Showing posts with label அதிரைநிருபர். Show all posts
Showing posts with label அதிரைநிருபர். Show all posts

ஒரு பிள்ளையின் ஏக்கம் ! - காணொளி 1

அதிரைநிருபர் பதிப்பகம் | August 17, 2016 | , , ,

இஸ்லாமிய பெற்றோர்கள் அனைவரின் ஏக்கமும் பிரார்த்தனைகளும் தங்களது குழந்தைகள் சாலிஹானவர்களாகவும் நல்லதையே நாடக்கூடியவர்களாகவும் அதையே செய்யக் கூடியவர்களாகவும் இருக்கத்தான் விரும்புவர்.

அவ்வகையில் ஏங்கும் பெற்றோர் எத்தனை பேர் தாங்களும் சாலிஹானவர்களாக, மார்க்கம் எடுத்துரைத்த கடமைகளை பொறுப்புடனும் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி செய்கிறார்களா என நமக்குள்ளே கேட்டு கொள்ளும் அளவுக்கு ஆங்காங்க ஒரு சில நிகழ்வுகளையும் பார்க்கத்தான் செய்கிறோம்.

மாஷா அல்லாஹ், இந்த காணொளியின் நாயகி தனது பெற்றோருக்காக அவர்களின் நலனுக்காக மறுமையின் நிலையை எண்ணி ஏங்கும் இந்த குழந்தையைப் போன்றவர்களை பெற்றெடுத்தவர்கள் பேறுபெற்றவர்களே !


அதிரைநிருபர் பதிப்பகம்

ஓட்டுக்கு பணம் - லஞ்சம் ஹராம் 12

அதிரைநிருபர் பதிப்பகம் | April 27, 2016 | , , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அஸ்ஸலாமு அலைக்கும்....!

தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் தருவாயில் இருக்கிறது வரும் ஏப்ரல் 24ம் தேதி தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் நாள். மக்கள் யாருக்கு ஓட்டு போடுவது என்று அநேகம் முடிவு செய்திருப்பார்கள். இச்சூழலில் பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் போக்கு தமிழக அளவில் அதிகரித்துள்ளது. இதை யார் செய்கிறார்கள் என்பது நாடறிந்த விசயமாகி விட்டது. தன் அணிக்கு ஒட்டுப் பெறுவதற்காக பணம் பட்டுவாடா செய்வதில் அதிரைவாசிகள் மட்டும் விதிவிலக்கா என்ன?

ஒவ்வொரு குடிமகனுக்கும் ஓட்டுரிமை ஒரு ஜனநாயக கடமை, காசுக்காக ஓட்டு போடுவதும் ஓட்டுப்போட வைப்பதும் நம் நாட்டில் சட்டப்படி குற்றம். சட்டத்தை இயற்றும் அவைக்கு செல்பவனே சட்டங்களை மதிப்பதில்லை இந்நாட்டில் எவர்தான் சட்டத்தை எல்லாம் மதிக்கிறார்கள், மக்களுக்கு உழைப்பின்றி காசு கிடைக்குது இதுக்கெல்லாமா ஒரு கட்டுரை? என்ற எண்ணம் இதை படிக்கும் சிலருக்கு தேன்றும். உண்மை தான். ஜனநாயகத்தை மதிக்கும் இந்தியனாக அணுகுவதற்கு முன்பு இதை ஒர் இஸ்லாமிய பார்வையில் அணுகுவதே ஒவ்வொரு முஸ்லீகளின் கடமை. சிந்திப்பீர்...!

ஓட்டுக்காக (தீர்ப்புக்காக) பணம் வாங்குவது லஞ்சம் இது ஹராம் என்பதை பின் வரும் இறைவசனங்களும், நபி மொழிகளும் நமக்கு நன்கு உணர்த்துகிறது.

அல்லாஹ் கூறுகிறான்:

நம்பிக்கைக் கொண்டோரே! உங்களுக்கிடையே, உங்கள் பொருள்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்! திருப்தியுடன் நடக்கும் வியாபாரத்தைத் தவிர.  (அல்-குர்ஆன் 4:29)

மேலும் உங்களுடைய செல்வங்களை உங்களுக்கடையில் உரிமையின்றி உண்ணாதீர்கள். நீங்கள் அறிந்து கொண்டே (பிற) மனிதர்களின் செல்வங்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணுவதற்காக அவற்றை (இலஞ்சமாகக் கொடுக்க) அதிகாரிகளின்பால் கொண்டும் செல்லாதீர்கள். (அல்குர்ஆன் 2:188)

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்:

தீர்ப்புக்காக லஞ்சம் கொடுப்பவனையும் லஞ்சம் வாங்குபவனையும் அல்லாஹ் சபிப்பானாக! (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அஹமத்)

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘லஞ்சம் கொடுப்பவர் மீதும் லஞ்சம் வாங்குபவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக! என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இப்னுமாஜா)

அல்லாஹ்வின் இறை வசனமும், நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையும் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தடுக்கப்பட்டுள்ளது என்பதை மிகத் தெளிவாக உணர்த்தியிருக்கிறது.

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் மாறிமாறி இருந்து வரும் இருபெரும் கட்சியும் இன்னும் மத்தியில் ஆட்சிப் பொறுப்பிலிருக்கும், ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் கட்சிகளும் கடந்த பல தேர்தல்களில் பணம் பட்டுவாடா செய்து ஓட்டுக்கள் பெற்றார்கள் என்பதை ஊரில் உள்ள மனசாட்சியுள்ள ஒவ்வொருவரும் அறிவார்கள். மார்க்கத்தை விளங்காத காலத்தில் சில தெருக்களில் பிரபலமான நம்மூர் பெண்கள் (பெருசுகள்) இரவோடு இரவாக வீடுவீடாக சென்று பணம் கொடுத்து ஓட்டுக்கள் பெரும் முயற்சியில் ஈடுப்பாட்டார்கள் என்பதை இன்றைய இளைஞர்கள் சிறுபிள்ளைகளாக இருந்த காலத்தில் கண்டிருப்பார்கள். பாவம் அந்த பெருசுகளுக்கு இது போன்ற ஹதீஸ்கள், குர்ஆன் ஆயத்துக்கள் எத்தி வைக்கப் படாமிலிருந்திருக்கலாம். யா அல்லாஹ்! ஓட்டுக்காக பணம் லஞ்சம் பட்டுவாடா செய்த அந்த பெண்மணிகளை மன்னித்து விடுவாயாக. ஆனால் இன்றும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அவலம் தொடர்கிறது என்பது தான் வேதனை. தேர்தல் அல்லாத நேரத்தில் மார்க்கத்தை பேசும் சிலரும் இது போன்ற ஹராமான செயல்களை நம் சமூகத்தவர்கள் செய்கிறார்கள் என்று அறிந்தும் அதை தடுக்க மறுக்கிறார்கள், என்ற செய்திகளை கேள்விப் படும்போது போது மிக வேதனையாக உள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் ஓட்டுக்காக பணம் விநியோகம் மறைத்து வைத்தும் ரகசியமாகவும் பட்டுவாட நடந்து வருவதை பத்திரிகைகளிலும் தொலைக் காட்சிகளிலும பிடிபடுவதை காண முடிகிறது. சில வீடுகளில் இருக்கும் நபர்களின் ஓட்டு எண்ணிக்கையை வைத்து தொகையை முடிவு செய்து கொடுக்கப்படுகிறதையும் அறிய முடிகிறது. தற்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் பணம் பட்டுவாடா செய்பவர் 5000-ருபாய்க்கு 500-ருபாயும், 1000-ரூபாய் 100-ரூபாயும் பட்டு வாடா செய்பவர் கமிஷன் என்று சொல்லி எடுத்துக் கொள்கிறார்கள் என்றும் தகவல்கள் கசிந்து கொண்டு இருக்கிறது. என்ன கேவலமோ...! இது உண்மையா? அல்லது பொய்யா? என்பதை அல்லாஹ் மட்டுமே நன்கறிவான்.

இது நம் பணம் தான் என்று சாக்கு சொல்லும் பிரபலங்கள் சொல்லுகிறார்கள், ஏன் நாம் இதை வாங்கிக் கொள்ளக்கூடாது? என்று ஒரு சில அறிவாளிகள் வாதாடுகிறார்கள். இவர்கள் இப்படிச் சொல்லுவதால் அது நம் பணமாகி விடுமா? அடுத்த தேர்தல் தேதிக்குள் எனக்குள்ள பங்கு பணம் தரவேண்டும் என்று இந்த அரசியல் கொள்ளைகார கூட்டத்துடன் நம் மக்கள் அக்ரிமண்ட் போட்டுத்தான் சென்ற தேர்தலில்  தேர்ந்தெடுத்து அனுப்பினார்களா?  ஓசியில் பணம் எவன் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள வெட்கமில்லையா நம் மக்களுக்கு?

அன்பானவர்களே ஓட்டுக்காக பணம் வாங்குவதும் லஞ்சமே, அது தடுக்கப்பட்டது என்பதை மேல் சொல்லப்பட்ட இறைவசனங்களும், நபிமொழியும்  நமக்கு ஞாபகப்படுத்துகிறது. இதை அதிரையில் உறவுகளிடம் எடுத்துச் சொல்லுங்கள், பணம் வாங்கியிருந்தால் தந்தவரிடமே அதை திருப்பி கொடுத்துவிட சொல்லுங்கள். ஊருக்கும் நம் சமுதாயத்திற்கும் நல்லது செய்பவர் யார் என்பதை முடிவு செய்து ஓட்டுப்போட சொல்லுங்கள்.

ஏகத்துவத்தை இவ்வுலகில் நிலைநிறுத்தி, இவ்வுலகிலும் மறுவுலகிலும் அல்லாஹ்வின் திருப்தியை அடைவதை மட்டுமே லட்சியம் என்பதை மறந்து, கட்சிகளுக்கு நம் பலம் காட்ட வேண்டும் என்று கச்சைகட்டி உண்மைகளை மறைத்து பொய்களை மெய்படுத்தி மேடை மேடையாக இந்த தேர்தல் பிரச்சாரங்களில் பேசிவரும் நம் சமுதாய சகோதரர்களுக்கு கிழ் வரும் இறைவசனத்தை கேள்வியாக வைத்து இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

வேதமுடையோரே! ஏன் உண்மையை பொய்யுடன் கலக்கிறீர்கள்! அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள். (திருக்குர்ஆன் 3:71)

அல்லாஹ் போதுமானவன்.

தயவு செய்து உங்கள் பொன்னான வாக்குகளை தகுதியானவருக்கும் இன்றைய சூழலில் யார் ஆட்சிக்கு வந்தால் நம் சமுதாயம் அமைதியுடன் நிம்மதியாகவும் இருக்கும் என்ற திடமான தீர்மானத்தில் ஓட்டு போடுங்கள் இன்ஷா அல்லாஹ் !

அதிரை நிருபர் பதிப்பகம்

இக்றா ! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | January 28, 2016 | , , , , ,

இக்றா !

ஓதுவீராக...!

என்னது ?

இப்படி சொன்னால் என்ன ?

அப்புறம்...?

`அதுதான்`

இக்றா !


