடிப்படையை அழிக்காத மாற்றங்களை செய்துகொள்வதில் தவறில்லை. ஆனால் அதற்காக அடிமடியிலேயே கை வைக்கத் துணிய வேண்டாம். 

இன்றைக்கு உடல் பருமன் என்பது பரவலாக இருக்கிறது. அப்படிப்பட்டவர்களால் சஹன்களில் சாப்பிட கீழே உட்கார்ந்து எழ இயலாமல் இருக்கிறது என்பது உண்மைதான். ஆகவே அவர்களைப் போன்றவர்களுக்கு இலைச்சாப்பாடு என்று தனியாக  வைத்தால் கீழே அமர்ந்து எழ சக்தி உடையவர்களும் இலைச்சாப்பாட்டுப் பந்தியில் வந்து அமர்ந்துவிடுகிறார்கள். அவர்களை எழச் சொல்வதில் தர்மசங்கடங்களை எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது. இதைத்தவிர்க்க உடல்பருமன் உள்ளவர்களுக்கு சகனை ஒரு ஒற்றைக் கட்டிலில் வைத்து சுற்றி நான்கு நாற்காலிகளைப் போட்டு உணவருந்தச் சொல்லலாம். காலத்துக்கும் வசதிக்கும் ஏற்ப மாறுவதில் தவறில்லை. ஆனால் அந்த மாற்றம் அடிப்படையை மாற்றிவிடக் கூடாது என்பதையே வலியுறுத்த விரும்புகிறோம். 

ஆகவே சஹன் சாப்பாடு நமது கலாச்சாரத்தின் சின்னம். நாம் கட்டிக் காக்கவேண்டிய சின்னம். இலகுவானது; வசதியானது; சிக்கனமானது ; சிறப்பானது. நமக்குள் கைகலப்பு வேண்டாம் . கலகலப்பாக சகனில் கைகலந்து சாப்பிடலாமே சகோதரர்களே! 

எழுத்து உரு : இப்ராஹீம் அன்சாரி. M.Com

கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது ! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | December 29, 2016 | ,

இந்தக் கட்டுரையின் தலைப்புக்கு சொந்தக்காரர் அறிஞர் என்று தமிழகம் அடைமொழி சூட்டி அழைக்கும் அண்ணா அவர்களாவார்கள். இந்தக் கட்டுரையின் பேசு பொருளுக்கு இதைவிட சிறந்த தலைப்பு எனக்குத் தென்படவில்லை. ஆகவே அண்ணா அவர்களிடமிருந்து இதைக் கடன் வாங்கிவிட்டேன். ஏற்கனவே அவரது இதயம் கடன் வாங்கப்பட்டு இருக்கிறது என்ற செய்தியும் உங்களுக்கெல்லாம் தெரிந்ததுதானே!

1970 களில் தமிழக அரசு தலைமைச் செயலக வட்டாரங்களில் ஒரு நகைச்சுவையான நிகழ்வை பரவலாக கிசு கிசு என்று பேசிக் கொள்வார்கள் . அந்த நேரத்தில் ஆளும்கட்சியின் அமைச்சர்களின் கல்வித் தரத்தை விமர்சிக்க எதிர்க் கட்சி மேடைகளில் கூட இந்த நிகழ்வு பேசப்படும்; கைதட்டி ரசிக்கப்படும். நாமும் அதைப் பகிர்ந்து ரசிக்கலாம்.

விஷயம் இதுதான்.

ஐந்தாம் வகுப்புக் கூட தேறாத ஒருவருக்கு, கட்சிக்காக கடுமையாக உழைத்தவர் என்ற முறையில் அமைச்சர் பதவியை வழங்கினார். அன்றைய முதல்வர்.

அமைச்சர் தனது அறையில் வந்து அமர்ந்தார். எப்போதும் திரைப்படப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கும் பழக்கம் உடைய அவருக்கு ஒரு கையடக்கமான சிறிய ட்ரான்சிஸ்டர் இருந்தால் நல்லது என்று தோன்றியது.

தனது பி. ஏ யை கூப்பிட்டார். பி.ஏ ஒரு புதிய I A S அதிகாரி.

“ஒரு சின்ன ரேடியோ வேணும். என்ன வாங்கலாம்?”

“ பிலிப்ஸ் ரேடியோ வாங்கலாம் சார். அதுதான் நல்ல குவாலிடியாக இருக்கும் “

“ சரி ! ஒரு பிலிப்ஸ் ரேடியோ வாங்கிட்டு வரச் சொல்லுங்க! இந்தாங்க பணம். “

I A S அதிகாரி பணத்தைப் பெற்றுக் கொண்டு போனார். சற்று நேரத்தில் ட்ரான்சிஸ்டர் வந்ததது. அதைப் பெட்டியை திறந்து அதை மின் இணைப்பில் பொருத்தி அமைச்சரே இயக்கினார்.

ரேடியோவில் அப்போது செய்திகள் சொல்லும் நேரம். ரேடியோ இப்படி சொல்லியது .

“ இது ஆல் இந்தியா ரேடியோ ! “ 

இதைக் கேட்டதும் அமைச்சருக்கு முகம் சிவந்தது. ரேடியோவை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு மீண்டும் பி ஏ யைக் கூப்பிட்டார்.

“ஏன்யா ! நான் உம்மை என்ன ரேடியோ வாங்கிவரச் சொன்னேன்? நீர் என்ன வாங்கி வந்திருக்கிறீர்?”

“பிலிப்ஸ் ரேடியோ வாங்கச் சொன்னீங்க! அதுதான் இது. “

“ யாரைய்யா ஏமாத்தறீங்க? இது ஒன்னும் பிலிப்ஸ் ரேடியோ இல்லே”

“இல்லே சார் இது பிலிப்ஸ்தான் “

“யோவ் ! அவனே சொல்றான் இது ஆல் இந்தியா ரேடியோன்னு நீர் திரும்பவும் பிலிப்ஸ் பிலிப்ஸ் என்கிறீர். உடனே இதைக் கொண்டு போய் திருப்பிக் கொடுத்துட்டு உண்மையான பிலிப்ஸ் ரேடியோவோட வாரும்! “

விழிகள் பிதுங்க தலையில் அடித்துக் கொண்டே புதிய I A S அதிகாரி முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டே ரேடியோவைத் தூக்கிக் கொண்டு மாண்புமிகு அமைச்சரின் அறையைவிட்டு வெளியே வந்தார்.

