Showing posts with label ஒரு பிள்ளையின் ஏக்கம். Show all posts
Showing posts with label ஒரு பிள்ளையின் ஏக்கம். Show all posts

ஒரு பிள்ளையின் ஏக்கம் ! - காணொளி 1

அதிரைநிருபர் பதிப்பகம் | August 17, 2016 | , , ,

இஸ்லாமிய பெற்றோர்கள் அனைவரின் ஏக்கமும் பிரார்த்தனைகளும் தங்களது குழந்தைகள் சாலிஹானவர்களாகவும் நல்லதையே நாடக்கூடியவர்களாகவும் அதையே செய்யக் கூடியவர்களாகவும் இருக்கத்தான் விரும்புவர்.

அவ்வகையில் ஏங்கும் பெற்றோர் எத்தனை பேர் தாங்களும் சாலிஹானவர்களாக, மார்க்கம் எடுத்துரைத்த கடமைகளை பொறுப்புடனும் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி செய்கிறார்களா என நமக்குள்ளே கேட்டு கொள்ளும் அளவுக்கு ஆங்காங்க ஒரு சில நிகழ்வுகளையும் பார்க்கத்தான் செய்கிறோம்.

மாஷா அல்லாஹ், இந்த காணொளியின் நாயகி தனது பெற்றோருக்காக அவர்களின் நலனுக்காக மறுமையின் நிலையை எண்ணி ஏங்கும் இந்த குழந்தையைப் போன்றவர்களை பெற்றெடுத்தவர்கள் பேறுபெற்றவர்களே !


அதிரைநிருபர் பதிப்பகம்