நீண்ட நாள் கனவுதான் நம்மவர்களுக்கு உதவிகள் செய்து அரசு வேலைகளில் பணியிடங்களை நிரப்ப வேண்டும் அவர்களுக்கும் சமுதாயத்துக்கும் பலன் அளிக்கும் விதமாக சேவை செய்ய வைக்க வேண்டும் என்பதே...

அதற்கான சுழியொன்று போட்டதோ ஒரு சகோதரி அந்த சுழியைச் சுற்றி வட்டமொன்று போட்டுக் கொண்டோம் அதனுள் திட்டமொன்றையும் உள்ளடக்கினோம், அங்கே சட்ட திட்டம் என மூச்சு முட்ட வைக்காமல், இலகுவான செயல் திட்டம் தாயாரித்தோம்.

பெயர் !?

இஸ்லாமிய பெயராக இருக்க வேண்டும், இலகுவாக இருக்க வேண்டும்...

மற்றுமொரு சகோதரர் ஒருவரும் இணைந்தார் அன்னாந்து பார்த்தால் அவருக்கு தெரிவதெல்லாம் வளர்வதும் தேய்வதும் ஆராய்வதுமே அவரின் ஆய்வு.

என்ன செய்யலாம் ?

இக்றா !

ஓதுவீராக...!

என்னது ?

இப்படி சொன்னால் என்ன ?

அப்புறம்...?

`அதுதான்`

இக்றா !

என்ன செய்யப் போவுது ?

`அரசு உயர் மற்றும் மேலான்மை பணிகளுக்கான பயிற்சிக் களம்`

ஓ... இதுதான் அதுவா !

அல்ஹம்துலில்லாஹ்...

வெற்றிப் படிகள் கட்டியெழுப்ப மாணவமணிகளின் சிந்தனை குவியத் துவங்கி விட்டது...

இனி தொடரும், பல ஊர்களுக்கும் படரும் அது அவரவர்களின் சக்திக்குட்பட்ட பங்களிப்புடன்...

இன்ஷா அல்லாஹ் !

இக்றா
`அரசு உயர் மற்றும் மேலான்மை பணிகளுக்கான பயிற்சிக் களம்`

பகிர்வு பரிந்துரை : அபுஇப்ராஹிம்

இவர்களும் அதிரைநிருபர்களே - கிரவ்னுரை [பழசுதான் இருந்தாலும் இதற்கு மவுசுதான்...] 55

அதிரைநிருபர் பதிப்பகம் | January 07, 2016 | , ,

"நம் யாவராலும் நன்கு அறியப்பட்ட கவிக்கு விளக்கவுரை கொடுத்திடும் "வார்த்தை விளையாட்டின் எழில்" பதிந்திருக்கும் கிரவ்னுரை சிறப்புப் பதிவு :"

அஸ்ஸலாமு அலைக்கும். எல்லாபுகழும் அல்லாஹுக்கு மட்டுமே!அல்லாஹ் நம் பாவங்களை மன்னிப்பானாக..இவர்களும் அதிரை நிருபர்களே! ஒவ்வொருவரின் குணாதிசயங்களை அவர்களின் பங்களிப்பை மட்டுமே வைத்துக்கொண்டு கிட்டதட்ட நெருங்கி பழகியதைப் போல் மிக சரியான அளவுகோலில் அளந்த சகோ.சபீர் அவர்களை கண்டு வியக்கிறேன். ஏதோ நம் நிழல் போல் வந்து நம்மை அறிந்து , நம் குணங்கள் தெரிந்து பின் கருத்திட்டது போல் ஒவ்வொருவரைப்பற்றியும் உள்ளங்கையில் நெல்லி கனி போல் சொன்னவிதம் அல்ஹம்துலில்லாஹ் அருமையிலும் அருமை. சிலரிடம் அவர்கள் பல காலம் கூடஇருந்து பழகி எழுதி இருக்கிறார்கள். ஆனால் இங்கு குறிப்பிட்ட நபர்களை பற்றி செவிவழி கேட்டதும், தீர ஆராய்ந்தும், அவர்களின் படைப்பான எழுத்தின் தன்மையை வைத்து கனித்ததும் வியத்தகு சாதனை.அல்ஹம்துலில்லாஹ்.


இவர்கள்

அதிரை அஹ்மது காக்கா:

தமிழுக்கு தாதா...
இங்கிலீஸுக்கு துரை!
தமிழில்...
தன்னிகரற்ற
தனிக்காட்டு ராஜா!
இலக்கணம் உடுத்திய
இதயத்தில் இளைஞர்!
மரபுடைத்தோ
மரபை உடைத்தோ
இவர்கள்மேல் என்றும்
எமக்குப் பிரியம்!

மிக நேர்த்தியான சரியான கணிப்பும்,விளக்கமும்.இந்த அதிரை ஈன்ற "கோ"மகனை பற்றி இன்னும் சொல்லலாம். ஆனாலும் சபைக்கு போதுமான அளவில் பறிமாற பட்ட செவிக்குணவு இது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இதம்.பலவிதம்.
-------------------------------------------------------------------------------------

ஆசான் ஜமீல் காக்கா:

புதையல் தேடி
ஜமீனைத் தோண்டு - அறிவு
பொக்கிஷம் வேண்டி
ஜமீல் காக்காவைத் தூண்டு!
கற்பித்தலும் கற்றலும்
காக்காவின் கண்கள்!
தமிழ்...
தன்னை
அலங்கரித்துக் கொள்கிறது-
அதி-அழகு ஆசானின்
ஆணைக்குட்படும்போதெல்லாம்!

இவர்களைப்பற்றி பார்த்து பழகியதை சொன்னதால் அப்படியே சொல்லிவிட்டார்கள். மேலும் நான் பார்த்தவரை இவரின் வார்தையை நான் வழி மொழிவதுதான் சாலச்சிறந்தது.
-------------------------------------------------------------------------------------

சகோ. ஷாஃபி:

வலைப்பூவின்
தலைப்புக்கு
முழக்கம் தந்தவர்.
தர்க்கங்களின்போது
தகிக்கும் தமிழ்...
வாழ்வியல் வசனங்களில்
வருடும்...
இவர்கள்
வார்த்தெடுக்கும் மொழி!

இவர் வார்தெடுக்கும் மொழியும், ஆதாரங்களை தோன்டி எடுக்கும் லாவகமும். தொல் பொருள் ஆராட்சியாளார் தோற்பார் இவரிடம். உண்மை வரும் வரை எந்த ராசா ஆனாலும் விடாப்பிடியாய் வழிக்கு கொண்டுவரும் விடாகண்டன் அன்பு சகோதரன். சி.பி.ஐ அலுவலர்கள் இவரிடம் பணி நிமித்தம் பயிற்சி எடுத்தால் ஸ்பெக்ட்ரம் எல்லாம் வெளியில் வந்துவிடும். இவரிடம் அந்த கேசு போய் இருந்தால் ராசாவுக்கும்,அவன் ராசா(கருணாநிதி)க்கும் களிதான் போங்க.
-------------------------------------------------------------------------------------

என் ஜாகிர்:

இவன்
படைப்பை
படிக்கையில்
புகைப்பட வாயிலும்
புன்னகை பூக்கும்....
கசப்போ கரிப்போ
இவன்
கையெழுத்தில் இனிக்கும்!
தீய சக்திகள்
தீண்டாமல் வாழ
இவன் சிந்தனயை
தினமும்
மூன்று வேளை
உணவுக்குப் பின்
உட்கொள்ளவும்!

கவியோடு சேர்ந்த நால்வர் படையில் ஒரு சேனை.கவி நண்பனுக்கும் சிலனேரம் இடுவார் ஆனை! நம் கவியால் படிக்கப்பட்ட ,கவியையும் நன்கு படித்த நகமும் சதையும்.இவரின் குணம் கான இவரின் எழுத்தே கண்ணாடி. இவரின் முன்னாடி நிற்றாலே நோய் ஓடிப்போய்விடும் என்பது திண்ணம் சரிதானே கவிஞரே உங்கள் நண்பரைப்பற்றிய என் எண்ணம்!!!!
-------------------------------------------------------------------------------------

சகோ. ஹாலித்:

பதிவர்களை
முன்னேற்றப் பாதையில்
உந்தும் சக்தியில்
என்னைப்போல் ஒருவரான
இவரைப்போல் ஒருவராக
எல்லோரும் மாறனும்!
கச்சித மொழியாடலின்
குத்தகைக்காரர்!

மிகச்சரியான கணிப்பு. முகஸ்துதியை விரும்பாதவர். விருந்து வைத்து கவனித்தாலும் செய்த தவரை சுட்டிகாட்டும் நேர்மையிம் முகம் கொண்டவர்.சிக்கனமானவர் நேரத்தை கடை பிடிப்பதில். கெட்டிக்காரர். அநீதிக்கு அக்னி முகம் காட்டுபவர். நல்ல எழுத்தாளர்.

-------------------------------------------------------------------------------------

அலாவுதீன்:

அல்லாஹ்வின் மார்க்கத்தை
அழகாய் எத்தி வைப்பான்,
கடனின்றி வாழ
கச்சித புத்தி சொல்வான்!
நல்லொழுக்க வாழ்க்கையை
தமக்குள் சாதித்து
தரனிக்கும் போதிப்பவன்!

நல்ல வாத்தியார். நல்லொழுக்கம் போதிக்கும் மார்க்க சிந்தனையாளர். வாழ்வில் சந்திக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுபவர்.
-------------------------------------------------------------------------------------

ஹமீது!

வழக்கு மொழிமூலம் அதிக
வாக்குகள் பெற்றவர்,
விஞ்ஞான கட்டுரைகூட
விளையாட்டாய் விளக்குவார்!
நாக்கிலே நக்கல் - நல்
வாக்கிலே நையாண்டி
குட்டிப் பின்னூட்டங்களில்
சுட்டி வள்ளுவன்!

சமூக அக்கறையாளார்.. நற்சிந்தைக்கு சொந்தகாரர்.விகடகவி.சொல்லில் நகைச்சுவை குழைத்துத்தருபவர். விஞ்ஞானத்தில் மேல் காதல் கொண்டவர்.மெஞ்ஞானம் இஸ்லாமே எல்லாத்திற்கும் என்பதை அழுத்த பதிபவர். நல்ல நண்பராய் இருப்பவர்.
-------------------------------------------------------------------------------------

அபு இபுறாஹீம்:

கணினிக் காட்டுக்குள்
கம்பீர சிங்கம் நீர்....
கூட்டுக் குழுமத்தின்
கொத்தான ஆணி வேர்...
வலைப்பூ உலகத்தில்
வனப்பான பூங்கா நீர்!
சொல்லாடல் சாம்ராஜ்யத்தின்
சக்கரவர்த்தி!