கடைசியில் முதல்வர் தலையிட்டு விபரம் கூறி புரியவைத்தார் என்பதுதான் அந்த செய்தி. நகைப்பிக்கிடமான அந்த செய்தியை இன்று நினைத்துப் பார்க்கும் தருணம் வந்து இருக்கிறது.

I A S, I P S, I F S, போன்ற தேர்வுகளுக்கு தங்களை ஆட்படுத்திக் கொள்பவர்கள் பொதுவாக சிறந்த அறிவாளிகளாக இருப்பார்கள். சிறுவயது முதலே ஆரம்பக் கல்வி வகுப்பில் இருந்தே முதலிடம் பெற்று சிறந்து விளங்குவார்கள். விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.

எவ்வளவு பெருமை வாய்ந்த படிப்புகளும் பதவிகளும் இருந்தாலும் I A S - I P S - I F S ஆகிய தேர்வுகளில் வெற்றி பெற்று பதவிகளில் அமர்பவர்களுக்கு இருக்கும் பாங்கும் மதிப்பும் அளப்பரியது.

பிறப்பிலேயே அறிவாளிகளாக அல்லது வளர்க்கப்படும்போது அறிவாளிகளாக வளர்க்கப்படும் I A S - I P S - I F S ஆளுமை பெற்றவர்களுக்கு எந்த அளவு அறிவு இருக்கிறதோ, நிர்வாகத் திறன் இருக்கிறதோ, அதே அளவு நாட்டின் நலனிலும் அவர்களுக்கு பொறுப்பும் இருக்க வேண்டும் என்றும் நன்னடத்தை உரியவர்களாகவும் இருக்க வேண்டுமென்றும் நாட்டு நலனின் அக்கறை உடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் இந்த நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் கல்வியறிவில்லாத மக்கள் எதிர்பார்ப்பது இயல்பு. அவர்கள் சொன்னால் சரியாக இருக்கும் என்று கண்ணை மூடிக் கொண்டு நம்பும் இயல்பே மக்களுடையது.

கடுமையான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று தங்களின் அறிவுத்திறமையை நிருபிப்பவர்களே I A S - I P S - I F S போன்ற தகுதிகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். இத்தகைய தேர்வில் கலந்து கொள்ளும் பலர் பலவித தரங்களிலும் நிலைகளிலும் சோதிக்கப்பட்டு, வடிகட்டப்பட்டே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். Civil Services Examinations எனப்படும் கடினமான இத்தேர்வுகளை Union Public Service Commission (UPSC) என்கிற அமைப்பே நடத்துகிறது.

எடுத்துக்காட்டாக, 2015 ஆம் ஆண்டு ஏறக்குறைய பத்து இலட்சம் பேர் கலந்து கொண்ட தேர்வுகளில் 180 பேர்கள் மட்டுமே தகுதி பெற்றார்கள் என்ற மலைக்கவைக்கிற புள்ளிவிபரம் இந்தத் தேர்வுகளில் தேர்வானவர்களின் அறிவுத்திறமைகளை பறை சாற்றும்.

ஆனாலும்,

ஜனநாயகம் என்கிற அருமையான கருவி, எவ்வாறு பல அற்புதங்களை நிகழ்த்துகிறதோ அவ்வாறே சில ஆபத்துக்களையும் நிகழ்த்துகிறது. அந்த ஆபத்துக்களின் ஒரு அச்சமூட்டும் அம்சம்தான் ஐந்தாம் வகுப்புக் கூட படிக்காதவர்கள், குற்றப் பின்னணி உள்ளவர்கள், பேட்டை ரவுடிகள், கட்டைப் பஞ்சாயத்துக்காரர்கள் இடும் உத்தரவுக்கு I A S, I P S, I F S படித்தவர்கள் தலையாட்டும் நிலைமையும். சுயநல அரசியல்வாதிகளின் கரங்களில் சிக்கி உயர் படிப்புப் படித்த I A S, I P S, I F S அதிகாரிகள் பணியாற்றுவது – இட்டதை செய்வது – எடுப்பார் கைப்பிள்ளை ஆவது போன்ற நிலைமைகள் சமூகஅரசியல், நிர்வாகம் ஆகிய உயர்ந்த இலக்குகளின் மீது தடவி வைக்கபட்டிருக்கும் சகதிச் சான்றுகள். இன்றைய நிர்வாக அமைப்பில் அகற்ற இயலாத அசிங்கங்கள். பல்வேறு அரசுத் திட்டங்களில் ஆளும்கட்சி மற்றும் அரசு அதிகாரிகளின் கூட்டணி கொடி கட்டிப் பறக்கிறது.

இதைக் குறிப்பிடும் நேரத்தில் மீண்டும் அறிஞர் அண்ணா அவர்களை நினைவு கூற வேண்டியவர்களாகிறோம். 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்று அண்ணா அவர்கள் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டதும் மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் மாநாட்டைக் கூட்டினார்.

அந்த மாநாட்டில் அண்ணா அவர்கள் பேசும்போது I A S, I P S அதிகாரிகளைப் பார்த்து இவ்வாறு கூறினார். “ இன்று நான் இந்த மாநிலத்தின் முதலமைச்சராகி இருக்கிறேன். நீங்கள் எல்லோரும் அரசியலில் ஈடுபட்டு முதலமைச்சராகவேண்டும் என்று முயற்சி செய்தால் உங்களில் ஒருவர் முதல்வராகவும் இன்னும் சிலர் அமைச்சர்களாகவும் வந்துவிட முடியும். ஆனால் முதலமைச்சராகிய நான் எவ்வளவு முயற்சி செய்தாலும் உங்களைப் போல I A S, I P S அதிகாரியாக ஆக இயலாது; இயலவே இயலாது “ என்று கூறி பலத்த கைதட்டல்களைப் பெற்றுக் கொண்டார். இது சரித்திரம்.