சரியா நாடி பிடித்திருக்கிறீர்கள். இவரை நாடி வருபவருக்கு நல்லதேயே செய்யக்கூடியவர்.. குணம் நாடி, எல்லாரும் வருவர் இவரிடம் ஓடி! என் காக்காவின் நண்பன்,எனக்கும் நண்பன், என் தம்பிகளுக்கும் நண்பன்(fun,fun,fun).எப்படி இவரால் மட்டுமே அப்படி எல்லாருக்கும் நண்பனாய், சகோதரனாய் இருக்க முடிகிறது?. யாரிடமும் சிண்டு முடியாத சிந்தனை வாதி.இவரை பாரட்டுவது என்னை நானே முதுகில் தட்டி கொடுப்பது போல்.உதவிக்கு நாம் இவரிடம் சென்று கேட்க வேண்டாம் . நமக்கு உதவி தேவை என்பதை இவரே அறிந்து கொள்வார் அந்த உதவியை நம் தேவை கருதி முழுதும் அற்பனிப்போடு செய்வார். வால் முளைக்காத வால் இவர். என்றும் திரிந்து விடாத பால் இவர். இவரின் மேல் கொண்ட அன்பால் சொல்கிறேன் என்று மட்டும் நினைக்க வேண்டாம். இவரின் பண்பால் அப்படி சொன்னேன். இவரின் உள்ளம் பாலை போல் வெண்மை அதில் நிறைந்திருப்பதெல்லாம் நன்மை.
------------------------------------------------------------------------------------

கிரவுன் தஸ்தகீர்:

தமிழொரு மொழியெனில்
தாமதில் எழில்!
சொல் விளையாட்டில்
சங்ககாலச் சித்தர்!
கவிதைப் பிரியர் - உமை
கவி யாரும் பிரியார்!
இவர்
அழைத்தால் மட்டும்
கைகட்டி வாய் பொத்தி
எப்படி...
வரிசையில் நிற்கின்றன
வார்த்தைகள்?!

நன்றி! என்னை பற்றிய செய்தி மிகையா? அன்பின் வெளிப்படா? ஆகினும் மீண்டும் நன்றி.என்னை முழுமையாய் அறிய மேலே உள்ளவரை கேட்டால் சொல்வார்(அபு இபுறாகிம் காக்கா).
-------------------------------------------------------------------------------------

எம் எஸ் எம் நெய்னா முஹம்மது:

மழை பெய்தால்
மண்மணக்கும்...
இவர்
எழுத்திலெல்லாம்
மனம் மயங்கும்!
நாம்
அறிந்த அதிரையைவிட
இவர்
அறிவித்த அதிரையே...
அழகோ அழகு!

இனியவர். நகைச்சுவைமன்னன், சமூதாய அக்கரையாளன்,சமாதான புறா.மண்ணை வர்னிப்பதில் மற்றொரு வைர முத்து,இவரின் ஒவ்வொரு வார்தையும் முத்தில் பதிந்த வைரம்.
-------------------------------------------------------------------------------------

சகோதரி அன்புடன் மலிக்கா:

தமிழ் மொழி தறித்து
தமிழ்நாட்டில் போரிட்டு
யுனிகோட் வள்ளல்
உமர்தம்பி காக்காவுக்கு
அங்கீகாரம் வென்றெடுத்த
எங்கூரு வேங்கை!
கவிதையை சுவாசித்து
கவிதையை உண்டு
கவிதையாய் வாழ்பவர்!

மல்லிகைச்சரமாய் வார்தை கோர்பவர். இனிய சகோதரி.மார்கம் வகுத்த கோட்டை தாண்டாதவர், கற்பனை கோட்டையை தாண்டியவர். நடமாடும் கவிக்குயில்.சாதனை பெண்.சளிக்காமல் கவிதை தருபவர்.மற்ற கலைகளிலும் தேர்ந்தவர். நம்மை சார்ந்தவர்.
---------------------------------------------------------------------------------

யாசிர்:

யாசிரின் பின்னூட்டம்
யாசிக்கவும் தயார்!
ஆக்கத்தைக் குறைத்து
ஊக்கத்தை பதிபவர்!
இவரின்
பின்னூட்டங்கள் தொகு...
பி ஹெச் டி பெறு!

மிகச்சரியாக சொல்லியுள்ளீர். கருவில் குழந்தை தாங்கி பின் பெற்றெடுப்பவள் தாயார்.இவரின் கருத்துக்கு பத்து மாதம் கூட காத்திருக்க தயார். வாழைப்பழத்தில் ஊசி ஏத்து"பவர்.ஊசி பட்டாசும் இவரே! அணுகுண்டும் இவரே. எளிய பண்பாளர். இவர் கருத்து எழுதுவார் என்றே கவனித்து எழுத வேண்டியுள்ளது.பள்ளிக்கூடத்துக்கு இன்பெக்ஸன் வரும் அதிகாரி போல இவரின் வரவு.
-------------------------------------------------------------------------------------

அப்துர்ரஹ்மான்:

கற்பனை செய்வதில்
விற்பன்னர் இவர்!
பூவோ பொண்ணோ
நதியோ நாற்றோ
இவர் கவிதைக்கு
உட்பட்டால்...
காலமெல்லாம் செழிப்பே!

என் பால்ய நண்பன்.என் முதல் வாசகன்,படிப்பாளி.பள்ளியில் படித்ததைவிட அனுபவ பாடம் அதிகம்.அறிவாளி.கற்று கொள்வதில் தாகம்மிக்கவன். கணவு கான்பவன்.கற்பனையின் உச்சம் காண்பவன்.ஒரு மரத்தை பற்றி எழுதும் முன் அந்த மரத்தின் மரபை படிப்பவன் பின் படைப்பவன். ஆணிவேரையும், சல்லிவேரையும் ஆழ்ந்து ஆராய்ந்து எழுதுபவன். நல்லவிமர்சகன்.இன்னும் கவனம் செலுத்தினால் நம் ஊரின் நாளைய மற்றொரு அதிரை கவி.
------------------------------------------------------------------------------------

ஹிதாயத்துல்லாஹ்:

உயிரூட்டப்பெற்ற
அறிவுக்களஞ்சியம் - இவர்
உரமேற்றப்பெற்ற
குறிஞ்சி பூதம்!
இவருக்கு
சின்ன கிரீடம் ஒன்று
செய்தணிவித்து...
குட்டி கிரவுன்
என்றே
கூப்பிட ஆசை!

என் இளவல்.உடன் பிறந்தவர்களில் என் அன்பை அதிகம் பெற்றவன். எத்தனை வயதானாலும் என் செல்லம்.அதிகாரம் மிக்கவன்,ரோசக்காரன்,பல நேரம் எனக்கு அண்ணன், ஆலோசனை சொல்லும் மந்திரி. நேர்மைக்கு எதிராக யார்வந்தாலும் விடான்.இவன் வளரும் வயதில் இவன் வயதை ஒத்தவர்கள் வண்ண கோழி குஞ்சு வளர்த்து வந்தனர்.இவனோ சமுதாயதின் மேலும், ஊடகத்துறைமேலும் எண்ணங்களை வளர்த்தான். பள்ளி படிப்பு படிக்கும் போதே பத்திரிக்கைத்துறையில் உயர்பதவியில் இருந்தவன். இவன் தேடிய பயணம் நான் அறிந்தவை வேறு. புரட்சியாளனால் வார்க்கபட்டவன்(காலம் கருதி சொல்லவில்லை-அபு இபுறாகிம் காக்கா போன்றோர் அறிவர்) சமுதாயத்தின் மேல் நிசமாய் கணவு கான்பவன்.உலக விசயம் விரல் நுனியில் வைத்திருக்கும் அன்பு தம்பி எனக்கும் பல விசயத்தில் ஆசான்.(அல்லாஹ் போதுமானவன். எல்லாப்புகழும் அல்லாஹுக்கே).
-----------------------------------------------------------------------------------

அதிரை முஜீப்:

இவர் ஒரு டாட் காம்
ஆனால் நாட் காம் (calm)
குறை சொல்லமுடியாத
கோபத்தில் கோமான்!
சமூக அக்கறையில்
சுயநலமற்ற சீமான்!

சமுதாயத்துக்கு எதிரான சமரில்(போர்களம்) இவர் அக்க போரல்ல ஆக்கபோர்! அமர்(வீரன்).இவரை பார்போரையும் ஈர்பாராய் இருப்பவர்.வேள்வி தீயை எரியவிட்டுகொன்டே அந்த தழல் தாழ்ந்துவிடாமல் கொழுந்துவிட்டு எரியச்செய்து சமுதாயத்துக்கு வெளிச்சம் தேடுபவர். கல்வி கண்ணை என்றும் மணக்கண்னாய் சுமந்து நல்ல நல்ல மாணாக்கன் வரவேண்டும் என்று பாடுபடுபவர். நாளை சமுதாயத்தூனனை நிறுவத்துடிக்கும் சிற்பி! மற்றவருக்கு பாடம் கற்பி,கற்பி என்று கதருபவர். சமுதாய ஊழியன் இவரின் அன்புக்கும், எண்ணத்துக்கும் இப்போதைக்கு அன்பு முத்தங்கள்.
-------------------------------------------------------------------------------------

ஷரபுதீன் நூஹு:

படித்த சமுதாயம்
இவருக்குப்
பிடித்த கனவாகும்...
கல்வி விழிப்புணர்வு
இவர்
வகுத்த வழியாகும்!

படிக்காமல் இருக்கலாம் என்ற எண்ணம் இருக்கலாகாது என்று எண்ணும் மற்றோரு அபுல் கலாம்.கணவு கான்பவர் கணவிலும் நம் சமுதாயம் படித்ததாய் கான கணவு கான்பவர்.இவரின் ஆதாங்கம் சமுதாயத்துக்கு ஆதாயம்.
------------------------------------------------------------------------------------

அதிரை மீரா:

மீரா வுக்கொரு
தீராக் கனவு
யாரா வது ஒரு
பேரா வது
ஊரா ளும்படி பயிலவேண்டும் என!
படித்தது பொறியியல்
படிப்பு மட்டுமே தம் பொறியில்!

மீரா! சமுதாய எண்ணம் மீறாத வீரா!உனக்குள்(உங்களுக்குள்) உள்ளபொறி! சமுதாயம் முன்னேற வேண்டும் என்கிற குறி! அது நன்மை பயக்கும் வெறி!வாழ்த்துக்கள்.
-----------------------------------------------------------------------------------

அப்துல் மாலிக்:

சமூக
அக்கறைத் தூரிகையால்
அழகு தமிழ் தொட்டு
இவர்
தீட்டியதெல்லாம்
சீர்திருத்த சிந்தனைகள்.

சமுதாயத்தின் நன்மைக்கு அறக்கூவலிடுவதில் தலைமை ஏற்பவன். இணையத்தின் வழியாக கருத்தாகவும்,மடலாகவும் சமுதாயதிற்கு தேவையான வழிமுறைகளை எல்லாருக்கும் கொண்டு சேர்ப்பவன்.சக சகோதரனின் முன்னேற்றத்தை தன் முன்னேற்றமாய் பார்பவன்.
------------------------------------------------------------------------------------

அபு ஆதில்:

இவர்
ஆக்கமெல்லாம் நல்
நோக்கம் நிரம்பிய நீர்
தேக்கம்போல!

மனதில் உள்ளதை சொல்லிவிடுகிறேன்.. இந்த சகோதரரை பற்றி அதிகம் தெரியாததால் .விபரமாக எழுதமுடியவில்லை. இவரிடம் இருந்து வந்த சில கருத்துகளை வைத்து.இவரின் எண்ணத்திலும் சமூதாயத்தின் அக்கரை சந்தனமாய் மணம்வீச காண்கிறேன்.
-------------------------------------------------------------------------------------

சின்னக் காக்கா:

சின்னக் காக்கா
ஒரு
பெரிய தம்பி,
பருவத்தில் தம்பி...
சமூக
பார்வையில் காக்கா!

அன்பு நண்பன் அழகிய எண்ணங்களுக்குச்சொந்தகாரன். இன்னும் இவரிடம் இருந்து நிறைய எதிர்பார்கிறேன்.மருந்துபோலும்,விருந்துபோலும் வராமல் தொடர்ந்து வந்து கருத்து சொல்லிவிட்டும். ஆக்கங்கள் அனுப்பியும் தொடர்பில் இருக்கவும்.
-------------------------------------------------------------------------------------

மீராஷாஹ் (எம் எஸ் எம்):

ஏறத்தாழ எமக்கு
செல்லப்பிள்ளை எனினும்
எடுத்துரைக்கும் திறமையிலே
யாருக்கும்
சலைக்காப் பிள்ளை.

இவரின் தகப்பனார் வித்தகர் என்றால் இவரோ மொழிவிற்பனர்.வார்தை செரிவும்,அடர்தியும் இவரின் எழுத்தில் தெரியும் முதிர்ச்சி.இவரிடம் கற்றுகொள்ளனும் ஊடக பயிற்சி.இவரைபோன்ற இளைஞர்களின் முயற்சி. நாளைய சமுதாயத்தின் வளர்ச்சி.
-------------------------------------------------------------------------------------

அபு ஈஸா:

திட்டமிடும் நேர்த்தியை
இவரிடம்
பிச்சையாய்க் கேட்கலாம்.

அப்பப்ப லேசா வந்துட்டுபோனாலும் கணமாய் தந்துட்டுபோகும் சிந்தனையாளர். இவரின்ஆராய்ச்சி பாணி ரொம்ப மனதை ஈர்க்கக்கூடியது. வாழ்துக்கள் இன்னும் எழுதவும்.
-------------------------------------------------------------------------

அதிரை ஷஃபாத்:

செக்கடிக் குளமும்
செல்ல அலைகளும்
முக்குளித் தாராவும்
முல்லை மலரும்
என
மயக்கியவர்
தொடர
தற்போது தயக்கம் ஏனோ?

தம்பியை பார்த்து பல வருடம் ஆகிவிட்டன. நல்ல படிப்பாளி.பார்பதற்கு நேப்பாளி.இவரின் அன்னாளய மேடைப்பேச்சு கேட்டு சந்தோச பட்டவன் நான். இன்னும் மழையின் சாரல் தலைக்கு மேலே! சில்லென்ற காற்று கண்ணத்தை வருடிச்செல்கிறது.('சி'ல்கிறது)வண்டின் ஓசையும் ,இடியின் மிரட்டல் தொனியும் இன்னும் கேட்டுகொண்டிருக்கின்றன.மின்னல் பளிச்சென்றுமின்னிச்செல்கையில் கண் இமைகள் அனிச்சையாய் மூடிக்கொள்கிறது. என்று வரும் அன்று பேய்ந்து விட்டு போன மழை மருபடியும். கவிதைத்தாகம் தீர்க்க வருமா>மேகம் வந்தால் வரும்.MAY COME?
---------------------------------------------------------------------------------

தாஜுதீன்:

யுத்த முடிவில்
பூத்த
புத்தம்புது பூ இவர்!
பதிவர் மனம் திரட்டி
அதிரைமணம் கண்டவர்!
இவர்
நாடுவது நலம்...
எனவே
இவரோடு
கூடுவரும் நலமே!

இளையவர்,இனியவர்,கிரிக்கெட்விளையாட்டில் நல்ல கேப்டனாய் செயல்பட்டவர். இங்கே சீரியஸாய் தலைமை பொறுப்பில் பார்க்கவே சந்தோசமாய் இருக்கிறது. காலம் இவ்வளவு பக்குவத்தை தமக்கு தந்திருக்கிறதா? சந்தோசத்திலும்,ஆச்சரியத்திலும் மனம் திண்டாடிபோகிறது.எத்தனை பொறுப்பு?பல நேரம் பணியின் நெருப்பு.இத்துடன் பொன்சிரிப்பு,அத்தனையும் தாண்டி இதை நடத்தும் பாங்கு தம்பி உடையான் படைக்கஞ்சான் அனால் இங்கு பெயரில் தம்பி தாங்கிய அண்ணன் உடையான் நீர் எதையும் தாங்குவீர்.
---------------------------------------------------------------------------------

அதிரை நிருபரின் ஆஸ்தான கவி

இவரைபற்றி தனியே இந்த ஆக்கம் வரும்பொழுது கருத்து சொல்கிறேன். மாலுமி இவரை பற்றி காலனிலை ஆராய்ந்துதான் வடிக்க முடியும் இல்லையென்றால் எப்படி இருவரியில் முடியும்??

-------------------------------------------------------------------------------------

CROWN

இவர்களும் அதிரை நிருபர்களே 7

அதிரைநிருபர் பதிப்பகம் | August 28, 2014 | , ,

அதிரை அஹ்மது காக்கா:
தமிழுக்கு தாதா...
இங்கிலீஸுக்கு துரை!
தமிழில்...
தன்னிகரற்ற
தனிக்காட்டு ராஜா!
இலக்கணம் உடுத்திய
இதயத்தில் இளைஞர்!
மரபுடைத்தோ
மரபை உடைத்தோ
இவர்கள்மேல் என்றும்
எமக்குப் பிரியம்!

ஆசான் ஜமீல் காக்கா:
புதையல் தேடி
ஜமீனைத் தோண்டு - அறிவு
பொக்கிஷம் வேண்டி
ஜமீல் காக்காவைத் தூண்டு!
கற்பித்தலும் கற்றலும்
காக்காவின் கண்கள்!
தமிழ்...
தன்னை
அலங்கரித்துக் கொள்கிறது-
அதி-அழகு ஆசானின்
ஆணைக்குட்படும்போதெல்லாம்!

சகோ. ஷாஃபி:
வலைப்பூவின்
தலைப்புக்கு
முழக்கம் தந்தவர்.
தர்க்கங்களின்போது
தகிக்கும் தமிழ்...
வாழ்வியல் வசனங்களில்
வருடும்...
இவர்கள்
வார்த்தெடுக்கும் மொழி!

என் ஜாகிர்:
இவன்
படைப்பை
படிக்கையில்
புகைப்பட வாயிலும்
புன்னகை பூக்கும்...
கசப்போ கரிப்போ
இவன்
கையெழுத்தில் இனிக்கும்!
தீய சக்திகள்
தீண்டாமல் வாழ
இவன் சிந்தனயை
தினமும்
மூன்று வேளை
உணவுக்குப் பின்
உட்கொள்ளவும்!

சகோ. ஹாலித்:
பதிவர்களை
முன்னேற்றப் பாதையில்
உந்தும் சக்தியில்
என்னைப்போல் ஒருவரான
இவரைப்போல் ஒருவராக
எல்லோரும் மாறனும்!
கச்சித மொழியாடலின்
குத்தகைக்காரர்!

அலாவுதீன்:
அல்லாஹ்வின் மார்க்கத்தை
அழகாய் எத்தி வைப்பான்,
கடனின்றி வாழ
கச்சித புத்தி சொல்வான்!
நல்லொழுக்க வாழ்க்கையை
தமக்குள் சாதித்து
தரனிக்கும் போதிப்பவன்!

ஹமீது!
வழக்கு மொழிமூலம் அதிக
வாக்குகள் பெற்றவர்,
விஞ்ஞான கட்டுரைகூட
விளையாட்டாய் விளக்குவார்!
நாக்கிலே நக்கல் - நல்
வாக்கிலே நையாண்டி
குட்டிப் பின்னூட்டங்களில்
சுட்டி வள்ளுவன்!

அபு இபுறாஹீம்:
கணினிக் காட்டுக்குள்
கம்பீர சிங்கம் நீர்...
கூட்டுக் குழுமத்தின்
கொத்தான ஆணி வேர்...
வலைப்பூ உலகத்தில்
வனப்பான பூங்கா நீர்!
சொல்லாடல் சாம்ராஜ்யத்தின்
சக்கரவர்த்தி!

கிரவுன் தஸ்தகீர்:
தமிழொரு மொழியெனில்
தாமதில் எழில்!
சொல் விளையாட்டில்
சங்ககாலச் சித்தர்!
கவிதைப் பிரியர் - உமை
கவி யாரும் பிரியார்!
இவர்
அழைத்தால் மட்டும்
கைகட்டி வாய் பொத்தி
எப்படி...
வரிசையில் நிற்கின்றன
வார்த்தைகள்?!

எம் எஸ் எம் நெய்னா முஹம்மது:
மழை பெய்தால்
மண்மணக்கும்...
இவர்
எழுத்திலெல்லாம்
மனம் மயங்கும்!
நாம்
அறிந்த அதிரையைவிட
இவர்
அறிவித்த அதிரையே...
அழகோ அழகு!

சகோதரி அன்புடன் மலிக்கா:
தமிழ் மொழி தறித்து
தமிழ்நாட்டில் போரிட்டு
யுனிகோட் வள்ளல்
உமர்தம்பி காக்காவுக்கு
அங்கீகாரம் வென்றெடுத்த
எங்கூரு வேங்கை!
கவிதையை சுவாசித்து
கவிதையை உண்டு
கவிதையாய் வாழ்பவர்!

யாசிர்:
யாசிரின் பின்னூட்டம்
யாசிக்கவும் தயார்!
ஆக்கத்தைக் குறைத்து
ஊக்கத்தை பதிபவர்!
இவரின்
பின்னூட்டங்கள் தொகு...
பி ஹெச் டி பெறு!

அப்துர்ரஹ்மான்
கற்பனை செய்வதில்
விற்பன்னர் இவர்!
பூவோ பொண்ணோ
நதியோ நாற்றோ
இவர் கவிதைக்கு
உட்பட்டால்...
காலமெல்லாம் செழிப்பே!

ஹிதாயத்துல்லாஹ்:
உயிரூட்டப்பெற்ற
அறிவுக்களஞ்சியம் - இவர்
உரமேற்றப்பெற்ற
குறிஞ்சி பூதம்!
இவருக்கு
சின்ன கிரீடம் ஒன்று
செய்தணிவித்து...
குட்டி கிரவுன்
என்றே
கூப்பிட ஆசை!

அதிரை முஜீப்:
இவர் ஒரு டாட் காம்
ஆனால் நாட் காம் (calm)
குறை சொல்லமுடியாத
கோபத்தில் கோமான்!
சமூக அக்கறையில்
சுயநலமற்ற சீமான்!

ஷரபுதீன் நூஹு:
படித்த சமுதாயம்
இவருக்குப்
பிடித்த கனவாகும்...
கல்வி விழிப்புணர்வு
இவர்
வகுத்த வழியாகும்!