அண்ணா அவர்களுடைய மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் அரசாண்ட கட்சிகள் எவ்வளவுதான் பல்வேறுவகையான நலத் திட்டங்களைத் தீட்டி நடைமுறைப் படுத்தி இருந்தாலும் சர்க்காரியா கமிஷன் என்றும் சொத்துக் குவிப்பு வழக்கு என்றும், அமைச்சர்களின் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து, செம்மண் முதலிய கனிம வளக் கொள்ளை போன்ற வழக்குகள் ஆகியவையும் இருபிறவிகளாக இணைந்து வளர்ந்ததையும் நாம் புறந்தள்ளிட இயலாது. இந்த ஊழல்களில் எல்லாம் உயர் படிப்புப் படித்த அரசு அதிகாரிகளின் கரங்களும் இணைந்து இருந்தன என்பதையும் மறுக்க இயலாது.

படிப்பில் சிறந்து விளங்கிய காரணத்தால், பதவிபெற்று அறிவுசார்ந்த மேன்மையுடைய I A S, I P S அதிகாரிகள், தங்களுடைய ஆசை அவர்களுடைய அறிவின் கண்களை மறைத்துவிட்ட காரணத்தால் மக்கள் விரோத செயல்களிலும் இலஞ்ச லாவண்யங்களில் ஈடுபடும் முதல் அமைச்சர் உட்பட்ட அமைச்சர்களுடைய நடவடிக்கைகளுக்கு தாங்களும் ஒத்துழைப்பு கொடுப்பது ஒரு பக்கம், அவ்வாறே ஆளும் வர்க்கமும் நிர்வாக வர்க்கமும் இணைந்து ஊழல் செய்யும்போது ஏற்படும் சட்ட பூர்வ பிரச்னைகளில் இருந்து அமைச்சர்களை தற்காத்துக்கொள்வது எப்படி என்கிற வழிகளையும் சொல்லித்தருபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதைக் கடந்தகால வரலாறுகளில் இருந்து நாம் கவனிக்கும்போது I A S, I P S அதிகாரிகளைப் பார்த்து படித்தால் மட்டும் போதுமா ? என்றே வினா எழுப்ப வைக்கிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் 23/06/2015 ஆம் தேதி வெளியான தகவல் இவ்வாறு சொல்கிறது.

100 IAS officers came under the CBI scanner in the last five years for their alleged involvement in various corruption cases with the Central Government according sanction to prosecute 66 of them.

The CBI has sent requests seeking sanction to prosecute 100 IAS officers, 10 CSS Group A officers and nine CBI Group A officers since 2010. Minister of State for Personnel, Public Grievances and Pensions, Jitendra Singh said a written response in the Rajya Sabha.

2010, ஆம் ஆண்டிலிருந்து 100 IAS அதிகாரிகளின் மீது பல்வேறுவகையான ஊழல் மற்றும் விதிமீறல்கள் தொடர்பான வழக்குகளை CBI ஆய்வு செய்தது. அவற்றுள் 66 வழக்குகள் மீது மேல் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது என்று மத்திய துணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துபூர்வமான தனது பதிலில் பாராளுமன்ற மேலவையில் தெரிவித்து இருக்கிறார்.

இது மட்டுமல்லாமல் இன்னொரு தகவலையும் நாம் காண நேரிட்டது. அது இதுதான்

Press Information Bureau 

Government of India
Ministry of Personnel, Public Grievances & Pensions
23-April-2015 17:13 IST

Corruption Cases Against IAS/IPS/IRS Officers 
According to the information made available by the Central Bureau of Investigation (CBI), it had registered 74 cases of Prevention of Corruption Act against IAS/IPS/IRS officers during the last three years i.e. 2012, 2013, 2014 & 2015 (31.03.2015). 

இவற்றிலிருந்து என்ன தெரிகிறது என்றால் படிப்பு வேறு; பண்பு வேறு என்பதுதான். படித்தவர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்கிற பொது விதி அல்லது நம்பிக்கை குழி தோண்டி புதைக்கபட்டிருக்கிறது என்கிற நிதர்சனம்தான்.

தன்னலம் கருதி அத்துமீறல்களில் ஈடுபடும் அதிகாரிகளைத் தவிர அடிப்படைக் கல்வியறிவு இல்லாமல் அமைச்சர்களாக ஆக்கப்படுபவர்களுக்கு தவறான வழிகளை சொல்லிக் கொடுத்து ஊழலில் திளைக்க நீரூற்றி வளர்ப்பதும் இத்தகைய IAS / IPS / IRS அதிகாரிகள்தான்.

தவறான புரிதல்களில் இருந்து அடிப்படைக் கல்வி அறிவு இல்லாமல் ஜனநாயக முறையில் அமைச்சர்களாக ஆகி வருகிறவர்களுக்கு நல்ல வழி காட்ட வேண்டிய பொது நலனும் பொறுப்பும் இததகைய அதிகாரிகளுக்கு இருக்கிறது. ஆனால் எத்தனை பேர்கள் இவ்வாறு நல்வழியில் நடப்பதற்கு துணை நிற்கிறார்கள் என்பது கேள்விக்குறி.

அமைச்சர்களுக்கும் அதிகாரத்தலைமைக்கும் தவறான வழிகளைக் காட்டுவது, அமைச்சர்களும் அதிகாரத் தலைமையும் தாங்களாகவே தவறுகளை செய்யத் துணியும்போது தைரியம் கொடுத்து துணை நிற்பது, தவறுகளை சுட்டிக் காட்டி திருத்துவது போன்ற பொறுப்புகளை மறந்து தாங்கள் கற்ற கல்விக்கு இழுக்குத் தேடுவதாகவே பலரின் செயல் அமைந்து இருக்கிறது.

அப்படியானால் ஒழுங்கான, உருப்படியான, நேர்மையான அதிகாரிகளே இல்லையா ? இப்படி ஒட்டு மொத்தமாக அனைவரையும் குற்றம் சாட்டுவது சரியா என்ற கேள்வி எழலாம். எத்தனையோ நேர்மையான முத்துக்கள் போன்ற சிறந்த அதிகாரிகள் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் அரசியல்வாதிகளோடு அவர்கள் ஒத்துழைக்காவிட்டால் அத்தகைய அதிகாரிகளின் திறமைக்கேற்ற துறைகள் அவர்களுக்கு வழங்கப் படுவதில்லை. ஒரு அரசில் மிகப் பெரிய பொறுப்பில் இருந்து பல நல்ல காரியங்களை செய்த அதிகாரி, அடுத்த ஆட்சி மாறும்போது எங்கேயாவது தண்ணி இல்லாத காட்டுக்குத் தூக்கி அடிக்கப்படுகிறார். இதனால் நமக்கு ஏன் வம்பு என்று தங்களை காப்பாற்றிக் கொள்ளும் ஒரு நிர்ப்பந்தத்துக்கு அதிகாரிகள் ஆளாக்கப்படுகிறார்கள்.