அதிரை மீரா:
மீரா வுக்கொரு
தீராக் கனவு
யாரா வது ஒரு
பேரா வது
ஊரா ளும்படி பயிலவேண்டும் என!
படித்தது பொறியியல்
படிப்பு மட்டுமே தம் பொறியில்!

அப்துல் மாலிக்:
சமூக
அக்கறைத் தூரிகையால்
அழகு தமிழ் தொட்டு
இவர்
தீட்டியதெல்லாம்
சீர்திருத்த சிந்தனைகள்!

அபு ஆதில்:
இவர்
ஆக்கமெல்லாம் நல்
நோக்கம் நிரம்பிய நீர்
தேக்கம்போல!

சின்னக் காக்கா:
சின்னக் காக்கா
ஒரு
பெரிய தம்பி,
பருவத்தில் தம்பி...
சமூக
பார்வையில் காக்கா!

மீராஷாஹ் (எம் எஸ் எம்):
ஏறத்தாழ எமக்கு
செல்லப்பிள்ளை எனினும்
எடுத்துரைக்கும் திறமையிலே
யாருக்கும்
சலைக்காப் பிள்ளை!

அபு ஈஸா:
திட்டமிடும் நேர்த்தியை
இவரிடம்
பிச்சையாய்க் கேட்கலாம்!

அதிரை ஷஃபாத்:
செக்கடிக் குளமும்
செல்ல அலைகளும்
முக்குளித் தாராவும்
முல்லை மலரும்
என
மயக்கியவர்
தொடர
தற்போது தயக்கம் ஏனோ?

தாஜுதீன்:
யுத்த முடிவில்
பூத்த
புத்தம்புது பூ இவர்!
பதிவர் மனம் திரட்டி
அதிரைமணம் கண்டவர்!
இவர்
நாடுவது நலம்...
எனவே
இவரோடு
கூடுவரும் நலமே!

அப்புறம்...நான்:
கனவை விதைத்தேன்
கவிதை என்றனர்...
புத்திமதி சொன்னேன்
கவிக்காக்கா என்றனர்...
ஊர் நினைவில் உழன்றேன்
அதிரைக் கவி என்றனர்...
தற்போது...
அஞ்சலில் சேர்க்க மறந்த
என்
அத்தனைக் கடிதங்களுக்கும்
முகவரி தந்து
முத்திரை யிட்டனர்...
அதிரை நிருபரின்
ஆஸ்தான கவி என்று!

ஊக்கத்தை
ஊட்டி வளர்ப்பதில்
போட்டியின்றி வென்ற
ராஃபியா காக்கா (எம் எஸ் எம்):
ஜஹபர் சாதிக்
அபு இஸ்மாயில்
அஹமது மன்சூர்
அப்துல் ரஷீத் ரஹ்மானி
அதிரை அபூசகோதரிகள்
ஃபாத்திமா ஜொஹரா
கதீஜா

இன்னும்...
இர்ஷாத் எனும்
இளங்காற்றும்...
கடைசியில் வந்தாலும்
கலக்கும் ரியாஸ்...
அதிரை ஆலிம் எனும்
அறுமைத் தோழர்...
தற்போது
ஜகா வாங்கி நிற்கும்
ஜலீல் மற்றும் ஜலால்

வலைப்பூ வந்து
வாசித்து
கருத்தைக் கருவேற்ற
வாசக வட்டமும்
அதை
பின்னூட்டமெனெ
பின்னியெடுத்த பங்களிப்பாளர்களும்
இழு என இழுத்த
இழுப்புக்கெல்லாம்
அழுதுவடியாமல்
எழுந்து நிற்கும்
அதிரை நிருபர் குழுவும்
என-
அத்தனை பேரும்
அதிரை நிருபரே!


சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
Sabeer.abuShahruk
இது ஒரு மீள்பதிவு

பெருநாள் சாப்பாடு எப்படி !? 2

அதிரைநிருபர் பதிப்பகம் | July 28, 2014 | , , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

குல்லுஆம் வஅன்த்தும் பின் கைர் !

அல்ஹம்துலில்லாஹ் ! இந்த வருடம் ஹிஜ்ரி 1435 ரமளான் மாதம் மிகச் சிறப்பாக நம்மிடையே ஒன்றி உலாவி நம் அமல்களை வலுப்படுத்தி உள்ளத்தாலும் உணர்வுகளாலும் தூய்மையை நம்மிடையே நிலைத்திருக்கச் செய்துவிட்டு நம்மை விட்டு விடைபெற்றுக் கொண்டது !

இன்று வளைகுடாவில் பெருநாள், ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னர் ஒருமணி நேரத்திற்கு முன்னர் எழுந்து தூய்மையான குளியல் பின்னர் தொழுகை, தொடர்ந்து நபிவழி பெருநாள் தினத் துவக்கம் அதிகாலைப் பொழுது புலரும் அற்புதமான தினம் துபாயில் விடிந்தது !

பெருநாள் தொழுகைக்கும் கூடினோம், தொழுதோம், இறைஞ்சினோம் வல்ல இறைவன் அல்லாஹ்விடமே !

வழியெங்கும் சவால் விடும் போஸ்டர்கள் இல்லை! எங்களோடு இணைந்து தொழும் தொழுகைக்கு சலுகைகள் என்ற தம்பட்டம் இல்லை ! மெளலவிகளைத் தேடும் தேடல் இல்லை!



அடுத்து என்ன !?

அதிரையின் வாசம் அமீரகத்தில் வீசாமல் ஒரு பெருநாளா ?

அதிரைப் பெருநாள் என்றாலே நம்மில் பெரும்பாலோர் மூக்கிலும் நாக்கிலும் வேர்க்கும் ! அதுதான் மண்வாசனை தூக்கலுடன் இருக்கும் காலை பசியாறவும் அதனைத் தொடரும் பகல் சாப்பாடும் கலைகட்டும் !

இடியப்பம் இல்லாத இல்லமா ? வீட்டில் செய்யா விடினும் (அன்னபூர்னாவுக்கு) தேடிச் சென்று எங்கே கிடைக்குமோ அங்கே காத்திருந்து விழித்திருந்து வாங்கி வந்து சாப்பிடும் வேகம் நம்மவர்களிடையே அதிகம்.

இன்று பெருநாள் (காலைச்) சாப்பாட்டில் கலந்து சிறப்பித்தவைகள் !

மலேசியா பரோட்டா
அண்ணபூர்னா இடியப்பம்
இந்தியா ஆட்டுக்கறி
ராஸல்கைமா பண்ணைக் கோழி
கேரளா சேமியா
சைனா கடப்பாசி
சவுதி வட்டிலப்பம்
பன்னாட்டு இனிப்பு புளிப்பு துணையுடன்...

அதிரையர்களாகிய எங்களை சுவைக்க வைத்தது இன்றைய சிறப்பம்சம். !

அடுத்தென்ன பகல் சாப்பாடு(தான்)...!

பின்னூட்டத்தில் பகல் சாப்பாட்டின் முன்னோட்டம் இன்ஷா அல்லாஹ் தொடரும்... !

அது சரி உங்கள் பெருநாள் எப்படி !? [அதிரையில் நாளைக்காமே !?]

அதிரைநிருபர் பதிப்பகம்

பெருநாள் சாப்பாடு எப்படி !? - கருத்துக்களம் ! 25

அதிரைநிருபர் பதிப்பகம் | August 08, 2013 | , , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

குல்லுஆம் வஅன்த்தும் பின் கைர் !

அல்ஹம்துலில்லாஹ் ! இந்த வருடம் ஹிஜ்ரி 1434 ரமளான் மாதம் மிகச் சிறப்பாக நம்மிடையே ஒன்றி உலாவி நம் அமல்களை வலுப்படுத்தி உள்ளத்தாலும் உணர்வுகளாலும் தூய்மையை நம்மிடையே நிலைத்திருக்கச் செய்துவிட்டு நம்மை விட்டு விடைபெற்றுக் கொண்டது !

இன்று வளைகுடாவில் பெருநாள், ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னர் ஒருமணி நேரத்திற்கு முன்னர் எழுந்து தூய்மையான குளியல் பின்னர் தொழுகை, தொடர்ந்து நபிவழி பெருநாள் தினத் துவக்கம் அதிகாலைப் பொழுது புலரும் அற்புதமான தினம் அஜ்மானில் விடிந்தது !

பெருநாள் தொழுகைக்கும் கூடினோம், தொழுதோம், இறைஞ்சினோம் வல்ல இறைவன் அல்லாஹ்விடமே !

அடுத்து என்ன !?

அதிரையின் வாசம் அமீரகத்தில் வீசாமல் ஒரு பெருநாளா ?

அதிரைப் பெருநாள் என்றாலே நம்மில் பெரும்பாலோர் மூக்கிலும் நாக்கிலும் வேர்க்கும் ! அதுதான் மண்வாசனை தூக்கலுடன் இருக்கும் காலை பசியாறவும் அதனைத் தொடரும் பகல் சாப்பாடும் கலைகட்டும் !

இடியப்பம் இல்லாத இல்லமா ? வீட்டில் செய்யா விடினும் (அன்னபூர்னாவுக்கு) தேடிச் சென்று எங்கே கிடைக்குமோ அங்கே காத்திருந்து விழித்திருந்து வாங்கி வந்து சாப்பிடும் வேகம் நம்மவர்களிடையே அதிகம்.

இன்று பெருநாள் (காலைச்) சாப்பாட்டில் கலந்து சிறப்பித்தவைகள் !

மலேசியா பரோட்டா
சிங்கப்பூர் இடியப்பம்
இந்தியா ஆட்டுக்கறி
துபாய் ரவ்வா
சைனா கடப்பாசி
சவுதி வட்டிலப்பம்
பன்னாட்டு இனிப்பு புளிப்பு துணையுடன்...

அதிரையர்களாகிய எங்களை சுவைக்க வைத்தது இன்றைய சிறப்பம்சம். !

அடுத்தென்ன பகல் சாப்பாடு(தான்)...!

பின்னூட்டத்தில் பகல் சாப்பாட்டின் முன்னோட்டம் இன்ஷா அல்லாஹ் தொடரும்... !

அது சரி உங்கள் பெருநாள் எப்படி !? [அதிரையில் நாளைக்காமே !?]

அதிரைநிருபர் பதிப்பகம்

அதிரைநிருபர் வலைக்காட்சி செய்தித் தொகுப்பு ! 8

அதிரைநிருபர் | March 11, 2013 | , , , ,

வாரம் ஒருநாள் வலைக்காட்சி செய்தித் தொகுப்பு ஒவ்வொரு வாரமும் வழங்கி வருவதை அறிவீர்கள் அதன் தொடர்ச்சியாக இந்த வார செய்தித் தொகுப்பு !

இந்த வார செய்தியில், கோவை சரோஜினி கொலை, சென்னையில் கணவனை கொலை செய்த பெண், காந்தியவாதி சசிபெருமாள் உண்ணாவிரதம், பா.ஜ.க வின் இந்த வார பரப்பரப்பு,  இலங்கைக்கு எதிரான ஐ.நா தீர்மானம்,டெல்லியில் 3 வயது சிறுமி கற்பழிப்பு  போன்ற செய்திகள் எமது பார்வையுடன் காணொளியாக உங்களனைவரின் பார்வைக்கும்.


இந்த வலைக்காட்சி பற்றிய மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் நேரிலும், அலைபேசி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்து வரும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர்...!

இன்னும் புதுப் பொலிவுடனும் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப சகோதரர்களுடன் இணைந்து சிறப்பாக வெளிவர இருக்கிறது இன்ஷா அல்லாஹ்...

அதிரைநிருபர் பதிப்பகம்

அதிரைநிருபர் வலைக்காட்சி செய்தித் தொகுப்பு ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | February 01, 2013 | , , ,


வாரம் ஒருநாள் வலைக்காட்சி செய்தித் தொகுப்பு ஒவ்வொரு வாரமும் வழங்க இருப்பதை சென்ற வாரம் அறிவித்தோம் அதன் தொடர்ச்சியாக இந்த வார செய்தித் தொகுப்பு !

இந்த வலைக்காட்சி பற்றி மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் நேரிலும், அலைபேசி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்து வரும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர்...!

விரைவில் புதுப் பொலிவுடனும் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப சகோதரர்களுடன் இணைந்து சிறப்பாக வெளிவர இருக்கிறது இன்ஷா அல்லாஹ்...


அதிரைநிருபர் பதிப்பகம்

டெல்லி மாணவி கற்பழிப்பு - யாருக்கு தண்டனை !? 35

அதிரைநிருபர் | December 30, 2012 | , , , , ,

டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவத்தால் சிகிச்சை பலனின்றி உயிர் பலியான பெண் அமானத் பற்றிய செய்தியே தேசிய மற்றும் உலகம் தழுவிய செய்தி ஊடகங்களில் இதுவே கடந்த இரண்டு நாட்களாக தலைப்பு செய்தி!

அந்த கற்பழிப்பு கொடூரத்தை செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று கோஷங்கள் கடந்த இரண்டு வாரமாக இந்திய ஊடங்களின் ஒளி, ஒலிகளில் மின்னிக் கொண்டிருகிறது என்பதை அனைவரும் அறிந்ததே!.

TRIBUTES TO INDIA’S DAUGHTER, INDIA DAUGHTER REST IN PEACE, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் பலி. ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதல்வர், தி.மு.க. தலைவர் என்று வரிசைப் பிரகாரம் இரங்கல். டெல்லி மாணவி கற்பழிப்பு தொடர்பான செய்திகளை இணையத்தில் வாசிக்க நேரிட்டதில் பெரும்பான்மையான ஊடக தளங்களின் பேனர்களாக மேல், கீழ், இடது, வலது, புறங்கள் பெண்களின் ஆபாச படங்கள் நிறைந்ததாகவே உள்ளது. தொட்டிலை ஆட்டிவிட்டு பிள்ளையை கிள்ளி விளையாடும் இது போன்ற ஊடகங்களுக்கு என்ன தண்டனை?

பொதுமக்கள் பார்ப்பதற்கென(?) எடுக்கப்படும் சினிமாக்களில் கற்பழிப்பு, விபச்சாரம், ஆபாச காட்சிகளுடன் வயது வித்தியாசமின்றி காம இச்சையை தூண்டும் காட்சிகளை எடுக்கும் சினிமாகாரர்களுக்கு என்ன தண்டனை?

பெரும்பாலான கற்பழிப்பு குற்றங்களுக்கு காரணமாக இருப்பது மது என்பது ஒட்டுமொத்த மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் வருடத்திற்கு தமிழகத்தில் மட்டும் 27,000 கோடி ரூபாய் டாஸ்மார்க்கிலிருந்து வருமானம் வருகிறதாம்(!!!). தமிழ்நாட்டில் குடிகாரனின் சராசரி வயது 13. ஏராளமான பாலியல் வன்முறைக்கு காரணம் இந்த மதுவே. கேடுகெட்ட இந்த மதுவை வைத்து கடைவிரித்து வருமானம் பார்க்கும் ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை?

பொது இடங்களிலும் அரைகுறை ஆடைகளை அணிந்து ஆண்களின் காமப் பார்வையில் சிக்கி கற்பழிக்கப்பட்டட பின்னர், நான் எந்த ஆண் நண்பனோடும் சுற்றுவேன், நான் எவ்வகை ஆடை (ஆபாச அரைகுறை உடையானாலும்) அணிய வேண்டும் என்பதை தீர்மானிப்பது என்னுடைய உரிமை என்று போலி பேராட்டங்கள் நடத்தி பெண் சமூகத்தை கேவலப்படுத்தி வழிகெடுத்துவரும் போலிப் பெண்ணுரிமை காவலாளிகளுக்கு என்ன தண்டனை?

இப்படி கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனால், இந்தியாவில் பெண் சுதந்திரம், பெண்ணுரிமை பற்றி பேசும் போலிகளான எவனுக்கும் / எவளுக்கு அறுகதையில்லை. இஸ்லாத்தை முறையாக கடைப்பிடித்துவரும் முஸ்லீம்களை தவிர.

டெல்லி பாலியல் வன்முறை தொடர்பாக “பெண்களுக்கு இரவு நேரத்தில் ஊர் சுற்றுவதால் இது போன்ற அசம்பாவிதம் நடைபெறுகிறது” என்று 3 பெண் பிள்ளைகளை பெற்றவர் என்ற முறையில் நியாயமான கருத்தை தெரிவித்த ஆந்திராவை சேர்ந்த ஒரு அமைச்சருக்கு எதிராகவும், கற்பழிப்புக்கு எதிராக போலிப் பேராட்டம் நடத்தி வருபவர்களைக் கடுமையாக சாடிய இந்திய குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜியையும் காமவெறியைத் தூண்டும் ஊடகங்கள் பொங்கி எழுந்து கண்டனங்களால் தங்களின் போலிப் பெண்ணுரிமை ஆதரவை காட்டினார்கள்.

இஸ்லாத்தை அறியாத அல்லது விமர்சிக்கும் பிறமத சகோதர சகோதரிகளே..! இது போன்ற கற்பழிப்பு வன்முறைகளும், சீர்கேடுகளும் தொடராமல் இருக்க, பெண்களுக்கு மரியாதையை, கண்ணியத்தை கொடுங்கள். அவர்களை அரை நிர்வாணத்துடன் மேடையிலும், திரையிலும், தொலைகாட்சிகளிலும் ஆட விட்டு உங்களின் காம பசியை தீர்த்துக்கொள்ள உதவும் காட்சிப் பொருளாக அவர்களை பயன்படுத்தாதீர்கள். செய்த குற்றத்திற்கு ஏற்ற உடனடி தண்டனையும், அது நிகழ்வதற்கு காரணமாக அமைந்த காரணிகளை கண்டறிந்து கலைந்து எறிவதுதான் மக்களுக்கும் பொறுப்பில் இருக்கும் அரசுக்கும் உள்ள தலையாய கடமை. கடும் சட்டங்களால் மட்டுமே பாலியல் குற்றங்களை குறைக்க முடியாது, இஸ்லாம் நிலைநாட்டிய இஸ்லாமிய திட்டங்களால் பாலியல் குற்றங்களை அடியோடு குறைக்கலாம் இன்ஷா அல்லாஹ்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் டைக் கட்டுப்பாடு - (திருக்குர்ஆன் 24:31, 33 :59).

பாலியல் வக்கிரத்தைத் தூண்டக்கூடிய செயல்களின் பக்கம் நெருங்கத் தடை - (ஹதீஸ் மற்றும் திருக்குர்ஆன் 17:32).
ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பொழுக்கம், சுய பார்வைக் கட்டுப்பாடு  - (திருக்குர்ஆன் 24:30,31).
பத்து வயதுக்கு மேல் ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் பிரித்துப் படுக்க வைத்தல் - (ஹதீஸ்).
இரு பாலர்க்கும் கட்டாயக் கல்வி - (ஹதீஸ்).
பெண்கள் உரிய ஆண் துணையின்றி நீண்ட பயணங்கள் மேற்கொள்ளத் தடை - (ஹதீஸ்).
அந்நிய ஆண்களும் பெண்களும் இருபாலரும் இணைந்து சரளமாகப் பழகுவதற்குத் தடை -  (திருக்குர்ஆன் 24:27, 33: 55).
அந்நிய ஆண்களோடு பெண்கள் குழைந்து பேசத் தடை- (திருக்குர்ஆன் 33:32).
வயது வந்த அந்நிய ஆணும் பெண்ணும் தனித்திருக்கத் தடை - (ஹதீஸ்)
வயது வந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் உரிய காலத்தில் விரைவாகத் திருமணம் -(திருக்குர்ஆன் 24:32 மற்றும் ஹதீஸ்)
மணப்பெண்ணின் சம்மதமின்றி மணமுடிக்கத் தடை (திருக்குர்ஆன் 17:31)
வரதட்சணைக்குத் தடை, பெண்ணுக்கு மணக்கொடை (மஹர்) கொடுக்க கட்டளை (திருக்குர்ஆன் 4:4, 17:31)
குடும்பத் தலைமையும் பொருளாதார சுமையும் ஆண் மீது கடமை,.  குடும்ப நிர்வாகம் பெண் மீது கடமை, பொருளாதாரச் சுமை மீது அல்ல. (திருக்குர்ஆன் 4:34 மற்றும் ஹதீஸ்)
கற்பொழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறினால் கசையடி (திருக்குர்ஆன் 24:4  )
இந்த வரம்புகள் அனைத்து மனிதனால் உருவாக்கபட்டதல்ல, இது  அகிலத்தின் அதிபதி இறைவனால் வகுக்கப்பட்டது.

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான சட்டங்களை அமுல்படுத்தியிருக்கும் நாடுகளில் கற்பழிப்பு பேன்ற குற்றங்கள் மிகக் குறைவு என்பது உலகம் அறிந்ததே.
பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பார்த்தால்தான் தெரியும் அந்த குற்றத்திற்கு எவ்வகை தண்டனையைக் கொடுக்க வேண்டும் என்று. இஸ்லாமிய குற்றவியல் தண்டனைச் சட்டம் மட்டுமே இதுபோன்ற பாலியல் குற்றங்கள் குறைய மிகச் சரியான தீர்வு.

சிந்தீப்பார்களா வீதியிறங்கியிருக்கும் பெண்ணுரிமை பேரியக்கவாதிகளும், அறிவுஜீவிகள் என்று சொல்லித் திரியும் கேடுகெட்ட பிற்போக்கு சிந்தனையுடைய பெண்ணுரிமைக் காவலாளிகள் (?) அவர்களுக்கு துணைபோகும் அரசியல் வாதிகளும்!?

அதிரைநிருபர் பதிப்பகம்

மூன்றாம் ஆண்டிலும் தொடர்கிறது...
அல்ஹம்துலில்லாஹ்!
23

அதிரைநிருபர் பதிப்பகம் | August 29, 2012 | , , , ,


அதிரைநிருபர் இரண்டு ஆண்டுகளைக் கடந்து சாதித்தது ஏராளம், அதனை நேசிப்பவர்களின் எண்ணிக்கையோ க்ச்க்ம் !