அண்மையில் தமிழக தலைமைச் செயலாளர் திரு. ராம் மோகன்ராவ் அவர்களின் வீடு வருமானவரி, அமலாக்கத்துறை, சி பி ஐ ஆகிய மத்திய அரசின் அதிகாரிகளால் சோதனை இடப்பட்டது. இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் உடைய அறை மத்திய ரிசர்வ் காவல் துறையின் துணையுடன் நாடே பதைத்து நிற்க சோதனையிடப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் தலைமைச் செயலாளர் உடைய மகனுடைய வணிக நிறுவனங்களும் சோதனைக்குள்ளாக்கப்பட்டன. இந்த வலையில் பல கொழுத்த மீன்களும் அகப்பட்டு அதிர்ச்சிக்குள்ளானோம். பலகோடிகள் அவர்களது வீடுகளிலும் அலுவலகங்களிலும் இருந்து தோண்டி எடுக்கப்பட்டன. இவைகள், அதிகாரவர்க்கங்கள் மக்களின் வயிற்றில் மண்ணை அடித்து சுய இலாபத்துக்காக சேர்த்துவைத்துகொண்ட அசிங்கமான அடையாளங்களுக்கும் சேகர் பாபு போன்ற சுரண்டல் பேர்வழிகளுடன் அதிகாரவர்க்கங்கள் கைகோர்த்துக் கொண்டு கொண்டாடிய ஊழல் திருவிழாவுக்கும்  அங்கு கைப்பற்றப் பட்டவை சான்று பகர்கின்றன.

ஆலமரமாய் கிளைகள் பரப்பி இருக்கும் இத்தகைய ஊழல் சாம்ராஜ்யத்தின் விரிவாக்கத்துக்கு வைட்டமினாகவும் உரமாகவும் திகழ்ந்தவர்கள் அந்த ஊழல்களைத் தடுத்து நிறுத்த தார்மீக பொறுப்பு எடுத்து இருக்க வேண்டிய அரசு அதிகாரிகளே. ஆனால் தேர்தலில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கின்றன. ஆட்சியின் திட்டங்களில் அதிகார வர்க்கங்களுடன் அதிகாரிகள் கூட்டணி அமைக்கிறார்கள்.

“அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்“ என்று புறநானூறு கூறுகிறது. நாடு, அறிவுடையோரை அடையாளம் கண்டு, அவர்களை தத்தமது துறைகளில் பயிற்றுவித்து, அவர்களுக்கு அளவில்லாத சலுகைகள் மற்றும் ஊதியங்களை வழங்கி, கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு செய்கிறது. அதற்காக அவர்களிடம் இருந்து நன்னடத்தை, நற்பண்பு,ஒழுக்கம், ஊழலற்ற தன்மைகள், பொறுப்புணர்வு, பொதுநலன் ஆகிய தன்மைகளைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மங்கை சூதகமானால் கங்கைக்குப் போகலாம். ஆனால் கங்கையே சூதகமானால் இந்த நாட்டை யார்தான் காப்பாற்ற முடியும்.

அரசு அதிகாரிகளின் ஊழல் கூட்டணியால் நாட்டு நலம் என்கிற குன்றம் தாழும்; கூட்டுச்சதி, ஊழல் போன்ற கோடுகள் உயரும்.

இபுராஹீம் அன்சாரி

சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 2 23

அதிரைநிருபர் பதிப்பகம் | November 05, 2016 | , ,

தொடர் 17.

திப்பு சுல்தானின் தீரமும் வீரமும் தியாகமும் ஓரிரு அத்தியாயங்களில் அடங்கிவிடாது. ஆகவே இன்னும் தொடர்ந்து பார்க்கலாம். 

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பிரிட்டிஷார் சிலருக்கு அடையாள பட்டபெயர்களை வழங்கினார்கள். “அரை நிர்வாண பக்கிரி” என்பது தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு வழங்கப் பட்ட பெயர். அந்தப் பெயர் மகாத்மா காந்தியின் தன்னலமற்ற - எளிமையான இயல்பைத்தான் உலகுக்குப் பறை சாற்றியது. 

அதே போல் ‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்’ என்பது திப்பு சுல்தானுக்கு பிரிட்டிஷ் பத்திரிகைகள் வழங்கிய பெயராகும். இந்தப் பெயர் திப்புவின் வீரத்தையும் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு அவர் எவ்வளவு பெரிய சவாலாக இருந்தார் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. இந்தியாவில் வாழ்ந்த ஆங்கிலேயர்களின் இதயங்களில் அவ்வப்போது அச்சத்தை விதைத்த வீரராகவே தீரர் திப்பு திகழ்ந்தார். அன்றைய ஆங்கிலேயர்களுக்கு திப்புவின் பெயர் ஒரு மாக்காண்டி, சாக்கு மஸ்தான் போல பயமுறுத்தலுக்காகக் காட்டப்பட்டது; கருதப்பட்டது. அதனால்தான் திப்பு சுல்தான் வீரமரணம் அடைந்த செய்தியை அறிந்து மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் என்பவன் உடனே உதிர்த்த வார்த்தைகள் ‘அப்பாடா! இன்று முதல் இந்தியா நம்முடையது’ என்பதாகும். 

“திப்புவின் தலைமையில் இந்திய விடுதலைப்போர் தொடர்ந்திருந்தால் இந்தியா என்றோ விடுதலை பெற்றிருக்கும்” என்று தனது யங் இந்தியா பத்திரிகையில்காந்தியடிகள் புகழ்ந்து எழுதினார். 

இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் ”ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும். அவர்கள் பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவர்கள் நெருங்கினார்கள்” எனக் குறிப்பிடுகிறார். (‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company‘ என The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73)).

திப்பு, 1767 ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப் படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியை பறித்தார். 

கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப் படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்கள் அனைத்திலும் திப்புவே வெற்றி பெற்றார்.

கி.பி. 1776ஆம் ஆண்டு மராட்டியர்களுக்குச் சொந்தமான காதி கோட்டையைத் திப்புசுல்தான் கைப்பற்றினார்.

திப்பு தன்னகத்தே விடுதலை தாகம் மிக்க மிகப்பெரிய இராணுவப் படையினைக் கொண்டிருந்தார். அவரது வீரர்கள் வெறுமனே கூலிக்கு மாரடிப்பவர்கள் அல்ல. இதில் குதிரைப்படை, ஒட்டகப்படை மட்டுமல்லாமல், போரில் பீரங்கிகளையும் பயன்படுத்தியுள்ளார். பிரிட்டிஷாரின் அத்துமீறல்களை அடக்குவதற்கு வாளும் வேலும் மட்டும் பயன்படாது என்று உணர்ந்து, முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டுமென்று மூளையில் பதித்துக் கொண்டவர் திப்பு. அதனால் , தொழில் முறையில் பயிற்சி பெற்ற ராணுவமும், தொழில் நுட்பமும் தேவை என்பதைத் திப்பு சுல்தான் புரிந்துகொண்டார். ஆதலால் கடற்பயிற்சி பள்ளிகளை உருவாக்கி, கடற்படையில் பீரங்கிகள் மற்றும் பிரிட்டிஷாருக்கு நிகராக நவீன ஏவுகணைகளைப் பயன்படுத்தினார். சக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் திப்பு சுல்தானே.

திப்பு சுல்தானிடம் மொத்தம் 3.20 லட்சம் வீரர்கள் இருந்தனர். மூன்று லட்சம் துப்பாக்கிகளும் 929 பீரங்கிகளும் 2.24 லட்சம் வாள்களும் இருந்தன. தன் தந்தை பயன்படுத்திய ஏவுகணைகளைத் திப்புசுல்தான் பிரெஞ்சு படைவீரர்களின் துணையுடன் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தி புதுவகையில் பயன்படுத்தினார்.

1782 டிசம்பர் 6ல் தந்தை ஹைதர் அலி மரணத்தைத் தொடர்ந்து 1782 டிசம்பர் 26ல் தமது 32ம் வயதில் திப்புசுல்தான் , கோலாரில் இருந்து இருபது மைல் தூரத்தில் இருந்த பாடி என்கிற இடத்தில் போர்க்களத்தில் வைத்து ஒரு சிறு கூடாரத்தில் மவுலவிகள் மற்றும் இந்துப் பண்டிதர்கள் முன்னிலையில், மைசூரின் மன்னராக முடி சூட்டிக் கொண்டார் . 

இன்றைய அரசியலில், முதல்வராக பதவிப் பிரமாணம் எடுத்த உடன் போடும் முதல் கையெழுத்து என்று எப்படி ஒரு பழக்கம் ஆரம்பித்து இருக்கிறதோ அப்படி மன்னராக முடி சூட்டிக் கொண்ட உடனே தனது மந்திரியிடம் திப்பு கேட்ட முதல் கேள்வி “ எங்கே அந்த துரோகிகளின் பட்டியல்?” துரோகிகளின் அழித்தொழிப்பு ஆரம்பமாகப் போகிறது என்று எண்ணிக் கொண்டு அந்தப் பட்டியல் திப்புவின் கைககளில் தரப்பட்டது. உடனே அந்தப் பட்டியல் சுக்கு நூறாக திப்புவால் கிழிக்கப் பட்டது. எனக்கு துரோகிகள் ஆனாலும் இவர்கள் என்னையும் என் மண்ணையும் சேர்ந்தவர்கள் இவர்களை அழிக்கும் பணியில் இனி நான் இறங்க மாட்டேன். நம் அனைவரின் பொது எதிரி ஆங்கிலேயன் தான் என்ற முழக்கத்துடன் அந்தப் பட்டியலில் இருந்த பெயர்கள் கிழிபட்டு காற்றில் பறந்ததன. வன்மமும் பகை உணர்வும் திப்புவின் நெஞ்சிலிருந்து நீக்கப்பட்டன . ‘இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யும் சால்பு ‘ திப்புவிடமிருந்து வெளிப்பட்டது. 

மேற்கு கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களை துரத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரெஞ்சுப் படையினரையும் சேர்த்துக் கொண்டு ஆவேசத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. ஆனால் வெள்ளைத்தோல் வெள்ளைத்தோலுக்கு விட்டுக் கொடுத்தது. பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயி, பிரிட்டனுடன் ஒரே கோப்பையில் ஒயின் அருந்தி சமரசம் செய்துக் கொண்டதால் திப்பு வேறுவழியில்லாமல் போரை நிறுத்த வேண்டியதாயிற்று. 1784 ஆம் ஆண்டு முடிவுற்ற இப்போரில் ஆங்கிலேய தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவால் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் ஆங்கிலேயர்களுக்கு திப்புவை நினைத்து குலை நடுங்கச் செய்தது.

கி.பி.1790 ஆம் ஆண்டு முதல் 1792 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்றாவது மைசூர்போர் ஆங்கிலேயனின் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனான தர்மராஜாவால் தூண்டி விடப்பட்டது. திருவிதாங்கூர் எங்களது நட்பு நாடு அதனை போரில் ஆதரிப்பது எமது கடமை எனக்கூறி ஜெனரல் கார்ன் வாலிஸ் திப்புசுல்தானுக்கெதிராக போர் புரிய தயாரானான்.

இச்சூழலில் திப்புவிற்கெதிராக போர்புரிய ஆற்காட்டு நவாபும், தொண்டைமான், ஹைதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள் அனைவரும் ஆங்கிலேயருடன் அநியாயமாக எதிர்பாராமல் இணைந்துக் கொண்டனர். ஆனாலும் இதனால் சற்றும் பின்வாங்கிவிடாத திப்பு, எதிரிகளை தன்னந்தனியாக துணிச்சலுடன் எதிர்கொண்டார்.