அதிரை வலைத் தளங்களில் முன்னணெயிலும் குறிப்பிடத்தக்க நிலையிலும் முன்னெடுத்துச் செல்வதை நற்பண்புகள் நிறைந்த அதிரை மற்றும் அனைத்து சமுதாய சகோதரர்களும் நன்கறிவர். எல்லாப் புகழும் இறைவனுக்கே !

துவங்கி இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன....

கற்றதோ….!

இருபது வருடங்களுக்கான அனுபவங்கள்...

இரண்டு தலைமுறைகளல்ல மூன்று தலைமுறை பதிவர்களின் வட்டம் !

இருபாலரின் இதயங்களில் இடம்பிடித்துக் கொண்ட தனித்துவம் !

அதிரைநிருபரில் சிறப்பம்சமாகத் திகழ்வது இணைய வாசகர்கள் மீதான முழுநம்பிக்கை. அதனால்தான் ஒவ்வொரு பதிவின் கருத்துப் பெட்டிகளும் எப்போதும் திறந்தே இருக்கும், அன்பு நேசங்க்ளின் திறந்த மனத்தோடு வெளிப்படையாக, தனிமனித சாடல் இல்லாத, இறைவனுக்கு அஞ்சிய கருத்துக்களைப் பதிவதற்கு ஏதுவாக இருப்பதே சிறப்பம்சம்.

பதிவுகளையும் பதிவர்களையும் பாராட்டும் நோக்கமும், அவர்களின் எழுத்தாற்றலை ஊக்குவிப்பதிலும், அதிரை மற்றும் இஸ்லாமிய சமூகத்திற்கு எதிரான சீர்கேடுகளைச் சுட்டிக் காட்டுவதிலும் மும்முரம் காட்டி வருவதோடு. அடுத்தவர்களின் தனித் தன்மைக்கு எவ்விதத்திலும் பங்கமில்லாத ஊடக தர்மத்தைப் பேணுவதில் என்றுமே கவனமாக இருப்பதில் அதிரைநிருபர் குழு தனித்துவமானது.

கட்டுரைகள், பொதுசார்பு பதிவுகள், கவிதைகள், மார்க்க பதிவுகள், கல்வி சார்ந்த பதிவுகள், புதுமைசார்ந்த பதிவுகள், வணிகசார்பு பதிவுகள், வாழ்வியல் ஆய்வுகள், தனித்தன்மை மேம்பாடு, நெறியாளர் பக்கம், இப்படியாக பல்வேறு பிரிவுகளாக பதிவுகளைத் தினமும் ஒன்று அல்லது அதற்கு மேலாக தொடர்களாகவும், குறுந்தொடர்களாகவும் பதிந்து வருகிறது.

தனி மின்னஞ்சல்களில் வந்து குவியும் கருத்துகளையும், வாசகர்களின் ஆலோசனைகள், அறிவுரைகள், பரிந்துரைகள், கண்டனங்கள், விமர்சனங்கள் இவைகள் அனைத்தும் அதிரைநிருபரை பண்படுத்த பயன்படும் படிக்கட்டுகளே, அவற்றில் எதனையும் புறந்தள்ளியதே இல்லை. இவ்வாறு எங்களுக்கு பதிவுகளில் கருத்துக்களாகவும், வயது பேதமின்றி தனி மின்னஞ்சல் வழியாக தொடர்ந்து கருத்துகளைப் பரிமாறும் உங்கள் அனைவரையும் நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.

அதிரைநிருபரில் பதிவாகும் தொடர் பதிவுகள், சிறப்பு பதிவுகள், வழமையான வாழ்வியல் பதிவுகள் யாவும் பிற இணையதளங்களில், வலைப்பூக்களில் எங்கள் அனுமதியுடனும், சில அனுமதியின்றியும் பகிர்ந்து வருவதை இணைய தேடலில் இருப்பவர்கள் அனைவரும் அறிவர்.

தொலைக்காட்சி ஊடகங்களின் கவனமும் அதிரைநிருபர் பக்கம் திரும்பியிருக்கிறது, புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்தும் மாணவர்களின் விவாதங்களில் அதிரைநிருபரில் வெளிவரும் "படிக்கட்டுகள்" பதிவு கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. மற்றொரு பிரபலமான "விஜய்" தொலைகாட்சியில் விவாதங்கள் பகுதியில் "ரியல் எஸ்டேட் சிந்திப்போம் - குறுந்தொடர்" பற்றிய விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வந்ததும் சான்றுகளே அதிரைநிருபர் வலைத்தளம் விரிந்த இணைய வலையில் பரந்து இருப்பதற்கு.

அதிரை வலைத்தளங்கள் என்றில்லாமல், இலவச வலைப்பூக்களில் எத்தனையோ அற்புதமான வலைப்பூக்கள், இணையதளங்கள் இருந்தாலும் வலைத்தளங்களுக்கான ஊடக தர்மம் மீறல் இன்றி தனிமனித தனித்தமை போற்றி, கருத்து திணிப்பின்றி, சுதந்திரமாக எடுத்துவைத்து ஒரு வெற்றிப் பாதையை அமைத்துக் காட்டியதை யாவரும் அறிவர் அல்ஹம்துலில்லாஹ் !

இயக்க செய்திகளோ, அரசியல் கட்சி ஆதரவு நாடும் தகவல்களோ பதிவதில்லை என்ற நிலைபாடு நடுநிலையென்ற சொல்லுக்கு இலக்கணமல்ல. நடுநிலமை என்பது எந்த ஒரு விடயமும், காரியங்களும் நிறைவுக்கு வரும்போது அங்கே தெரியும் அந்த நடுநிலமை எந்தப்பக்கம் சாய்ந்திருக்கிறது. அதுவே ஊடக தர்மம் கற்றுக் கொடுத்த உண்மைநிலை அறிந்து அதன் பக்கம் சார்ந்திருப்பதே.

ஊடக வரலாற்றில் அதனை ஆளுமை செய்பவர்களை விட அதனை நேசிக்கும் வாசர்கள்தான் அறிவில் சிறந்தவர்கள் என்பதை ஒவ்வோர் ஊடகவியலாளரும் உணந்திருக்க வேண்டும் அதனை அதிரை நிருபர் நன்றாக அறிந்தும் அதன்படியே செயல்பட்டும் வருகிறது.

இந்த பதிவை எழுதத் தூண்டிய அதிரைநிருபர் வாசகர்களின் பதிவுகளில் பதியும் மற்றும் மின்னஞ்சல் வழி தனி-கருத்துக்களே என்றால் அது மிகையாகாது.

அதிரைநிருபர் குழு

மறுப்பும் ஊடக மரபன்றோ ! 9

அதிரைநிருபர் பதிப்பகம் | July 20, 2012 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

நிலாவை காட்டி உணவு ஊட்டியது அந்தக் காலம் ஆனால் இன்றோ வெள்ளி நிலா என்ற பத்திரிகை மாட்டிறச்சியை சமைத்து ஊட்டி விடுவதற்கு ஒரு அதிரை இணைய தளமென்ற பெயரில் ஒரு செய்தி பதிந்து அதிரைநிருபர் வலைத்தளம் மீது அப்பட்டமான அவதூறு சொல்லியிருப்பதை வன்மையாக மறுக்கிறோம்.

மறுப்பென்பது இறுமாப்பாகிவிடாது ! நெஞ்சுறுதி கொண்ட எவறும் இதைத்தான் செய்வர்…


இதுதான் எங்கள் நிலை !

அதிரைநிருபர்.in வலைத்தளம் அதிரை பேரூராட்சி மன்றத் தலைவர் அவர்களுக்கு எதிரானது போன்ற மாயைகூட்டி அதிரை சகோதரர் நிஸார் அஹமது அவர்களால் வெள்ளிநிலா என்ற மாத இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு விளக்கமளிப்பது எம்முடைய கடமை. அதனால் தான் மாட்டுகறிவிவகாரத்தில் நாம் தலையிடுகிறோம்.

துவக்க நாள் முதல் அதிரை சார்ந்த அன்றாட செய்திகள் அனைத்தையும் அதிரைநிருபர் வலைத்தளத்தில் காண்பது மிக அரிது என்பதை இணைய வாசகர்கள் அறிவர். இருப்பினும், பெரும்பாலான வாசகர்களின் அன்பான வேண்டுகோளை ஏற்று அதிரை சார்பு செய்திகளை பதிவதற்கான வாய்ப்புகள் நிரம்ப இருந்தும் பல்வேறு மட்டுறுத்தலுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் இடையே அவ்வப்போது முக்கிய செய்திகளையும் பதிந்து வருகிறோம்.

மாட்டுக்கறி அறுப்பது / விற்பது தொடர்பான சர்ச்சை இப்போது உதித்ததல்ல இது கடந்த சில மாதத்திற்கு மேலாக ஆரம்பமானது, அரசியல் காரணங்களால் / அல்லது வேறு காரணங்களால் மாட்டு இறைச்சி விற்பனை செய்யும் சகோதரருக்கும் போரூராட்சி மன்றத் தலைவர் அவர்களுக்கும் உள்ள பிரச்சினைகள் என்றே எங்களுக்கு அனுப்பப்படும் தகவல்களை மட்டுறுத்திக் கொண்டு அதிலிருந்து ஒதுங்கியே இருந்தோம்.

இதன் தொடர்ச்சியாக நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளும் அமைதியான சூழலில் இருக்கும் நம் அதிரைச் சகோதரர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும் சூழல் எழுந்ததன் விளைவே இவ்விசயத்தில் கவனம் செலுத்த உந்தப்பட்டோம். போரூராட்சி நிர்வாகத்தினரின் நடவடிக்கைகள் தக்வா பள்ளி மார்க்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது இது தொடர்பாக சம்பத்தப்பட்ட மட்டு இறைச்சி விற்கும் சகோதரர் சாகுல் ஹமீத் அவர்களை அதிரை சார்புடைய வலைத்தளங்களுக்கு (அதிரை எக்ஸ்பிரஸ், அதிரைநிருபர் அதிரைபோஸ்ட்) செய்திகள் சேகரித்து தரும் சகோதரர்கள் அனைவரும் சந்திக்க சென்றார்கள். 

அங்கு நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் போரூராட்சி அதிகாரிகளின் அனுகுமுறை மற்றும் அது தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்டார், அப்போது இப்பிராச்சினைக்கு பல காரணிகளில் அதில்முன்னிருத்திய காரணம் பாசீச தீய சக்திகளின் சூழ்ச்சியின் விளைவால் காட்டப்பட்ட ஆதாரம். இதனை இப்படியே விட்டு மவுனம் காத்தால் பாசீச தீயசக்திகளின் ஆளுமை தலைதூக்கும் அதனை தவிர்க்கும் விதமாகவே சகோதரர் சாஹுல் அவர்களின் வாய்மொழியாக அளித்த பேட்டியை காணொளியாக பதிவெடுத்து அதிரை எக்ஸ்பிரஸ், அதிரைநிருபர் அதிரைபோஸ்ட் வெளியிட்டோம். அதில் தனிமனித தாக்குதலோ, அவதூறு பேச்சே இல்லை, அந்த காணொளி செய்தியை சகோதர வலைத்தளங்களும் அவரவர் நெறிமுறைகளுக்கு உட்பட்டே எந்த ஒரு நிர்பந்தமும் இல்லாமல் வெளியிட்டார்கள்!

மாட்டுக்கறி தொடர்பாக தமுமுகவினர் ஒட்டிய கண்டன போஸ்டருக்கு பேரூராட்சி மன்றத் தலைவர் அவர்களின் நிலைபாட்டையும் அதிரை வலைத்தளங்களுக்கு செய்திகள் சேகரித்து பதிந்துவரும் சகோதரர் தனிப்பட்ட ஒருவரால் எடுக்கப்பட்ட காணொளி பேட்டியினை சகோதர வலைத்தளமான அதிரை எக்ஸ்பிரஸில் பதிந்துள்ளார், அதை அதிரை.இன் மற்றும் அதிரை போஸ்ட் தளத்தினர் வெளியிட்டனர். அதே காணொளி பேட்டியினை அதிரைநிருபர் வலைத்தளத்திலும் பதிவதற்கென்று பகிர்ந்தளிக்கவில்லை அவ்வாறு அனுப்பித் தந்திருந்தால் கட்டாயம் பேருராட்சி மன்றத் தலைவரின் தன்நிலை விளக்கத்தையும் பதிவுக்குள் கொண்டு வந்திருப்போம். அவ்வாறு ஏதும் வேண்டுகோள் வரவில்லை.

பேரூராட்சி மன்றத் தலைவர் அவர்களின் பேட்டி காணொளியில் த.மு.மு.க.வினர் மீது குற்றச்சாட்டுகள் அடுக்கியிருந்தார். அந்த குற்றச்சாட்டுகளுக்கு தமுமுக பதில் சொல்லியே ஆகவேண்டும் என்ற கேள்விக் கனைகளும் எதிர்ப்பார்ப்பும் அதிரை மக்கள் மத்தியில் எழுந்தது.

குற்றச்சாட்டுகளுக்கு தமுமுக சகோதரர்களின் விளக்கங்களை அதிரையின் அனைத்து தளங்களிலும் (அதிரை எக்ஸ்பிரஸ், அதிரைநிருபர் அதிரைபோஸ்ட்) போடுவதாகவே செய்தி சேகரிக்க சென்றவர்களால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. போரூராட்சி தலைவரின் பேட்டியை வெளியிட்ட அதிரை எக்ஸ்பிரஸ் தளம், இப்படி மாறி மாறி பேட்டி வெளியிட்டுக்கொண்டிருந்தால் சரிபட்டுவராது என்ற முடிவுடன் தமுமுக நிர்வாகிகளின் காணொளி பேட்டியை அவர்கள் வெளியிடவில்லை. இதே முடிவில் அதிரை.இன் இருந்திருக்கலாம். ஆனால் அதிரை போஸ்ட் தளம் இந்த காணொளியை வெளியிட்டது. ஒன்று மட்டும் நிச்சயம் தமுமுக நிர்வாகிகளின் பேட்டி அதிரைநிருபர் வலைத்தளத்தின் சார்பாக மட்டும் எடுக்கப்பட்டதல்ல என்பதை  ஞாபகமூட்டுகிறோம்.

அனைத்து வலைத்தள செய்தி சேகரிப்பாளர்களும் ஒன்றிணைந்து செய்தி சேகரித்து அனைத்து தளங்களிலும் வர இயலாத சூழலிலும், தமுமுக பேட்டியை பேட்டியை தொடர்ந்து வந்த பின்னூட்டங்களும் மின்னஞ்சல்களும் நம்மை இவ்விசயத்தில் மீண்டும் கவனம் செலுத்த தடை செய்தது. நம் சகோதரர்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகளை ஊதி பெரிதாக்க வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில்  மாட்டுகறி பிரச்சினை செய்திகளை இனி அதிரைநிருபரில் பதிவதில்லை என்று முடிவு செய்து மவுனம் கத்துவந்தோம்.

பின்னர் பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள் வடிவேலு என்பவரை எடுத்த பேட்டியை அதிரை போஸ்ட் தளத்தில் வெளியிட்டார்கள், அதிரை எக்ஸ்பிரஸ் வெளியிடவில்லை. அதிரைநிருபரில் பதியுமாறு எந்த ஒரு வேண்டுகோளும் அஸ்லம், அதிரை போஸ்ட், நிஸார் ஆகியோரிடமிருந்தோ வரவில்லை, 

இந்நிலையில் மக்கள் உரிமையில் அஸ்லம் பற்றி செய்தி வெளியானதை தொடர்ந்து அஸ்லம் மீண்டும் ஒரு பேட்டி சேக்கன்னா M நிஜாம் அவர்களிடம் கொடுக்கிறார். (இவ்வாறான பேட்டிகள் பற்றிய விசயத்தில் இவர்கள் மாறி மாறி பேட்டி கொடுப்பார்கள் ஆதலால் தமுமுக பேட்டியை போடவில்லை என்று விளக்கம் கொடுத்த நம் சகோதர வலைத்தளம்) மக்கள் உரிமைக்கு மறுப்பு பேட்டியை வெளியிட்டு தங்களின் நிலையை நிலைநாட்டிக் கொண்டார்கள். இந்த பேட்டியை அதிரை போஸ்ட் மற்றும் அதிரை.இன் தளங்கள் வெளியிட்டார்கள்.

பிறகு தமுமுக நிர்வாகிகள் அவர்களாகவே அஸ்லம் அவர்களுக்கு மறுப்பு தெரிவித்து மீண்டும் ஒரு பேட்டியை வெளியிட்டார்கள்,, இந்த பேட்டியை அதிரை எக்ஸ்பிரஸ், அதிரை போஸ்ட் தளங்களில் வெளியானது. 

முதல் பேட்டி பட்டுக்கோட்டை பாசீச சக்திகளின் சூழ்ச்சிக்கு நாம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்றே ஒரே காரணத்திற்காக, சகோதரர் ஷாஹுல் ஹமீத் அவர்களின் பேட்டியை அனைத்து வளைத்தள செய்தி சேகரிப்பாளர்களும் சேர்ந்து சேகரித்து வெளியிட்டோம், பின்னர் அஸ்லம் அவர்களின் பேட்டிக்கு மறுப்பு பேட்டியை வளைத்தள செய்தி சேகரிப்பாளர்களும் சேர்ந்து சேகரித்தோம், ஆனால் வெளியிட்ட தளங்கள் அதிரைநிருபர் மற்றும் அதிரை போஸ்ட்.

அதிரையில் வலுவான ஊடகம் தேவை என்ற நன்னோக்கில் அதிரைநிருபர், அதிரை எக்ஸ்பிரஸ், அதிரை போஸ்ட் ஆகிய தளத்தின் செய்தி சேகரிப்பாளர்கள் ஒன்றிணைந்து செயல்படலாம் என்ற முயற்சி, சகோதரர்களின் ஒத்துழைப்பின்மையால் மாட்டுக்கறி விசயத்தில் அதன் சுயரூபம் வெளியானது. மாட்டுகறி நிகழ்வு அதிரையின் ஒட்டுமொத்த ஊடக பலத்தை நிலைநாட்ட கிடைத்த வாய்ப்பு தடுமாற்றத்துடன் ஓரம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு(ம்) இதே அரசியல் விளையாட்டு சூழ்ச்சிகள்கூட காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. இருப்பினும் அதிரை செய்திகளை அதிரை தளங்களான அதிரைநிருபர், அதிரை எக்ஸ்பிரஸ், அதிரை போஸ்ட் தளங்கள் ஒன்றிணைந்து செயல்பட, நியாமான ஊர் ஒற்றுமைக்கு பங்கமில்லாதா உண்மை செய்திகளை உலகுக்கு கொண்டுவர வாய்ப்பு கிடைத்தால் அதற்கு அதிரைநிருபர் என்றும் ஒத்துழைப்பு தரும்.

வெள்ளிநிலாவுக்கு:

தமுமுக பேட்டியை வெள்ளிநிலா பங்களிப்பாளரின் வலைத்தளங்களான அதிரை போஸ்டிலும் அந்த பேட்டி வெளிவந்துள்ளது. “மாட்டுக் கறி பிரச்சினை என்ன?” என்ற வெள்ளிநிலா கட்டுரையில் ஏன் அதிரைநிருபரை மட்டும் குறிப்பிட வேண்டும்?

அதிரை வலைத்தளங்களில் தரத்திலும் முன்னிருக்கும் அதிரைநிருபர் வலைத்தளம் ஏராளமான படைப்பாளிகளை வெளிக் கொணர்ந்து வருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. வெள்ளிநிலாவுக்கு அதிரைநிருபர் தளத்தின் மேல் மட்டும் ஏனோ கசப்பும் / கோபமும் !

அதிரைநிருபர் தளம் எந்த ஒரு கட்சிக்கோ / இயக்கத்துக்கோ கொடிதூக்கும் துதிபாடும் தளமல்ல.

சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் ஊரில் உள்ளார்கள், இவர்களை வைத்து முட்டி மோதும் வேடிக்கை விளையாட்டுக்களை  தவிர்த்து சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் சம்பந்தப்பட்டவர்களின் நெருங்கிய நண்பர்களோ, ஜமாத்தினரோ முன்னின்று செய்யாமல், ஒருவர் மாற்றி மற்றவர் உசுப்பேத்தியே வேடிக்கை பார்க்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

இயக்க / கட்சி / சங்க தலைவர்கள் இணையதளங்களில் போட்டி போட்டு பேட்டி கொடுத்து ஒருவருக்கு ஒருவர் சாடிக்கொண்டிருப்பதால், பகைமையே நீடிக்கும், அங்கே மக்கள் நலன் காற்றில் பறக்கவிடப்பட்ட காகிதமாகவே தள்ளாடும். இதே நிலை தொடராமல் அடியோடு வேரறுக்கு வேண்டும்.

இஸ்லாமிய சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு பணமும், இயக்க / அரசு பதவியும் இருந்தால் எதை வேண்டுமாலும் செய்யலாம் என்ற நிலை அதிரையில் தலைதூக்கி, நம் எல்லோருக்கும் அது ஒரு அச்சுறுத்தலாகி விடுமோ என்ற ஐயத்தாலும், அரசியல் காழ்ப்புணர்வால் சில சமூகவிரோத கும்பல்களை தூண்டிவிட்டு, நயவஞ்கத்தனமாக நாடகமாடி குளிர்காய நினைத்தவர்களின் சூழ்ச்சியை வெளிக்கொணரவே இந்த பதிவை பதிவதற்கு துணிந்தோமே தவிர. நம் சகோதரர்கள் யாரையும் உயர்த்தவோ தாழ்த்தவோ அல்ல என்பதை மீண்டும் ஞாபகமூட்டுகிறோம்.

நிறைவாக, வருத்தத்துடன் : நல்லவர்களாக புன்முறுவலுடன் புறம் காட்டும் சகோதரர்கள் அகமொன்று வைத்துக் கொண்டு இரட்டை நிலைபாட்டுட்டன் முறுக்களாக செயல்படுவதை கண்கூடாக பார்க்கும்போது வேதனையே மிஞ்சுகிறது – அவர்களின் இச்செயல்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு வேண்டுகிறோம் இன்ஷா அல்லாஹ் !

நெறியாளர்