போரின் துவக்கத்தில் வெற்றி பெற்ற திப்பு போரின் இறுதிக்கட்டத்தில் மராட்டியர்கள் நயவஞ்சகத்தனமாக ஆங்கிலேயர்களுடன் இணந்துக் கொண்டதால் அடக்கி வாசித்து ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் செய்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். மைசூரின் பாதி நிலப்பரப்பும் எதிரிகள் வசம் சென்றது. இழப்பீடுத் தொகையாக ரூபாய் 3.3 கோடி நிர்ணயிக்கப்பட்டது.( சில நூல்களில் வராகன் என்று எழுதுகிறார்கள்) இழப்பீடு தொகையை செலுத்துவரை பிரிட்டிஷார் அடமானமாகக் கேட்டது என்ன தெரியுமா? 

திப்புவின் இருமகன்கள் எட்டுவயது நிரம்பிய அப்துல் காலிக் ஐந்து வயது நிரம்பிய முய்சுதீன் ஆகிய இரண்டு வீரத்திருமகனின் இன்னுயிர்ப் புதல்வர்களே ஆங்கிலேயர்கள் கேட்ட அடமானப் பொருள்கள். அதன்படி அடமானமாக வைக்கப் பட்டனர். இது எவ்வளவு பெரிய சோதனை என்பதை என்னும் போது கலங்காத - கண்ணீர் வடிக்காத நெஞ்சமே இருக்க இயலாது. ஒப்பந்தப் படி முழுத்தொகையும் கொடுத்த பின்னரும் காரன் வாலிஸ் பிளாக் மயில் செய்து வளம் மிக்க கூர்க் போன்ற பகுதிகளை அபகரித்தான். அத்துடன் அடமானத் தொகையை செலுத்தி இரண்டு வருடத்துக்குப் பிறகே தன்னுடைய மகன்கள் ஆங்கிலேயரால் திப்புவிடம் திருப்பி ஒப்படைக்கப் பட்டனர். தனது மகன்களை மீட்ட திப்பு 1792 ஆம் ஆண்டு நடந்த போருக்கு பதிலடிக் கொடுக்க வலிமையான முறையில் படையையும், பொருளாதாரத்தையும் கட்டமைத்தார்.

அன்றைய முஸ்லிம் உலகின் தலைமையகமாகத் திகழ்ந்த துருக்கிய பேரரசின் உதவியை நாடினார்.

1784ல் உஸ்மான்கான் என்பவரின் தலைமையில் துருக்கியின் புகழ்பெற்ற வரலாற்று நகரான கான்ஸ்டான்டிநோபிளூக்கு ஒரு தூதுக் குழுவை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தினார்.

திப்பு சுல்தானை போரில் நேரில் சந்திக்க திராணியற்ற ஆங்கிலேயர்கள் குறுக்கு வழியை கையாள ஆரம்பித்தனர். லஞ்சத்தை ஆயுதமாக பயன்படுத்தி திப்புவின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விலைக்கு வாங்கினர். இப்படி திப்புவின் துரோகம் செய்யும் அமைச்சர்களோடு தொகுதி உடன்பாட்டை முடித்த வெல்லெஸ்லி ஆங்கிலத் தலைமைக்கு எழுதிய கடித்தத்தில் இவ்வாறு குறிப்பிட்டான். “இனி நாம் துணிச்சலாக திப்புவின் மீது போர்த்தொடுக்கலாம்” .

ஆங்கிலேயருக்கு பயந்து அனைவரும் கைவிட்ட நிலையில், இறுதிப் போரில் தன்னந்தனியாக களமிறங்கினார் திப்பு. துரோகிகள் ஒருபக்கம் கூட இருந்தவர்களின் குழிபறித்தல் ஒருபக்கம் என எதிர்ப்புகள் ஒன்றிணைந்து தம்மை சந்தித்த பொழுதும் உதவிக்கு வருவதாக வாக்களித்திருந்த நெப்போலியனுக்கு வர இயலாத போதிலும் கலங்காமல் தமது 11 ஆயிரம் படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாக தீரமுடன் போரிட்டார் திப்பு.

ஸ்ரீரங்கப்பட்டினம் 30 நாட்களுக்கு மேலாக முற்றுகையிடப்பட்ட போதிலும் எதிரிகளால் திப்புவின் கோட்டைக்குள் நுழைய இயலவில்லை. இதனைக் குறித்து ஆங்கிலேய தளபதி மன்றோ கூறுகையில், ’30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தக் கோட்டையையும், தீவையும் தூரத்திலிருந்துக் கொண்டு தரிசிக்கத்தான் முடிந்தது’. என்று குறிப்பிட்டான். 

இப்படி இத்தனை நாள் முற்றுகையிட்டும் ஆங்கிலப் படை திப்புவின் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டையை நேரில் பார்த்தவர்களுக்குத் தெரியும். அந்தக் கோட்டையைச் சுற்றி காவிரி நதி ஓடிக்கொண்டு இருக்கும். கோட்டையின் உள்ளே இருந்து காவிரி நதிக்கு செல்லும் வகையில் ஒரு படித்துறை உண்டு. அந்தப் படித்துறை கோட்டை வாசல் போல பாதுகாப்பு மிக்கது. அங்கு பலத்த காவல் இருக்கும். ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டையை சுற்றிலும் காவி ஆற்றிலும் ஆங்கிலப் படைகள் சுற்றி வளைத்து இருந்தன. உள்ளே வரும் ஒரே வழியான ஆற்றுப் படித்துறை கோட்டை வாசலை ஒரு துரோகி ஆங்கிலேயப் படைகளுக்குத் திறந்துவிட்டான். திட்டமிட்டபடி அந்த வழியே ஆங்கிலப் படை உள்ளே நுழைந்தது. களத்தில் தனது வீரர்களுடன் தன்னந்தனியே திப்பு. 

போர்க்களத்தில் ஒப்பாரி ஏது? தன்னந்தனியாக வாளைச் சுழற்றி எதிரிகளை வீழ்த்த, எங்கிருந்தோ வந்த குண்டுகள் திப்புவை துளைத்து மண்ணில் சாய்த்தது. தப்பிவிட வாய்ப்பிருந்தும் அதை அவர் செய்யவில்லை. குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கும் திப்புவிடம். “அரசே! யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா,சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்! வாயை மூடு! ” என்று உறுமுகிறார் திப்பு. இந்த சந்தர்ப்பத்தில்தான் கடந்த அத்தியாயத்தில் நாம் குறிப்பிட்ட “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று திப்பு செய்த வீரப்பிரகடனம் வெளிப்பட்டது. அந்தப் பிரகடனத்துடனே இவ்வுலகில் தீரமிக்க - ஒரு மானமுள்ள மன்னனை மரணம் தழுவிக் கொண்டது. 

தன் வீரர்களின் உடல்களின் குவியல்களுக்கு மத்தியில் 1799, மே 4 அன்று ஷஹீதான திப்புவின் உடல் கிடந்தது. இந்திய மண்ணின் விடுதலைக்கு இப்படி ஒரு உரமானார். அவர் அருகில் அவர் நேசித்த திருக் குர்ஆனும், ‘இறைவனின் வாள்’ என பொறிக்கப்பட்ட வாளும் மட்டுமே அப்போது கிடந்தன. திப்புவின் உடல் கிடந்தது கண்டெடுக்கப் பட்ட இடத்தில் இன்றும் ஒரு கல் நடப்பட்டு இருக்கிறது. அதைப் பார்ப்பவர்கள் கண் கலங்காமல் இருக்க முடியாது.

இந்த நிகழ்ச்சியைப் படிக்கும்போது எனக்கு கீழ்க்கண்ட நாலடியார் பாடல்தான் நினைவுக்கு வந்தது.

இசையும் எனினும் இசையா தெனினும்
வசைதீர எண்ணுவர் சான்றோர் - விசையின்
நரிமா உளங்கிழித்த அம்பினின் தீதோ
அரிமாப் பிழைபெய்த கோல்?

என்பதே அப்பாடல்.

வஞ்சகம், சூழ்ச்சி, துரோகம் ஆகியவற்றால் 04.05.1799ஆம் நாள் திப்புசுல்தானை வீழ்த்திய பிரிட்டிஷார் அவரது அரண்மனைக்குள் புகுந்து அங்கிருந்த 9,700-க்கும் மேற்பட்ட நவீன ராக்கெட்டுகளை கைப்பற்றினர்.

திப்பு சுல்தான் தன் அரண்மனையில் அமைத்திருந்த ஓரியண்டல் லைப்ரரி என்ற பெயருடைய நூலகத்துக்குள் நுழைந்து, அங்கிருந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள், ராக்கெட் தயாரிப்பு சார்ந்த ஆய்வுக்குறிப்புகள் மற்றும் தொழில்சீர்திருத்தம் பற்றிய திப்புவின் பல்வேறு திட்டக்குறிப்புகள் ஆகியவற்றைக் கொள்ளையிட்டனர்.

இங்கிலாந்தில் கி.பி.19ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி காரணமாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து சீர்திருத்த நடவடிக்கைகளும் திப்புசுல்தானின் அரண்மனையிலிருந்து கொள்ளையடித்துச் செல்லப்பட்ட நூல்களின் வழிகாட்டுதலோடு மேற்கொள்ளப்பட்டவைதான். திப்புசுல்தானின் ராக்கெட் தயாரிப்பு சம்பந்தமான ஆய்வுக்குறிப்புகளைக் கொண்டு தனது ராணுவத்திற்கு தேவையான ராக்கெட்டுகளை தயாரிக்க விரும்பிய பிரிட்டிஷ் அரசு அதற்காக அப்போது இங்கிலாந்தில் புகழ்பெற்று விளங்கிய கண்டுபிடிப்பாளர் மற்றும் ராணுவத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவருமான சர் வில்லியம் காங்கிரிவ் என்பவரை அணுகியது.

சில ஆய்வுகளை மேற்கொண்ட வில்லியம் காங்கிரிவ், திப்புசுல்தானின் தயாரிப்பு முறைகளில் இருந்த சில அடிப்படை தவறுகளைத் திருத்தி, திப்புசுல்தானின் ராக்கெட்டை மேம்படுத்தி 1804 ஆம் ஆண்டு “காங்கிரிவ்“ என்ற ராக்கெட்டை வடிவமைத்தார். 16அடிகள் நீளம் கொண்ட மூங்கில் கம்புகளின் முனையில் கட்டி ஏவப்பட்ட “காங்கிரிவ் ராக்கெட்டுகள்“ ஒன்பது கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டவையாக இருந்தன. அவ்வாறு தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையே கி.பி. 1800களில் நடந்த பல யுத்தங்களில் பிரிட்டிஷ் ராணுவத்தினரால் அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டன.

திப்புவின் மரணத்துக்குப் பின் கி.பி. 1799ஆம் ஆண்டில் ஃபத்தே ஹைதர், அப்துல் காலிக், முஹ்யித்தீன், மொய்சுதீன்கான், முஹம்மது யாசீன், முகம்மது சுபான், ஷருக்கில்லாஹ், சிர்ருதீன், குலாம் முஹம்மது, குலாம் ஹமீது, முனீருத்தீன், ஜமீயுத்தீன் ஆகிய பன்னிரண்டு ஆண்குழந்தைகளும் குடும்ப உறுப்பினர்களும் திப்புவின் தளபதிகளில் சிலரும் பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டு வேலூர் கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதே சமயம் திப்புவின் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் மிகுந்த மரியாதை கொண்டிருந்த வீரர்களும் பக்கீர்களும் குடிமக்களும் மைசூரில் இருந்து புலம் பெயர்ந்து வேலூரைச் சுற்றி முகாமிட்டனர். இன்று வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, மேல் விசாரம் , வழுத்தூர் ஆகிய ஊர்களில் உள்ளோர் இப்படிப் புலம் பெயர்ந்தவர்களின் வம்சாவழிகளே.

சிறையில் அடைபட்டிருந்த திப்புவின் மைந்தர்களோடு இரகசியத் தொடர்பை எற்படுத்திக்கொண்டு, ஆலோசனை செய்து ஒரு குறிப்பிட்ட நாளில் திடீர்ப் புரட்சி செய்ய என்று முடிவு செய்தனர். ஆனால், அந்தப் புரட்சித் திட்டம் ஒற்றர்கள் மூலமாகக் கசிந்து ஆங்கிலேயருக்குத் தெரியவந்ததால் வேலூர் கோட்டையைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது. 

இதனை அறியாத திப்புவின் வாரிசுகளும் அவரது பற்றாளர்களும் 10.07.1806ஆம் நாள் அதிகாலை 2.00மணியளவில் அதிரடியாகப் புரட்சியில் இறங்கினர். 100க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் சிப்பாய்களைக் கொன்றனர். கோட்டையின் மேல் திப்புசுல்தானின் புலிக்கொடியைப் பறக்கவிட்டனர். திப்புவைப் போன்ற ஒரு வீரன் புதைக்கப்படவில்லை விதைக்கப் பட்டான் என்பதற்கு இதுவே உதாரணம். 

இரண்டு நாட்களில் ஆற்காட்டிலிருந்து பிரிட்டிஷாரின் 19 லைட் ட்ரகூன்ஸ் என்ற 19ஆவது குதிரைப் படை ஆயுதங்களுடன் வந்து அப்புரட்சியை முற்றிலும் முறியடித்தனர். 3000த்திற்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். பிடிபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்களைப் பீரங்கி வாய்களில் கட்டி, பீரங்கியால் சுட்டுக் கொடூரமாகக் கொன்றனர்.

அந்தப் புரட்சிக்குப் பின் திப்புவின் குடும்பத்தினர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு பிரிவினர் மைசூருக்கும் மற்றொரு பிரிவினர் வங்கத்திற்கும் அனுப்பப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பின் சில அண்டுகள் கழித்து திப்புவின் வாரிசுகளுக்கு மானியம் வழங்குவோம் என்று பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. ஆனால் வழங்கவில்லை. பிரிட்டிஷாரைப் போலவே அதன்பின் வந்த இந்திய அரசும் அவர்களைக் கைவிட்டு கை கழுவி விட்டது. இன்று திப்புவின் வாரிசுகள் கல்கத்தாவில் ரிக்ஷா இழுப்பதாக ஒரு தகவல் கூறுகிறது. 

திப்புவைப் பற்றி பல வல்லுனர்கள் வழங்கிய புகழ் மொழிகள் சிலவற்றை இங்கு பட்டியலிடுவதில் பெருமை கொள்கிறேன். 
  • Major Base, “He was a God fearing man in the real sense of the world. He never formulated dual policies and avoided lies and hypocrisy”.
  • Lord Carnwallis (British Governor General in India) “Were Tipu happened to be let go scot-free, we would have bid farewell in India”.
  • Lord Wellesely (British Governor General during the Fourth Battle). “After Tipu’s death no ruler has enough guts to challenge us in future.”
  • Dr. John R. Anderson, “Never again would India witness a man of the likes of Tipu.”
  • Sir Thomas Menzo in his autobiography, “Everybody in the Sultanate Khudadad’ was treated with justice, without any bias and partiality because of which his state had become extremely strong in the country and still remains unparalleled till now.”

விடுதலைப் போரின் முன்னோடியாகவும் ஆங்கிலேயனின் குலை நடுக்கமாகவும் வாழ்ந்து காட்டிய மாவீரன் திப்புவின் வாழ்வேன் வீர வரலாற்றை சஞ்சய் கான் என்கிற பாலிவுட் நடிகர் , தொலைக் காட்சியில் தொடராக தயாரிக்க முற்பட்டபோது இந்தியாவின் நாசகார சக்திகள் கொடுத்த இன்னல்கள் கொஞ்சமல்ல. 

சஞ்சய்கான் ’SWORD OF TIPPU SULTHAN‘ என்ற தொலைக்காட்சித் தொடரை படமாக்கிய ப்ரீமியர் சினிமா ஸ்டுடியோவுக்குத் தீ வைக்கப்பட்டதால் 55 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஏராளமான பொருள்சேதம் ஏற்பட்டது. சஞ்சய்கான் பலத்த காயங்களுடன் பல மாத சிகிச்சைக்குப் பின்னர் உயிர்தப்பினார்.

இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு திப்பு சுல்தானின் உண்மையான வீரமிக்க வரலாற்றை ஒளிபரப்ப ஒரு நபர் தணிக்கை குழுவை நியமித்தது. அந்த நபர் பாசிச சிந்தனை னைக்கொண்ட மல்கானி என்பவர் ஆவார். கரசேவைக்கு கல் அனுப்பிய கட்சியினரிடமிருந்து கஞ்சி வாங்கிக் குடிக்கும் கயமைத்தனம் கொண்ட அவரோ தீரன் திப்புவின் தியாக வரலாற்றை ‘கற்பனைக்கதை’ என்று குறிப்பிடவேண்டும் என்று கண்மூடித்தனமாகக் கூறினார். முஸ்லிம்களின் வரலாற்றை மறைப்பதற்கு கூச்சம் இல்லாத கூமுட்டைகளும் அவ்வாறே செய்து ஒளிபரப்பின. நடக்காத இராமாயணமும் மகாபாரதமும் வரலாறு என்று ஒளிபரப்பாகின்றன. ஆனால் நடந்த வரலாறு கற்பனைக் கதை என்கிற முத்திரையிடப்பட்ட நிகழ்வையும் சுதந்திர இந்தியா பார்த்துவிட்டு அதன் பொக்கை வாய்பொத்தித்தான் இருந்தது நண்பர்களே! 

தீரன் திப்புவின் புகழ், இப்படி ஆயிரம் கைகளால் மறைக்கப் பட்டாலும் ஆதவன் மறைவதில்லை என்றே இந்திய வரலாற்றில் நின்று நிலவும். 

இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திக்கலாம்.
=================================================== 
எழுத உதவியவை : 
Nadvi, M. Ilays, Tipu Sultan (A Life History) translated by M. Saghir Hussain, N. Delhi 2004, p.83.
Irfan Habib, Resistance and Modernisation under Haider Ali and Tipu Sultan, 1st ed., N. Delhi, p. Xxiii.
I.H. Qureshi: “The Purpose of Tipu Sultan’s Embassy to Constantinople”, Journal of Indian History, Vol.24 (1945), pp. 77-84.
B. Shaik Ali, Tipu Sultan, New Delhi, 1971, p.57.
Jawaharlal Nehru, The Discovery of India, 6th ed., Delhi, edn., Delhi, 1956,pp. 272-73.
Tarachand, History of Freedom Movement of India, revised edn., Delhi, 1965, 
தமிழ் e பேப்பர்.
=================================================== 
இபுராஹீம் அன்சாரி